என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பொதுத்தேர்வு - மார்ச், ஏப்ரல் மாதங்களில் மின்தடை இருக்காது
- ஒவ்வொரு தேர்வுக்கும் இடைவெளி விடப்பட்டுள்ளது.
- கல்வித்துறை சார்பில் மின்வாரியத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
திருப்பூர் :
திருப்பூர் பள்ளிகளில் பொதுத்தேர்வு நடப்பதால் மார்ச் - ஏப்ரல் மாதங்களில் முழுநேர மின்தடை இருக்காது என மின்வாரியம் தெரிவித்துள்ளது.
தற்போது பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கான செய்முறை தேர்வு துவங்கியுள்ளது. வருகிற 13-ந் தேதி முதல் ஏப்ரல் 3-ந்தேதி வரை பிளஸ் 2 பொதுத்தேர்வும், பிப்ரவரி 6-ந்தேதி முதல் 20-ந் தேதி வரை 10ம் வகுப்பு பொது தேர்வும் நடத்தப்பட உள்ளது. மாணவர்கள், தேர்வுக்கு நன்கு தயார்படுத்தி கொள்ளும் வகையில் ஒவ்வொரு தேர்வுக்கும் இடைவெளி விடப்பட்டுள்ளது.பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் நலனை முன்னிட்டு தேர்வு காலத்தில் தடையற்ற மின்சாரம் வழங்க வேண்டும் என கல்வித்துறை சார்பில் மின்வாரியத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
மார்ச் - ஏப்ரல் மாதம் முழுநேர மின்தடை இருக்காது.மிக அவசர பழுது காரணமாக மின்தடை செய்ய வேண்டியிருந்தால் குறிப்பிட்ட இடம் சார்ந்த பகுதியில் மட்டும் தற்காலிகமாக மின்தடை செய்யப்பட்டு விரைவில் பழுதுநீக்கி மின்சாரம் வினியோகிக்கப்படும் என மின்வாரியத்தினர் தெரிவித்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்