என் மலர்
நீங்கள் தேடியது "Tamilaga Vettri Kazhagam"
- பொதுமக்கள் தங்கள் பாதுகாப்பைக் கவனத்தில் கொண்டு எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்.
- மக்கள் மீது சிறிதேனும் அக்கறையிருந்திருந்தால் கொஞ்சமாகப் பெய்த மழைக்கே இவ்வளவு தண்ணீர் தேங்கியிருக்காது.
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வடிகால் வசதிகள் முறையாகவும் முழுமையாகவும் செய்து முடிக்கப்படாததே மக்களின் இந்தத் துயரத்திற்குக் காரணம். பொதுமக்கள் தங்கள் பாதுகாப்பைக் கவனத்தில் கொண்டு எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
மழையால் பாதிப்பிற்கு உள்ளாகும் மக்களுக்குத் தேவையான உதவிகளைப் பாதுகாப்போடு செய்திட வேண்டும் என்று கழகத் தோழர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
மழைநீர் வடிகால் வசதியை ஏற்படுத்துவதற்காக நிதி ஒதுக்கீடு செய்தும், நான்கரை ஆண்டுக்கால ஆட்சியில் பணிகள் முடிக்கப்படவில்லை. மக்கள் மீது சிறிதேனும் அக்கறையிருந்திருந்தால் கொஞ்சமாகப் பெய்த மழைக்கே இவ்வளவு தண்ணீர் தேங்கியிருக்காது. மீதமுள்ள பருவமழைக் காலத்திலாவது மக்கள் சிரமத்திற்கு உள்ளாகாத வகையிலும், அவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாத வகையிலும் மழைநீர் வெளியேறும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பல்வேறு மொழி, இனம், கலாசாரங்களுக்கு ஒத்த மதிப்பு அளித்து, மதச்சார்பின்மையை காத்துள்ளது.
- பூரண ஜனநாயகத்துடன் வேற்றுமையில் ஒற்றுமை காண வழி வகை செய்துள்ளது.
சென்னை:
த.வெ.க. தலைவர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில் கூறி இருப்பதாவது:-
நம் கொள்கைத் தலைவர் அண்ணல் அம்பேத்கர் தலைமையிலான குழு, உலகத்திலேயே மிகச் சிறந்த அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றி நமக்கு அளித்துள்ளது. இதில் இறையாண்மை, சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளித்துள்ளது. பல்வேறு மொழி, இனம், கலாசாரங்களுக்கு ஒத்த மதிப்பு அளித்து, மதச்சார்பின்மையை காத்துள்ளது.
பூரண ஜனநாயகத்துடன் வேற்றுமையில் ஒற்றுமை காண வழி வகை செய்துள்ளது. அண்ணலின் அரசிய லமைப்புச் சட்டத்தை நாம் ஏற்றுக்கொண்ட தினத்தை இந்திய அரசியல் சாசன தினமாகக் கொண்டாடுகிறோம். இந்த நாளில், இந்திய அரசியலமைப்பின் மாண்பையும் அது நமக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளையும் காக்க உறுதியேற்போம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- 'இந்திய மக்களாகிய நாம்' என்று தொடங்கும் அதன் முதல் வரி நமது ஒற்றுமை, அனைவருக்குமான பிரதிநிதித்துவம், கூட்டுறவு வாழ்க்கை போன்றவற்றைக் குறிப்பிடுகிறது.
- நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற பொன்விதிகள் இந்தியத் திருநாட்டின் சிறப்பை பிரதிபலிக்கிறது.
இந்திய அரசியலமைப்பு தினக் கொண்டாட்டத்தை ஒட்டி தமிழக வெற்றிக்கழகத்தின் தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
இந்திய குடிமக்கள் சாதி, மதம், இனம், பாலினம் போன்ற எந்தவித பாகுபாடுகளுக்கும் இடமில்லாமல் 'அனைவரும் சமம்' என்று பிரகடனம் செய்த ஆவணம் அரசியலமைப்பு சட்டம். 'இந்திய மக்களாகிய நாம்' என்று தொடங்கும் அதன் முதல் வரி நமது ஒற்றுமை, அனைவருக்குமான பிரதிநிதித்துவம், கூட்டுறவு வாழ்க்கை போன்றவற்றைக் குறிப்பிடுகிறது. நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற பொன்விதிகள் இந்தியத் திருநாட்டின் சிறப்பை பிரதிபலிக்கிறது.
இந்திய ஜனநாயகத்தின் ஆவணமாகவும், இந்தியர்களுடைய மதச்சார்பின்மையின் அடையாளமாகவும் உள்ள அரசியலமைப்பு சட்டத்தைக் காப்போம் என்று 'அரசியலமைப்பு தினமான' இன்று உறுதியேற்போம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தி.மு.க. அரசு மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கை புதைந்து விட்டது.
- மக்கள் தீர்ப்புக்கு தலைவணங்குகிறோம் என தி.மு.க. அறிக்கையை இப்போதே தயாரித்து வைத்து கொள்ளலாம்.
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தமிழக வெற்றிக்கழக சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது.
கரூர் கூட்ட நெரிசலில் பலியான 41 பேருக்கு த.வெ.க. சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதையடுத்து கொள்கை தலைவர்களுக்கு விஜய் மரியாதை செலுத்தினார். அதன்பிறகு கொள்கை பாடல் ஒலிக்கப்பட்டது. பின்னர் பொதுக்குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதையடுத்து சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* உச்சபட்ச அதிகார மயக்கத்தில் இருந்து கொண்டு முதலமைச்சர் பேசினாரோ?
* முதலமைச்சர் பேச்சில் மட்டும் தான் மனிதாபிமானம் உள்ளது.
* 1972-க்குப் பிறகு கேள்வி கேட்க யாரும் இல்லாததால் தி.மு.க. தலைமை இப்படி மாறி விட்டது.
* அரசின் விசாரணை மீது சந்தேகம் என உச்சநீதிமன்றம் கூறினார் அதற்கு என்ன அர்த்தம்?
* தி.மு.க. அரசு மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கை புதைந்து விட்டது.
* மக்கள் தீர்ப்புக்கு தலைவணங்குகிறோம் என தி.மு.க. அறிக்கையை இப்போதே தயாரித்து வைத்து கொள்ளலாம்.
* இயற்கையும் இறைவனும் மக்கள் சக்தியாக நம்முடன் இருக்கப் போகிறார்கள்.
* தற்போது ஏற்பட்டுள்ள இடையூறு தற்காலிகமானதுதான்.
* 2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க. - த.வெ.க. இடையில் தான் போட்டி.
* தி.மு.க. - த.வெ.க. போட்டி என்பது மீண்டும் வலிமை அடையப் போகிறது.
* சட்டம் மற்றும் சத்தியத்தின் துணை மூலம் துடைத்தெறியப் போகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட கோடிகளை கொட்டி வழக்கறிஞர்களை நியமித்துள்ளார் முதலமைச்சர்.
- தமிழக அரசின் தலையில் உச்சநீதிமன்றம் ஓங்கி குட்டு வைத்துள்ளது.
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தமிழக வெற்றிக்கழக சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது.
கரூர் கூட்ட நெரிசலில் பலியான 41 பேருக்கு த.வெ.க. சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதையடுத்து கொள்கை தலைவர்களுக்கு விஜய் மரியாதை செலுத்தினார். அதன்பிறகு கொள்கை பாடல் ஒலிக்கப்பட்டது. பின்னர் பொதுக்குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதையடுத்து சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
என்னுடைய தோழர், தோழிகள், தமிழக மக்களுக்கு வணக்கம்.
* குடும்ப உறவுகளை இழந்ததால் சொல்ல முடியாத வேதனையிலும் வலியிலும் இத்தனை நாட்களாக அமைதியாக இருந்தோம்.
* அமைதி காத்த நேரத்தில் வன்ம அரசியல், அர்த்தமற்ற குற்றச்சாட்டுகள் நம் மீது கூறப்பட்டன.
* கரூர் விவகாரம் குறித்து சட்டசபையில் பேசிய முதல்வர் நம் மீது வன்மத்தை கக்கி உள்ளார்.
* சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிகழ்த்திய உரைக்கு நாகரிக பதிலடி கொடுக்க விரும்புகிறேன்.
* அரசியல் செய்யவில்லை அரசியல் செய்யவில்லை எனக்கூறி முதலமைச்சர் சட்டசபையில் வன்மத்தை கக்கி உள்ளார்.
* பிரசாரத்திற்கான இடத்தேர்வு குறித்த கடைசி வரை இழுத்தடித்து வந்தார்கள்.
* வன்ம அரசியல், அர்த்தமற்ற அவதூறை சட்டம் மற்றும் சத்தியத்தின் துணை மூலம் துடைத்தெறிய போகிறோம்.
* அரசியல் காழ்ப்புடன் நேர்மை திறனற்ற குறுகிய மனம் கொண்ட முதல்வரிடம் சில கேள்விகளை கேட்க விரும்புகிறேன்.
* பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட கோடிகளை கொட்டி வழக்கறிஞர்களை நியமித்துள்ளார் முதலமைச்சர்.
* இந்தியாவில் யாருக்கும் எந்த தலைவருக்கும் விதிக்கப்படாத நிபந்தனைகள் விதிக்கப்பட்டது ஏன்?
* 50 ஆண்டுகாலமாக பொதுவாழ்வில் உள்ள முதலமைச்சர் பேசியது எவ்வளவு பெரிய வடிகட்டிய பொய்.
* முதல்வர் கூறியது வடிகட்டிய பொய் என நான் கூறவில்லை. உச்சநீதிமன்றம் கூறி உள்ளது.
* கரூர் சம்பவத்திற்கு பின் அவசர அவசரமாக தனி நபர் ஆணையம் அமைக்கப்பட்டது.
* தனி நபர் ஆணையத்தை தலையில் குட்டு வைத்து வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டனர்.
* தனி நபர் ஆணையத்தை மறந்து, அதிகாரிகள் செய்தியாளர்களை சந்தித்தனர்.
* தமிழக அரசின் தலையில் உச்சநீதிமன்றம் ஓங்கி குட்டு வைத்துள்ளது.
* பெருந்தன்மையை பெயரளவில் மட்டுமே பேசுகிறார் முதலமைச்சர்.
* எஸ்.ஐ.டி. அமைத்த தனி நீதிபதியின் உத்தரவை கொண்டாடினார்கள்.
* உச்சநீதிமன்றம் எழுப்பிய கேள்விகளை பார்த்து வாயடைத்துபோனார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 2026 சட்டசபை தேர்தலில் த.வெ.க. தலைமையில் கூட்டணி என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- தங்கள் தலைமையை ஏற்கும் கட்சிகளுடன் கூட்டணி என திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டது.
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தமிழக வெற்றிக்கழக சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது.
கரூர் கூட்ட நெரிசலில் பலியான 41 பேருக்கு த.வெ.க. சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.
இதையடுத்து கொள்கை தலைவர்களுக்கு விஜய் மரியாதை செலுத்தினார். அதன்பிறகு கொள்கை பாடல் ஒலிக்கப்பட்டது. பின்னர் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
* 2026 சட்டசபை தேர்தலில் த.வெ.க. தலைமையில் கூட்டணி என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
* கூட்டணி தொடர்பான அனைத்து முடிவுகளையும் எடுக்க விஜய்க்கு முழு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
* முதலமைச்சர் வேட்பாளர் விஜய் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தங்கள் தலைமையை ஏற்கும் கட்சிகளுடன் கூட்டணி என திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டது.
- பீகாரில் லட்சக்கணக்கான வாக்காளர்கள் நீக்கப்பட்டதை சுட்டிக்காட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- நமது குரலை ஒடுக்க தேவையற்ற விதிமுறைகள் வகுப்பட்டன என கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தமிழக வெற்றிக்கழக சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது.
கரூர் கூட்ட நெரிசலில் பலியான 41 பேருக்கு த.வெ.க. சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.
இதையடுத்து கொள்கை தலைவர்களுக்கு விஜய் மரியாதை செலுத்தினார். அதன்பிறகு கொள்கை பாடல் ஒலிக்கப்பட்டது. பின்னர் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
* கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேருக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
* கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும். கோவை விவகாரத்தில் தி.மு.க. அரசிற்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
* இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்வதை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
* மீனவர்கள் கைது விவகாரத்தில் கடிதம் மட்டுமே எழுதிவிட்டு அமைதியாக இருக்கும் தி.மு.க. அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
* பீகாரில் லட்சக்கணக்கான வாக்காளர்கள் நீக்கப்பட்டதை சுட்டிக்காட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
* 6 கோடி வாக்காளர்களுக்கு மேல் உள்ள தமிழ்நாட்டில் ஒரு மாதத்தில் வாக்காளர் பட்டியலில் திருத்தப்பணி மேற்கொள்வது எப்படி? வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளை நிறுத்தக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
* டெல்டா மாவட்டங்களில் முறையாக நெல் கொள்முதல் செய்யாத தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
* பொது நிகழ்ச்சிகளில் கட்சி தலைவர்கள், பொதுமக்களுக்கு பாரபட்சமின்றி பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
* நமது குரலை ஒடுக்க தேவையற்ற விதிமுறைகள் வகுப்பட்டன என கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
* விஜய் பங்கேற்கும் கூட்டத்திற்கு அனுமதி வழங்கி பாதுகாப்பு தருமாறு அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
* விஜய் பாதுகாப்பில் தமிழக அரசு வேண்டுமென்றே அலட்சியம் காட்டியதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
* விஜய் பங்கேற்கும் கூட்டத்திற்கு அனுமதி வழங்கி பாதுகாப்பு தருமாறு அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- முதல் முறையாக த.வெ.க தொண்டர் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- கரூர் கூட்ட நெரிசலில் பலியான 41 பேருக்கு த.வெ.க. சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து அவர் மீது அரசியல் கட்சிகள் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தன. தொடர்ந்து மவுனம் சாதித்து வந்த விஜய், கரூர் சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்து வீடியோ வெளியிட்டார்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கியதோடு, அவர்களை மாமல்லபுரத்திற்கு நேரில் அழைத்து தனித்தனியாக சந்தித்து ஆறுதல் கூறினார். இதன்பின்னர் த.வெ.க. அன்றாட அரசியல் நிகழ்வுகளில் கவனம் செலுத்தியது. கட்சியின் அன்றாடப்பணிகளை மேற்கொள்ள பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் உள்பட 28 பேர் கொண்ட நிர்வாகக்குழுவை விஜய் நியமித்தார்.
த.வெ.க. சார்பில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் வக்கீல்கள் நியமனம் செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக தொண்டரணி, மகளிரணி, இளைஞரணி, மாணவரணிக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர்.
இதுதவிர விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் கூட்ட மேலாண்மையை கடைப்பிடித்து விரும்பத்தகாத நிகழ்வுகளை தடுப்பதற்காக 2,500 இளைஞர்களை கொண்ட மக்கள் பாதுகாப்பு படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஓய்வுபெற்ற போலீஸ் ஐ.ஜி. ரவிக்குமார் மற்றும் ஓய்வுபெற்ற போலீசார் பயிற்சி அளித்தனர்.
கரூர் சம்பவத்துக்கு பிறகு விஜய் பொதுவெளியில் நிகழ்ச்சிகளில் எதுவும் பங்கேற்காமல் இருந்தார்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் த.வெ.க.வின் அடுத்த கட்ட நடவடிக்கை, சட்டசபை தேர்தலுக்கான வியூகங்கள் வகுப்பதற்காக சிறப்பு பொதுக்குழு கூட்டம் மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று நடைபெற்று வருகிறது.
நுழைவு வாயிலில் காலை 9 மணியில் இருந்து ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் அழைப்பு கடிதம், கார் பாஸ் மற்றும் கட்சி அடையாள அட்டை, காண்பித்து முதல் கட்ட சோதனையாக, பொதுக்கூட்டம் நடைபெறும் அரங்கத்திற்கு சென்றனர்.
பின்னர் அடையாள அட்டையில் உள்ளவர் பெயரை உறுதி செய்ய 2-ம் கட்ட சோதனையாக ஆதார் போன்ற அரசு அடையாள அட்டைகளை காண்பிக்க கூறி வரிசையில் நிற்க வைக்கப்பட்டனர்.
3-ம் கட்ட இறுதி சோதனையாக அவர்களது தொகுதி, மாவட்டம், பொறுப்பு உள்ளிட்ட விபரங்களை எழுதி வாங்கி பின்னர் பதிவேட்டில் கையெழுத்து போட்டதும் பொதுக்குழுக் கூட்ட அரங்கத்திற்கு அவர்கள் அனுப்பப்பட்டனர்.
கூட்டத்தில் பங்கேற்க வந்த த.வெ.க. உறுப்பினர் ஒருவர் கூறுகையில், பொதுக்குழு கூட்டம் குறித்து மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். எங்கள் தளபதி விஜயின் உரையைக் கேட்போம். நாங்கள் சிறப்பாகச் செயல்படுகிறோம். 2026 தேர்தலில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று கூறினார்.
முதல் முறையாக த.வெ.க தொண்டர் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கூட்டத்தில் சுமார் 2 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர்.
கரூர் கூட்ட நெரிசலில் பலியான 41 பேருக்கு த.வெ.க. சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
சட்டசபை தேர்தல்களுக்கான கூட்டணி குறித்த தனது நிலைப்பாட்டை த.வெ.க. பொதுக்குழு கூட்டத்தில் விஜய் தெளிவுபடுத்துவார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
- த.வெ.க. சார்பில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் வக்கீல்கள் நியமனம் செய்யப்பட்டனர்.
- பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதும் விஜய் சிறப்புரையாற்ற இருக்கிறார்.
சென்னை:
கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து அவர் மீது அரசியல் கட்சிகள் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தன. தொடர்ந்து மவுனம் சாதித்து வந்த விஜய், கரூர் சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்து வீடியோ வெளியிட்டார்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கியதோடு, அவர்களை மாமல்லபுரத்திற்கு நேரில் அழைத்து தனித்தனியாக சந்தித்து ஆறுதல் கூறினார். இதன்பின்னர் த.வெ.க. அன்றாட அரசியல் நிகழ்வுகளில் கவனம் செலுத்தியது. கட்சியின் அன்றாடப்பணிகளை மேற்கொள்ள பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் உள்பட 28 பேர் கொண்ட நிர்வாகக்குழுவை விஜய் நியமித்தார்.
த.வெ.க. சார்பில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் வக்கீல்கள் நியமனம் செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக தொண்டரணி, மகளிரணி, இளைஞரணி, மாணவரணிக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர்.
இதுதவிர விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் கூட்ட மேலாண்மையை கடைப்பிடித்து விரும்பத்தகாத நிகழ்வுகளை தடுப்பதற்காக 2,500 இளைஞர்களை கொண்ட மக்கள் பாதுகாப்பு படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஓய்வுபெற்ற போலீஸ் ஐ.ஜி. ரவிக்குமார் மற்றும் ஓய்வுபெற்ற போலீசார் பயிற்சி அளித்தனர்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் த.வெ.க.வின் அடுத்த கட்ட நடவடிக்கை, சட்டமன்ற தேர்தலுக்கான வியூகங்கள் வகுப்பதற்காக சிறப்பு பொதுக்குழு கூட்டம் மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று நடக்கிறது. இதில் சுமார் 2 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர். கரூர் சம்பவத்துக்கு பிறகு விஜய் பொதுவெளியில் நிகழ்ச்சிகளில் எதுவும் பங்கேற்காமல் இருந்தார்.
எனவே அந்த சம்பவத்திற்கு பிறகு நடைபெறும் பொதுக்குழு கூட்டம் என்பதால் அரசியல் வட்டாரத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதும் விஜய் சிறப்புரையாற்ற இருக்கிறார். அவருடைய அனல் தெறிக்கும் பேச்சு நிறைவடைந்ததும், அனைவருக்கும் அறுசுவை விருந்து வழங்கப்பட இருக்கிறது. விஜய்யின் பேச்சை பட்டி தொட்டியெல்லாம் கொண்டு செல்வதற்காக, அக்கட்சியினர் நேரடி ஒளிபரப்புக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
அழைப்பு கடிதம் மற்றும் தலைமைக்கழக அடையாள அட்டை வைத்திருக்கும் பொதுக்குழு உறுப்பினர்கள் மட்டுமே பொதுக்குழுவில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். அடையாள அட்டையில் பெயர் உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.
காலை 9.15 மணிக்குள் பொதுக்குழு அரங்கிற்குள் வந்துவிடவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை கட்சி தலைமை பிறப்பித்துள்ளது.
- மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, திரைப்பட இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
- தாயைப்போல பாசம் கொண்ட தலைவன் இல்லாமல் ஏங்கும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என விஜய் கூறினார்.
சென்னை எழும்பூரில் உள்ள ம.தி.மு.க தலைமை அலுவலகத்தில், தமிழ் ஈழ விடுதலை போராளி திலீபன் நினைவு நாளையொட்டி, அவரது படத்திற்கு ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, திரைப்பட இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர் நிருபர்களிடம், வைகோ கூறியதாவது:-
தமிழ் ஈழ வரலாற்றில் அழியாத புகழ்பெற்ற திலீபன் 7 அணு ஆயுத வல்லரசுகளை எதிர்த்து, 7 ஆயிரம் விடுதலைப் புலி வீரர்களை வைத்து தோற்கடித்தார். தாயைப் போல பாசம் கொண்ட தலைவன் இல்லாமல் ஏங்கும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டுமென த.வெ.க தலைவர் விஜய் தனது பிரசாரத்தில் கூறியுள்ளது குறித்த கேள்விக்கு, ஈழத் தமிழர்களுக்காக யார் குரல் கொடுத்தாலும் அதை மனதார மெச்சி வரவேற்பதாக வைகோ பதில் அளித்தார்.
- நான் எதையும் எழுதி வைத்து படிக்க மாட்டேன்.
- அ.தி.மு.க.விடம் இருந்து 2 இட்லி தி.மு.க.விடமிருந்து 2 இட்லி என எடுத்துக் கொண்டு செயல்படும் அவர் எப்படி மாற்றத்தை ஏற்படுத்துவார்.
சென்னை:
சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த திலீபனுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
அதில் கலந்து கொண்ட அந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
உலகம் முழுவதும் 13 கோடி மக்கள்தொகை கொண்ட இனம் தமிழ் இனம். சோழன் பல்வேறு நாடுகளை படை எடுத்து வெற்றி கண்டாலும் புலி கொடியை ஏற்றினார். ஆனால் இனக்கொடியை ஏற்றவில்லை. இதனால் தமிழ் இனத்துக்கு நாடு இல்லாமல் போனது.
தாயகத்தின் விடுதலைக்காக தண்ணீர் கூட அருந்தாமல் உயிர் நீத்த திலீபனின் வழியில் எங்களது இலக்கை அடைவதற்காக போராடிக் கொண்டிருக்கிறோம்.
சென்னையில் தமிழக அரசு நடத்திய கல்வி விழா பாடல் வெளியீட்டு விழா போன்றே நடைபெற்று முடிந்துள்ளது. இந்த அரசு விளம்பர மாடல் அரசாகவே செயல்பட்டு வருகிறது.
அந்த விழாவில் கலந்து கொண்டு பேசுவதற்கு கல்வியாளர்களை ஏன் அழைக்கவில்லை.. கல்வி வளர்ச்சி பற்றி தமிழக அரசு பேசுவதற்கு எந்த தகுதியும் கிடையாது.
இன்றைக்கு பள்ளிப் படிப்பை படித்த பிறகும் மாணவர்கள் தமிழ் எழுத முடியாமல் கிளறிக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் தமிழக அரசின் கல்வி சாதனையாகும்.
அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய 2 ஆட்சிகளிலும் தொழில் முதலீடு தொடர்பாக என்ன சாதித்து விட்டார்கள். ஒன்றுமே கிடையாது.
வெளிநாட்டில் இருந்து வரும் முதலாளிகள் மக்கள் நலனையா பார்ப்பார்கள். அவர்கள் லாப நோக்கோடு தான் செயல்படுவார்கள். என்னுடைய காருக்கு 5 லட்சம் சாலை வரி கட்டி உள்ளேன். பின்னர் எதற்காக சுங்கச்சாவடிகளை வைத்து கட்டணம் வசூலிக்கிறீர்கள். எங்களையெல்லாம் இதுபோன்று ஏமாற்ற முடியாது.
நான் எதையும் எழுதி வைத்து படிக்க மாட்டேன். எனது உள்ளங்கையிலேயே அனைத்து விவரங்களும் உள்ளன. தமிழக அரசு அனைத்து இடங்களுக்குமே கருணாநிதியின் பெயரை வைக்கிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் அந்த பெயரை எல்லாம் மாற்றுவோம்.
விஜய் தற்போது பிரசாரம் என்ற பெயரில் உப்புமா தான் கிண்டி கொண்டு இருக்கிறார்.
அ.தி.மு.க.விடம் இருந்து 2 இட்லி தி.மு.க.விடமிருந்து 2 இட்லி என எடுத்துக் கொண்டு செயல்படும் அவர் எப்படி மாற்றத்தை ஏற்படுத்துவார். அண்ணா, எம்.ஜி.ஆர். என இரண்டு சனியன்களை கையில் எடுத்துக்கொண்டு சனிக்கிழமைதோறும் விஜய் சென்று வருகிறார்.
மண்ணரிப்பா மீன் அரிப்பா என்பதை கூட அவரால் புரிந்து படிக்க முடியவில்லை. அவரால் எழுதிக் கொடுத்ததை கூட ஒழுங்காக படிக்க முடியவில்லை.
செல்லும் இடங்களில் எல்லாம் சொன்னார்களே செய்தார்களா சொன்னார்களே செய்தார்களா என்று கேட்டால் மட்டும் போதுமா? மக்கள் பிரச்சனைகளைப் பற்றி பேச வேண்டாமா?
பிப்ரவரி மாதம் வரையில் விஜய் பிரசாரம் செய்வதாக அறிவித்திருக்கிறார் அது அவரது விருப்பம். அண்ணனின் பேச்சை கேட்காவிட்டாலும் அவருக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- விஜய் வார இறுதி நாட்களில் தமிழகத்தின் மாவட்டம்தோறும் சென்று மக்களை சந்தித்து பிரசாரம் செய்து வருகிறார்.
- த.வெ.க.வினர் முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து மனு அளித்துள்ளனர்.
புதுச்சேரி:
தமிழகம், புதுவை சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் போட்டியிட உள்ளது.
சட்டமன்ற தேர்தலுக்கான முதல் கட்ட பிரசாரத்தை த.வெ.க. தலைவர் விஜய் தொடங்கியுள்ளார். அவர் வார இறுதி நாட்களில் தமிழகத்தின் மாவட்டம்தோறும் சென்று மக்களை சந்தித்து பிரசாரம் செய்து வருகிறார்.
இந்த நிலையில் வருகிற அக்டோபர் 11-ந் தேதி காலை புதுச்சேரிக்கு வர உள்ளார். இதனையொட்டி த.வெ.க. மாநில நிர்வாகிகள் புதியவன், நிரேஷ் தலைமையில் கட்சி நிர்வாகிகள் பிரசாரம் நடத்த அனுமதி கோரி காவல்துறை தலைமை அலுவலகத்தில் மனு அளித்தனர். புதுவை காவல்துறை சார்பில் கலந்து ஆலோசித்த பின் மீண்டும் அழைப்பதாக தெரிவித்தனர்.
தொடர்ந்து த.வெ.க.வினர் முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து மனு அளித்துள்ளனர்.
அவர்களிடம் விவரத்தை கேட்டு அறிந்த முதலமைச்சர் ரங்கசாமி மனுவை மாவட்ட கலெக்டருக்கு கையெழுத்திட்டு பரிந்துரை செய்தார்.
வருகிற 11-ந் தேதி சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு காலை 11 மணிக்கு வரும் விஜய்க்கு த.வெ.க.வினர் காலாப்பட்டில் வரவேற்பு தருகின்றனர். அங்கிருந்து பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பஸ்சில் கிழக்கு கடற்கரை சாலை வழியாக வரும் அவர், புதுவை அஜந்தா சிக்னல், எஸ்.வி.பட்டேல் சாலை, அண்ணா சாலை, சோனாம்பாளையம், மரப்பாலம் பகுதிகளில் விஜய் ரோடு ஷோ நடத்தவும், சோனாம் பாளையம் வாட்டர் டேங்க் அருகே விஜய் பேசவும் அனுமதி கோரி உள்ளனர்.
தொடர்ந்து பஸ்சில் அரியாங்குப்பம், மண வெளி, கன்னியகோவில் வழியாக மக்களுக்கு வணக்கம் தெரிவித்தபடி விஜய் கடலூர் செல்கிறார். விஜய் பிரச்சாரத்துக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி அளிக்கும் என தெரிகிறது.






