என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Minister Anbil Mahesh"

    • பள்ளிகள் மூடப்பட்டதாக தகவல்கள் வருகிறதே தவிர புதிய மாணவர் சேர்க்கை குறித்த தகவல்கள் வரப்படவில்லை.
    • ஒவ்வொரு மாவட்டங்களிலும் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

    பாளையங்கோட்டை நேருஜி கலையரங்கத்தில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நெல்லை மாவட்ட அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுடன் அடைவு தேர்வு தொடர்பாக நடத்திய ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.

    முன்னதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறியதாவது:-

    பள்ளி கல்வித்துறை சார்ந்த ஆய்வு கூட்டம் 23-வது மாவட்டமாக இங்கு தலைமை ஆசிரியர்களை சந்தித்து நடத்தப்பட உள்ளது. மாணவர்களுக்கு என்னென்ன தேவை என்பது குறித்த ஆய்வுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டங்களிலும் இந்த ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

    தலைமை ஆசிரியர்கள் சிறப்பாக செயல்படும் இடங்களை கண்டறிந்து அவர்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டு மற்ற இடங்களில் செயல்படுத்துவது தொடர்பாக ஆய்வு கூட்டம் நடத்தப்படுகிறது. எந்த அரசாக இருந்தாலும் பள்ளிகளை மூடாது. மூடியதாக வரலாறும் கிடையாது.

    கடந்த கல்வி ஆண்டில் இருந்து இந்த கல்வி ஆண்டு வரை உள்ள கணக்கீட்டில் புதியதாக 4 லட்சம் மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். பள்ளிகள் மூடப்பட்டதாக தகவல்கள் வருகிறதே தவிர புதிய மாணவர் சேர்க்கை குறித்த தகவல்கள் வரப்படவில்லை.

    மூடப்பட்ட 207 பள்ளிகளின் காரணங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 5 வயதிற்கு மேற்பட்ட மாணவர்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ அவர்களை ஆசிரியர்கள் கண்டறிந்து ஈ-ரெஜிஸ்டர் பதிவேட்டில் இணைக்கப்பட்டு பள்ளிகளில் சேர்த்து வருகிறோம்.

    உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கைப்படி 2015-16-ல் இருந்து உலகம் முழுவதும் பிறப்பு விகிதம் குறைந்துள்ளது. கொரோனா காலத்தில் வாழ்வாதாரத்திற்காக இடம் விட்டு இடம்பெயர்ந்தவர்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் கணக்கி டப்பட்டுள்ளது.

    மூடப்பட்ட பள்ளிகள் இருக்கும் ஒவ்வொரு கிராமத்திலும் பள்ளியில் படிக்கும் வயதில் உள்ள மாணவர்களை பள்ளியில் படிக்க சேர்ப்பதற்கான அனைத்து பணிகளையும் அதிகாரிகளும், ஆசிரியர்களும் மேற்கொண்டு வருகின்றனர்.

    பி.எம்.ஸ்ரீ பள்ளிகளில் இருக்கும் மாணவர்களிடம் மத்திய அமைச்சர் அவரது நம்பிக்கை சார்ந்து பேசி உள்ளார். அவரது நம்பிக்கை சார்ந்து பேசியது அவரது இஷ்டம். அது குறித்து கருத்து சொல்ல முன்வரவில்லை.

    அறிவியல் சார்ந்து முற்போக்கு சிந்தனையோடு தந்தை பெரியார் வழியில் பள்ளிக்கல்வித்துறை தமிழக முதலமைச்சர் வழி காட்டுதலோடு செயல்பட்டு வருகிறது. அறிவை சார்ந்து இருக்கும் பாதையில் நாங்கள் செல்லும்போது எங்களோடு சேர்ந்து பயணிக்க ஆசைப்படுபவர்கள் எங்களோடு வரலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காலாண்டு, அரையாண்டு தேர்வு: அட்டவணைகளை வெளியிட்ட்டார் அமைச்சர் அன்பில் மகேஷ்.
    • பொதுத்தேர்வு கால அட்டவணை அக்டோபரில் வெளியிடப்படும் என தெரிவித்தார்.

    சென்னை:

    2025 – 26-ம் கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வு கால அட்டவணை அக்டோபரில் வெளியிடப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

    2025-26 கல்வியாண்டுக்கான காலாண்டு, அரையாண்டுத் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

    1 முதல் 12-ம் வகுப்புகளுக்கு செப்டம்பர் 18ல் தொடங்கி 26ம் தேதியில் காலாண்டுத் தேர்வு முடிவடைகிறது. செப்டம்பர் 27 முதல் 30-ம் தேதி வரை காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    டிசம்பர் 15-ம் தேதி அரையாண்டுத் தேர்வு தொடங்கி 23-ம் தேதியுடன் நிறைவடைகிறது. டிசம்பர் 24 முதல் ஜனவரி 1 வரை அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    2025 – 26-ம் கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வு கால அட்டவணை அக்டோபரில் வெளியிடப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆலோசனையின்படி, கடந்தாண்டு போலவே 2025-2026-ம் கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வு கால அட்டவணை அக்டோபர் மாதம் வெளியிடப்படும். இத்துடன் பள்ளிக் கல்வித்துறையின் (2025-2026) நாட்காட்டியில் குறிப்பிடப்பட்டுள்ள காலாண்டு/அரையாண்டுத் தேர்வுக்கான தேதிகள் அடங்கிய பக்கங்களை இணைத்துள்ளோம். மாணவர்கள் மகிழ்ச்சியுடன் தன்னம்பிக்கையோடு தயார் ஆகுங்கள் என பதிவிட்டுள்ளார்.

    • இபிஎஸ் மக்கள் கூட்டத்திற்கு முன் ஏதாவது பேச வேண்டும் என பேசிக் கொண்டிருக்கிறார்.
    • எங்கள் கட்சியில் நடக்கும் விவகாரங்கள் குறித்து எடப்பாடி பழனிச்சாமி கவலைப்பட தேவையில்லை.

    திருச்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    உங்களுடன் ஸ்டாலின் முகாம் அனைத்து இடங்களிலும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலமுடன் உள்ளார். இன்னும் 2 நாட்களில் அவர் வீடு திரும்புவார்.

    ஓரணியில் தமிழ்நாடு திட்டம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதை பொறுத்துக் கொள்ள முடியாமல் தான் சிலர் நீதிமன்றம் சென்று உள்ளார்கள். எது எப்படி இருந்தாலும் நீதிமன்ற உத்தரவை பின்பற்றி நாங்கள் செயல்படுவோம்.

    திட்டத்தின் பெயரை வைத்தும் சிலர் அரசியல் செய்து வருகிறார்கள். தமிழகத்தில் இந்த கல்வி ஆண்டுக்கான பள்ளி பொது தேர்வு கால அட்டவணைகள் இன்னும் ஒரு வாரத்தில் வெளியிடப்படும்.

    எடப்பாடி பழனிச்சாமி தற்போது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி விட்டார். மக்கள் கூட்டத்திற்கு முன் ஏதாவது பேச வேண்டும் என பேசிக் கொண்டிருக்கிறார். ஆனால் அது எதுவும் எடுபடவில்லை.

    அவர் மற்ற கட்சிகளை கூட்டணிக்கு அழைக்கிறார். ஆனால் அவருடைய அழைப்பை அனைவரும் நிராகரித்து வருகிறார்கள்.

    உதயநிதி ஸ்டாலின் தி.மு.க.வில் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட இளம் தலைவராக இருக்கிறார். எங்கள் கட்சியில் நடக்கும் விவகாரங்கள் குறித்து எடப்பாடி பழனிச்சாமி கவலைப்பட தேவையில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்து வருகிறது.
    • சுப்ரீம் கோர்ட்டில் மூத்த வழக்கறிஞர் வில்சன் மூலம் இன்று வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    சென்னை திருவல்லிக்கேணி லேடி வெலிங்டன் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறிய தாவது:-

    2205-2026ம் ஆண்டிற்காக பாட நூல்கள், சீருடைகள், நோட்டு புத்தகங்கள் மற்றும் கல்வி உபகரண பொருட்களை மாணவ மாணவிகளுக்கு வழங்கும் விழாவினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.

    இந்த ஆண்டு சென்னை மாநகராட்சி பள்ளியில் 16 ஆயிரம் மாணவ மாணவிகள் கூடுதலாக சேர்ந்துள்ளனர். தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்து வருகிறது. இந்த செயல்பாடு தொடர்ந்து நடைபெறும்.

    கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கான பணம் மத்திய அரசு இன்னும் விடுவிக்கவில்லை. ரூ.600 கோடி வரை நிலுவை பணம் வர வேண்டி உள்ளது. இதுக்குறித்து நேரடியாக சென்று வலியுறுத்தியுள்ளோம்.

    கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு தர வேண்டிய நிதியை ஒதுக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட கோரி சுப்ரீம் கோர்ட்டில் மூத்த வழக்கறிஞர் வில்சன் மூலம் இன்று வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    பள்ளிகள் தொடங்கப் பட்ட முதல் வாரத்தில் மாணவர்களுக்கு மனநலன் சார்ந்த அறிவுரைகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பள்ளி நிர்வாகத்தின் செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
    • பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

    கோவை கிணத்துக்கடவில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவி கடந்த 5-ந்தேதி பூப்படைந்துள்ளார். முழுஆண்டு தேர்வு எழுதிய மாணவியை மாதவிலக்கை காரணம் காட்டி, வகுப்பறையை பூட்டி வெளியில் அமர வைத்து தேர்வு எழுத வைத்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    இதுதொடர்பான வீடியோ வெளியான நிலையில், பள்ளி நிர்வாகத்தின் இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    கல்வித்துறை அதிகாரிகள் பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து, சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    தனியார் பள்ளி மீது துறை ரீதியான விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பள்ளி முதல்வர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    குழந்தைகள் மீதான ஒடுக்குமுறை எவ்வகையாயினும் பொறுத்துக்கொள்ள முடியாது. அன்பு மாணவி தனியாக அமரவில்லை! நாங்கள் இருக்கிறோம். இருப்போம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • மொழியை காக்க மொழிப்போரும் எங்களால் நடத்தமுடியும் என்பதை பெருமைபடுத்த இதுபோன்ற இலக்கிய நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது
    • தமிழக மக்கள் தொகையில் 6-ல் ஒருவர் அரசு பள்ளி மாணவராக இருப்பது எங்கள் துறைக்கு பெருமையாக உள்ளது.

    நெல்லை:

    பொருநை இலக்கிய திருவிழாவில் பள்ளி கல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி பேசியதாவது:-

    மொழியை காக்க மொழிப்போரும் எங்களால் நடத்தமுடியும் என்பதை பெருமைபடுத்த இதுபோன்ற இலக்கிய நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

    இந்தியாவிற்கே முன்னோ டியான திட்டம் இல்லம் தேடி கல்வி திட்டம். காணி மலைக்கிராமங்களிலும் இல்லம் தேடி கல்வி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. எந்த ஆட்சியிலும் இல்லாத வகையில் அனைத்து மாவட்டங்களிலும் புத்தக திருவிழா நடத்தப்படுகிறது.

    தமிழ சாகித்ய அகாடமி அமைப்பது குறித்த கோரிக்கைளை முதல்-அமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். தமிழின் பெருமைகளை பறைசாற்றும் விதமாக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. தமிழக மக்கள் தொகையில் 6-ல் ஒருவர் அரசு பள்ளி மாணவராக இருப்பது எங்கள் துறைக்கு பெருமையாக உள்ளது.

    குழந்தைகளுக்கு இலக்கியத்தை கொண்டு செல்வது என்பது நமது கடமையாக உள்ளது. அடிப்படை வாசிப்பை கூட பிற்போக்குவாதிகளின் பேராயுதமாக மாற்ற நினைக்கிறார்கள். முதல்-அமைச்சர் எழுத்தா ளர்களுக்கும், எழுத்துக்கும் கொடுக்கும் முக்கியதுவத்தின் அடையா ளமே கனவு இல்ல திட்டம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திருச்செந்தூர் சட்டப்பேரவை தொகுதியில் ஆறுமுகநேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று மாலை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
    • மாணவிகளின் பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வுடன் இருக்க ஆசிரியர்களை அறிவுறுத்தினார்

    ஆறுமுகநேரி:

    அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அனைத்து சட்டப்பேரவை தொகுதிகளிலும் உள்ள அரசுப்பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் விதத்தில் நம் பள்ளி நம் பெருமை என்ற ஆய்வுப்பயணத்தில் ஈடுபட்டுள்ளார்.

    இதன்படி திருச்செந்தூர் சட்டப்பேரவை தொகுதியில் ஆறுமுகநேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று மாலை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது அங்குள்ள 6-ம் வகுப்பு மற்றும் பிளஸ்- 1 வகுப்பு மாணவி களிடம் பாடங்கள் தொடர்பான வினாக்களை கேட்டறிந்தார்.பின்னர் வகுப்பறைகள், சுற்றுச்சுவர் மற்றும் கழிவறைகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    தொடர்ந்து மாணவிகள் மற்றும் ஆசிரியைகளை தனித்தனியாக சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.மேலும் மாணவிகளின் பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வுடன் இருக்க ஆசிரியர்களை அறி வுறுத்தினார். மாணவிகள் மற்றும் ஆசிரியைகள் வசதிக்காக பள்ளியின் அருகில் பஸ் நிறுத்தம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

    இந்த ஆய்வின் போது மாவட்ட கல்வி அதிகாரி தமிழ்செல்வி, பள்ளித் தலைமை ஆசிரியை சுப்புலட்சுமி, பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவரும் ஆதவா தொண்டு நிறு வன தலைவருமான பால குமரேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • மாவட்ட கல்வி முதன்மை அலுவலர்களுடன் இணையவழியில் காணொலி காட்சி மூலம் ஆலோசனை.
    • அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பது குறித்து கண்காணிக்க வலியுறுத்தல்.

    தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் மாவட்ட கல்வி முதன்மை அலுவலர்களுடன் இணையவழியில் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.

    அப்போது அவர், பள்ளிகள் திறப்பு மற்றும் தனியார் பள்ளிகளில் தமிழ் கட்டாயம் உள்ளிட்டவை குறித்து அதிகாரிகளிடம் பேசினார்.

    இதுகுறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியதாவது:-

    தமிழ் கட்டாய பாடம் என்பதை தனியார் பள்ளிகளில் பின்பற்றுகிறார்களா? தமிழ் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்களா? என்பதை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உறுதிப்படுத்த வேண்டும்.

    அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பது, பள்ளித் தூய்மை, விலையில்லாப் பொருட்களை உடனே வழங்குவது குறித்தும் கண்காணிக்க வேண்டும்.

    தமிழகத்தில் வரும் ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் முழுமையாக குறையவில்லை. தமிழ்நாட்டில் இன்று சென்னை, ஈரோடு, கடலூர், மதுரை, நாகப்பட்டினம், பாளையங்கோட்டை உள்பட 14 மாவட்டங்களில் வெளியில் சதம் அடித்தது.

    வானிலை மையத்தின் அறிக்கையின்படி ஜூன் 7ம் தேதிக்கு பிறகே வெயிலின் தாக்கம் குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜப்பான் சென்றுள்ளதால் இதுகுறித்து விரைவில் ஆலோசனை நடத்தியப் பிறகு பள்ளிகள் திறக்கப்படும்  தேதி குறித்து நாளை அறிவிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் மிச்சாங் புயலால் கடும் வெள்ள சேதம் ஏற்பட்டது.
    • சென்னை உள்பட 4 மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு நடத்துவது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படுகிறது.

    சென்னை:

    சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் மிச்சாங் புயலால் கடும் வெள்ள சேதம் ஏற்பட்டது. இந்த மழை வெள்ளத்தால் மக்கள் பெரிய அளவில் சிரமப்பட்டனர். லட்சக்கணக்கானோர் வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் பொருட்கள் அனைத்தையும் இழந்து தவிக்கின்றனர்.

    இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    கனமழையால் பாதிக்கப்பட்ட சென்னை உள்ப்ட 4 மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு நடத்துவது தொடர்பாக இன்று முக்கிய முடிவு எடுக்கப்படுகிறது.

    அதிகாரிகளுடன் இன்று ஆன்லைனில் ஆய்வுக் கூட்டம் நடத்திய பிறகு முடிவு அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.

    • வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் விழா சிறப்புரையாற்றுகிறார்.
    • தமிழகம் முழுவதும் இருந்து 380 ஆசிரியர்கள் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    சேலம்:

    கற்பித்தலில் புதுமையை புகுத்தியும் மற்றும் தொழில் நுட்ப திறனை பயன்படுத்தி கற்பித்தலை செய்யும் ஆசிரியர்களை கண்டறிந்து அவர்களின் கல்வித்திறன் மற்றும் கற்பித்தல் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் கனவு ஆசிரியர் விருது வழங்கப்படுகிறது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் இருந்து 380 ஆசிரியர்கள் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த விருது வழங்கும் விழா நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள இளையாம்பாளையம் விவேகானந்தா மகளிர் பொறியியல் கல்லூரி கலையரங்கில் நாளை (19-ந் தேதி) காலை 9 மணிக்கு தொடங்குகிறது. இந்த விழாவில் 380 பேருக்கும் விருதுகளை பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கி விழா பேருரையாற்றுகிறார். வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் விழா சிறப்புரையாற்றுகிறார்.

    பள்ளி கல்வி இயக்குனர் அறிவொளி வரவேற்று பேசுகிறார். பள்ளி கல்வி துறை அரசு செயலாளர் குமரகுருபரன் திட்ட விளக்க உரையாற்றுகிறார். மாவட்ட கலெக்டர் டாக்டர் உமா தலைமை உரையாற்றுகிறார். எம்.பி.க்கள் ராஜேஷ்குமார் சின்ராஜ், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழக தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி, திருச்செங்கோடு தொகுதி எம்.எல்.ஏ. ஈஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்து உரை யாற்றுகிறார்கள். விழாவில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். தொடக்க கல்வி இயக்குனர் கண்ணப்பன் நன்றி கூறுகிறார்.

    இந்த விழாவில் விருது பெறுபவர்கள் குடும்பத்துடன் கலந்து கொள்ளும் வகையில் தங்கும் இடம், உணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • காலை உணவுத்திட்டத்தால் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 2.23 இலட்சம் மாணவர்கள் பலன் பெறுவார்கள்.
    • இத்திட்டம் இந்திய ஒன்றியத்திற்கு மட்டுமல்ல, உலகிற்கே வழிகாட்டும் திட்டமாக அமைந்துள்ளது.

    மதிய உணவுத் திட்டத்தின் முன்னோடி காமராஜர் பிறந்தநாளான நேற்று அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தின் விரிவாகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு உணவு பரிமாறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பள்ளி குழந்தைகளுடன் அமர்ந்து காலை உணவருந்தி மகிழ்ந்தார்.

    இந்நிலையில், காலை உணவுத் திட்டத்திற்கு "மு.க.ஸ்டாலின் காலை உணவுத் திட்டம்" எனும் பெயர் சூட்ட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கோரிக்கை விடுத்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டு எக்ஸ் பக்க பதிவில், "தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்நூற்றாண்டின் மிகச்சிறந்த திட்டமான "முதலமைச்சர் காலை உணவுத் திட்டத்தை" இன்று ஊரகப் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் விரிவு படுத்தியுள்ளார்கள்.

    இதன் மூலம் புதிதாக 3995 அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 2.23 இலட்சம் மாணவர்கள் பலன் பெறுவார்கள். ஒட்டுமொத்தமாக 34,987 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 22 இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைகிறார்கள்.

    22 இலட்சம் மாணவர்களின் வயிற்றுப் பசியை போக்கி, அவர்களின் பெற்றோர்களுக்கு மன நிறைவை தந்துள்ள தமிழ்நாட்டின் தாயுமானவர் மு.க.ஸ்டாலின் அவர்களை வணங்குகின்றோம்.

    இத்திட்டம் இந்திய ஒன்றியத்திற்கு மட்டுமல்ல, உலகிற்கே வழிகாட்டும் திட்டமாக அமைந்துள்ளது.

    சட்டமன்றத்தில் தெரிவித்ததை இங்கே மீண்டும் பதிவு செய்கின்றேன். இந்த மகத்தான திட்டத்திற்கு "மு.க.ஸ்டாலின் காலை உணவுத் திட்டம்" எனும் பெயர் சூட்ட வேண்டும். கடல் தாண்டி உலகம் முழுக்க இத்திட்டம் பரவ வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார். 

    • அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு தன்னம்பிக்கையூட்டும் நிகழ்ச்சி.
    • என் ஆசிரியர் சங்கரை அவமானப்படுத்தி பேசிய மகாவிஷ்ணுவை சும்மாக விடமாட்டேன் என்றார்.

    சென்னை அசோக்நகரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு தன்னம்பிக்கையூட்டும் நிகழ்ச்சி என்ற பெயரில் மூன்று நாட்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்று நடந்தது.

    இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆன்மிகச் சொற்பொழிவாளர் மகா விஷ்ணு என்பவர், மாற்றுத்திறனாளிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையிலும், பகுத்தறிவுக்கும் அறிவியலுக்கும் புறம்பாகப் பேசியதாக கூறப்படுகிறது. மாணவிகள் அழகாக இல்லாததற்கு கடந்த பிறவிகளில் செய்த பாவம் தான் காரணம் என்று பேசியுள்ளார்.

    அரசு பள்ளிக்கூடங்களில் ஆன்மிகத்திற்கு இடமில்லை என்று கேள்வி எழுப்பிய ஆசிரியருக்கு ஆன்மிகச் சொற்பொழிவாளர் மகா விஷ்ணு ஆன்மிகம், மறுபறவி, பாவ-புண்ணியம்" ஆகியவை பற்றி பேசினார்.

    அதேபோல் அரசு பள்ளிக்கூடங்களில் ஆன்மீகம் பேசக்கூடாது என்று எந்த சட்டம் கூறுகிறது என்றும் கேள்வி எழுப்பினார். மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரியை விட ஆசிரியர்கள் பெரியவர்களா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

    இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியான நிலையில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மூடநம்பிக்கைகள் குறித்து பேசியவரை, அதே மேடையில் வைத்து கேள்வி கேட்ட ஆசிரியருக்கு பாராட்டு தெரிவித்தார்.

    மேலும், "என்னுடைய கட்டுப்பாட்டில் உள்ள இடத்திற்கு வந்து, என் ஆசிரியர் சங்கரை அவமானப்படுத்தி பேசிய மகாவிஷ்ணுவை சும்மாக விடமாட்டேன்" என்றும் கூறினார்.

    இதுதொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    பள்ளி வளாகம் என்பது ஆசிரியர்களுக்கானது. நமது மாணவச் செல்வங்களுக்கானது. நமது பள்ளிக்குள் நுழைந்து மாணவர்களிடம் உரையாடுபவர்களின் பின்புலத்தை ஆராய வேண்டிய கடமை பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு உண்டு.

    "எந்தவொரு கருத்தையும் அறிவியல் ரீதியாக பகுத்தறிந்து சிந்திக்க வேண்டும்" என்பதை நாம் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

    கல்வியால் உலகை வெல்வோம். அறிவியல் மனப்பான்மையை வளர்ப்போம்.

    "கல்வியே சமத்துவம் மலரச் செய்யும் மிகப்பெரிய மிகப்பெரிய ஆயுதம்" - மு.க.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×