search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "school teachers"

    • கருங்காலி வலசு கிராமத்தை சேர்ந்த மாணவிகள் 2 பேர் 6-ம் வகுப்பு படித்து வருகின்றனர்.
    • பள்ளி தலைமை ஆசிரியை இளமதி ஈஸ்வரி மற்றும் ஆசிரியை சித்ரா ஆகியோர் பள்ளி கழிவறையை மாணவிகள் மூலம் சுத்தம் செய்ய வைத்ததாக புகார் எழுந்தது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள கொளத்துப்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட குமாரபாளையத்தில் அரசு நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு கருங்காலி வலசு கிராமத்தை சேர்ந்த மாணவிகள் 2 பேர் 6-ம் வகுப்பு படித்து வருகின்றனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன் பள்ளி தலைமை ஆசிரியை இளமதி ஈஸ்வரி மற்றும் ஆசிரியை சித்ரா ஆகியோர் பள்ளி கழிவறையை மாணவிகள் மூலம் சுத்தம் செய்ய வைத்ததாக புகார் எழுந்தது. அது தொடர்பாக சிறுமிகள் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

    இந்த விவகாரம் திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்து ராஜ் கவனத்துக்கு சென்றது. உடனடியாக தாராபுரம் கோட்டாட்சியர் செந்தில் அரசன், தாசில்தார் கோவி ந்தசாமி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா ஆகியோரை, சம்பந்தப்பட்ட குமாரபாளையம் அரசு நடுநிலைப்பள்ளிக்கு சென்று விசாரிக்குமாறு உத்தரவிட்டார்.

    விசாரணையில் மாணவிகள் இருவரையும் பள்ளி ஆசிரியைகள் கடந்த ஒரு மாதமாக பள்ளியின் கழிவறையை சுத்தம் செய்ய வைத்தது தெரியவந்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அரசு பள்ளி ஆசிரியைகள் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்தார்.

    • ஆசிரியர்கள் சட்டை, பேண்ட்களிலும், ஆசிரியைகள் சேலை, சுடிதார் மட்டும் அணிந்து கொண்டு வர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
    • ஆசிரியர்கள் இருவரும் கண்ணியமான வகையில், தூய்மையான மற்றும் மென்மை நிறம் கொண்ட உடைகளை அணிய வேண்டும்.

    அசாம் மாநிலத்தில் அரசு கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் பள்ளி ஆசியர்களுக்கு ஆடை கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பாக, ஆசிரியர்- ஆசிரியைகள் ஜீன்ஸ், லெக்கின்ஸ், டீ சர்ட் போன்ற ஆடைகள் அணிந்து வர முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

    ஆசிரியர்கள் சட்டை, பேண்ட்களிலும், ஆசிரியைகள் சேலை, சுடிதார் மட்டும் அணிந்து கொண்டு வர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    ஆண் மற்றும் பெண் ஆசிரியர்கள் இருவரும் கண்ணியமான வகையில், தூய்மையான மற்றும் மென்மை நிறம் கொண்ட உடைகளை அணிய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக அசாம் மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஒரு ஆசிரியர் தனது கடமையை செய்யும் போது அனைத்து விதமான கண்ணியத்திற்கும் எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுவதால், பணியிடத்தில் நல்லொழுக்கம், கண்ணியம், தொழில்முறை மற்றும் வேலையின் நோக்கம் ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் ஆடைகளை அணிய வேண்டியது அவசியமாகிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    • ஆசிரியர்கள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம் நெல்லையில் மாநில தலைவர் செல்வராஜ் தலைமையில் நடந்தது.
    • கூட்டத்தில் ஆசிரியர்களை பணியில் சேர்ந்த நாள் முதல் மூதுரிமையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    நெல்லை:

    அனைத்து பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம் நெல்லையில் மாநில தலைவர் செல்வராஜ் தலைமையில் நடந்தது. பொதுச்செயலாளர் சுந்தரபாண்டியன், பொரு ளாளர் ராஜா முகம்மது, முதன்மை ஒருங்கிணைப்பா ளர் சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் கடந்த 18 ஆண்டுகளாக எந்தவித பதவி உயர்வும் இன்றி தவிக்கும் அலகு விட்டு அலகு மாறுதல் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை பணியில் சேர்ந்த நாள் முதல் மூதுரிமையை நிர்ணயம் செய்ய வேண்டும்.

    இந்த வகையில் சுமார் 1,200-க்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் காத்திருக்கின்றனர். எனவே அரசு இவர்கள் மீது கவனம் செலுத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்ற ப்பட்டது. இதில் நிர்வாகிகள் சங்கர நாராயணன், ராமநாதன், குருவிநாயகம், இந்துமதி, மகாராசி, செண்பகலதா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • கருத்து வேறுபாடுகா ரணமாக மனைவி, இரு மகன்களை அழைத்து க்கொண்டு பிரிந்து சென்றார்.
    • சிவஞானசுந்தரம் தங்கியிருந்த அறையில் துர்நாற்றம் வீசியது.

    திருப்பூர் :

    திருப்பூர், காந்தி நகர், லட்சுமி தியேட்டர் ரோடுபகுதியை சேர்ந்தவர் சிவஞான சுந்தரம், ( வயது 50). தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இந்தநிலையில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு கருத்து வேறுபாடுகா ரணமாக மனைவி, இரு மகன்களை அழைத்து க்கொண்டு பிரிந்து சென்றார். இதனால் ஆசிரியர் சிவஞானசுந்தரம் மட்டும் தனியாக தங்கி இருந்து பள்ளிக்கு சென்று இந்த நிலையில் அவர் தங்கியிருந்த அறையில் நேற்று துர்நாற்றம் வீசியது.இது குறித்து அக்கம் பக்கத்தினர் வேலம்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கதவை உடைத்துபார்த்த போது அங்கு ஆசிரியர் சிவஞானசுந்தரம் தூக்கு போட்டு தற்கொலைசெய்து கொண்டது தெரிய வந்தது. இதையடுத்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் அவர் தங்கியிருந்த அறையில் சோதனை நடைபெற்ற போது அங்கு ஒரு கடிதம் சிக்கியது. அந்த கடிதத்தில் தற்கொலைக்கு யாரும் காரணமில்லை என எழுதிவைக்கப்பட்டிருந்து. கடிதத்தை கைப்பற்றிய போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பயிற்சி வகுப்பு 3 நாட்கள் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்த நிலையில் முதல் நாள் பயிற்சி வகுப்பு தொடங்கியது.
    • மாணவர்களின் கவரும் வகையில் கற்றல் கற்பித்தல் அமைய வேண்டும் என்ற நோக்கில், எண்ணும் எழுத்தும் பயிற்சி வகுப்பு தொடங்கியது.

    நன்னிலம்:

    திருவாரூர் மாவட்டம், நன்னிலம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட, அரசு மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் 234 பேருக்கு, இரண்டாம் பருவ பாட திட்டத்தில், இரண்டாம் கட்ட எண்ணும் எழுத்தும் பயிற்சி வகுப்பு 3 நாட்கள் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்த நிலையில் முதல் நாள் பயிற்சி வகுப்பு தொடங்கியது.

    இதில் தொடக்கக் கல்வி மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்றால் பள்ளி மாணவ மாணவர்களின் கல்விநிலை பாதித்து அதை சரிசெய்யும் வகையில் தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    அதனடிப்படையில் மாணவர்களின் கற்றல் கற்பித்தல் எளிதாகவும் இனிமையானதாக அமையும் வகையில், செய்முறையோடு, காட்சிப் பொருளாகக் கொண்டு, மாணவர்களின் மனதைக் கவரும் வகையில் கற்றல் கற்பித்தல் அமைய வேண்டும் என்ற நோக்கில், எண்ணும் எழுத்தும் பயிற்சி வகுப்பு தொடங்கியது.

    பயிற்சி வகுப்பிற்கு நன்னிலம் வட்டார கல்வி அலுவலர் முருகபாஸ்கர், மணி ஆகியோர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தனர். வட்டார வளமைய மேற்பார்வையாளர் நடேஷ் துரை வரவேற்றார்.

    ஆசிரியர் பயிற்சி நிறுவன ஆசிரியர்கள் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தனர். ஆசிரியர்கள் தன்னார்வத்தோடு பயிற்சியில் பங்கேற்றனர்.

    • மாணவர்களுக்கு பாடம் கற்பித்து கொடுக்கும் வகுப்பறையை பள்ளியறையாக மாற்றிய ஆசிரியர்களின் செயலை கண்டு பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் ஆத்திரமடைந்தனர்.
    • பின்னர் இது குறித்து அந்த பள்ளி தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்தனர்.

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள வடக்கு சித்தாம்பூர் பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகிறார்கள்.

    இந்த நிலையில் கடந்த ஐந்து தினங்களுக்கு முன்பு பள்ளியின் வகுப்பறையில் ரமேஷ் (வயது 40), புண்ணியமூர்த்தி (30) ஆகிய 2 ஆசிரியர்களும் தங்களது சட்டையை கழற்றிவிட்டு, மேலாடை இன்றி ஒரு ஆசிரியையுடன் நெருக்கமாக தொட்டு பேசுவது, அவருடன் சிரித்து அரட்டை அடிப்பது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

    இதைப் பார்த்த மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அதிர்ச்சிக்கு ஆளாகினர். மாணவர்களுக்கு பாடம் கற்பித்து கொடுக்கும் வகுப்பறையை பள்ளியறையாக மாற்றிய ஆசிரியர்களின் செயலை கண்டு ஆத்திரமடைந்தனர். பின்னர் இது குறித்து அந்த பள்ளி தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்தனர்.

    இதற்கிடையே சட்டை இல்லாமல் இருந்த அந்த ஆசிரியர்கள் இருவரும் வாத்தலை போலீசில் புகார் செய்தனர். அதில் மழையில் நனைந்து கொண்டே பள்ளிக்கூடம் வந்ததாகவும், அப்போது சட்டையை கழற்றி உலர்த்தியதாகவும், அதனை ஆசிரியையுடன் இணைத்து அவதூறாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளனர். ஆகவே சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தனர்.

    அப்போது ஏதேச்சையாக ஆய்வுக்கு வந்த முசிறி நீதிமன்ற நீதிபதி புகாரை பெற்றுக்கொண்டு திருச்சி புறநகர் மாவட்ட சைபர் கிரைம் போலீசாருக்கு அனுப்பி வைத்தார். மேலும் இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்த அறிக்கை அளிக்கவும் உத்தரவிட்டார்.

    சம்பவம் குறித்து சைபர் கிரைம் போலீசாரிடம் கேட்டபோது, புகாருக்கு ஆளாகியுள்ள இரண்டு ஆசிரியர்களும் சித்தாம்பூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் முன்பு பணியாற்றி இருக்கிறார்கள். ஆனால் 2019-ல் அவர்கள் பணி மாறுதலாகி வேறு பள்ளிக்கு சென்று விட்டார்கள்.

    ஆகவே அவர்கள் பணியில் இருந்தபோது எடுத்த புகைப்படங்களா? அல்லது தற்போது எடுக்கப்பட்டதா? இப்போது எடுத்திருந்தால் அவர்கள் எதற்காக மீண்டும் அந்த பள்ளிக்கு சென்றார்கள் என பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் புகைப்படத்தின் உண்மை தன்மை குறித்தும் ஆய்வு நடந்து வருகிறது என்றனர்.

    தவறான பாதைக்கு செல்லும் மாணவர்களை நேர் வழிக்கு அழைத்து சென்று கல்வி போதிக்கும் ஆசிரியர்களே இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால், மாணவர்களின் எதிர்கால செயல் கேள்விக்குறியாகி விடும் என்பதே பெற்றோர்களின் ஆதங்கம்.

    பள்ளிக்கு வராத ஆசிரியர்களை கண்டித்து அவினாசியில் பெற்றோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    அவினாசி:

    பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கடந்த 22-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இன்று 5-வது நாளாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள பெரியாயி பாளையத்தில் அரசு நடுநிலைப் பள்ளி உள்ளது.

    இங்கு வேலை பார்த்து வரும் ஆசிரியர்கள் இன்று 5 -வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் பள்ளிக்கு சென்ற மாணவர்கள் ஆசிரியர்கள் இல்லாமல் வீட்டிற்கு திரும்பி வந்தனர்.

    இதனால் மாணவர்களின் பெற்றோர் ஆத்திரம் அடைந்தனர். அவர்கள் பள்ளியை திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    சாலை மறியலில் ஈடுபட்ட பெற்றோர்கள், ஆசிரியர்கள் பிரச்சினையில் அரசு உடனே தலையிட்டு அவர்களை பணிக்கு வர அறிவுறுத்த வேண்டும் என வலியுறுத்தினார்கள்.பெற்றோர் போராட்டத்தால் அவினாசியில் பரபரப்பு ஏற்பட்டது.

    திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் ஒன்றியத்தில் 17 நடுநிலைப் பள்ளி, 61 ஆரம்ப பள்ளி,2 அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளது. இந்த பள்ளிகளில் வேலை பார்க்கும் ஆசிரியர்கள் ஒரு சிலரே இன்று வேலைக்கு வந்து இருந்தனர். இதனால் மாணவர்களும் குறைவாகவே வந்து இருந்தனர்.

    கல்வி துறை வளாகத்தில் அரசு நிதி உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு கூட்டமைப்பு பொறுப்பாளர் அந்தோணிசாமி தலைமை தாங்கினார்.
    புதுச்சேரி:

    நிலுவையில் உள்ள 6 மாத சம்பளத்தை வழங்க வேண்டும். 7-வது ஊதிய குழு பரிந்துரையை அமுல்படுத்த வேண்டும். அரசு ஊழியர்களுக்கு உயர்த்தியது போல் வீட்டு வாடகைப்படியை உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு நிதி உதவி பெறும் பள்ளி ஆசிரியர் மற்றும் ஊழியர்கள் கூட்டமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் இன்று கல்வி துறை வளாகத்தில் அரசு நிதி உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு கூட்டமைப்பு பொறுப்பாளர் அந்தோணிசாமி தலைமை தாங்கினார்.

    போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்று கல்வித்துறை வளாகத்தின் படிக்கட்டில் அமர்ந்திருந்தனர். தங்கள் பிரச்சனைக்கு தீர்வு காணும் வரை போராட்டத்தை தொடர உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

    ×