என் மலர்
நீங்கள் தேடியது "Petition"
- உங்களுடன் ஸ்டாலின் முகாமில் அளித்த மனுக்கள் வைகை ஆற்றில் வீசப்பட்டது.
- சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெறப்பட்ட மனுக்கள் சிவகங்கை மாவட்ட வைகை ஆற்றில் மிதந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அன்புமணி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் பெறப்பட்ட மனுக்கள் வைகை ஆற்றில் மிதந்த விவகாரத்தில் திருப்புவனம் வட்டாட்சியர் விஜயகுமார் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும், கவனக்குறைவாக இருந்ததாக 7 அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பொற்கொடி உத்தரவிட்டுள்ளார்.
- உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பொதுமக்கள் அளித்த மனுக்களை வைகை ஆற்றில் வீசியவர்கள் யார்?
- சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெறப்பட்ட மனுக்கள் சிவகங்கை மாவட்ட வைகை ஆற்றில் மிதந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், திருப்புவனம் வைகை ஆற்றில் மனுக்கள் மிதந்தது தொடர்பாக அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பொதுமக்கள் அளித்த மனுக்களை வைகை ஆற்றில் வீசியவர்கள் யார்? என விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய மாவட்ட ஆட்சியர் பொற்கொடி உத்தரவிட்டுள்ளார்.
- மனுக்களுக்கு 45 நாட்களில் தீர்வு காணப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
- ஆற்று நீரில் மிதந்து வந்த மனுக்களை சேகரித்த போலீசார் அதனை ஆற்றில் வீசியவர்கள் யார்? என விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் அனைத்து நகர்ப்புற மற்றும் ஊரகப்பகுதிகளில் முகாம்கள் நடத்தி மக்களிடம் மனுக்களை பெறும் வகையில் 'உங்களுடன் ஸ்டாலின்' என்ற புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜூலை 15-ம் தேதி தொடங்கி வைத்தார். இம்முகாமில் தரப்படும் மனுக்களுக்கு 45 நாட்களில் தீர்வு காணப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இதனை தொடர்ந்து, மகளிர் உரிமைத் தொகை, பிறப்பு, இறப்பு சான்றிதழ், ஆவணங்களில் பெயர் திருத்தம், பட்டா, சிட்டா உள்ளிட்டவற்றுக்கான மனுக்களை உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மக்கள் அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில், உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெறப்பட்ட மனுக்கள் வைகை ஆற்றில் மிதந்து வந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வைகை ஆற்றில் மனுக்கள் மிதப்பதைக் கண்டு பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ஆற்று நீரில் மிதந்து வந்த மனுக்களை சேகரித்த போலீசார் அதனை ஆற்றில் வீசியவர்கள் யார்? என விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
சிவகங்கை அருகே கீழடி, கொந்தகை, நெல் முடிகரை, மடப்புரம் பகுதிகளில் நடந்த முகாம்களில் பெற்றப்பட்ட மனுக்கள் ஆற்றில் வீசப்பட்டுள்ளன. ஆற்றில் மிதக்கும் மனுக்களுக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை என விசாரணையில் தெரியவந்துள்ளது.
- மனு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.
- வழக்கை திங்கட்கிழமை பட்டியலிட ஒப்புதல் அளித்தார்.TASMAC
புதுடெல்லி:
தமிழகத்தில் டாஸ்மாக் அலுவலகங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியதற்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை வேறு ஒரு ஐகோர்ட்டுக்கு மாற்றக் கோரி தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா அமர்வில் முறையிடப்பட்டு உள்ளது. தமிழக அரசு அரசியல் சாசன பிரிவு 139-ன் கீழ் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளது.
டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத்துறைக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மனு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. அதில் பல்வேறு சட்ட சிக்கல்கள் விவகாரத்தை எழுப்பியுள்ளது.
எனவே இந்த வழக்கை விரைந்து வரும் திங்கட்கிழமை பட்டியலிடுமாறு கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, இந்த வழக்கை வருகிற திங்கட்கிழமை பட்டியலிட ஒப்புதல் அளித்தார்.
- தென்காசி தெற்கு மாவட்டத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டப்பணிகள் குறித்த கோரிக்கை மனுவினை மாவட்ட கலெக்டர் ஆகாஷிடம் வழங்கினர்.
- கருப்பாநதி கால்வாய் தூர்வாறுதல், ஆர். நவநீதகிருஷ்ணபுரம் தீவு அலுவலகம் அமைத்தல் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் வழங்கப்பட்டது.
தென்காசி:
தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன், தென்காசி பழனி நாடார் எம்.எல்.ஏ. மற்றும் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் கவுன்சிலர்கள், யூனியன் சேர்மன் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளுடன் இணைந்து தென்காசி தெற்கு மாவட்டத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டப்பணிகள் குறித்த கோரிக்கை மனுவினை மாவட்ட கலெக்டர் ஆகாஷிடம் வழங்கினர்.
அதில் கருப்பாநதி கால்வாய் தூர்வாறுதல், ஆர். நவநீதகிருஷ்ணபுரம் தீவு அலுவலகம் அமைத்தல், கீழக்கலங்கல் ஊராட்சிக்கு கூடுதல் குடிநீர் வழங்குதல், பொது பயன்பாட்டிற்கு நீர் பிடிப்பு பகுதியை வழங்குதல், ஊத்துமலை ஊராட்சியில் புதிய தண்ணீர் தொட்டி வழங்குதல், ஆலங்குளம் தென்காசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் 16 ஊர்களுக்கு பகுதி நேர ரேஷன் கடை வழங்குதல், வ.உ.சிதம்பரனார் அவர்களுக்கு திருஉருவச் சிலை எழுப்புதல், குற்றாலம் செண்பகா தேவி அருவிக்கு மேல் அணை கட்டுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை மாவட்ட கலெக்டரிடம் வழங்கினர்.
அப்போது மாவட்ட பஞ்சாயத்து தலைவி தமிழ்ச்செல்வி, ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா, தென்காசி தி.மு.க. ஒன்றிய செயலாளர் அழகு சுந்தரம், ஒன்றிய கவுன்சிலர் வீராணம் ஷேக், அரசு ஒப்பந்ததாரர் சண்முகவேல், தொழிலதிபர் மணிகண்டன் மற்றும் ஆலங்குளம் யூனியனுக்கு உட்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் என பலர் உடன் இருந்தனர்.
- கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீா் கூட்டம் நடைபெற்றது.
- சப்- கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் தலைமை வகித்தாா்.
திருப்பூர் :
திருப்பூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீா் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு சப்- கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் தலைமை வகித்தாா். இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் எஸ்.ஆா்.மதுசூதனன், செயலாளா் ஆா்.குமாா் ஆகியோா் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-
கால்நடை தீவனங்களான பருத்திக் கொட்டை, தவிடு, பிண்ணாக்கு உள்ளிட்டவற்றின் விலை அண்மையில் கடுமையாக உயா்ந்துள்ளது. விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யும் பாலுக்கான கொள்முதல் விலையை ஆவின் நிறுவனம் கடைசியாக கடந்த 2019 ஆம் ஆண்டு உயா்த்தியது. இந்த நிலையில், ஆவின் நிறுவனத்துக்கு பால் ஊற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் உற்பத்தி செய்யும் பாலுக்கான கொள்முதல் விலையை உயா்த்திக் கொடுக்கக் கோரி ஆங்காங்கு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. பசும்பால் லிட்டருக்கு ரூ.42, எறுமைப்பால் லிட்டருக்கு ரூ.51 கொள்முதல் விலையாக நிா்ணயித்து ஆவின் நிறுவனம் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.கூட்டத்தில் வட்டாட்சியா்கள் ராஜேஷ், கனகராஜ், கோவிந்தராஜ், சைலஜா உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனா்.
- தமிழகம் முழுவதும் சுமார் 25 தனியார் ஆம்புலன்ஸ்கள் செயல்பட்டு வருகிறது. அதில் 1000-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
- விபத்து நேரத்தில் துரிதமாக செயல்படும் போது எங்களுக்கு இறப்பு நேர்ந்தால் எங்கள் குடும்பத்திற்கு நிதிஉதவி கிடைப்பதில்லை.
நெல்லை:
தமிழ்நாடு தனியார் ஆம்புலன்ஸ் சங்கத்தை சேர்ந்தவர்கள் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
தனியார் ஆம்புலன்ஸ்
தமிழகம் முழுவதும் சுமார் 25 தனியார் ஆம்புலன்ஸ்கள் செயல்பட்டு வருகிறது. அதில் 1000-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றோம். முன்கள பணியாளர்களான நாங்கள் இரவு, பகல் பார்க்காமல் பணியாற்றி வருகிறோம்.
ஆனால் எங்களுக்கு விபத்து காப்பீடு, நலவாரியம் உள்ளிட்டவைகள் இல்லை. விபத்து நேரத்தில் துரிதமாக செயல்படும் போது எங்களுக்கு இறப்பு நேர்ந்தால் எங்கள் குடும்பத்திற்கு நிதிஉதவி கிடைப்பதில்லை.
மேலும் எங்கள் குழந்தைகள் கல்வி பாதிக்கப்படுகிறது. எனவே எங்களுக்கு தனிநல வாரியம், அரசு காப்பீடு வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நடவடிக்கை வேண்டும்
பாளை தியாகராஜ நகர் 14-வது தெற்கு தெருவை சேர்ந்தவர் ஜெசி கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கடந்த 18 வருடங்களுக்கு முன்பு எனது கணவர் செல்லப்பா இறந்துவிட்டார். எனது மகள் கர்ப்பமாக இருந்த நிலையில் கடந்த ஆண்டு அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். அவருக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில் அவர் உயிரிழந்து விட்டார். இதனால் நான் மட்டும் தனியாக வசித்து வந்தேன்.
இந்நிலையில் எனது உறவினர் ஒருவரின் மகன் என்னை கவனித்துக் கொள்வதாக சொல்லி என்னுடன் தங்கியிருந்தார். அவர் சிறிது நாட்களுக்குப் பின்னர் என்னை ஏமாற்றி என்னிடம் இருந்த 60 பவுன் தங்க நகைகள், என்னுடைய மோட்டார் சைக்கிள் மற்றும் சொத்துக்களை ஏமாற்றி வாங்கிக் கொண்டு தற்போது என்னை கவனிக்க மறுத்து விட்டார்.
எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இழந்த எனது சொத்துக்களை மீட்டு தர வேண்டும். ஏற்கனவே இது தொடர்பாக பெருமாள்புரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன். உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
- திருமாந்துறை சுங்கச்சாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக அ.தி.மு.க.வினர் மனு அளித்தனர்
- 31-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும்
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, திருமாந்துறை சுங்கச்சாவடியில் பணிநீக்கப்பட்டோர்களை மீண்டும் பணியமர்த்த வேண்டும் என அ.தி.மு.க. வலியுறுத்தியுள்ளது.
திருமாந்துறை சுங்கச்சாவடியில் பணிபிரிந்து வந்த 28 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ஒப்பந்த தனியார் நிறுவனத்தை கண்டித்தும், பணிநீக்கம் செய்த ஊழியர்களை மீண்டும் பணியமர்த்த கோரியும் அந்த ஊழியர்களும், சுங்கச்சாவடியில் பணிபுரியும் ஊழியர்களும் கடந்த 1-ந் தேதி முதல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
31-வது நாளாக தொடர்ந்து நடைபெறும் இந்த போராட்டத்திற்கு அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், முன்னாள் துணை சபாநாயகருமான வரகூர் அருணாசலம் தலைமையில் அ.தி.மு.க.வினர் நேரில் சென்று போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஊழியர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்து கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
பின்னர் அ.தி.மு.க. சார்பில் பெரம்பலூர் எஸ்பி அலுவலகம் வந்து எஸ்பி மணியிடம் கோரிக்கை மனு அளித்தனர், அம்மனுவில் திருமாந்துறை சுங்கச்சாவடியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும், பணியில் இருந்து நீக்கப்பட்ட ஊழியர்களை மீண்டும் பணியில் அமர்த்தி அவர்களின் பொருளாதாரத்தை நல்ல முறையில் அமைத்துத் தர காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
நிகழ்ச்சிகளில் முன்னாள் எம்பிக்கள் மருதராஜா, சந்திரகாசி, முன்னாள் எம்எல்ஏ பூவைசெழியன், மாவட்ட நிர்வாகிகள் குணசீலன், ராஜாராம், ராஜேஸ்வரி, நகரசெயலாளர் ராஜபூபதி, ஒன்றிய செயலாளர்கள் கர்ணன், செல்வகுமார்,சி வப்பிரகாசம், செல்வமணி மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- வாகன ஓட்டிகளுக்கும் இடையூறாக எந்நேரமும் ஆடுகள்மாடுகள் சுற்றித் திரிகின்றன.
- குடிநீர், தெருவிளக்கு போன்ற பிரச்சினைக்கு தீர்வு அளிக்க வேண்டும் என கோரிக்கை அளித்தனர்.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி, நகராட்சி 19 வது வார்டில் பகுதி சபை கூட்டம் நகர மன்ற உறுப்பினர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது
இதில் நகர மன்ற தலைவர் கவிதா பாண்டியன், நகராட்சி ஆணையர் அப்துல் ஹாரிஸ்நகர மன்ற தலைவரின் நேர்முக உதவியாளர்கள், வார்டு பொறுப்பாளர்கள் அனைத்து கட்சியை சேர்ந்த வார்டு பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
இதில் 19-வது வார்டு இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் கூறுகையில் சாலைகளில் பொதும க்களுக்கும்,வாகன ஓட்டிகளுக்கும் இடையூறாக எந்நேரமும் ஆடுகள்மாடுகள் சுற்றித் திரிகின்றன.
இதனை பிடித்து அப்புறப்படுத்துவதோடு அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். மேலும் 19-வது வார்டில் அனைத்து அடிப்படை வசதிகளையும் முறையாக, உடனடியாக செய்து தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
மேலும் ஜவுளி கடை தெரு, பாரதியார் தெரு, வேதை தெருவில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் பகுதியில் குடிநீர், சாலை, தெருவிளக்கு போன்ற பிரச்சனைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கைகளை தெரிவித்தனர்
அப்போது நகரசபை தலைவர் கவிதா பாண்டியன் பொதுமக்களின் கோரிக்கையை மனுக்களாக பெறப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
மற்றும் பிடாரி குளம், தச்சங்குளத்சுதை சுத்தம் செய்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருமாறு கேட்டுக்கொ ள்ளப்பட்டது. இதற்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
- சேவை கட்டண உயர்வை கண்டித்து மனு கொடுக்கும் போராட்டம்.
- மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவிலில் தரிசனம்.
சுவாமிமலை:
சுவாமிமலை சுவாமிநா தசாமி கோவிலில் தற்போது சேவை கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது.
இதனை திரும்ப பெற வேண்டும் எனவும், கட்டண உயர்வை கண்டித்தும் இந்து மக்கள் கட்சி சார்பில் மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் தலைமையில் நேற்று சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவிலில் மனு கொடுக்கும் போரா ட்டத்தில் ஈடுபட்டனர்.
மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் கோவிலில் தரிசனம் செய்துவிட்டு மனுக்களை உண்டியலில் போட வரும்போது அறநிலைய த்துறை துணை ஆணையர் உமாதேவி, கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு அசோகன், சுவாமிமலை இன்ஸ்பெக்டர் சிவ. செந்தி ல்குமார் ஆகியோர் கேட்டுக்கொ ண்டதற்கினங்க மனுக்களை அவர்கள் கைகளில் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாநில பொதுச்செயலாளர் குருமூர்த்தி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் நரிக்குறவர்கள் மனு அளித்தனர்
- அடிப்படை வசதிகள் ேகாரி
பெரம்பலூர்:
அகரம்சீகூர் அடுத்து குன்னம் தாலுகா, வேப்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சிறுமத்தூர் ஊராட்சி நரி ஓடை கிராமத்தில் நரிக்குறவர் காலணியில் சுமார் 150 குடும்பங்கள் உள்ளன. இந்த பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்த மழையில் குடியிருப்பு வீடுகள் மற்றும் தெருக்கள் மழைநீர் மற்றும் கழிவு நீரால் சூழப்பட்டு சுகாதாரமற்று நிலை உள்ளது. மேலும் குடிநீரில் கழிவு நீர் கலந்து வருகிறது. தெரு மின்விளக்குகள் எரியவில்லை. இது குறித்து சிறுமத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் இடம் பலமுறை எடுத்து கூறியும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. தங்களுக்கு அடிப்படை வசதிகள் வேண்டி 50க்கும் மேற்பட்டோர் வேப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு கொடுக்க வந்தனர். ஆனால் அவர் இல்லாததால் வேறு அதிகாரிகளிடம் மனு அளித்து அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டுகோள் விடுத்தனர். அவருடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேப்பூர் வடக்கு ஒன்றிய துணை செயலாளர் சிறுத்தை சிவா உடனிருந்தனார்.
- கூட்டத்தில் 22 பொருட்களுக்கான வரவு செலவு கணக்கு குறித்து விவாதங்கள் நடைபெற்றது.
- இந்த நிலையில் காமலாபுரம் பகுதி கவுன்சிலர் செல்வி தனது பகுதியில் வாய்க்கால் தூர் வாரியதாக கூறி 15 லட்சம் பணம் எடுத்துள்ளனர்.
ஓமலூர்:
சேலம் மாவட்டம் ஓமலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய கவுன்சிலர்களுக்கு சாதாரண கூட்டம் நேற்று அதிமுக ஒன்றிய குழுத்தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் ஓமலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் கருணாநிதி, ஒன்றிய துணைச் சேர்மன் செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் 22 பொருட்களுக்கான வரவு செலவு கணக்கு குறித்து விவாதங்கள் நடைபெற்றது. மேலும் கவுன்சிலர்களின் வார்டுகளில் பல்வேறு திட்டங்கள் நடைபெறாமல் இருப்பதும், புதிய திட்டங்கள் தொடங்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இந்த நிலையில் காமலாபுரம் பகுதி கவுன்சிலர் செல்வி தனது பகுதியில் வாய்க்கால் தூர் வாரியதாக கூறி 15 லட்சம் பணம் எடுத்துள்ளனர். தூர்வாராமலேயே செலவு செய்ததாக பெயர் பலகை வைத்துள்ளனர். மேலும் 10 ஆண்டுகளாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு இதுவரை செயல்பாட்டுக்கு வரவில்லை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார்.
அப்போது கவுன்சிலர் செல்வியின் கணவர் ராஜா திடீரென பல மாதங்களாக கோரிக்கை விடுத்தும் எவ்வித கோரிக்கைகளையும் நிறைவேற்றவில்லை என கோரிக்கை மனுக்களை ஒன்றிய குழு தலைவர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் முகத்தில் கிழித்து வீசியதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் அதிமுக மற்றும் திமுக கவுன்சிலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.






