என் மலர்
நீங்கள் தேடியது "ஆசிரியர்கள்"
- மாணவர்களின் குடும்ப சூழலை கருத்தில்கொண்டு ஆசிரியர்கள் செயல்பட வேண்டும்.
- மாணவர்களின் 2-வது பெற்றோர் ஆசிரியர்கள்.
சென்னை நேரு விளையாட்டரங்கில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெறும் முப்பெரும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று 243 புதிய பள்ளிக்கட்டடங்களுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். ரூ.94 கோடியில் கட்டப்பட்டுள்ள 59 பள்ளிக்கட்டங்களை அவர் திறந்து வைத்தார். ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வாக 2,715 ஆசிரியர்களுக்கான நுழைவுநிலை பயிற்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து உரையாற்றிய அவர் கூறியதாவது:
* மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஆசிரியர் பணிக்கு வந்துள்ளவர்களுக்கு வாழ்த்துகள்.
* மாணவர்களுக்கு ஆசிரியர் பாடம் எடுப்பார்கள். ஆனால் ஆசிரியர்களுக்கே பாடமெடுத்திருக்கிறார் அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி.
* ஆசிரியர் என்பவர் பாடங்களை மட்டும் கற்றுக்கொடுப்பவர் அல்ல. ஆசிரியர் முன்னால் அமர்ந்திருப்பவர்கள் எதிர்காலத்தை தீர்மானிப்பவர்கள்.
* மாணவர்களின் சிந்தனையை தூண்டி அறிவை மேம்படுத்தும் பொறுப்பு ஆசிரியர்களிடம் உள்ளது.
* மாணவர்களுக்கு சரியானதை ஆசிரியர்கள் தான் வழிகாட்ட வேண்டும்.
* சமூகத்திற்கே ஒளி ஏற்றி வைக்க வேண்டியவர்கள் ஆசிரியர்கள்.
* பாட புத்தகத்தை கடந்து சமூக ஒழுக்கத்தை மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கற்றுக்கொடுக்க வேண்டும்.
* மாணவர்களிடம் ஆசிரியர்கள் நண்பர்களாக நடந்துகொள்ள வேண்டும்.
* மாணவர்களுக்கு உடல்நலமும், மனநலமும் முக்கியம்.
* மாணவர்களின் குடும்ப சூழலை கருத்தில்கொண்டு ஆசிரியர்கள் செயல்பட வேண்டும்.
* மாணவர்களின் 2-வது பெற்றோர் ஆசிரியர்கள்.
* பெற்றோர்களை விட ஆசிரியர்கள் மத்தியில்தான் மாணவர்கள் அதிக நேரத்தை செலவிடுகின்றனர்.
* தமிழ்நாட்டின் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் நமது பெருமையின் அடையாளமாக திகழ்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பள்ளிகளில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்துவது முற்றிலும் தடை செய்யப்பட்டு இருக்கிறது.
- மாணவர்களிடையே ஒற்றுமையை வளர்க்கும் ‘மகிழ் முற்றம்' குழுத்திட்டத்தை பள்ளிகளில் முன்னுரிமை அளித்து செயல்படுத்த வேண்டும்.
சென்னை:
பள்ளிகளில் அமைதியான சூழலை ஏற்படுத்தவும், மாணவர்கள் ஒழுக்கத்தில் சிறந்து விளங்கவும் மேற்கொள்ளப்பட வேண்டிய சில வழிமுறைகள் குறித்து, பள்ளிகளுக்கு, கல்வித்துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு இருக்கிறது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:-
சாதி அல்லது வகுப்புவாத எண்ணங்களை மாணவர்களிடையே ஏற்படுத்த முயற்சிப்பதாக ஆசிரியர் மீது பெறப்படும் புகார்கள் குறித்து முதன்மைக்கல்வி அலுவலர் உடனடியாக விசாரணை மேற்கொள்வதோடு, சம்பந்தப்பட்ட ஆசிரியரை வேறு பள்ளிக்கு மாற்ற வேண்டும்.
மாணவர்களுக்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் வழங்கக்கூடிய கல்வி உதவித் தொகை விவரங்கள் ரகசியமாக பராமரிக்கப்படுவது மிக மிக அவசியம். இந்த விவரங்களை பொதுவெளியில் தெரியும் வகையில் காட்சிப்படுத்தக்கூடாது. மாணவர்களிடையே ஒற்றுமையை வளர்க்கும் 'மகிழ் முற்றம்' குழுத்திட்டத்தை பள்ளிகளில் முன்னுரிமை அளித்து செயல்படுத்த வேண்டும்.
பள்ளிகளில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்துவது முற்றிலும் தடை செய்யப்பட்டு இருக்கிறது. இருப்பினும் பள்ளிகளில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்துவது தெரியவந்தால், அதை தலைமை ஆசிரியரோ, ஆசிரியரோ பறிமுதல் செய்து பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும். பள்ளிகளில் திருக்குறள் அறநெறி வகுப்புகளை தவறாமல் நடத்த வேண்டும். 'மாணவர் மனசு' புகார் பெட்டியை வாரம் ஒரு முறை பள்ளி மேலாண்மைக்குழு தலைவர், தலைமை ஆசிரியர் முன்னிலையில் திறந்து, அதில் உள்ள தபால்களின் எண்ணிக்கையை பதிவு செய்து, அதுகுறித்து விசாரணை செய்து மாவட்டக்கல்வி அலுவலர், முதன்மைக் கல்வி அலுவலர்களிடம் சமர்ப்பிக்கவேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ரூ.15 கோடி மதிப்புள்ள 5 கிலோ மெஃபெட்ரோன் தயாரித்துள்ளனர்.
- கடுமையான மன மற்றும் உடல் ரீதியான பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
ராஜஸ்தானில் போதைப்பொருள் தயாரித்ததற்காக இரண்டு தனியார் பள்ளி அறிவியல் ஆசிரியர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த வழக்கு அமெரிக்க தொலைக்காட்சி தொடரான Breaking Bad பாணியில் அமைந்துள்ளது.
அவர்கள் சுமார் ரூ.15 கோடி மதிப்புள்ள 5 கிலோ மெஃபெட்ரோன் தயாரித்துள்ளனர். இதில் 4.22 கிலோவை மருந்துகள் விற்பனை செய்துள்ளனர். இதன் பயன்பாடு கடுமையான மன மற்றும் உடல் ரீதியான பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
கங்காநகரில் உள்ள டிரீம் ஹோம்ஸ் அடுக்குமாடி குடியிருப்பில் இருவரும் போதைப்பொருள் தயாரித்து வந்தனர்.
விசாரணையில், இருவரும் சுமார் இரண்டரை மாதங்களாக இங்கு போதைப்பொருள் தயாரித்து வந்தது தெரியவந்தது.
டெல்லியில் இருந்து போதைப்பொருள் தயாரிக்க ரசாயனங்கள் மற்றும் பிற உபகரணங்களை அவர்கள் கொண்டு வந்தனர். வேலைக்கு விடுமுறையில் இருந்தபோது அவர்கள் போதைப்பொருள் தயாரித்து வந்தனர்.
ஜூலை 8 ஆம் தேதி காலை போதைபொருள் தடுப்புப் பிரிவினர் (NCB) நடத்திய சோதனையின் போது அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
- மாணவர்கள் சென்று வர இலவச வாகன வசதி மற்றும் அரசின் அனைத்து சலுகைகளும் வழங்கப்படுகிறது.
- ஆசிரியர்கள் வீடு, வீடாக சென்று மாணவர்கள் சேர்க்கை குறித்து பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
ஊட்டி:
தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான பெற்றோர்கள் ஆங்கில புலமைக்காக தங்களது குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்த்து படிக்க வைக்க விரும்புகிறார்கள்.
இதனால் பெரும்பாலான அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை மிகவும் குறைந்து விட்டது.
குறிப்பாக கிராமப்புறங்கள் மற்றும் குக்கிராமங்களில் உள்ள பெரும்பாலான அரசு பள்ளிகள் மூடப்பட்டு விட்டன.
மாணவர்கள் வருகை குறைந்து வரும் நிலையில், பள்ளிகளை மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியை சேர்ந்த ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் தங்கள் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்கும் விதமாக அரசு பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு ரூ.5 ஆயிரம் வழங்கி வருகின்றனர்.
இதுபற்றிய விவரம் வருமாறு:- நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே கீழுர் என்ற பகுதி உள்ளது. இங்கு கோக்கலாடா அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
மாணவர்கள் சேர்க்கை குறைந்ததால் இந்த பள்ளி சில ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டது.
இதையடுத்து ஊர் பொது மக்கள் மற்றும் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்களின் முயற்சியால் பள்ளி 3 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டது.
இங்கு சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 42 மாணவர்கள் படித்து வருகிறார்கள்.
இந்த பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை தொடர்ந்து அதிகரிக்க ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார்கள்.
மாணவர்களின் கல்வி நலனில் மட்டும் அக்கறை செலுத்தினால் போதாது என நினைத்த ஆசிரியர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் தற்போது பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு அவர்களது வங்கி கணக்கில் ரூ.5 ஆயிரம் வரை செலுத்துவதாக உறுதி அளித்து துண்டு பிரசுரங்களை வழங்கி, மாணவர்களை அரசு பள்ளியில் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
அதன்படி பள்ளியில் 1-ம் வகுப்பு சேர்ந்தால் பள்ளி நிர்வாகம் சார்பில் அந்த மாணவரின் வங்கி கணக்கில் ரூ.5 ஆயிரம் டெபாசிட் செய்யப்பட உள்ளது.
மேலும் 5-ம் வகுப்பு வரை எந்த வகுப்பில் சேர்ந்தாலும், ரூ.5 ஆயிரம் வங்கி கணக்கில் செலுத்தப்பட உள்ளது.
6-ம் வகுப்பிற்கு ரூ.5 ஆயிரம், 7-ம் வகுப்பிற்கு ரூ.4 ஆயிரம், 8-ம் வகுப்பு சேர்ந்தால் ரூ.3 ஆயிரமும், 9-ம் வகுப்பில் சேர்வோருக்கு ரூ.2 ஆயிரமும் டெபாசிட் செய்யப்பட உள்ளது.
இதே பள்ளியில் பயிலும் இந்த மாணவர்கள் 10-ம் வகுப்பு முடித்து செல்லும் போது அந்த டெபாசிட் முதிர்வு தொகையை பெற்றுக் கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர 1 செட் சீருடை, டிரக் சூட்-1 செட், ஸ்கூல் பேக், காலணி, நோட்டு புத்தகங்கள், மாணவர்கள் சென்று வர இலவச வாகன வசதி மற்றும் அரசின் அனைத்து சலுகைகளும் வழங்கப்படுகிறது.
தற்போது பள்ளி திறக்கப்பட்ட நிலையில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க இந்த பள்ளிகளை சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர் செந்தில்குமார், ஆசிரியைகள் மோனிஷா, வள்ளி உள்ளிட்ட ஆசிரியர்கள் வீடு, வீடாக சென்று மாணவர்கள் சேர்க்கை குறித்து பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வரக்கூடிய சூழ்நிலையில் தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக இதுபோன்று ஆசிரியர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள், பள்ளியில் சேரும் மாணவர்களின் வங்கி கணக்கில் பணத்தை டெபாசிட் செய்து, மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க எடுத்து வரும் முயற்சிக்கு பொதுமக்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளது.
- நீக்கப்பட்ட ஆசிரியர்கள் டிசம்பர் 31ஆம் தேதி வரை தொடரலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவு.
- தகுதியான எந்தவொரு ஆசிரியரும் நியாயமற்ற முறையில் தண்டிக்கப்படமாட்டார்கள் என மம்தா ஏற்கனவே கூறியிருந்தார்.
மேற்கு வங்கத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 9 முதல் 12ஆம் வகுப்புகளுக்கான ஆசிரியா்கள், அலுவலா் பணி நியமனங்களில் முறைகேடு நடைபெற்றதாக வழக்குகள் தொடரப்பட்டன.
இதை விசாரித்த கொல்கத்தா உயர்நீதிமன்றம் முறைகேட்டை உறுதி செய்து 25,753 ஆசிரியர், அலுவலர் பணி நியமனங்களை ரத்து செய்து கடந்த ஆண்டு ஏப்ரலில் தீர்ப்பு அளித்தது.
மேற்கு வங்க அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்திய இந்த தீா்ப்புக்கு எதிராக மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. கொல்கத்தா உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்து 25,753 ஆசிரியர்கள் நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட்டது. நியமனத்தில் குறைபாடு மற்றும் களங்கம் இருப்பதாக நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். புதிய தேர்வு செயல்முறையை தொடர்ந்து 3 மாதங்களுக்குள் முடிக்கவும் மேற்கு வங்காள அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
உடனடியாக பணியில் இருந்து நீக்கப்படுவதாலும், ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான நடைமுறைக்கு அதிக காலம் ஆவதாலும் மாணவ- மாணவிகளின் கல்வி பாதிக்கப்படும். இதனால் இந்த வருடம் இறுதி வரை தொடர்ந்து பணியில் நீடிக்க அனுமதிக்க வேண்டும் என மேற்கு வங்க அரசு உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தது.
இந்த முறையீடு மனு இன்று தலைமை நீதிபதி சஞ்சய் கன்னா, சஞ்சய் குமார் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீக்கப்பட்ட ஆசிரியர்கள் டிசம்பர் 31ஆம் தேதி வரை பணியாற்ற அனுமதி அளித்து உத்தரவிட்டனர்.
மேலும், புதிய ஆசிரியர் தேர்வுக்கான நடைமுறையை மே 31ஆம் தேதிக்குள் தொடங்கி, டிசம்பர் 31ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை திரிணாமுல் காங்கிரஸ் வரவேற்றுள்ளது.
இது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் "தொடக்கத்தில் இருந்தே மம்தா பானர்ஜி, தகுதியான எந்தவொரு ஆசிரியரும் நியாயமற்ற முறையில் தண்டிக்கப்படமாட்டார்கள் எனக் கூறி வந்தார்.
இன்று, உச்சநீதிமன்றம் அவர்களை டிசம்பர் 31ஆம் தேதி வரை பணியாற்ற அனுமதித்துள்ளது. இந்த தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம். மக்களின் எதிர்காலத்தை சீர்குலைப்பதற்கான பாஜக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் அரசியல் சதிகளை நாங்கள் ஒருபோதும் அனுமிக்கமாட்டோம்" எனத் தெரிவித்துள்ளார்.
- கொல்கத்தா ஐகோர்ட் வழங்கிய தீர்ப்பை உறுதிசெய்து 25,753 ஆசிரியர்கள் நியமனத்தை ரத்துசெய்தது.
- நியமனத்தில் குறைபாடு மற்றும் களங்கம் இருப்பதாக நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
புதுடெல்லி:
மேற்கு வங்காளத்தில் கடந்த 2016-ம் ஆண்டு அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்புகளுக்கான ஆசிரியா்கள், அலுவலா் பணி நியமனங்களில் முறைகேடு நடைபெற்றதாக வழக்குகள் தொடரப்பட்டன.இதை விசாரித்த கொல்கத்தா ஐகோர்ட்டு முறைகேட்டை உறுதி செய்து 25,753 ஆசிரியா், அலுவலா் பணி நியமனங்களை ரத்து செய்து கடந்த ஆண்டு ஏப்ரலில் தீர்ப்பு அளித்தது. அதில் சட்டவிரோத பணி நியமனத்திற்கு உதவிய மேற்கு வங்காள அரசு அதிகாரிகள் யாா் என்பது குறித்து சி.பி.ஐ. விசாரிக்க இருப்பதாக ஐகோர்ட்டு தெரிவித்து இருந்தது.
மேற்கு வங்காள அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற் படுத்திய இந்த தீா்ப்புக்கு எதிராக மாநில அரசு சுப்ரீம்கோர்ட்டில் மேல் முறையீடு செய்தது. கொல்கத்தா ஐகோர்ட் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்து 25,753 ஆசிரியர்கள் நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட்டது. நியமனத்தில் குறைபாடு மற்றும் களங்கம் இருப்பதாக நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
புதிய தேர்வு செயல்முறையை தொடர்ந்து 3 மாதங்களுக்குள் முடிக்கவும் மேற்கு வங்காள அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
இந்நிலையில்,காங்கிரஸ் எம்.பி.யும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி, ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மேற்கு வங்காளத்தில் ஆசிரியர் ஆட்சேர்ப்பு செயல்முறையை நீதித்துறை ரத்து செய்ததைத் தொடர்ந்து வேலை இழந்த ஆயிரக்கணக்கான தகுதிவாய்ந்த பள்ளி ஆசிரியர்கள் விஷயத்தில் கருணையுடன் தலையிடக் கோரி, இந்திய ஜனாதிபதி திருமதி திரௌபதி முர்மு அவர்களுக்கு நான் கடிதம் எழுதியுள்ளேன்.
நியாயமான வழிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்கள் தொடர்ந்து பணிபுரிய அனுமதிக்கப்படுவதை உறுதிசெய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.
மேலும், ஆட்சேர்ப்பின் போது செய்யப்படும் எந்தவொரு குற்றமும் கண்டிக்கப்பட வேண்டும். குற்றவாளிகள் சட்டத்தின்முன் நிறுத்தப்பட வேண்டும். இருப்பினும், நியாயமான வழிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களை கறைபடிந்த ஆசிரியர்களுக்கு இணையாக நடத்துவது கடுமையான அநீதியாகும் எனவும் தெரிவித்துள்ளார்.
- பள்ளிகளில் திரைப்பட படங்கள் ஒளிபரப்புவது, சாதி ரீதியிலான சின்னங்களை வைத்துக் கொள்வது போன்றவற்றை கட்டாயம் தவிர்க்க வேண்டும் எனவும் புகார் மனு அலுவலகத்துக்கு வந்தது.
- பள்ளி ஆண்டு விழாவில் இதுபோன்ற புகார் தவிர்க்கப்பட வேண்டும்.
சென்னை:
பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருக்கிறது.
அதில், 'கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே சோப்பனூர் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் திரைப்பட பாடலுக்கு 5 மாணவர்கள் நடனம் ஆடியும், ஒரு மாணவர் வீரப்பன் படம் பொறிக்கப்பட்ட டி-ஷர்ட்டை கையில் பிடித்து காட்டியதோடு, 2 மாணவர்கள் கட்சித் துண்டுகளை அணிந்து நடனம் ஆடியுள்ளதாகவும், அரசு பள்ளிகளில் இத்தகைய திரைப்பட படங்கள் ஒளிபரப்புவது, சாதி ரீதியிலான சின்னங்களை வைத்துக் கொள்வது போன்றவற்றை கட்டாயம் தவிர்க்க வேண்டும் எனவும் புகார் மனு அலுவலகத்துக்கு வந்தது.
எனவே பள்ளி ஆண்டு விழாவில் இதுபோன்ற புகார் தவிர்க்கப்பட வேண்டும். அப்படி நடந்தால், தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மீது தமிழ்நாடு குடிமைப்பணிகள் விதியின்கீழ் நடவடிக்கை மேற்கொள்ள நேரிடும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஒரு அறையில் சில மாணவர்கள் தேர்வில் காப்பியடித்து எழுத முயன்றுள்ளனர்.
- தேர்வில் காப்பியடிக்க அனுமதிக்காத ஆசிரியர்கள் மீது அந்த மாணவர்கள் ஆத்திரமடைந்துள்ளனர்.
திருவனந்தபுரம்:
தேர்வில் காப்பியடிக்க அனுமதிக்காத ஆசிரியர்களின் வாகனத்தின் மீது மாணவர்கள் சிலர் பட்டாசு வீசியிருக்கின்றனர். கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள அந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
கேரள மாநிலம் மலப்புரம் சேந்தப்புராயா பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 மற்றும் பிளஸ்-1 தேர்வு நடந்திருக்கிறது. தேர்வை கண்காணிக்கும் பணியில் ஈடுபட வேறு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் வந்துள்ளனர். இந்தநிலையில் ஒரு அறையில் சில மாணவர்கள் தேர்வில் காப்பியடித்து எழுத முயன்றுள்ளனர்.
அதனை அந்த அறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த தீபுகுமார் மற்றும் உன்னி கிருஷ்ணன் ஆகியோர் தடுத்துள்ளனர். ஆனால் எதிர்காலம் கருதி காப்பியடிக்க முயன்ற மாணவர்களை பற்றி அந்த ஆசிரியர்கள் புகார் எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால் தேர்வில் காப்பியடிக்க அனுமதிக்காத ஆசிரியர்கள் மீது அந்த மாணவர்கள் ஆத்திரமடைந்துள்ளனர்.
தேர்வு எழுதி விட்டு வகுப்பறையை விட்டு வெளியே வந்த அவர்கள், தேர்வில் காப்பியடிப்பதை தடுத்த ஆசிரியர்களின் வாகனங்கள் மீது பட்டாசுகளை வீசினர். ஆசிரியர்களின் வாகனங்களின் மீது விழுந்து பட்டாசுகள் வெடித்து சிதறின. இதனால் அந்த பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டது.
தேர்வில் காப்பியடிக்க அனுமதிக்காததால் தங்களின் வாகனங்களின் மீது பட்டாசு வீசப்பட்டிருப்பதாக அந்த ஆசிரியர்கள் பள்ளியின் முதல்வரிடம் தெரிவித்தனர். அவர் அதுபற்றி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆசிரியர்களின் வாகனங்களின் மீது பட்டாசு வீசியது யார்? என்பதை கண்டு பிடிக்க அங்குள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ள வீடியோ காட்சிகளை போலீசார் ஆய்வு செய்கின்றனர்.
- 12 ஆம் வகுப்பு வணிக நிர்வாகத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக ராஜஸ்தான் அரசு அறிவித்துள்ளது.
- வினாத்தாள் தயாரித்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தானில் நேற்று முன்தினம் நடைபெற்ற 12 ஆம் வகுப்பு வணிக நிர்வாகத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. புதிய தேர்வு தேதியை பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு வணிக நிர்வாகத் தேர்வு வினாத்தாள் அப்படியே நகல் எடுக்கப்பட்டு இந்தாண்டு நடைபெற்ற தேர்விலும் வழங்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த விவகாரத்தில் ராஜஸ்தான் பள்ளி கல்வி வாரியம் அலட்சியத்துடன் செயல்பட்டதாக புகார் எழுந்த நிலையில், வினாத்தாள் தயாரித்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் போராட்டத்திற்கு தமிழக வெற்றிக் கழகம் முழு ஆதரவு.
- திமுக அரசின் கபட நாடக வேலையால் விடுமுறை நாளான இன்றும் கூட அரசு ஊழியர்கள் போராட்டக் களத்தில் உள்ளனர்.
ஜாக்டோ ஜியோவின் போராட்டத்திற்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் முழுமையான ஆதரவை தெரிவித்துக் கொள்கிறேன் என அக்கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசுப் பணியாளர்கள், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல், உயர்கல்வி சார்ந்த ஊக்க ஊதிய உயர்வு, முடக்கி வைக்கப்பட்ட சரண் விடுப்பு ஒப்படைப்பு, ஊதிய முரண்பாடுகளைக் களைதல், பணி உயர்வு கோருதல், சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள், கல்வித் துறையில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்கள், MRB செவிலியர்கள், ஊராட்சிச் செயலாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள், கணினி உதவியாளர்கள், சிறப்பு ஆசிரியர்கள், பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு வரையறை செய்யப்பட்ட ஊதியம் வழங்குதல், ஒருங்கிணைந்த கல்வித் துறையில் பணியாற்றும் பணியாளர்கள், ஆசிரியர்கள், தொழிற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் பகுதிநேர ஆசிரியர்கள் ஆகியோருக்குப் பணி நிரந்தரம் செய்தல், அரசின் பல்வேறு துறைகளிலும் உள்ள காலிப் பணியிடங்களைக் காலமுறை ஊதியத்தில் நிரப்புதல் உள்ளிட்ட பத்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் மூலம் நீண்ட காலமாகப் போராடி வருகின்றனர்.
1-4-2003-க்குப் பிறகு அரசுப் பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள். அரசு அலுவலர்களுக்குப் பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS Old Pension Scheme) வழங்கப்படுவதில்லை. அவர்களுக்கு CPS (Contributory Pension Scheme) எனப்படும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டமே வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் அரசு ஊழியர்களுக்குப் பணி ஓய்விற்குப் பிறகு மாதாமாதம் வழங்கப்படும் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் உட்பட எதுவும் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது. போராட்டத்தின் முக்கிய அம்சங்களுள் இதுவும் ஒன்றாகும்.
ஜாக்டோ ஜியோ போராட்டம் என்பது, தமிழகத்தில் வாழ்ந்து வரும் லட்சக்கணக்கான குடும்பங்கள் சார்ந்த நல்வாழ்வு மற்றும் வாழ்வாதாரம் சார்ந்த போராட்டம். இதை அரசியல் கண்கொண்டோ, ஆட்சி அதிகாரக் கண்கொண்டோ நோக்கவே கூடாது. லட்சக்கணக்கான குடும்பங்களை மனத்தில் வைத்து, முற்றிலும் மனிதாபிமான அடிப்படையில் மட்டுமே அணுக வேண்டும்.
உரசு எந்திரத்தின் நிர்வாக முறை அச்சாணியான அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மற்றும் அரசுப் பணியாளர்களின் கோரிக்கைகளுக்குச் செவி சாய்த்து, அதற்கான நியாயமான தீர்வுகளைக் காண வேண்டியது அரசின் கடமை ஆகும். ஆனால். அதை இப்போது இருக்கும் வெற்று விளம்பர மாடல் தி.மு.க. அரசு செய்ய முன்வரவில்லை. அதை விடுத்து, கண்துடைப்புக்காகப் பேச்சுவார்த்தை மட்டும் நடத்திவிட்டு, கண்டும் காணாமல் கை விட்டுவிட்டது.
2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்காக மட்டும் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பைக் கெஞ்சிக் கூத்தாடியும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை ஆட்சிக்கு வந்ததும் அமல்படுத்துவோம் என்றும் கூறி, தேர்தல் அறிக்கையிலும் 309ஆவது வாக்குறுதியாக வெளியிட்டு நம்பிக்கையை ஏற்படுத்திவிட்டு, இப்போது அவர்கள் கோரிக்கையை நிறைவேற்றாமல் லட்சக்கணக்கான குடும்பங்களை இந்தத் தி.மு.க. அரசு ஏமாற்றி உள்ளது.
பழைய ஓய்வூதியத் திட்டமானது ராஜஸ்தான், மேற்கு வங்கம். ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம் ஆகிய ஆறு மாநிலங்களில் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. கர்நாடக அரசும் அதை மீண்டும் கொண்டுவரப் போவதாக அண்மையில் அறிவித்துள்ளது. எல்லா மாநிலங்களுக்கும் முன்னோடியாகத் திகழ்கிறோம் என்று மார்தட்டும் வெற்று விளம்பர மாடல் தி.மு.க. அரசு, இதில் மட்டும் புறமுதுகு காட்டுவது ஏன்?
தி.மு.க. அரசின் கபட நாடக ஏமாற்று வேலையால், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசுப் பணியாளர்கள், விடுமுறை நாளான இன்றும்கூட போராட்டக் களத்தில் உள்ளனர். இது, மிகப் பெரிய கையறு நிலை ஆகும். தற்போதைய ஆளும் தி.மு.க. அரசுக்கு. இது ஒரு பொருட்டாகவே படவில்லை என்பதும் வெளிப்படையாகத் தெரிகிறது.
இதுபோன்ற பாராமுகச்செயல்களால், அரசு மீதும் அரசியல்வாதிகள் மீதும் நம்பிக்கை இழந்து, கையறு நிலையில் உள்ள லட்சக்கணக்கான குடும்பங்களின் நலன்களை ஆழமாக மனத்தில் வைத்து, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசுப் பணியாளர்களின் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் போராட்டத்திற்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக, முழுமையான மனப்பூர்வமான ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒருங்கிணைப்பாளர்கள் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் போராட்டம் ஒருங்கிணைக்கப்படுகிறது.
- பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
சென்னை:
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல் படுத்தக் கோரி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள்.
தி.மு.க. தேர்தல் அறிக்கைகளில் குறிப்பிட்டதை போல பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய முறையை கொண்டு வர வேண்டும் என்று அனைத்து சங்கங்களும் வலியுறுத்தி வருகின்றன.
இந்த நிலையில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பை சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வருகிற 23-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்தனர். விடுமுறை நாளில் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதம் இருந்து அரசுக்கு தங்கள் எதிர்ப்பை தெரிவிக்க முடிவு செய்து உள்ளனர். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த போராட்டம் நடைபெறுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒருங்கிணைப்பாளர்கள் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் போராட்டம் ஒருங்கிணைக்கப்படுகிறது.
சென்னையில் எழிலகம் பின்பகுதியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. போராட்டம் குறித்து ஒருங்கிணைப்பாளர்கள் தியாகராஜன், மாயவன் ஆகியோர் கூறியதாவது:-
பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். விடுமுறை நாளில் போராட்டம் நடைபெறுவதால் அரசு ஊழியர்கள் அதிகளவில் பங்கேற்க வாய்ப்பு உள்ளது. ஈட்டிய விடுப்பு சரண் சலுகையை 1.4.2026 பதிலாக வருகிற ஏப்ரல் மாதத்தில் இருந்து வழங்க வேண்டும்.
இதற்கான அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பட்ஜெட் கூட்டத்தில் வெளியிட வேண்டும். தேர்தல் வாக்குறுதியில் கூறியதை நிறைவேற்ற வேண்டும். உண்ணாவிரதப் போராட்டத்திற்கு பிறகு ஒருங்கிணைப்பாளர்கள் ஒன்று கூடி ஆலோசித்து அடுத்த கட்டமாக வேலை நிறுத்தம் அல்லது மறியல் போராட்டம் என தீவிரமாக முன்னெடுத்து செல்ல திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- கொரோனா காரணமாக 2020 - 21ம் கல்வியாண்டுக்கான மதிப்பீட்டை வரும் நவம்பர் 4-ந் தேதிக்குள்ளும் முடிக்க வேண்டும்.
- கொரோனா காரணமாக 2020 - 21ம் கல்வியாண்டுக்கான மதிப்பீட்டை வரும் நவம்பர் 4-ந் தேதிக்குள்ளும் முடிக்க வேண்டும்.
தாராபுரம்:
மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்குவதை உறுதி செய்யும் வகையில், அனைத்து ஆசிரியர்களும் தங்கள் செயல்திறனை சுயமதிப்பீடு செய்து மேம்படுத்திக்கொள்ள, PINDIC என்ற செயலியை தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் கடந்த, 2019ல் அறிமுகப்படுத்தியது.
1 முதல் பிளஸ் 2 வரையிலான அனைத்து ஆசிரியர்களும், இந்த மதிப்பீடு மேற்கொள்ள வேண்டும். இதற்கென ஆசிரியர்களுக்கு, 10 மதிப்பெண் வழங்கப்பட்டு வருகிறது. இதற்குரிய படிவங்கள் 'எமிஸ்' தளத்தில் பூர்த்தி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை தலைமையாசிரியர் மேலாய்வு செய்து உரிய தரநிலை வழங்குவார்.பல்வேறு தலைப்புகளில் ஆசிரியர்களின் செயல்திறன்கள் ஆராயப்படுகின்றன. கொரோனா காரணமாக 2020 - 21ம் கல்வியாண்டுக்கான மதிப்பீட்டை வரும் நவம்பர் 4-ந் தேதிக்குள்ளும் முடிக்க வேண்டும்.
நடப்பாண்டுக்கான மதிப்பீட்டை மேற்கொள்ள, 2023 ஜனவரி 25-ந்தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இணையதள செலவினங்களுக்காக, ஆசிரியர் ஒருவருக்கு, 10 ரூபாய் வீதம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக திருப்பூர் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.






