search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "School open"

    • பள்ளிகளில் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் சோதனை.
    • பெற்றோர்கள் பயப்படாமல் பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்ப அறிவுரை.

    சென்னையில் உள்ள 13 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. ஒரே

    கோபாலபுரம், அண்ணா நகர், சாந்தோம், ஜெ.ஜெ. நகர் உள்ளிட்ட பகுதியில் உள்ள 13 தனியார் பள்ளிகளுக்கு ஒரே இ-மெயில் ஐடியில் இருந்து வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.

    வெடிகுண்டு மிரட்டல் வந்த பள்ளிகளில் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

    மேலும், மிரட்டல் விடுத்த நபர் மீது அந்தந்த காவல் நிலையங்களில் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டல் வழக்கை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னையில் தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விவகாரத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    தொடர்ந்து, வெடிகுண்டு மிரட்டல் அச்சத்தால் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படும் என பெற்றோர்கள் எதிர்பார்த்தனர்.

    இந்நிலையில், சென்னையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட 13 பள்ளிகளும் நாளை வழக்கம்போல் இயங்கும் என சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.

    மேலும், " காவல் துறையினர் உரிய நடவடிக்கையை எடுத்து வருகின்றனர். பெற்றோர்கள் பயப்படாமல் பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டும்" எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • ராகுல் காந்தி ஜூன் 29, 30-ம் தேதிகளில் மணிப்பூரில் பயணம் மேற்கொண்டார்.
    • கலவரம் மற்றும் வன்முறையால் மணிப்பூர் பாதிப்பு அடைந்துள்ளது.

    இம்பால்:

    மணிப்பூரில் கடந்த மே மாதம் 3-ம் தேதி இரு சமூகத்தினருக்கிடையே கலவரம் மூண்டது. இதில் சுமார் 100 பேர் பலியானார்கள்.

    மோதலைத் தூண்டும் வகையில் சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பப்படுவதை தடுக்க மே 3-ம் தேதி இணையதள சேவைக்கு தடை விதிக்கப்பட்டது.

    இதற்கிடையே, மணிப்பூரில் முதலமைச்சர் பிரேன் சிங் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் வரும் புதன்கிழமை முதல் இயங்கும் என தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், 2 மாத காலத்துக்கு பிறகு மணிப்பூரில் இன்று 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறக்கப்பட்டன. முதல் நாளில் மாணவர்களின் வருகை குறைவான அளவே இருந்தது.

    மாநிலத்தில் அமைதியைக் கொண்டு வருவதற்கான நடவடிக்கையாக பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • கலவரம் மற்றும் வன்முறையால் மணிப்பூர் பாதிப்பு அடைந்துள்ளது.
    • ராகுல் காந்தி ஜூன் 29, 30-ம் தேதிகளில் அங்கு பயணம் மேற்கொண்டார்.

    இம்பால்:

    மணிப்பூரில் கடந்த மே மாதம் 3-ம் தேதி இரு சமூகத்தினருக்கிடையே கலவரம் மூண்டது. இதில் சுமார் 100 பேர் பலியானார்கள். தொடர்ந்து அடிக்கடி வன்முறை பரவி வரும் சூழலில் மக்கள் அச்சத்துடன் உள்ளனர்.

    மோதலைத் தூண்டும் வகையில் சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பப்படுவதை தடுக்க மே 3-ம் தேதி இணையதள சேவைக்கு தடை விதிக்கப்பட்டது. கலவரம் எதிரொலியாக இணையதள சேவைக்கான தடை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டது.

    இந்நிலையில், மணிப்பூரில் முதலமைச்சர் பிரேன் சிங் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

    இந்தக் கூட்டத்தில், மாநிலத்தின் பிரதான தொழிலாக இருக்கும் விவசாயம் மீண்டும் சீரான முறையில் நடைபெறுவதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். விவசாயிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

    விரைவில் மாநிலம் முழுவதும் இயல்புநிலை திரும்ப வேண்டும்.

    வன்முறை குழுக்கள் உருவாக்கியுள்ள பதுங்கு குழிகள் அழிக்கப்பட வேண்டும். 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் வரும் புதன்கிழமை முதல் இயங்கும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

    • குழந்தைகளை நேரு வித்தியாசமாக குதிரையில் பள்ளிக்கு அழைத்து சென்றார்.
    • குழந்தைகளை வரவேற்க தோரணங்கள் பள்ளியில் கட்டப்பட்டிருந்தன.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்டது.

    புதுவை லாஸ்பேட்டை அசோக் நகரை சேர்ந்த நேரு ஜிப்மரில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மகள் ஹனாஅமிழ்தினி (6). இவர் பாக்குமுடையான்பேட்டை அரசு தொடக்கப்பள்ளியில் 2-ம் வகுப்பு படிக்கிறார். தனது மகன் ஹனியல் யாழ் இன்பனை(4) இதே பள்ளியில் எல்.கே.ஜி. சேர்த்துள்ளார். கோடை விடுமுறைக்கு பின் இன்று பள்ளிகள் தொடங்கின.

    தனது குழந்தைகளை நேரு வித்தியாசமாக குதிரையில் பள்ளிக்கு அழைத்து சென்றார். ரூ.5 ஆயிரத்துக்கு வாடகைக்கு குதிரையை பெற்ற நேரு, தனது குழந்தைகளை அதில் ஏற்றி வீட்டிலிருந்து பள்ளிக்கு அழைத்து சென்றார். இதை வீதியில் மக்கள் அனைவரும் ஆச்சர்யத்தோடு பார்த்தனர்.

    இதனை பள்ளிக்கு வந்த பிற குழந்தைகள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர். அவர்களையும் குதிரையில் ஏற்றி சிறிது தூரம் அழைத்துச் சென்று பின் பள்ளியில் இறக்கிவிட்டார். பள்ளிக்கு வந்திருந்த பெற்றோர் பலரும் இதனை ஆர்வத்தோடு புகைப்படம் எடுத்தனர்.

    இதுகுறித்து குழந்தைகளின் தந்தை நேரு கூறும்போது, புதுவையில் அரசு பள்ளியில் அனைத்து சலுகைகளும் கிடைக்கிறது. தரமான கல்வி வழங்கப்படுகிறது. பெற்றோர் அனைவரும் அரசு பள்ளியில் தங்களது பிள்ளைகளை சேர்க்க வேண்டும். இதை வலியுறுத்தும் வகையிலும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் அனைவரின் கவனத்தை ஈர்க்க குதிரையை வாடகைக்கு எடுத்து என் குழந்தைகளை அழைத்து வந்து பள்ளியில் சேர்த்துள்ளேன் என்றார்.

    குழந்தைகளை வரவேற்க தோரணங்கள் பள்ளியில் கட்டப்பட்டிருந்தன. பொம்மலாட்ட கலைஞர்கள் ஆடி, பாடி மகிழ்ச்சியோடு குழந்தைகளை வரவேற்றனர்

    • கோடை வெயிலின் தாக்கத்தால் பள்ளி திறப்பு தேதி தள்ளிவைக்கப்பட்டது.
    • தமிழகத்தில் இன்று 6 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன.

    நெல்லை:

    தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்பட இருந்த நிலையில், கோடை வெயிலின் தாக்கத்தால் பள்ளி திறப்பு தேதி தள்ளிவைக்கப்பட்டது.

    பள்ளிகள் சுத்தம்

    அதன்பின்னர் இன்று 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரைக்கும், வருகிற 14-ந்தேதி 1 முதல் 5-ம் வகுப்பு வரைக்கும் பள்ளிகள் திறக்கப்படுவதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி தமிழகத்தில் இன்று 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலானவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன.

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பள்ளிகள் திறப்பையொட்டி ஏற்கனவே அனைத்து பள்ளிகளும் வர்ணம் பூசப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டு விட்டது. இதேபோல் மாவட்டங்களில் சிறிய பழுதடைந்த பள்ளிகளும் பழுது பார்க்கப்பட்டது.

    பூங்கொத்துடன் வரவேற்பு

    நெல்லை மாவட்டத்தில் முதல் நாளான இன்று பள்ளிகள் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மாணவ-மாணவிகளை உற்சாகமாக வரவேற்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டு இருந்ததால் பெரும்பாலான பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் உள்பட அனைத்து ஆசிரியர்களும் மாணவ-மாணவிகளுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

    டவுன் கல்லணை பெண்கள் பள்ளியில் மேயர் சரவணன் மாணவிகளுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பேட்டை ராணி அண்ணா மகளிர் பள்ளியில் மாணவி களுக்கு சாக்லெட் கொடுத்து வரவேற்றார்.

    இதேபோல் மாவட்டம் முழுவதிலும் மாணவ-மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டது. சீருடை அணிந்து உற்சாகமாக வந்த மாணவர்கள் காலையில் இறை வணக்கத்துடன் தங்களது படிப்பை தொடங்கினர்.

    முதல் நாளிலேயே பாடங்களை நடத்தக்கூடாது என்ற அரசின் உத்தரவால் மாணவர்களின் விடுமுறை காலம் குறித்து ஆசிரியர்கள் கேட்டறிந்தனர். அதே நேரத்தில் பெரும்பாலான பள்ளிகளில் முதல் நாளிலேயே அனை வருக்கும் பாடப் புத்தகங்கள் வழங்கப் பட்டு விட்டன.

    போக்குவரத்து அதிகரிப்பு

    பள்ளிகள் திறப்பையொட்டி இன்று காலையிலேயே மாநகர பகுதிகளில் அதிக அளவு ஆட்டோக்கள், பள்ளி பஸ், வேன்கள் நடமாட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதனால் சற்று போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதேபோல் தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களிலும் 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் இன்று திறக்கப்பட்டது. மாணவர்கள் உற்சாகமுடன் பள்ளிக்கு புறப்பட்டு சென்றதை காணமுடிந்தது. அவர்களை பள்ளி ஆசிரியர்கள் பூங்கொத்து மற்றும் சாக்லெட் கொடுத்து வரவேற்றனர்.

    அதே நேரத்தில் முதல் நாள் என்பதால் பெரும்பாலானோர் குழந்தைகளை பள்ளிக்கு தங்களுடனே அழைத்து சென்று கொண்டு விட்டனர். மாணவர்கள் விடுமுறை நாட்களில் எங்ககெல்லாம் சுற்றுலா சென்றார்கள்?, பொழுதை பயனுள்ளதாக கழித்தார்களா? என்பது பற்றி ஆசிரியர்கள் கலந்துரையாடினர். மேலும் ஒருசில பள்ளி ஆசிரியர்கள் அறிவு சார்ந்த நீதிக்கதைகளை மாணவர்களுக்கு கூறினர்.

    • தமிழகத்தில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் 12ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்.
    • தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரி மாநிலத்திலும் பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    தமிழகத்தில் வரும் 12ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் அறிவிக்கப்பட்டது.

    தமிழகத்தில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் 12ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் 14ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரி மாநிலத்திலும் பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரியில் வரும் 14ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

    வெயிலின் தாக்கம் அதிகரிப்பு காரணமாக தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழகத்தில் நாளுக்கு நாள் வெப்பம் அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது.
    • அக்னி நட்சத்திரம் முடிந்த பிறகும் வெயிலின் உக்கிரம் குறையவில்லை.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் தற்போது புதிய கல்வி ஆண்டில் பள்ளிக்கூடங்களை திறப்பதற்கான ஆயத்த பணிகள் நடந்து வருகிறது. இதற்காக மாணவர்களுக்கு தேவையான பாட புத்தகங்கள் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 5-ந்தேதியும் 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 1-ந்தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று முதலில் அறிவிக்கப்பட்டிந்தது.

    ஆனால் வெயில் வாட்டி வதைப்பதால் பள்ளிகள் திறக்கும் தேதியை தள்ளி வைக்க வேண்டும் என்று அரசுக்கு பல்வேறு கோரிக்கைகள் வந்தது. அதன் அடிப்படையில் ஜூன் 7-ந்தேதி பள்ளிக்கூடங்கள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு வெளியிட்டார்.

    1-ந்தேதிக்கு பதில் 7-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும் சமயத்தில் வெயில் குறைந்து விடும் என கணிக்கப்பட்டது.

    ஆனால் இப்போது வெயில் குறைவதற்கான அறிகுறியே தென்படவில்லை. தமிழகத்தில் நாளுக்கு நாள் வெப்பம் அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது.

    அக்னி நட்சத்திரம் முடிந்த பிறகும் வெயிலின் உக்கிரம் குறையவில்லை. சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் 108 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்துகிறது. இயல்பாக பதிவாகும் வெப்ப அளவை விட கடந்த 6 நாட்களாக வெப்பத்தின் அளவு அதிகமாகவே காணப்படுகிறது.

    இதனால் பள்ளிகள் 7-ந்தேதி திறப்பதை மறுபடியும் தள்ளி வைக்க வேண்டும் என்று அரசுக்கு மீண்டும் கோரிக்கைகள் சென்ற வண்ணம் இருந்தது.

    எனவே பள்ளிகள் திறப்பதை மீண்டும் தள்ளி வைக்கலாமா? என்பது குறித்து அரசு ஆலோசித்து வந்தது.

    இதைத்தொடர்ந்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று கோட்டைக்கு சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். கல்வித்துறை செயலாளர் காகர்லாஉஷா மற்றும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிக்கூடங்களை திறப்பதை மீண்டும் தள்ளி வைப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

    கூட்டம் முடிந்ததும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறியதாவது:-

    வெயில் தாக்கம் இன்னும் அதிகமாக இருப்பதால் மாணவர்கள் நலன் கருதி பள்ளிக்கூடங்கள் திறப்பதை மேலும் தள்ளி வைப்பது என்று முதலமைச்சருடன் நடந்த ஆலோசனையில் முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான வகுப்புகளை ஜூன் 14-ந்தேதி திறப்பது என்றும், 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 12-ந்தேதி பள்ளிகளை திறப்பது என்றும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

    கல்வித்துறை அதிகாரிகளின் ஆய்வுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு குறித்த முடிவு இன்று மாலை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னை:

    கொரோனா பாதிப்பு குறைந்ததை அடுத்து தமிழகத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன.

    முதலில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை தொடங்கப்பட்டன. பின்னர் கடந்த 1-ந்தேதி முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டது. மாணவ- மாணவிகள் உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்தனர்.

    மறுநாளே சென்னையில் பலத்த மழை பெய்ததை அடுத்து பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது. தொடர்ந்து மழை பெய்ததாலும், தீபாவளி விடுமுறையாலும் பள்ளிகள் கடந்த 10 நாட்களாக திறக்கப்படவில்லை.

    அதேபோல மழை காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டன.

    சென்னையில் தற்போது மழை நின்றுவிட்டது. பெரும்பாலான இடங்களில் தேங்கியிருந்த வெள்ளநீரை அகற்றும் பணிகள் தீவிரமாக நடந்தது. இதையடுத்து வெள்ளம் வடிந்து இருக்கிறது.

    சில இடங்களில் மட்டும் மழை வெள்ளம் இன்னும் வடியாமல் இருந்து வருகிறது. அதனை அகற்றும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. இதற்கிடையே சென்னையில் நாளை பள்ளிகள் திறப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

    சென்னையில் 281 மாநகராட்சி பள்ளிகள் உள்ளன. இங்கு தேங்கிய மழைநீர் அகற்றப்பட்டு இருக்கிறது. காற்றினால் விழுந்த மரங்களும் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன.

    இதையடுத்து நாளை பள்ளிகளை திறப்பதற்கான ஆய்வுகளை கல்வித்துறை அதிகாரிகள் இன்று நடத்துகிறார்கள். சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு சென்று வெள்ளநீர் அகற்றப்பட்டு இருக்கிறதா? மாணவர்கள் பள்ளிக்கு வருவதற்கான சூழ்நிலை உள்ளதா என்று பார்வையிடுகிறார்கள்.

    பள்ளிகள் திறப்பு

    44 மாநகராட்சி பள்ளிகளில் முகாம்கள் அமைக்கப்பட்டு மழையால் பாதிக்கப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த பள்ளிகளை தவிர்த்து மற்ற பள்ளிகளை திறப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    அதிகாரிகள் ஆய்வுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு குறித்த முடிவு இன்று மாலை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    இதையும் படியுங்கள்...கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளக்காடானது- தீவுகளாக மாறிய கிராமங்கள், 50 ஆயிரம் வீடுகள் மிதக்கின்றன

    திண்டுக்கல் அருகே பள்ளியை திறக்க கோரி மாணவ-மாணவிகள் அரசு பஸ்சை சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    வடமதுரை:

    புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தமிழகம் முழுவதும் வருவாய்த்துறை, கல்வித் துறை உள்ளிட்ட அனைத்து அரசு பணிகளும் முடங்கி உள்ளன.

    குறிப்பாக பள்ளிகள் பெரும்பாலும் மூடப்பட்டதால் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆசிரியர்களை பணிக்கு திரும்ப அரசு கோரிக்கை விடுத்தபோதும் அவர்கள் தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இதனால் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கும் பணி நடைபெற்று வருகிறது. திண்டுக்கல் அருகே வடமதுரை பாடியூர் புதுப்பட்டியில் அரசு பள்ளி உள்ளது. இங்கு கிரியம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

    கடந்த சில நாட்களாக பள்ளிகள் மூடப்பட்டதால் மாணவ-மாணவிகள் பள்ளிக்கு செல்லாமல் கடுமையாக பாதிக்கப்பட்டனர். எனவே இந்த பள்ளியை திறக்க வேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்தினர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் மாணவர்களுடன் வடமதுரையில் இருந்து திண்டுக்கல் சென்ற அரசு பஸ்சை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவம் குறித்து அறிந்ததும் வடமதுரை போலீசார் விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததால் அவர்கள் கலைந்து சென்றனர். வடமதுரை பகுதியில் கடந்த சில நாட்களாகவே ஆசிரியர்களை எதிர்த்து மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    கல்பட்டிசத்திரம் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் குடியரசு தினத்திற்கு வந்த ஆசிரியர்களை உள்ளே செல்லவிடாமல் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    கோடை வெயிலின் தாக்கம் காரணமாக முன் கூட்டியே பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்ட நிலையில் நாளை மறுநாள் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. #TNschoolOpen
    சென்னை:

    கோடை வெயிலின் தாக்கம் காரணமாக இந்த ஆண்டு முன் கூட்டியே பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. அரசு பள்ளிகள் மட்டுமின்றி தனியார் மெட்ரிக்குலேசன் மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கும் முன்கூட்டியே விடுமுறை விடப்பட்டன.

    இந்த நிலையில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 7-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் தகவல் வெளியானது.



    இந்த தகவலை மறுத்த பள்ளிக்கல்வித்துறை கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1-ந்தேதியே பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவித்தது. புதிய பாடத்திட்டத்தை அமல்படுத்த ஏதுவாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. புதிய பாடத்திட்டம் காரணமாக கோடை விடுமுறையை நீட்டிக்க முடியாது என்று அமைச்சர் செங்கோட்டையனும் கூறினார்.

    இதையடுத்து பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நாளையுடன் முடிகிறது. நாளை மறுநாள் (1-ந்தேதி) பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.#TNschoolOpen
    ×