என் மலர்

    நீங்கள் தேடியது "School open"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கல்வித்துறை அதிகாரிகளின் ஆய்வுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு குறித்த முடிவு இன்று மாலை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னை:

    கொரோனா பாதிப்பு குறைந்ததை அடுத்து தமிழகத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன.

    முதலில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை தொடங்கப்பட்டன. பின்னர் கடந்த 1-ந்தேதி முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டது. மாணவ- மாணவிகள் உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்தனர்.

    மறுநாளே சென்னையில் பலத்த மழை பெய்ததை அடுத்து பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது. தொடர்ந்து மழை பெய்ததாலும், தீபாவளி விடுமுறையாலும் பள்ளிகள் கடந்த 10 நாட்களாக திறக்கப்படவில்லை.

    அதேபோல மழை காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டன.

    சென்னையில் தற்போது மழை நின்றுவிட்டது. பெரும்பாலான இடங்களில் தேங்கியிருந்த வெள்ளநீரை அகற்றும் பணிகள் தீவிரமாக நடந்தது. இதையடுத்து வெள்ளம் வடிந்து இருக்கிறது.

    சில இடங்களில் மட்டும் மழை வெள்ளம் இன்னும் வடியாமல் இருந்து வருகிறது. அதனை அகற்றும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. இதற்கிடையே சென்னையில் நாளை பள்ளிகள் திறப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

    சென்னையில் 281 மாநகராட்சி பள்ளிகள் உள்ளன. இங்கு தேங்கிய மழைநீர் அகற்றப்பட்டு இருக்கிறது. காற்றினால் விழுந்த மரங்களும் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன.

    இதையடுத்து நாளை பள்ளிகளை திறப்பதற்கான ஆய்வுகளை கல்வித்துறை அதிகாரிகள் இன்று நடத்துகிறார்கள். சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு சென்று வெள்ளநீர் அகற்றப்பட்டு இருக்கிறதா? மாணவர்கள் பள்ளிக்கு வருவதற்கான சூழ்நிலை உள்ளதா என்று பார்வையிடுகிறார்கள்.

    பள்ளிகள் திறப்பு

    44 மாநகராட்சி பள்ளிகளில் முகாம்கள் அமைக்கப்பட்டு மழையால் பாதிக்கப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த பள்ளிகளை தவிர்த்து மற்ற பள்ளிகளை திறப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    அதிகாரிகள் ஆய்வுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு குறித்த முடிவு இன்று மாலை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    இதையும் படியுங்கள்...கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளக்காடானது- தீவுகளாக மாறிய கிராமங்கள், 50 ஆயிரம் வீடுகள் மிதக்கின்றன

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    திண்டுக்கல் அருகே பள்ளியை திறக்க கோரி மாணவ-மாணவிகள் அரசு பஸ்சை சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    வடமதுரை:

    புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தமிழகம் முழுவதும் வருவாய்த்துறை, கல்வித் துறை உள்ளிட்ட அனைத்து அரசு பணிகளும் முடங்கி உள்ளன.

    குறிப்பாக பள்ளிகள் பெரும்பாலும் மூடப்பட்டதால் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆசிரியர்களை பணிக்கு திரும்ப அரசு கோரிக்கை விடுத்தபோதும் அவர்கள் தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இதனால் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கும் பணி நடைபெற்று வருகிறது. திண்டுக்கல் அருகே வடமதுரை பாடியூர் புதுப்பட்டியில் அரசு பள்ளி உள்ளது. இங்கு கிரியம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

    கடந்த சில நாட்களாக பள்ளிகள் மூடப்பட்டதால் மாணவ-மாணவிகள் பள்ளிக்கு செல்லாமல் கடுமையாக பாதிக்கப்பட்டனர். எனவே இந்த பள்ளியை திறக்க வேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்தினர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் மாணவர்களுடன் வடமதுரையில் இருந்து திண்டுக்கல் சென்ற அரசு பஸ்சை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவம் குறித்து அறிந்ததும் வடமதுரை போலீசார் விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததால் அவர்கள் கலைந்து சென்றனர். வடமதுரை பகுதியில் கடந்த சில நாட்களாகவே ஆசிரியர்களை எதிர்த்து மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    கல்பட்டிசத்திரம் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் குடியரசு தினத்திற்கு வந்த ஆசிரியர்களை உள்ளே செல்லவிடாமல் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கோடை வெயிலின் தாக்கம் காரணமாக முன் கூட்டியே பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்ட நிலையில் நாளை மறுநாள் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. #TNschoolOpen
    சென்னை:

    கோடை வெயிலின் தாக்கம் காரணமாக இந்த ஆண்டு முன் கூட்டியே பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. அரசு பள்ளிகள் மட்டுமின்றி தனியார் மெட்ரிக்குலேசன் மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கும் முன்கூட்டியே விடுமுறை விடப்பட்டன.

    இந்த நிலையில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 7-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் தகவல் வெளியானது.



    இந்த தகவலை மறுத்த பள்ளிக்கல்வித்துறை கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1-ந்தேதியே பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவித்தது. புதிய பாடத்திட்டத்தை அமல்படுத்த ஏதுவாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. புதிய பாடத்திட்டம் காரணமாக கோடை விடுமுறையை நீட்டிக்க முடியாது என்று அமைச்சர் செங்கோட்டையனும் கூறினார்.

    இதையடுத்து பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நாளையுடன் முடிகிறது. நாளை மறுநாள் (1-ந்தேதி) பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.#TNschoolOpen
    ×