search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "High Court Judge"

    • நிலுவையில் உள்ள வழக்கு குறித்து பேட்டி அளித்தவர்.
    • மற்றொரு நீதிபதி மீது, அரசியல் கட்சிக்காக பணிபுரிவதாக குற்றம் சாட்டியவர்.

    மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்தவர் அபிஜித் கங்கோபாத்யாய். இவருக்கு இன்னும் பதவிக்காலம் 3 மாதங்கள் இருக்கும் நிலையில் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியலில் களம் இறங்கி தேர்தலில் போட்டியிட இருப்பதாக அறிவித்திருந்தார்.

    இந்த நிலையில் நீதிபதி பதவியை ராஜினாமா செய்து விட்டதாகவும், இது தொடர்பாக குடியரசு தலைவர் திரவுபதி முர்முவுக்கு தெரிவித்து விட்டதாகவும், மரியாதை நிமித்ததமாக தலைமை நீதிபதி டி.எஸ். சிவஞானத்தை சந்திக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

    "நான் தலைமை நீதிபதியை சந்திக்க சென்று கொண்டிருக்கிறேன். மரியாதை நிமித்தமாக அவர் சந்திக்க இருக்கிறேன். நான் ஏற்கனவே ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி அனுப்பி விட்டேன்.

    எனது ராஜினாமா அறிவிப்பை வெளியிட பத்திரிகையாளர் சந்திப்பை நடத்த திட்டமிட்டிருந்தேன். ஆனால் அந்த இடத்தில் அதிக அளவில் கூட்டம் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டிருப்பதால், அதில் இருந்து பின்வாங்கிவிட்டேன். இரண்டு மணிக்கு எனது வீட்டில் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்த இருக்கிறேன். 2 மணிக்கு அங்கே வாருங்கள் (பத்திரிகையாளர்களை பார்த்து)" என்றார்.

    கங்கோபாத்யாய் மேற்கு வங்காளம் மாநிலத்தின் தம்லுக் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடலாம் என யூக செய்திகள் வெளியாகியுள்ளது. 2009-ல் இருந்து தம்லுக் தொகுதி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக விளங்கி வருகிறது.

    பா.ஜனதாவுக்கு செல்வதற்கு முன்னதாக மம்தா பானர்ஜியின் வலது கை என அறியப்பட்ட சுவேந்து அதிகாரி தம்லுக் தொகுதியில் ஆதிக்கம் செலுத்தியராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    அபிஜித் கங்கோபாத்யாய், மற்றொரு நீதிபதியை அரசியல் கட்சிக்காக வேலை பார்ப்பதாக விமர்சனம் செய்திருந்தார். மேலும், ஒரு வழக்கு நிலுவையில் இருக்கும்போது அந்த வழக்கு தொடர்பாக பேட்டி அளித்திருந்தார். அதற்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அதிருப்தி தெரிவித்திருந்தார்.

    பல்வேறு வழக்குகளில் மாநில அரசுக்கும் இவருக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • மக்கள் உரிமை கூட்டமைப்பு வலியுறுத்தல்
    • அப்பட்டமான மனித உரிமை மீறல் என்பதோடு வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம்.

    புதுச்சேரி:

    மக்கள் உரிமை கூட்டமைப்பு செயலாளர் சுகுமாரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பழங்குடி இருளர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்த வழக்கு விசாரணை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

    இந்த வழக்கில் சமரசம் ஆகாததால் பழிவாங்கும் நோக்கில் பழங்குடி இருளர் 2 பேர் மீது திருக்கனூர் போலீஸ் நிலையத்தில் 2 பொய் வழக்குகள் போடப்பட்டுள்ளன. இது அப்பட்டமான மனித உரிமை மீறல் என்பதோடு வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம்.

    எனவே, புதுவை அரசு பழங்குடி இருளர்கள் மீதான போலீஸ் அத்துமீறல்கள் குறித்து ஓய்வுப் பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

    இல்லையேல், டி.ஜி.பி. அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும்.

    இவ்வாறு சுகுமாரன் அறிக்கையில் கூறியுள்ளார்.

    சென்னை மாநகராட்சியில் லஞ்சம் கொடுக்காமல் எந்த சான்றிதழும் பெறமுடியவில்லை, மாநகராட்சியில் ஊழல் மலிந்துவிட்டது என்று ஐகோர்ட்டு நீதிபதி கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    சென்னை ஷெனாய்நகர் பகுதியில் மாநகராட்சி இடத்தை ஆக்கிரமித்து வைத்துள்ள ஜெனரேட்டரை அகற்றக்கோரி லட்சுமி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது சென்னை மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் நேரில் ஆஜராகி இருந்தார். மாநகராட்சி எல்லைக்குள் உள்ள ஆக்கிரமிப்புகளையும், விதிமீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களையும் தடுக்க மாநகராட்சி நிர்வாகம் எடுத்த நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி வக்கீல் எடுத்துக்கூறினார்.

    இந்த விவகாரத்தில் மாநகராட்சியின் நடவடிக்கைகள் திருப்தி அளிக்கும் வகையில் இல்லை என்று நீதிபதி அதிருப்தி தெரிவித்தார். பின்னர், விதிமீறல் கட்டிடங்களை தடுக்க மாநகராட்சி எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது சென்னை மக்களை விரக்தி அடைய செய்துள்ளதாக நீதிபதி தெரிவித்தார்.

    விதிமீறி கட்டப்படும் கட்டிடங்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்திய நீதிபதி, மாநகராட்சி எல்லைக்குள் கட்டிட பணிகளை மேற்கொள்ள விதிகளை பின்பற்றி ஒப்புதல்கள் வழங்கப்படுகிறதா?, விதிமீறல் கட்டிடங்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்பது குறித்து பதில் அளிக்க மாநகராட்சி கமிஷனருக்கு உத்தரவிட்டார்.

    சென்னை மாநகராட்சியில் ஊழல் மலிந்துவிட்டதாக சுட்டிக்காட்டிய நீதிபதி, லஞ்சம் கொடுக்காமல் சென்னை மாநகராட்சியில் கட்டிட ஒப்புதல் உள்ளிட்ட எந்த சான்றிதழும் பெறமுடியாத நிலை இருந்து வருவதாகவும், இதன் காரணமாக மக்கள் விரக்தி அடைந்துள்ளதாகவும் கருத்து தெரிவித்தார்.

    பின்னர், ஊழலில் ஈடுபட்ட மாநகராட்சி அதிகாரிகள் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன?, மாநகராட்சி அதிகாரிகளின் சொத்து விவரங்கள், ஊழலை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகள், மாநகராட்சி ஊழல் கண்காணிப்பு பிரிவின் செயல்பாடுகள் ஆகியவை குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் மாநகராட்சி கமிஷனருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

    மேலும், நிலுவையில் உள்ள சொத்து வரியை வசூலிக்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிப்பதாக லோக் அதாலத் (மக்கள் நீதிமன்றம்) ஆய்வு கூட்டத்தில் உத்தரவாதம் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய கமிஷனருக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை 27-ந் தேதிக்கு தள்ளிவைத்தார்.
    தந்தையின் இறுதி சடங்கில் பங்கேற்பதற்கு ஏதுவாக கைதி ஒருவரின் ஜாமீன் வழக்கை நள்ளிரவில் விசாரித்து தீர்ப்பை ஐகோர்ட்டு நீதிபதி வழங்கியுள்ளார். #HighCourtJudge #bail
    சென்னை:

    சென்னை ராயுபுரத்தைச் சேர்ந்தவர் டேவிட்சன். அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை தாக்கிய வழக்கில் கடந்த 23-ந் தேதி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் டேவிட்சனின் தந்தை விஜயகுமார் நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். தந்தையின் இறுதி சடங்கில் கலந்துகொள்வதற்காக டேவிட்சனை ஜாமீனில் விடுவிக்க நீதிமன்றம் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கும்படி டேவிட்சனின் உறவினர்கள் வக்கீல் ஏ.கே.கோபாலை அணுகினர்.

    ஐகோர்ட்டு விடுமுறை நாட்களில் அவசர மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும் என்றால் சம்பந்தப்பட்ட வக்கீல், பதிவாளரை அணுகி அவசர நிலையை எடுத்துக்கூற வேண்டும். வக்கீலின் கோரிக்கை உடனடியாக விசாரிக்கப்பட வேண்டியதுதானா? என்பதை பதிவாளர் பரிசீலித்து தலைமை நீதிபதியிடம் எடுத்துக்கூறுவார். அதன்பின்பு, தலைமை நீதிபதியிடம் உரிய அனுமதி பெற்று ஏதாவது ஒரு நீதிபதி மூலம் விசாரணை நடத்த பதிவாளர் ஏற்பாடு செய்வார்.

    இளம் வக்கீலான ஏ.கே.கோபாலுக்கு இந்த விவரம் தெரியாததால் ஜாமீன் மனுக்களை விசாரித்து வரும் நீதிபதி ஜெகதீஷ்சந்திராவின் வீடு இருக்கும் ராஜா அண்ணாமலைபுரத்துக்கு சென்றார். அப்போது நீதிபதி வீட்டில் இல்லை என்றும், குடும்பத்தினருடன் வெளியில் சென்றிருப்பதாகவும் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தெரிவித்தனர்.

    இதனால் வக்கீல், நீதிபதியின் வீட்டு முன்பு காத்திருந்தார். இதற்கிடையே இரவு 10 மணிக்கு நீதிபதி வீட்டுக்கு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பு, இளம் வக்கீல் ஒருவர் நிற்பதை பார்த்து விவரம் கேட்டார். அப்போது வக்கீல் கோபால், தனது கட்சிக்காரரான டேவிட்சன் என்பவரது தந்தை இறந்து போனதாகவும், இறுதி சடங்கில் கலந்து கொள்ள அவரை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்ய வந்திருப்பதாகவும் தெரிவித்தார்.

    அப்போது நீதிபதி, பதிவாளர் மூலம் தான் இந்த மனுவை அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார். இந்த விவரம் தனக்கு தெரியாது என்று நீதிபதியிடம், வக்கீல் கூறி உள்ளார். இதைத்தொடர்ந்து நீதிபதி ஜெகதீஷ்சந்திரா மனிதாபிமான அடிப்படையில் தலைமை நீதிபதியிடம் தொடர்பு கொண்டு உரிய அனுமதி பெற்று அந்த மனுவை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்தார்.

    இதுகுறித்து அரசு வக்கீலுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அரசு தலைமை குற்றவியல் வக்கீல் எமிலியாஸ் அறிவுறுத்தலின் பேரில் அரசு வக்கீல் முகமது ரியாஸ், டேவிட்சன் மீதான வழக்கு விவரங்களை போலீசாரிடம் இருந்து பெற்றுக்கொண்டு நீதிபதி வீட்டுக்கு வந்தார்.

    இதைத்தொடர்ந்து இரவு 11 மணிக்கு நீதிபதி அந்த மனுவை விசாரித்தார். நள்ளிரவு 12.30 மணிக்கு விசாரணை முடிந்தது. இறுதியில், டேவிட்சனுக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். பொதுவாக ஐகோர்ட்டு உத்தரவு நகல் தட்டச்சு செய்து வழங்கப்படும். நள்ளிரவு நேரம் என்பதால் ஜாமீன் உத்தரவு நகலை தட்டச்சு செய்வதற்கு அலுவலர்கள் யாரும் இல்லை. இதனால் நீதிபதி தனது கைப்படவே ஜாமீன் உத்தரவை எழுதி அதை ஐகோர்ட்டு பணியாளர் மூலம் புழல் சிறை சூப்பிரண்டுக்கு அனுப்பி வைத்தார்.

    இதைத்தொடர்ந்து நேற்று காலை புழல் சிறையில் இருந்து டேவிட்சன் விடுவிக்கப்பட்டார். பின்னர் அவர் தனது தந்தையின் இறுதி சடங்கில் கலந்து கொண்டார்.

    கடந்த சில வாரங்களுக்கு முன்பு இதுபோல் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் குடும்பத்தினரின் ஜாமீன் மனுவை நீதிபதி ஜெகதீஷ்சந்திரா நள்ளிரவில் விசாரித்து தீர்ப்பு வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. 
    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் சபாநாயகரின் உத்தரவுக்கு எதிராக தீர்ப்பு வழங்கிய நீதிபதி சுந்தருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மாற்றக்கோரி, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் கவர்னரை சந்தித்து மனு அளித்தனர். இதனை தொடர்ந்து அவர்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்.

    இதனை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் 18 எம்.எல்.ஏ.க்களும் வழக்கு தொடர்ந்தனர். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வந்த இந்த வழக்கில் சில நாட்களுக்கு முன்னர் தீர்ப்பு கூறப்பட்டது. தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது.

    18 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு சரிதான் என்று இந்திராபானர்ஜி தீர்ப்பு வழங்கினார். அதே நேரத்தில் நீதிபதி சுந்தர் அளித்த தீர்ப்பு இதற்கு எதிராக இருந்தது. சபாநாயகர் தனபாலின் தகுதி நீக்க உத்தரவை கடுமையாக விமர்சித்து சுந்தர் 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டது செல்லாது என்று அதிரடியாக தீர்ப்பு அளித்தார்.

    தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுக்கு சாதகமாக அமைந்த இந்த தீர்ப்பு அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    மாறுபட்ட தீர்ப்புகளால் சர்ச்சை ஏற்பட்டதால் சுப்ரீம் கோர்ட்டு 3-வது நீதிபதியாக நீதிபதி சத்திய நாராயணாவை நியமித்தது. இந்த வழக்கு விசாரணையை தொடங்கி இருக்கும். அவர் இந்த மாதம் (ஜூலை) 23-ந்தேதியில் இருந்து 5 நாட்கள் தினமும் வழக்கு விசாரணை நடைபெறும் என்று அதிரடியாக அறிவித்துள்ளார்.

    இதன்மூலம் 18 எம்.எல். ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் அடுத்து என்ன நடக்கும்? என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. நீதிபதி சத்திய நாராயணா வழங்கப் போகும் தீர்ப்புக்காக அ.தி.மு.க.வினரும் தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினரும் காத்திருக்கிறார்கள்.

    இந்த நிலையில் 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் சபாநாயகரின் உத்தரவுக்கு எதிராக தீர்ப்பு வழங்கிய நீதிபதி சுந்தருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள நீதிபதிகள் குடியிருப்பில் மனைவி, மகளுடன் சுந்தர் வசித்து வருகிறார்.

    அவரது வீட்டுக்கு மர்ம கடிதம் ஒன்று வந்துள்ளது. பெயர் ஏதுமின்றி மொட்டை கடிதமாக உள்ள அதில் நீதிபதி சுந்தருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதுபற்றிய தகவல் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜிக்கு தெரிவிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து இந்திரா பானர்ஜி சென்னை மாநகர போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதனை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார்.

    அப்போது மிரட்டல் கடிதம் அனுப்பிய நபர் யார்? என்பதை கண்டுபிடித்து அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார். இதனை ஏற்று கமி‌ஷனரும் மிரட்டல் விடுத்த நபரை விரைவில் கண்டுபிடித்து விடுவோம் என்று உறுதி அளித்தார்.

    இதனை தொடர்ந்து நீதிபதிகள் குடியிருப்பில் உள்ள நீதிபதி சுந்தரின் வீட்டில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஏற்கனவே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசாருடன் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

    நீதிபதி சுந்தர் மற்றும் அவரது குடும்பத்தினர் செல்லும் இடங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. நீதிபதிகள் குடியிருப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் போலீசார் ரோந்து சுற்றி வருகிறார்கள். சந்தேக நபர்கள் யாராவது நடமாடுகிறார்களா? என்பது பற்றி திவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    மிரட்டல் கடிதத்தை எழுதியது யார்? என்பது தெரியவில்லை. இதன் பின்னணியில் அரசியல் தொடர்புடைய நபர்கள் தான் இருக்க வேண்டும் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதன் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    மிரட்டல் கடிதம் எங்கிருந்து அனுப்பப்பட்டுள்ளது என்பது பற்றி ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதனை வைத்து குற்றவாளியை பிடிக்க வலை விரிக்கப்பட்டுள்ளது.
    தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்து விசாரிக்கும் குழுவை உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் கண்காணிக்க வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் தெரிவித்தார். #ThoothukudiFiring #TTVDhinakaran
    திருச்சி:

    திருச்சியில் இன்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் நடத்திய போராட்டத்தில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியது காட்டுமிராண்டித்தனமானது. இந்த சம்பவத்தில் இதுவரை 12 பேர் பலியானதாக கூறுகிறார்கள். பலர் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளனர்.

    சம்பவத்தின்போது வானத்தை நோக்கி சுட்டு போலீசார் கூட்டத்தை கலைக்காமல் குருவிகளை சுடுவது போல பொதுமக்களை நோக்கி சுட்டது வருத்தமாக உள்ளது. ஆலை வேண்டாம் என்று போராடும் மக்களை அரசு மதிக்காமல் ஆலை அதிபர்களுக்கு ஆதரவாக அரசு செயல்படுவதையே இது காட்டுகிறது.

    தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மக்கள் பிரச்சனையை கையாலத்தெரியாத அரசாகவும் அடிமை அரசாகவும் கமி‌ஷன் ஏஜெண்டு அரசாகவும் செயல்படுவதையே இது காட்டுகிறது. 100 நாட்களாக மக்கள் போராடுகிறார்கள். ஆனால் கலெக்டர் அலட்சியமாக இருந்துள்ளார்.

    தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டும் தவறாக செயல்பட்டுள்ளார். போலீஸ் துறையை கையில் வைத்துள்ள எடப்பாடி பழனிசாமி இதற்கு பொறுப்பேற்க வேண்டும். கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரை பதவி நீக்க வேண்டும்.

    பொதுமக்கள் மன நிலையை அறிந்து அரசு செயல்பட வேண்டும். கதிராமங்கலம், மீத்தேன் திட்டம், நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டம், நியூட்ரினோ திட்டம், கூடங்குளம் திட்ட பிரச்சனைகளை கவனமாக கையாள வேண்டும்.

    இல்லையென்றால் தமிழகம் முழுவதும் போராடும் சூழ்நிலை ஏற்படும். இதை விட்டுவிட்டு போராட்டத்தை சிலர் தூண்டி விடுவதாக அமைச்சர்கள் கூறுவது கோமாளிதனமான பேச்சாகும். அப்படி போராட்டத்தை சிலர் தூண்டுவதாக கூறினாலும் உளவுத்துறை போலீசார் அதை கண்டுபிடித்து அரசுக்கு தெரிவித்திருக்கலாம். ஆனால் உளவுத்துறை போலீசார் தினகரன் என்ன செய்கிறார்? எங்கு செல்கிறார்? என்பதை கண்காணிப்பதில் தான் கவனம் செலுத்துகிறார்கள். நாங்கள் எதாவது கூறினால் பொய் வழக்கு போடுகிறார்கள். காவல் துறை ஏவல் துறையாக செயல்படுகிறது.


    தூத்துக்குடி சம்பவம் அரசின் கையாலாகாத தனத்தை காட்டுகிறது. ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது இது போன்ற சம்பவங்கள் நடந்தது இல்லை. இந்த நிலைக்கு இந்த ஆட்சி தான் காரணம். இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும். இந்த சம்பவம் குறித்து அமைக்கப்பட்டுள்ள விசாரணை குழுவை தற்போது உள்ள உயர் நீதி மன்ற நீதிபதி தலைமை கண்காணிப்புடன் நடத்த வேண்டும்.

    திருச்சி தொழிலதிபர் ராமஜெயம் கொலை வழக்கில் பொய்குற்றவாளி மூலம் முடிக்க பார்ப்பதாக கூறுவது கண்டிக்கத்தக்கது. அப்படி நடந்தால் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #TTVDhinakaran
    ×