என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    வைகை ஆற்றில் மனுக்கள் மிதந்த விவகாரம்- மாவட்ட ஆட்சியர் உத்தரவு
    X

    வைகை ஆற்றில் மனுக்கள் மிதந்த விவகாரம்- மாவட்ட ஆட்சியர் உத்தரவு

    • உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பொதுமக்கள் அளித்த மனுக்களை வைகை ஆற்றில் வீசியவர்கள் யார்?
    • சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

    உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெறப்பட்ட மனுக்கள் சிவகங்கை மாவட்ட வைகை ஆற்றில் மிதந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இந்த நிலையில், திருப்புவனம் வைகை ஆற்றில் மனுக்கள் மிதந்தது தொடர்பாக அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

    உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பொதுமக்கள் அளித்த மனுக்களை வைகை ஆற்றில் வீசியவர்கள் யார்? என விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய மாவட்ட ஆட்சியர் பொற்கொடி உத்தரவிட்டுள்ளார்.

    Next Story
    ×