என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஆசிரியர்கள்"
- ஊக்க ஊதியத்திற்கு பழைய நடைமுறையை பின்பற்ற வேண்டும்.
- 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பேசினர்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்ட தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் இன்று பனகல் கட்டிடம் முன்பு நடைபெற்றது.
இதற்கு மாவட்ட செயல் தலைவர் காத்த பெருமாள் தலைமை தாங்கினார்.
மாவட்ட அவைச்செயலாளர் தங்கவேல் முன்னிலை வகித்தார்.
மாவட்ட செயலாளர் சதீஷ் வரவேற்புரை ஆற்றினார்.
மாவட்டத் தலைவர்கள் ஆசைத்தம்பி, செந்தில்குமார் மற்றும் சுரேஷ் வாழ்த்துரை வழங்கினர்.
இதில் 10.06.2009 முதல் பணியேற்ற முதுகலையா சிரியர்கள் ஊதிய முரண்பாடு களைந்திட வேண்டும்.
2004-2006- ம் ஆண்டில் பணியேற்ற முதுகலையாசிரியர்களுக்கு பணியில் சேர்ந்த நாள் முதல் பணிவரன் முறை செய்திட வேண்டும்.
ஊக்க ஊதியத்திற்குப் பழைய நடைமுறையைப் பின்பற்ற வேண்டும்.
தன்பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தினை மாற்றி பழைய ஓய்வூதியத் திட்டத்தினை நடைமுறை ப்படுத்திட வேண்டும்.
ஊக்க ஊதியம் பெறும் ஆசிரியர்களுக்குப் போடப்படும் முறையற்ற தணிக்கைத் தடையை நீக்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பலர் பேசினர்.
மேலும் அடுத்த கட்டமாக டிசம்பர் 27, 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் சென்னையில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என முடிவெடுக்கப்பட்டது.
இந்த போராட்டத்தில் ஏராளமான சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- 590 ஆசிரியர்களின் சம்பளக் குறைப்புக்கான பரிந்துரைகளும் அனுப்பப்பட்டுள்ளன.
- 49 பேரை இடைநீக்கம் செய்யவும், 17 ஆசிரியர்களை பணி நீக்கம் செய்யவும் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.
பாட்னா:
பீகாரில் கல்வித் தரத்தை மேம்படுத்த மாநில கல்வித்துறை கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக சமீபத்தில் பள்ளிகளுக்கு ஒழுங்காக வராத 21,90,020 மாணவர்களின் பெயர்களை நீக்கியது. பெயர் நீக்கப்பட்டவர்களில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத வேண்டிய 2.66 லட்சம் மாணவர்களும் அடங்குவார்கள். இதனால் ஏற்கனவே பீகார் அரசு விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
இந்த நிலையில், அனுமதியின்றி பணிக்கு வராத 2,081 ஆசிரியர்களின் சம்பளத்தை கல்வித்துறை பிடித்தம் செய்துள்ளது. மேலும் 590 ஆசிரியர்களின் சம்பளக் குறைப்புக்கான பரிந்துரைகளும் அனுப்பப்பட்டுள்ளன. மேலும் 49 பேரை இடைநீக்கம் செய்யவும், 17 ஆசிரியர்களை பணி நீக்கம் செய்யவும் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.
- பல்லாயிரக்கணக்கான பள்ளிகளுக்கு தொடர் தற்காலிக அங்கீகாரம் வழங்குவதற்கு கூட லஞ்ச பணம் கேட்கும் சூழ்நிலையை தமிழக அரசு ஒழிக்க வேண்டும்.
- விண்ணப்பித்து காத்துள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கும் எந்தவித நிபந்தனையும் நிர்பந்தமும் இல்லாமல் உடனடி அங்கீகாரம் வழங்கிட வேண்டும்.
சென்னை:
தமிழ்நாடு தனியார் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் சங்க தலைவர் ஏ.என்.எஸ். பிரசாத் அரசுக்கு கொடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறி இருப்பதாவது:-
தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளை ஒருங்கிணைத்து ஒழுங்குமுறைபடுத்தும் வகையில், தனியார் பள்ளிகளுக்கு தனி இயக்குனரகம் அமைக்கப்பட வேண்டும் தனியார் பள்ளி சங்கங்களின் இந்த நீண்ட நாள் கோரிக்கையை உடனடியாக தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.
பணி பாதுகாப்பு இல்லாமல், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இணையாக உயர்ந்த கல்வி கற்று, ஆனால் மிகப் குறைந்த சம்பளத்தில் தன்னிகரில்லாத கல்வி சேவை ஆற்றி வரும் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட தனியார் பள்ளி ஆசிரியர்களின் நலத்தைப் பேணும் வகையில் நாட்டிற்கு வழிகாட்டி வரும் அவர்களின் வாழ்வு மேம்பட தனியார் பள்ளி ஆசிரியர் நலவாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு மற்றும் மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்கள், பெற்றோர் , ஆசிரியர்களின் நலன் மற்றும் பள்ளிகளின் வளர்ச்சி மற்றும் கல்வித் திறனை மேம்படுத்துதில் அக்கறை காட்டக் கூடிய பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள் அனைத்து பள்ளிகளிலும் அமைய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பள்ளி நிர்வாகிகள் மிகுந்த மனவேதனையோடு தங்களின் நியாயமான கோரிக்கைகளை, பள்ளிக் கல்வித் துறையில் வாங்க வேண்டிய பல்வேறு அரசு அனுமதிகளை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து தான் பெற வேண்டும் என்ற சூழ்நிலையில் இருந்து துன்பப்படுகிறார்கள். தங்கள் நியாயமான கோரிக்கைகளை செயல்படுத்தாத பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளை கண்டித்து அரசு பள்ளி ஆசிரியர் சங்கங்களைப் போல தாங்களும் தெருவில் இறங்கிப் போராடுவது நீதிமன்றங்களில் வழக்கு வழக்கு கொடுத்து தங்கள் உரிமைகளின் நிலைநாட்டுவது என்கிற சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.
தனியார் பள்ளி சங்கங்களின் கோரிக்கைகள், உரிமைகள் மீட்டெடுக்க பள்ளிகளை, பள்ளி நிர்வாகிகளை பாதுகாத்திட தனியார் பள்ளிகளுக்கு தனி இயக்குனரகம் அமைத்து தனியார் பள்ளிகளுக்கு தனி இயக்குனரகம் அமைக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்லாயிரக்கணக்கான பள்ளிகளுக்கு தொடர் தற்காலிக அங்கீகாரம் வழங்குவதற்கு கூட லஞ்ச பணம் கேட்கும் சூழ்நிலையை தமிழக அரசு ஒழிக்க வேண்டும்.
2011-ம் ஆண்டிற்கு முன் கட்டப்பட்ட பழைய பள்ளி கட்டிடங்களுக்கு டி.டி.சி.பி. /சி.எம்.டி.ஏ. கட்டிட அனுமதி வேண்டாம் என்று உயர்நீதிமன்ற உத்தரவு இருந்தும், கல்வித்துறை அதிகாரிகள் போட்ட ஆணை இருந்தும் மீண்டும் மீண்டும் கட்டிட அனுமதி இருந்தால் தான் அங்கீகாரம் இல்லையென்றால் அனுமதி இல்லை என்று அதிகாரிகள் பள்ளி நிர்வாகிகளை மிரட்டி லஞ்சம் கொடுக்கும் பள்ளிகளுக்கு மட்டும் அனுமதி கொடுக்கும் சூழ்நிலையை மாற்றி நீதிமன்ற ஆணைப்படி தமிழக கல்வித்துறையின் உத்தரவுகளின் படி செயல்பட தமிழக அரசு பள்ளி கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.
ஆர்.டி.இ. 25 சதவீதம் மாணவர்கள் சேர்க்கையை குறைப்பது. சென்ற ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு ஆர்.டி.இ கல்வி கட்டணத்தை ரூ 6000 ஆக குறைத்துள்ளதை தமிழகஅரசு மறு பரிசீலனை செய்து நியாயமான கல்வி கட்டணத்தை நிர்ணயம் செய்து, அந்தந்த ஆண்டுக்குரிய கல்விக் கட்டணத்தை பள்ளிகளுக்கு உடனே அனுப்பிட வேண்டும்.
தனியார் பள்ளிகளுக்கான சொத்து வரி மின் கட்டண உயர்வு பள்ளி வாகனங்களின் சாலை வரியை இந்த மாதம் முதல் 100 சதவீதம் உயர்த்தியுள்ளதை ரத்து செய்ய வேண்டும்.
விண்ணப்பித்து காத்துள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கும் எந்தவித நிபந்தனையும் நிர்பந்தமும் இல்லாமல் உடனடி அங்கீகாரம் வழங்கிட வேண்டும். தனியார் பள்ளிகள் மட்டும் பணம் கொடுத்தும் தமிழ்நாடு பாடநூல் கழகத்திலிருந்து புத்தகங்கள் வாங்கும் போதுள்ள புத்தக தட்டுப்பாட்டை உடனடியாக போக்க வேண்டும்.
அரசு மற்றும் தனியார் பள்ளிகளையும் ஆசிரி யர்களையும் பாதுகாப்பதற்காக. மருத்துவர்களுக்கும் மருத்துவமனைகளுக்கும் பாதுகாப்பு சட்டம் உள்ளது போல் பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்களுக்கான பாதுகாப்புச் சட்டத்தை தமிழக அரசு உடனடியாக நிறை வேற்ற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- பயிற்சி வகுப்பினை மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்தார்.
- ஆசிரியர்களுக்கு திட்டம் குறித்து விழிப்புணர்வுகள் வழங்கப்பட்டது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பள்ளி தலைமை மற்றும் வழிகாட்டி ஆசிரியர்களுக்கான ஒருநாள் பயிற்சி வகுப்பினை மாவட்ட கலெக்டர் மகாபாரதி குத்துவிளக்கு ஏற்றிவைத்து தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் பேசியதாவது:-
தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனமானது, தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை மற்றும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (யுனிசெப்) நிறுவனத்துடன் இணைந்து பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத்திட்டம் என்கிற திட்டத்தினை கடந்த 2022 - 2023 ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது.
தமிழக முதல்வர், செப்டம்பர் 16-2022 ஆம் ஆண்டு தொடங்கி வைக்கப்பட்ட பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத் திட்டமானது, பள்ளிக்கல்வி துறையின் முழு ஒத்துழை ப்புடன் மிகச் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்ப ள்ளிகளில் பயிலும் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு (2022-23) இத்திட்டமானது தமிழ்நாட்டில் 38 மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் 4356 மேல்நிலைப் பள்ளிகளில் சிறப்பாக செயல்படுத்த ப்பட்டது.
சுமார் 4.78 லட்சம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு திட்டம் குறித்து விழிப்புணர்வுகள் வழங்கப்பட்டது.
இதன் அடிப்படையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வழிகாட்டி ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது.
இந்த செயல்பாடுகளினால் மாணவர்களிடையே தலைமைத்துவம் மற்றும் பிரச்சனைகளைகையாளுதல், பிரச்சனைகளுக்கு புத்தாக தீர்வு காணுதல் உட்பட 21-ம் நூற்றாண்டு திறன்கள் உருவாக்கப்பட்டுள்ளது என மாவட்ட கலெக்டர் மகாபாரதி தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், முதன்மை கல்வி அலுவலர் அம்பிகாபதி, மாவட்ட கல்வி அலுவலர் ஞானசங்கர், பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ராஜ்கமல் மற்றும் பயிற்சியாளர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக பள்ளி முதல்வர் ராமலிங்கம் வரவேற்றார்.
- கல்விச் செல்வத்தை பெற்று பகுத்தறிவுடன் இன்புற்று வாழ வேண்டும்.
- ஒரு நாட்டின் நம்பிக்கையாக மாணவர்கள் கருதப்படுகிறார்கள்.
நாம் பிறக்கையில் எதையும் கொண்டு வருவது இல்லை. இறக்கையில் கொண்டு போவதும் இல்லை. வாழும் வாழ்க்கையின் இடைப்பட்ட காலத்தில் கல்வி செல்வத்தை பெற்று பகுத்தறிவுடன் இன்புற்று வாழ வேண்டும். மாணவர்களை தன்பிள்ளை என எண்ணி எப்போதும் காத்திருக்கும் ஆசிரியர் உறவே முக்கியமான, முதன்மையான உறவு. ஒவ்வொரு ஆசிரியரின் குறிக்கோள், மாணவர்கள் நல்லறிவுடனும் சமுதாயத்தில் வளமுடனும் சிறந்து விளங்க வேண்டும் என்பது தான். மாணவர்களின் வெற்றியே ஆசிரியரின் வெற்றி. இவர்களை விடவும் குழந்தைகள் மீது அக்கறை கொள்பவர் வேறு எவரும் இருக்க முடியாது. கடவுள் தன்னால் எல்லா இடங்களிலும் இருந்து கவனிக்க முடியாது என்பதினால் தான் ஆசிரியரை படைத்தார் என்று கூட கூறலாம்.
மாதா, பிதா, குரு, தெய்வம் என்பர். அதில் `ஆசிரியர் பணியே அறப்பணி அதற்கே உன்னை அர்ப்பணி' என்பன மனித வரலாற்றில் வழிவழி வந்த மணிமொழியாக போற்றி பாராட்டினர். குருவாகிய ஆசிரியர் தாயாகவும், தந்தையாகவும் விளங்கி அறிவையும், ஆற்றலையும் மாணவர்களுக்கு அளித்து தெய்வத்தை உணரவைப்பார்கள் ஆசிரிய பெருமக்கள்.
இன்றைய காலக்கட்டத்தில் நம் நாட்டில் மட்டுமல்ல உலகெங்கிலும் முன் எப்போதையும் விட இப்போது மாணவர்களை பற்றி அதிகம் பேசப்படுகிறது. ஒரு நாட்டின் நம்பிக்கையாக மாணவர்கள் கருதப்படுகிறார்கள். அதனால் ஆசிரியர்களும், மாணவர்களை எதிர்பார்ப்பு என்னும் குறுகிய வட்டத்திற்குள் விலக்கி வைக்காமல் அவர்களின் திறமைகளை தனித்தன்மைகளை காட்ட வழிவகுக்கின்றனர். இதற்கென கட்டுப்பாடுகளை தளர்த்தி, சுதந்திர சுயசிந்தனையால் மாணவர்கள் வளர அவர்களுக்கு பாதையமைத்து கொடுக்கின்றனர்.
மாணவர்கள் சுதந்திரமாக காற்றாடிபோல் வான் உயரப் பறந்து வெற்றி சாதனைப் படைக்கின்றனர். கட்டுப்பாட்டிற்காக ஆசிரியர்களின் கையில் நூல் இருக்குமே தவிர அதுவே அவர்கள் விண்ணோட்டத்திற்கு தடையாக அமைந்து விடாது.
மாணவர்கள் தங்கள் வாழ்க்கையிலும், கல்வியிலும், உணவு-உறக்கம் மறந்து உழைத்த உழைப்பையும், சந்தித்த சோதனைகளையும், அடைந்த இழப்புகளையும் பெற்ற வேதனைகளையும் பார்த்தால் அவனால் சாதனையாளனாக வர வாய்ப்பில்லாமல் போகலாம். தடைக்கல்லே உனக்கோர் படிக்கல் என்ற ஊக்கத்தையும், உணர்வுகளையும் ஆசிரியர் ஊட்டுவதினாலேயே மாணவர்கள் சாதனையாளர்களாக மாறுகின்றனர். ஒவ்வொரு சாதனைக்கு பின்னாலும் ஆசிரியர்களின் பங்கு ஒருவிதத்தில் ஒளிந்திருக்கிறது.
உழைத்து வளர்த்த திறமையை, தகுதியை தக்க தருணத்தில் வெளிக்கொணர்ந்து வாய்ப்புகள் அளித்து வழிகாட்டி மேம்படுத்துபவர் ஆசிரியர். மாணவர்களுக்கு குண நலம், தன்னம்பிக்கை, அடிப்படை கடமைகள், சுயகட்டுப்பாடு, பொது நலம், தலைமைத்தகுதி, நல்லொழுக்கம், நாட்டுப்பற்று போன்றவற்றை கற்பிக்க ஒரு உந்துதலாக ஆசிரியர்கள் செயல்படுகின்றனர். ஒவ்வொரு மாணவனின் பலத்தையும், பலவீனத்தையும் கண்டறிந்து அடையாளப்படுத்துபவர்கள் ஆசிரியர்கள். நாட்டின் கலாசாரம், பண்பாடு, பழக்கவழக்கம், மரபு, நாகரிகம் போன்ற அனைத்தும் இக்காலக்கட்டத்தில் குழித்தோண்டி புதைக்கக்கூடிய அவலநிலைக்கு ஆளாகி இருக்கிறோம். இன்று, குழந்தைகளுக்கு நல்லது, கெட்டது எடுத்து சொல்ல கூட்டுக்குடும்பங்கள் காணாமல் போய்விட்டன. தாய் ஊட்டாத பாலை பசு ஊட்டும் என்பதுப்போல, இல்லம் புகட்டாத இயல்பை ஆசிரியர் புகட்டுவார்.
இன்றைய பெருவாரியான மாணவர்கள் பலவீனமாக இருப்பதற்கு தைரியம் இல்லாமையே காரணம். நன்கு படித்து நன்மதிப்பெண் பெற்றிருந்தும் வாழ்க்கை சிக்கலுக்கு தீர்வுகாண முடியாமல் திணறுகின்றனர். இப்படிப்பட்டவர்களுக்கு வாழ்க்கை திறமைக்குரிய தைரியத்தையும், தன்னம்பிக்கையும் ஊட்டும் ஆசனாக ஆசிரிய பெருமக்கள் விளங்குகின்றனர்.
ஆசிரியர் பணி என்பது தொழில் அல்ல, தொண்டு. மாணவர்களின் உடல் வளர்ச்சியோடு உள்ள வளர்ச்சியையும் ஆராய கூடியவர்கள் மற்ற துறையினர் செய்யும் தவறுகள் அந்தத் துறையோடு நின்றுவிடும். ஆனால் கல்வித்துறையில் ஏற்படும் தவறுகள் எதிர்காலத்தை சீரழித்து விடும். சேவை என கருதப்படும் பணிகள் பல இருந்தாலும் அவை அனைத்திற்கும் முதன்மையானதாகவும், சிறப்பித்து போற்றப்படுவதுமான ஆசிரிய பணியே மிகச்சிறந்த பணி.
- பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.
- பரனூர் சுங்கச்சாவடி பகுதி நள்ளிரவில் பரபரப்பாக காணப்பட்டது.
செங்கல்பட்டு:
சமவேலைக்கு சம ஊதி யம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்களும், முழுநேர ஆசிரியர் பணி மற்றும் பணி நிரந்தரம் கோரி பகுதி நேர சிறப்பாசிரியர்களும், வேலை வாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் பணிநியமனம் செய்யக்கோரி டெட் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களும் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மாநில கல்வி இயக்குனர் அலுவலக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதில் தமிழகம் முழு வதும் இருந்து ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
இந்த நிலையில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 1600 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். திருமணமண்டபம் மற்றும் சமுதாயநலக்கூடங்களில் தங்க வைக்கப்பட்ட அவர்கள் பின்னர் இரவு விடுவிக்கப்பட்டனர். சொந்த ஊர்களுக்கு செல்ல அவர்கள் அனை வரும் மொத்தமாக ஒரே இடத்திற்கு சென்றால் மீண்டும் போராட்டத்தில ஈடுபடலாம் என்பதால் போலீசார் முன்ஏற்பாடாக ஆசிரியர்கள் அனைவரையும் தனித்தனியாக பிரித்து பஸ்களில் அனுப்பி வைத்தனர்.
இதில் தனியார் பஸ்களில் சுமார் 300-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாடிக்கு நேற்று நள்ளிரவு அழைத்து வரப்பட்டனர். அவர்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.
போலீஸ்சூப்பிரண்டு சாய்பிரனீத் மேற்பார்வை யில், டி.எஸ்.பி பரத் மற்றும் போலீசார் அங்கிருந்து ஆசிரி யர்களை தனித் தனியாக அவர்களது சொந்த ஊர்களுக்கு அனு ப்பி வைத்தனர். இதனால் பரனூர் சுங்கச்சாவடி பகுதி நள்ளிரவில் பரபரப்பாக காணப்பட்டது.
- ஆசிரியர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
- இதையடுத்து கல்வித்துறை அதிகாரிகள் அங்கு விரைந்துள்ளனர்.
விருதுநகர்
தமிழகம் முழுவதும் பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி முகாம் இன்று நடைபெறும் என தமிழக பள்ளி கல்வித் துறை அறிவித்தி ருந்தது. அதன்படி தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் எண்ணும் எழுத்தும் பயிற்சி இன்று நடந்தது.
இந்த நிலையில் விருது நகர் மாவட்ட பள்ளி ஆசிரி யர்களுக்கு விருது நகர்-அருப்புக்கோட்டை சாலையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டி ருந்தது. இன்று காலை பயிற்சி நடைபெறும் கல்லூரிக்கு வந்த
200-க்கும் மேற்பட்ட ஆசிரி யர்கள் அங்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லாமல் இருந்ததால் அதிருப்தியடைந்தனர். அவர்கள் பயிற்சியை புறக்கணித்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்ட னர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஆசிரியர்களுடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். போதிய அடிப்படை வசதிகள், போக்குவரத்து வசதிகள் இல்லாத கல்லூரியில் பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த மையத்திற்கு வந்து செல்வது மற்றும் பயிற்சியில் பங்கேற்பது சிரமமாக உள்ளதாகவும், இதனால் பயிற்சியை வேறு மையத்திற்கு மாற்ற வேண்டும் எனவும் அப்போது அவர்கள் கூறினர்.
போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆசிரியர்களிடம் தெரிவித்தனர். ஆனால் அங்கிருந்த கலைந்து செல்ல மறுத்த ஆசிரியர்கள் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அந்த சாலையில் போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டுள் ளது. இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு போலீசார் தகவல் கொடுத்தனர். இதையடுத்து கல்வித்துறை அதிகாரிகள் அங்கு விரைந்துள்ளனர்.
- தமிழகம் முழுவதும் இருந்து 500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இதில் கலந்து கொண்டனர்.
- பணி நிரந்தரம் அறிவிப்பு வெளியிடும் வரை போராட்டம் தொடரும்.
சென்னை:
தமிழக பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சங்கம் சார்பில் சென்னை கல்லூரி சாலையில் உள்ள டி.பி.ஐ. வளாகத்தில் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது.
மாநில தலைவர் சேசுராஜா, மாநில செயலாளர் ராஜா தேவகாந்த், மாநில பொருளாளர் லோகநாதன் ஆகியோர் முன்னிலையில் தொடர் உண்ணாவிரதம் நடந்தது.
தமிழகம் முழுவதும் இருந்து 500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இதில் கலந்து கொண்டனர்.
உடற்கல்வி, தையல், இசை, ஓவியம், தோட்டக்கலை, உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் 12 ஆண்டுகளாக 16,459 பகுதி நேர ஆசிரியர்கள் பணியாற்றி வருகிறோம்.
பணி நிரந்தரம் செய்யக் கோரி பல்வேறு கட்டப் போராட்டங்கள் நடத்தப்பட்டன. கடந்த காலங்களில் முதல்வர், கல்வி அமைச்சர் கவனத்தை பெற கவன ஈர்ப்பு, காத்திருப்பு போராட்டம் நடைபெற்றும் எந்த பலனும் இல்லை. 12 ஆண்டுகளாக வறுமையின் பிடியில் சிக்கி தவிக்கும் எங்களின் ஒற்றை கோரிக்கையான பணி நிரந்தரம் செய்யக்கோரி தொடர் உண்ணாவிரதம் இருக்கிறோம். பணி நிரந்தரம் அறிவிப்பு வெளியிடும் வரை போராட்டம் தொடரும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- வட்டார வாரியாக 152 தமிழ் ஆசிரியர்களுக்கும் பொறுப்பு தமிழ் ஆசிரியர்கள் 11 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
- அனைத்து மாணவர்களையும் தமிழில் எழுத மற்றும் படிக்க வைக்க தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டது.
தென்காசி:
தென்காசி மாவட்டம், குத்துக்கல்வலசை செயின் மேரீஸ் உயர்நிலைப் பள்ளியில் பள்ளி கல்வித்துறை சார்பில் தமிழ் ஆசிரியர்களுக்கான ஒரு நாள் சிறப்பு பயிற்சி மற்றும் பயிற்சி கட்டகம் வெயிடுதல் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று வரக்கூடிய மாணவ- மாணவிகளில் தமிழ் எழுத, வாசிக்க தெரியாத மாணவர்களுக்காக மாவட்ட கலெக்டர் தலைமையிலும், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் முன்னிலையிலும் ஒவ்வொரு பள்ளியிலிருந்து ஒருங்கிணைப்பு தமிழ் ஆசிரியர்கள் மொத்தம் 152 பேர் வரவழைக்கப்பட்டு ஒவ்வொரு வட்டாரம் வாரியாக இந்த 152 தமிழ் ஆசிரியர்களுக்கும் பொறுப்பு தமிழ் ஆசிரியர்கள் 11 பேர் நியமிக்கப்பட்டு இவர்களின் செயல்பாடுகளை கவனிக்க 29 தலைமை ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நிகழ்ச்சியில் மெல்ல கற்கும் மாணவர்களுக்கு 55 பக்கங்கள் கொண்ட புத்தகத்தை மாவட்ட கலெக்டர் வெளியிட்டார்.தொடர்ந்து மாவட்டம் முழுமையும் ஒரே மாதிரியாக இந்த மாணவர்களுக்கு நடத்தப்பட்டு மாதம் இருமுறை இந்த மாணவர்களுக்கு தேர்வும் நடத்தி அனைத்து மாணவர்களையும் தமிழில் எழுத மற்றும் படிக்க வைக்க தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டது. இவை அனைத்தையும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் அனைவரும் ஒவ்வொரு பள்ளியாக சென்று ஆய்வு செய்து மாதம் 2 முறை அறிக்கைகள் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்ப ட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் முத்தையா அலுவலர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.