என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "corruption"

    • பீகாரில் ரூ.27 ஆயிரம் கோடி​யில் அனல் மின் உற்பத்தி நிலையத்தை அதானி பவர் லிமிடெட் அமைக்கிறது.
    • பிர்பைண்டி கிராமத்தில் 25 வருடங்களுக்கு மின்சார கொள்முதல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

    அதானி பவர் லிமிடெட் நிறுவனம் பீகாரில் ரூ.27 ஆயிரம் கோடியில் 2,400 மெகாவாட் அனல் மின் உற்பத்தி நிலையத்தை அமைக்கிறது. இந்தத் திட்டத்திற்காக, பீகாரின் பாகல்பூர் மாவட்டத்தில் உள்ள பிர்பைண்டி கிராமத்தில் 25 வருடங்களுக்கு மின்சாரம் கொள்முதல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

    இங்கு 800 மெகா வாட் திறன் கொண்ட 3 ஆலைகள் நிறுவப்படும். 5 ஆண்டுகளில் உற்பத்தி தொடங்கப்படும். இங்கு உற்பத்தி செய்யப்படும் இந்த ஒப்பந்தத்தில் மின்சாரம் பீகார் மாநிலத்துக்கு யூனிட்டுக்கு ரூ.6.075 என்ற விலையில் வழங்கப்படும்.

    இந்நிலையில், பீகார் அரசுக்கும் அதானி பவர் லிமிடெட் நிறுவனத்திற்கும் இடையிலான மின்சார ஒப்பந்தத்தில் பெரும் ஊழல் நடந்துள்ளதாக முன்னாள் மத்திய மின்சார அமைச்சர் ஆர்.கே. சிங் குற்றம் சாட்டியுள்ளார்.

    பீகார் அரசு அதானி பவர் லிமிடெட் நிறுவனத்துடன் 25 ஆண்டுகளுக்கு ஒரு யூனிட்டுக்கு 6 ரூபாய் என்ற அதிகமான விலையில் மின்சாரம் வாங்க ஒப்பந்தம் செய்துள்ளதாக ஆர்.கே. சிங் குற்றம் சாட்டியுள்ளார்.

    2017-2024 க்கு இடையில் ஆர்.கே. சிங் மத்திய மின்சார அமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஒவ்வொரு பணிக்கும் ரூ.25 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை கையூட்டாக வசூலிக்கப்பட்டதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்திருக்கிறது.
    • இதில் பல முக்கிய அரசியல்வாதிகளும், உயரதிகாரிகளும் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

    பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:-

    தமிழ்நாடு அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறைக்கு 2538 அதிகாரிகள் மற்றும் பொறியாளர்களை நியமிப்பதற்கான ஆள்தேர்வில் பெருமளவில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாகவும், ஒவ்வொரு பணிக்கும் ரூ.35 லட்சம் வரை கையூட்டு பெறப்பட்டிருப்பதற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தும்படி தமிழக காவல்துறைக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதியுள்ளது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதிலும் கரப்ஷன், கலெக்ஷன், கமிஷன் கலாச்சாரத்தை திமுக அரசு கட்டவிழ்த்து விட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.

    தமிழ்நாட்டையே உலுக்கும் வகையிலான இந்த வேலைவாய்ப்பு ஊழல் குறித்த விவரங்களை தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழ் ஆதாரங்களுடன் வெளியிட்டிருக்கிறது. தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கடந்த ஏப்ரல் மாதம் 7-ஆம் தேதி முதல் 3 நாள்களுக்கு அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அந்த சோதனையில் இந்த ஊழல் குறித்த ஆவணங்கள் கிடைத்ததாக தமிழக காவல்துறைக்கு எழுதிய கடிதத்தில் அமலாக்கத்துறை தெரிவித்திருப்பதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் தெரிவித்திருக்கிறது.

    நகராட்சி நிர்வாகத்துறை சார்பில் அண்ணா பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட்ட இந்த ஆள்தேர்வின் மூலம் மூலம் 2538 அதிகாரிகள், பொறியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும், ஒவ்வொரு பணிக்கும் ரூ.25 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை கையூட்டாக வசூலிக்கப்பட்டதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்திருக்கிறது. கையூட்டின் மூலம் வசூலிக்கப்பட்ட பணம் ஹவாலா முறையில் பல இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், இதில் பல முக்கிய அரசியல்வாதிகளும், உயரதிகாரிகளும் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கும் அமலாக்கத்துறை, இதற்கு மூளையாக செயல்பட்டவர்களின் விவரங்கள், ஊழல் எவ்வாறு செய்யப்பட்டது என்பது தொடர்பான விவரங்கள் அடங்கிய 232 பக்க ஆவணங்களையும் காவல்துறைக்கு அனுப்பியுள்ளது.

    நகராட்சி நிர்வாகத்துறை பணி நியமனங்களில் நடைபெற்ற ஊழல்கள் குறித்த இந்த உண்மைகள் கேட்பவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தலாம். ஆனால், இந்த விஷயத்தில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு எந்த அதிர்ச்சியும் இல்லை. ஏனென்றால், கையூட்டு வாங்குவதற்காக திட்டமிட்டே இந்த ஆள்தேர்வு முறை வடிவமைக்கப்பட்டது என்பதை 2023&ஆம் ஆண்டிலேயே பாட்டாளி மக்கள் கட்சி அம்பலப்படுத்தியிருந்தது.

    ''உள்ளாட்சிகளில் 2534 பணிகளை நேரடியாக நிரப்புவது ஊழலுக்கே வழிவகுக்கும்: டி.என்.பி.எஸ்.சி மூலம் நிரப்ப வேண்டும்!'' என்ற தலைப்பில் 16.11.2023&ஆம் நாள் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில்,''தமிழ்நாட்டில் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள சில குறிப்பிட்ட வகை பணியாளர்களை அந்தந்த நிறுவனங்களே தேர்ந்தெடுக்கும் நடைமுறை இருந்து வந்தது. ஆனால், இத்தகைய நடைமுறையில் ஊழல்கள் நடைபெற வாய்ப்புகள் இருப்பதாகக் கூறி, இனிவரும் காலங்களில் பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றின் பணியாளர்களும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாகவே தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்தது.

    அதற்கான சட்டமும் கடந்த 2021 திசம்பர் மாதத்தில் நிறைவேற்றப்பட்டது. உள்ளாட்சி அமைப்புகளின் பணியாளர்களை, அந்த அமைப்புகளே தேர்ந்தெடுத்தால் நியாயமாக இருக்காது; ஊழல்களும், முறைகேடுகளும் நடைபெறலாம் என்பதால் தான், அவர்களை போட்டித் தேர்வுகள் மூலம் தேர்வு செய்யும் பொறுப்பு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு மாற்றப்பட்டது. ஆனால், இப்போது அந்தப் பொறுப்பு மீண்டும் உள்ளாட்சி அமைப்புகளுக்கே வழங்கப்பட்டிருக்கிறது என்றால், அதன் நோக்கம், தமிழக அரசு ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல, ஊழல் செய்வதைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?'' என்று வினா எழுப்பப்பட்டிருந்தது. பா.ம.க.வின் குற்றச்சாட்டு இப்போது உண்மையாகிவிட்டது.

    இதேபிரச்சினை தொடர்பாக கடந்த பிப்ரவரி 8&ஆம் தேதி நான் வெளியிட்ட அறிக்கையில்,''தமிழ்நாட்டில் இரண்டாம் தொகுதி பணிகளுக்கு நேர்காணல் ரத்து செய்யப்பட்டு விட்டது. ஆனால், அதை விட கீழான பணிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் மூலம் நேர்காணல் நடத்தி தகுதியானவர்களை நகராட்சி நிர்வாகத்துறை தேர்ந்தெடுக்கிறது எனும் போது, முறைகேடுகள் செய்வதற்காகத் தான் நேர்காணல் நடத்தப்படுகிறதோ? என்ற ஐயம் எழுவது இயற்கை. அதிலும் குறிப்பாக சான்றிதழ் சரிபார்ப்பும், நேர்காணலும் முடிவடைந்த பிறகும் இறுதி முடிவுகளை வெளியிடாமல், கடந்த காலங்களில் நேர்காணலுக்கு வராதவர்களை மீண்டும், மீண்டும் நேர்காணலுக்கு வாருங்கள் என அழைக்கும் போது முறைகேடு குறித்த ஐயம் அதிகரிக்கிறது'' என்று கூறியிருந்தேன். அது தான் இப்போது நடைபெற்றிருக்கிறது. அரசு ஊழியர்கள் நியமனத்தில் திமுக அரசு திட்டமிட்டு ஊழல் செய்திருக்கிறது என்பதற்கு இதைவிட ஆதாரம் தேவையில்லை.

    ஒரு பணிக்கு அதிகபட்சமாக ரூ.35 லட்சம் என்றால், 2538 பணிகளுக்கும் சேர்த்து ரூ.888.30 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றிருக்க வாய்ப்புகள் உள்ளன. தமிழ்நாட்டில் 1.30 இளைஞர்கள் படித்துவிட்டு தகுதிக்கு ஏற்ற வேலை கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு வேலை வழங்க திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆட்சிக்கு வந்தால் ஐந்தரை லட்சம் பேருக்கு வேலை வழங்குவோம் என்று வாக்குறுதி அளித்திருந்த திமுக, இன்னும் 50 ஆயிரம் பேருக்கு கூட நிரந்தர வேலை வழங்கவில்லை. மிகக் குறைந்த எண்ணிக்கையிலான பணி நியமனங்களிலும் கூட ரூ.35 லட்சம் வரை கையூட்டு வசூலிக்கப்படுகிறது என்றால் தமிழக ஆட்சியாளர்களுக்கு மனசாட்சியே இல்லை என்று தான் பொருள்.

    தமிழக ஆட்சியாளர்கள் உத்தமர்களைப் போல வேடமணிந்து நாடகமாடிக் கொண்டிருக்கும் வேளையில், அவர்களின் ஒவ்வொரு அணுவிலும், அசைவிலும் ஊழல் நிறைந்திருக்கிறது. கடந்த நான்கரை ஆண்டுகளில் ஊழல்களைத் தவிர அவர்கள் வேறு எதையும் செய்யவில்லை. மணல் கொள்ளை ஊழல், மது விற்பனை ஊழல், மின்சாரக் கொள்முதல் ஊழல், கட்டுமான அனுமதி ஊழல், பேருந்து கொள்முதல் ஊழல் என எங்கும், எதிலும் ஊழல்கள் தான் நிரம்பியிருக்கின்றன. இவை அனைத்தையும் விட அரசு வேலைகளுக்கு கையூட்டு வாங்குவதன் மூலம் திறமையுள்ள ஏழை இளைஞர்களுக்கு அரசு வேலை கிடைப்பதை திமுக அரசு தடுத்திருக்கிறது. திமுக ஆட்சியாளர்களின் இந்த பாவத்திற்கு எக்காலத்திலும் மன்னிப்பு கிடையாது.

    நகராட்சி நிர்வாகத்துறை பணி நியமனங்களில் நடைபெற்றுள்ள ஊழல்கள் தொடர்பாக அமலாக்கத்துறை அனுப்பியுள்ள ஆதாரங்களின் அடிப்படையில் தமிழக காவல்துறை உடனடியாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இதில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும். இந்த வழக்கை தமிழக காவல்துறை விசாரித்தால் நியாயம் கிடைக்காது என்பதால் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த பின்னர், தமிழகத்தை அதிர வைக்கும் இந்த பணி நியமன ஊழல் வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு அரசு மாற்ற வேண்டும்.

    • பெரிய தலைகளைக் காப்பாற்ற திமுக அரசு முயற்சிக்கிறதோ என்ற சந்தேகம் மக்கள் மனதில் வலுக்கிறது.
    • மோசடி குறித்து சி.பி.ஐ., விசாரணை நடத்தினால் தான் உண்மை வெளியே வரும்.

    பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    மதுரை மாநகராட்சி முறைகேட்டின் மர்மம் எப்போது விலகும்?

    மதுரை மாநகராட்சியின் சொத்து வரி வசூலில் சுமார் ரூ.150 கோடிக்கும் அதிகமாக முறைகேடுகள் நடந்திருப்பதாகப் புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து, மதுரை மேயர் திருமதி. இந்திராணி பொன் வசந்த் அவர்கள் தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது கடும் அதிர்ச்சியையும் பல்வேறு குழப்பங்களையும் ஏற்படுத்துகிறது.

    திமுக அமைச்சர்களுக்கும், முக்கியப் பிரமுகர்களுக்கும் தொடர்பிருக்கலாம் எனச் சந்தேகிக்கக் கூடிய மதுரை முறைகேடு விவகாரத்தில் மேயரின் கணவர் தடாலடியாக கைது செய்யப்படுவதையும், மேயர் கமுக்கமாக ராஜினாமா செய்வதையும் பார்த்தால், சிறிய மீன்களைப் பலியிட்டு பெரிய தலைகளைக் காப்பாற்ற திமுக அரசு முயற்சிக்கிறதோ என்ற சந்தேகம் மக்கள் மனதில் வலுக்கிறது.

    ஊழல் குற்றச்சாட்டு, நிர்வாகக் குளறுபடிகள், நம்பிக்கையில்லா தீர்மானம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், தமிழகத்தின் முக்கிய மாநகராட்சிகளான கோவை, நெல்லை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த திமுக மேயர்கள் இதுவரை ராஜினாமா செய்துள்ளனர். அந்த வரிசையில் தற்போது மதுரையும் இணைந்திருப்பது, உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிப்பதில் திமுக அரசு எந்தளவிற்கு தோல்வியடைந்துள்ளது என்பதற்கான எடுத்துக்காட்டு.

    மக்களுக்கு அடிப்படை வசதிகளைச் செய்து தர வேண்டிய தமிழக உள்ளாட்சி அமைப்புகளை, மக்கள் பணத்தைக் கொள்ளையடிக்கும் கருவிகளாக மாற்றி வைத்திருப்பது தான் திமுக அரசின் நாடு போற்றும் நல்லாட்சியா? மக்களின் எதிர்ப்புகளைச் சமாளிக்க மேயர்கள் ராஜினாமா, புது மேயர் பொறுப்பேற்பு எனத் திமுக அரசு என்னதான் நாடகம் ஆடினாலும், மாநிலம் முழுவதும் நிலவும் நிர்வாகச் சீர்கேடுகள், ஊழல் வரி வசூலில் நடக்கும் மோசடி குறித்து சி.பி.ஐ., விசாரணை நடத்தினால் தான் உண்மை வெளியே வரும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • நீதிபதி ரவீந்திர மைதானியும் இதேபோல எந்தக் காரணமும் குறிப்பிடாமல் விலகினார்.
    • ஒரு தனிநபரின் வழக்குகளில் இருந்து இவ்வளவு நீதிபதிகள் விலகுவது இந்திய நீதித்துறை வரலாற்றில் இதுவே முதல்முறை.

    உத்தரகாண்டை சேர்ந்த இந்திய வனத்துறை அதிகாரி (IFS) அதிகாரி சஞ்சீவ் சதுர்வேதி அரசின் பல்வேறு மட்டங்களில் நடைபெறும் ஊழலுக்கு எதிராக குரல் கொடுப்பவராக அறியப்படுபவர் ஆவார்.

    இந்த ஊழல்கள் குறித்து அவர் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் ஆகியவற்றில் பல்வேறு வழக்குகளை தொடர்ந்திருக்கிறார்.

    ஆனால் இந்த வழக்குகள் விசாரிக்கப்படுவதில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் தடங்கல் குறித்து பலரும் கவலை தெரிவிக்கின்றனர்.

    இதற்கிடையே மத்திய அரசு ஊழியர்களின் குறைகளை தீர்க்கும் வகையில் செயல்பட்டு வரும் மத்திய நிர்வாக தீர்ப்பாயம் (CAT) க்கு எதிராக சஞ்சீவ் சதுர்வேதி தொடர்ந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில் இந்த வழக்கை விசாரிப்பதில் இருந்து உத்தரகண்ட் உயர் நீதிமன்ற நீதிபதி அலோக் வர்மா விலகியுள்ளார். இது, சதுர்வேதியின் வழக்குகளில் இருந்து ஒரு நீதிபதி விலகுவது இது 16வது முறையாகும்.

    இவருக்கு முன், கடந்த செப்டம்பர் 26 அன்று, நீதிபதி ரவீந்திர மைதானியும் இதேபோல எந்தக் காரணமும் குறிப்பிடாமல் விலகினார்.

    சதுர்வேதி தொடர்ந்த வெவ்வேறு வழக்குகளில் இருந்து உச்ச நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள், உயர் நீதிமன்றத்தின் நான்கு நீதிபதிகள், கீழமை நீதிமன்றங்களின் இரண்டு நீதிபதிகள் மற்றும் மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தின் எட்டு நீதிபதிகள் இதுவரை விலகி உள்ளனர்.

    நீதிபதிகள் வழக்குகளை விசாரிக்காமல் விலகுவதற்கான காரணம் கூறப்படாத நிலையில் ஊழலை மூடி மறைக்க முயற்சி நடக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    ஒரு தனிநபரின் வழக்குகளில் இருந்து இவ்வளவு நீதிபதிகள் விலகுவது இந்திய நீதித்துறை வரலாற்றில் இதுவே முதல்முறை.  

    • ‘சூரியன்’ என்று பொருள்படும் ‘டியெல்லா’ என்று அந்த ஏஐ அமைச்சருக்கு பெயரிடப்பட்டுள்ளது.
    • அல்பேனிய பிரதமா் எடி ராமா அறிவித்தார்.

    உலகில் முதல் முறையாக அல்பேனியா நாடு செயற்கை நுண்ணறிவு (ஏஐ) அமைச்சரை நியமித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

    அந்நாட்டு அமைச்சரவையில் ஊழல் தடுப்புத் துறை அமைச்சராக ஏஐ நியமிக்கப்பட்டதாக அல்பேனிய பிரதமா் எடி ராமா நேற்று அறிவித்தார்.

    'சூரியன்' என்று பொருள்படும் 'டியெல்லா' என்று அந்த ஏஐ அமைச்சருக்கு பெயரிடப்பட்டுள்ளது.

    டியெல்லா, 100 சதவீத ஊழல் இன்றியும் விரைவாகவும் வெளிப்படையாகவும் அரசு ஒப்பந்தங்களை கையாள உதவும் என்று பிரதமா் எடி ராமா தெரிவித்தார்.

    1990 இல் கம்யூனிஸ்ட் ஆட்சி வீழ்ச்சிக்கு பிறகு அல்பேனியாவில் ஊழல் மலிந்து காணப்படுகிறது. டியெல்லாவின் வருகை மக்களுக்கு நம்பிக்கையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    • மக்களுக்கு நன்மை செய்வதாகக் கூறி ஊழலை ஊக்குவிக்கும் செயலில் திராவிட மாடல் அரசு ஈடுபட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.
    • மொத்தத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் உங்களுடன் ஊழல் முகாம்களாக மாறிவிட்டன.

    தமிழகம் முழுவதும் நடத்தி வரும் உங்களுடன் ஸ்டாலின் முகாம் குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

    இதுதொடர்பாக அன்புமணி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழ்நாடு முழுவதும் மக்களுக்கு 46 வகையான சேவைகளை வழங்கப்போவதாகக் கூறி நடத்தப்பட்டு வரும் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் ஊழல் தலைவிரித்தாடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மக்களுக்கு நன்மை செய்வதாகக் கூறி ஊழலை ஊக்குவிக்கும் செயலில் திராவிட மாடல் அரசு ஈடுபட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.

    தமிழ்நாட்டில் கடந்த ஜூலை 15-ஆம் தேதி தொடங்கப்பட்ட உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் நவம்பர் 14-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. மொத்தம் 10 ஆயிரம் முகாம்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இதுவரை ஐந்தாயிரம் முகாம்கள் நடத்தப்பட்டு, அவற்றின் வாயிலாக 40 லட்சம் மனுக்கள் பெறப்பட்டுள்ளன.

    மகளிர் உரிமைத் தொகை கோரி மட்டும் 22 லட்சத்திற்கும் கூடுதலான மனுக்கள் பெறப்பட்டுள்ளன. மொத்தமாகப் பெறப்பட்ட மனுக்களில் 80% மனுக்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மகளிர் உரிமைத் தொகை கோரி விண்ணப்பித்த ஒருவருக்குக் கூட இதுவரை உரிமைத் தொகை வழங்கப்படவில்லை. அந்த வகையில் இந்தத் திட்டம் பெரும் தோல்வி அடைந்துள்ளது.

    மக்களுக்கு சேவை வழங்குவதை வெற்றிகரமாக செய்ய முடியாத திமுக அரசு, ஊழலை மட்டும் வெற்றிகரமாக செய்து வருகிறது. பட்டா மாற்றம் கோரியும், மின்சார இணைப்பு கோரியும் பெறப்படும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக வருவாய்த்துறை மற்றும் மின் துறை அதிகாரிகள் கட்டாயக் கையூட்டு பெறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பட்டா மாற்றம் செய்வதற்காக நிலங்களின் மதிப்புக்கு ஏற்ற வகையில் கையூட்டு நிர்ணயிக்கப்பட்டு வசூலிக்கப்படுவதாக உழவர் அமைப்புகளில் தலைவர்களே குற்றஞ்சாட்டியுள்ளனர்.

    அதைவிடக் கொடுமை என்னவென்றால், கையூட்டு கொடுத்தால் சர்ச்சைக்குரிய இடங்கள், நீர்நிலை ஆக்கிரமிப்புகள் ஆகியவற்றில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்கும் மின்சார இணைப்பு வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது. மொத்தத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் உங்களுடன் ஊழல் முகாம்களாக மாறிவிட்டன.

    உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் வழங்கப்படும் சேவைகள் அனைத்தும் இயல்பாக அரசு அலுவகங்களில் வழங்கப்படும் சேவைகள் ஆகும். இந்த சேவைகள் அனைத்தும் குறிப்பிட்ட காலத்தில் வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையிலும், அனைத்து சேவைகளையும் இணைய வழியில் வழங்கும் வகையிலும் சேவை உரிமைச் சட்டத்தை இயற்ற வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதை செய்திருந்தால் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களை நடத்த வேண்டிய தேவையும் இல்லை; மக்கள் கையூட்டு வழங்க வேண்டிய கட்டாயமும் இல்லை. ஆனால், அதை செய்யத் தவறிய திமுக அரசு, இப்போது முகாம்களை நடத்தி ஊழலை ஊக்குவித்துக் கொண்டிருக்கிறது.

    மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாமல் விளம்பரங்களின் மூலமாகவே மக்களை ஏமாற்ற திமுக அரசு முயன்று வருகிறது. தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் விழித்துக் கொண்டதுடன், திமுகவின் ஏமாற்று நாடகங்களையும் புரிந்து கொண்டனர். அதனால், வரும் தேர்தலில் அவர்கள் திமுகவுக்கு மறக்க முடியாத பாடத்தை புகட்டுவார்கள்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • சோதனையில் 24 வீடுகள், 6 மனைகள், 40 ஏக்கர் விவசாய நிலம் தொடர்பான பத்திரங்கள் கைப்பற்றப்பட்டன.
    • ரூ.41 லட்சம் மதிப்பிலான பணம் மற்றும் விலை உயர்ந்த ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன

    கர்நாடகாவில் மாதம் ரூ.15,000 சம்பளம் வாங்கி வந்த அரசு ஊழியரிடம் இருந்து, ரூ.30 கோடி மதிப்பிலான சொத்து பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கிராமப்புற உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனத்தில் முன்னாள் எழுத்தராக பணியாற்றிய கலக்கப்பா நிடகுண்டியின் வீட்டில் லோக் ஆயுக்தா அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    அப்போது கணக்கில் வராத ரூ.30 கோடி மதிப்பிலான சொத்துக்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    இதுவரையிலான சோதனையில் 24 வீடுகள், 6 மனைகள், 40 ஏக்கர் விவசாய நிலம், 1 கிலோ தங்கம், மூன்றுக்கும் மேற்பட்ட கார், பைக், ரூ.41 லட்சம் மதிப்பிலான பணம் மற்றும் விலை உயர்ந்த ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன

    அரசு ஊழியரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக என லோக் ஆயுக்தா அதிகாரிகள் தெரிவித்தனர். 

    • லஞ்ச ஒழிப்பு போலீசார் மறைந்து இருந்து விஜயமாரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
    • கைதான அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், கடத்தூர் அடுத்த மணியம் பாடியில் நிலஅளவையாளராக விஜயகுமார் என்பவர் பணியாற்றி வந்தார்.

    இந்த நிலையில் அவர் நிலம் அளவீடு செய்ய இன்று மதியம் ஒருவரிடம் லஞ்சம் வாங்கியதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் மறைந்து இருந்து விஜயமாரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். கைதான அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரூ.50 லட்சம் லஞ்சம் கேட்டு முதல் தவணையாக ரூ.20 லட்சம் பெற்றுள்ளார்
    • பணமோசடி வழக்கில் இருந்து சுரங்க தொழிலதிபரின் பெயரை நீக்குவதாக உறுதியளித்துள்ளார்.

    ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள அமலாக்க இயக்குநரகத்தின் (ED) துணை இயக்குநர், லஞ்சம் பெற்றதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

    துணை இயக்குநர் சிந்தன் ரகுவன்ஷியை சிபிஐ கைது செய்தது. அவர் 2013 பேட்ச் இந்திய வருவாய் சேவை அதிகாரி ஆவார்.

    அவர் உள்ளூர் சுரங்க தொழிலதிபர் ஒருவரிடம் ரூ.50 லட்சம் லஞ்சம் கேட்டு முதல் தவணையாக ரூ.20 லட்சம் பெற்றுள்ளார்.

    பணமோசடி வழக்கில் இருந்து சுரங்க தொழிலதிபரின் பெயரை நீக்குவதாக உறுதியளித்து ரூ.50 லட்சம் கேட்டிருக்கிறார்.

    தகவலறிந்த சிபிஐ அவரது அலுவலகத்தில் சோதனை நடத்தியது. இதில் கணக்கில் வராத பணம் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது சிபிஐ காவலில் சிந்தன் ரகுவன்ஷி வைக்கப்பட்டுள்ளார். 

    • கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து தரத்தை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை ஆகும்.
    • பாலங்கள், சாலைகள் ஆகியவற்றின் தரம் குறித்து தொடர்ந்து புகார்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.

    பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    நாமக்கல் அருகே முதல்வரால் திறக்கப்பட்ட நாளிலேயே விரிசல் விழுந்த பாலம்: ரூ.320 கோடி திட்டத்தில் நடந்த ஊழல் குறித்து விசாரணை தேவை!

    நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் நகரில் நெரிசலை குறைத்திடும் வகையில் 3.40 கி.மீ தொலைவுக்கு கட்டப்பட்டுள்ள பாலத்தின் பல இடங்களில் விரிசல்கள் ஏற்பட்டிருப்பதும், சுற்றுச்சுவரின் கற்கள் பெயர்ந்து விழுவதும் அங்குள்ள மக்களிடம் பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளன.

    ரூ.320 கோடியில் கட்டப்பட்டுள்ள அந்த மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தான் திறந்து வைத்த நிலையில், அதற்கு முன்பாகவே பாலம் சேதமடைந்திருப்பது கட்டுமானப் பணிகளின் தரமற்றத் தன்மையைத் தான் காட்டுகின்றன.

    பள்ளிப்பாளையம் பாலம் சென்னை - கன்னியாகுமரி தொழில்தடத் திட்டத்தின் கீழ், ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதி உதவியுடன் கட்டப்பட்டுள்ளது. பன்னாட்டு வங்கிகளின் நிதியுதவியுடன் பாலம் கட்டப்பட்டும் போது கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து தரத்தை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை ஆகும்.

    அவ்வாறு ஆய்வுகள் செய்யப்பட்டிருந்தால் பாலம் சேதமடைந்திருக்க வாய்ப்பில்லை. இந்த கோணத்தில் பார்க்கும் போது பாலத்திற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டது முதலே அதில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருக்கக் கூடும் என்று பள்ளிப்பாளையம் மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். அவற்றை ஒதுக்கித் தள்ளிவிட முடியாது.

    திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு கட்டப்பட்ட பாலங்கள், சாலைகள் ஆகியவற்றின் தரம் குறித்து தொடர்ந்து புகார்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ரூ.15.90 கோடியில் கட்டப்பட்ட பாலம் அடுத்த 3 மாதங்களில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. அணையிலிருந்து ஒரே நேரத்தில் தண்ணீர் திறந்து விடப்பட்டது தான் இதற்குக் காரணம் என்று கூறி அரசு தப்பிவிட்டது.

    ரூ.320 கோடியில் கட்டப்பட்ட பாலம் திறக்கப்படுவதற்கு முன்பே சேதமடைவது இயல்பானது அல்ல. பாலத்தைக் கட்டுவதில் நடந்த ஊழலும், அதன் காரணமாக நடந்த தரமற்ற கட்டுமானப் பணிகளும் இதற்குக் காரணமாக இருக்க முடியும்.

    எனவே, பள்ளிப்பாளையம் பாலத்தைக் கட்டுவதில் நடந்த ஊழல் குறித்து விசாரணை நடத்த ஆணையிட வேண்டும். பள்ளிப்பாளையம் மேம்பாலம் போக்குவரத்திற்கு திறக்கப்பட்டுள்ள நிலையில், அது போக்குவரத்திற்கு உகந்தது தானா? என்பது குறித்த பாதுகாப்பு தர ஆய்வுகளையும் அரசு மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • நான் அவரிடம் (மோடியிடம்) ஒரே ஒரு விஷயத்தைக் கேட்டுக் கொண்டேன்.
    • ஊழல் செய்பவர்களை எளிதாகப் பிடிக்க முடியும்

    ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு ரூ.500 நோட்டை ஒழிக்க வேண்டும் என்று பேசியுள்ளார்.

    கடப்பாவில் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர்களுடனான சந்திப்பின் போது பேசிய சந்திரபாபு நாயுடு, ரூ. 500 நோட்டுகளை நிறுத்த வேண்டும்.

    இப்போது அதிகமான மக்கள் டிஜிட்டல் பணத்தைப் பயன்படுத்துவதால், அனைத்து பெரிய நோட்டுகளையும் நீக்குவது ஊழலைக் குறைக்க உதவும் என்று தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய அவர் 2016 ஆம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது பிரதமர் மோடியிடம் டிஜிட்டல் நாணயம் குறித்த அறிக்கையைச் சமர்ப்பித்ததை நினைவு கூர்ந்தார்.

    "நான் அவரிடம் (மோடியிடம்) ஒரே ஒரு விஷயத்தைக் கேட்டுக் கொண்டேன். இன்று, நீங்கள் ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகளை ரத்து செய்துவிட்டு, புதிய ரூ.2,000 நோட்டை அறிமுகப்படுத்துகிறீர்கள். தேவைப்பட்டால், ரூ.500, ரூ.1,000 மற்றும் ரூ.2,000 நோட்டுகளை ரத்து செய்யுங்கள்.

    டிஜிட்டல் நாணயத்தை அறிமுகப்படுத்துங்கள்.ஊழல் செய்பவர்களை எளிதாகப் பிடிக்க முடியும்" என்று சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

    மேலும், பெரிய ரூபாய் நோட்டுகள் நிறுத்தப்பட்டால் மட்டுமே ஊழல் முடிவுக்கு வரும். மத்திய அரசு விரைவில் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சந்திரபாபு நாயடு வலியுறுத்தினார்.  

    • போக்ரா சர்வதேச விமான நிலையம் சீனாவின் எக்ஸிம் வங்கியிடமிருந்து வாங்கிய சுமார் ரூ.22 பில்லியன் கடனில் இருந்து கட்டப்பட்டது.
    • சின் தண்டா மலையின் 40 மீட்டர் பகுதியை அகற்றுவதற்கு ரூ.320 மில்லியன் செலவு ஆகியவை அடங்கும்.

    நேபாள் நாட்டில் சீன நிறுவனத்தால் கட்டப்பட்ட போக்ரா சர்வதேச விமான நிலையத்தின் கட்டுமானத்தில் சுமார் நேபாள ரூ.1400 கோடி மதிப்புள்ள பெரிய அளவிலான ஊழல் நடந்துள்ளதாக நேபாள பாராளுமன்றக் குழு கண்டுபிடித்துள்ளது.

    போக்ரா சர்வதேச விமான நிலையம் சீனாவின் எக்ஸிம் வங்கியிடமிருந்து வாங்கிய சுமார் ரூ.2,2 கோடி கடன் வாங்கி கட்டப்பட்டது.  டிசம்பர் 29, 2022 அன்று சீன நிறுவனத்தால் இந்த விமான நிலையம் கட்டி முடிக்கப்பட்டது.

    ஒப்பந்தத்தின்படி, விமான நிலைய கட்டுமானம் முடிந்த பிறகு ஏழு ஆண்டுகளுக்கு 2 சதவீத வட்டி விகிதத்தில் கடனை நேபாளம் திருப்பிச் செலுத்த வேண்டும். பின்னர் அடுத்த 13 ஆண்டுகளில் அசல் தொகையை செலுத்தி முடிக்க வேண்டும்.

    நேபாள சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (CAAN) விமான நிலையத்தை நிர்மாணிப்பதற்கான செலவை 14.5 கோடி அமெரிக்க டாலர்களாக மதிப்பிட்டது. ஆனால் அது நிராகரிக்கப்பட்டு, சீன நிறுவனத்துடன் 21.5 கோடி அமெரிக்க டாலர் செலவில் விமான நிலையம் கட்டும் ஒப்பந்தம் கையெழுத்தானது என்று பாராளுமன்ற குழு அறிக்கை கூறுகிறது.

     மேலும் அந்த அறிக்கையில், திட்டத்தின் கட்டுமானத்தின் போது நடந்த முறைகேடுகளில் ரூ.2.22 பில்லியன் வரி விலக்கு அளித்தல் மற்றும் சின் தண்டா மலையின் 40 மீட்டர் பகுதியை அகற்றுவதற்கு ரூ.320 மில்லியன் செலவு ஆகியவை அடங்கும். ஆனால் அவை ஒருபோதும் செய்யப்படவில்லை. இதுபோன்ற பல்வேறு முறைகேடுகள் அவ்வறிக்கையில் சுட்டுக்காட்டப்பட்டுள்ளது.

    போக்ரா சர்வதேச விமான நிலையத் திட்டத்தின் தலைவர் பினேஷ் முனகர்மி, நிர்வாகத் தலைவர் ராஜேந்திர பிரசாத் பவுடெல், CAAN இயக்குநர் மற்றும் பொறியாளர் பாபுராம் பவுடெல் உள்ளிட்டோரை விசாரித்து, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாராளுமன்ற குழுவின் அறிக்கை பரிந்துரைத்துள்ளது.  

    ×