search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "public examination"

    • மாரிமுத்து மயிலாடுதுறை உட்கோட்டத்தில் சாலை ஆய்வாளராக பொறுப்பு ஏற்றுள்ளார்.
    • சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே வேட்டங்குடி கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 51). இவருக்கு சுபஸ்ரீதேவி, மோனிஷா என்ற இரண்டு பெண் பிள்ளைகளும் துளசேந்திரன், கலாநிதி ஆகிய இரண்டு ஆண் பிள்ளைகளும் உள்ளனர்.

    இவர் சீர்காழி நெடுஞ்சாலைத்துறையில் 1997 ஆம் ஆண்டு 9-ம் வகுப்பு படித்திருந்த நிலையில் சாலை பணியாளராக பணியில் சேர்ந்து பணி புரிந்து வந்தார். மேலும் பதவி உயர்வு பெறுவதற்காக கடந்த 2010 மற்றும் 2012 ஆம் ஆண்டு தனது மூத்த மகள் சுபஸ்ரீ தேவி அரசு பொதுத்தேர்வு எழுதும்போது, இவரும் அதே நேரத்தில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு தனித்தேர்வராக தேர்வு எழுதி விடாமுயற்சியால் தேர்ச்சியும் பெற்றார்.

    சீர்காழியில் மகள்களோடு தந்தை தேர்வு எழுதியதை பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவரும் ஆச்சரியத்தோடு பார்த்தனர்.

    மாரிமுத்து நெடுஞ்சாலைத் துறையில் பதவி உயர்வு பெற வேண்டி தேர்வு எழுதிய நிலையில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு கோட்ட முதுநிலை பட்டியல் அடிப்படையிலும் கல்வித் தகுதி அடிப்படையிலும் தற்போது திறன்மிகு உதவியாளர் சாலை ஆய்வாளர் பதவி உயர்வு பெற்றுள்ளார். தற்போது மாரிமுத்து மயிலாடுதுறை உட்கோட்டத்தில் சாலை ஆய்வாளராக பொறுப்பு ஏற்றுள்ளார்.

    9-ம் வகுப்பு மட்டுமே தேர்ச்சி பெற்றிருந்த நிலையில் மாரிமுத்து தனது விடாமுயற்சியாலும் கடின உழைப்பு, தன்னம்பிக்கையால் அடுத்தடுத்து தேர்வு எழுதி வெற்றி பெற்று தனது பிள்ளைகளையும் பட்டதாரிகளாக ஆக்கி தானும் பதவி உயர்வு பெற்றுள்ளதை அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    • காலை 8 மணி முதல் மதியம் 1:30 மணி வரை இந்த தடை அமலில் இருக்கும்.
    • 650,000 பேர் பரீட்சைக்கு பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் பொது பட்டதாரி நிலை ஒருங்கிணைந்த போட்டித் தேர்வின் (JGGLCCE) முறைகேடுகளைத் தடுக்க, மாநிலம் முழுவதும் விரிவான இணையத் தடையை ஜார்க்கண்ட் அரசு அறிவித்துள்ளது.

    அதன்படி, செப்டம்பர் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் 24 மாவட்டங்களில் உள்ள பல்வேறு மையங்களில் தேர்வு நடைபெறுவதை ஒட்டி, காலை 8 மணி முதல் மதியம் 1:30 மணி வரை இந்த தடை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஜார்க்கண்ட் முழுவதும் மொபைல் இணையம், மொபைல் டேட்டா மற்றும் மொபைல் வைஃபை சேவைகளை அனைத்து சேவை வழங்குநர்களிடமிருந்தும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இருப்பினும், இந்த காலகட்டத்தில் நிலையான தொலைபேசி இணைப்புகள் வழியாக கால் அழைப்பதற்கும்பிராட்பேண்ட் இணைப்பு தொடர்ந்து செயல்படக்கூடும் என்று அதிகாரிகள் தெளிவுபடுத்தினர்.

    இதுகுறித்து ஜார்கண்ட் அரசு கூறுகையில், "முன்னதாக நடைபெற்ற தேர்வுகளில் சில நேர்மையற்ற நபர்கள் பல்வேறு மொபைல் பயன்பாடுகளைப் பயன்படுத்தி முறைகேடாக தேர்வு எழுதிய சம்பவம் நடந்தது."

    ஏறக்குறைய 650,000 பேர் பரீட்சைக்கு பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், அது "இலவசமாகவும், நியாயமாகவும், வெளிப்படைத்தன்மையுடனும்" நடத்தப்படுவதை உறுதிசெய்ய அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது.

    • அரசு மேல்நிலைப்பள்ளி மையத்தில் நடந்த ஆங்கில தேர்வை எழில் வேந்தன் எழுத வந்தார்.
    • தேர்வு முடிந்ததும் அவரது தந்தைக்கு இறுதி சடங்கு செய்யப்பட்டு உடல் தகனம் செய்யப்பட்டது.

    மன்னார்குடி:

    திருமக்கோட்டை அருகே தந்தை இறந்த துக்கத்திலும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை மாணவர் எழுதிய நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    திருவாரூர் மாவட்டம் திருமக்கோட்டை அருகே உள்ள தென்பரை கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 40). விவசாயி. இவரது மகன் எழில்வேந்தன். இவர் திருமக்கோட்டை உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இந்நிலையில் ஆறுமுகம் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ஆறுமுகம் இறந்தார்.

    அவரது இறுதிச்சடங்கு நடைபெறாத நிலையில் நேற்று 10-ம் வகுப்பு ஆங்கில தேர்வு நடந்தது. தந்தை இறந்த துக்கத்தையும் பொருட்படுத்தாமல், சோகத்தையும் வெளிகாட்ட முடியாமல் தனது படிப்புக்காக தேர்வை எழுத வேண்டும் என்ற நிலையில் திருமக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி மையத்தில் நடந்த ஆங்கில தேர்வை எழில் வேந்தன் எழுத வந்தார்.

    அப்போது கோட்டூர் வட்டார வளமைய மேற்பார்வையாளர் சுப்பிரமணியன், பள்ளியின் தன்னார்வ உடற்கல்வி ஆசிரியர் பூபேஷ் ஆகியோர் மாணவருக்கு ஆறுதல் கூறி தகுந்த ஆலோசனை வழங்கி தேர்வு அறைக்கு அழைத்து வந்தனர். பின்னர் மாணவர் தேர்வு எழுதினார்.

    தனது தந்தை உயிரிழந்து, அவரது உடல் வீட்டில் வைக்கப்பட்டிருந்த நிலையில் அவரது விருப்பபடி தனது கல்விக்கு எந்த தடையும் வரக்கூடாது என்ற எண்ணத்தில் நேற்றைய தேர்வில் எழில்வேந்தன் பங்கேற்றது அனைவர் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தேர்வு முடிந்ததும் அவரது தந்தைக்கு இறுதி சடங்கு செய்யப்பட்டு உடல் தகனம் செய்யப்பட்டது. இதில் எழில்வேந்தனின் பள்ளி நண்பர்கள் மற்றும் ஆசிரியர்களும் பங்கேற்றனர்.

    • 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை தொடங்கி ஏப்ரல் 8-ம் தேதி வரை நடைபெற உள்ளது
    • முதல் நாளான நாளை, தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடைபெறுகிறது

    பொதுத்தேர்வு எழுதும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து

    தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நாளை தொடங்குகிறது. இத்தேர்வை 9.38 லட்சம் மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர்.

    10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை தொடங்கி ஏப்ரல் 8-ம் தேதி வரை நடைபெற உள்ளது. முதல் நாளான நாளை, தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடைபெறுகிறது.

    இந்நிலையில், பொதுத்தேர்வு எழுதும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அதில், "தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுகளை நாளை எழுதவுள்ள என்னருமை தம்பி, தங்கைகள் அனைவரும் நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற, நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

    • அவசர காலம் தவிர மற்ற நேரங்களில் மின் விநியோகத்தை நிறுத்தக் கூடாது என மின்கள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
    • மின்னகத்தின் நுகர்வோர் சேவை மைய எண்ணான 94987 94987 என்ற எண்ணிலும் புகார்களை பதிவு செய்யலாம்.

    சென்னை:

    தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் தேர்வுகள் தொடங்கியுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் தடையில்லா மின்சாரம் வழங்குமாறு மின்சார வாரியம் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளது.

    மேலும் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக மின்சார வாரியம் மாநிலம் முழுவதும் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டுள்ளது. அவசர காலம் தவிர மற்ற நேரங்களில் மின் விநியோகத்தை நிறுத்தக் கூடாது என மின்கள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் தேர்வுகள் தொடங்கி உள்ளதால் மாநிலம் முழுவதும் தடையில்லா மின்சாரம் வழங்குமாறு மின்சார வாரியம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

    மின் தொடர்பான புகார்களை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக செயலியில் அளிக்கலாம் என்று தமிழ்நாடு மின்வாரியம் அறிவித்து உள்ளது. மேலும் மின்ன கத்தின் நுகர்வோர் சேவை மைய எண்ணான 94987 94987 என்ற எண்ணிலும் புகார்களை பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பாக இனிமேல் அதிவேகத்தில் மக்கள் குறைகளை தீர்க்க வேண்டும் என்று அரசு சார்பாக உத்தரவிடப்பட்டு உள்ளது. அதன்படி புகார் கொடுத்த 2 மணி நேரத்துக்குள் மின்தடை தொடர்பான புகார்களை சரி செய்ய வேண்டும். மின்சார வயர்கள் தொடர்பான பிரச்சினையை 5 மணி நேரத்துக்குள் தீர்க்க வேண்டும். பெரிய பிரச்சினைகள், டிரான்ஸ்பார்மர் பிரச்சினைகளை 10 மணி நேரத்துக்குள் தீர்க்க வேண்டும் என மின்சார வாரிய அதிகாரி களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • மாணவர்களுக்கு இனி பொதுத் தோ்வு முடிவில் மதிப்பெண்கள் மட்டுமே வழங்கப்படும்.
    • பிப்ரவரி 15-ந் தேதி பொதுத் தோ்வுகள் தொடங்க உள்ள நிலையில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    புதுடெல்லி:

    மாணவா்களிடையே தேவையற்ற போட்டி மனப்பான்மையைத் தவிா்க்கும் வகையில், தோ்வில் முதலிடம் பிடித்த மாணவா் என்பது போன்ற தனிப்பட்ட மாணவா்களின் பட்டியலை வெளியிடுவதை சி.பி.எஸ்.இ. ஏற்கெனவே நிறுத்திவிட்டது. அதன் தொடா்ச்சியாக, தற்போது ஒட்டுமொத்த மதிப்பெண் சதவீதம், தரவரிசை போன்ற விவரங்கள் வெளியீட்டையும் நிறுத்த சி.பி.எஸ்.இ. முடிவு செய்துள்ளது.

    இதுகுறித்து சி.பி.எஸ்.இ. தோ்வுக் கட்டுப்பாட்டாளா் சன்யம் பரத்வாஜ் கூறியதாவது:-

    10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இனி பொதுத் தோ்வு முடிவில் மதிப்பெண்கள் மட்டுமே வழங்கப்படும். மாணவா் பெற்ற ஒட்டுமொத்த மதிப்பெண் விவரம், ஒட்டுமொத்த மதிப்பெண் சதவீதம், தரவரிசை, அனைத்துப் பாடங்களில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவா்கள் பட்டியல் போன்ற விவரங்கள் வெளியிடப்படாது.

    எனவே, உயா் கல்வி நிறுவனங்கள் அல்லது வேலைவாய்ப்பு அளிக்கும் நிறுவனங்கள் சி.பி.எஸ்.இ. மாணவா்களின் பாட மதிப்பெண்களின் அடிப்படையில், அவா்கள் பெற்ற மொத்த மதிப்பெண்ணையும், மதிப்பெண் சதவீதத்தையும் கணக்கிட்டுக்கொள்ள வேண்டும்' என்றாா்.

    சி.பி.எஸ்.இ. 10, 12-ம் வகுப்பு பொதுத் தோ்வுகள் வரும் 2024, பிப்ரவரி 15-ந் தேதி தொடங்க உள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    • பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
    • தேர்வுக்கான முதல்கட்ட ஆயத்த பணிகளை தேர்வுத்துறை தொடங்கி உள்ளது.

    திருப்பூர்:

    10-ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவிகள் விபரங்களை, வருகிற 30-ந்தேதிக்குள் சரிபார்க்க வேண்டும் என்று பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    சமீபத்தில் பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டது. தேர்வு நடக்கும் நாள் குறித்த விபரம் தெரிய வந்துள்ள நிலையில், தேர்வுக்கான முதல்கட்ட ஆயத்த பணிகளை தேர்வுத்துறை தொடங்கி உள்ளது. அதன் ஒரு பகுதியாக எமிஸ் தளத்தில் தேர்வர் பெயர், பிறந்த தேதி, போட்டோ உள்ளிட்ட 14 தகவல்களை சரியாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மாணவர் விவரங்களில் ஏதேனும் தவறு ஏற்பட்டால், சம்மந்தப்பட்ட வகுப்பு ஆசிரியர் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியரே முழு பொறுப்பேற்க நேரிடும். மதிப்பெண் சான்றிதழ் வழங்கிய பிறகு திருத்தங்கள் கோரி தேர்வுத்துறைக்கு விண்ணப்பம் அனுப்புவதை தவிர்க்க வேண்டும்.

    எனவே ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் உடனடியாக திருத்தம் மேற்கொண்டு நவம்பர் 30-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என தேர்வுத்துறை இயக்குனரகம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து விரிவான வழிகாட்டுதல்கள் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா கூறுகையில், தேர்வுத்துறை இயக்குனரகத்தின் அறிவுறுத்தல்கள் குறித்து உயர்நிலை, மேல்நிலை பள்ளி ஆசிரியர்களுக்கு விரிவாக விளக்கப்பட்டுள்ளது. பெயர் பட்டியலின் அடிப்படையில் மதிப்பெண் சான்றிதழ் அச்சிடப்படும் என்பதால் தலைமை ஆசிரியர் நேரடி கவனத்தில் இப்பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

    • எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
    • திருப்பூர் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் அதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

    திருப்பூர் :

    எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி பிளஸ்-2 செய்முறைத்தேர்வு பிப்ரவரி மாதம் 12-ந் தேதியும், பிளஸ்-1 செய்முறைத்தேர்வு பிப்ரவரி மாதம் 19-ந் தேதியும், எஸ்.எஸ்.எல்.சி. செய்முறைத்தேர்வு பிப்ரவரி மாதம் 23-ந் தேதியும் தொடங்குகிறது.

    பிளஸ்-2 பொதுத்தேர்வு மார்ச் மாதம் 1-ந் தேதியும், பிளஸ்-1 தேர்வு மார்ச் மாதம் 4-ந் தேதியும், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு மார்ச் மாதம் 26-ந் தேதியும் தொடங்குகிறது. எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் மேல்நிலை தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் திருப்பூர் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் அதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

    திருப்பூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 33 ஆயிரத்து 445 மாணவ-மாணவிகளும், பிளஸ்-1 பொதுத்தேர்வை 28 ஆயிரத்து 376 பேரும், பிளஸ்-2 பொதுத்தேர்வை 25 ஆயிரத்து 688 பேர் என மொத்தம் 87 ஆயிரத்து 509 மாணவ-மாணவிகள் பொதுத்தேர்வு எழுத தயாராகி வருகிறார்கள்.

    • நடப்பு கல்வியாண்டு மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப தேர்வு மையங்கள் எண்ணிக்கை உயர்த்தப்படுமா என்ற விபரங்கள் இம்மாத இறுதியில் தெரியவரும் என்றனர்.
    • அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பொதுத்தேர்வுக்கான பணிகளை தேர்வுகள் துறை இயக்குனரகம் துவக்கியுள்ளது.

    திருப்பூர்:

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பொதுத்தேர்வுக்கான பணிகளை தேர்வுகள் துறை இயக்குனரகம் துவக்கியுள்ளது.முதல்கட்டமாக ஏற்கனவே மாவட்ட அளவில் உள்ள தேர்வு மையங்கள், புதிதாக அமைக்க வேண்டிய தேர்வு மையங்கள் குறித்த விபரங்களை கருத்துருவாக தயார் செய்ய மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அரசு தேர்வுகள் துணை இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார்.

    அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    தேர்வு மையங்கள் அமைப்பது இன்றியமையாதது என கருத்தப்படும் பள்ளிகளை நேரில் சென்று ஆய்வு செய்து, அவசியம் அமைத்தே ஆக வேண்டும் எனில் அதற்கான காரணத்தை தெளிவாக குறிப்பிட்டு குறிப்புரையுடன், கருத்துரு தயாரிக்க வேண்டும்.

    தற்காலிக (ஓராண்டு மட்டும்) தேர்வு மையம் அமைக்க, அனுமதிக்கப்பட்ட பள்ளிகள் தொடர்ந்து தேர்வு மையமாக செயல்பட வேண்டுமெனில் மீண்டும் கருத்துரு அனுப்பி இயக்குனரின் ஒப்புதல் கட்டாயம் பெற வேண்டும். அரசாணையில் உள்ள விதிகளை பின்பற்ற வேண்டும். அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் தேர்வுமையம் வேண்டி பரிந்துரை செய்தால் துறை அலுவலர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும். புதியதாக தேர்வு மையம் கோரும் பள்ளிகள் அரசு அங்கீகாரம் பெற்றிருப்பதை விதிகளின்படி செயல்படுவதை உறுதி செய்து பின் இறுதி கருத்துரு 25-ந் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 2022 - 23ம் ஆண்டு பொதுத்தேர்வு நடந்த போது 10-ம் வகுப்புக்கு 106, பிளஸ் 2 வகுப்புக்கு, 92 மையங்களில் அமைக்கப்பட்டது.நடப்பு கல்வியாண்டு மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப தேர்வு மையங்கள் எண்ணிக்கை உயர்த்தப்படுமா என்ற விபரங்கள் இம்மாத இறுதியில் தெரியவரும் என்றனர்.

    • நிகழ்ச்சியில் சேதுக்குவாய்த்தான் ஊராட்சி தலைவர் சுதா சீனிவாசன் தலைமை தாங்கினார்.
    • அறக்கட்டளையின் நிறுவன தலைவர் தங்கவேல்பூபதி கலந்துகொண்டு பரிசுகளை வழங்கினார்.

    ஆத்தூர்:

    ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியம் சேதுக்குவாய்த்தான் ஊராட்சியில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு சேதுக்குவாய்த்தான் ஊராட்சியும், ராஜபதி லெட்சுமணபெருமாள் கல்வி அறக்கட்டளையும் இணைந்து பாராட்டி பரிசுகள் வழங்கினர்.

    நிகழ்ச்சியில் சேதுக்குவாய்த்தான் ஊராட்சி தலைவர் சுதா சீனிவாசன் தலைமை தாங்கினார். சதாம் உசேன் வரவேற்றார். குருகாட்டூர் ஊராட்சிமன்ற தலைவரும், ஊராட்சி ஒன்றியசெயலருமான ராணி ராஜ்குமார் தொகுப்புரை ஆற்றினார். நிகழ்ச்சியில் அறக்கட்டளையின் நிறுவன தலைவர் தங்கவேல்பூபதி கலந்துகொண்டு பரிசுகளை வழங்கினார். சிறப்பு விருந்தினர்களாக மேலாத்தூர் ஊராட்சி தலைவரும், ஆழ்வைகிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான சதிஷ்குமார் மற்றும் ராஜபதி ஊராட்சி தலைவர் சவுந்திரராஜன், சேதுக்குவாய்த்தான் முன்னாள் ஊராட்சிதலைவர் மோகன், கிராம நிர்வாக அலுவலர் கண்ணன், தி.மு.க. மாவட்ட பிரதிநிதி மோகன் ஆகியோர் பரிசுகளை வழங்கினார்கள்.

    விழாவில் அனைத்து வாா்டு உறுப்பினர்கள் மற்றும் மகளிர் குழுவினர், பொதுமக்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். வக்கீல் சீனிவாசன் நன்றி கூறினார்.

    • பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு விழா நடந்தது.
    • பள்ளியின் தலைவர் வெள்ளையன் செட்டியார் தலைமை தாங்கினார்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே கீழச்சிவல்ப்பட்டியில் உள்ள மீனாட்சி சுந்தரேசுவரர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10 மற்றும் 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு விழா நடந்தது. பள்ளியின் தலைவர் வெள்ளையன் செட்டியார் தலைமை தாங்கினார். செயலர் வெங்கடாசலம் செட்டியார், பொருளாளர் அம்மையப்பன் செட்டியார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியை வள்ளியம்மை வரவேற்றார்.

    பிளஸ்-2 தேர்வில் 573 மதிப்பெண் பெற்ற துர்காதேவி, 10-ம் வகுப்பு தேர்வில் 485 மதிப்பெண் பெற்ற மீனாட்சி உள்ளிட்ட 7 மாணவ-மாணவிகளுக்கு முன்னாள் மாணவர் மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் முன்னாள் பொது மேலாளர் திருஞானசம்பந்தம் பரிசு வழங்கி பாராட்டினார். மேலும் மேற்படிப்பிற்கான வழிகாட்டுதல்களையும் கூறினார். ஆசிரியர் லியோ நன்றி கூறினார்.

    • 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் விருதுநகர் மாவட்டத்தில் 96.22 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநிலத்தில் 3-வது இடத்தை பிடித்தது.
    • 96.22 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    விருதுநகர்

    பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தைப் பொருத்தவரை விருதுநகர் மாவட்டம் மாநில அளவில் 3-வது இடத்தை பெற்றுள்ளது. மாவட்டத்தில் தேர்வு எழுதியவர்களில் 96.22 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    விருதுநகர் மாவட்டத்தில் 12 ஆயிரத்து 307 மாணவர்கள், 12 ஆயிரத்து 612 மாணவிகள் உட்பட 24 ஆயிரத்து 919 பேர் தேர்வு எழுதினர். இதில் 11 ஆயிரத்து 662 மாணவர்க ளும், 12 ஆயிரத்து 315 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய மாணவர்களில் 94.76 சதவீதம் பேரும் மாணவிகளில் 97.65 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ள னர். சராசரி அடிப்படையில் 96.22 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    ஆதிதிராவிட நலப்பள்ளி மாணவர்கள் 97.7 சதவீதமும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 97.79 சதவீதமும், அரசு பள்ளி களில் 93.13 சதவீதமும், நகராட்சி பள்ளிகளில் 96.02 சதவீதமும், பகுதியாக அரசு உதவிபெறும் பள்ளிகளில் 97.45 சதவீதமும், தனியார் பள்ளிகளில் 99.27 சதவீத மும், சுயநிதி பள்ளிகளில் (மாநில பாடத்திட்டம்) 98.47 சதவீதமும் தேர்ச்சி பெற்று உள்ளனர்.

    ×