search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மனு"

    மதுரை தெற்கு மண்டலத்தில் அடிப்படை வசதிகள் கேட்டு 100-க்கும் மேற்பட்டோர் மனு கொடுத்தனர்.
    அவனியாபுரம்

    மதுரை மாநகராட்சி  தெற்கு மண்டல அலுவலகத்தில் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.

    இதில் மேயர் இந்திராணி, துணைமேயர் நாகராஜன், மண்டல தலைவர் முகேஷ் சர்மா, தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. பூமிநாதன் ஆகியோர் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றனர். தெற்கு மண்டலத்துக்கு உட்பட்ட கவுன்சிலர்கள் முத்துமாரி ஜெயக்குமார், கவிதா செல்வம்,பூமா முருகன், உள்ளிட்ட கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர் .

    100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அடிப்படை வசதிகளான சாக்கடை வசதி, தெருவிளக்கு வசதி, சாலை வசதிசெய்து தரவேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தனர்.

    பா.ஜ.க. கவுன்சிலர் பூமா முருகன் தெற்கு மண்டல அலுவலகத்தில் பிரதமர் மோடி படம் வைக்க வேண்டும் என்றும், மாநகராட்சிக்கு மாநில நிதியை விட மத்திய அரசு நிதி தான் அதிகமாக கிடைக்கிறது என்றும், இந்த நிலையில் மத்திய அரசின் நிதியை பெற்றுள்ள மாநகராட்சிக்கு உட்பட்ட மண்டலங்களில் பிரதமரின் படம் இல்லாதது வருத்தத்தை அளிக்கிறது என்றும் தெரிவித்து மனு அளித்தனர். 

    மனுக்களை பெற்ற மேயர், துணை மேயர்,  எம்.எல்.ஏ., மண்டலத் தலைவர் ஆகியோர் மக்களின் தேவைகளை அறிந்து உடனுக்குடன் குறைகள் நிவர்த்தி செய்யப்படும் என்று உறுதி அளித்தனர்.
    ×