search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "corruption"

    • பெரியாறு புலிகள் சரணாலய பிரச்சினையிலும், தமிழக உரிமையை காவு கொடுத்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி.
    • எதற்காக தேர்தலில் நிற்கிறோம் என்றே தெரியாமல் எடப்பாடி பழனிச்சாமி களம் காண்கிறார். யார் பிரதமர் என்று தெரியாது.

    தேனி:

    தேனி பாராளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் போட்டியிடும் அ.ம.மு.க. வேட்பாளர் டி.டி.வி. தினகரனை ஆதரித்து பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை இன்று தேனியில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது,

    தமிழக உரிமைகளை காவுகொடுத்த தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் டி.டி.வி. தினகரனை குறிவைத்து பிரசாரம் செய்து வருகின்றனர். அப்போதிலிருந்தே இவரது வெற்றி உறுதியாகிவிட்டது என்று தெரிந்து கொள்ளலாம்.

    முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியில் இருந்து 152 அடியாக உயர்த்த முயற்சி மேற்கொண்டவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. இந்த அணை பிரச்சினையில் கேரள அரசு தமிழகத்திற்கு எதிரான நிலைப்பாடை எடுத்தபோது அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி போராட்டம் நடத்த போவதாக கூறினார்.

    ஆனால் அப்போது மத்தியில் இருந்த காங்கிரஸ் மந்திரி ஜெயராம் ரமேஷ் போராட்டம் நடத்தினால் 2ஜி வழக்கில் கனிமொழி, ராசா ஆகியோர் கைது செய்யப்படுவார்கள் என எச்சரித்ததால் அமைதியாகிவிட்டார். இதேபோல் பெரியாறு புலிகள் சரணாலய பிரச்சினையிலும், தமிழக உரிமையை காவு கொடுத்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி.


    மு.க.ஸ்டாலின் சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது ஜல்லிக்கட்டு காளை வளர்க்கும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.1000 ஊக்கத்தொகை கொடுக்கப்படும் என்றார். இதுவரை எந்த குடும்பத்திற்காவது அவர் பணம் கொடுத்தாரா?. ஆனால் தேர்தலுக்காக ரூ.500 முதல் ரூ.1000 வரை பணம் கொடுக்க தி.மு.க.வினர் வருவார்கள். அப்போது வாக்காளர்களாகிய நீங்கள் கஞ்சா விற்ற பணம் எங்களுக்கு வேண்டாம் என கூறவேண்டும்.

    தி.மு.க. மீண்டும் பழைய புராணத்தை பாடி வருகிறது. வடக்கு வாழ்கிறது. தெற்கு தேய்கிறது என்கிறார்கள். 50 வருடமாக ஆட்சி செய்த காங்கிரஸ்தான் இதற்கு காரணம். தற்போது அந்த கட்சியுடன்தான் கூட்டணி வைத்துள்ளனர். தமிழகத்திற்கு எதுவுமே மத்திய அரசு செய்யவில்லை என்ற குற்றச்சாட்டை தி.மு.க. வைக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்திற்கு மட்டும் ரூ.10 லட்சத்தி 76 ஆயிரம் கோடி நிதி தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

    மத்திய பா.ஜ.க. ஆட்சியில் தான் சிலிண்டருக்கு மானியம், முத்ரா கடன் திட்டம், ஆவாஜி யோசனா திட்டம் மூலம் குடும்பத்திற்கு நேரடியாக நிதிஉதவி அளித்து வருகிறது. அந்த நிதியை தி.மு.க. அரசு எங்களுக்கு தெரியாமல் எப்படி கொடுக்கலாம் என தடுக்கப் பார்க்கின்றனர். தமிழகத்திற்கு 15 மருத்துவ கல்லூரிகளை கொடுத்துள்ளோம். இதையெல்லாம் மக்களிடமிருந்து மறைத்து தி.மு.க. பொய் பிரசாரம் செய்து வருகிறது.

    எதற்காக தேர்தலில் நிற்கிறோம் என்றே தெரியாமல் எடப்பாடி பழனிச்சாமி களம் காண்கிறார். யார் பிரதமர் என்று தெரியாது. யார் ஆட்சி அமைக்கிறார்களோ அவர்களிடம் தமிழக உரிமையை வலியுறுத்துவதாக கூறுகிறார். தற்போது அ.தி.மு.க.வில் உண்மையான தொண்டர்களுக்கு சீட்டு வழங்கப்படவில்லை. கான்ட்ராக்டர்களுக்கும், ரியல் எஸ்டேட் அதிபர்களுக்கும் தான் சீட் வழங்கப்படுகிறது. அவர் கட்சி நடத்துவதே கான்ட்ராக்டர்களுக்காக தான். ஜூன் 4ம் தேதி டி.டி.வி. தினகரன் வெற்றி பெற்ற பின்பு உண்மையான அ.தி.மு.க. தொண்டர்கள் அனைவரும் இவரது பின்னால் வருவார்கள்.

    தமிழகத்தில் 11 அமைச்சர்கள் மீது ஊழல் வழக்கு உள்ளது. இவர்கள் அனைவரும் போட்டிபோட்டு லஞ்சம் வாங்கி அதனை கப்பம்கட்டி வருகின்றனர். ரூ.30 ஆயிரம் கோடி ஊழல் செய்துள்ளதாக பி.டி.ஆர். பழனிவேல் ராஜனே கூறியுள்ளார். எனவே அந்த பணத்தை வைத்து தேர்தலில் வாக்காளர்களுக்கு வழங்க திட்டமிட்டுள்ளனர். யார் பிரதமர் என்பதே தெரியாமல் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்க போகிறோம் என்கிறார்கள்.

    ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் மன்மோகன்சிங் என்ற பொம்மை பிரதமரை அமர்த்தி ரூ.12 லட்சம் கோடி கொள்ளையடித்ததை போல மீண்டும் ஒரு கொள்ளையை அரங்கேற்ற இந்த கூட்டணி தயாராகி வருகிறது. எனவே மக்கள் எச்சரிக்கையுடன் இருந்து தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விசாரணையில் டெல்லி மதுபான கொள்கை வழக்கில் ரூ.100 கோடி வரை ஊழல் நடந்தது ஊர்ஜிதமாகி உள்ளது.
    • கவிதாவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி டெல்லி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்த போவதாக சி.பி.ஐ. அறிவித்துள்ளது.'

    திருப்பதி:

    தெலுங்கானா மாநில முன்னாள் முதல் மந்திரி சந்திரசேகர ராவின் மகள் கவிதா டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டார். அவர் திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    கவிதா இடைக்கால ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். அதை கோர்ட்டு தள்ளுபடி செய்தது. சி.பி.ஐ. அதிகாரிகளும் இந்த வழக்கை விசாரித்து வருவதால் அவர்களும் கடந்த 6-ந் தேதி திகார் ஜெயிலில் இருக்கும் கவிதாவை சிறையிலேயே விசாரணை நடத்த அனுமதி வழங்க வேண்டும் என கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இதற்கு கோர்ட்டு அனுமதி வழங்கியது.

    இதனைத் தொடர்ந்து ஒரு பெண் போலீஸ் மற்றும் கவிதாவின் வக்கீல் முன்னிலையில் திகார் ஜெயிலில் கவிதாவிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    இந்த விசாரணையில் டெல்லி மதுபான கொள்கை வழக்கில் ரூ.100 கோடி வரை ஊழல் நடந்தது ஊர்ஜிதமாகி உள்ளது.

    இதைத் தொடர்ந்து கவிதாவை ஜெயிலிலேயே சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். கவிதாவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி டெல்லி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்த போவதாக சி.பி.ஐ. அறிவித்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாஜக வாஷிங் மெஷின்' என்ற புதிய இயந்திரத்தை பவன் கெரா அறிமுகப்படுத்தினார்
    • புதிதாக ஒரு வாஷிங் பவுடர் தற்போது வந்திருக்கிறது. எல்லா கறையையும் அது நீக்கி விடுகிறது. அதற்குப் பெயர் 'மோடி வாஷிங் பவுடர்

    மூத்த காங்கிரஸ் தலைவர் பவன் கெரா, இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் 'பாஜக வாஷிங் மெஷின்' என்ற புதிய இயந்திரத்தை அறிமுகப்படுத்தினார்.

    அதனுள், 'ஊழல்', 'பாலியல் வன்புணர்வாளர்', 'மோசடி பேர்வழி ' போன்ற வார்த்தைகள் எழுதப்பட்ட 'கறை படிந்த' டி-சர்ட்டை வைத்தார். வாஷிங் மெஷினில் இருந்து டி-சர்ட் வெளியே எடுத்தபோது, 'சுத்தமாக' இருந்தது. அந்த 'சுத்தமான' டி-ஷர்ட்டில் 'பாஜக மோடி வாஷ்' என்று எழுதப்பட்டிருந்தது.

    பின்னர் பேசிய பவன் கெரா, புதிதாக ஒரு வாஷிங் பவுடர் தற்போது வந்திருக்கிறது. எல்லா கறையையும் அது நீக்கி விடுகிறது. அதற்குப் பெயர் 'மோடி வாஷிங் பவுடர்'. அதை பயன்படுத்தும் வாஷிங் மெஷினின் விலை 8,552 கோடி ரூபாய் தான். இது தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக பெற்ற தொகையாகும்.

    நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் பாஜகவில் இணைந்தால் அடுத்த கணமே அவர் குற்றமற்றவர் என்று அறிவிக்கப்படுவார். தாவூத் இப்ராகிமையும் சுத்தம் செய்யும் வாஷிங் மெஷின் பாஜகவிடம் உள்ளது. அவரை பாஜக வாஷிங் மெஷினின் உள்ளே வையுங்கள். அவர் வெளியே வரும் போது ராஜ்யசபா எம்பியாக கூட வரலாம்.

    சுத்தப்படுத்துவது மட்டுமின்றி இந்த மெஷின், மோசடி பேர்வழியை தேசப்பற்றாளராகவும் மாற்றுகிறது. வழக்கு விசாரணை வேகத்தை குறைக்கவும் செய்கிறது என்று அவர் தெரிவித்தார். 

    • உலகிலேயே ஊழல் மிகவும் குறைந்த நாடாக டென்மார்க் நாடு குறிப்பிடப்பட்டுள்ளது.
    • பின்லாந்து 2-ம் இடமும், 85 மதிப்பெண்ணுடன் நியூசிலாந்து 3-ம் இடமும் பிடித்துள்ளன.

    புதுடெல்லி:

    உலகின் ஊழல் மிகுந்த நாடுகளின் பட்டியலை ஆண்டுதோறும் டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் என்ற அமைப்பு வெளியிட்டு வருகிறது. அதன்படி ஊழல் மிகுந்த 180 நாடுகளின் பட்டியலை அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது.

    நிர்வாக வெளிப்படைத்தன்மை, லஞ்சம், ஊழல் மற்றும் முறைகேடுகள் போன்றவற்றை காரணிகளாக கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

    இந்நிலையில், இந்த ஆண்டுக்கான தரவரிசை பட்டியலை டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் அமைப்பு வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் இந்தியா கடந்த ஆண்டை விட 8 இடங்கள் பின்தங்கி 93-வது இடத்தைப் பெற்றுள்ளது. கடந்த ஆண்டில் 85-வது இடத்தில் இந்தியா இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    கஜகஸ்தான், லெசோத்தோ, மாலத்தீவு ஆகிய நாடுகளும் 39 மதிப்பெண்களுடன் இந்தியாவுடன் 93-வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளன.

    90 மதிப்பெண்ணுடன் டென்மார்க் ஊழல் மிகவும் குறைந்த நாடாக முதலிடம் பிடித்துள்ளது. 87 மதிப்பெண்ணுடன் பின்லாந்து 2-ம் இடமும், 85 மதிப்பெண்ணுடன் நியூசிலாந்து 3-ம் இடமும் பிடித்துள்ளன.

    அண்டை நாடான பாகிஸ்தான் 133-வது இடமும், இலங்கை 115-வது இடமும், சீனா 76-வது இடமும் பிடித்துள்ளதுன.

    • பணம் உள்ளவர்களுக்கு மட்டுமே தரமான கல்வி கிடைக்கும் நிலை உள்ளது.
    • மோடி ஆட்சிக்கு வந்த பின் புதிதாக 15 மருத்துவ கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது.

    சங்கராபுரம்:

    என் மண் என் மக்கள் யாத்திரையை மேற்கொண்டு வரும் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்திற்கு பாத யாத்திரையாக வந்தார்.

    சங்கராபுரம் மும்முனை சந்திப்பில் நடந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

    சங்கராபுரம் தொகுதி வளர்ச்சி அடையாமல் பின் தங்கிய நிலையில் உள்ளது. தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்கு தரமான கல்வி கிடையாது. பணம் உள்ளவர்களுக்கு மட்டுமே தரமான கல்வி கிடைக்கும் நிலை உள்ளது. கல்வராயன் மலை, வெள்ளிமலையில் உள்ள மலைவாழ் மக்கள் மட்டும் படிக்கும் பள்ளியில் படித்த 15 பேர் இந்த ஆண்டு ஐ.ஐ.டி.யில் சேர்ந்துள்ளனர்.

    சங்கராபுரம் நகரில் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு செல்லும் வழியில் 2 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதனால் பெண் பிள்ளைகள் பள்ளிக்கு எப்படி பாதுகாப்பாக சென்றுவர முடியும். கள்ளக் குறிச்சி மாவட்டத்தில் பா.ஜ.க.ஆட்சிக்கு வந்த பின் ஒரு லட்சத்து 50 ஆயிரம் வீடுகள், ஒரு லட்சத்து 75 ஆயிரம் கழிவறைகள், ஒரு லட்சத்து 24 ஆயிரம் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் 2013-ம் ஆண்டுக்கு முன் 5 மருத்துவ கல்லூரிகள் மட்டுமே இருந்தது. மோடி ஆட்சிக்கு வந்த பின் புதிதாக 15 மருத்துவ கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. இந்தியா கூட்டணி புஸ்வானமாக ஆகியுள்ளது. மீண்டும் ஊழலற்ற ஆட்சி அமைய நீங்கள் 3-வது முறையாக மோடியின் கரத்தை வலுப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அண்ணாமலை பேசினார். 

    • அமலாக்கத்துறையின் கைது அச்சத்திற்கு மத்தியில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குஜராத் செல்கிறார்
    • மக்களவை தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் அதற்கான பணிகளை கட்சிகள் துவங்கியுள்ளன

    அமலாக்கத்துறையின் கைது அச்சத்திற்கு மத்தியில் ஆம் ஆத்மியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் நாளை குஜராத் செல்கிறார்.

    புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை மூன்று முறை சம்மன் அனுப்பியும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகாத நிலையில், அவர் எந்த நேரத்திலும் கை செய்யப்படலாம் என்ற சூழல் நிழவி வருகிறது. இந்த பரபரப்பான அரசியல் சூழலில் அவர் நாளை(ஜன.7) குஜராத் செல்கிறார்.

    மக்களவை தேர்தலை கருத்தில் கொண்டு குஜராத் செல்லும் கெஜ்ரிவால், அங்கு ஆம் ஆத்மி கட்சி சார்பில் நடத்தப்படும் பொதுக்கூட்டம் மற்றும் மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளார். இந்த இரண்டு நாள் சுற்று பயணத்தின் போது, சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆம் ஆத்மி எம் எல் ஏ சைத்ரா பசவானையும் அவரது குடும்பத்தினரையும் சந்திக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    அமலாக்கத் துறையின் 3 சம்மனுக்கும் ஆஜராகாததால் அரவிந்த் கேஜ்ரிவால் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய பிரமுகர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தி.மு.க.வில் உள்ள 11 அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள் கோர்ட்டுகளில் நடந்து கொண்டு இருக்கிறது.
    • மத்திய பா.ஜனதா அரசு தமிழகத்துக்கு கடந்த ஆண்டில் பேரிடர் மீட்பு நிவாரண நிதியாக ரூ.813 கோடி வழங்கி உள்ளது.

    கும்பகோணம்:

    தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை 'என் மண் என் மக்கள்' நடைபயணத்தை நேற்று மாலை தொடங்கினார்.

    அவருக்கு வழிநெடுகிலும் நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். தொண்டர்களை பார்த்து கை அசைத்தபடி நகரின் முக்கிய வீதிகள் வழியாக நடைபயணம் மேற்கொண்டார். பின்னர் அண்ணாமலை பேசுகையில்:-

    தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வர வேண்டும். 3-வது முறையாக மோடி பிரதமராக பதவியேற்க வேண்டும். கடந்த 9 ஆண்டுகளில் நம் நாடு மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளது.


    தி.மு.க.வில் உள்ள 11 அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள் கோர்ட்டுகளில் நடந்து கொண்டு இருக்கிறது. மத்திய அரசு திருக்குறள், தமிழ் மொழி இருக்கைகள், காசி தமிழ் சங்கம், 46 சங்க இலக்கியங்கள் என மொழி பெயர்ப்புக்கு ரூ. 700 கோடி செலவு செய்துள்ளது. இந்தியா முழுவதும் தமிழை புகுத்தி வருபவர் பிரதமர் மோடி.

    வருகிற தேர்தலில் பா.ஜனதா ஆட்சி அமைத்து கும்பகோணம் மகாமகத்திற்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்து இந்தியா முழுவதும் ஒரு கோடி மக்கள் திரண்டு மகாமக விழாவை சிறப்பாக நடத்துவோம்.

    மத்திய பா.ஜனதா அரசு தமிழகத்துக்கு கடந்த ஆண்டில் பேரிடர் மீட்பு நிவாரண நிதியாக ரூ.813 கோடி வழங்கி உள்ளது. நடப்பாண்டில் மத்திய அரசு மேலும் ரூ. 900 கோடி வழங்கி உள்ளது. மொத்தம் ரூ. 1,713 கோடி செலவு செய்யப்படாமல் தமிழக அரசு கணக்கில் உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • அமலாக்கத்துறை தமிழகத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை.
    • அதிகாரியே லஞ்சம் பெற்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழக அரசு டாக்டரை வழக்கிலிருந்து விடுவிக்க ரூபாய் 3 கோடி பேரம் பேசி ரூபாய் 20 லட்சம் லஞ்சப் பணம் பெற்று காரில் தப்ப முயன்ற மத்திய அரசின் அமலாக்கத்துறை அதிகாரியை தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் 25 கி.மீ. தூரம் விரட்டி சென்று பலவந்தமாக மடக்கி கைது செய்த செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. அமலாக்கத்துறை அதிகாரிகள் ஊழலை ஒழிக்க வந்த புனிதர்கள் போல் வேடம் தரித்து வந்த நிலையில் அமலாக்கத்துறை அதிகாரியே லஞ்சம் பெற்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். அமலாக்கத்துறை தமிழகத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை.

    அமலாக்கத்துறையோடு நெருங்கிய உறவு வைத்திருக்கிற அண்ணாமலை அதற்கான ஆதாரங்களை பெற்று குற்றச்சாட்டுகளை கூற தயாராக இருக்கிறாரா? அப்படி தயாராக இல்லையெனில் தான் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமில்லை என கூறுவதோடு, பொது மன்னிப்பை அவர் கேட்க வேண்டும். இல்லையெனில் அவரது குற்றச்சாட்டுக்கு அடிப்படை ஆதாரமற்ற அவதூறான கருத்து தான் என்ற முடிவுக்கு வர வேண்டும். இத்தகைய நடவடிக்கைகளை ஒன்றிய பா.ஜ.க. அரசின் அமலாக்கத்துறையின் நடவடிக்கைகள் இனியும் தொடருமேயானால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • நாராயணசாமிக்கு அமைச்சர் லட்சுமிநாராயணன் சவால்
    • பதில் சொல்ல அவசியமில்லை

    புதுச்சேரி:

    புதுவை பொதுப்பணித் துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் இன்று நிருபர் களிடம் கூறியதாவது:-

    முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி இந்த அரசு மீது கூறும் ஊழல் குற்றச்சாட்டு களுக்கு ஆதாரம் இருந்தால் சி.பி.ஐ. வசம் புகார் செய்யலாம். சி.பி.ஐ. மீது நம்பிக்கை இல்லாவிட்டால் கோர்ட்டிற்கு செல்லலாம். அவர் முதலில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல்காந்தியை சந்திக்கட்டும். அதன்பின் ஜனாதிபதியை சந்திக்கட்டும்.

    அவருடைய குற்றச்சாட்டு களுக்கு பதில் கூற வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. நாராயணசாமி எதற்கெடுத்தாலும், எல்லோரையும் ராஜினாமா செய்யுங்கள் என்கிறார். அவர் கூறுவதை பார்த்தால் யாருமே பதவியில் இருக்க முடியாது.

    புதுவை அரசின் எந்த திட்டங்களுக்கும் தடை ஏதும் இல்லை. முதல்-அமைச்சரின் திறமையான நிர்வாகத்தால் அனைத்து நலத்திட்டங்களும், திட்டங்களும் நிறை வேற்றப்பட்டு வருகிறது. குடும்ப தலைவிகளுக்கு ரூ.ஆயிரம், கியாஸ் மானியம், முதியோர் உதவித்தொகை, மீனவர்கள், விவசாயிகள் நிவாரணம் என எந்த திட்டத்திலும் தடையில்லை.

    வாரத்துக்கு ரூ.20 கோடிக்கு மாநிலம் முழுவதும் பணிகள் நடக்கிறது. பள்ளி கட்டிடம் சீரமைப்பு, புதிய கல்லூரிகள் கட்டுவது, சாலை, கால்வாய், வாய்க்கால் மேம்பாட்டு பணி கள் நாள்தோறும் நடந்து வருகிறது. எந்த திட்டமும் முடங்கவில்லை.

    ஒரு அரசி யல்வாதியை தவிர வேறு யாரும் இந்த அரசை பற்றி குறைகூற வில்லை. நெடுஞ்சாலை களில் டோல்கேட் அமைக்கும் போது உள்ளூர் மக்களுக்கு சலுகை அளிப்பார்கள்.

    விழுப்புரத்திலிருந்து, நாகப்பட்டினம் வரை நெடுஞ்சாலை அமைக்கும் பணி துரிதமாக நடந்து வருகிறது. இதில் ஒரு இடத்தில் தான் புதுவைக்கான டோல்கேட் அமைக்கப்பட உள்ளது. இதற்கு உள்ளூர் மக்களுக்கு சலுகைகள் வழங்கப்படும். ஒருவேளை அதில் சிக்கல் இருந்தால் மத்திய அரசிடம் பேச்சுவார்த்தை நடத்துவோம்.

    இந்த சாலையில் 60 முதல் 70 சதவீத பணிகள் முடிந்து விட்டது. புதுவையிலிருந்து, விழுப்புரம் செல்லும் சாலையில் கண்ட மங்கலம் பகுதியில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி மட்டும் நடக்க வேண்டும். இது ப்ரீகாஸ்ட் அடிப்படையில் அமைக்கப்பட உள்ளது. இந்த சாலை பணிகள் முடிந்தால் விழுப்புரத்திற்கு சுமார் 35 நிமிடத்தில் செல்ல முடியும்.

    விழுப்புரத்தை தாண்டி திருச்சிக்கு சுமார் 2 மணி நேரத்தில் செல்லலாம். இதனால் வாகனங்களின் எரிபொருளில் சேமிப்பு ஏற்படும். இது நாட்டின் பொருளாதாரத்திற்கு நல்லது.

    புதுவையில் ஒட்டுமொத்த மாக 3½ லட்சம் ரேஷன்கார்டு கள் உள்ளது. ஆனால் 9¾ லட்சம் வாகனங்கள் உள்ளது. இதனால் நகர பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. முக்கியமான நேரங்களில் மரப்பாலத்தில் மட்டும் 17 ஆயிரம் வாகனங்கள் கடப்பதாக கணக்கிடப்பட்டு ள்ளது. போக்குவரத்து நெரிசலை சமாளிக்க முதல்-அமைச்சர், அமைச்சர்கள் தலைமையில் போக்குவரத்து துறையில் பல கமிட்டிகள் உள்ளது. இந்த கமிட்டி பரிந்துரை களை நடைமுறைப் படுத்தி வருகிறோம்.

    ராஜீவ்காந்தி சிலையி லிருந்து இந்திராகாந்தி சிலை வரை மேம்பாலம் அமைக்க டெண்டர் ஜனவரி மாதம் கோரப்படும். இந்த பாலம் 30 அடி உயரத்தில் அமைய உள்ளது. அடுத்த கட்டமாக மரப்பாலம் பகுதியில் பாலம் அமைக்க வும் திட்டமிட்டு ள்ளோம். கடலூர் சாலையில் முருங்கப்பாக்கம் வரை 8 அடிக்கு சாலையை அகலப்படுத்தவும் திட்டமிட்டுள்ளோம்

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • மது விற்பனையில் ஊழல், மணல் கடத்தல் மற்றும் பல பிரச்னைகள் அப்பட்டமாக நடக்கிறது.
    • பல்வேறு திட்டங்களுக்காக மத்திய அரசு வழங்கிய நிதியை பெரிய அளவில் திருப்பி அனுப்பியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

    திருப்பதி:

    ஆந்திர மாநில பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் சதினேனி யாமினி சர்மா அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி எம்.பி.விஜயசாய் ரெட்டிக்கு எங்கள் கட்சியின் மாநிலத் தலைவர் புரந்தேஸ்வரியை விமர்சிக்க தார்மீக உரிமை இல்லை.

    விஜய சாய் ரெட்டி மற்றும் முதல் மந்திரி ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோர் சம்பந்தப்பட்ட ஊழல் வழக்குகளில் நிரபராதிகள் என்பது நிரூபிக்கப்படவில்லை.

    மது விற்பனையில் ஊழல், மணல் கடத்தல் மற்றும் பல பிரச்னைகள் அப்பட்டமாக நடக்கிறது.

    பல்வேறு திட்டங்களுக்காக மத்திய அரசு வழங்கிய நிதியை பெரிய அளவில் திருப்பி அனுப்பியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

    ஜெகன் மோகன் ரெட்டி 2019 தேர்தல் நேரத்தில் பல வாக்குறுதிகளை அளித்தார், ஆனால் அவற்றை நிறைவேற்றத் தவறிவிட்டார். புரந்தேஸ்வரியை கேலி செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தெலுங்கானாவின் 119 இடங்களுக்கான தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது
    • மாநில அரசுக்கு கோவில்களின் நிர்வாகத்தில் தலையிட உரிமை உள்ளதா என கேட்டார்

    தெலுங்கானாவில் 2018ல் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாரத் ராஷ்டிர சமிதி (முன்னர் தெலுங்கானா ராஷ்டிர சமிதி) கட்சியை சேர்ந்த கே. சந்திரசேகர் ராவ் தலைமையிலான கட்சி வெற்றி பெற்று அவர் ஆட்சி அமைத்தார்.

    இவ்வருட இறுதிக்குள் தெலுங்கானா மாநிலத்தில் 119 இடங்களுக்கான சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது.

    வரவிருக்கும் தேர்தலில் தெலுங்கானாவில் ஆட்சியை பிடிக்க மத்தியில் ஆளும் பா.ஜ.க.வும் தீவிரம் காட்டி வருகிறது. இதனையொட்டி அம்மாநிலத்தில் உள்ள நிஜாமாபாத் நகரில் அக்கட்சி ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.

    தனது நீண்ட உரையில் கே.சி.ஆர். ஆட்சியை விமர்சித்த மோடி, தமிழ்நாட்டின் ஆளும் தி.மு.க.வையும் தாக்கி பேசினார்.

    அப்போது அவர் பேசியதாவது:

    தமிழ்நாட்டில் இந்து கோவில்களை தி.மு.க. அரசாங்கமே எடுத்து நடத்தி வருகிறது. அரசின் முழு கட்டுப்பாட்டில் கோவில்கள் உள்ளன. அவ்வாறு அவர்கள் செய்யும் போது கோவில் சொத்துக்கள் நிலங்கள், வீடுகள், செல்வங்கள் மற்றும் பக்தர்கள் வழங்கும் காணிக்கைகள் கொள்ளை போவதையும் தடுக்க முடியாமல் அரசே அக்கொள்ளைக்கு துணை நிற்கிறது. கோவில்களை மாநில அரசாங்கமே எடுத்து நடத்த அரசுக்கு உரிமை உள்ளதா? மாநிலத்தில் உள்ள சிறுபான்மையினரின் வழிபாட்டு இடங்களை அரசு தொடுவதில்லை. ஆனால், தொன்று தொட்டு இருந்து வரும் இந்துக்களின் கோவில் நிர்வாகத்தில் மட்டும் தி.மு.க. அரசு தலையிடுவது ஏன்? தனது கூட்டணி கட்சியான தி.மு.க. இவ்வாறு செய்வதை காங்கிரஸ் தட்டி கேட்குமா? இந்துக்களுக்கே கோவில் நிர்வாகத்தை திருப்பி அளிக்கும்படி தி.மு.க.வை கேட்குமா?

    இவ்வாறு மோடி கேள்வி எழுப்பினார்.

    கோவில்களின் மாநிலம் என அழைக்கப்படும் தமிழ்நாட்டில் 1000 வருடத்திற்கு மேற்பட்ட கோவில்கள் மட்டுமே 400க்கும் மேல் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ரூ.12 லட்சம் கோடிக்கு ஊழல் புரிந்தவர்கள் அவர்கள்
    • ரெயில்வே மந்திரியாக இருந்த போது லல்லு பிரசாத் பல கோடிக்கு ஊழல் செய்தார்

    இந்தியாவின் 18-வது மக்களவைக்கான தேர்தல் அடுத்த வருடம் நடைபெறவுள்ளது. இதனையொட்டி தற்போதைய ஆளும் பா.ஜ.க.வை உள்ளடக்கிய தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளும், பா.ஜ.க. கூட்டணியை எதிர்க்க "இந்தியா கூட்டணி" எனும் பெயரில் 25க்கும் மேற்பட்ட மாநில கட்சிகளை உள்ளடக்கிய எதிர்கட்சி கூட்டணியும் இப்போதிலிருந்தே மும்முரமாக தங்களை தயார்படுத்தி வருகின்றன.

    பா.ஜ.க.வின் சார்பில் "லோக் சபா பிரவஸ்" எனும் திட்டத்தின் கீழ் தற்போது நாடு முழுவதும் ஆங்காங்கே அதன் சாதனை விளக்க பிரச்சாரங்கள் நடைபெற்று வருகின்றன.

    ஆளும் பா.ஜ.க.வின் உள்துறை அமைச்சரான அமித் ஷா, பீகார் மாநில மதுபானி மாவட்டத்தில் லோக் சபா பிரவஸ் திட்டத்தின் ஒரு பகுதியாக ஜஞ்சர்பூர் நகரில் ஒரு பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது இந்தியா கூட்டணியை எதிர்த்து அமித் ஷா பேசியதாவது:

    "எதிர் கட்சியினர் ஒரு புது பெயரில் பழைய கூட்டணியையே உருவாக்கியுள்ளனர். ஐக்கிய முற்போக்கு கூட்டணி எனும் பெயரில் ஒரு கூட்டணி அமைத்து முன்பு ஆட்சியில் இருந்த போது ரூ.12 லட்சம் கோடி அளவிற்கு ஊழல் செய்தனர்."

    "அப்போது ரெயில்வே மந்திரியாக இருந்த பீகாரின் லல்லு பிரசாத் யாதவ் பல கோடிக்கு ஊழல் செய்தார். அதே பெயரில் மீண்டும் அவர்கள் ஓட்டு கேட்டு ஆட்சிக்கு வர முடியாது என உணர்ந்து இந்தியா கூட்டணி என புது பெயரிட்டு உலா வருகிறார்கள். இக்கூட்டணியை சேர்ந்தவர்கள் இந்துக்களின் புனித ராம்சரிதமானசை அவமானப்படுத்துகிறார்கள்."

    "ரக்ஷாபந்தன் மற்றும் ஜன்மாஷ்டமி ஆகிய இந்துக்களின் பண்டிகை தினங்களுக்கு விடுமுறையை ரத்து செய்கிறார்கள். இந்துக்களின் சனாதன தர்மத்தை வியாதிகளோடு ஒப்பிடுகிறார்கள். ஆனால் வேறு சிலரோடு மற்றும் சமாதான அணுகுமுறையை கடைபிடிக்கிறார்கள்," என்று கூறினார்.

    ×