search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "report"

    • எந்த ஒரு முறைகேட்டிற்கும் இடம் இல்லாத வகையில், முறையாக நடத்தி, முடிவினை அறிவிக்க வேண்டும்.
    • சமூக வலைத்தளங்களில் பொய்ப்பிரச்சாரம் கூடாது.

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கும் பாராளுமன்ற தேர்தலுக்கான தேதியின் அடிப்படையில் நாடு முழுவதும் தேர்தல் நியாயமானதாக, சுதந்திரமாக நடைபெற வேண்டும் என்று பொது மக்கள் எதிர்பாக்கிறார்கள். குறிப்பாக தேர்தல் ஆணையம் நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும், பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படும், அரசியல் கட்சிகளிடையே பாரபட்சம் கூடாது, சமூக வலைத்தளங்களில் பொய்ப்பிரச்சாரம் கூடாது, புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் உள்ளிட்ட பல விதிமுறைகளை வெளியிட்டு அறிவித்திருப்பதால் அனைத்து தரப்பு மக்களிடமும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

    அந்த வகையில் தேசிய ஜனநாயகக் கூட்டணில் அங்கம் வகித்துள்ள த.மா.கா.வானது கூட்டணில் உள்ள அனைத்து கட்சிகளின் வெற்றிக்காக மக்களை நேரிடையாக சந்தித்து, வாக்குறுதிகள் கொடுத்து, ஓட்டு கேட்டு, மீண்டும் மத்தியில் பா.ஜ.க ஆட்சியானது பிரதமர் மோடி தலைமையில் அமைய பாடுபடும். நாடு முழுவதற்குமான தேர்தல் என்பதால் வாக்களிக்கும் தகுதி உள்ளவர்கள் அனைவரும் வாக்களிப்பதற்கு முன்வர வேண்டும் என்பதற்கு ஏதுவாக விழிப்புணர்வுடன் தேர்தல் நடைபெற வேண்டும் என த.மா.கா எதிர்பார்க்கிறது. தேர்தல் ஆணையம் அறிவித்தபடி தேர்தலை நியாயமாக, சுதந்திரமாக, மக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு ஏற்ப, எந்த ஒரு முறைகேட்டிற்கும் இடம் இல்லாத வகையில், முறையாக நடத்தி, முடிவினை அறிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • விண்ணப்பங்கள் பெறப்பட்டு ஜூன் மாதத்தில் போட்டித் தேர்வுகள் நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது.
    • தொடக்கம் முதலே அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் 163 கல்லூரிகளில் மட்டும் 5 லட்சத்திற்கும் கூடுதலான மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் 2024-ம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட உள்ள ஆசிரியர் உள்ளிட்ட அதிகாரிகளின் எண்ணிக்கை, அப்பணிகளுக்கான ஆள் தேர்வு அறிவிக்கை வெளியிடப்படும் மாதம், போட்டித் தேர்வுகள் நடத்தப்படும் மாதம் ஆகியவை குறித்த விவரங்கள் கடந்த ஜனவரி மாதம் 10-ம் நாள் வெளியிடப்பட்டன.

    அதன்படி தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகள் ஆகியவற்றுக்கு 4000 உதவிப் பேராசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கை பிப்ரவரி மாதம் வெளியிடப்படும். அதனடிப்படையில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு ஜூன் மாதத்தில் போட்டித் தேர்வுகள் நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது. இது குறித்த அறிவிக்கையை எதிர்பார்த்து தகுதியுடைய தேர்வர்கள் காத்திருந்தனர்.

    ஆனால், பிப்ரவரி நிறைவடைந்து மார்ச் மாதத்தில் இரண்டாவது வாரமும் பிறந்துவிட்ட நிலையில் அறிவிக்கை வெளியாகாததால் அவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    தமிழகத்தில் நேரடியாக 163 கல்லூரிகள், பல்கலைக் கழகங்களில் உறுப்புக் கல்லூரிகளாக இருந்து அரசின் கட்டுப்பாட்டிற்கு மாற்றப்பட்ட 41 கல்லூரிகள் என மொத்தம் 204 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் தொடக்கம் முதலே அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் 163 கல்லூரிகளில் மட்டும் 5 லட்சத்திற்கும் கூடுதலான மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

    இந்த கல்லூரிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்களின் எண்ணிக்கை 10,079 ஆகும். இவற்றில் சுமார் 7500 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

    தமிழ்நாட்டில் உயர்கல்வியின் தரத்தையும், வளர்ச்சியையும் உறுதி செய்ய வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழக அரசுக்கு உண்டு. இதை உணர்ந்து அரசு கலைக் கல்லூரிகளில் காலியாக உள்ள 7500 உதவிப் பேராசிரியர் பணியிடங்களையும் நிரப்புவதற்கான அறிவிக்கையை, மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்படுவதற்கு முன் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் வெளியிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • காவல் அதிகாரிகளின் பதவி உயர்வை தேவையின்றி தாமதப்படுத்துவது கண்டிக்கத்தக்கது.
    • உரிய காலத்தில் பதவி உயர்வு வழங்கினால் தான் உற்சாகத்துடன் பணி செய்வார்கள்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகக் காவல்துறையில் உதவி ஆய்வாளர் நிலையில் தொடங்கி கூடுதல் கண்காணிபாளர் நிலை வரையிலான அதிகாரிகளின் பதவி உயர்வு பட்டியல் தயாரிக்கப்பட்டு பல மாதங்களாகியும், அதற்கு அரசு ஒப்புதல் அளிக்காத தால் 400-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கடுமையான மன உளைச்சலும், மனச்சோர்வும் அடைந்துள்ளனர். காவல் அதிகாரிகளின் பதவி உயர்வை தேவை யின்றி தாமதப்படுத்துவது கண்டிக்கத்தக்கது.

    உதவி ஆய்வாளர்களுக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பதவி உயர்வு வழங்கப்படவில்லை. 15 ஆண்டுகளுக்கு முன் வருவாய்த்துறையில் உதவியாளராக பணியில் சேர்ந்த பலர் வட்ட ஆட்சியராகவும், தலைமை செயலகத்தில் தட்டச்சராக பணியில் சேர்ந்தவர்கள் நிர்வாக அலுவலராகவும் பதவி உயர்வு பெற்று விட்டனர். ஆனால், காவல்துறையில் உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்தவர்கள் 15 ஆண்டுகளுக்குப் பிறகு இன்னும் அதே நிலையில் தொடர்கின்றனர். இது மிகப்பெரிய அநீதி ஆகும்.

    காவல்துறையின் இதயமாக திகழ்பவர்கள் துணை கண்காணிப்பாளர் நிலை முதல் உதவி ஆய்வாளர் நிலை வரை உள்ள அதிகாரிகள் தான். அவர்கள்தான் வழக்கு விசாரணைகளை முன்னெடுப்பவர்கள்.

    அவர்களுக்கு உரிய காலத்தில் பதவி உயர்வு வழங்கினால் தான் உற்சாகத்துடன் பணி செய்வார்கள்.

    எனவே, மக்களவைத் தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக காவல்துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தடுப்பணை கட்டுவதற்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் ஏதேனும் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறதா? என்ற ஐயம் எழுகிறது.
    • சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் என்ன நடந்தது? என்பது பற்றி அரசு விளக்கம் அளிக்க வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியில் பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணைக் கட்டுவதற்கு அம்மாநில முதல்-அமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி இன்று அடிக்கல் நாட்டுகிறார்.

    அதைவிட அதிர்ச்சியளிக்கும் உண்மை, தடுப்பணை தொடர்பான தமிழக அரசின் வழக்கில் சிக்கல் தீர்ந்துவிட்டது என்று ஆந்திர அமைச்சர் கூறியிருப்பது தான்.

    அதனால் புதிய அணையை கட்டப்போவதாகவும் ஆந்திர அரசு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

    அப்படியானால், ஆந்திராவில் தடுப்பணை கட்டுவதற்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் ஏதேனும் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறதா? என்ற ஐயம் எழுகிறது. குறைந்தது ஒரு வாரத்திற்கு முன்பாக இத்தகைய பின்னடைவு ஏற்பட்டிருந்தால் தான் ஆந்திர அரசால் புதிய தடுப்பணைக்கு இன்று அடிக்கல் நாட்ட முடியும். எனவே, ஆந்திராவில் புதிய தடுப்பணைகளை கட்ட அனுமதிக்கக் கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் என்ன நடந்தது? என்பது பற்றி அரசு விளக்கம் அளிக்க வேண்டும்.

    பாலாற்று நீரைப் பயன்படுத்துவது குறித்து அப்போதைய சென்னை மாகாணத்திற்கும், மைசூர் ராஜதானிக்கும் இடையே 1892-ம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தில் கடைமடை பாசன மாநிலத்தின் ஒப்புதல் இல்லாமல் புதிய அணைகளைக் கட்டக்கூடாது என்று தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது.

    அதற்கு மாறாக ஆந்திர அரசு புதிய தடுப்பணைகளைக் கட்டுவதும், ஏற்கனவே கட்டப்பட்ட அணைகளின் உயரத்தை அதிகரிப்பதும் சட்டவிரோதமாகும். இதை அனுமதிக்கக்கூடாது.

    ஒரு காலத்தில் பால் போல் தண்ணீர் ஓடிய பாலாறு, இப்போது வறண்டு போய் காட்சியளிக்கிறது. இதனால் பாலாற்று தண்ணீரை நம்பி பாசனம் செய்து வந்த விவசாயிகளில் பெரும்பான்மையானோர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்த நிலையில் பாலாற்றின் குறுக்கே உடனடியாக ஒரு தடுப்பணையும், தேர்தலுக்குப் பிறகு மேலும் இரு தடுப்பணைகளும் கட்டப்பட்டால், ஆந்திரத்தில் வெள்ளம் ஏற்பட்டால் கூட தமிழ்நாட்டிற்கு பாலாற்றில் தண்ணீர் வராது. அப்போது பாலாறு பாலைவனமாகவே மாறி விடக்கூடும்.

    பாலாற்றை நிரந்தர பாலைவனமாக்க ஆந்திரம் திட்டமிட்டு மேற்கொள்ளும் இந்த சதியை தமிழக அரசு முறியடிக்க வேண்டும். குப்பம் பகுதியில் பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்டுவதற்கான ஆந்திர அரசின் முயற்சிகளை தடுத்து நிறுத்த வேண்டும்.

    அதுமட்டுமின்றி, ஆந்திர தடுப்பணைகளுக்கு எதிராக சுப்ரீம்கோர்ட்டில் தொடரப்பட்டுள்ள வழக்குக்கு உயிர் கொடுப்பதுடன், அந்த வழக்கைப் பயன்படுத்தி பாலாற்றின் குறுக்கே இனிவரும் காலங்களில் அணைகள் கட்டப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ராமநாதபுரத்தில் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
    • முடிவில் கிழக்கு மாவட்ட தலைவர் காதர்கனி நன்றி கூறினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் சோசியல் டெமாக்ரடிக் கிரேடு யூனியன் தொழிற்சங்கத்தின் சார்பாக ஊரக பணியாளர்களின் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. மேற்கு மாவட்ட தலைவர் யூசுப் தலைமை தாங்கினார். மாநில தலைவர் முகமது ஆஷாத், மாநில பொது செயலாளர் ரவூப் நிஸ்தார், மாநிலத் துணைத் தலைவர் அப்துல் சிக்கந்தர் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட நிர்வாகிகள், விமன் இந்தியா மூவ்மெண்ட் மாவட்ட கமிட்டி உறுப்பினர் கார்த்திகை செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த கலந்தாய்வு கூட்டத்தில் கடந்த 4.10.2023-ல் ஊரக வாழ்வாதார இயக்கத்தின் 15-வது குழும கூட்டத்தின் அறிக்கை சம்பந்தமாக விவாதிக்கப்பட்டது.

    கடந்த 2010 முதல் பணியாளர்களாக தேர்வு செய்யப்பட்டவர்கள் 8-வது கல்வி தகுதி பெற்றவர்களை பணியில் தேர்வு செய்தனர்.அவர்களை அதே தகுதியில் பணியில் நீடிக்க செய்ய வேண்டும் என்றும் புதிதாக எடுப்பவர்களை 12-வது கல்வி தகுதியில் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. கடந்த பல ஆண்டுகளாக பணி செய்து வரும் ஊரக சமூகப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. ஊரக சமூக களப் பயிற்றுனர்க ளுக்கு கொடுக்கப்பட்ட ஊக்கத்தொகை ரூ.2500-ல் இருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தி தர வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. முடிவில் கிழக்கு மாவட்ட தலைவர் காதர்கனி நன்றி கூறினார்.

    • அனைத்து வார்டுகளிலும் அ.தி.மு.க. கொடியேற்று நிகழ்ச்சி நடக்கிறது.
    • அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

    மதுரை

    அ.தி.மு.க.வின் 52 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவின் பேரில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள 16 கால் மண்டபம் பகுதியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உருவ படத்திற்கு நாளை காலை 10 மணியளவில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டு பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட உள்ளது.

    அதைத் தொடர்ந்து அ.தி.மு.க. கொடி கம்பம் கொடியேற்று நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இதே போல மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட திருப்பரங்குன்றம், கிழக்கு தொகுதி, மேலூர் தொகுதி அனைத்து கழகங்க ளிலும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, வார்டு பகுதிகளிலும் அ.தி.மு.க.வின் கொடியேற்றி பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட உள்ளது,

    இந்த நிகழ்ச்சிகளில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர், பகுதி, நிர்வாகிகள் எம்.ஜி.ஆர். மன்றம், ஜெய லலிதா பேரவை, இளைஞர் அணி, மாணவர் அணி, மகளிர் அணி, இலக்கிய அணி, வர்த்தக அணி, மீனவர் அணி, விவசாய பிரிவு, வழக்கறிஞர் பிரிவு, அண்ணா தொழிற்சங்கம், சாரா ஓட்டுனர் அணி, சிறுபான்மை பிரிவு, மருத்துவ அணி, கலைப்பிரிவு, இளைஞர் இளம்பெண்கள் பாசறை, மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவு மற்றும் முன்னாள் இந்நாள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வருகிற 17-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) அ.தி.மு.க உருவாகி 52-வது ஆண்டு தொடக்க விழாவினை கட்சி கொடியேற்றி கொண்டாட வேண்டும்.
    • 17-ந் தேதி தொண்டாமுத்தூர் தொகுதியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் எஸ்.பி.வேலுமணி ஆகிய நான், திரைப்பட இயக்குனர், நடிகர் ரவிமரியா, பழக்கடை மூர்த்தி ஆகியோர் பேசுகிறோம்.

    கோவை,

    கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வருகிற 17-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) அ.தி.மு.க உருவாகி 52-வது ஆண்டு தொடக்க விழாவினை முன்னிட்டு கோவை புறநகர் தெற்கு மாவட்டத்தில் ஒன்றிய, நகர, பகுதி, பேரூராட்சி கழகங்களில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் உருவப்படங்களுக்கு மாலை அணிவித்தும், கட்சி கொடியேற்றி கொண்டாட வேண்டும்.

    மேலும் அ.தி.மு.க. தலைமை அறிவித்தபடி வருகிற 17-ந் தேதி தொண்டாமுத்தூர் தொகுதியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரான எஸ்.பி.வேலுமணி ஆகிய நான், திரைப்பட இயக்குனர், நடிகர் ரவிமரியா, பழக்கடை மூர்த்தி ஆகியோர் பேசுகிறோம்.

    18-ந் தேதி சூலூரில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் நான், திரைப்பட இயக்குனர், நடிகர் மனோஜ்குமார், ஜெயசீலனும், வால்பாறை யில் எம்.ஜி.ஆர் இளைஞ ரணி துணை செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான அமுல்கந்தசாமி, பி.ஏ.சுப்பி ரமணியம் ஆகியோர் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்கள்.

    26-ந் தேதி கிணத்துக் கடவு ெதாகுதியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் மாணவரணி துணைச்செயலாளர் எம்.டிபாபு, பலகுரல் வெள்ளி யங்கிரியும், 28-ந் தேதி பொள்ளாச்சியில் நடக்கும் கூட்டத்தில் வக்கீல் பிரிவு இணை செயலாளரும், செய்தி தொடர்பாளருமான பாபுமுருகவேல், எரியூட்டி சேகர் ஆகியோர் பங்கேற்று பேசுகின்றனர்.

    இந்த பொதுக்கூட்டத்தில் இந்நாள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூராட்சி, ஊராட்சி, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உள்பட பலரும் கலந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தங்களது விவரங்களை அளிக்க தவறும் பட்சத்தில் தங்களது பெயர், உறுப்பினர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்படும்.
    • மேற்கண்ட வாய்ப்பை பயன்படுத்தி தங்களது விவரங்களை ஒரு வார காலத்திற்குள் சமர்ப்பித்திட வேண்டும்.

    ஊட்டி,

    நீலகிரி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் வாஞ்சிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி சரக துணை பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் உறுப்பினர்களாக உள்ளவர்களிடம் ஆதார் எண், குடும்ப அட்டை எண் கோரி கூட்டுறவுத்துறையின் மூலம் 18.4.2023 அறிவிப்பு வெளியிடப்பட்டு கூட்டுறவு சங்கங்களின் மூலம் பலமுறை நேரில் அணுகியும், இதுநாள் வரை தற்போதைய புகைப்படம், ஆதார் எண், குடும்ப அட்டை எண் மற்றும் தொலைபேசி எண் ஆகிய விவரங்களை வழங்காத உறுப்பினர்கள் ஒரு வார காலத்திற்குள் மேற்கூறிய விவரங்களை தாங்கள் உறுப்பினர்களாக உள்ள கூட்டுறவு சங்கங்கள், வங்கிகளில் சமர்ப்பித்திட வேண்டும்.

    எதிர்வரும் கூட்டுறவு சங்க தேர்தலை முன்னிட்டு சங்கத்தில் உறுப்பினர் பட்டியல் தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. எனவே உரிய காலத்திற்குள் தங்களது விவரங்களை அளிக்க தவறும் பட்சத்தில் தங்களது பெயர், உறுப்பினர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்படும்.

    அதன்பின் எதிர்வரும் கூட்டுறவு சங்க தேர்தலில் தங்களால் வாக்களிக்க இயலாத நிலை மற்றும் அந்த தேர்தலில் போட்டியிட இயலாத நிலை ஏற்படும். எனவே மேற்கண்ட வாய்ப்பை பயன்படுத்தி தங்களது விவரங்களை ஒரு வார காலத்திற்குள் சமர்ப்பித்திட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • எடப்பாடி பழனிசாமியும், பன்னீர்செல்வமும் ஒரே தேர்தல் திட்டத்தை ஆதரிப்பது திராவிட இயக்கத்திற்கு செய்யும் துரோகம்.
    • பசும்பொன் பாண்டியன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் வழக் கறிஞர் பசும்பொன் பாண்டி யன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதா வது-

    மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசுக்கு எதிராக இந்திய ஒன்றியத்தின் ஐனநாய கத்தை நிலைநிறுத்திட எதிர் கட்சிகளின் இந்தியாக் கூட் டணி மக்களிடையே செல் வாக்கு பெற்று வருவதோடு நாளுக்கு நாள் வலிமையாக வருவதை சகித்துக் கொள்ள முடியாத மோடி அரசு மக்களை திசை திருப்பிடும் வகையில் ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்த போவதாக சொல்கிறது.

    மோடி அரசின் ஊழல் களை மறைப்பதற்காகவும் எதிர்க்கட்சிகளை மிரட்டு வதற்காகவும் ஒரே தேர்தல் என்ற போலி ஆயுதத்தை கையில் எடுத்துள்ளது .இது ஆர்எஸ்எஸ்சின் 100ஆண்டு கனவு திட்டமாகும் இந்த கனவு நிச்சயமாக பலிக்கப் போவது இல்லை.

    இந்திய நாடு என்பது பல் வேறு ஒன்றியங்களின் கூட் டாச்சி என்ற தத்துவத்திற்கு இது வேட்டு வைப்பதாகும் இதனால் மாநிலங்களின் உரிமைகளை பறித்திடு வதற்கு வழிவகையாகும், ஐனநாயகத்தை சீர்குலைப் பதற்கும் அரசியல் அமைப்பு சட்டத்தின் ஐனநாயக கட்ட மைப்புக்களை சீர்குலைத் திடும் வகையில் நாட்டை சர்வதிகாரத்திற்கு அழைத்து செல்லும் வகையில் எதே சதிகாரமாக மோடி அரசின் ஒரே தேர்தல் செயல்பாடு அமைந்துள்ளது.

    ஆகவே 2024 நாடாளு மன்ற தேர்தலுடன் தமிழகத் திற்கும் தேர்தல் வந்து விடும் என்ற நட்பாசையில் அண்ணாவின் கொள்கை களை மறந்து திராவிட இயக்க சித்தாதங்களை துறந்து மாநில உரிமை களுக்கு வேட்டு வைக்கும் ஒரே தேர்தல் திட்டத்தை எடப்பாடி பழனிசாமி ஆதரிப்பதும் பதவி பேரா சைக்காக என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. இதே திட்டத்தை எடப்பாடி பழனி சாமி முதலமைச்சராக இருந்த போது எதிர்த்தார். இப்போது ஆதரிப்பது பதவி பித்திற்கு என்பது நாட்டு மக்களுக்கு தெளிவாக உணர்த்திவிட்டார்.

    கடந்த அ.தி.மு.க. ஆட்சி யில் மோடி அரசிற்கு சேவகம் செய்யும் அடிமைக ளாக செயல்பட்டவர்களுக்கு அண்ணாவின் மாநில உரிமைகள் பற்றி தெரிய நியாயம் இல்லை புரட்சித் தலைவரும், பரட்சித்தலைவி யும் மாநில உரிமைகளுக்காக போராடியதை மறந்து பழனிசாமியும், பன்னீர் செல்வமும் போட்டி போட்டு ஒரே தேர்தல் அறிவிப்பை ஆதரிப்பது திராவிட இயக்கத்திற்கும் தலைவர்களுக்கும் செய்யும் மாபெரும் துரோகமாகும்.

    இந்தியாவில் இனிமேல் தேர்தலே இல்லை சர்வதி கார அதிபர் முறை வரும் என்று மோடி அறிவித்தாலும் அதையும் ஆதரிப்பவர்களாக இவர்கள் செயல்படுவதில் ஆச்சரியம் இல்லை.திராவிட இயக்க உயிர் மூச்சுக் கொள் கையான மாநில சுயாட்சி கொள்கையை டெல்லிக்கு காவு கொடுத்து விட்டு அண்ணா பெயரில் கட்சி நடத்துவது வெட்ககேடான செயலாகும்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    • விருதுநகரில் தி.மு.க. அவசர செயற்குழு கூட்டம் நடக்கிறது.
    • இதில் அனைவரும் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.

    விருதுநகர்

    விருதுநகர் தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான சாத்தூர் ராமச்சந்திரன், மேற்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான தங்கம் தென்னரசு ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விருதுநகரில் நடைபெற உள்ள தி.மு.க. இளைஞரணி கூட்டத்திற்கு வரவுள்ளதை முன்னிட்டு விருதுநகரில் தி.மு.க. அவசர செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இதில் மாவட்ட அவைத்தலைவர் தங்கராஜ், செல்வமணி ஆகியோர் தலைமை வகிக்கிறார்கள்.

    தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், தலைமை கழக செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட செயலாளர், நிர்வாகிகள், சார்பு அணி அமைப்பா ளர்கள், மாவட்ட பிரதி நிதிகள், கட்சி முன்னோடி கள் கலந்து கொள்கின்றனர்.

    கூட்டத்தில் விருதுநகரில் நடைபெற உள்ள இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டம், மூத்த உறுப்பினர்களுக்கு பொற்கிழி வழங்குதல் ஆகியவை குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது. இதில் அனைவரும் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மதுரையில் 9 பேர் பலியான சம்பவம் மனதுக்கு வேதனை அளிக்கிறது.
    • முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தனது அறிக்கை தெரிவித்துள்ளார்.

    மதுரை

    முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது-

    உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் இருந்து தென்னிந்தியாவில் சுவாமி தரிசனம் செய்வ தற்காக 90 க்கும் மேற்பட்டோர் கடந்த 17 தேதி யாத்திரைப் பயணிகள் ரெயில் மூலமாக தமிழ்நாட் டிற்கு வந்துள்ளனர்.

    இவர்கள் நேற்று நாகர்கோயில் பத்மநாப சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு இன்று அதிகாலை மதுரை வந்தடைந்தனர்.

    இவர்களின் ரெயில் பெட்டி மதுரை ரெயில் நிலையத்திலிருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டி ருந்தது. அந்த நேரத்தில் ரெயில் பெட்டியில் இருந்த பக்தர்கள் சிலிண்டர் மூலம் சமைக்க முற்பட்டபோது, திடீரென்று தீப்பற்றி எரிந்தது. இந்த தீ விபத்தால் 9-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். தீக் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த கோரச்சம்பவம் மனதிற்கு வேதனை அளிக்கிறது. எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க வேண்டும்.

    மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தீ விபத்தில் மரணமடைந்த குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு, இந்த விபத்தில் மரணமடைந்த பக்தர்களின் ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற இறைவனை வேண்டுகிறேன்.மேலும் சிகிச்சை பெற்று வரும் நபர்கள் விரைவில் பூரண நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ராமநாதபுரத்தில் நாளை நடக்கும் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டம் குறித்து காதர்பாட்சா முத்துராமலி்ங்கம் எம்.எல்.ஏ. அறிக்கை விடுத்துள்ளார்.
    • தேர்தல் பணிக்குழு தலைவர் ராஜகண்ணப்பன் கலந்து கொண்டு பேசுகிறார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. செயலாளர் முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ராமநாதபுரத்திற்கு வருகிற 17-தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தந்து தென் மண்டல அளவிலான வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறைக் கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார்.

    இது தொடர்பாக வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டங்கள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) சட்டமன்ற தொகுதி வாரியாக கீழ்கண்ட இடங்களில் நடைபெற உள்ளது.

    முதுகுளத்தூர் தொகுதி வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டம் காலை 10 மணிக்கு முதுகுளத்தூரில் உள்ள சர்வ விநாயக சாய் மகாலில் நடக்கிறது. பரமக்குடி தொகுதி வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டம் காலை 11 மணிக்கு பரமக்குடி ஏபிஷா மகாலில் நடக்கிறது.

    திருவாடனை தொகுதி வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டம், மதியம் 2 மணியளவில் ஆர்.எஸ்.மங்கலம் குட்லு மகாலில் நடக்கிறது. ராமநாதபுரம் தொகுதி வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டம், மாலை 4 மணியளவில், ராமநாதபுரம் பாரதிநகர் வைஸ்ராய் மகாலில் நடக்கிறது.

    இக்கூட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் கதர் வாரியத் துறை அமைச்சர், தேர்தல் பணிக்குழு தலைவர் ராஜகண்ணப்பன் கலந்து கொண்டு பேசுகிறார்.

    எனவே ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மாநில, மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் மற்றும் அனைத்து அணி நிர்வாகிகள், தொண்டர்கள். அவரவர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இடங்களில் தவறாது கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    ×