கட்டாய கல்விக்கான நிதி: மத்திய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு- அமைச்சர் அன்பில் மகேஷ்

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்து வருகிறது.சுப்ரீம் கோர்ட்டில் மூத்த வழக்கறிஞர் வில்சன் மூலம் இன்று வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கட்டாய கல்விக்கான நிதி: மத்திய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு- அமைச்சர் அன்பில் மகேஷ்
Published on

சென்னை திருவல்லிக்கேணி லேடி வெலிங்டன் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறிய தாவது:-

2205-2026ம் ஆண்டிற்காக பாட நூல்கள், சீருடைகள், நோட்டு புத்தகங்கள் மற்றும் கல்வி உபகரண பொருட்களை மாணவ மாணவிகளுக்கு வழங்கும் விழாவினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.

இந்த ஆண்டு சென்னை மாநகராட்சி பள்ளியில் 16 ஆயிரம் மாணவ மாணவிகள் கூடுதலாக சேர்ந்துள்ளனர். தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்து வருகிறது. இந்த செயல்பாடு தொடர்ந்து நடைபெறும்.

கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கான பணம் மத்திய அரசு இன்னும் விடுவிக்கவில்லை. ரூ.600 கோடி வரை நிலுவை பணம் வர வேண்டி உள்ளது. இதுக்குறித்து நேரடியாக சென்று வலியுறுத்தியுள்ளோம்.

கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு தர வேண்டிய நிதியை ஒதுக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட கோரி சுப்ரீம் கோர்ட்டில் மூத்த வழக்கறிஞர் வில்சன் மூலம் இன்று வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பள்ளிகள் தொடங்கப் பட்ட முதல் வாரத்தில் மாணவர்களுக்கு மனநலன் சார்ந்த அறிவுரைகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com