என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

புதிய ஓய்வூதிய திட்டம் - முதலமைச்சரை சந்தித்து நன்றி தெரிவித்த அரசு ஊழியர்கள்
- கடைசி மாத ஊதியத்தில் 50 விழுக்காடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- முதலமைச்சருக்கு இனிப்பு ஊட்டி அரசு ஊழியர் சங்கத்தினர் நன்றியை தெரிவித்தனர்.
சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர்கள், உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓய்வூதியம் தொடர்பாக புதிய அறிவிப்பை வெளியிட்டார்.
புதிய ஓய்வூதிய திட்டத்தில், 10 ஆண்டுகள் பணியாற்றி இருந்தால் ஓய்வூதியம், உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத்துக்கு முன்னர் ஓய்வு பெற்றவர்களுக்கு சிறப்பு கருணை ஓய்வூதியம், கடைசி மாத ஊதியத்தில் 50 விழுக்காடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த அரசு ஊழியர் சங்கத்தினர் அவருக்கு நன்றி தெரிவித்தனர். முதலமைச்சருக்கு இனிப்பு ஊட்டி நன்றியை தெரிவித்தனர்.
Next Story






