என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    அழகப்பபுரம் பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாமை தொடங்கி வைத்து ஆய்வு செய்த விஜய் வசந்த் எம்.பி.
    X

    அழகப்பபுரம் பேரூராட்சியில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமை தொடங்கி வைத்து ஆய்வு செய்த விஜய் வசந்த் எம்.பி.

    • அழகப்பபுரம் பேரூராட்சியில் காமராஜர் திருமண மண்டபத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நடைபெற்றது.
    • விஜய் வசந்த் எம்.பி. உங்களுடன் ஸ்டாலின் முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்து மனுவை பெற்றுக் கொண்டார்.

    கன்னியாகுமரி மாவட்டம் அழகப்பபுரம் பேரூராட்சியில் நேற்று காமராஜர் திருமண மண்டபத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமை கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் முகாமை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். பின்னர் முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்து மனுவை பெற்றுக் கொண்டார்.

    இந்த நிகழ்ச்சியில் அழகப்பபுரம் பேரூராட்சி தலைவி அனிற்றா ஆண்ட்ரூஸ், துணைத் தலைவர் ஆண்ட்ரூஸ் மணி, வட்டாரத் தலைவி தங்கம் நடேசன்,மாநில செயலாளர் வழக்கறிஞர் சினிவாசன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் அரோக்கியராஜன், கிழக்கு மாவட்ட வர்த்தக தலைவர் டாக்டர் சிவகுமார், மயிலாடி நகர காங்கிரஸ் தலைவர் நடேசன் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட உதவி இயக்குநர் பாண்டியராஜ், அழகப்பபுரம் செயல் அலுவலர் பூதப்பாண்டி, அழகப்பபுரம் இளநிலை பொறியாளர் ஹரிதாஸ் உட்பட அழகப்பபுரம் பேரூராட்சி கவுன்சிலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×