search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் பள்ளிகள் திறப்பு தள்ளிவைப்பு
    X

    தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் பள்ளிகள் திறப்பு தள்ளிவைப்பு

    • தமிழகத்தில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் 12ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்.
    • தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரி மாநிலத்திலும் பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    தமிழகத்தில் வரும் 12ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் அறிவிக்கப்பட்டது.

    தமிழகத்தில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் 12ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் 14ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரி மாநிலத்திலும் பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரியில் வரும் 14ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

    வெயிலின் தாக்கம் அதிகரிப்பு காரணமாக தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×