என் மலர்
நீங்கள் தேடியது "teachers"
- குரு என்பவர் அஞ்ஞானம் எனும் இருளை நீக்கி ஞானம் எனும் ஒளியை தருபவர்.
- குரு என்பவருக்கு பற்பல பொருள் உண்டு.
திருப்பூர் :
தேசிய ஆசிரியர் சங்கம் சார்பில், குரு வணக்கம்' நிகழ்ச்சி கே.செட்டிபாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் நடந்தது.இதில் மாநில பொதுச் செயலாளர் கந்தசாமி பேசியதாவது:-
குரு என்பவர் அஞ்ஞானம் எனும் இருளை நீக்கி ஞானம் எனும் ஒளியை தருபவர். இறைவனையே குருவாகவும் வணங்குவது உண்டு.மீனவ சமுதாயத்தை சேர்ந்த வேத வியாசர் நான்கு வேதங்களையும் தொகுத்தவர் என்பதால் வியாச பூர்ணிமாவாகவும் விழா எடுப்பதுண்டு.குரு என்பவருக்கு பற்பல பொருள் உண்டு. குறிப்பிட்ட பாடத்தை கற்பிக்கும் தொழில் செய்பவர் உபாத்யாயர் என்றும், குறிப்பிட்ட பாடத்தில் தனது சிஷ்யனை நிபுணத்துவம் ஆக்குபவரை ஆச்சார்யர் என்றும் கூறப்படுவதுண்டு.மாணவர்களை சிறந்தவொரு குடிமகனாக மாற்றுவதிலும், அக்குடிமகன் மூலம் சமுதாயம் சிறந்த முறையில் வளர்ச்சியடையவும் ஆசிரியர்கள் பெரும் பங்காற்றுகின்றனர். கல்விக்கான ஆசிரியராக பணியாற்றி சமூகத்தை விழிப்புணர்வு அடைய செய்வது நம் ஒவ்வொருவரின் தலையாய பணியாகும்.இவ்வாறு அவர் பேசினார்.
- ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது
- அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கூட்டரங்கில் நடைபெற்றது
வேப்பந்தட்டை:
தமிழ்நாடு தொழில்நுட்ப மாநில மன்றம் மற்றும் வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து பெரம்பலூர் மாவட்ட அரசுப்பள்ளிகளில் பணிபுரியும் 50 அறிவியல் ஆசிரியர்களுக்கான 2 நாள் பணியிடை பயிற்சி, வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கூட்டரங்கில் நடைபெற்றது. பயிற்சி ஒருங்கிணைப்பாளரும், இயற்பியல் துறை தலைவருமான பாஸ்கரன் வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் சிவநேசன் தலைமை தாங்கி பேசுகையில், மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் நல்ல உறவு மேம்பட ஆசிரியர்களாகிய நாம் உயரிய நோக்கத்தில் செயல்பட வேண்டும், என்றார். இப்பயிற்சியை மாவட்ட கல்வி அலுவலர் சண்முகம் தொடங்கி வைத்து பேசினார். பல்கலைக்கழக இயக்குனர் சின்னப்பா, கல்லூரியின் தமிழ்த்துறை தலைவர் சேகர், காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரி உதவி பேராசிரியர் கருணாகரன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். இப்பயிற்சி முகாமில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பணிபுரியும் அறிவியல் ஆசிரியர்கள் மற்றும் கல்லூரியில் பணிபுரியும் துறை தலைவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் கணினி அறிவியல் துறை தலைவர் சகாயராஜ் நன்றி கூறினார்.
- அரசு பள்ளிகளில் கடந்த ஆண்டை காட்டிலும் இந்தாண்டு மாணவர் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது
- பெரும்பாலான பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் இல்லை.
திருப்பூர் :
கல்வியாண்டு துவங்கியுள்ள நிலையில் அரசு ஊராட்சி ஒன்றிய துவக்க, நடுநிலைப்பள்ளிகளில் கடந்த ஆண்டை காட்டிலும் இந்தாண்டு மாணவர் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.குறிப்பாக நகர்ப்புறங்களை ஒட்டிய ஊராட்சிப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை அதிகரித் திருக்கிறது.
பெரும்பாலான பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் இல்லை. 70, 80 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற நிலை கூட, சில பள்ளிகளில் காணப்படுகிறது. சில பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப வகுப்பறை கட்டடம் இல்லை.இதனால் ஒரே வகுப்பறையில், 60, 70 மாணவர்களை அமர்த்தி பாடம் கற்பிக்க வேண்டியுள்ளது. சில பள்ளிகளில், பள்ளி வளாகங்களில் உள்ள மரத்தடியில் அமர்த்தி பாடம் கற்பிக்கின்றனர்.பாடம் கற்பிக்கும் பணி மட்டுமின்றி, மாணவர்களின் வருகை துவங்கி, பாட போதிப்பு தொடர்பான விவரங்களை அதற்கான பிரத்யேக செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டிய பணியையும் ஆசிரியர்கள் கவனிக்க வேண்டியுள்ளது.இதனால் அதிக பணிச்சுமை, நேர விரயம் ஏற்படுகிறது. இதனால் கல்வி போதிப்பில், முழுமையாக கவனம் செலுத்த முடியாத நிலையில் ஆசிரியர்கள் பலர் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். நெருக்கடியான சூழலில் பணிபுரிய விரும்பாத ஆசிரியர்கள் பலர், பணி மாறுதல் பெற்று செல்கின்றனர்.
இதனால் ஏற்கனவே ஆசிரியர் பற்றாக்குறையால் சிரமத்தை எதிர்கொண்டுள்ள பள்ளி நிர்வாகங்களுக்கு கூடுதல் நெருக்கடி ஏற்படுகிறது.எனவே பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர் பணியிடங்களை உருவாக்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.
- திருப்பத்தூரில் அகவிலைப்படியை வழங்க வலியுறுத்தி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
- 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள வட்டார வள கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சங்கம் சார்பாக 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார துணைத் தலைவர் பெஞ்சமின் தலைமை வகித்தார். மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் அழகுமணி, ஜெயராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் வட்டார செயலாளர் முத்துமாரியம்மன், 30 அம்ச கோரிக்கைகளை விளக்கி பேசினார். சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற மாநில பொதுக்குழு உறுப்பினர் குமரேசன் மற்றும் மாவட்ட துணைத் தலைவர் ஸ்டீபன் ஆகியோர் பழைய ஓய்வுதத் திட்டம், மத்திய அரசுக்கு இணையாக ஊதியம் வழங்கும் திட்டம், தேசிய வழி கல்வி கொள்கையை திரும்பப் பெற வேண்டும், 3 சதவீத அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு திட்டங்கள் மற்றும் கோரிக்கைகள் குறித்து ஆசிரியர்கள் மத்தியில் பேசினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பலரும் பங்கேற்றனர்.
- சிவகங்கையில் ஆசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
- 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா எஸ்.புதூர் வட்டார கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்பாட்டத்திற்கு வட்டார தலைவர் பிராங்ளின் ஆரோக்கிய ஜேசுதாஸ் தலைமை தாங்கினார். வட்டார செயலாளர் சண்முகம் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தின்போது பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துதல், இடைநிலை ஆசிரியர்க ளுக்கு மத்திய அரசு ஆசிரி யர்களுக்கு இணையான ஊதியம் வழங்குதல், தேசிய கல்வி கொள்கையை மத்திய அரசு திரும்ப பெறுதல், மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கி உள்ளது போல் 3 சதவீத அகவிலைப்படி உயர்வை தமிழக அரசு ஊழியர்களுக்கு வழங்க வேண்டும்.
அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் நியமனம் செய்யும் முடிவை தமிழக அரசு கைவிட்டு நிரந்தரமாக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
மாநில பொதுக்குழு உறுப்பினர் ஞானஅற்புத ராஜ், துணை தலைவர் ஜீவபிரபு, துணை செயலாளர் உதயகுமார் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். எஸ்.புதூர் ஒன்றியத்தை சேர்ந்த தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி அமைப்பின் ஆசிரிய- ஆசிரியைகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார பொருளாளர் முத்துலெட்சுமி நன்றி கூறினார்.
- தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்றம் சாா்பில் நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- நடுநிலைப்பள்ளி ஆசிரியா்களுக்கு தேர்வு நிலை, சிறப்பு நிலை ஊதியம் நிர்ணயம் செய்து வழங்க வேண்டும்.
நாமக்கல்:
தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்றம் சாா்பில் நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவா் ஆசைத்தம்பி தலைமை வகித்தார்.தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில பொருளாளா் முருக.செல்வராசன் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
ஜாக்டோ-ஜியோ போராட்ட காலத்தை முறைப்படுத்தி, மாவட்டத்தின் தொடக்கம் மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியா்களுக்கு தேர்வு நிலை, சிறப்பு நிலை ஊதியம் நிர்ணயம் செய்து வழங்க வேண்டும். ஒன்றிய அளவில் வட்டார கல்வி அலுவலகத்தில் நடத்தப்படும் ஆசிரியர் குறைதீர் முகாம் முறையாக நடைபெறுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
- மின் சிக்கனத்தின் அவசியம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நெல்லை மின் பகிர்மான வட்டத்தின் சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
- திறன் மேம்பாட்டு குழு என்ற பெயரில் ஒவ்வொரு பள்ளிக்கும் குழு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நெல்லை:
தமிழகத்தில் மின்சாரம் பற்றிய விழிப்புணர்வு மற்றும் மின் சிக்கனத்தின் அவசியம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நெல்லை மின் பகிர்மான வட்டத்தின் சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மின் சிக்கனத்தின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு அந்தந்த பள்ளிகளில் ஒருங்கிணைப்பாளர்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளனர்.
இவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக திறன் மேம்பாட்டு குழு என்ற பெயரில் ஒவ்வொரு பள்ளிக்கும் குழு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக நெல்லை மாவட்டத்தில் 30 பள்ளிகள் மற்றும் தென்காசி மாவட்டத்தில் 20 பள்ளிகள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது.
இந்த குழுவில் உள்ள ஒருங்கிணைப்பா் ளர்களுக்கு மின்வாரிய அதிகாரிகள் சார்பில் நெல்லையில் இன்று பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டது. பயிற்சி வகுப்பினை மேற்பார்வை மின் பொறியாளர் ராஜன்ராஜ் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் செயற்பொறியாளர் (பொது) வெங்கடேஷ் மணி, உதவி செயற்பொறியாளர் (பொது) சைலஜா, உதவி செயற்பொறியாளர் (மக்கள் தொடர்பு அலுவலர்) முத்துசாமி ஆகியோர் கலந்து கொண்டு மின் சிக்கனம் குறித்து விளக்கினர். இந்த ஒரு நாள் பயிற்சியில் 60 ஆசிரியர்கள் மற்றும் மின் பொறியாளர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
- தென்காசி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகம் முன்பு 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய மாலை நேர ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மாரிமுத்து வரவேற்றார்.
தென்காசி:
இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் தென்காசி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகம் முன்பு 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய மாலை நேர ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தினுடைய சட்டச் செயலாளர் பிச்சைக்கனி மற்றும் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழக துணை பொது செயலாளர் முருகையா ஆகியோர் கூட்டுதலைமை தாங்கி நடத்தினர்.
இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மாரிமுத்து வரவேற்றார்.
செந்தூர்பாண்டியன், முதுகலை ஆசிரியர்கள் சதீஷ்குமார், காளிராஜ், முப்புடாதி சங்கர், ஜேனட்பொற் செல்வி ஆகியோர் கோரிக்கையை விளக்கி பேசினர்.
ஆரம்பப்பள்ளிஆசிரியர் கூட்டணியின் மாநில தலைவர் மணிமேகலை சிறப்புரை ஆற்றி பேட்டி அளித்தார். முடிவில் கீதா கோமதி அனைவருக்கும் நன்றி கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ரமேஷ், ராஜ்குமார்,சுதர்சன்,சிவகுமார்,துரைராஜ்,பசுபதி, தென்காசி ராஜ்குமார், மாதாப்பட்டணம் குத்தாலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்.
- 2 வருடங்களாக கொரோனா தொற்று தாக்கத்தால், மக்களின் வாழ்வாதாரம்,பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
- அரசு பள்ளிகளில் தற்போது ஆங்கிலவழிக்கல்வி இருப்பதும் முக்கிய காரணம்.
பல்லடம் :
பல்லடம்,அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பால்,ஆசிரியர்கள் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து தன்னார்வலர்கள் கூறியதாவது:- சமீபகாலமாக அரசு பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைச் சேர்க்க பெற்றோர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். கடந்த 2 வருடங்களாக கொரோனா தொற்று தாக்கத்தால், மக்களின் வாழ்வாதாரம்,பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தனியார் பள்ளிகளில் கட்டணம் செலுத்த முடியாத நிலை உள்ளது. எனவே அரசுப் பள்ளிகளில் பிள்ளைகளை படிக்க வைக்க பெற்றோர் ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் அரசு பள்ளிகளில் தற்போது ஆங்கிலவழிக்கல்வி இருப்பதும் முக்கிய காரணம். அந்த வகையில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. ஆனால் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது.
எனவே தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுத்து அரசுப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள், கட்டடம், குடிநீர், சுகாதார வளாகம், உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- காலியிடங்களை விட பல மடங்கு விண்ணப்பங்கள் திருப்பூர் கல்வி மாவட்டத்தில் பெறப்பட்டுள்ளன.
- ஒரு பணியிடத்திற்கு சராசரியாக 10 பேர் வீதம் விண்ணப்பித்துள்ளனர்.
திருப்பூர் :
தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளி வரை காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் தொகுப்பூதியத்தின் கீழ் நிரப்பப்பட உள்ளன. இதற்காக தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பம் கடந்த 3 நாட்களாக பெறப்பட்டன. ஒருவரே பல பள்ளிகளில் பணியாற்ற விண்ணப்பித்துள்ளதால் விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.இதுகுறித்து திருப்பூர் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
டி.டி.எட்., படித்தவர்கள் துவக்க பள்ளிக்கும், பி.எட்., படித்தவர்கள் நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிக்கும், ஒன்றுக்கும் மேற்பட்ட டிகிரிகளுடன் பி.எட்., மற்றும் எம்.எட்., படித்தவர்கள் உயர்நிலை, மேல்நிலை பள்ளிக்கும் விண்ணப்பித்தனர். ஒருவர் எத்தனை பணியிடங்களுக்கு வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம் என்பதால், காலியிடங்களை விட பல மடங்கு விண்ணப்பங்கள் திருப்பூர் கல்வி மாவட்டத்தில் பெறப்பட்டுள்ளன.
திருப்பூர் தெற்கு, வடக்கு, அவிநாசி மற்றும் ஊத்துக்குளி ஒன்றியங்கள் முறையேஇடைநிலை ஆசிரியர் பணிக்கு ஆயிரத்து 407 விண்ணப்பங்களும், பட்டதாரி ஆசிரியர் பணிக்கு 405 விண்ணப்பங்களும், முதுகலை ஆசிரியர் பணிக்கு 401 விண்ணப்பங்களும் பெறபட்டுள்ளன. ஒரு பணியிடத்திற்கு சராசரியாக 10 பேர் வீதம் விண்ணப்பித்துள்ளனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
- இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கான கலந்தாய்வு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் நடந்தது.
- 472 இடைநிலை ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது.
திருப்பூர் :
தொடக்க கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் ஊராட்சி ஒன்றிய, நகராட்சி அரசு தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் பணி மாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல், இடமாறுதல் கலந்தாய்வு நேற்று முன்தினம் துவங்கியது.
முதல் நாளன்று இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கான கலந்தாய்வு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவளர்செல்வி தலைமையில் நடந்தது. முதன்மை கல்வி அதிகாரி, பல்லடம் மாவட்ட கல்வி அதிகாரி, மற்றும் அனைத்து ஒன்றிய வட்டார கல்வி அலுவலர்கள் முன்னிலையில் ஏராளமான ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
இதில் மாநில சீனியாரிட்டி அடிப்படையில் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் காட்டப்பட்டு விரும்பும் இடங்கள் வழங்கப்பட்டன. திருப்பூர் மாவட்டத்தில் 472 இடைநிலை ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளதால் வெளி மாவட்டத்தில் பணியாற்றும் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.