என் மலர்
நீங்கள் தேடியது "ஜாக்டோ ஜியோ"
- அடுத்த மாதம் மாவட்ட தலைநகரங்களில் உரிமை மீட்பு உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்.
- 27-ந்தேதி மாவட்ட தலைநகரங்களில் வேலைநிறுத்த ஆயத்த மாநாடு நடத்தப்படும்.
சென்னை:
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், தொகுப்பூதியம், மதிப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியத்தில் உள்ள ஊழியர்களை காலமுறை ஊதியத்தில் வரன்முறைப்படுத்த வேண்டும். ஆசிரியர்களுக்கான பதவி உயர்வுகள், ஊதிய முரண்பாடுகளை களையவேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்பவேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறது.
கோரிக்கைகளை வலியுறுத்தி எப்போதெல்லாம் ஜாக்டோ-ஜியோ போராட்டம் நடத்துகிறதோ, அப்போதெல்லாம் அரசு அழைத்து பேச்சுவார்த்தை நடத்துகிறது. அதன்படி, கடந்த பிப்ரவரி 24-ந்தேதி அமைச்சர்கள் கொண்ட குழு எங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது.
அதேபோல் மார்ச் 13-ந்தேதி முதலமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தி 10 அம்ச கோரிக்கைகள் குறித்து விரிவாக பேசி ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகளுக்கு நம்பிக்கை அளித்தார். ஆனாலும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. இதனையடுத்து அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், கடந்த 18-ந்தேதி ஒரு நாள் வேலைநிறுத்த போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து அடுத்தகட்டமாக என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுக்கலாம்? என்பது குறித்து ஆலோசிக்க ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்களின் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மு.பாஸ்கரன், சே.பிரபாகரன், இலா.தியோடர் பாஸ்கரன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
இந்த கூட்டத்தின் முடிவில், அடுத்தகட்ட போராட்டமாக அடுத்த ஆண்டு (2026) ஜனவரி மாதம் 6-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டிருப்பதாக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக ஜாக்டோ-ஜியோ சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வட்டார அளவில் பிரசார இயக்கம் மேற்கொள்ளப்பட்டு, அடுத்த மாதம் (டிசம்பர்) 13-ந்தேதி மாவட்ட தலைநகரங்களில் உரிமை மீட்பு உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்.
அதனைத்தொடர்ந்து அடுத்த மாதம் 27-ந்தேதி மாவட்ட தலைநகரங்களில் வேலைநிறுத்த ஆயத்த மாநாடு நடத்தப்படும். பின்னர் அடுத்த ஆண்டு ஜனவரி 6-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டிருக்கிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 2003-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதிக்கு பின்பு அரசுப்பணியில் சேர்ந்தோருக்கு பங்களிப்புடன் கூடிய ஓய்வூதித் திட்டத்தினை அமல்படுத்த வேண்டும்.
- காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
சென்னை:
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசுப்பணியாளர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கடந்த 4½ ஆண்டுகளாக அரசு ஊழியர், ஆசிரியர், அரசுப்பணியாளர்களின் சார்பாக ஜாக்டோ-ஜியோ முன்வைத்த கோரிக்கைகளில் சரண் விடுப்பு ஒப்படைப்பு தவிர வேறு எந்தவித கோரிக்கைகளையும் நிறைவேற்றவில்லை. எனவே, 2003-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதிக்கு பின்பு அரசுப்பணியில் சேர்ந்தோருக்கு பங்களிப்புடன் கூடிய ஓய்வூதித் திட்டத்தினை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள், உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்.
அரசின் பல்வேறு துறைகளில் 30 சதவீதத்திற்கு மேலாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கருணை அடிப்படையில் பணி நியமனத்திற்கான உச்சவரம்பு 5 சதவீதம் குறைக்கப்பட்டதை ரத்து செய்து மீண்டும் 25 சதவீதமாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட எங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. அதன்படி, வருகிற 16-ந்தேதி பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனே வழங்கிட வலியுறுத்தி கோரிக்கை அட்டை அணிந்த அனைத்து தாலுகாவிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. இதேபோல, வரும் நவம்பர் 18-ந்தேதி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் நடத்தப்பட உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- தமிழ்நாடு அரசிடம் பழைய ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராடி வருகிறோம்.
- சில சங்கங்கள் தனித்துவமாக செயல்படுவதோடு தங்களோடு தொடர்புபடுத்த வேண்டாம்.
சென்னையை அடுத்த பனையூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயை ஜாக்டோ ஜியோ சங்கத்தில் இடம் பெற்றுள்ள உயர்நிலை-மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் மாயவன் தலைமையிலான குழுவினர் சந்தித்தனர்.
இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாயவன், தமிழ்நாடு அரசு நான்கரை ஆண்டுகளாக வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை 8 முறை சந்தித்துவிட்டோம். தமிழக அரசை நம்பி நாங்கள் ஏமாந்துவிட்டோம்.
எங்கள் சங்கத்தின் சார்பில் மிகப் பெரிய போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். இதுபற்றி விஜயிடம் தெரிவித்தோம். விஜய் முழு ஆதரவு தெரிவித்துள்ளதாக அவர் கூறினார்.
இந்த நிலையில் த.வெ.க. தலைவர் விஜயை கடந்த 13-ந்தேதி சந்தித்ததாக வெளியான செய்திக்கு ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
பட்டதாரி ஆசிரியர் சங்கத் தலைவர் மாயவன் விஜயை சந்தித்ததற்கும் தங்களுக்கும் தொடர்பில்லை. தமிழ்நாடு அரசிடம் பழைய ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராடி வருகிறோம்.
சில சங்கங்கள் தனித்துவமாக செயல்படுவதோடு தங்களோடு தொடர்புபடுத்த வேண்டாம். த.வெ.க. தலைவர் விஜயை தங்கள் அமைப்பினர் சந்திக்கவில்லை. உண்மைக்கு புறம்பான செய்தியை திரும்ப பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
- தமிழக அரசின் 2024-25-ம் நிதியாண்டு பட்ஜெட்டில், ஜாக்டோ-ஜியோ எதிர்பார்த்த கோரிக்கைகள் இடம்பெறவில்லை.
- மாவட்ட தலைநகரங்களில் அடுத்த மாதம் 24-ந்தேதி கோரிக்கை மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ தொடர்ந்து போராடி வருகிறது.
தமிழக அரசின் 2024-25-ம் நிதியாண்டு பட்ஜெட்டில், ஜாக்டோ-ஜியோ எதிர்பார்த்த கோரிக்கைகள் இடம்பெறவில்லை என தெரிவித்து, கடந்த மாதம் (மார்ச்) 23-ந்தேதி, மாவட்ட தலைநகரங்களில், ஜாக்டோ-ஜியோ சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
இந்த நிலையில், ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் கூட்டம் சென்னையில் நேற்று மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில், பழைய ஓய்வூதிய திட்டம் உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வருகிற 22-ந்தேதி (செவ்வாய்க்கிழமை), மாவட்ட தலைநகரங்களில் கோரிக்கை பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட தலைநகரங்களில் அடுத்த மாதம் (மே) 24-ந்தேதி (சனிக்கிழமை) கோரிக்கை மாநாடு நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
எனவே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில், நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று ஜாக்டோ-ஜியோ வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஜாக்டோ ஜியோ சார்பில் எழிலகம் அருகே இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
- தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பது உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ சார்பில் எழிலகம் அருகே இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் சங்க மாநில ஒருங்கிணைப்பாளரான சுரேஷ் தொடக்க உரையாற்றினார். தலைமை செயலக சங்க ஒருங்கிணைப்பாளரான வெங்கடேசன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில உயர்மட்ட குழு உறுப்பினரான விஜய குமரன், மாநில ஒருங்கிணைப்பாளரான சீனிவாசன் உள்பட ஏராளமான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்த கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தமிழக அரசு தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரி தொடர் பேராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் வருகிற 30-ந்தேதி அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி ஆலோசிக்க முடிவு செய்துள்ளனர்.
- பட்ஜெட்டில் எதிர்பார்த்த அறிவிப்புகள் இல்லாதது ஏமாற்றத்தை கொடுக்கிறது.
- அரசு மவுனம் காத்தால், வருகிற 30-ந்தேதி அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து கூடி முடிவு செய்யப்படும்.
சென்னை:
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ தொடர்ந்து போராடி வருகிறது. சமீபத்திலும் போராட்டம் நடந்தது. அந்த போராட்டத்தின் தொடர்ச்சியாக மறியல் போராட்டம் மேற்கொள்ளப்போவதாக அறிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து சென்னை தலைமை செயலகத்தில், கோரிக்கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. அந்த பேச்சுவார்த்தையின் முடிவில் சட்டசபை கூட்டத்தொடரில் பட்ஜெட் அறிவிப்பில், கோரிக்கைகள் தொடர்பான அறிவிப்பு இடம்பெறும் என்ற நம்பிக்கையில் மறியல் போராட்டத்தை ரத்துசெய்தனர்.
இந்தநிலையில் நேற்று மாலை ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மாயவன், சேகர், பார்த்தசாரதி ஆகியோர் தலைமையில் நடந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
அதன்படி, பட்ஜெட்டில் எதிர்பார்த்த அறிவிப்புகள் இல்லாதது ஏமாற்றத்தை கொடுக்கிறது. எனவே கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வருகிற 23-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும். அதன்பிறகும் அரசு மவுனம் காத்தால், வருகிற 30-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து கூடி முடிவு செய்யப்படும் என்பது போன்ற முடிவுகள் எடுக்கப்பட்டது.
இதேபோல், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'நீண்ட நாள் கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டம் 2004-2006 தொகுப்பூதிய பணிக்காலம், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு, ஊக்க ஊதியத்தை பழைய முறைப்படி வழங்குதல், மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 100 சதவீத கட்டணமில்லா சிகிச்சை உறுதிப்படுத்துதல் போன்ற எதிர்பார்த்த அறிவிப்புகள் இல்லாதது ஏமாற்றம். இது மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது' என்று கூறியுள்ளார்.
- கோரிக்கை மனு வழங்கினர்
- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தனர்
வேலூர்:
வேலூரில் ஜாக்டோ ஜியோ பேரமைப்பு நிர்வாகிகள் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனையும், அணைக்கட்டு எம்.எல்.ஏ. நந்தகுமாரையும், கதிர் ஆனந்த் எம்.பி.யையும் இன்று சந்தித்து கோரிக்கைகள் அடங்கிய மனுவினை வழங்கினர்.
முதல்-அமைச்சரின் கனிவான கவனத்திற்கு கோரிக்கை மனுவை கொண்டு சென்று நிறைவேற்றி தருமாறு கேட்டுக்கொண்டனர்.
நேற்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோரை ஜாக்டோ ஜியோ ஒருங ்கிணைப்பாளர்களுடன் பேச்சு வார்த்தைக்கு அனுப்பி பேச வைத்து கோரிக்கைகளின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்ததற்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஜாக்டோ ஜியோ பேரமைப்பின் சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.
இந்த சந்திப்பின் போது மாநில உயர்மட்ட குழு உறுப்பினர்கள் செ.நா.ஜனார்த்தனன், அ. சேகர், துரை.கருணாநிதி, அக்ரி ராமன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஏ.சீனிவாசன் ஜி.சீனிவாசன் மாவட்ட உயர்மட்ட குழு உறுப்பினர்கள் ஜி.டி.பாபு, தியாகராஜன், குமார், பெ.இளங்கோ அல்போன்ஸ் கிரி சுமதி, பா வேலு, ஜி.சுந்தர லட்சுமி கல்லூரி ஆசிரியர் கழக விஜயன் அனைத்து வகை ஆசிரியர் சங்க நிர்வாகிகள் அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.
- பிப்ரவரி 26-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படும்
- 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றம்
புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும். இடைநிலை ஆசிரியர்கள், உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். அரசு துறைகளில் காலியாக இருக்கும் 30 சதவீதத்திற்கும் மேலான இடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ குழு போராட்டம் நடத்தி வருகிறது.
இந்த நிலையில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஜாக்டோ-ஜியோ மாநில உயர்மட்டக்குழு கூட்டம், சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. மாநில ஒருங்கிணைபாளர்கள் அ.மாயவன், ஆ. செல்வம், ச.மயில் ஆகியோர் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் ஒன்று கூடி ஆலோசனை மேற்கொண்டனர்.
இந்த ஆலோசனைக்கு பிறகு, பிப்ரவரி 15ம் தேதி ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால்பிப்ரவரி 26-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ உயர்மட்டக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது
- தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றித் தாருங்கள் என்று வலியுறுத்துகிறோம்.
- அடுத்த மாதம் தொடர்ச்சியான போராட்டங்களை நடத்த திட்டமிட்டு உள்ளோம்.
சென்னை:
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது, சரண் விடுப்பு ஒப்படைப்பு, உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ சார்பில் மாவட்ட தலைநகரங்களில் இன்று மறியல் போராட்டம் நடந்தது.
சென்னையில் நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளி கல்வி அலுவலகம் முன்பு மறியல் நடத்த திட்டமிட்டு இருந்தனர். இதற்கு போலீசார் அனுமதி மறுத்ததோடு கல்லூரி சாலையில் நூற்றுக்கும் மேலான போலீசார் குவிக்கப்பட்டனர். பள்ளிக் கல்வி துறையின் அலுவலக வளாக கதவுகள் பூட்டப்பட்டு தடுப்பு வேலிகள் போடப்பட்டது.

ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் வெங்கடேசன், மாயவன், அன்பரசு ஆகியோர் தலைமையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அங்கு திரண்டனர். போலீசார் முன் எச்சரிக்கையாக அவர்களை ஒன்று சேர விடாமல் உடனடியாக கைது செய்து பஸ்சில் ஏற்றினர்.
மறியலில் ஈடுபட வந்த ஒவ்வொருவரும் தனித்தனியாக கைது செய்யப்பட்டதால் மறியல் போராட்டத்தில் அவர்களால் ஈடுபட முடியவில்லை. மறியலுக்கு முன்பே 200 பேர் கைது செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்டனர்.

போராட்டம் குறித்து ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன் கூறியதாவது:-
போராட்டம் நடத்தக்கூட அரசு அனுமதி மறுக்கிறது. தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றித் தாருங்கள் என்று வலியுறுத்துகிறோம்.
பாராளுமன்ற தேர்தலில் அரசுக்கு எதிராக எதிர்ப்பு அலை நிச்சயமாக வீசும் பேச்சுவார்த்தையில் நம்பிக்கை இல்லை. அடுத்த மாதம் தொடர்ச்சியான போராட்டங்களை நடத்த திட்டமிட்டு உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 21 மாத ஊதிய மாற்று நிலுவைத் தொகை அரசு பணியாளர்களுக்கு மறுக்கப்பட்டதை உடனடியாக வழங்க வேண்டும்.
- திடீர் சாலைமறியலால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
மதுரை:
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் இன்று ஜாக்டோ-ஜியோ சார்பில் மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி மதுரை பெரியார் பஸ் நிலையம் பகுதியில் உள்ள கட்ட பொம்மன் சிலை சந்திப்பில் இன்று காலை ஜாக்டோ ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் செல்வம் தலைமையில் பெண்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் திரண்டனர். பின்னர் அவர்கள் மெயின் ரோட்டில் அமர்ந்து திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர்.
தேர்தல் கால வாக்குறுதிகளை அரசு நிறைவேற்ற வேண்டும். தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் புதிய ஓய்வு திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வு திட்டத்தினை அமல்படுத்த வேண்டும். அரசின் பல்வேறு துறைகளில் 30 விழுக்காட்டிற்கு மேலுள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். 21 மாத ஊதிய மாற்று நிலுவைத் தொகை அரசு பணியாளர்களுக்கு மறுக்கப்பட்டதை உடனடியாக வழங்க வேண்டும்.
உள்ளாட்சி அமைப்பு களில் பல்வேறு அரசு துறைகளிலும் தனியார் முகமை மூலம் பணியாளர்கள் நியமனம் செய்வதை உடனடியாக தடை செய்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
திடீர் சாலைமறியலால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. உடனே அங்கு குவிக்கப்பட்டிருந்த போலீசார் சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி கலைந்து செல்லுமாறு கூறினர். இதனால் போலீசாருக்கும், அவர்களுக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து போலீசார் மறியல் செய்த பெண்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் செல்வம் கூறுகையில், தேர்தல் கால வாக்குறுதிகளை அரசு நிறைவேற்ற வேண்டும். அரசு இது தொடர்பாக நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து பிப்ரவரி 5-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு கேட்க உள்ளோம். பிப்ரவரி 10-ந் தேதி மாவட்ட அளவில் வேலை நிறுத்த போராட்டம் தொடர்பாக ஆயத்த மாநாடு நடத்தப்படும். தொடர்ந்து பிப்ரவரி 15-ந் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்ய உள்ளோம். 26-ந் தேதி முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.
- பிப்ரவரி 26-ந்தேதி முதல் காலவரையற்ற போராட்டம் என அறிவிப்பு.
- 3 அமைச்சர்கள் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்கிறார்கள்.
பழைய ஓய்வு ஊதியம் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ வருகிற 26-ம்தேதி முதல் காலவரையற்ற போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தது.
இந்த நிலையில் ஜாக்டோ ஜியோ அமைப்பு நிர்வாகிகளுடன் உடன் பேச்சுவார்த்தை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி இன்று காலை 12 மணி அளவில் அமைச்சர் எ.வ. வேலு அலுவலகத்தில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது.
பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள ஜாக்டோ ஜியோவின் உயர்மட்ட குழுவின் 30 பேருக்கு அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ளது.
இந்த பேச்சுவார்த்தையில் அமைச்சர்கள் எ.வ. வேலு, முத்துச்சாமி மற்றும் அன்பின் மகேஷ் ஆகியோர் கலந்து கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தையின் தொடர்பாக காலவரையற்ற போராட்ட அறிவிப்பு திரும்பப் பெறப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
- வேலை இல்லை ஊதியம் இல்லை என்ற கோட்பாட்டின் அடிப்படையில் ஊதியம் அவர்களுக்கு உரிமை இல்லை.
- அரசு ஊழியர்கள் எவரேனும் அலுவலகத்திற்கு வரவில்லை என்றால் அவர்கள் இல்லாத காலமாக கருதப்படும்.
ஜாக்டோ ஜியோ அமைப்பினர் வருகிற 26-ந்தேதி முதல் காலவரையற்ற போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த நேற்று தமிழக அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. அமைச்சர் எ.வ. வேலு அலுவலகத்தில் நேற்று மதியம் அரசு சார்பில் ஜாக்டோ ஜியோ அமைப்பு உடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதாக தெரியவில்லை. இந்த நிலையில் 26-ந்தேதி முதல் திட்டமிட்டபடி காலவரையற்ற போராட்டம் நடைபெறும் என அறிவித்துள்ள நிலையில், அடையாள வேலை நிறுத்தம் செய்ய இருப்பதாக ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்தால் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா அறிவுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் அனைத்து துறை செயலாளர்களுக்கும் அவர் எழுதியுள்ள அவசர கடிதத்தில் "அனைத்து துறையின் அரசு ஊழியர்கள் விதிகளை மீறக் கூடாது என்று வலியுறுத்த வேண்டும். அரசு ஊழியர்கள் எவரேனும் அலுவலகத்திற்கு வரவில்லை என்றால் அவர்கள் இல்லாத காலமாக கருதப்படும்.
வேலை இல்லை ஊதியம் இல்லை என்ற கோட்பாட்டின் அடிப்படையில் ஊதியம் மற்றும் படிகளுக்கு அவர்களுக்கு உரிமை இல்லை. பகுதி நேர பணியாளர்கள், தினசரி ஊதியம் மற்றும் ஒருங்கிணைந்த ஊதியத்தில் இருப்பவர்கள் சேவையில் இருந்து விடுவிக்கப்படுவார்கள்.
நடத்தை விதிகள் 1973-ஐ யாரும் மீறவில்லை என்பதை உறுதி செய்வதோடு பணியில் இல்லாத காரணத்திற்காக உடனடியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
சாதாரண விடுப்பு, மருத்துவ விடுப்பு தவிர வேறு ஏதேனும் விடுப்புக்கான விண்ணப்பம் வேலை நிறுத்த நாளில் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. ஊழியர்களின் வருகை நிலை குறித்த அறிக்கையை 15-ம்தேதி காலை 10.15 மணிக்குள் மனித வள மேலாண்மை துறைக்கு தெரிவிக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.






