என் மலர்
நீங்கள் தேடியது "பள்ளிகள் திறப்பு"
- தாம்பரம் ரெயில் நிலையத்தில் இன்று மக்கள் கூட்டம் அலைமோதியது.
- வாகனங்கள் ஊர்ந்தபடி சென்னைக்குள் நுழைந்தன.
பள்ளிகளுக்கு தேர்வு முடிந்து விடுமுறை விடப்பட்டதாலும், ஆயுதபூஜை விடுமுறையையொட்டியும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் தென் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர். விடுமுறை முடிந்து இன்று(திங்கட்கிழமை) பள்ளிகள் திறக்கப்பட்டது.
இதனால் சொந்த ஊர் சென்றவர்கள் நேற்று முதல் மீண்டும் சென்னைக்கு திரும்பி வரத் தொடங்கினர். கார், வேன், அரசு மற்றும் தனியார் பஸ்களிலும், இருசக்கர வாகனங்களில் ஒரே நேரத்தில் சென்னை நோக்கி பொதுமக்கள் வந்ததால் ஜி.எஸ்.டி. சாலையில் பெருங்களத்தூர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் ஊர்ந்தபடி சென்னைக்குள் நுழைந்தன.
இதே போல நேற்று மாலை பெய்த மழையால் ஜி.எஸ்.டி. சாலையில் ஆங்காங்கே மழைநீர் தேங்கியதால் தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் பயணிகள் ஒரே நேரத்தில் திரண்டதால், தாம்பரம் ரெயில் நிலையத்தில் இன்று மக்கள் கூட்டம் அலைமோதியது. ரெயில் நிலையத்திலிருந்து வெளியேறும் பயணிகளால் மிகுந்த நெரிசல் ஏற்பட்டது. மேலும் தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி செல்லும் ரெயில்களிலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
- பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே மாணவா்களுக்கு மதிப்பீடு செய்யப்பட்ட காலாண்டு தோ்வு விடைத்தாள்கள் வினியோகிக்கப்பட உள்ளது.
- 2-ம் பருவத்துக்காக பாட நூல்களையும் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் காலாண்டுத் தோ்வுகள் மற்றும் முதல் பருவத் தோ்வுகள் கடந்த மாதம் 10-ந்தேதி தொடங்கி 26-ந்தேதி வரை நடைபெற்றன. தொடா்ந்து மாணவா்களுக்கு கடந்த 27-ந்தேதி முதல் காலாண்டு விடுமுறை விடப்பட்டது.
இந்த விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் இன்று திறக்கப்பட்டன. பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே மாணவா்களுக்கு மதிப்பீடு செய்யப்பட்ட காலாண்டு தோ்வு விடைத்தாள்கள் வினியோகிக்கப்பட உள்ளது. மேலும், 2-ம் பருவத்துக்காக பாட நூல்களையும் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முன்னதாக விடுமுறைக்கு பின்பு திறக்கப்பட உள்ளதால் பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
- பள்ளிக் கல்வித் துறை சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் அறிவுறுத்தல்.
- முதல் நாளிலேயே மாணவா்களுக்கு மதிப்பீடு செய்யப்பட்ட விடைத்தாள்கள் வினியோகிக்கப்பட வேண்டும்.
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் காலாண்டுத் தோ்வுகள் மற்றும் முதல் பருவத் தோ்வுகள் கடந்த மாதம் 10-ந்தேதி தொடங்கி 26-ந்தேதி வரை நடைபெற்றன. தொடா்ந்து மாணவா்களுக்கு கடந்த 27-ந்தேதி முதல் காலாண்டு விடுமுறை விடப்பட்டது.
இந்த விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் வருகிற 6-ந்தேதி (திங்கட்கிழமை) திறக்கப்பட உள்ளன. விடுமுறைக்கு பின்பு திறக்கப்பட உள்ளதால் பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து பள்ளிக் கல்வித் துறை சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதன்படி, பள்ளிகளில் வகுப்பறைகள் உள்பட வளாகம் முழுவதும் தூய்மைப் பணிகள் மேற் கொள்ள வேண்டும். பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே மாணவா்களுக்கு மதிப்பீடு செய்யப்பட்ட காலாண்டு தோ்வு விடைத்தாள்கள் வினியோகிக்கப்பட வேண்டும்.
மேலும், 2-ம் பருவத்துக்காக பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள பாட நூல்களையும் உடனே வழங்க வேண்டும். பருவ மழையை முன்னிட்டு பள்ளிகளில் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடா்பாக ஏற்கெனவே வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களைப் பின்பற்றி செயல்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்களை கல்வி அலுவலர்கர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை வழங்கி உள்ளது.
- கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன.
- பள்ளிகளுக்கு உற்சாகமாக வந்த மாணவர்களை ஆசிரியர்கள் வரவேற்றனர்.
சென்னை:
தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. பள்ளிகளுக்கு உற்சாகமாக வந்த மாணவர்களை ஆசிரியர்கள் வரவேற்றனர். இதனை தொடர்ந்து விடுமுறைக்கு பின் பள்ளிக்கு வந்ததால் மாணவர்கள் தங்களின் விடுமுறையில் செய்தவற்றை நண்பர்களிடம் கூறி மகிழ்ந்தனர்.
இதனை தொடர்ந்து, பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச பாடப்புத்தகங்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகம் செய்துள்ளது.
இந்த நிலையில், சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள லேடி வெல்லிங்டன் மேல்நிலைப்பள்ளியில் முதல் நாள் பள்ளிகளுக்கு வந்த மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இனிப்புகளை வழங்கினார். மேலும், மாணவர்களுக்கு புதிய பாடநூல்கள், சீருடைகளை வழங்கினார். இதனிடையே, பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் அவர் கலந்துரையாடினார்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் சேகர்பாபு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தயாநிதி மாறன் எம்.பி., மேயர் பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
- பள்ளிக்கு உற்சாகமாக வந்த மாணவர்களை ஆசிரியர்கள் வரவேற்றனர்.
- கடந்தாண்டு 6 ஆயிரம் மாணவர்கள் புதியதாக சேர்ந்தனர்.
சென்னை:
கோடை விடுமுறை முடிந்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் சில தனியார் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. பள்ளிக்கு உற்சாகமாக வந்த மாணவர்களை ஆசிரியர்கள் வரவேற்றனர்.
அடுத்த வகுப்பிற்கு செல்லும் பயம் கலந்த சந்தோஷம், நண்பர்களை சந்தித்த மகிழ்ச்சி என மாணவர்களின் பல உணர்வுகள் வெளிப்பட்டது.
மேலும் பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச பாடப்புத்தகங்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கப்படுகிறது.
இதனிடையே, சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை இருமடங்காக அதிகரித்துள்ளது. கடந்தாண்டு 6 ஆயிரம் மாணவர்கள் புதியதாக சேர்ந்த நிலையில், இந்தாண்டு 16,490 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். அதிகபட்சமாக LKG, UKG-யில் 7,500 மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பள்ளியில் ஒரு தலைமை ஆசிரியர், ஒரு உதவி ஆசிரியர் என 2 பேர் பணிபுரிந்த நிலையில் கடந்த மாதம் தலைமை ஆசிரியர் ஓய்வு பெற்றார்.
- பேச்சுத் துணைக்கு, விளையாடுவதற்கு கூட யாரும் இல்லாததால் குழந்தை பள்ளிக்கு செல்வதற்கு பயப்படுகிறாள்.
தொண்டி:
திருவாடானை யூனியனில் 112 அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகள் இன்று கோடை விடுமுறை முடிந்து மீண்டும் திறக்கப்படுகிறது. இந்நிலையில் தொண்டி அருகே தளிர் மருங்கூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு ஒரே ஒரு மாணவிக்காக மட்டுமே பள்ளி திறக்கப்பட உள்ளது.
இப்பள்ளியில் தொடர்ந்து பல ஆண்டுகளாக மாணவர் சேர்க்கை நடைபெறாத நிலையில் கடந்த ஆண்டு 5-ம் வகுப்பில் ஒரு மாணவன், 2-ம் வகுப்பில் ஒரு மாணவி என இருவர் மட்டுமே படித்தனர்.
இந்த ஆண்டு இப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்த மாணவன் இங்கிருந்து 6-ம் வகுப்புக்கு வேறு பள்ளிக்கு செல்கிறான். இதனால் 2-ம் வகுப்பில் இருந்து 3-ம் வகுப்புக்கு செல்லும் ஒரே ஒரு மாணவி மட்டும் தற்போது படித்து வருகிறாள்.
இப்பள்ளியில் ஒரு தலைமை ஆசிரியர், ஒரு உதவி ஆசிரியர் என 2 பேர் பணிபுரிந்த நிலையில் கடந்த மாதம் தலைமை ஆசிரியர் ஓய்வு பெற்றார். இதனால் தற்போது ஒரு உதவி ஆசிரியர் மட்டுமே பணிபுரிந்து வருகிறார். தற்போது வரை இந்த பள்ளியில் மாணவர் சேர்க்கை ஏதும் நடைபெறாத நிலையில் இன்று ஒரே ஒரு மாணவிக்காக மட்டுமே அரசு பள்ளி திறக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து மாணவியின் பெற்றோர் கூறுகையில், தளிர்மருங்கூர் அரசு பள்ளியில் மாணவர்கள் இல்லாவிட்டால் பள்ளியை மூடி விடுவார்கள் என்று தெரிந்ததால் தனியார் பள்ளியில் படித்து வந்த என் குழந்தையை இந்த பள்ளியில் சேர்த்தேன். இப்போது என் மகள் ஒருவர் மட்டுமே படிக்க உள்ளார். பேச்சுத் துணைக்கு, விளையாடுவதற்கு கூட யாரும் இல்லாததால் குழந்தை பள்ளிக்கு செல்வதற்கு பயப்படுகிறாள். இப்பள்ளியில் குழந்தைகள் இல்லாத நிலையில் இப்பள்ளி மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே அரசு பள்ளி ஆசிரியர்கள் பெற்றோர்களை அழைத்து பேசி மாணவர்கள் சேர்க்கையை தீவிரப்படுத்த வேண்டும் என்றனர்.
- கடந்த 10 ஆண்டுகளாக தேன்கனிக்கோட்டையில் உள்ள வனத்துறை சோதனைச்சாவடி அருகில் சலூன் கடை நடத்தி வருகிறார்.
- 60-க்கும் மேற்பட்ட மாணவர்கள் முடி வெட்ட சலூன் கடைக்கு வந்தனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே தல்சூர் கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி. இவர் கடந்த 10 ஆண்டுகளாக தேன்கனிக்கோட்டையில் உள்ள வனத்துறை சோதனைச்சாவடி அருகில் சலூன் கடை நடத்தி வருகிறார். இன்று (திங்கட்கிழமை) கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் நேற்று ஒரு நாள் மட்டும் ஏழை, எளிய மாணவர்களுக்கு ஒரு ரூபாயில் மூர்த்தி சிகை அலங்காரம் செய்தார்.
இதை கேள்விப்பட்டு 60-க்கும் மேற்பட்ட மாணவர்கள் முடி வெட்ட சலூன் கடைக்கு வந்தனர். அனைவருக்கும் தலா ஒரு ரூபாய் சலுகை கட்டணத்தில் மூர்த்தி சிகை அலங்காரம் செய்தார்.
இதுகுறித்து மூர்த்தி கூறும் போது, 'இந்த ஆண்டுபள்ளிகள் திறப்பை முன்னிட்டு எனது கடையில் முதல் முறையாக மாணவர்களுக்கு ஒரு ரூபாய்க்கு முடி வெட்டினேன். அந்த வகையில் 60-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வந்து முடி வெட்டிச்சென்றனர்' என்றார்.
- மழலைப் பிஞ்சுகள் பள்ளி பருவத்தை தொடங்க உள்ளனர்.
- இலவச பாடப்புத்தகங்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
சென்னை:
கோடை விடுமுறை முடிந்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் சில தனியார் பள்ளிகள் இன்று திறக்கப்பட இருக்கின்றன. வழக்கமாக கோடை வெப்பத்தின் தாக்கம் இருக்கும்.
அதனால் பள்ளிகள் திறப்பு சற்று தள்ளிப்போகும். ஆனால் இந்த ஆண்டு அதற்கான சூழல் அமையவில்லை. இதனால் திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்பட உள்ள இந்த சூழலில் தமிழ்நாட்டில் மீண்டும் வெப்பத்தின் தாக்கம் சற்று அதிகரிக்க தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள் ஏற்கனவே செய்து முடிக்கப்பட்டுவிட்டன. அந்த வகையில் இன்று பள்ளிக்கு மாணவ-மாணவிகள் உற்சாகமாக திரும்ப இருக்கின்றனர். அதிலும் மழலைப் பிஞ்சுகள் பள்ளி பருவத்தை தொடங்க உள்ளனர். அவர்களை உற்சாகமாக வரவேற்க ஆசிரியர்கள் தயாராக இருக்கின்றனர்.
மேலும் பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளிலேயே அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச பாடப்புத்தகங்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
- கடந்த ஏப்ரல் 25ம் தேதி (மறுநாள்) முதல் கோடை விடுமுறை தொடங்கியது.
- ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தொடக்கக்கல்வி இயக்குனர் திட்டவட்டமாக தெரிவித்தார்.
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வி இயக்குனர் திட்டவட்டமா தெரிவித்தார்.
தமிழகத்தில் 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதித்தேர்வு ஏப்ரல் 24ம் தேதி முடிவடைந்த நிலையில் 25ம் தேதி (மறுநாள்) முதல் கோடை விடுமுறை தொடங்கியது.
இதனால், விடுமுறை நாட்களை இனிதே செலவிட பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை சுற்றுலா தலங்களுக்கு அழைத்துச் சென்றனர்.
இதனால், தமிழகத்தில் உள்ள பல முக்கிய சுற்றுலா தலங்கள் பொது மக்களின் கூட்டத்தால் அலைமோதியது.
இதற்கிடையே, கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வெயிலும் அதிகமாக இருந்தது.
இதனால், பள்ளிகள் திறக்கும் தேதி தள்ளிப்போட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. ஆனால், அதற்கு," பள்ளி திறப்பில் எந்த மாற்றமும் இல்லை என்றும் வரும் ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்" என்றும் தொடக்கக்கல்வி இயக்குனர் திட்டவட்டமாக தெரிவித்தார்.
மேலும் அவர் "அரசு- அரசு நிதி உதவி பெறும் ஆரம்பம் மற்றும் நடுநிலைப் பள்ளிகளை திறப்பதற்கு தயாராக வேண்டும்" என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில், கோடை விடுமுறை முடிந்து நாளை அரசு, அரசு உதவிப்பெறும், தனியார் உள்ளிட்ட பள்ளிகள் திறக்கப்படுகிறது.
இதை முன்னிட்டு, பல்வேறு மாவட்டங்களில் அரசு தொடக்கப் பள்ளியில் வாழை மரம், தோரணம் என மாணவர்களை கவரும் வகையிலும், அவர்களை வரவேற்கவும் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
- தமிழகத்தில் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் ஜூன் மாதம்திறக்கப்படுகிறது.
- பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளி கல்வித்துறை விழகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வரும் ஜூன் 9ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தகவல் வெளியானது. இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது.
அதன்படி, தமிழகத்தில் பள்ளிகள் திட்டமிட்டபடி ஜூன் 2ம் தேதி திறக்கப்படும் என்று தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, 1ம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் ஜூன் 2ல் பள்ளிகள் திட்டமிட்டப்படி திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது.
மேலும், கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2-ம் தேதி பள்ளிகளை திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளி கல்வித்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- மதிய உணவு இடைவேளை முடிந்து சிறார் பருவ இதழ் படிக்க வைக்க வேண்டும்.
- மாணவர்களுக்கு பள்ளி வளாகத்தை தூய்மை செய்வது, வாரம் ஒரு முறை நன்னெறி வகுப்பு நடத்த வேண்டும்.
1 முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் ஜூன் 2ல் பள்ளிகள் திட்டமிட்டப்படி திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
மேலும், கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2ஆம் தேதி பள்ளிகளை திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளி கல்வித்துறை விழகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
முதலமைச்சரின் காலை உணவு திட்டம் அனைத்து மாணவர்களுக்கும் தரமாகவும், தாமதமின்றியும் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.
மதிய உணவு இடைவேளை முடிந்து சிறார் பருவ இதழ் படிக்க வைக்க வேண்டும்.
மாணவர்களுக்கு பள்ளி வளாகத்தை தூய்மை செய்வது, வாரம் ஒரு முறை நன்னெறி வகுப்பு நடத்த வேண்டும்.
செவ்வாய் கிழமைகளில் 6-12 வகுப்பினருக்கு போதைப்பொருள் எதிர்ப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் போன்ற நெறிமுறைகள் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தமிழையும் தமிழினத்தையும் காக்க பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் வழியில் தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும்.
- கோடை விடுமுறைக்குப்பின் ஜூன் 2-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும்.
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் 1,350-வது சதய விழாவை ஒட்டி திருச்சியில் உள்ள அவரது சிலைக்கு தமிழக அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
திருச்சி ஒத்தகடையில் உள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அவரைத்தொடர்ந்து முத்தரையரின் சிலைக்கு அமைச்சர்கள் கே.என்.நேரு, மெய்யநாதன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதைத்தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
* தமிழையும் தமிழினத்தையும் காக்க பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் வழியில் தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும்.
* கோடை விடுமுறைக்குப்பின் ஜூன் 2-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும்.
* வெயிலின் தாக்கம் குறைவாகவே உள்ளதால் திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.






