என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ungaludan Stalin"

    • மீண்டும் மீண்டும் அரசுப்பள்ளிகளில் கைவைப்பது என்ன மாதிரியான மனநிலை?
    • திமுக அரசு இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று கண்டிப்போடு வலியுறுத்துகிறேன்.

    ராணிப்பேட்டை போல் திருச்சியிலும் அரசு பள்ளியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடத்தப்பட்டதற்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

    மேலும், இதுகுறித்து அமைச்சர் துரைமுருகனின் செய்தியாளர்கள் கேள்வி கேட்டபோது, ஒரு நாளில் ஒன்றும் ஆகிவிடாது என அவர் கூறியதை சுட்டிக்காட்டிய அண்ணாமலை, இது என்ன மாதிரியான மனநிலை எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

    இதுகுறித்து பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மோசூர், சூரை, மாம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள அரசுப்பள்ளிகளிலும், குமணந்தாங்கல் அரசுப்பள்ளியிலும் உங்களுடன் ஸ்டாலின் முகாமை நடத்தி மீண்டும் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தியிருக்கிறது திமுக அரசு.

    ஏற்கனவே, திருச்சியிலும் இதே போல அரசுப்பள்ளியில் முகாம் நடத்தப்பட்டதை மாணவர்களும், பெற்றோரும் கண்டித்த நிலையில், தனது அதிகாரத்தை பயன்படுத்தி இதுபோன்ற துஷ்பிரயோகங்களை தொடர்ந்து செய்து வருகிறார்கள்.

    இதனால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது என்பதை சுட்டிக்காட்டிய செய்தியாளர்களிடம், "ஒருநாளில் பாடத்தை எடுக்கப்போவதில்லை. மாணவர்களுக்கு எந்த இடையூறும் இல்லை" என கூச்சமின்றி பதிலளித்துள்ளார் அமைச்சர் திரு. துரைமுருகன்.

    உங்களின் சுய விளம்பரத்திற்காக முகாம்களை நடத்தவேண்டும் என்றால் உங்கள் கட்சி அலுவலகங்களில் நடத்தலாமே அமைச்சரே. மீண்டும் மீண்டும் அரசுப்பள்ளிகளில் கைவைப்பது என்ன மாதிரியான மனநிலை?

    ஏற்கனவே, திருபுவனத்தில் பெறப்பட்ட மனுக்கள் ஆற்றில் மிதந்ததை அனைவரும் அறிவார்கள். இதுதான் நீங்கள் இந்த திட்டத்தை செயல்படுத்தும் லட்சணம். இப்படியிருக்க, ஏன் மாணவர்களின் கல்வியையும் சேர்த்து கெடுக்கிறீர்கள்? மாணவர்களின் கல்வியை தடுத்து அரசுப்பள்ளிகளில் முகாம் நடத்துவதை திமுக அரசு இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று கண்டிப்போடு வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    • “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் நாளை 11 வார்டுகளில் நடைபெறவுள்ளது.
    • உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும்.

    பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாம் நாளை (09.10.2025) 11 வார்டுகளில் நடைபெறவுள்ளது.

    உங்களுடன் ஸ்டாலின் முகாம் நாளை சென்னையில் நடைபெறும் இடங்கள் குறித்து பார்க்கலாம்..

    பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாம் நாளை (09.10.2025) திருவொற்றியூர் மண்டலம் (மண்டலம்-1), வார்டு-14ல் திருவொற்றியூர் நெடுஞ்சாலை, சிஎஸ்ஐ சர்ச் அருகில் உள்ள விளையாட்டு மைதானம், மாதவரம் மண்டலம் (மண்டலம்-3), வார்டு-30ல் ரெட்டேரி, ஜவஹர்லால் நேரு 200 அடி சாலையில் உள்ள உமாயா மஹால், தண்டையார்பேட்டை மண்டலம் (மண்டலம்-4), வார்டு-37ல் வியாசர்பாடி, எம்.கே.பி நகர் 3வது பிரதான சாலையில் உள்ள அரசினர் மேல்நிலை பள்ளி, அம்பத்தூர் மண்டலம் (மண்டலம்-7), வார்டு-86ல் அயப்பாக்கம், ஐ.சி.எப். காலனியில் உள்ள ஶ்ரீ வாரு பார்த்தசாரதி பேலஸ், அண்ணாநகர் மண்டலம் (மண்டலம்-8), வார்டு-101ல் கீழ்பாக்கம், விளையாட்டு திடல் தெருவில் உள்ள ஜெ.ஜெ. உள்விளையாட்டு அரங்கம், தேனாம்பேட்டை மண்டலம் (மண்டலம்-9), வார்டு-123ல் கே.பி.தாசன் தெருவில் உள்ள எஸ்.ஐ.ஈ.டி. திருமண மண்டபம், கோடம்பாக்கம் மண்டலம் (மண்டலம்–10) வார்டு-131ல் டாக்டர் அம்பேத்கர் சாலையில் உள்ள சமுதாய கூடம், வளசரவாக்கம் மண்டலம் (மண்டலம்-11), வார்டு-152ல் ஆற்காடு சாலையில் உள்ள மண்டல அலுவலகம், ஆலந்தூர் மண்டலம் (மண்டலம்-12), வார்டு-167ல் நங்கநல்லூர், 100 அடி சாலையில் உள்ள ஸ்கேட்டிங் மையம், அடையாறு மண்டலம் (மண்டலம்-13), வார்டு-179ல் பெசன்ட் நகர், மீன் சந்தை அருகில் உள்ள ஸ்கேட்டிங் மைதானம், பெருங்குடி மண்டலம் (மண்டலம்-14), வார்டு-188ல் மடிப்பாக்கம், பாலையா கார்டன், பஜனை கோயில் தெருவில் உள்ள ருக்மணி மஹால் ஆகிய 11 வார்டுகளில் நடைபெறவுள்ளது.

    இந்த முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும். பொதுமக்கள் தங்கள் வார்டுகளில் நடைபெறும் "உங்களுடன் ஸ்டாலின்" முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.

    • உங்களுடன் ஸ்டாலின், உங்களுடன் ஸ்டாலின்னு உங்களுடைய குடும்பத்திற்கு மட்டும்தான் சொல்லிக்கிடனும்.
    • மக்களிடம் அதை சொல்லவே முடியாது. ஏனென்றால், நீங்கள்தான் மக்களுடன் இல்லையே.

    தமிழக வெற்றிக் கழகம் கட்சி தலைவர் திருவாரூரில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, விஜய் பேசியதாவது:-

    இந்த மாவட்டத்தில் மந்திரி ஒருவர் இருக்கிறார். அவருடைய வேலை என்னத் தெரியுமா?. முதலமைச்சர் குடும்பத்திற்கு வேலை செய்வது. அதுதான் அவருடைய வேலை. மக்கள்தான் முக்கியம் என அவருக்கு புரிய வைக்க வேண்டும்.

    உங்களுடன் ஸ்டாலின், உங்களுடன் ஸ்டாலின் என்று உங்களுடைய குடும்பத்திற்கு மட்டும்தான் சொல்லிக்கிடனும். மக்களிடம் அதை சொல்லவே முடியாது. ஏனென்றால், நீங்கள்தான் மக்களுடன் இல்லையே. இதை நான் சொல்லல. வார பத்திரிகையில் குறிப்பிட்டிருந்தது. அதான் நான் திரும்ப சொல்கிறேன்.

    இவ்வாறு விஜய் பேசினார்.

    • உங்களுடன் ஸ்டாலின் திட்டம் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
    • மனுக்களுக்கு நல்லதொரு தீர்வை நல்கிடும் பணியை அரசு ஊழியர்கள் தொடர்ந்து செய்திட அறிவுறுத்தியுள்ளேன்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    மக்களின் குறைகளைக் களைந்து - அவர்களது தேவைகளை விரைந்து நிறைவேற்றித் தர உருவான #உங்களுடன்_ஸ்டாலின் திட்டம் பொதுமக்களான உங்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

    இந்தத் திட்டத்தை இன்னும் மேம்படுத்திட - இன்னும் விரைவாகத் தீர்வுகளை அளித்திட, துறைச் செயலாளர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தினேன்.

    இந்தத் திட்டத்தில் அளிக்கப்படும் மனுக்களுக்கு நல்லதொரு தீர்வை நல்கிடும் பணியை அரசு ஊழியர்கள் தொடர்ந்து செய்திட அறிவுறுத்தியுள்ளேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • திருப்புவனம் போலீஸ் நிலையத்தில் மனுக்கள் திருட்டு போனதாக புகார் கொடுத்திருந்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் சுற்று வட்டார கிராமங்களில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் நடந்தன. இந்த முகாம்களில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர். இந்த மனுக்களை அதிகாரிகள் வாங்கி விசாரித்து நடவடிக்கை எடுப்பதற்காக கொண்டு சென்றனர்.

    இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட 50-க்கும் மேற்பட்ட மனுக்கள் திருப்புவனம் வைகை ஆற்றில் மிதந்தன. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த சம்பவம் தொடர்பாக அப்போது இருந்த தாசில்தார், திருப்புவனம் போலீஸ் நிலையத்தில் மனுக்கள் திருட்டு போனதாக புகார் கொடுத்திருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

    இந்நிலையில் நேற்று ஒருவரை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். தொடர்ந்து அவரிடம் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

    • காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடைபெறும்.
    • பொதுமக்கள் தங்கள் வார்டுகளில் நடைபெறும் "உங்களுடன் ஸ்டாலின்" முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது.

    சென்னை:

    சென்னை மாநகராட்சியில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் இன்று 10 வார்டுகளில் நடைபெற உள்ளது.

    மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், அம்பத்தூர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, வளசரவாக்கம், கோடம்பாக்கம், ஆலந்தூர், அடையாறு உள்ளிட்ட 10 வார்டுகளில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நடைபெறும்.

    பொதுமக்கள் தங்கள் வார்டுகளில் நடைபெறும் "உங்களுடன் ஸ்டாலின்" முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது. 

    • உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும்.
    • பொதுமக்கள் தங்கள் வார்டுகளில் நடைபெறும் முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

    பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாம் நாளை (11.09.2025) திருவொற்றியூர் மண்டலம் (மண்டலம்-1), வார்டு-4ல் ராமநாதபுரம் முதல் தெரு நடுநிலைப்பள்ளி எதிரில் உள்ள சமுதாயக் கூடம், மணலி மண்டலம் (மண்டலம்-2), வார்டு-16ல் ஆண்டார்குப்பம் பள்ளி மைதானம், தண்டையார்பேட்டை மண்டலம் (மண்டலம்-4), வார்டு-35ல் கொடுங்கையூர், எம்.ஆர்.நகரில் உள்ள முத்துகுமாரசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, இராயபுரம் மண்டலம் (மண்டலம்-5), வார்டு-54ல் வால்டாக்ஸ் சாலையில் உள்ள ஜே.கே.கன்வென்ஷன் ஹால், திரு.வி.க.நகர் மண்டலம் (மண்டலம்-6),

    வார்டு-69ல் அகரம் பார்த்தசாரதி தெருவில் உள்ள மாநகராட்சி விளையாட்டு மைதானம், அம்பத்தூர் மண்டலம் (மண்டலம்-7), வார்டு-93ல் முகப்பேர், நந்தினி லட்சுமணன் தெருவில் உள்ள ஏ.எஸ்.என். மஹால், அண்ணாநகர் மண்டலம் (மண்டலம் – 8), வார்டு-94ல் வில்லிவாக்கம், எம்.டி.எச். சாலையில் உள்ள டி.கே.ஏ. திருமண மண்டபம், தேனாம்பேட்டை மண்டலம் (மண்டலம்–9), வார்டு-111ல் ஆயிரம் விளக்கு, மாதிரி பள்ளிச் சாலையில் உள்ள சமுதாயக் கூடம், கோடம்பாக்கம் மண்டலம் (மண்டலம் – 10), வார்டு-127ல் கோயம்பேடு,

    காளியம்மாள் கோயில் தெரு, சென்னை குடிநீர் வாரிய வளாகத்தில் உள்ள பேட்டரி மூன்று சக்கர வாகன நிறுத்துமிடம், அடையாறு மண்டலம் (மண்டலம் – 13), வார்டு-170ல் கோட்டூர் இரயில் நிலையம் அருகிலுள்ள ஹாக்கி விளையாட்டு மைதானம், பெருங்குடி மண்டலம் (மண்டலம் – 14), வார்டு-189ல் பள்ளிக்கரணை, ஐஐடி காலனி 3வது பிரதான சாலையில் உள்ள ஐஐடி சமுதாயக் கூடம், சோழிங்கநல்லூர் மண்டலம் (மண்டலம் – 15), வார்டு-199ல் பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளி ஆகிய 12 வார்டுகளில் நடைபெறவுள்ளது.

    இந்த முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும். பொதுமக்கள் தங்கள் வார்டுகளில் நடைபெறும் "உங்களுடன் ஸ்டாலின்" முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே பரிதாப நிலையில் இருக்கிறது.
    • தி.மு.க.வின் விளம்பர நிகழ்ச்சிகள் நடத்தும் அளவுக்கு, அதிகார துஷ்பிரயோகம் நடைபெறுகிறது.

    சென்னை:

    தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

    திருச்சி மாவட்டம், உப்பிலியாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆலத்துடையான்பட்டி ஊராட்சியில், நூற்றாண்டு விழா கண்ட ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு விடுமுறை அளித்து, நேற்றைய தினம், தி.மு.க. அரசின் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றிருக்கிறது. தி.மு.க.வின் விளம்பர நாடகங்களுக்கு, அரசுப்பள்ளிகள் கூட பலிகடா ஆக்கப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

    பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே பரிதாப நிலையில் இருக்கிறது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் சொந்த மாவட்டத்திலேயே, சுமார் நூறுக்கும் அதிகமான மாணவர்கள் பயிலும் பள்ளிக்கு விடுமுறை அளித்து, தி.மு.க.வின் விளம்பர நிகழ்ச்சிகள் நடத்தும் அளவுக்கு, அதிகார துஷ்பிரயோகம் நடைபெறுகிறது.

    தி.மு.க.வினருக்கு சொந்தமாக திருச்சியில் வேறு இடங்களா இல்லை? ஏழை, எளிய மாணவர்கள் பயிலும் அரசுப் பள்ளிதானே என்ற அலட்சியப் போக்கு. தி.மு.க.வின் இந்த மக்கள் விரோதப் போக்குக்கு, வரும் 2026 தேர்தலில் தமிழக மக்கள் முடிவு கட்டுவார்கள்.

    இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

    • மக்களுக்கு நன்மை செய்வதாகக் கூறி ஊழலை ஊக்குவிக்கும் செயலில் திராவிட மாடல் அரசு ஈடுபட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.
    • மொத்தத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் உங்களுடன் ஊழல் முகாம்களாக மாறிவிட்டன.

    தமிழகம் முழுவதும் நடத்தி வரும் உங்களுடன் ஸ்டாலின் முகாம் குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

    இதுதொடர்பாக அன்புமணி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழ்நாடு முழுவதும் மக்களுக்கு 46 வகையான சேவைகளை வழங்கப்போவதாகக் கூறி நடத்தப்பட்டு வரும் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் ஊழல் தலைவிரித்தாடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மக்களுக்கு நன்மை செய்வதாகக் கூறி ஊழலை ஊக்குவிக்கும் செயலில் திராவிட மாடல் அரசு ஈடுபட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.

    தமிழ்நாட்டில் கடந்த ஜூலை 15-ஆம் தேதி தொடங்கப்பட்ட உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் நவம்பர் 14-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. மொத்தம் 10 ஆயிரம் முகாம்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இதுவரை ஐந்தாயிரம் முகாம்கள் நடத்தப்பட்டு, அவற்றின் வாயிலாக 40 லட்சம் மனுக்கள் பெறப்பட்டுள்ளன.

    மகளிர் உரிமைத் தொகை கோரி மட்டும் 22 லட்சத்திற்கும் கூடுதலான மனுக்கள் பெறப்பட்டுள்ளன. மொத்தமாகப் பெறப்பட்ட மனுக்களில் 80% மனுக்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மகளிர் உரிமைத் தொகை கோரி விண்ணப்பித்த ஒருவருக்குக் கூட இதுவரை உரிமைத் தொகை வழங்கப்படவில்லை. அந்த வகையில் இந்தத் திட்டம் பெரும் தோல்வி அடைந்துள்ளது.

    மக்களுக்கு சேவை வழங்குவதை வெற்றிகரமாக செய்ய முடியாத திமுக அரசு, ஊழலை மட்டும் வெற்றிகரமாக செய்து வருகிறது. பட்டா மாற்றம் கோரியும், மின்சார இணைப்பு கோரியும் பெறப்படும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக வருவாய்த்துறை மற்றும் மின் துறை அதிகாரிகள் கட்டாயக் கையூட்டு பெறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பட்டா மாற்றம் செய்வதற்காக நிலங்களின் மதிப்புக்கு ஏற்ற வகையில் கையூட்டு நிர்ணயிக்கப்பட்டு வசூலிக்கப்படுவதாக உழவர் அமைப்புகளில் தலைவர்களே குற்றஞ்சாட்டியுள்ளனர்.

    அதைவிடக் கொடுமை என்னவென்றால், கையூட்டு கொடுத்தால் சர்ச்சைக்குரிய இடங்கள், நீர்நிலை ஆக்கிரமிப்புகள் ஆகியவற்றில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்கும் மின்சார இணைப்பு வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது. மொத்தத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் உங்களுடன் ஊழல் முகாம்களாக மாறிவிட்டன.

    உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் வழங்கப்படும் சேவைகள் அனைத்தும் இயல்பாக அரசு அலுவகங்களில் வழங்கப்படும் சேவைகள் ஆகும். இந்த சேவைகள் அனைத்தும் குறிப்பிட்ட காலத்தில் வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையிலும், அனைத்து சேவைகளையும் இணைய வழியில் வழங்கும் வகையிலும் சேவை உரிமைச் சட்டத்தை இயற்ற வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதை செய்திருந்தால் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களை நடத்த வேண்டிய தேவையும் இல்லை; மக்கள் கையூட்டு வழங்க வேண்டிய கட்டாயமும் இல்லை. ஆனால், அதை செய்யத் தவறிய திமுக அரசு, இப்போது முகாம்களை நடத்தி ஊழலை ஊக்குவித்துக் கொண்டிருக்கிறது.

    மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாமல் விளம்பரங்களின் மூலமாகவே மக்களை ஏமாற்ற திமுக அரசு முயன்று வருகிறது. தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் விழித்துக் கொண்டதுடன், திமுகவின் ஏமாற்று நாடகங்களையும் புரிந்து கொண்டனர். அதனால், வரும் தேர்தலில் அவர்கள் திமுகவுக்கு மறக்க முடியாத பாடத்தை புகட்டுவார்கள்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • மனு கொடுக்க வந்த முதியவரை அதிகாரிகள் தாக்கியதை மன்னிக்கவே முடியாது.
    • கடமையைக் கூட செய்யாமல் மக்களை விரட்டியடிப்பது பெரும் குற்றமாகும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகரத்தை அடுத்த சாத்தூர் கிராமத்தில் நேற்று நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில், தமது கோரிக்கை மனு மீது நடவடிக்கை எடுக்கப்படாதது குறித்து வினா எழுப்பிய முதியவர் ஒருவரை அங்கிருந்த கிராம நிர்வாக அதிகாரியும், காவல் உதவி ஆய்வாளரும் கொடூரமாக அடித்து உதைத்து தாக்கியுள்ளனர். மனிதத் தன்மையற்ற இந்த செயல் கடுமையாக கண்டிக்கத்தக்கது.

    ஆற்காடு ஒன்றியத்தில் உள்ள முத்துப்பேட்டை கிராமத்தில் சில வாரங்களுக்கு முன் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் அதே கிராமத்தைச் சேர்ந்த திருவேங்கடம் என்ற முதியவர் தமது கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்திருந்தார். ஆனால், பல நாள்களாகியும் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், சாத்தூர் கிராமத்தில் நேற்று நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமுக்கு சென்ற முதியவர் திருவேங்கடம், அங்கிருந்த அதிகாரிகளை அணுகி தமது மனு மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? என்று வினவியுள்ளார். மேலும் தமது மனுவை பெற்றுக் கொண்டதற்காக ஒப்புகைச் சீட்டு வழங்கும்படி கோரியுள்ளார்.

    இதை சகித்துக் கொள்ள முடியாத கிராம நிர்வாக அதிகாரியும், அவருக்கு துணையாக வந்த அதிகாரிகளும் பெரியவர் வேங்கடபதியை அடித்து உதைத்துள்ளனர். அதுமட்டுமின்றி காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் அங்கு வந்த காவல் உதவி ஆய்வாளரும் அந்த முதியவரை மார்பில் குத்தி விரட்டியடித்துள்ளார். இந்த காட்சி சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. மனு கொடுக்க வந்த முதியவரை அதிகாரிகள் தாக்கியதை மன்னிக்கவே முடியாது.

    உங்களுடன் ஸ்டாலின் திட்டம் அறிவிக்கப்பட்ட போதே அது ஊரை ஏமாற்றும் திட்டம் என்பதை சுட்டிக்காட்டியிருந்தேன். இந்தத் திட்டம் தொடங்கப்பட்ட நாளில் இருந்து இன்று வரை 35 லட்சம் பேர் மனு அளித்துள்ள நிலையில், அவர்களில் 90 விழுக்காட்டிற்கும் கூடுதலான மனுக்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் மகளிர் உரிமைத் தொகை கோரி விண்ணப்பித்திருந்த நிலையில், முகாம்கள் தொடங்கி 50 நாள்களாகியும் இதுவரை ஒருவருக்குக் கூட உரிமைத் தொகை வழங்கப்படவில்லை. உங்களுடன் ஸ்டாலின் திட்டம் அப்பட்டமான படுதோல்வி என்பதற்கு இவை தான் சான்றாகும்.

    மனு மீது ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை? என்று எவரேனும் கேட்டால், அதற்கு பதிலளிக்க வேண்டியது அதிகாரிகளின் கடமை ஆகும். ஆனால், அந்தக் கடமையைக் கூட செய்யாமல் மக்களை விரட்டியடிப்பது பெரும் குற்றமாகும். இதற்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

    உங்களுடன் ஸ்டாலின் முகாம் மக்களுக்கு உதவி செய்வதற்காக கொண்டு வரப்பட்ட திட்டம் தானே தவிர, கேள்வி கேட்பவர்களை அடித்து உதைப்பதற்கான திட்டம் இல்லை என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டும். அதிகாரத் திமிருடன் மக்களை அவமதிப்பவர்களுக்கு மக்கள் மறக்க முடியாத பாடத்தைப் புகட்டுவார்கள் என கூறியுள்ளார். 

    • 3 ஆண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
    • வேலைநிறுத்த போராட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் 359 நபர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு, 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் 48 மணி நேர வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட பொருளாளர் துரைராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சுகந்தி, நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு மாவட்ட செயலாளர் விக்னேஷ், அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் முபாரக் அலி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில், 3 ஆண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். அனைத்து தாலுகா அலுவலகங்களில் புதிதாக துணை தாசில்தார் பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    இது குறித்து தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம்மாவட்டத் தலைவர் ஜான் பாஸ்டின் கூறுகையில், உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் குறுகிய கால அவகாசத்தில் அதிகமாக நடத்தப்படுகிறது. குறிப்பாக வாரத்தில் 5 நாட்கள் நடத்தப்படுவதால் பணிச்சுமை ஏற்படுகிறது. எனவே முகாம்கள் நடத்துவதை குறைத்து, வாரத்திற்கு 2 முகாம்கள் மட்டுமே நடத்த வேண்டும். இத்திட்டப்பணிகளை மேற்கொள்ள உரிய கால அவகாசம், கூடுதலான தன்னார்வலர்கள், நிதி ஒதுக்கீடு மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றை வழங்கிட வேண்டும் என்று தெரிவித்தார்.

    இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் 359 நபர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதனால் திண்டுக்கல் மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகம் உள்ளிட்ட வருவாய்த்துறை அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டதால் பணிகள் பாதிக்கப்பட்டன.

    • அழகப்பபுரம் பேரூராட்சியில் காமராஜர் திருமண மண்டபத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நடைபெற்றது.
    • விஜய் வசந்த் எம்.பி. உங்களுடன் ஸ்டாலின் முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்து மனுவை பெற்றுக் கொண்டார்.

    கன்னியாகுமரி மாவட்டம் அழகப்பபுரம் பேரூராட்சியில் நேற்று காமராஜர் திருமண மண்டபத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமை கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் முகாமை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். பின்னர் முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்து மனுவை பெற்றுக் கொண்டார்.

     

    இந்த நிகழ்ச்சியில் அழகப்பபுரம் பேரூராட்சி தலைவி அனிற்றா ஆண்ட்ரூஸ், துணைத் தலைவர் ஆண்ட்ரூஸ் மணி, வட்டாரத் தலைவி தங்கம் நடேசன்,மாநில செயலாளர் வழக்கறிஞர் சினிவாசன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் அரோக்கியராஜன், கிழக்கு மாவட்ட வர்த்தக தலைவர் டாக்டர் சிவகுமார், மயிலாடி நகர காங்கிரஸ் தலைவர் நடேசன் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட உதவி இயக்குநர் பாண்டியராஜ், அழகப்பபுரம் செயல் அலுவலர் பூதப்பாண்டி, அழகப்பபுரம் இளநிலை பொறியாளர் ஹரிதாஸ் உட்பட அழகப்பபுரம் பேரூராட்சி கவுன்சிலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ×