என் மலர்
நீங்கள் தேடியது "பழைய ஓய்வூதிய திட்டம்"
- கடைசி மாத ஊதியத்தில் 50 சதவீதம் ஓய்வூதியமாக அளிக்கப்படும்.
- 50 சதவீதத்தில் 10 சதவீதம் ஊழியர்களின் பங்களிப்பாக இருக்கும்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்கள் தொடர்ந்த வலியுறுத்தி வந்தன. இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் (உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம்) மீண்டும் அமல்படுத்தப்படும் என கடந்த 3-ந்தேதி அறிவித்தார்.
இந்த நிலையில் ஜனவரி 1-ந்தேதி முதல் இந்த திட்டம் அமல்படுத்தப்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் திட்டத்தின்படி, கடைசி மாத ஊதியத்தில் 50 சதவீதம் ஓய்வூதியமாக அளிக்கப்படும். 50 சதவீதத்தில் 10 சதவீதம் ஊழியர்களின் பங்களிப்பாக இருக்கும். அரசு ஊழியர்களுக்கு இணையாக அகவிலைப்படி உயர்வும் அளிக்கப்படும். ஓய்வூதியதாரர் இறந்தால் அவர் பெற்ற ஓய்வூதியத்தில் 60% குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும்.
50% உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களுக்கு 6 மாதத்திற்கு ஒருமுறை அகவிலைப்படி உயர்வு தரப்படும். பணிக்காலத்தை நிறைவு செய்யாமல் ஓய்வு பெற்றாலும் குறைந்தபட்ச ஓய்வூதியம் அளிக்கப்படும். ஓய்வு பெறும்போதும் பணிக்காலத்தில் இறக்க நேரிடும் போதும் பணிக்காலத்திற்கேற்ப ரூ.25 லட்சம் பணிக்கொடை வழங்கப்படும்.
- ஓய்வூதியத் திட்டத்தை ஒழித்துக்கட்டி, ஆசிரியர் - அரசு ஊழியர்களை நடுத்தெருவில் நிறுத்தியது பாஜக ஆட்சிதான்
- நாடு முழுவதும் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை பிஜேபி அமல்படுத்தும் என்று கூறும் தைரியம் உங்களுக்கு இருக்கிறதா?
"அரசு ஊழியர்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள ஓய்வூதியம் ஏமாற்று வேலை. 5 ஆண்டுகள் எதுவும் செய்யாமல் தற்போது தேர்தல் வருவதால் ஓய்வூதியம் குறித்து அறிவிப்பை வெயிட்டுள்ளார்கள்" என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஓய்வூதியம் அறிவிப்பு தொடர்பாக விமர்சனம் செய்திருந்தார். இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் விதமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத்தலைவர் பெ.சண்முகம் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில்,
"தமிழ்நாடு அரசின் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை 'ஏமாற்று வேலை' என்று கூறும் நயினார் நாகேந்திரன் அவர்களே!ஓய்வூதியத் திட்டத்தை ஒழித்துக்கட்டி, ஆசிரியர் - அரசு ஊழியர்களை நடுத்தெருவில் நிறுத்தியது பாஜக ஆட்சிதான். நாடு முழுவதும் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை பிஜேபி அமல்படுத்தும் என்று கூறும் தைரியம் உங்களுக்கு இருக்கிறதா? பிஜேபி ஆளும் மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை இதுவரையில் அமல்படுத்தியதுண்டா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
- கடைசி மாத ஊதியத்தில் 50% உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- முதலமைச்சருக்கு இனிப்பு ஊட்டி அரசு ஊழியர் சங்கத்தினர் நன்றியை தெரிவித்தனர்.
சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர்கள், உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓய்வூதியம் தொடர்பாக புதிய அறிவிப்பை வெளியிட்டார்.
புதிய ஓய்வூதிய திட்டத்தில், 10 ஆண்டுகள் பணியாற்றி இருந்தால் ஓய்வூதியம், உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத்துக்கு முன்னர் ஓய்வு பெற்றவர்களுக்கு சிறப்பு கருணை ஓய்வூதியம், கடைசி மாத ஊதியத்தில் 50 விழுக்காடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், புதிய ஓய்வூதிய திட்டம் அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விசிக தலைவர் திருமாவளவன் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "அரசு ஊழியர்களின் அடிவயிற்றில்
பால் வார்த்துள்ளார் நம் முதலமைச்சர். அரசு ஊழியர்களின் நெடுங்கால கோரிக்கையான ஓய்வூதியத் திட்டத்தை நிறைவேற்ற முன்வந்துள்ள மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்அவர்களுக்கு எமது நெஞ்சார்ந்த பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
- கடைசி மாத ஊதியத்தில் 50 விழுக்காடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- முதலமைச்சருக்கு இனிப்பு ஊட்டி அரசு ஊழியர் சங்கத்தினர் நன்றியை தெரிவித்தனர்.
சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர்கள், உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓய்வூதியம் தொடர்பாக புதிய அறிவிப்பை வெளியிட்டார்.
புதிய ஓய்வூதிய திட்டத்தில், 10 ஆண்டுகள் பணியாற்றி இருந்தால் ஓய்வூதியம், உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத்துக்கு முன்னர் ஓய்வு பெற்றவர்களுக்கு சிறப்பு கருணை ஓய்வூதியம், கடைசி மாத ஊதியத்தில் 50 விழுக்காடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த அரசு ஊழியர் சங்கத்தினர் அவருக்கு நன்றி தெரிவித்தனர். முதலமைச்சருக்கு இனிப்பு ஊட்டி நன்றியை தெரிவித்தனர்.
- கடைசி மாத ஊதியத்தில் 50 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் அளிக்கப்படும்.
- ஓய்வூதியதாரர் இறந்தால் அவர் பெற்ற ஓய்வூதியத்தில் 60% குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும்.
பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ, போட்டா ஜியோ ஆகிய அமைப்புகள் போராடி வருகின்றன. வருகிற 6-ந்தேதியில் இருந்து காலவரையறையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் இறங்கப்போவதாக ஏற்கனவே அறிவித்துள்ளன.
இந்த கூட்டமைப்புகளை அழைத்து கடந்த டிசம்பர் 22-ந் தேதி அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகிய அமைச்சர்கள் குழு நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. எனவே திட்டமிட்டபடி காலவரையறையற்ற வேலைநிறுத்த போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என்று அந்த கூட்டமைப்புகள் தெரிவித்தன.
இதனிடையே ஓய்வூதிய திட்டம் குறித்து ஆய்வு செய்து வந்த மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ககன்தீப்சிங் பேடி தலைமையிலான குழு, தமிழக அரசிடம் இறுதி அறிக்கையை அளித்தது. இதையடுத்து வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ள சங்கங்களை பேச்சுவார்த்தைக்காக அமைச்சர்கள் குழு மீண்டும் அழைத்தது.
அதன்படி, நேற்று காலை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் எ.வ.வேலு அலுவலகத்தில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் அமைச்சர் எ.வ.வேலுவுடன், அமைச்சர் தங்கம் தென்னரசும் கலந்து கொண்டார்.
ஜாக்டோ ஜியோ, போட்டா ஜியோ உள்ளிட்ட அனைத்து கூட்டமைப்புகளையும் தனித்தனியாக அழைத்து அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தைக்குப் பிறகு கூட்டமைப்புகளின் தலைமை நிர்வாகிகள் கூறுகையில்,
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஓய்வூதியம் குறித்த நல்ல புதிய அறிவிப்பை வெளியிட இருப்பதாக அமைச்சர்கள் தெரிவித்தனர். அது என்னவிதமான ஓய்வூதியம்? என்பதை முதலமைச்சர்தான் தெரிவிப்பார். அதன் பிறகு அதனால் கிடைக்கும் பயன்கள் பற்றி ஆலோசித்து முடிவு செய்துவிட்டு, பின்னர் எங்களின் அறிவிப்புகளை வெளியிடுவோம் என்று தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில், அமைச்சர்கள், உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பழைய ஓய்வூதிய திட்டத்தை அறிவித்தார்.
* அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும்.
* கடைசி மாத ஊதியத்தில் 50 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் அளிக்கப்படும்.
* 50 சதவீதத்தில் 10 சதவீதம் ஊழியர்களின் பங்களிப்பாக இருக்கும்.
* பழைய ஓய்வூதிய பலன் வழங்கும் புதிய திட்டமான தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படும்.
* அரசு ஊழியர்களுக்கு இணையாக அகவிலைப்படி உயர்வும் அளிக்கப்படும்.
* Tamil Nadu Assured Pension Scheme - TAPS செயல்படுத்தப்படும்.
* ஓய்வூதியதாரர் இறந்தால் அவர் பெற்ற ஓய்வூதியத்தில் 60% குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும்.
* 50% உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களுக்கு 6 மாதத்திற்கு ஒருமுறை அகவிலைப்படி உயர்வு தரப்படும்.
* பணிக்காலத்தை நிறைவு செய்யாமல் ஓய்வு பெற்றாலும் குறைந்தபட்ச ஓய்வூதியம் அளிக்கப்படும்.
* ஓய்வு பெறும்போதும் பணிக்காலத்தில் இறக்க நேரிடும் போதும் பணிக்காலத்திற்கேற்ப ரூ.25 லட்சம் பணிக்கொடை வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நிதிநிலை அறிக்கையில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு இருக்கிறது.
- அரசு ஊழியர்களின் கோரிக்கையை முதலமைச்சர் கவனத்துடன் பரிசீலிக்கிறார்.
சென்னை:
தமிழக சட்டசபையில் வினாக்கள்-விடைகள் நேரத்தில் அ.தி.மு.க. உறுப்பினர் மரகதம் குமரவேல், அரசு ஊழியர்களின் நீண்டநாள் கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக அரசின் நிலைப்பாடு என்ன? அது எப்போது நிறைவேற்றப்படும் என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதலளித்த நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, அரசு ஊழியர்கள் நலனில் அக்கறை கொண்டிருக்கும் முதலமைச்சரின் ஒப்புதலைப் பெற்று நிதிநிலை அறிக்கையில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு இருக்கிறது. முதலமைச்சருடன் பேசி உரிய நேரத்தில் சரியான முடிவு எடுக்கப்படும்.
அதிகாரி ககன்தீப் சிங் பேடி தலைமையில் குழு அமைத்து பல அரசு ஊழியர் சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. அரசு ஊழியர்களின் கோரிக்கையை முதலமைச்சர் கவனத்துடன் பரிசீலிக்கிறார். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை மீது உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என்றார்.
- ராணிப்பேட்டை முதன்மை கல்வி அலுவலகம் முன்பு நடந்தது
- 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை முதன்மை கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணை தலைவர் லக்கி லாரன்ஸ் புவியரசு தலைமை தாங்கினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தேர்தல் வாக்குறுதியின்படி சிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், இடைக்கால ஆசிரியர்களுக்கு மத்திய அரசு இணையான ஊதியம் வழங்க வேண்டும், 1.07.2022 முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கியுள்ள 4 சதவீத அகவிலைப்படி உயர்வை தமிழக அரசு அறிவிக்க வேண்டும், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு மற்றும் முடக்கப்பட்டுள்ள உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வுகளை தமிழக அரசு அறிவிக்க வேண்டும் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு உயர்கல்வியில் 7.5 சதவீதம் தனி இட ஒதுக்கீடு வழங்கி வருவது போல் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு 2.5 சதவீதம் தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
மாணவர்கள் நலன் கருதி தேவையற்ற இணையவழி பதிவு பதிவேடுகளை நிறுத்திட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் வட்டார அளவிலான நிர்வாகிகள், மாவட்ட, மாநில அளவிலான நிர்வாகிகள் என 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
- பழைய ஓய்வூதியத் திட்டம் சாத்தியமானது தான் என்பது பல்வேறு மாநிலங்களில் அத்திட்டம் செயல்படுத்தப்பட்டதிலிருந்தே உறுதியாகியுள்ளது.
- பழைய ஓய்வூதியத் திட்டத்தை தாமதப்படுத்தாமல், ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளின் மூலம் உடனடியாக பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
பஞ்சாப் மாநிலத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் அனைவருக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவில் பழைய ஓய்வூதியத்தை செயல்படுத்தும் மாநிலங்களின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ள நிலையில், இந்தப் பட்டியலில் முதலிடம் பிடித்திருக்க வேண்டிய தமிழ்நாடு அதற்கான நடவடிக்கைகளை எடுக்காதது வருத்தமளிக்கிறது.
ராஜஸ்தான், சத்தீஸ்கர், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களுக்கு முன்பாகவே தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகள் தொடங்கப்பட்டு விட்டன. பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து பரிந்துரைக்க 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் 3-ந்தேதி மூத்த அதிகாரி டி.எஸ்.ஸ்ரீதர் தலைமையில் அமைக்கப்பட்ட வல்லுனர் குழு அதன் அறிக்கையை 27.11.2018 அன்று அப்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் அளித்தது. ஆனால், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
பழைய ஓய்வூதியத் திட்டம் சாத்தியமானது தான் என்பது பல்வேறு மாநிலங்களில் அத்திட்டம் செயல்படுத்தப்பட்டதிலிருந்தே உறுதியாகியுள்ளது. எனவே, இனியும் ஏதேனும் காரணங்களைக் கூறி பழைய ஓய்வூதியத் திட்டத்தை தாமதப்படுத்தாமல், ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளின் மூலம் உடனடியாக பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- நாங்கள் வெளிப்படையான மற்றும் நேர்மையான ஆட்சியை வழங்குவோம்.
- 10 உத்தரவாதங்களை வழங்கியுள்ளோம், அவற்றை நாங்கள் செயல்படுத்துவோம்.
சிம்லா:
இயற்கை எழில் கொஞ்சும் இமாசலபிரதேச மாநிலத்தில் கடந்த மாதம் 12-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இங்கு 1985-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு தேர்தலிலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு வருகிறது.
இந்த முறையும் அந்த சரித்திரம் தொடருமா அல்லது மாறுமா என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 8-ந் தேதி எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் பெரும்பாலான தொகுதிகளில் எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களே முன்னிலை பெறத் தொடங்கினர்.
இறுதியில் காங்கிரஸ் கட்சி மொத்தம் உள்ள 68 இடங்களில் 40 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. ஆளும் கட்சியாக இருந்த பா.ஜ.க. 25 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனையடுத்து இமாசலபிரதேச மாநிலத்தின் 15-வது முதல்-மந்திரியாக சுக்விந்தர்சிங் சுக்கு பதவியேற்றார். அவருக்கு கவர்னர் ராஜேந்திர விஷ்வநாத் அர்லேக்கர் பதவிப்பிரமாணமும், ரகசியக்காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். துணை முதல்-மந்திரியாக முகேஷ் அக்னிகோத்ரி பதவியேற்றுக்கொண்டார். மந்திரிகள் அடுத்த சில நாட்களில் பதவி ஏற்பார்கள் என தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில், முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம் என்று சுக்விந்தா் சிங் சுக்கு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, நாங்கள் 10 உத்தரவாதங்களை வழங்கியுள்ளோம், அவற்றை நாங்கள் செயல்படுத்துவோம். நாங்கள் வெளிப்படையான மற்றும் நேர்மையான ஆட்சியை வழங்குவோம். இவ்வாறு அவர் கூறினார்.
- பட்டதாரி ஆசிரியர்கள் கழக பொதுக்குழுவில் வலியுறுத்தல்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
திருப்பத்தூர்:
தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் மாவட்ட பொது குழு கூட்டம் திருப்பத்தூர் அரசு பூங்கா பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் எம்.தேசிங்குராஜன் தலைமை வகித்தார், மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஆர்.மதூரா, மாவட்ட சட்ட செயலாளர் என்..சசிகுமார், முன்னிலை வகித்தனர். அனைவரையும் மாவட்டச் செயலாளர் வி.மூர்த்தி வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் அ. மாயவன், மாநில பொருளாளர் சி. ஜெயக்குமார், கலந்துகொண்டு பேசினர்.
கூட்டத்தில் மாவட்ட தலைமை நிலைய செயலாளர் எம்.சுரேஷ், மாவட்ட செய்தி தொடர்பாளர் ரவிச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அவை வருமாறு:-
பேரறிஞர் அண்ணா வழங்கிய ஆசிரியர்களுக்கான மேற் படிப்புக்களுக்கான ஊக்க உயர்வை அப்படியே வழங்கிட வேண்டும்.
நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்ற கூட்ட தொடரில், நமது வாழ்வதாரா கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டுவரப்படும் என்ற அறிவிப்பு இல்லை என்றால் மாநில கழகம் எடுத்த முடிவின்படி மாவட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது நமது திருப்பத்தூர் மாவட்டத்திலும் மிகவும் எழுச்சியுடன் நடத்துவது என முடிவு செய்யப்படுகிறது.
தமிழகம் முழுவதும் உள்ள அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை பள்ளிகளில் மேல்நிலை டெட் தேர்வு தேர்ச்சி பெறாமல் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றிவரும் எவ்வித ஆசிரியர்களுக்கு எவ்வித நிபந்தனை இன்றி டெட் தேர்வில் இருந்து அவர்களுக்கு. விலக்கு அளிக்க வேண்டும், ஆசிரியர் பணியில் சேர்ந்த நாளில் இருந்து பணி வரன்முறை செய்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
பின்னர் மாநிலத் தலைவர் மாயவன் கூறியதாவது;
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி வருகிற மார்ச் மாதம் 5 ம்தேதி ஜாக்டோ ஜியோ உடன் இணைந்து மாவட்ட தலை நகரங்களின் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது.
மேலும் 6 மாத கால நிலுவை உள்ள அகவிலைப்படி ஓய்வூதிய திட்டம் உடனடியாக வழங்க கோரியும் முதல்-அமைச்சரை சந்தித்து மனு அளித்துள்ளோம். என கூறினார் உடன் மாநில பொருளாளர் ஜெயக்குமார், நிர்வாகிகள் உடன் இருந்தனர். இறுதியில் மாவட்ட பொருளாளர் துக்கன் நன்றி கூறினார்
- பேராவூரணியில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- நிலுவை அகவிலைப்படியை உடனடியாக வழங்க வேண்டும்.
பேராவூரணி:
பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும்.
நிலுவை அகவிலைப்படியை உடன டியாக வழங்க வேண்டும்.
நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பை வழங்க வேண்டும் உள்ளிட்ட வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
த.அ.ஊ.சங்க வட்ட தலைவர் ஏ.நாவலரசன் தலைமை வகித்தார்.
த.அ.ஊ. சங்க மாவட்ட இணை செயலாளர் ஸ்ரீமகேஷ் விளக்க உரையாற்றினார்.
வருவாய்துறை அலுவலர்கள் ரெத்தினம் மற்றும் மனோகரன் பேசினர்.
நிறைவாக வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தைச் சேர்ந்த அஸ்ரப் அலி நன்றி கூறினார்.
- நேரம், நிதிப் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற முடியாது என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
- தி.மு.க. எதிர்க் கட்சியாக இருந்தபோது எங்களுக்கு செய்து தருவதாக அளித்த தேர்தல் வாக்குறுதிகளைத் தான் நிறைவேற்றி தர வேண்டுமென வலியுறுத்துகிறோம்.
சென்னை:
பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுப் பள்ளி ஆசிரியர் சங்கங்கள் சார்பில் பல்வேறு போராட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ஆசிரியர் சங்கங்களுடன் பள்ளிக் கல்வித்துறை முதல்கட்ட பேச்சு வார்த்தையை நேற்று முன்தினம் நடத்தியதைத் தொடர்ந்து, 2-ம் கட்டக் கூட்டம் பள்ளிக் கல்வி இயக்குனர் க.அறிவொளி, தொடக்க கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன் ஆகியோர் தலைமையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ. வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில், தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு (டி.என்.எஸ்.ஜாக்டோ) சார்பில் பல்வேறு சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களின் கோரிக்கைகளை தமிழக அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தினர்.
அதே நேரம், நிதிப் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற முடியாது என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப் பட்டது. இதனால் இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
இதையடுத்து டி.என்.எஸ்.இ ஜாக்டோ கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அ.மாயவன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தி.மு.க. எதிர்க் கட்சியாக இருந்தபோது எங்களுக்கு செய்து தருவதாக அளித்த தேர்தல் வாக்குறுதிகளைத் தான் நிறைவேற்றி தர வேண்டுமென வலியுறுத்துகிறோம். இந்த விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் நேரடி கவனம் செலுத்த வேண்டும். அரசின் கவனத்தை ஈர்க்கவே போராட்டம் அறிவிக்கப்பட்டது.
பள்ளிக் கல்வித் துறையுடன் தற்போது நடத்தப் பட்ட பேச்சுவார்த்தையில் முக்கிய கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை. அதனால் ஏற்கனவே திட்டமிட்டபடி சென்னை நுங்கம்பாக்கம் பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் (டி.பி.ஐ) வளாகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை)ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இதில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பங்கேற்க உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.






