என் மலர்
நீங்கள் தேடியது "petition"
- குடியிருப்பு பகுதிகள் வனமாக மாற்றப்பட்டுள்ள தகவல் அச்சம் தருவதாக வேதனை
- நிலங்களை மறுஅளவீடு செய்து பிரச்னைக்குத் தீா்வு காண வேண்டுகோள்
ஊட்டி,
நீலகிரி மாவட்டம், ஓவேலி பேரூராட்சிக்கு உள்பட்ட காந்தி நகா் மற்றும் பல்வேறு பகுதிகளில் 3 தலைமுறைக்கும் மேலாக வசிக்கும் மக்கள் பேரூராட்சிக்கு வீட்டு வரி செலுத்தி வருகின்றனா்.
இவ்வாறு பல ஆண்டுகளாக மக்கள் வசிக்குமிடங்கள் வனப் பகுதியாக மாற்றப்பட்டுள்ளதாக பொதுமக்களிடம் வனத் துறை தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் அதிா்ச்சி அடைந்தனா்.
இந்நிலையில் காந்தி நகா் விவசாயிகள் சங்கத்தினா் பேரூராட்சி செயல் அலுவலா் ஹரிதாஸிடம் மனு அளித்தனா். அதில் கூறியிருப்பதாவது:- இப்பகுதியில் பல ஆண்டுகளாக குடியிருப்பதோடு முறைப்படி வரியும் செலுத்தி வருகிறோம். இப்பகுதியில் பேரூராட்சி நிா்வாகம் தேவையான அடிப்படை வசதிகளையும் செய்து வருகிறது.
இந்நிலையில் குடியிருப்புப் பகுதிகள் வனமாக மாற்றப்பட்டுள்ள தகவல் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மாற்றப்பட்டுள்ள நிலங்களை மறுஅளவீடு செய்து பிரச்னைக்குத் தீா்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளனா்.
- மாற்று மனையில் புதிய வீடு கட்டி கொடுத்துவிட்டு, பிறகு வீடு மனைகளை கையகப்படுத்த வேண்டும்.
- விவசாயிகளுக்கு கருணைத்தொகை ரூ.10 லட்சம் உயர்த்தி வழங்க வேண்டும்.
கடலூர்:
விருத்தாசலம் அருகே உள்ள மும்முடிசோழகன் கிராமத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று காலை கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:- மும்முடிசோழகன் கிராமத்தில் கடந்த 2000 முதல் 2007-ம் ஆண்டு வரை நில எடுப்பு செய்த வீட்டு மனைகளுக்கு புதிய சட்டத்தின் படி இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும். மாற்று மனையில் புதிய வீடு கட்டி கொடுத்துவிட்டு, பிறகு வீடு மனைகளை கையகப்படுத்த வேண்டும். மேலும் விடுபட்ட மக்களுக்கு கருணைத்தொகை வழங்கிட வேண்டும். எங்கள் நிலங்களை சமன் செய்ய என்.எல்.சி. நிறுவனம் கட்டாயப்படுத்தினால் எங்களது வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும்.
ஆகையால், ஒவ்வொரு குடும்பத்திற்கும் பஞ்சப்படியாக மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். கல்வி, மருத்துவம் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு மாதந்தோறும் ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும். இல்லையெனில் உடனடியாக வீடுமனைகளை எடுத்துக்கொண்டு நிரந்தர வேலை, புதிய சட்டத்தின்படி குடியிருப்புடன் கூடிய மாற்றுமனை வழங்கிட வேண்டும். மேலும் தற்போது வசிக்கும் வீட்டு மனைகளை எடுக்கும் வரை எங்கள் நிலங்களை சமன் செய்வதோ, நீர் பாசனத்தை நிறுத்துவதோ செய்யக்கூடாது. 2000-ம் ஆண்டு முதல் கூடுதல் இழப்பீட்டுத் தொகை பெறாத விவசாயிகளுக்கு கருணைத்தொகை ரூ.10 லட்சம் உயர்த்தி வழங்க வேண்டும். எங்கள் கிராம மக்களுக்கு மாற்று மனையாக 10 சென்ட் இடமும், 2 ஏக்கர் நிலமும் வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
- பணிக்கம்பட்டி ஊராட்சியில் சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
- வங்கி சம்பந்தமான பணிகளுக்கும் விவசாயிகள் பல்லடம் சென்று வர வேண்டிய நிலை உள்ளது.
பல்லடம்:
பல்லடம் ஒன்றியம் பணிக்கம்பட்டியில் கூட்டுறவு சங்கம் அமைக்க வேண்டும் என கிராம மக்கள், முதல்வர் தனிப்பிரிவுக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர். அந்தமனுவில் கூறப்பட்டுள்ளதாவது:- பல்லடம் ஒன்றியம் பணிக்கம்பட்டி ஊராட்சியில் சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இங்கு விவசாயம், விசைத்தறிகூடம் , கறிக்கோழி பண்ணை உள்ளிட்ட தொழில்கள் நடைபெற்று வருகின்றன.இந்தநிலையில் பணிக்கம்பட்டி கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் இல்லை. இதனால் விவசாயிகளுக்கான உரங்கள், மருந்து பொருட்கள் உள்ளிட்டவை வெளி மார்க்கெட்டில் வாங்க வேண்டிய நிலை உள்ளது.
மேலும் வங்கி சம்பந்தமான பணிகளுக்கும் விவசாயிகள் பல்லடம் சென்று வர வேண்டிய நிலை உள்ளது. இதற்கிடையே மத்திய அரசு பட்ஜெட்டில் கிராமங்கள் தோறும் கூட்டுறவு சங்கம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளது. எனவே பணிக்கம்பட்டி கிராமத்துக்கு முன்னுரிமை அளித்து கூட்டுறவு கடன் சங்கம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நாளை காலை 10 மணிக்கு அந்தந்த பகுதிகளில் பகுதி சபா கூட்டம் நடைபெற உள்ளது.
- கூட்டத்தில் பகுதி சபா கூட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாநகர பகுதிகளில் அமைந்துள்ள வார்டுகளுக்கு தலா 5 குழுக்கள் வீதம் 60 வார்டுகளுக்கு 300 பகுதி சபா குழுக்கள் ஏற்படுத்தப் பட்டுள்ளது.
பகுதி சபா கூட்டம்
இதன் முதல் கூட்டம் கடந்தாண்டு நடைபெற்று பொதுமக்களின் கோரிக்கை கள் மனுக்களாக பெறப்பட்டு திட்டங்களாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு அந்தந்த பகுதிகளில் பகுதி சபா கூட்டம் நடைபெற உள்ளது.கூட்டத்தில் மாநகராட்சி அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், சமூக ஆர்வ லர்கள் கலந்து கொள்ள உள்ள னர்.எனவே அப்பகுதி வாழ் மக்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளு மாறு மாநகராட்சி கமிஷனர் தினேஷ் குமார் கேட்டு கொண்டுள்ளார்.
முன்னேற்பாடு கூட்டம்
இதற்கிடையே பகுதி சபா கூட்டம் தொடர்பான முன்னேற்பாடு குறித்த கலந்தாய்வு கூட்டம் மாநகராட்சி மைய அலுவலக கூட்டரங்கில் கமிஷனர் தினேஷ் குமார் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் பகுதி சபா கூட்ட செயலாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். இந்நிலையில் கடந்த ஆண்டு பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்கள் சிலவற்றின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பதால் கடந்த ஆண்டு பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப் பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து நாளை நடைபெறும் பகுதி சபா கூட்டத்தில் தெரிவிக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடைபெற்றது.
- மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் அறிவுறுத்தினார்.
திருப்பூர்:
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, புதிய ரேஷன் கார்டு, சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக 382 மனுக்கள் பெறப்பட்டன. அந்த மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் அறிவுறுத்தினார்.
இதில் மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லட்சுமணன், தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) செல்வி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயராஜ், துணை ஆணையாளர் (கலால்) ராம்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) வாணி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
- சாலை குண்டும்-குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்பட்டு வருகிறது.
- குடிநீர் குழாய் உடைப்பால் பாரதியார் தெருவில் குளம்போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
நெல்லை:
நெல்லை மாநகராட்சியில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மேயர் சரவணன் தலைமை தாங்கி பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொ ண்டார்.
கூட்டத்துக்கு துணை மேயர் ராஜூ, துணை கமிஷனர் தாணு மூர்த்தி, செயற்பொறியாளர் வாசுதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கவுன்சிலர் மனு
நெல்லை டவுன் மண்டலத்துக்குட்பட்ட 28-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் சந்திரசேகர் அளித்த மனுவில்,
எனது வார்டுக்கு உட்பட்ட பகுதியான டவுன் பாரதியார் தெருவில் சாலைகள் மிகவும் மோசமாக உள்ளது. இந்த பகுதியில் பள்ளி மற்றும் ஏராளமான வணிக வளாகங்கள் உள்ளிட்டவை உள்ளது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த சாலை குண்டும்-குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் உள்ளிட்டோருக்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டு வருகிறது. எனவே இந்த சாலையை புதிதாக அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே நேரத்தில் சொக்கப்பனை முக்கு பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்துக்காக தோண்டியபோது குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பாரதியார் தெருவில் குளம்போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதி மக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை இருக்கிறது. எனவே அதனையும் சரி செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.
டிரைவர்கள் மனு
நெல்லை அரசு பல்நோக்கு மருத்துவமனை பகுதியைச் சேர்ந்த ஆட்டோ தொழிலாளர் அகஸ்டின் என்பவர் தலைமையில் டிரைவர்கள் அளித்த மனுவில், அரசு பல்நோக்கு மருத்துவமனையின் முகப்பு பகுதியில் ஆட்டோக்கள் நிறுத்தி பிழைப்பு நடத்தி வருகிறோம். எங்களது சங்கத்தில் சுமார் 35 தொழிலாளர்கள் ஆட்டோக்கள் வைத்து ஓட்டி வருகிறோம்.எங்களுக்கு தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் பெயர் பலகை வைப்பதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.
- சம்பள பாக்கி தொகையை கேட்பதற்காக கடந்த 7.9.2023 அன்று கம்பெனிக்கு சென்று கேட்டடனர்.
- காவல் நிலையத்திற்கு வரவழைத்து புகாரை வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டும் என நிர்பந்தம் செய்துள்ளனர்.
திருப்பூர்:
திருப்பூர் சி.ஐ.டி.யூ., பனியன் பொது தொழிலாளர் சங்கம் சார்பில் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று மனு கொடுக்கப்பட்டது.அதில் கூறியிருப்பதாவது:-
திருப்பூர் அங்கேரிபாளையம் ரோடு ஸ்ரீநகர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பனியன் கம்பெனியில் திலீப்குமார் என்ற பீகார் மாநில தொழிலாளி வேலை செய்து வந்தார். சம்பள பாக்கி தொகையை கேட்பதற்காக கடந்த 7.9.2023 அன்று கம்பெனிக்கு சென்று கேட்ட போது, சம்பளம் தரமறுத்ததுடன், முதலாளி, நிர்வாக ஊழியர் ஆகியோர் சேர்ந்து, திலீப்குமாரை தாக்கியதுடன், கத்தியால் குத்தி கொன்றுவிடுவோம் என்று மிரட்டி விரட்டியடித்துள்ளனர்.
இதுகுறித்து அனுப்பர்பாளையம் காவல்நிலையத்தில் புகார் செய்ததுடன், காயமடைந்த திலீப்குமார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். 8.9.2023 அன்று கம்பெனி முதலாளி மற்றும் போலீசார் சிலர் அரசு மருத்துவமனைக்கு சென்று, திலீப்குமாரை மருத்துவமனையிலிருந்து வலுக்கட்டாயமாக அழைத்து வந்துளளனர்.
மேலும் அவரை காவல் நிலையத்திற்கு வரவழைத்து புகாரை வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டும் என நிர்பந்தம் செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட தொழிலாளி தனது புகாரை வாபஸ் பெறவில்லை.
ஏற்கனவே வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக எழுந்த வதந்தியினால் ஏற்பட்ட பதட்டம் முற்றிலும் தணியாத நிலையில், இதுபோன்ற சம்பவங்களில் காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்காமல் இருந்தால், திருப்பூர் நகரின் அமைதி பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே பீகார் மாநில தொழிலாளியான திலீப்குமாரை தாக்கிய கம்பெனி முதலாளி மற்றும் ஊழியர் ஆகியோரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.
- வெற்றி விஸ்வா சென்னையை சேர்ந்த ஒரு கப்பல் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார்.
- 3 மாடிகளை கொண்ட கப்பல் முழுவதும் தேடியும் வெற்றி விஸ்வா கிடைக்கவில்லை.
நெல்லை:
நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடை பெற்றது. கூட்டத்தில் கலெக்டர் கார்த்திகேயன் கலந்து கொண்டு பொது மக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார்.
பாளை டேனியல் தாமஸ் தெருவை சேர்ந்த மகாராஜா என்பவரது மனைவி மகாலட்சுமி மற்றும் அந்த பகுதி மக்கள் திரளானோர் நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து முற்றுகையிட்டனர்.
தொடர்ந்து அவர்கள் கலெக்டர் அலுவலக பகுதிக்குள் நுழைய முயன்றனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணிக்கு நின்ற போலீசார் கலெக்டர் அலுவலக நுழைவாயில் கதவை அடைத்தனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
தொடர்ந்து மகாலட்சுமி கண்ணீர் மல்க கூறியதாவது:-
எங்களது சொந்த ஊர் நெல்லை மாவட்டம் தேவர்குளம். எனது கணவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர். எங்களது மூத்த மகன் வெற்றி விஸ்வா. இவர் கடற்படை துறையில் இளங்கலை அறிவியல் படிப்பு முடித்துவிட்டு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சென்னையை சேர்ந்த ஒரு கப்பல் நிறுவ னத்தில் பணிக்கு சேர்ந்தார்.
கடந்த 7-ந் தேதி இரவு எனது மகன் வீடியோ கால் மூலமாக எங்களிடம் பேசி விட்டு அதிகாலை 4 மணிக்கு பணிக்கு செல்வதாக கூறிவிட்டுச் சென்றார். அதன் பின்னர் அவர் போன் எதுவும் செய்யவில்லை.
இந்நிலையில் தனியார் கப்பல் நிறுவனத்தில் இருந்து அதிகாலை 5 மணிக்கு எங்களுக்கு செல்போனில் அழைப்பு வந்தது. அப்போது அவர்கள் பேசும்போது, உங்களது மகனை காணவில்லை. செல்போன் மற்றும் அவரது உடமைகள் மட்டும் கப்பலிலேயே உள்ளது என்று தெரிவித்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த நாங்கள் அந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டு பேசியபோது, வெற்றியை 3 மாடிகளை கொண்ட கப்பல் முழுவதும் தேடியும் கிடைக்கவில்லை. அவர் எங்கே சென்றார்? என்பது தெரியவில்லை. அதனால் தகவல் கிடைத்தவுடன் தொடர்பு கொள்வதாக கூறிவிட்டு அதன் பின்னர் அழைப்பை ஏற்கவில்லை.
எனவே மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு மாயமான எனது மகனை மீட்டு தர துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.
- பணி வழங்கக்கோரி செவிலியர்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
- ஐகோர்ட்டு உத்தரவின்படி
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்தில் மொத்தம் 276 மனுக்கள் பெறப்பட்டன. அப்போது எம்.ஆர்.பி. கோவிட் செவிலியர்கள் சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் லோகலெட்சுமி தலைமையில் செவிலியர்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், கொரோனா பெருந்தொற்று காலத்தில் பணியமர்த்தப்பட்டு கடந்த ஆண்டு டிசம்பர் 31-ந் தேதி பணி நீக்கம் செய்யப்பட்ட செவிலியர்களுக்கு ஐகோர்ட்டு உத்தரவின்படி மீண்டும் நிரந்தர தன்மையுடைய பணி ஆணையை வழங்கிட தமிழக முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.
+2
- பொதுமக்கள் திடீரென மாநகராட்சி அலுவலக நுழைவு வாயில் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- கலுசலிங்கத்தின் ரூ.3 கோடி மதிப்புள்ள சொத்தை அபகரிக்க போலியாக சிலர் வாரிசு சான்று தயார் செய்துள்ளனர்.
நெல்லை:
நெல்லை மாநகராட்சி வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மேயர் சரவணன் தலைமையில் இன்று நடைபெற்றது. இதற்கு துணை மேயர் ராஜூ முன்னிலை வகித்தார்.
மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க நிறுவன தலைவர் மாரியப்ப பாண்டியன் தலைமையில் ஏராளமான பொதுமக்கள் மாநகராட்சி அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். திடீரென அவர்கள் அலுவலக நுழைவு வாயில் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய தையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.
தொடர்ந்து அவர்கள் மேயர் சரவணணிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நெல்லை தாலுகா பேட்டை வி.வி.கே. தெருவில் வசிக்கும் சிதம்பரம் என்பவரது மகன் கலுசலிங்கம் என்பவர் கடந்த ஜூன் மாதம் 21-ந்தேதி உடல்நலக்குறைவால் இறந்தார். அவரின் மனைவி சாந்திக்கு சொந்த ஊர் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகும். சாந்தி கடந்த 2012-ம் ஆண்டு இறந்துவிட்டார்.
இந்நிலையில் கலுசலிங்கத்தின் ரூ.3 கோடி மதிப்புள்ள சொத்தை அபகரிக்க போலியாக சிலர் வாரிசு சான்று தயார் செய்துள்ளனர். ரூ.25 லட்சம் வரை செலவு செய்து போலியான ஆவணங்களை கொடுத்து வாரிசு சான்றிதழ் பெறப்பட்டுள்ளது. எனவே அதனை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.