என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jacto Geo"

    • கடைசி மாத ஊதியத்தில் 50% உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    • முதலமைச்சருக்கு இனிப்பு ஊட்டி அரசு ஊழியர் சங்கத்தினர் நன்றியை தெரிவித்தனர்.

    சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர்கள், உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓய்வூதியம் தொடர்பாக புதிய அறிவிப்பை வெளியிட்டார்.

    புதிய ஓய்வூதிய திட்டத்தில், 10 ஆண்டுகள் பணியாற்றி இருந்தால் ஓய்வூதியம், உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத்துக்கு முன்னர் ஓய்வு பெற்றவர்களுக்கு சிறப்பு கருணை ஓய்வூதியம், கடைசி மாத ஊதியத்தில் 50 விழுக்காடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், புதிய ஓய்வூதிய திட்டம் அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விசிக தலைவர் திருமாவளவன் நன்றி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "அரசு ஊழியர்களின் அடிவயிற்றில்

    பால் வார்த்துள்ளார் நம் முதலமைச்சர். அரசு ஊழியர்களின் நெடுங்கால கோரிக்கையான ஓய்வூதியத் திட்டத்தை நிறைவேற்ற முன்வந்துள்ள மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்அவர்களுக்கு எமது நெஞ்சார்ந்த பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று தெரிவித்துள்ளார். 

    • 50 சதவீத ஓய்வூதியத்தை அறிவித்த முதலமைச்சருக்கு நன்றி.
    • 23 ஆண்டு கால போராட்டத்திற்கு முடிவு கிடைத்துள்ளது.

    சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர்கள், உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓய்வூதியம் தொடர்பாக புதிய அறிவிப்பை வெளியிட்டார்.

    இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த அரசு ஊழியர் சங்கத்தினர் அவருக்கு நன்றி தெரிவித்தனர். முதலமைச்சருக்கு இனிப்பு ஊட்டி நன்றியை தெரிவித்தனர்.

    இந்நிலையில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    * 50 சதவீத ஓய்வூதியத்தை அறிவித்த முதலமைச்சருக்கு நன்றி.

    * நாங்கள் எதிர்பார்த்தபடி ஓய்வூதியத்தை அறிவித்துள்ளார் முதலமைச்சர்.

    * 48 ஆயிரம் பேருக்கு கருணை ஊதியம் அறிவித்திருப்பதை ஜாக்டோ ஜியோ வரவேற்கிறது.

    * 23 ஆண்டு கால போராட்டத்திற்கு முடிவு கிடைத்துள்ளது.

    * எங்களது அனைத்து கோரிக்கைகளையும் முதலமைச்சர் நிறைவேற்றுவார்.

    * வரும் 6-ந்தேதி முதல் நடக்க இருந்த காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் ரத்து செய்வதாக அறிவித்தது.

    • கடைசி மாத ஊதியத்தில் 50 விழுக்காடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    • முதலமைச்சருக்கு இனிப்பு ஊட்டி அரசு ஊழியர் சங்கத்தினர் நன்றியை தெரிவித்தனர்.

    சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர்கள், உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓய்வூதியம் தொடர்பாக புதிய அறிவிப்பை வெளியிட்டார்.

    புதிய ஓய்வூதிய திட்டத்தில், 10 ஆண்டுகள் பணியாற்றி இருந்தால் ஓய்வூதியம், உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத்துக்கு முன்னர் ஓய்வு பெற்றவர்களுக்கு சிறப்பு கருணை ஓய்வூதியம், கடைசி மாத ஊதியத்தில் 50 விழுக்காடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த அரசு ஊழியர் சங்கத்தினர் அவருக்கு நன்றி தெரிவித்தனர். முதலமைச்சருக்கு இனிப்பு ஊட்டி நன்றியை தெரிவித்தனர்.

    • கடைசி மாத ஊதியத்தில் 50 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் அளிக்கப்படும்.
    • ஓய்வூதியதாரர் இறந்தால் அவர் பெற்ற ஓய்வூதியத்தில் 60% குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும்.

    பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ, போட்டா ஜியோ ஆகிய அமைப்புகள் போராடி வருகின்றன. வருகிற 6-ந்தேதியில் இருந்து காலவரையறையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் இறங்கப்போவதாக ஏற்கனவே அறிவித்துள்ளன.

    இந்த கூட்டமைப்புகளை அழைத்து கடந்த டிசம்பர் 22-ந் தேதி அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகிய அமைச்சர்கள் குழு நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. எனவே திட்டமிட்டபடி காலவரையறையற்ற வேலைநிறுத்த போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என்று அந்த கூட்டமைப்புகள் தெரிவித்தன.

    இதனிடையே ஓய்வூதிய திட்டம் குறித்து ஆய்வு செய்து வந்த மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ககன்தீப்சிங் பேடி தலைமையிலான குழு, தமிழக அரசிடம் இறுதி அறிக்கையை அளித்தது. இதையடுத்து வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ள சங்கங்களை பேச்சுவார்த்தைக்காக அமைச்சர்கள் குழு மீண்டும் அழைத்தது.

    அதன்படி, நேற்று காலை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் எ.வ.வேலு அலுவலகத்தில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் அமைச்சர் எ.வ.வேலுவுடன், அமைச்சர் தங்கம் தென்னரசும் கலந்து கொண்டார்.

    ஜாக்டோ ஜியோ, போட்டா ஜியோ உள்ளிட்ட அனைத்து கூட்டமைப்புகளையும் தனித்தனியாக அழைத்து அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தைக்குப் பிறகு கூட்டமைப்புகளின் தலைமை நிர்வாகிகள் கூறுகையில்,

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஓய்வூதியம் குறித்த நல்ல புதிய அறிவிப்பை வெளியிட இருப்பதாக அமைச்சர்கள் தெரிவித்தனர். அது என்னவிதமான ஓய்வூதியம்? என்பதை முதலமைச்சர்தான் தெரிவிப்பார். அதன் பிறகு அதனால் கிடைக்கும் பயன்கள் பற்றி ஆலோசித்து முடிவு செய்துவிட்டு, பின்னர் எங்களின் அறிவிப்புகளை வெளியிடுவோம் என்று தெரிவித்து இருந்தனர்.

    இந்நிலையில், அமைச்சர்கள், உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பழைய ஓய்வூதிய திட்டத்தை அறிவித்தார்.

    * அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும்.

    * கடைசி மாத ஊதியத்தில் 50 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் அளிக்கப்படும்.

    * 50 சதவீதத்தில் 10 சதவீதம் ஊழியர்களின் பங்களிப்பாக இருக்கும்.

    * பழைய ஓய்வூதிய பலன் வழங்கும் புதிய திட்டமான தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படும்.

    * அரசு ஊழியர்களுக்கு இணையாக அகவிலைப்படி உயர்வும் அளிக்கப்படும்.

    * Tamil Nadu Assured Pension Scheme - TAPS செயல்படுத்தப்படும்.

    * ஓய்வூதியதாரர் இறந்தால் அவர் பெற்ற ஓய்வூதியத்தில் 60% குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும்.

    * 50% உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களுக்கு 6 மாதத்திற்கு ஒருமுறை அகவிலைப்படி உயர்வு தரப்படும்.

    * பணிக்காலத்தை நிறைவு செய்யாமல் ஓய்வு பெற்றாலும் குறைந்தபட்ச ஓய்வூதியம் அளிக்கப்படும்.

    * ஓய்வு பெறும்போதும் பணிக்காலத்தில் இறக்க நேரிடும் போதும் பணிக்காலத்திற்கேற்ப ரூ.25 லட்சம் பணிக்கொடை வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நாங்கள் எங்களது 10 அம்ச கோரிக்கையை ஏற்கனவே பலமுறை அரசிடம் வலியுறுத்தி வந்தோம்.
    • பழைய ஓய்வூதிய திட்டத்தையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என நம்புகிறோம்.

    சென்னை தலைமை செயலகத்தில் போட்டா-ஜியோ சங்கத்தினருடன் இன்று காலை 11 மணிக்கு அமைச்சர்கள் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஜாக்டோ-ஜியோ சங்கத்தினருடன் காலை 11.30 மணிக்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

    இந்த பேச்சுவார்த்தையில் அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    பேச்சுவார்த்தை முடிந்து வெளியே வந்த போட்டா ஜியோ மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் அமிர்தகுமார் கூறியதாவது:-

    நாங்கள் எங்களது 10 அம்ச கோரிக்கையை ஏற்கனவே பலமுறை அரசிடம் வலியுறுத்தி வந்தோம். இப்போது 2 கட்ட போராட்ட நடவடிக்கையை திட்டமிட்டு இருந்தோம். இதைத் தொடர்ந்து அமைச்சர்கள் குழுவினர் எங்களை அழைத்து பேசினார்கள். இதன் அடுத்த கட்டமாக இன்று அமைச்சர்கள் எ.வ. வேலு, தங்கம்தென்னரசு ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடந்தது.

    பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். எங்கள் கோரிக்கை ஏற்கப்படுவதாகவும், முதலமைச்சரின் கவனத்துக்கு இதை கொண்டு செல்வதாகவும் தெரிவித்தனர்.

    இந்நிலையில் ஜாக்டோ-ஜியோ சங்கத்தினர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    பழைய ஓய்வூதியம் தொடர்பாக நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்பை வெளியிடுவார். முதலமைச்சரின் அறிவிப்பை தொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யப்படும்.

    பழைய ஓய்வூதிய திட்டத்தையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என நம்புகிறோம். முதலமைச்சரின் நாளைய அறிவிப்பு அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான பரிசாக இருக்கும் என்று தெரிவித்தனர்.

    • அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு பேச்சுவார்த்தை நடத்தினர்.
    • ஆலோசனையின்போது பழைய ஓய்வூதிய திட்டம், காலிப்பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தப்பட்டது.

    சென்னை தலைமைச் செயலகத்தில் போட்டா ஜியோ, ஜாக்டோ-ஜியோ அமைப்பினருடன் அமைச்சர்கள் குழு பேச்சுவார்த்தை நடத்தினர்.

    போட்டா ஜியோ, ஜாக்டோ ஜியோ அமைப்பினர் வரும் 6-ந்தேதி காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் அறிவித்துள்ள நிலையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு பேச்சுவார்த்தை நடத்தினர்.

    ஆலோசனையின்போது பழைய ஓய்வூதிய திட்டம், காலிப்பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தப்பட்டது.

    அமைச்சர்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையை அடுத்து கோரிக்கை ஏற்கப்பட்டதாக போட்டா ஜியோ அமைப்பு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போட்டா ஜியோ நிர்வாகிகள் கூறுகையில்,

    பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளார் என்று தெரிவித்தனர்.

    • ஜனவரி 6ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் என அறிவிப்பு.
    • 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்டிரைக் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    போராட்டம் அறிவித்துள்ள ஜாக்டோ ஜியோ, போட்டோ ஜியோ அமைப்பினருடன் நாளை அரசு பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.

    ஜனவரி 6ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் என அறிவித்ததன் எதிரொலியால் நாளை அரசு பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.

    அதன்படி, சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் எ.வ.லு அறையில் நாளை பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

    பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்டிரைக் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • டிச.8-ந்தேதி 10,000 ஆசிரியர்கள் பங்கேற்கும் மாபெரும் காத்திருப்புப் போராட்டம் திட்டமிடப்பட்டது.
    • ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை தமிழக காவல்துறை திடீரென கைது செய்து, வீட்டுக் காவலில் வைத்தது.

    ஜாக்டோ ஜியோ (JACTO-GEO) என்பது தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பல்வேறு சங்கங்களின் கூட்டமைப்பு ஆகும். ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் சங்கங்கள் இணைந்து இந்த அமைப்பை உருவாக்கியுள்ளன.

    பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

     

    ஜாக்டோ ஜியோ போராட்டங்கள் தமிழகம் முழுவதும் உண்ணாவிரதங்கள், வேலைநிறுத்தங்கள், ஆர்ப்பாட்டங்கள் எனப் பல வடிவங்களில் நடத்தப்பட்டுள்ளன.

    முக்கியக் கோரிக்கைகள் (10 அம்சக் கோரிக்கைகள்):

    பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) மீண்டும் அமல்படுத்த வேண்டும்.

    புதிய ஓய்வூதியத் திட்டத்தை (NPS) ரத்து செய்ய வேண்டும்.

    பணியிடங்களை நிரப்ப வேண்டும் (Vacancies).

    ஒப்பந்த ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

    விடுப்பு ரொக்கமாக்கும் வசதியைத் திரும்பப் பெற வேண்டும் (Leave Encashment).

    ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும் (Pay Discrepancies).

    சென்னை டி.பி.ஐ வளாகத்தில் டிச.8-ந்தேதி 10,000 ஆசிரியர்கள் பங்கேற்கும் மாபெரும் காத்திருப்புப் போராட்டம் திட்டமிடப்பட்டது.

    சுமார் 10,000 தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்க திட்டமிட்டிருந்தனர். தமிழ்நாடு அரசு தேர்தல் வாக்குறுதியாக அளித்த 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி போராட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது.

    தமிழகம் முழுவதிலும் இருந்து வரும் ஆசிரியர்கள் சென்னை எழும்பூரில் கூடி, அங்கிருந்து பேரணியாகச் சென்று DPI வளாகத்தில் காத்திருப்புப் போராட்டத்தை நடத்த ஆயத்தமானார்கள்.

    தலைநகர் சென்னைக்கு இன்று புறப்படத் தயாரான ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை தமிழக காவல்துறை திடீரென கைது செய்து, வீட்டுக் காவலில் வைத்தது.

     

     

    இதையடுத்து சென்னை தலைமை செயலகத்தில் கடந்த 22-ந்தேதி பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோருடன் ஜாக்டோ ஜியோ சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத காரணத்தால் திட்டமிட்டபடி ஜனவரி 6-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக மாநில ஒருங்கிணைப்பாளர் மு.பாஸ்கரன் கூறுகையில், பேச்சுவார்த்தை ஒரு விளையாட்டு போல அமைந்தது. கடந்த 4 பேச்சுவார்த்தைகளில் கூறியதையே அமைச்சர்கள் மீண்டும் கூறினர். அரசு ஊழியர்களுக்கு மற்றும் ஆசிரியர்களுக்கு இந்த பேச்சுவார்த்தை ஏமாற்றத்தை அளித்துள்ளது. டிச.27-ந்தேதி மாவட்ட தலைநகரங்களில் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆயத்த மாநாடு நடைபெறும். வரும் ஜன.6-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று தெரிவித்தார்.

    • தமிழ்நாடு அரசிடம் பழைய ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராடி வருகிறோம்.
    • சில சங்கங்கள் தனித்துவமாக செயல்படுவதோடு தங்களோடு தொடர்புபடுத்த வேண்டாம்.

    சென்னையை அடுத்த பனையூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயை ஜாக்டோ ஜியோ சங்கத்தில் இடம் பெற்றுள்ள உயர்நிலை-மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் மாயவன் தலைமையிலான குழுவினர் சந்தித்தனர்.

    இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாயவன், தமிழ்நாடு அரசு நான்கரை ஆண்டுகளாக வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை 8 முறை சந்தித்துவிட்டோம். தமிழக அரசை நம்பி நாங்கள் ஏமாந்துவிட்டோம்.

    எங்கள் சங்கத்தின் சார்பில் மிகப் பெரிய போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். இதுபற்றி விஜயிடம் தெரிவித்தோம். விஜய் முழு ஆதரவு தெரிவித்துள்ளதாக அவர் கூறினார்.

    இந்த நிலையில் த.வெ.க. தலைவர் விஜயை கடந்த 13-ந்தேதி சந்தித்ததாக வெளியான செய்திக்கு ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

    பட்டதாரி ஆசிரியர் சங்கத் தலைவர் மாயவன் விஜயை சந்தித்ததற்கும் தங்களுக்கும் தொடர்பில்லை. தமிழ்நாடு அரசிடம் பழைய ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராடி வருகிறோம்.

    சில சங்கங்கள் தனித்துவமாக செயல்படுவதோடு தங்களோடு தொடர்புபடுத்த வேண்டாம். த.வெ.க. தலைவர் விஜயை தங்கள் அமைப்பினர் சந்திக்கவில்லை. உண்மைக்கு புறம்பான செய்தியை திரும்ப பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    • தமிழக அரசின் 2024-25-ம் நிதியாண்டு பட்ஜெட்டில், ஜாக்டோ-ஜியோ எதிர்பார்த்த கோரிக்கைகள் இடம்பெறவில்லை.
    • மாவட்ட தலைநகரங்களில் அடுத்த மாதம் 24-ந்தேதி கோரிக்கை மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ தொடர்ந்து போராடி வருகிறது.

    தமிழக அரசின் 2024-25-ம் நிதியாண்டு பட்ஜெட்டில், ஜாக்டோ-ஜியோ எதிர்பார்த்த கோரிக்கைகள் இடம்பெறவில்லை என தெரிவித்து, கடந்த மாதம் (மார்ச்) 23-ந்தேதி, மாவட்ட தலைநகரங்களில், ஜாக்டோ-ஜியோ சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

    இந்த நிலையில், ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் கூட்டம் சென்னையில் நேற்று மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில், பழைய ஓய்வூதிய திட்டம் உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வருகிற 22-ந்தேதி (செவ்வாய்க்கிழமை), மாவட்ட தலைநகரங்களில் கோரிக்கை பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட தலைநகரங்களில் அடுத்த மாதம் (மே) 24-ந்தேதி (சனிக்கிழமை) கோரிக்கை மாநாடு நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    எனவே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில், நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று ஜாக்டோ-ஜியோ வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஜாக்டோ ஜியோ சார்பில் எழிலகம் அருகே இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
    • தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

    பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பது உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ சார்பில் எழிலகம் அருகே இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

    தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் சங்க மாநில ஒருங்கிணைப்பாளரான சுரேஷ் தொடக்க உரையாற்றினார். தலைமை செயலக சங்க ஒருங்கிணைப்பாளரான வெங்கடேசன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில உயர்மட்ட குழு உறுப்பினரான விஜய குமரன், மாநில ஒருங்கிணைப்பாளரான சீனிவாசன் உள்பட ஏராளமான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

    தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்த கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தமிழக அரசு தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரி தொடர் பேராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் வருகிற 30-ந்தேதி அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி ஆலோசிக்க முடிவு செய்துள்ளனர்.

    • ஜிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
    • முதுநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும்

    உடுமலை :

    ஜாக்டோ-ஜியோ சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உடுமலை மத்திய பஸ் நிலையத்துக்கு எதிரில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.தலைமை வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டு பேசினார்.

    போராட்டத்தின் போது,ஜிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.இடைநிலை மற்றும் முதுநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும்.முடக்கப்பட்ட அகவிலைப்படி நிலுவைத்தொகை சரண்டர், உயர் கல்விக்கான ஊக்க ஊதியம் உள்ளிட்டவற்றை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.போராட்டத்தில் ஆசிரியர்,அரசு ஊழியர் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

    ×