என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "report"

    • விமானத்திற்கு எரிபொருளை வழங்கிய இரண்டு சுவிட்சுகளும் அணைக்கப்பட்டன.
    • விமானத்தின் காக்பிட்டில் இருந்து குரல் பதிவையும் விசாரணைக் குழு ஆய்வு செய்துள்ளது.

    270 பேர் உயிரிழந்த அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பான முதற்கட்ட விசாரணை அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. இந்த 15 பக்க அறிக்கையை விமான விபத்து புலனாய்வுப் பிரிவு வெளியிட்டுள்ளது.

    விபத்து நடந்த இடத்தின் ட்ரோன் புகைப்படம் மற்றும் வீடியோகிராஃபியை ஆய்வு செய்து விசாரணை அறிக்கை தயாரிக்கப்பட்டது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அதன் அதிகபட்ச வேகமான 180 நாட்களை எட்டியது. இதைத் தொடர்ந்து, விமானத்திற்கு எரிபொருளை வழங்கிய இரண்டு சுவிட்சுகளும் அணைக்கப்பட்டன.

    எரிபொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்தும் இரண்டு சுவிட்சுகளும் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ரன் நிலையில் இருந்து கட்-ஆஃப் நிலைக்கு மாற்றப்பட்டன. சிறிது நேரத்திலேயே சுவிட்சுகள் மீண்டும் இயக்கப்பட்டாலும் விமானம் மீண்டும் உந்துதலை அடையும் முன்பே விபத்துக்குள்ளானது.

    விமானத்தின் காக்பிட்டில் இருந்து குரல் பதிவையும் விசாரணைக் குழு ஆய்வு செய்துள்ளது. எரிபொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்தும் சுவிட்சை ஏன் அணைத்தீர்கள் என்று ஒரு விமானியிடம் கேட்டபோது, மற்ற விமானி தான் அவ்வாறு செய்யவில்லை என்று பதிலளிப்பதை குரல் பதிவில் கேட்க முடிகிறது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே விமானி வேண்டும் என்றே ஸ்விட்சை அணைத்தாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

    இந்நிலையில் போயிங் 737 விமானங்களில் எஞ்சினுக்கு எரிபொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்தும் சுவிட்ச் குறித்து அமெரிக்க அரசின் அமெரிக்க பெடரல் ஏவியேஷன் அமைப்பு 2018 ஆம் ஆண்டில் வெளியிட்ட எச்சரிக்கை கவனம் பெற்று வருகிறது.

    டிசம்பர் 2018 வெளியிடப்பட்ட அந்த அறிக்கைப்படி, சில போயிங் 737 விமானங்களின் எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சில் ஒரு தவறான பூட்டுதல் அம்சம் இருக்கிறது. இது பாதுகாப்பற்றது என்று கூறப்பட்டது. அகமதாபாத்தில் விபத்தை ஏற்படுத்திய போயிங் 737-8 விமானத்திலும் இதே சுவிட்ச் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

    • நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்ததை அறிக்கை உறுதிப்படுத்துகிறது.
    • யஷ்வந்த் வர்மாவின் தவறான நடத்தையும், அவர் மீதான குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டுள்ளன.

    அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா, முன்னதாக டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றினார்.

    மார்ச் 14 அன்று, டெல்லியில் உள்ள அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது, பழைய பொருட்கள் வைக்கும் அறையில், கோடிக்கணக்கான ரூபாய் பணம் பாதி எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

    இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் மூன்று நீதிபதிகள் கொண்ட ஒரு குழுவை அமைத்தது. அக்குழுவின் அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது.

    விசாரணைக் குழுவின் அறிக்கை, பணம் கண்டெடுக்கப்பட்ட அறை, நீதிபதி யஷ்வந்த் வர்மா மற்றும் அவரது குடும்பத்தினரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்ததை அறிக்கை உறுதிப்படுத்துகிறது.

    பாதி எரிந்த ரூபாய் நோட்டுகள், மறுநாள் அதிகாலை அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளன. கிடைத்த நேரடி மற்றும் மின்னணு ஆதாரங்களின் அடிப்படையில், நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் தவறான நடத்தையும், அவர் மீதான குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டுள்ளன.

    எனவே இந்தக் குற்றச்சாட்டுகள் அவரைப் பதவி நீக்கம் செய்வதற்குப் போதுமானவை என்று விசாரணை அறிக்கை திட்டவட்டமாகக் கூறுகிறது.

    • 78வது உலக சுகாதார சபையில், உலகளாவிய பாம்புக்கடி பணிக்குழு வெளியிட்ட அறிக்கை இதை வெளிப்படுத்தி உள்ளது.
    • பாம்புக்கடி சிகிச்சைக்கான பயனுள்ள வசதிகள் கூட இல்லை என்பதையும் இந்த அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

    உலகளவில், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 5.4 மில்லியன் மக்கள் பாம்புகளால் கடிக்கப்படுகிறார்கள், இதன் விளைவாக 81,000 முதல் 138,000 வரை இறக்கின்றனர். இந்நிலையில் உலகளவில் பாம்புக்கடி இறப்புகளில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.

    சமீபத்தில் ஜெனீவாவில் நடைபெற்ற 78வது உலக சுகாதார சபையில், உலகளாவிய பாம்புக்கடி பணிக்குழு வெளியிட்ட அறிக்கை இதை வெளிப்படுத்தி உள்ளது.

    'Time to Bite Back: Catalyzing a Global Response to Snakebite Envenoming' என்ற அறிக்கை, இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 58,000 இறப்புகள் பதிவாகின்றன என்று தெரிவித்துள்ளது.

    உலகளவில் பாம்புக்கடியால் ஏற்படும் இறப்புகளில் கிட்டத்தட்ட 50 சதவீதம் இந்தியாவில் நிகழ்கிறது என்று அறிக்கை தெரிவித்துள்ளது.

    பெரும்பாலான இறப்புகள் ஏழை மற்றும் பழங்குடி சமூகங்களிடையே நிகழ்கின்றன. பாரம்பரிய மருத்துவத்தை நம்பியிருப்பதால் சிகிச்சையில் தாமதம் ஏற்படுகிறது மற்றும் தரமான பராமரிப்பு இல்லாததால் இறப்புகள் ஏற்படுகின்றன.

    2030 ஆம் ஆண்டுக்குள் பாம்புக்கடியால் ஏற்படும் இறப்புகள் மற்றும் குறைபாடுகளை பாதியாகக் குறைக்க வேண்டும் என்ற உலக சுகாதார அமைப்பின் இலக்கை அடைவதில் இந்தியா சவால்களை எதிர்கொள்கிறது என்பதையும் அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.

    பொது சுகாதார ஆர்வலரும் அறிக்கையின் ஆசிரியர்களில் ஒருவருமான டாக்டர் யோகேஷ் ஜெயின் கூறுகையில், "பாம்புக்கடி மரணங்களைத் தடுக்க இந்தியா தவறிவிட்டது. அதன் சுகாதார அமைப்பு எப்போதும் தயாராக இல்லை. மருத்துவர்களிடம், திறம்பட சிகிச்சையளிப்பதற்கான பயிற்சி, உபகரணங்கள் அல்லது நம்பிக்கை பெரும்பாலும் இல்லை" என்று கூறினார்.

    2023 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட இந்த அறிக்கை, பாம்புக்கடி இறப்புகளைக் குறைப்பதில் இந்தியா எதிர்கொள்ளும் சவால்களை எடுத்துக்காட்டுகிறது.

    இந்தியா முழுவதும் உள்ள பெரும்பாலான ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் சமூக சுகாதார மையங்களில் பாம்புக்கடி சிகிச்சைக்கான பயனுள்ள வசதிகள் கூட இல்லை என்பதையும் இந்த அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 

    • தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் 25-ந்தேதி நடக்கிறது.
    • அனைவரும் தவறாது கலந்து கொண்டு சிறப்பிக்கு மாறு வேண்டுகிறோம்.


    உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ.வுக்கு சிறப்பான வரவேற்பு கொடுப்பது குறித்து மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட செயலாளர் கோ. தளபதி எம்.எல்.ஏ. பேசினார். அருகில் நிர்வாகிகள் பொன்.முத்துராமலிங்கம், குழந்தைவேலு, வேலுச்சாமி, ஜெயராம், அக்ரி.கணேசன், ஒச்சுபாலு, தனசெல்வம் உள்ளனர்.

    ..........................

    மதுரை

    மதுரையில் வருகிற 29-ந் தேதி தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசுகிறார்.

    இதுகுறித்து மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர்-அமைச்சர் பி.மூர்த்தி, மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் கோ.தளபதி எம்.எல்.ஏ., மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் சேடப்பட்டி மணிமாறன் ஆகியோர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மதுரை வடக்கு, மதுரை மாநகர், மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பிறந்தநாளாம் இளைஞர் எழுச்சி தினத்தை முன்னிட்டு பிரமாண்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வருகிற 29-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது.

    இதில் தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

    இந்த விழாவை தென் மாவட்டமே வியக்கும் வகையில் சிறப்பாக நடத்துவது குறித்து ஒருங்கிணைந்த மாவட்ட தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் வருகிற 25-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு பாண்டி கோவில் பின்புறம், மதுரை சுற்றுச்சாலையில் அமைந்துள்ள துவாரகா பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.

    இதில் மதுரை வடக்கு, மதுரை மாநகர், மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பகுதி, வட்ட, பேரூர் செயலாளர்கள், அனைத்து அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், முன்னோடிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊரா ட்சிக்கழக செயலாளர்கள், தொண்டர்கள் தவறாது கலந்து கொண்டு சிறப்பிக்கு மாறு வேண்டுகிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கவர்னர் தமிழகம் என்று குறிப்பிட்டதில் தவறில்லை என பா.ஜ.க. ராம. சீனிவாசன் அறிக்கை வெளியிட்டார்.
    • இதில் திராவிடம் என்ற தேவையற்ற இனவாதத்தை தி.மு.க. தான் கலப்படம் செய்து வருகிறது.

    மதுரை

    தமிழக பா.ஜ.க. பொதுச் செயலாளர் ராம. சீனிவாசன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது:-

    தமிழ்நாடு என்று சொல்வதை விட தமிழகம் என்பது பொருத்தமானது என்று கவர்னர் ரவி சொன்னதை வைத்து, தி.மு.க. வினரால் பெரிய கருத்து மோதல் செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்தத் தருணத்தில் நான் சில கருத்துக்களை முன் வைக்க விரும்புகிறேன். முதலில் தமிழ்நாடு என்ற வார்த்தை, இலக்கி யங்களில் இல்லை. தொல்காப் பியத்தில் தமிழ்நாட்டின் வட எல்லையாக இமயமலையும், தென் எல்லையாக கடலும் சொல்லப்பட்டுள்ளது.

    இந்தியாவின் முதல் தேசிய கவியான பாரதியார் முதன்முதலில் தமிழ்நாடு என்று குறிப்பிட்டார். 'கல்வி சிறந்த தமிழ்நாடு, உயர் கம்பன் பிறந்த தமிழ்நாடு' என்ற பாடல் வரிகளை தமிழுக்கு அறிமுகப் படுத்தியவர் பாரதிதான். அதற்கு முன்னதாக இந்த வார்த்தை எங்கும் இல்லை.

    நாம் அன்றாடம் பாடும் தமிழ்தாய் வாழ்த்தில் கூட, தமிழ்நாடு என்று இல்லை. 'தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்' என்றுதான் வரிகள் உள்ளன. 1950-ம் ஆண்டுக்கு முன்பு இந்தப் பகுதி, சென்னை மாகாணம் என்று தான் அழைக்கப்பட்டது. தமிழ்நாடு என்பதே அண்மைக்கால கருத்தாக்கம்தான்.

    முன்னாள் முதல்வர் அண்ணாதுரை, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழக பட்டமளிப்பு விழா வில் பேசும்போது, 'ஏ தாழ்ந்த தமிழகமே' என்று தான் குறிப்பிட்டார். இதே தலைப்பில் அண்ணா சொற்பொழிவு புத்தகமாகவும் வந்துள்ளது. கருணாநிதியும் எழுத்துக் களில் ஆயிரக்கணக்கான இடங்களில் தமிழக என்கிற வார்த்தையை பயன்படுத்தியுள்ளார். ஆனால் இதையே ஒரு கவர்னர் சொல்லும் போது அவர்கள் பொங்கி எழுகிறார்கள்.

    அண்ணா தாழ்ந்த தமிழ கமே என்று சொல்லும் போது வராத கோபம், கவர்னர் தமிழகம் என்று சொல்லும் போது ஏன் வருகிறது? கவர்னர் என்ன பேசி னாலும் எதிர்ப்பது என்பது தான், ஆளுங்கட்சியின் வழக்கமாக உள்ளது. சட்டமன்றத்தில் கவர்னர் பேசும்போது உரையின் நிறைவாக ஜெய்ஹிந்த் என்றும், ஜெய் தமிழ்நாடு என்றும் சொல்லி ஒரு புதிய மரபை தோற்றுவித்தவர்.

    ஆகவே தமிழ்நாடு என்ற கருத்தாக்கத்தை உருவாக்கியது, தமிழுக்கு என்று ஒரு மாநிலத்தை உருவாக்கியது, தமிழகம் என்றும் அழைக்கலாம் என்று புரிய வைப்பது தேசியவாதிகள் தான்.

    இதில் திராவிடம் என்ற தேவையற்ற இனவாதத்தை தி.மு.க. தான் கலப்படம் செய்து வருகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அ.தி.மு.க. வேட்பாளர் தேர்வு குறித்து அறிக்கை வெளியிடுவேன் என ஓ.பி.எஸ். தெரிவித்துள்ளார்.
    • மாவட்ட செயலாளர்கள் முன்னாள் எம்.பி. கோபால கிருஷ்ணன், அய்யப்பன் எம்.எல்.ஏ., உள்பட பலர் உடனிருந்தனர்.

    மதுரை

    மதுரை விமான நிலையத்திற்கு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வருகை தந்தார். அவரிடம் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அ.தி.மு.க. வேட்பாளர் தேர்வு படிவம் குறித்து நிருபர்கள் கேட்டனர்.

    இதற்கு பதில் அளிக்க மறுத்த ஓ.பி.எஸ். மாலை 3 மணிக்கு மேல் இதுகுறித்து அறிக்கை வெளியிடுவேன் என்று தெரிவித்தார்.

    மாவட்ட செயலாளர்கள் முன்னாள் எம்.பி. கோபால கிருஷ்ணன், அய்யப்பன் எம்.எல்.ஏ., முருகேசன், மாநில இளைஞரணி செயலாளர் ராஜ்மோகன், வி.கே.எஸ்.மாரிசாமி, பி.எஸ்.கண்ணன், பேரவை குணசேகரன், சோலை இளவரசன், ராமநாதன், ஆட்டோ கருப்பையா, அர்ஜுன், கிரி உள்பட பலர் உடனிருந்தனர்.

    • மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி திருச்சி மாவட்டம் முழுவதும் தி.மு.க.வினர் நலத்திட்ட உதவிகள் வழங்கிட வேண்டும் என மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி அறிக்கை விடுத்துள்ளார்
    • தமிழக முதல்வர் மு.க.ஸ்டா–லின் தன்னுடைய 70-வது பிறந்த நாளான நாளை சென்னை அண்ணா அறிவாலயத்திலுள்ள கலை–ஞர் அரங்கில் தி.மு.கழகத்தினர் அனைவரின் வாழ்த்து–களை ஏற்றுக் கொள்கிறார்.

    திருச்சி:

    திருச்சி மத்திய மாவட்ட தி.மு.க. செயலா–ளர் க.வைர–மணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப–தாவது:-தி.மு.க. தலைவரும், திராவிட மாடல் ஆட்சி நடத்தி இந்தியாவிற்கே வழி–காட்டியாக திகழும் திராவிட நாயகனும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டா–லின் தன்னுடைய 70-வது பிறந்த நாளான மார்ச் 1-ந்தேதி புதன்கிழமை அன்று சென்னை அண்ணா அறிவாலயத்திலுள்ள கலை–ஞர் அரங்கில் தி.மு.கழகத்தினர் அனைவரின் வாழ்த்து–களை ஏற்றுக் கொள்கிறார்.

    அன்று மாலை அகில இந்திய அளவிலான அனைத் துக்கட்சி தலைவர் கள் கலந்து கொள்ளும் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடை–பெறவிருக்கின்றது. இவ்விரு நிகழ்ச்சிகளிலும் திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட, மாநகர, அனைத்து ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், கிளை கழக, நிர்வாகிகள், உள்ளாட்சி மன்ற பிரதிநி–திகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், முன்னாள், இந்நாள், சட்ட மன்ற உறுப்பினர்கள்,

    மாவட்ட பிரதிநிதிகள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கழக முன்னோடிகள், செயல் வீரர்கள் உள்ளிட்ட அனை–வரும் பெருந் தி–ரளாக கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.மேலும், தலைவரின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு நமது மாவட்டம் முழுவதும் மாவட்ட, மாநகர அனைத்து ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், கிளைக் கழகத்தின் சார்பில் கழக கொடி கம்பங்களை புதுப் பித்தும் இருவண்ண கொடியேற்றியும், பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கியும், மார்ச் மாதம் முழுவதும் சிறப்பான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து எழுச்சியுடன் தலை–வர் அவர்களின் பிறந்த நாள் விழாவினை கொண் டாட வேண்டுமென கேட் டுக்கொள்கின்றோம்.இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.


    • வேங்கை வயலில் குடிநீர் அசுத்தம் செய்யப்பட்டது தொடர்பாக சிபிஎம் கட்சி ஆய்வு
    • தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் டில்லிபாபு அறிக்கை

    புதுக்கோட்டை,

    குடிநீர்த் தொட்டி அசுத்தம் செய்யப்பட்டது தொடர்பாக மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.அன்புமணவாளன். மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.பொன்னுச்சாமி ஆகியோருடன் ஞாயிற்றுக்கிழமை வேங்கைவயல் கிராமத்திற்குச் சென்று ஆய்வு நடத்திய தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.டில்லிபாபு பின்னர் வெளியிட்டுள்ள அறிக்கையில்....புதுக்கோட்டை மாவட்டத்தில் சம்பவம் நடந்து மூன்று மாதமாகியும் குற்றவாளிகள் இதுநாள்வரை கைதுசெய்யப்படவில்லை. குற்றவாளிகளை விரைவில் கைதுசெய்வதற்கு மாறாக பாதிக்கப்பட்ட பட்டியலின மக்களிடமே விசாரணை என்ற பெயரில், அவர்களை மனரீதியான துன்புறுத்தலுக்கு உள்ளாக்குவது மிகவும் கண்டிக்கத்தக்கது.இப்படி ஒரு சம்பவம் நடந்த பிறகும்கூட வேங்கைவயல் மக்களுக்கு எந்தவிதமான அடிப்படை வசதிகளும் செய்துகொடுக்கப்படவில்லை. பல ஆண்டுகளுக்கு முன்பாக கட்டிக்கொடுக்கப்பட்ட காலனி வீடுகள் மிகவும் சேதடைந்துள்ளது. இவைகளை உடனடியாக அரசு சரிசெய்ய வேண்டும்.பட்டியலின மக்களுக்கு மீண்டும் தனியாக மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி என்பதை அவர்கள் ஏற்கவில்லை. அனைத்துப் பகுதி மக்களுக்கும் பொதுவான குடிநீர் இணைப்பையே அவர்கள் விரும்புகின்றனர். மீண்டும் இப்படியொரு சம்பவம் நிகழாமல் இருப்பதற்கு அதுவே வழிவகுக்கும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். அங்கு படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித்தர வேண்டும். அவர்கள் தன்னம்பிக்கை மிக்கவர்களாக சமூகத்தில் வலம்வர உரிய நடவடிகைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.


    • மதுரை மெட்ரோ ெரயில் திட்டத்திற்கு அறிக்கை தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
    • 75 நாட்களுக்குள் தயாரித்து முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    மதுரை

    தமிழ்நாட்டில் மக்கள் தொகை அதிகம் உள்ள நகரங்களில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மெட்ரோ ெரயில் சேவைகளை தொடங்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

    அந்த வகையில் மதுரை யில் திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரை 31 கி.மீ. தொலைவுக்கு, 18 ெரயில் நிலையங்களுடன் மெட்ரோ ரயில் சேவை செயல்படுத்துவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான டெண்டர் அறிவிப்பு கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டது. இந்த டெண்டரில் 4 நிறுவனங்கள் கலந்து கொண்டன. அதில் ஒரு நிறுவனத்துக்கு 1.35 கோடி ரூபாய் மதிப்பீட்டில் டெண்டர் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அவர்கள் இது தொடர்பாக மதுரை மாவட்டம் முழுவதி லும் ஆய்வு நடத்தினார்கள்.

    இதன் அடிப்படையில் மதுரை மெட்ரோ ெரயில் திட்டத்திற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயார் செய்யப்பட்டது. இதற்கிடையே மதுரை மெட்ரோ ெரயில் திட்டத்திற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான ஆலோசகராக இன்னொரு பொறியியல் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டு உள்ளது.

    • ஆன்லைன் சூதாட்ட மசோதாவுக்கு ஒப்புதல் தமிழக மக்களின் எதிர்ப்பு-போராட்டத்துக்கு கவர்னர் பணிந்துள்ளார்.
    • பசும்பொன் பாண்டியன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    மதுரை

    அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வின் செயல் திட்டத்தை கவர்னர் பதவியின் அதிகாரத்தை பயன்படுத்திக் கொண்டு நிறைவேற்ற துடிப்பவர் தான் கவர்னர் ஆர்.என்.ரவி. அவர் தமிழ்நாடு என் பதை மறுதலித்து தமிழகம் என்றுதான் அழைக்க வேண்டும் எனப் பேசி பெரும் சர்ச்சையை கிளப்பி னார். பின்பு வலுவான கண்டனம் எழுந்த பின்னர் குடியரசு தின அழைப்பி தழில் தமிழ்நாடு என்று அச்சிட்டார்.

    அதே போல அமைச்சரவை தயாரித்து ஒப்புதல் அளித்த அறிக்கையில் சில வாக்கியங்களை தவிர்த்தும், திரித்தும் வாசித்தார். இதன்மூலம் அரசியலமைப்பு சட்டத்தையும், தார்மீக நெறிகளையும் மீறினார்.

    ஆன்லைன் சூதாட்டத்தில் பாதிக்கப்பட்ட 60பேர் தமிழகத்தில் தற்கொலை செய்துள்ளனர்.

    இதற்கு முடிவு கட்டும் வகையில் கடந்த ஆண்டு ஆன்-லைன் சூதாட்ட தடை மசோதா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு கவர்னர் ஒப்பதலுக்கு அனுப்பப்பட்டது. பின்னர் அவரை நேரில் சந்திந்து மாநில அரசின் தரப்பில் தெளிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டன.

    இருந்தபோதிலும் 6மாத காலம் அந்த மசோதாவை கிடப்பில் போட்ட கவர்னர் இப்படி ஒரு சட்டத்தை இயற்ற தமிழ்நாட்டு அரசுக்கு அதிகாரம் இல்லை என்று கூறினார். தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 20-க்கும் மேற்ப்பட்ட மசோதாக்களை கவர்னர் கிடப்பில் போட்டுள்ளார்.

    இதற்கிடையே குடிமை தேர்வு எழுதும் மாணவர்களி டையே உரையாற்றிய கவர்னர் அரசு அனுப்பும் மசோதாக்களை கிடப்பில் போட்டாலே அதற்கு ஒப்புதல் இல்லை என்று தான் அர்த்தம் என்று பேசியுள்ளார்.

    இதைத்தொடர்ந்து சட்டமன்றத்தில் மசோதா வுக்கு ஒப்புதல் வழங்க கவர்னருக்கு கால நிர்ணயம் செய்யும் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. இதனால் ஏற்பட்ட அரசியல் அழுத்தத்தின் காரணமாக வேறு வழியின்றி கவர்னர் ரவி ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கூடைப்பந்து அணிக்கு 13 வயதுக்குட்பட்டோருக்கான மாணவ- மாணவிகள் அணி தேர்வு வருகிற 29-ந் தேதி (சனிக்கிழமை) காலை 7:30 மணிக்கு கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடக்கிறது.
    • இந்த அணி தேர்வில் வரும் மாணவ - மாணவிகள் பிறப்பு சான்றிதழ் மற்றும் ஆதார் நகலுடன் நேரில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில் மாவட்ட கூடைப்பந்து அணிக்கு 13 வயதுக்குட்பட்டோருக்கான மாணவ- மாணவிகள் அணி தேர்வு வருகிற 29-ந் தேதி (சனிக்கிழமை) காலை 7:30 மணிக்கு கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடக்கிறது. இந்த அணி தேர்வுக்கு 1.1.2010 தேதிக்கு பிறகு பிறந்தவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இந்த அணி தேர்வில் வரும் மாணவ - மாணவிகள் பிறப்பு சான்றிதழ் மற்றும் ஆதார் நகலுடன் நேரில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விருதுநகரில் நடக்கும் மாநில அளவிலான போட்டிக்கு இந்த மாவட்ட வீரர்கள், வீராங்கனைகள் தேர்வு நடக்கிறது. மேற்கண்ட தகவல்களை மாவட்ட கூடைப்பந்து கழக செயலாளர் விஜயசுந்தரம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளனர்.

    • சுதேசி விழிப்புணர்வு மாநாட்டிற்கு அணி திரண்டு வர வேண்டும்.
    • மண்டல தலைவர் மைக்கேல் ராஜ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    மதுரை

    தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் மதுரை மண்டல தலைவர் மைக்கேல் ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை சார்பில் 40-வது வணிகர் தின விழாவை முன்னிட்டு வருகிற 5-ந் தேதி சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வி.ஜி.பி. தங்க கடற்கரையில் சுதேசி விழிப்புணர்வு மாநாடு நடைபெறுகிறது. அன்று காலை 9 மணிக்கு கொடியேற்றுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    இதில் நான் (மைக்கேல் ராஜ்) தலைமை தாங்குகிறேன். சங்கத்தின் பல்வேறு நிர்வாகிகள் முன்னிலை வகிக்கிறார்கள். மாநில தலைவர் முத்துக்குமார் கொடியேற்றி வைத்து சிறப்புரையாற்றுகிறார். தொடர்ந்து காலை 9.30 மணிக்கு கலைநிகழ்ச்சி நடக்கிறது.

    அதனை தொடர்ந்து சுதேசி விழிப்புணர்வு மாநாடு கூட்டம் நடைபெறுகிறது. இதில் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்புரையாற்றுகிறார். த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார்.

    இதில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். சென்னையில் நடக்கும் இந்த மாநாட்டில் மதுரை மண்டலத்தின் சார்பில் நிர்வாகிகள் சூசை அந்தோணி, தங்கராஜ், சில்வர் சிவா, குட்டி என்ற அந்தோணி ராஜ், ஸ்வீட் ராஜன், ஜெயக்குமார், தேனப்பன், வக்கீல் கண்ணன், , சுருளி, ஆன்ந்த், அப்பாஸ், ராமர், கரன்சிங், வாசுதேவன், மூங்கில் கடை ரவி, பிச்சைப்பழம், சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கிறார்கள்.

    மதுரை மண்டலத்தில் இருந்து தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையினர் கார், வேன்கள் மூலம் மாநாட்டில் திரளாக பங்கேற்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார்.

    ×