search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Parents struggle"

    • தலைமை ஆசிரியரிடம் கடும் வாக்குவாதம்
    • காரணம் இல்லாமல் மாணவர்களுக்கு மாற்றுச்சான்றிதழ் வழங்கியதாக புகார்

    வேலூர்:

    வேலூர் கொணவட்டம் அரசு மேல்நிலை ப்பள்ளியில் 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இந்த நிலையில் நேற்று, பள்ளியில் படிக்கும் மாணவன் ஒருவனுக்கு தலைமை ஆசிரியர் மாற்றுச் சான்றிதழ் வழங்கியதாக கூறப்படுகிறது.

    இதனை அறிந்த மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் இன்று கொணவட்டம் அரசு பள்ளியை முற்றுகையிட்டனர். காரணம் இல்லாமல் மாணவர்களுக்கு ஏன் மாற்றுச்சான்றிதழ் வழங்கினீர்கள்? என கேட்டு தலைமை ஆசிரியரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது இந்த பிரச்சனை தொடர்பாக உயர் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதனையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் கொணவட்டம் அரசு பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டது.

    அணைக்கட்டு அருகே உள்ள இலவம்பாடியில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 270 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இவர்களுக்கு பாடம் நடத்த, தலைமை ஆசிரியர் உள்பட 14 பேர் பணியாற்றுகின்றனர்.

    பள்ளி தலைமை ஆசிரியர் கஜேந்திரனை கடந்த ஏப்ரல் மாதம் பேரணாம்பட்டு அருகே உள்ள அரவட்லாவுக்கு பணியிடம் மாற்றம் செய்து கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

    வேறு பள்ளிக்கு செல்ல மறுத்த கஜேந்திரன், இளவம்பாடியிலேயே பள்ளி தலைமை ஆசிரியராக தொடர்ந்து பணியாற்றி வருகிறார். மேலும் தற்போது மருத்துவ விடுப்பு எடுத்து, பள்ளிக்கு வருவதையும் தவிர்த்து விட்டார்.

    தலைமை ஆசிரியர் இல்லாததால் மாணவர் சேர்க்கை மற்றும் அத்தியாவசிய பணிகள் அதிகம் பாதிக்கப்படுகிறது. எனவே பள்ளி தலைமை ஆசிரியரை கண்டித்து, அந்த பகுதி மக்கள் நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் இன்று பள்ளியை முற்றுகையிட்டனர். தங்களது பிள்ளைகளின் மாற்று சான்றிதழ் கேட்டு பள்ளி தலைமை ஆசிரியை (பொறுப்பு) பூங்குழலியிடம் வழங்கினார். மேலும் மாற்றுச் சான்றிதழ் தரும் வரை கலைந்து செல்ல மாட்டோம் எனக் கூறி பள்ளி வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட கல்வி அலுவலர் அங்குலட்சுமி, பெற்றோர்களிடம் போனில் தொடர்பு கொண்டு சமரசம் பேசினார்.

    உயர் அதிகாரிகளிடம் கூறி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதனை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • நெடிமோழியனூரில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
    • அரசு ஆரம்ப பள்ளி தொடங்கப்படும் என்று கிராம மக்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், அதற்கான அறிவிப்புகள் ஏதும் வரவில்லை.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம் நெடி மோழியனூரில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள மாணவர்கள் இங்கிருந்து சுமார் 4 கிலோமீட்டர் தூரம் உள்ள நீலதொட்டி அரசு பள்ளிக்குச் சென்று பயின்று வருகின்றனர். இதனால் மாணவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படுவதுடன், கல்வி கற்பதில் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டு வருகிறது. எனவே, நெடுமொழியனூர் கிராமத்தில் அரசு பள்ளி அமைக்க வேண்டுமென பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர்.

    இந்நிலையில் இந்த கல்வியாண்டில் நெடிமோழியனூரில் அரசு ஆரம்ப பள்ளி தொடங்கப்படும் என்று கிராம மக்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், அதற்கான அறிவிப்புகள் ஏதும் வரவில்லை. இக்கிராம மாணவர்கள் மீண்டும் நீலதொட்டி அரசு பள்ளிக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள், மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல், நெடிமோழியனூரில் உள்ள குழந்தைகள் மையத்தில் எதிரில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கல்வித் துறை அதிகாரிகள் வந்து நெடி மோழியனூர் கிராமத்தில் அரசு ஆரம்ப பள்ளி தொடங்க உத்தரவாதம் அளித்தால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும். அதுவரை மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப போவதில்லை என்று பொதுமக்கள் கூறினர்.

    தமிழ்நாடு முழுவதும் பல்வேறு அரசு பள்ளிகள் மூடப்படும் நிலையில், தங்கள் கிராமத்தில் அரசு ஆரம்ப பள்ளி தொடங்க வேண்டுமென கிராம மக்கள் போராட்டம் நடத்துவதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    காரியாபட்டி அருகே குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் பெற்றோர் போராட்டம் நடத்தினார்கள்.
    காரியாபட்டி:

    காரியாபட்டி அருகே கல்குறிச்சியில் சமத்துவபுரம் உள்ளது. இங்கு 100 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு பலத்த மழை பெய்ததில் சமத்துவபுரத்தில் உள்ள வீடுகளுக்குள்ளும், வீட்டைச் சுற்றியும் தண்ணீர் சூழ்ந்தது. அந்த கிராம மக்கள் காரியாபட்டி தாசில்தார் ராமநாதனிடம் முறையிட்டனர். தாசில்தார் பார்வையிட்டு அந்தந்த வீடுகளுக்கு முன்பு கிராவல் மண் அடிக்க கூறியுள்ளார். உடனே அவரவர் சொந்த செலவில் கிராவல் மண் அடித்துக் கொண்டார்கள்.

    சமத்துவபுரத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியை சுற்றிலும் தண்ணீர் தேங்கியது. பள்ளியை சுற்றி உள்ள தண்ணீரை அப்புறப்படுத்தவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஆனால் யாரும் கண்டுகொள்ளவில்லை. தேங்கி நிற்கும் தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேடும் நிலவுகிறது. மாணவர்களுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் புறக்கணிப்பு செய்து பள்ளியின் முன்பு அமர்ந்து போராட்டம் செய்தனர். இந்த தகவல் அறிந்து வந்த தாசில்தார் ராமநாதன், சமத்துவபுரம் மக்களிடம் பேசி உடனடியாக பள்ளியை சுற்றி கிராவல் மண் அடிக்கப்படும் என்று தெரிவித்தார். அப்போது, காரியாபட்டி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பலமுறை தெரிவித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை இதனால் அவர் நேரில் வந்து உறுதி அளிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

    பின்னர் தாசில்தார் ராமநாதனின் முயற்சியால் உடனடியாக பள்ளி வளாகத்தில் மண் அடித்து சீரமைக்கப்பட்டது. இதனால் பிரச்சினை முடிவுக்கு வந்தது.

    வளநாடு அரசு பள்ளியில் ஆசிரியர் காலிபணியிடத்தை நிரப்ப கோரி பெற்றோர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    மணப்பாறை:

    திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வளநாடு அருகே உள்ள தேனூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 156 மாணவ, மாணவிகள்படித்து வருகின்றனர். இதில் மொத்தம் 6 ஆசிரியர்கள் பணியில் இருந்தனர். ஆனால் ஒரு ஆசிரியர் பதவி உயர்வு பெற்று வேறு பள்ளிக்கு சென்று விட்ட நிலையில் 5 ஆசிரியர்கள் மட்டுமே பணியாற்றி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் மற்றொரு ஆசிரியையும் வேறு பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில் 4 ஆசிரியர்கள் மட்டுமே தற்போது பணியாற்றி வருகின்றனர்.

    இதையறிந்த மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் இன்று காலை பள்ளியில் திரண்டு திடீரென முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் 156 மாணவ, மாணவிகள் படித்து வரும் பள்ளியில் 6 ஆசிரியர் பணியாற்றி வந்த நிலையில் ஏற்கனவே ஒரு ஆசிரியர் வேறு ஒரு பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில் மீண்டும் ஒரு ஆசிரியை பணியிட மாற்றம் செய்யபட்டு உள்ளார்.

    அவருக்கு பதில் உடனே மாற்று ஆசிரியரை பணியில் அமர்த்த வேண்டும், இல்லை என்றால் எங்கள் பிள்ளைகளின் மாற்றுச் சான்றிதழை (டிசி) தாருங்கள், நாங்கள் வேறு பள்ளியில் சேர்த்துக் கொள்கின்றோம் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பின்னர் கல்வித்துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்களிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகள் உடனடியாக ஆசிரியர் நியமிக்கப்பட்டுள்ளது என்று கூறினர். இதையடுத்து பெற்றோர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். #tamilnews
    வாணாபுரம் அருகே ஆசிரியர் இடமாற்றத்தை கண்டித்து மாணவர்கள், பெற்றோர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    தண்டராம்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரம் அருகே தேவனூரில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு தேவனூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த 180 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு அறிவியல் பாடம் நடத்திய ஆசிரியர் அன்பு பணி மாறுதலில் வேறு பள்ளிக்கு மாறுதலாகி சென்று விட்டார்.

    இந்த நிலையில் நன்றாக பாடங்களை நடத்திய ஆசிரியரை ஏன் மாற்றினர் என்றும் அந்த ஆசிரியரை மீண்டும் இதே பள்ளிக்கு கொண்டு வர வேண்டும் என்றும் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து பள்ளியின் முன் பகுதியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களுக்கு ஆதரவாக அவர்களது பெற்றோரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவலறிந்த தச்சம்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராமச்சந்திரன், நடராஜன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாமல் மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆசிரியர் அன்பு பாடம் நன்றாக நடத்தினார். எங்களையும் நன்றாக அரவனைத்து சென்றார். அவரை இடமாற்றம் செய்யக் கூடாது என்று மாணவ, மாணவிகள் கண்ணீருடன் கூறினர்.

    தேவனூர் பள்ளிக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயகுமார் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அப்போது மாணவர்கள்- பெற்றோர்கள் முதன்மை கல்வி அலுவலரிடம், பணிமாற்றம் செய்த ஆசிரியரை மீண்டும் இதே பள்ளிக்கு நியமனம் செய்ய வேண்டும் என்று கூறினர்.

    அப்போது ஆசிரியர்களை சுழற்சி முறையில் தான் பணிமாற்றம் செய்யப்பட்டது என்றார். மேலும் இந்த பள்ளியில் 50 மணவர்களை சேர்த்து விடுங்கள் அதன்பிறகு அதே ஆசிரியரை இந்த பள்ளிக்கு அனுப்புகிறோம் என்றார். இதனை ஏற்ற பெற்றோர்கள் கலைந்து சென்றனர். மாணவர்களும் வகுப்புக்கு சென்றனர்.

    இதனால் காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரை பரபரப்பு ஏற்பட்டது. 

    ×