என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "School Teachers"

    • கல்விக்கு நிதி ஒதுக்குவதில் தமிழ்நாடு 22-ஆம் இடத்தில் உள்ளது.
    • பள்ளிகளின் கட்டமைப்புகளை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வௌயிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    பள்ளிகளுக்கு ரூ.80 கோடி நன்கொடை வசூலித்துத் தரும்படி கல்வித்துறை அதிகாரிகளை கட்டாயப்படுத்துவதா?

    தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி திட்டத்திற்கு நாளை மறுநாள் நவம்பர் 3-ஆம் தேதிக்குள் ரூ.80 கோடி நன்கொடை வசூலித்துத் தரும்படி ஆசிரியர்களும், பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளும் கட்டாயப்படுத்தப்படுவதாக வெளியாகியிருக்கும் செய்திகள் கவலையளிக்கின்றன. அரசின் தோல்விக்காக புனிதப்பணி செய்யும் ஆசிரியர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளை கையேந்த வைப்பது கண்டிக்கத்தக்கது.

    ஒரு மாநிலத்தில் கல்வித்துறை செழிக்க வேண்டும் என்றால் அந்த மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் 6% ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். அதன்படி பார்த்தால் தமிழகத்தில் கல்வித்துறைக்கு ஆண்டுக்கு ரூ.2.10 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். ஆனால், தமிழக அரசு மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் வெறும் 1.31%, அதாவது ரூ.46,767 கோடி தான் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கல்விக்கு நிதி ஒதுக்குவதில் தமிழ்நாடு 22-ஆம் இடத்தில் உள்ளது.

    இந்த நிதியைக் கொண்டு பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்த முடியாது என்பது உண்மை தான். இத்தகைய சூழலில் அதற்குத் தேவையான நிதியை கவுரவமான, கண்ணியமான வழிகளில் திரட்ட வகை செய்ய வேண்டும். அவ்வாறு செய்யாமல் அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகளிடம் தத்துக் கொடுப்பதும், ஆசிரியர்கள் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளை நன்கொடைக்காக கையேந்த வைப்பதும் ஏற்றுக் கொள்ள முடியாதவை.

    ஆசிரியர்கள் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளை கையேந்த வைக்கும் போக்கை அரசு கைவிட வேண்டும். அரசு பள்ளிகளுக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிப்பதன் மூலம் பள்ளிகளின் கட்டமைப்புகளை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கல்வி உரிமைச் சட்டம் கடந்த 2009-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
    • தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மட்டும் தான் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர்.

    கல்வி உரிமைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்களும் தகுதித் தேர்வில் வெற்றி பெற வேண்டும்; அடுத்த இரு ஆண்டுகளில் தகுதித்தேர்வில் வெற்றி பெறாத ஆசிரியர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்பு சட்டத்தின்படி சரியாக இருந்தாலும் லட்சக்கணக்கான ஆசிரியர் குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கக்கூடியதாகும்.

    இந்தியாவில் அனைவருக்கும் இலவசக் கல்வி வழங்கும் நோக்கத்துடன் கல்வி உரிமைச் சட்டம் கடந்த 2009-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அந்த சட்டத்தின்படி 8-ம் வகுப்பு வரை இலவசக் கல்வி வழங்க மத்திய அரசு நிதியுதவி வழங்குவதால், எட்டாம் வகுப்பு வரை பயிற்றுவிக்கக் கூடிய இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மத்திய, மாநில அரசுகளால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் வெற்றி பெறுவது அடிப்படைத் தகுதியாக்கப்பட்டது.

    தமிழ்நாட்டில் இந்தச் சட்டம் 2011-12-ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டதால், அதன்பின் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மட்டும் தான் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். அதற்கு முன் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களும் தகுதித் தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? என்ற வினாவுக்கு விடையளிக்கும் வகையில் தான் உச்சநீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

    உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு தமிழ்நாட்டில் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். இந்தத் தீர்ப்பின்படி தமிழ்நாடு அரசின் தொடக்கக்கல்வித்துறையில் பணியாற்றும் ஒரு லட்சத்து 8537 ஆசிரியர்களில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் பாதிக்கப்படுவர். அதேபோல், பள்ளிக்கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்களில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுவர். இவர்கள் தவிர தனியார் பள்ளிகளில் பணியாற்றுவோரில் சுமார் 2 லட்சம் பேர் வேலை இழப்பர். அவர்களில் பெரும்பான்மையினர் 50 வயதைக் கடந்தவர்கள் எனும் நிலையில் நடப்புப் பாடத்திட்டத்தின்படி அவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வை எழுதி தேர்ச்சி பெறுவது மிகவும் சவாலான ஒன்றாகும்.

    50 வயதைக் கடந்த ஆசிரியர்களின் குடும்பங்களில் பிள்ளைகளின் உயர்கல்வி, திருமணம் போன்ற செலவுகள் இருக்கும் என்பதால், குடும்பத் தேவைகளை கருத்தில் கொண்டு அவர்கள் பணியில் தொடர வேண்டியது கட்டாயமாகும். இத்தகைய சூழலில் அவர்கள் அடுத்த இரு ஆண்டுகளில் பணி விலக வேண்டும் என்றால் அவர்களின் குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்படும். அதிலும் குறிப்பாக பழைய ஓய்வூதியத் திட்டத்தில் இல்லாத ஆசிரியர்களின் நிலை இன்னும் மோசமாகும்.

    கல்வி உரிமைச் சட்டப்படி தகுதித் தேர்வு கட்டாயம் என்ற அடிப்படையில் தான் உச்சநீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது. ஆனால், எதார்த்தத்தின் அடிப்படையில் பார்த்தால் ஆசிரியர் பணிக்கு தகுதித் தேர்வுத் தேவையில்லை. பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடும் இது தான். அதனால் தான் 2012-ஆம் ஆண்டிலிருந்தே இந்தத் தேர்வை எதிர்த்து வருகிறது. ஆசிரியர் பணியைப் பொருத்தவரை ஒருவர் சிறப்பாக கற்பிப்பதை அவருக்கு வழங்கப்படும் பயிற்சியும், அனுபவமும் தான் தீர்மானிக்குமே தவிர, தகுதித் தேர்வு தீர்மானிக்காது.

    உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி அடுத்த இரு ஆண்டுகளில் பணி நீக்கப்படுவதற்கு வாய்ப்புள்ள ஆசிரியர்களில் பலர் 15 ஆண்டுகள் முதல் 30 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டவர்கள். அந்த ஆசிரியர்கள் அவர்களின் பணிக்காலத்தில் ஏராளமான மருத்துவர்கள், பொறியாளர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்டோரை உருவாக்கியிருக்கக் கூடும். சில ஆசிரியர்கள் இந்திய ஆட்சிப் பணி, இந்தியக் காவல் பணி அதிகாரிகளைக் கூட உருவாக்கியிருப்பார்கள்.

    அப்படிப்பட்டவர்கள் தகுதித் தேர்வில் வெற்றி பெறவில்லை என்பதற்காக பணி நீக்குவது ஏற்றுக்கொள்ள முடியாத அநீதி ஆகும்.

    இதில் இன்னும் கொடுமை என்னவென்றால் ஆசிரியர் தகுதித் தேர்வு அறிமுகம் செய்யப்படுவதற்கு முன் தமிழ்நாட்டில் பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டவர்களில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் போட்டித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் ஆவர். அவர்களும் இப்போது தகுதித்தேர்வு எழுத வேண்டும் என்பது நியாயமற்றது.

    இந்தியா முழுவதும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு இல்லை. அவ்வாறு இருக்கும் போது இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் மட்டும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பது சரியல்ல. இது தொடர்பான நியாயங்களை உச்சநீதிமன்றத்தில் எடுத்து வைக்க தமிழக அரசு தவறியதன் விளைவு தான் இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனால் ஏற்படும் விளைவுகளுக்கு திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்; அது தான் தீர்வு காண வேண்டும்.

    கல்வி உரிமை சட்டம் செயல்படுத்தப்படுவதற்கு முன்பாக பணியில் சேர்ந்த பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்கள் பணியில் தொடரவும், பதவி உயர்வு பெறவும் தகுதித் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும். அதிலும் வெற்றி கிடைக்கவில்லை என்றால், பாதிக்கப்படவுள்ள ஆசிரியர்களுக்கு மட்டும் சிறப்புத் தகுதித் தேர்வு நடத்தி, அவர்கள் அனைவரும் பணியில் நீடிப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.

    • கருத்து வேறுபாடுகா ரணமாக மனைவி, இரு மகன்களை அழைத்து க்கொண்டு பிரிந்து சென்றார்.
    • சிவஞானசுந்தரம் தங்கியிருந்த அறையில் துர்நாற்றம் வீசியது.

    திருப்பூர் :

    திருப்பூர், காந்தி நகர், லட்சுமி தியேட்டர் ரோடுபகுதியை சேர்ந்தவர் சிவஞான சுந்தரம், ( வயது 50). தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இந்தநிலையில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு கருத்து வேறுபாடுகா ரணமாக மனைவி, இரு மகன்களை அழைத்து க்கொண்டு பிரிந்து சென்றார். இதனால் ஆசிரியர் சிவஞானசுந்தரம் மட்டும் தனியாக தங்கி இருந்து பள்ளிக்கு சென்று இந்த நிலையில் அவர் தங்கியிருந்த அறையில் நேற்று துர்நாற்றம் வீசியது.இது குறித்து அக்கம் பக்கத்தினர் வேலம்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கதவை உடைத்துபார்த்த போது அங்கு ஆசிரியர் சிவஞானசுந்தரம் தூக்கு போட்டு தற்கொலைசெய்து கொண்டது தெரிய வந்தது. இதையடுத்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் அவர் தங்கியிருந்த அறையில் சோதனை நடைபெற்ற போது அங்கு ஒரு கடிதம் சிக்கியது. அந்த கடிதத்தில் தற்கொலைக்கு யாரும் காரணமில்லை என எழுதிவைக்கப்பட்டிருந்து. கடிதத்தை கைப்பற்றிய போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆசிரியர்கள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம் நெல்லையில் மாநில தலைவர் செல்வராஜ் தலைமையில் நடந்தது.
    • கூட்டத்தில் ஆசிரியர்களை பணியில் சேர்ந்த நாள் முதல் மூதுரிமையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    நெல்லை:

    அனைத்து பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம் நெல்லையில் மாநில தலைவர் செல்வராஜ் தலைமையில் நடந்தது. பொதுச்செயலாளர் சுந்தரபாண்டியன், பொரு ளாளர் ராஜா முகம்மது, முதன்மை ஒருங்கிணைப்பா ளர் சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் கடந்த 18 ஆண்டுகளாக எந்தவித பதவி உயர்வும் இன்றி தவிக்கும் அலகு விட்டு அலகு மாறுதல் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை பணியில் சேர்ந்த நாள் முதல் மூதுரிமையை நிர்ணயம் செய்ய வேண்டும்.

    இந்த வகையில் சுமார் 1,200-க்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் காத்திருக்கின்றனர். எனவே அரசு இவர்கள் மீது கவனம் செலுத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்ற ப்பட்டது. இதில் நிர்வாகிகள் சங்கர நாராயணன், ராமநாதன், குருவிநாயகம், இந்துமதி, மகாராசி, செண்பகலதா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • ஆசிரியர்கள் சட்டை, பேண்ட்களிலும், ஆசிரியைகள் சேலை, சுடிதார் மட்டும் அணிந்து கொண்டு வர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
    • ஆசிரியர்கள் இருவரும் கண்ணியமான வகையில், தூய்மையான மற்றும் மென்மை நிறம் கொண்ட உடைகளை அணிய வேண்டும்.

    அசாம் மாநிலத்தில் அரசு கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் பள்ளி ஆசியர்களுக்கு ஆடை கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பாக, ஆசிரியர்- ஆசிரியைகள் ஜீன்ஸ், லெக்கின்ஸ், டீ சர்ட் போன்ற ஆடைகள் அணிந்து வர முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

    ஆசிரியர்கள் சட்டை, பேண்ட்களிலும், ஆசிரியைகள் சேலை, சுடிதார் மட்டும் அணிந்து கொண்டு வர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    ஆண் மற்றும் பெண் ஆசிரியர்கள் இருவரும் கண்ணியமான வகையில், தூய்மையான மற்றும் மென்மை நிறம் கொண்ட உடைகளை அணிய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக அசாம் மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஒரு ஆசிரியர் தனது கடமையை செய்யும் போது அனைத்து விதமான கண்ணியத்திற்கும் எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுவதால், பணியிடத்தில் நல்லொழுக்கம், கண்ணியம், தொழில்முறை மற்றும் வேலையின் நோக்கம் ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் ஆடைகளை அணிய வேண்டியது அவசியமாகிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    • கருங்காலி வலசு கிராமத்தை சேர்ந்த மாணவிகள் 2 பேர் 6-ம் வகுப்பு படித்து வருகின்றனர்.
    • பள்ளி தலைமை ஆசிரியை இளமதி ஈஸ்வரி மற்றும் ஆசிரியை சித்ரா ஆகியோர் பள்ளி கழிவறையை மாணவிகள் மூலம் சுத்தம் செய்ய வைத்ததாக புகார் எழுந்தது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள கொளத்துப்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட குமாரபாளையத்தில் அரசு நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு கருங்காலி வலசு கிராமத்தை சேர்ந்த மாணவிகள் 2 பேர் 6-ம் வகுப்பு படித்து வருகின்றனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன் பள்ளி தலைமை ஆசிரியை இளமதி ஈஸ்வரி மற்றும் ஆசிரியை சித்ரா ஆகியோர் பள்ளி கழிவறையை மாணவிகள் மூலம் சுத்தம் செய்ய வைத்ததாக புகார் எழுந்தது. அது தொடர்பாக சிறுமிகள் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

    இந்த விவகாரம் திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்து ராஜ் கவனத்துக்கு சென்றது. உடனடியாக தாராபுரம் கோட்டாட்சியர் செந்தில் அரசன், தாசில்தார் கோவி ந்தசாமி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா ஆகியோரை, சம்பந்தப்பட்ட குமாரபாளையம் அரசு நடுநிலைப்பள்ளிக்கு சென்று விசாரிக்குமாறு உத்தரவிட்டார்.

    விசாரணையில் மாணவிகள் இருவரையும் பள்ளி ஆசிரியைகள் கடந்த ஒரு மாதமாக பள்ளியின் கழிவறையை சுத்தம் செய்ய வைத்தது தெரியவந்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அரசு பள்ளி ஆசிரியைகள் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்தார்.

    • மாறுதல் கலந்தாய்வுக்கான விண்ணப்ப பதிவு கடந்த 12-ந்தேதி தொடங்கி நடைபெற்றது
    • மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதலுக்கு 952 என 37,358 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நாளை முதல் ஜூன் 30-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

    இதையடுத்து மாறுதல் பெற விருப்பமுள்ள ஆசிரியர்கள் கல்வி மேலாண்மை தகவல் முகமை மூலம் விண்ணப்பிக்கலாம் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்திருந்தது.

    அதன்படி மாறுதல் கலந்தாய்வுக்கான விண்ணப்ப பதிவு கடந்த 12-ந்தேதி தொடங்கி நடைபெற்றது. இதில் இதுவரை 63,433 ஆசிரியர்கள் மாறுதல் கோரி விண்ணப்பித்து உள்ளனர்.

    தொடக்க கல்வி துறையில் இடைநிலை ஆசிரியர் மாறுதலுக்கு 14,078 பட்டதாரி ஆசிரியர் மாறுதலுக்கு 7,106, தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதலுக்கு 4,309, நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதலுக்கு 822 என 26,075 விண்ணப்பங்கள் பதிவிடப்பட்டுள்ளது.

    இதே போல் பள்ளிக் கல்வித்துறையில் இடைநிலை ஆசிரியர் மாறுதலுக்கு 719, பட்டதாரி ஆசிரியர் மாறுதலுக்கு 20,466, முதுநிலை ஆசிரியர் மாறுதலுக்கு 14,308, உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதலுக்கு 913, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதலுக்கு 952 என 37,358 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது.

    அதன்படி ஒட்டுமொத்தமாக 63,433 ஆசிரியர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

    இந்த நிலையில் காலிப் பணியிடங்களை நிரப்பாமல் ஆசிரியர்களை இடமாற்றம் செய்வது 90 சதவீத ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களை வெகுவாக பாதிக்கும் என ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு பிரதிநிதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    ஆனாலும் பள்ளிக்கூடங்களை திறப்பதற்கு முன்பு கலந்தாய்வு நடத்தி முடிக்க பள்ளிக் கல்வித்துறை தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    • ஆசிரியர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பி வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தி உள்ளார்.
    • மாநில அரசு நிதியில் இருந்து நிதியை எவ்வாறு பகிர்ந்து அளிக்கலாம் என்பது குறித்து ஆலோசனை.

    ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின்கீழ் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு கடந்த செப்டம்பர் மாதத்திற்கான சம்பளம் விடுவிக்கப்படவில்லை. இதனால், ஆசிரியர்கள் போலராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதைதொடர்ந்து, செப்டம்பர் மாத சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினிடமும் கோரிக்கை வைக்கப்பட்டது.

    இந்நிலையில், ஆசிரியர்கள் போராட்டம் தொடர்பாக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

    அப்போது, எஸ்.எஸ்.ஏ.ஆசிரியர்களுக்கான சம்பளம் இன்று விடுவிக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.

    ஆசிரியர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பி வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தி உள்ளார்.

    மத்திய கல்வி அமைச்சரிடம் 2 முறை கோரிக்கை வைத்தும், ஒருங்கிணைந்த கல்வி திட்டத்திற்கான நிதி இதுவரையில் வரவில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

    மேலும், மாநில அரசு நிதியில் இருந்து நிதியை எவ்வாறு பகிர்ந்து அளிக்கலாம் என்பது குறித்து ஆலோசனை நடத்தியுள்ளோம் என்றார்.

    • உன் அப்பா மயானத்துலதானே வேலை பாக்குறாரு... அங்கேயே வேலைக்குப்போ என்கிறார்கள்.
    • சீனிவாசன் சாரும், மீனாட்சி மிஸ்சும் என்னை எதற்கு பள்ளிக்கு வர ? உனக்கு படிப்புலாம் ஏறாது..

    கோடம்பாக்கத்தில் உள்ள பி.சி.கே.ஜி என்கிற அரசு பள்ளியில் பறை இசைத்த மாணவரை குறி வைத்து ஆசிரியர்கள் இருவர் படிக்க விடாமல் டார்ச்சர் செய்வதாக சமூக ஆர்வலர் குபேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

    இதுபோல் பல மாணவர்களை இந்த கோடம்பாக்கம் அரசு பள்ளியில் இருந்து நீக்கி இருக்கிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    அத்துடன் பாதிக்கப்பட்ட மாணவன் பேசும் வீடியோ ஒன்றையும் அவர் பகிர்ந்துள்ளார்.

    அந்த வீடியோவில் பாதிக்கப்பட்ட மாணவன் கூறியிருப்பதாவது:-

    என் பெயர் தமிழ். பி.சி.கே.ஜி அரசு பள்ளியில் படிக்கிறேன். கலைத்திருவிழா சமீபத்தில் நடந்தது. அதில் பங்கேற்று பறையிசை வாசித்தேன்.

    அதன்பிறகிலிருந்து, சீனிவாசன் சாரும், மீனாட்சி மிஸ்சும் என்னை எதற்கு பள்ளிக்கு வர ? உனக்கு படிப்புலாம் ஏறாது..

    நீ பறை அடிக்கத்தான் லாயக்கு.. உன் அப்பா மயானத்துலதானே வேலை பாக்குறாரு... அங்கேயே வேலைக்குப்போ என்கிறார்கள்.

    பள்ளிக்கு வந்தால் வகுப்பில் அனுமதிப்பதில்லை. என் சட்டையை கழட்டி சோதனை செய்கிறார்கள். பேண்ட் பேக்கெட்டுகளில் சோதனை செய்கிறார்கள். அசிங்கமாக பேசுகிறார்கள்.

    வகுப்புக்கு போனால் வர வேண்டாம்.. உனக்கு பாடம் சொல்லித்தர மாட்டேன். கீழே சென்று ஹெட் மாஸ்டரை பாருன்னு சொல்றாங்க.. கீழே போனால் வகுப்புக்கு போ.. தேர்வு வருதுன்னு சொல்றாங்க.. திரும்ப வகுப்புக்கு போனா ஏன் வந்தேன்னு கேக்குறாங்க..

    படிக்க விடாமல் தொடர்ந்து டார்ச்சர் செய்றாங்க..

    இவ்வாறு அந்த மாணவர் குறிப்பிட்டுள்ளார்.

    • பயிற்சி வகுப்பு 3 நாட்கள் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்த நிலையில் முதல் நாள் பயிற்சி வகுப்பு தொடங்கியது.
    • மாணவர்களின் கவரும் வகையில் கற்றல் கற்பித்தல் அமைய வேண்டும் என்ற நோக்கில், எண்ணும் எழுத்தும் பயிற்சி வகுப்பு தொடங்கியது.

    நன்னிலம்:

    திருவாரூர் மாவட்டம், நன்னிலம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட, அரசு மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் 234 பேருக்கு, இரண்டாம் பருவ பாட திட்டத்தில், இரண்டாம் கட்ட எண்ணும் எழுத்தும் பயிற்சி வகுப்பு 3 நாட்கள் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்த நிலையில் முதல் நாள் பயிற்சி வகுப்பு தொடங்கியது.

    இதில் தொடக்கக் கல்வி மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்றால் பள்ளி மாணவ மாணவர்களின் கல்விநிலை பாதித்து அதை சரிசெய்யும் வகையில் தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    அதனடிப்படையில் மாணவர்களின் கற்றல் கற்பித்தல் எளிதாகவும் இனிமையானதாக அமையும் வகையில், செய்முறையோடு, காட்சிப் பொருளாகக் கொண்டு, மாணவர்களின் மனதைக் கவரும் வகையில் கற்றல் கற்பித்தல் அமைய வேண்டும் என்ற நோக்கில், எண்ணும் எழுத்தும் பயிற்சி வகுப்பு தொடங்கியது.

    பயிற்சி வகுப்பிற்கு நன்னிலம் வட்டார கல்வி அலுவலர் முருகபாஸ்கர், மணி ஆகியோர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தனர். வட்டார வளமைய மேற்பார்வையாளர் நடேஷ் துரை வரவேற்றார்.

    ஆசிரியர் பயிற்சி நிறுவன ஆசிரியர்கள் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தனர். ஆசிரியர்கள் தன்னார்வத்தோடு பயிற்சியில் பங்கேற்றனர்.

    • மாணவர்களுக்கு பாடம் கற்பித்து கொடுக்கும் வகுப்பறையை பள்ளியறையாக மாற்றிய ஆசிரியர்களின் செயலை கண்டு பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் ஆத்திரமடைந்தனர்.
    • பின்னர் இது குறித்து அந்த பள்ளி தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்தனர்.

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள வடக்கு சித்தாம்பூர் பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகிறார்கள்.

    இந்த நிலையில் கடந்த ஐந்து தினங்களுக்கு முன்பு பள்ளியின் வகுப்பறையில் ரமேஷ் (வயது 40), புண்ணியமூர்த்தி (30) ஆகிய 2 ஆசிரியர்களும் தங்களது சட்டையை கழற்றிவிட்டு, மேலாடை இன்றி ஒரு ஆசிரியையுடன் நெருக்கமாக தொட்டு பேசுவது, அவருடன் சிரித்து அரட்டை அடிப்பது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

    இதைப் பார்த்த மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அதிர்ச்சிக்கு ஆளாகினர். மாணவர்களுக்கு பாடம் கற்பித்து கொடுக்கும் வகுப்பறையை பள்ளியறையாக மாற்றிய ஆசிரியர்களின் செயலை கண்டு ஆத்திரமடைந்தனர். பின்னர் இது குறித்து அந்த பள்ளி தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்தனர்.

    இதற்கிடையே சட்டை இல்லாமல் இருந்த அந்த ஆசிரியர்கள் இருவரும் வாத்தலை போலீசில் புகார் செய்தனர். அதில் மழையில் நனைந்து கொண்டே பள்ளிக்கூடம் வந்ததாகவும், அப்போது சட்டையை கழற்றி உலர்த்தியதாகவும், அதனை ஆசிரியையுடன் இணைத்து அவதூறாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளனர். ஆகவே சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தனர்.

    அப்போது ஏதேச்சையாக ஆய்வுக்கு வந்த முசிறி நீதிமன்ற நீதிபதி புகாரை பெற்றுக்கொண்டு திருச்சி புறநகர் மாவட்ட சைபர் கிரைம் போலீசாருக்கு அனுப்பி வைத்தார். மேலும் இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்த அறிக்கை அளிக்கவும் உத்தரவிட்டார்.

    சம்பவம் குறித்து சைபர் கிரைம் போலீசாரிடம் கேட்டபோது, புகாருக்கு ஆளாகியுள்ள இரண்டு ஆசிரியர்களும் சித்தாம்பூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் முன்பு பணியாற்றி இருக்கிறார்கள். ஆனால் 2019-ல் அவர்கள் பணி மாறுதலாகி வேறு பள்ளிக்கு சென்று விட்டார்கள்.

    ஆகவே அவர்கள் பணியில் இருந்தபோது எடுத்த புகைப்படங்களா? அல்லது தற்போது எடுக்கப்பட்டதா? இப்போது எடுத்திருந்தால் அவர்கள் எதற்காக மீண்டும் அந்த பள்ளிக்கு சென்றார்கள் என பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் புகைப்படத்தின் உண்மை தன்மை குறித்தும் ஆய்வு நடந்து வருகிறது என்றனர்.

    தவறான பாதைக்கு செல்லும் மாணவர்களை நேர் வழிக்கு அழைத்து சென்று கல்வி போதிக்கும் ஆசிரியர்களே இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால், மாணவர்களின் எதிர்கால செயல் கேள்விக்குறியாகி விடும் என்பதே பெற்றோர்களின் ஆதங்கம்.

    பள்ளிக்கு வராத ஆசிரியர்களை கண்டித்து அவினாசியில் பெற்றோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    அவினாசி:

    பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கடந்த 22-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இன்று 5-வது நாளாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள பெரியாயி பாளையத்தில் அரசு நடுநிலைப் பள்ளி உள்ளது.

    இங்கு வேலை பார்த்து வரும் ஆசிரியர்கள் இன்று 5 -வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் பள்ளிக்கு சென்ற மாணவர்கள் ஆசிரியர்கள் இல்லாமல் வீட்டிற்கு திரும்பி வந்தனர்.

    இதனால் மாணவர்களின் பெற்றோர் ஆத்திரம் அடைந்தனர். அவர்கள் பள்ளியை திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    சாலை மறியலில் ஈடுபட்ட பெற்றோர்கள், ஆசிரியர்கள் பிரச்சினையில் அரசு உடனே தலையிட்டு அவர்களை பணிக்கு வர அறிவுறுத்த வேண்டும் என வலியுறுத்தினார்கள்.பெற்றோர் போராட்டத்தால் அவினாசியில் பரபரப்பு ஏற்பட்டது.

    திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் ஒன்றியத்தில் 17 நடுநிலைப் பள்ளி, 61 ஆரம்ப பள்ளி,2 அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளது. இந்த பள்ளிகளில் வேலை பார்க்கும் ஆசிரியர்கள் ஒரு சிலரே இன்று வேலைக்கு வந்து இருந்தனர். இதனால் மாணவர்களும் குறைவாகவே வந்து இருந்தனர்.

    ×