குற்றச்சாட்டுகள் நிரூபணம்.. நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவிநீக்கம் செய்ய விசாரணைக் குழு பரிந்துரை

நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்ததை அறிக்கை உறுதிப்படுத்துகிறது.யஷ்வந்த் வர்மாவின் தவறான நடத்தையும், அவர் மீதான குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டுள்ளன.
குற்றச்சாட்டுகள் நிரூபணம்.. நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவிநீக்கம் செய்ய விசாரணைக் குழு பரிந்துரை
Published on

அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா, முன்னதாக டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றினார்.

மார்ச் 14 அன்று, டெல்லியில் உள்ள அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது, பழைய பொருட்கள் வைக்கும் அறையில், கோடிக்கணக்கான ரூபாய் பணம் பாதி எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் மூன்று நீதிபதிகள் கொண்ட ஒரு குழுவை அமைத்தது. அக்குழுவின் அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது.

விசாரணைக் குழுவின் அறிக்கை, பணம் கண்டெடுக்கப்பட்ட அறை, நீதிபதி யஷ்வந்த் வர்மா மற்றும் அவரது குடும்பத்தினரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்ததை அறிக்கை உறுதிப்படுத்துகிறது.

பாதி எரிந்த ரூபாய் நோட்டுகள், மறுநாள் அதிகாலை அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளன. கிடைத்த நேரடி மற்றும் மின்னணு ஆதாரங்களின் அடிப்படையில், நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் தவறான நடத்தையும், அவர் மீதான குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டுள்ளன.

எனவே இந்தக் குற்றச்சாட்டுகள் அவரைப் பதவி நீக்கம் செய்வதற்குப் போதுமானவை என்று விசாரணை அறிக்கை திட்டவட்டமாகக் கூறுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com