என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "prisoner"

    • பாழடைந்த வீட்டின் கிணற்றுக்குள் கோவிந்தசாமி பதுங்கியிருப்பது தெரியவந்தது.
    • தப்பி ஓடி பிடிபட்ட கைதி கோவிந்தசாமி, மருத்துவ பரிசோதனைக்கு பிறகு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் பாலக்காடு அருகே கடந்த 2011-ம் ஆண்டு சவுமியா என்ற இளம்பெண் ஓடும் ரெயிலில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, ரெயிலில் இருந்து தள்ளி விடப்பட்டு கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தமிழகத்தின் விருத்தாசலத்தை சேர்ந்த கோவிந்தசாமி என்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

    அவருக்கு கோர்ட்டு மரண தண்டனை விதித்த நிலையில், உச்சநீதிமன்றம் அதனை ஆயுள் தண்டனையாக குறைத்தது. இதனை தொடர்ந்து கோவிந்தசாமி கண்ணூர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். ஒரு கை ஊனமான அவர், பாதுகாப்பான பிளாக்கில் இருந்து நேற்று காலை திடீரென மாயமானார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த சிறை அதிகாரிகள் தேடுதல் வேட்டையில் இறங்கினர். சுமார் 3½ மணி நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு சிறையில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு பாழடைந்த வீட்டின் கிணற்றுக்குள் கோவிந்தசாமி பதுங்கியிருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அங்கு சென்று அவரை கைது செய்தனர்.

    கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் தப்பியோடிய கைதி பிடிபட்ட நிலையில் அவர் தப்பிச் சென்றது எப்படி? என உயர் அதிகாரிகள் விசாரணையில் இறங்கினர். இதில் சிறை அறையின் 3 இரும்பு கம்பிகளை அறுத்து விட்டு கிழிந்த போர்வைகளை ஒன்றாக கயிறு போல் கட்டி 7.5 மீட்டர் உயரம் உள்ள சிறைச் சுவரை ஏறி தப்பிச் சென்றது தெரிய வந்தது.

    சிறையில் கண்காணிப்பு கேமரா இருந்தும் கோவிந்தசாமி தப்பிச் சென்றதை அதிகாரிகள் கவனிக்காமல் விட்டது எப்படி? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. இதில் பல நாட்களுக்கு முன்பிருந்தே சிறையில் இருந்து தப்பிக்க கோவிந்தசாமி திட்டமிட்டிருப்பது தெரிய வந்தது.

    இதனால் அவருக்கு சிறைக்குள் இருந்து உதவி கிடைத்ததா? என கண்ணூர் நகர போலீஸ் கமிஷனர் நிதின்ராஜ் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் 3 சிறை அதிகாரிகள் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர். கைதிகளை மேற்பார்வையிட தவறியதாக கோபுர அதிகாரியான துணை சிறை அதிகாரி ராஜீஸ், அறை பாதுகாப்பு பணி மற்றும் சி.சி.டி.வி. கட்டுப்பாட்டு அறை பணியில் இருந்த உதவி சிறை அதிகாரிகள் சஞ்சய், அகில் ஆகிய 3 பேரையும் சஸ்பெண்டு செய்து டி.ஐ.ஜி. ஜெயக்குமார் உத்தரவிட்டு உள்ளார்.

    இதற்கிடையில் தப்பி ஓடி பிடிபட்ட கைதி கோவிந்தசாமி, மருத்துவ பரிசோதனைக்கு பிறகு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் அவர் பாதுகாப்பு காரணமாக கண்ணூர் மத்திய சிறையில் இருந்து திருச்சூர் விய்யூர் உயர் பாதுகாப்பு சிறைக்கு இன்று மாற்றப்பட்டார்.

    • பயணிகள் ரெயிலில் கோவிந்தசாமியால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
    • அறையின் இரும்புக் கம்பிகளை வெட்டி, துணிகளைச் சேர்த்து கயிறாக்கி சிறை சுவரில் ஏறி தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

    கேரளாவில் கடந்த 2011ஆம் ஆண்டு பரபரப்பை ஏற்படுத்திய சௌமியா கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த குற்றவாளி கோவிந்தசாமி, கண்ணூர் மத்திய சிறையில் இருந்து தப்பி ஓடிவிட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

    வெள்ளிக்கிழமை அதிகாலை அவரது அறையை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, அவர் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டது. 

    கோவிந்தசாமி தனது உயர் பாதுகாப்பு அறையின் இரும்புக் கம்பிகளை வெட்டி, துணிகளைச் சேர்த்து கயிறாக்கி சிறை சுவரில் ஏறி தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. CCTV காட்சிகளின்படி, அவருக்கு வெளியிலிருந்து உதவி கிடைத்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

    காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது. இநநிலையில் அவர் பதுங்கியிருக்கும் இடம் தொடர்பான ரகசிய தகவலின் பேரில் தப்பியோடிய கோவிந்தசாமியை கண்ணூர் போலீசார் கைது செய்தனர். 

     சௌமியா (23), பிப்ரவரி 1, 2011 அன்று எர்ணாகுளத்தில் இருந்து ஷோர்னூர் நோக்கிச் செல்லும் ஒரு பயணிகள் ரெயிலில் தனியாகப் பயணம் செய்தபோது, தமிழகத்தின் விருதாச்சலத்தை சேர்ந்த கோவிந்தசாமியால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். கோவிந்தசாமிக்கு இந்த கொடூரக் கொலைக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர்  ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது.

    • சுமார் இரண்டு வார இடைவெளிக்குப் பிறகு துருக்கியில் நேற்று இந்த பேச்சுவார்த்தை நடந்தது.
    • படுகாயமடைந்தவர்கள் மற்றும் இளைஞர்களை விடுவிப்பதில் கவனம் செலுத்துவதாகவும் உமெரோவ் கூறினார்.

    மூன்று வருட போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ரஷியாவும் உக்ரைனும் துருக்கியில் மீண்டும் நேற்று நேரடி அமைதிப் பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளன.

    சுமார் இரண்டு வார இடைவெளிக்குப் பிறகு துருக்கியில் நேற்று இந்த பேச்சுவார்த்தை நடந்தது.

    ரஷியாவின் போர் விமானத் தளங்கள் மீது உக்ரைன் ஒரு பெரிய டிரோன் தாக்குதலை நடத்திய மறுநாளே இந்தப் பேச்சுவார்த்தை நடந்தது.

    இந்த பேச்சுவார்த்தை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. இதில் போரில் கொல்லப்பட்ட சுமார் 6,000 வீரர்களின் உடல்களை ரஷியாவும் உக்ரைனும் பரிமாறிக் கொள்ள ஒப்புக்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மேலும் உக்ரைன் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹிரோனிமி டைக்வி வெளியிட்ட தகவலின்படி, கூட்டத்திற்குப் பிறகு, போர்க் கைதிகள் (POW) பரிமாற்றம் குறித்து ஒரு புதிய ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக படுகாயமடைந்தவர்கள் மற்றும் இளைஞர்களை விடுவிப்பதில் கவனம் செலுத்துவதாகவும் உமெரோவ் கூறினார்.

    உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, " போர்க் கைதிகளை விடுவிப்பதற்கு நாங்கள் மீண்டும் தயாராகி வருகிறோம்" என்றார்.

    கடந்த பேச்சுவார்த்தையிலும் போர் கைதிகளை இரு நாடுகளும் பரிமாறிக்கொண்டது குறிப்பிடத்தக்கது. 

    • கைதிகள் உரிமைகள் மீறப்பட்டதாக கடுமையான குற்றசாட்டுகள்.
    • சர்ச்சைக்கு போலீசார் இதுவரை பதில் அளிக்கவில்லை.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், நிஜாமாபாத், போதன் நகரை சேர்ந்த வாலிபர் மீது அங்குள்ள போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் குற்றம் சாட்டப்பட்ட நபரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

    விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட நபரை போலீஸ் நிலையத்தில் உள்ள அறையில் அடைக்க வேண்டும். அதற்கு பதிலாக போலீசார் அந்த நபரின் கை கால்களில் கனமான இரும்பு சங்கிலியால் பிணைத்தனர்.

    பின்னர் அந்த வாலிபரிடம் போலீஸ் நிலையம் முழுவதையும் சுத்தப்படுத்த வேண்டும் என கட்டாயப்படுத்தினர். இரும்பு சங்கிலியால் பிணைக்கப்பட்ட வாலிபர் துடைப்பத்தை கையால் பிடித்துக் கொண்டு மெதுவாக ஊர்ந்து ஊர்ந்து போலீஸ் நிலையம் முழுவதையும் தூய்மைப்படுத்தினார்.

    அப்போது போலீஸ் நிலையத்திற்கு வந்த ஒருவர் அதனை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார். இந்த காட்சிகளை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார்.

    கைதிகள் உரிமைகள் மீறப்பட்டதாக கடுமையான குற்றசாட்டுகள் எழுந்துள்ளன.

    இது தெலுங்கானாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சர்ச்சைக்கு போலீசார் இதுவரை பதில் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • பிணையில் செல்ல இயலாதவர்களுக்கு சட்ட உதவி மையத்தின் மூலமாக வழக்கறிஞர் நியமிக்கப்படும்.
    • குற்ற செயல்கள் மீண்டும் செய்யாமல் இருக்க அறிவுரை கூறினார்.

    பாபநாசம்:

    பாபநாசம் கிளை சிறையில் சிறைச்சாலை நீதிமன்றம் நடைபெற்றது பாபநாசம் வட்ட சட்ட பணிகள் குழுவின் தலைவரும், மாவட்ட உரிமையியல் நீதிபதி மற்றும் குற்றவியல் நடுவருமான அப்துல் கனி சிறைச்சாலை நீதிமன்றத்தை நடத்தினார்.

    முன்னதாக சிறைச்சாலை பற்றியும், சட்ட உதவி மையத்தின் செயல்பாடுகள் பற்றியும் விசாரணை கைதிகளுக்கு விளக்கமாக கூறினார். மேலும் விசாரணை கைதிகள் ஒவ்வொரு இடமும் குற்றத்தின் தன்மைகள் பற்றி கேட்டறிந்தார்.

    வழக்கறிஞர் வைத்து பிணையில் செல்ல இயலாதவர்களுக்கு சட்ட உதவி மையத்தின் மூலமாக வழக்கறிஞர் நியமிக்கப்படும் என்று கூறினார்.

    மேலும் இது போன்ற குற்ற செயல்கள் மீண்டும் செய்யாமல் இருக்கவும் சமுதாயத்தில் நல்ல மனிதர்களாக வாழவும் அறிவுரை கூறினார் இதற்கான ஏற்பாடுகளை வட்ட சட்ட பணிகள் குழுவின் தன்னார்வ சட்டப்பணியாளர் தனசேகரன் செய்திருந்தார்.

    • சேலம் டவுன் போலீஸ் நிலையத்தில் கொலை வழக்கு உள்ளது. அமர்வு நீதிமன்றத்தில் துரைசாமி இந்த வழக்கில் ஆஜராகாமல் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகிறார்.
    • வருகிற 13-ந்தேதி காலை 10.30 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    சேலம்:

    சேலம் ஆற்றோரம் மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் எலும்பன் என்கிற துரைசாமி (வயது 2). இவர் மீது சேலம் டவுன் போலீஸ் நிலையத்தில் கொலை வழக்கு உள்ளது. இந்த வழக்கு விசாரணை சேலம் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. ஆனால் துரைசாமி இந்த வழக்கில் ஆஜராகாமல் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகிறார். இதனால், அவர் பிணையில் வெளிவர இயலாதபடி பிணை ஆனை கோர்ட்டு பிறப்பித்துள்ளது. மேலும் அவர் மீது மீதான குற்ற முறையீட்டுக்க பதில் அளிக்க வருகிற 13-ந்தேதி காலை 10.30 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    அவர் தலைமறைவான 27.3.2003-ம் ஆண்டு முதல் போலீசார் பல்வேறு இடங்களில் அவரை தேடி வருகின்றனர். ஆனாலட போலீசாரின் கண்களில் படாமல் தொடர்ந்து டிமிக்கி கொடுத்து வருகிறார். இதனால் எலும்பன் என்கிற துரைசாமி பற்றி தகவல் தெரிவிப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என சேலம் டவுன் போலீஸ் நிலையம் வெளியீட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மனைவியை சந்திக்க ஹரிகிருஷ்ணன் பரோலில் சென்றார்.
    • சேலம் மத்திய சிறை வாசல் வரை சென்றதும் உள்ளே போகாமல் தப்பி ஓடிவிட்டார்.

    சேலம்:

    சென்னை பள்ளிகரணையை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் (வயது52). கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற இவர், பல்வேறு சிறைகளில் மாறி மாறி 12 ஆண்டுகளாக அடைக்கப்பட்டிருந்தார்.

    இதில், அவர் 3 ஆண்டுகளுக்கு முன்பு சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். உடல் நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரது மனைவியை சந்திக்க, ஹரிகிருஷ்ணன், 2022 ஜூன் 22-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை பரோலில் சென்றார்.

    பின்னர், அவர் சேலம் திரும்பியபோது, சேலம் மத்திய சிறை வாசல் வரை சென்றதும் உள்ளே போகாமல் தப்பி ஓடிவிட்டார். இதற்கு, சிறை வார்டன் ராமகிருஷ்ணன் உடந்தையாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக, அஸ்தம்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

    அப்போதைய சிறை எஸ்.பி. கிருஷ்ணகுமார், துறை நடவடிக்கை மேற்கொண்டு வார்டனை, சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

    பின் கோவை கூடுதல் சிறை எஸ்.பி. சதீஷ்குமார், விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அவர் நடத்திய விசாரணையில், வார்டன் மோட்டார் சைக்கிளில் ஆயுள் தண்டனை கைதியை அழைத்துச் சென்று அஸ்தம்பட்டி சந்திப்பில் இறக்கி விட்டு, அவரை தப்பிக்கவிட்டார் என்பது உறுதியானது.

    அதன்படி எஸ்.பி. தமிழ்செல்வன், வார்டனை டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டார்.

    • விருப்பம் உள்ள சிறைக்கைதிகள் பொதுத்தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டது.
    • குறிப்பிட்ட நேரத்தில் தேர்வு அறைக்கு வந்த 24 கைதிகள் ஆர்வத்துடன் பொதுத்தேர்வு எழுதினர்.

    லக்னோ:

    உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை 24 சிறைக்கைதிகள் எழுதினர். மாநிலத்தில் பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று வரும் நிலையில், விருப்பம் உள்ள சிறைக்கைதிகள் பொதுத்தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டது.

    லக்னோவில் உள்ள மாடல் சிறையில் கைதிகள் தேர்வு எழுதுவதற்காக ஏற்பாடும் செய்யப்பட்டது.

    இந்த நிலையில், குறிப்பிட்ட நேரத்தில் தேர்வு அறைக்கு வந்த 24 கைதிகள், ஆர்வத்துடன் பொதுத்தேர்வு எழுதினர்.

    • மனிதாபிமான அடிப்படையில் கழிவறைக்கு செல்ல அனுமதித்த போலீசாரை ஏமாற்றி அங்கிருந்து ரியாஸ் கான் ரசாக் தப்பியோடிவிட்டார்.
    • விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, விக்கிரவாண்டி மற்றும் அருகில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு தகவல் அனுப்பினார்.

    விக்கிரவாண்டி:

    இலங்கை திரிகோண மலையைச் சேர்ந்த அப்துல் முஸ்தபா மகன் ரியாஸ் கான் ரசாக் (வயது 39). இவர் மதுரை பகுதியில் சந்தேகப்படும் படியாக சுற்றிவந்தார். இவரை விசாரித்ததில் ஆவணங்கள் இன்றி மதுரையில் தங்கியிருந்தது தெரியவந்தது. இதையடத்து மதுரை தெற்கு வாசல் போலீசார் இவர் மீது கடந்த 2019-ம் ஆண்டு வழக்கு பதிவு செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

    இந்த வழக்கு விசாரணைக்காக மதுரை கோர்ட்டில் நேற்று வந்தது. இதற்காக ரியாஸ் கான் ரசாக்கை புழல் சிறையில் இருந்து மதுரைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு வழக்கு விசாரணை முடிந்து மீண்டும் சென்னை புழல் சிறைக்கு திரும்பினர்.

    அப்போது இரவு 8.45 மணிக்கு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த பேரணி கூட்ரோடு அருகே உள்ள ஓட்டலில் போலீஸ் வாகனத்தை நிறுத்தி விட்டு குற்றவாளியை அழைத்துக் கொண்டு போலீசார் சாப்பிட சென்றனர். அப்போது தனக்கு வயிறு கோளாறாக உள்ளது என்று கூறிய ரியாஸ் கான் ரசாக் கழிவறைக்கு சென்று வருவதாக போலீசாரிடம் கூறினார்.

    மனிதாபிமான அடிப்படையில் கழிவறைக்கு செல்ல அனுமதித்த போலீசாரை ஏமாற்றி அங்கிருந்து ரியாஸ் கான் ரசாக் தப்பியோடிவிட்டார்.

    இது குறித்து விழுப்புரம் மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, விக்கிரவாண்டி மற்றும் அருகில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு தகவல் அனுப்பினார். தப்பிச் சென்ற குற்றவாளியை உடனடியாக பிடிக்க போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து தப்பியோடிய குற்றவாளியை பிடிக்க விழுப்புரம் மாவட்ட போலீசார் விடிய விடிய வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதனால் விக்கிரவாண்டி பகுதி மீண்டும் பரபரப்பாகியுள்ளது.

    இது தவிர, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர் மாவட்ட போலீசாருக்கு இத்தகவல் அனுப்பப்பட்டது. 

    • அரசியல் புனிதமானது. ஆனால் தற்போது அரசியலில் நேர்மையானவர்கள் யாரும் இல்லை.
    • ஷாபி தனது முகவர் மூலம் புத்தூர் தொகுதியில் போட்டியிட வேட்பு மனுதாக்கல் செய்துள்ளார்.

    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுதாக்கல் இன்று நிறைவடைகிறது. பா.ஜ.க., காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

    விஜயாப்புரா மாவட்டம் பசவனபாகேவாடி தாலுகா சங்கதாலா கிராமத்தை சேர்ந்த சுபாஷ்சந்திரா ராத்தோடு. நீதிபதியான இவர் கலபுரகி மாவட்டம் சித்தாப்புரா தாலுகா கோர்ட்டில் 4 ஆண்டுகளும், விஜயாப்புராவில் 2 ஆண்டுகளும் பணியாற்றி இருந்தார். கடந்த ஒரு ஆண்டாக கதக்கில் அவர் பணியாற்றினார்.

    இந்நிலையில் அரசியலில் ஈடுபட நீதிபதி சுபாஷ் சந்திரா முடிவு செய்தார். இதையடுத்து, தனது நீதிபதி பதவியை ராஜினாமா செய்துவிட்டு, ஜனதாதளம்(எஸ்) கட்சியில் அவர் இணைந்தார். அவருக்கு கட்சியில் சித்தாப்புரா தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது.

    இதுபற்றி அவர் கூறுகையில், அரசியல் புனிதமானது. ஆனால் தற்போது அரசியலில் நேர்மையானவர்கள் யாரும் இல்லை. ஜனநாயகத்தின் முக்கிய தூண் சரிந்து கொண்டே வருவதை பார்த்து கொண்டு என்னால் சும்மா இருக்க முடியவில்லை.

    அரசியல் மூலமாக சமூகத்தில் மாற்றங்களையும், பலதரப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கவும் முடியும். அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நம்பிக்கையில், என்னுடைய நீதிபதி பதவியை ராஜினாமா செய்துவிட்டு சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறேன்' என்றார்.

    தட்சிண கன்னடா மாவட்டம் சுள்ளியா தாலுகா பெல்லாரே அருகே நெட்டார் பகுதியை சேர்ந்த பா.ஜனதா இளைஞர் அணி நிர்வாகி பிரவீன் நெட்டார் படுகொலை செய்யப்பட்டார். கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை 26-ந்தேதி நடந்தது. இந்த கொலை சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

    இந்த கொலை சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த ஷாபி என்பவர் உள்பட 8 பேரை என்.ஐ.ஏ. கைது செய்தது. அனைவரும் சிறையில் விசாரணை கைதியாக இருந்து வருகிறார்கள். இந்நிலையில் விசாரணை கைதியாக சிறையில் உள்ள ஷாபி எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

    அதைத்தொடர்ந்து நேற்று ஷாபி தனது முகவர் மூலம் புத்தூர் தொகுதியில் போட்டியிட வேட்பு மனுதாக்கல் செய்துள்ளார். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மாநிலத்தின் கோவை மாவட்டம் தேர்ச்சி விகிதத்தில் 4-வது இடத்தை பிடித்தது.
    • அனைவரும் தேர்ச்சி பெற்றனர். இது 100 சதவீத வெற்றி ஆகும்.

    கோவை:

    கோவை மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வு எழுதிய 15,794 மாணவர்களில் 15,228 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 18,533 மாணவிகளில் 18,265 மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். மொத்தமாக கோவை மாவட்டத்தில் 33 ஆயிரத்து 493 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 96.42 சதவீதமும், மாணவிகள் தேர்ச்சி விகிதம் 98.55 என மொத்தமாக 97.57 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    இதன் மூலம் கோவை மாவட்டம் தேர்ச்சி விகிதத்தில் 4-வது இடத்தை பிடித்தது. கடந்த ஆண்டு 96.21 சதவீதம் தேர்ச்சி விகிதம் பெற்று கோவை மாவட்டம் 4-வது இடத்தை பிடித்து இருந்தது. தற்போது வெளியான தேர்வு முடிவில் 97.57 சதவீதம் பெற்று மீண்டும் 4-வது இடத்தை தக்க வைத்துக் கொண்டது.

    கோவையில் உள்ள மத்திய ஜெயில் கைதிகளில் 12 பேர் இந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வை எழுதினர். அவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றனர். இது 100 சதவீத வெற்றி ஆகும்.

    • பஸ் நிலையம் அருகே சென்றபோது திடீரென குற்றவாளி போலீசாரிடம் இருந்து தப்பி ஓடினார்.
    • சாலையின் தடுப்பு கல்லை தாண்டி குதித்து ஓடினார்.

     பல்லடம் :

    பல்லடத்தில் நேற்று முன்தினம் மாலை போலீசார் ஒரு குற்றவாளியை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திவிட்டு பல்லடம் பஸ் நிலையம் செல்வதற்காக அவரை அழைத்துக்கொண்டு கோவை - திருச்சி மெயின் ரோட்டில் நால்ரோடு பகுதியில் இருந்து பஸ் நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

    பஸ் நிலையம் அருகே சென்றபோது திடீரென அந்த குற்றவாளி போலீசாரிடம் இருந்து தப்பி ஓடினார். போலீசார் துரத்தி பிடிக்க முயன்ற போது சாலையின் தடுப்பு கல்லை தாண்டி குதித்து ஓடினார். அப்போது எதிரே வந்த சிறிய சரக்கு வேனில் மோதி கீழே விழுந்தார்.இதையடுத்து அவரை அமுக்கிப் பிடித்த போலீசார் அவர்களது பாணியில் "கவனித்து" அவரை மீண்டும் பல்லடம் பஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இந்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் தற்பொழுது பல்லடம் பகுதியில் வைரலாகி வருகிறது.

    ×