என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "school students"

    • பெற்றோர் பாலக்கோடு அரசு மருத்துவமனையில் மாணவ, மாணவிகளை சிகிச்சைக்காக சேர்த்தனர்.
    • 3 மாணவர்கள் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    பாலக்கோடு:

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கண்சால் பைல் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு நடுநிலை பள்ளியில் 40-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.

    நேற்று மதியம் பள்ளியில் வழங்கப்பட்ட மதிய உணவை சாப்பிட்ட மாணவிகள் சிலருக்கு வாந்தி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளி முடிந்து வீட்டிற்க்கு சென்ற 17 மாணவ, மாணவிகளுக்கு இரவு திடீரென வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது.

    அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் உடனடியாக பாலக்கோடு அரசு மருத்துவமனையில் மாணவ, மாணவிகளை சிகிச்சைக்காக சேர்த்தனர். இதில் மூன்று மாணவர்கள் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்த பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினர் கே.பி. அன்பழகன் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று மாணவ, மாணவிகளின் உடல் நிலை குறித்து கேட்டறிந்தார். மேலும் மருத்துவர்களிடம் உரிய சிகிச்சை அளிக்க வலியுறுத்தினார்.

    இதுகுறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆசிரியர் வனஜா பதவி உயர்வு பெற்று வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
    • ஆசிரியை வனஜாவுக்கும் கண்ணீர் பெருக்கெடுத்தது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் ஆத்மகூர் பகுதியில் உள்ள ஒரு அரசு தொடக்கப்பள்ளியில் வனஜா என்பவர் 7 ஆண்டுகளாக ஆசிரியராக பணியாற்றினார். அவர் தனது சொந்த திறமை மற்றும் தனிப்பட்ட பாணியில் மாணவர்களுக்கு பாடம் நடத்தினர்.

    இது அந்த பள்ளியில் உள்ள குழந்தைகளை வெகுவாக கவர்ந்தது. மேலும் அங்குள்ள பெற்றோர்களும் ஆசிரியைக்கு பாராட்டு தெரிவித்து வந்தனர்.

    இந்த நிலையில் ஆசிரியர் வனஜா பதவி உயர்வு பெற்று வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். நேற்று அவர் பள்ளியில் இருந்து விடைபெறும் நிகழ்ச்சி நடந்தது.

    இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பள்ளி குழந்தைகள் வனஜாவை சூழ்ந்தபடி மேடம் போகாதீர்கள் என கூறியபடி கதறி அழுதனர். சில பள்ளி குழந்தைகள் அவரை கட்டி அணைத்துக்கொண்டு கண்ணீர் வடித்தனர்.

    ஆசிரியை வனஜாவுக்கும் கண்ணீர் பெருக்கெடுத்தது. அவர் பள்ளி குழந்தைகளை சமாதானம் செய்துவிட்டு புறப்பட்டு சென்றார்.

    இந்த காட்சிகள் ஆந்திர மாநிலத்தில் சமூக வலைதளங்களில் பரவியது.

    • நாகை அரசு ஐ.டி.ஐ. வளாகத்தில் நாளை முதல் 11-ந் தேதி வரை புத்தக திருவிழா நடைபெற உள்ளது.
    • சுமார் 1 லட்சம் மாணவ-மாணவிகள் ஒரே நேரத்தில் புத்தக வாசிப்பில் ஈடுபட்டனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை அரசு ஐ.டி.ஐ. வளாகத்தில் நாளை முதல் 11-ந் தேதி வரை புத்தக திருவிழா நடைபெற உள்ளது.

    இதுகுறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் விதமாக "நாகை வாசிக்கிறது" எனும் மாபெரும் வாசிப்பு இயக்கத்தை நேற்று மாவட்ட கலெக்டர் ஆகாஷ், நம்பியார் நகர் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் தொடங்கி வைத்தார்.

    அப்போது அவர் மாணவ, மாணவிகளுடன் தரையில் அமர்ந்து அவர்கள் புத்தகம் வாசிப்பதை ஆர்வமுடன் பார்வையிட்டார்.

    பின்னர் அவரும் மாணவர்களோடு சேர்ந்து புத்தகம் படித்து மகிழ்ந்தார்.

    அதைத்தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள், பொதுமக்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் காலை 11 மணி முதல் மதியம் 12 மணி வரை ஒரே நேரத்தில் புத்தக வாசிப்பில் ஈடுபட்டு "நாகை வாசிக்கிறது" எனும் நிகழ்வில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

    இந்த நிகழ்வில் மாவட்டத்தில் சுமார் 1 லட்சம் மாணவ-மாணவிகள் ஒரே நேரத்தில் புத்தக வாசிப்பில் ஈடுபட்டனர்.

    நம்பியார் நகர் நகராட்சி பள்ளியில் நடந்த நிகழ்ச்சி யில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சுபாஷினி, மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் துரைமுருகு, வட்டாரக்கல்வி அலுவலர்கள் மணி, விமலா, கண்ணன், தலைமை ஆசிரியை உலகாம்பிகை உள்பட ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்டது.
    • இந்த சிறப்பு பாடத்தொகுதி 2 பகுதியாக உருவாக்கப்படுகிறது.

    புதுடெல்லி:

    பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா 'ஆபரேஷன் சிந்தூர்' ராணுவ நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்டது. இதன் மகத்துவத்தை மாணவர்கள் உணர்ந்து கொள்ளும் வகையில் புதிய பாடத்திட்டத்தை தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி.) உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    பயங்கரவாத அச்சுறுத்தல்களுக்கு நாடுகள் எவ்வாறு எதிர்வினையாற்றுகின்றன? என்பதையும், தேசிய பாதுகாப்பில் ராணுவம், ராஜதந்திரம் மற்றும் அமைச்சகங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு எவ்வாறு பங்கு வகிக்கின்றன? என்பதையும் மாணவர்களுக்குப் புரிய வைக்கும் நோக்கில் இது தயாரிக்கப்படுவதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

    இந்த சிறப்பு பாடத்தொகுதி 2 பகுதியாக உருவாக்கப்படுகிறது. இதில் 3 முதல் 8-ம் வகுப்பு வரை ஒரு பகுதியும், 9 முதல் 12-ம் வகுப்பு வரை மற்றொரு பகுதியும் இருக்கும் என்றும் அவை மேலும் தெரிவித்தன.

    • இனி பள்ளிகளில் கடைசி பெஞ்ச் மாணவர்கள் என்கிற எண்ணம் இருக்காது.
    • பள்ளிகளில் 'ப' வடிவில் மாணவர்களை அமர வைக்க தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

    தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை, பள்ளிகளில் மாணவர்களை 'ப' வடிவில் அமர வைக்க உத்தரவிட்டுள்ளது. இதனால், இனி பள்ளிகளில் கடைசி பெஞ்ச் மாணவர்கள் என்கிற எண்ணம் இருக்காது. இதனை இன்று தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

    'ப' வடிவ இருக்கை அமைப்பு மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதற்காகவும், வகுப்பறைகளில் கடைசி பெஞ்ச் என்ற கருத்தை நீக்குவதற்காகவும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    மேலும் இந்த மாற்றம், மாணவர்களிடையே சமத்துவமான கற்றல் சூழலை உருவாக்கவும், ஆசிரியர்களுடனான தொடர்பை மேம்படுத்தவும் உதவும் என கல்வித்துறை கருதுகிறது.

    எனவும், மாணவர்கள் ஒருவரை ஒருவர் பார்க்க, ஆசிரியரை கவனிக்க வசதியாக இருக்கும் எனவும் விளக்கம் அளித்துள்ளது.

    • அரசுப் பள்ளிக்கு வருகை தந்துள்ள மாணவச் செல்வங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கிறோம்.
    • கல்வி அலுவலர்களுக்கும், ஆசிரியப் பெருமக்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

    தமிழக அரசுப் பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டில் எட்டாம் வகுப்பு வரை மூன்று லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் சேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    அரசுப் பள்ளி என்பது வறுமையின் அடையாளம் அல்ல! அது பெருமையின் அடையாளம்!" எனும் பேருண்மை மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

    அரசுப் பள்ளிக்கு வருகை தந்துள்ள மாணவச் செல்வங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கிறோம். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கியுள்ள திட்டங்களின் துணை கொண்டு கல்வியில் வெற்றியடைய வாழ்த்துகள்.

    மிகுந்த உற்சாகத்தோடு மாணவர் சேர்க்கையை மேற்கொண்டு வரும் கல்வி அலுவலர்களுக்கும், ஆசிரியப் பெருமக்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். வாழ்த்துகள்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • ஆந்திர அரசு ‘தல்லிக்கு (தாய்) வந்தனம்’ என்ற பெயரில் புதிய திட்டத்தை இன்று முதல் நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது.
    • ஆந்திர அரசு ரூ.8,745 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

    ஆந்திர மாநிலம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், 'சூப்பர் சிக்ஸ்' திட்டத்தின் கீழ் அறிவித்த மற்றொரு வாக்குறுதி இன்று முதல் அமலுக்கு வரும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

    ஆந்திர அரசு 'தல்லிக்கு (தாய்) வந்தனம்' என்ற பெயரில் புதிய திட்டத்தை இன்று முதல் நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது. இதன்படி, 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை (இன்டர்மீடியட்) பயிலும் மாணவ, மாணவிகள் அனைவருக்கும் ஆண்டுக்கு ரூ.15,000 கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இதற்கான தொகை மாணவர்களின் தாயார் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட உள்ளது.

    இந்த திட்டம் மூலம் 67,27,164 மாணவ, மாணவிகள் பயனடைய உள்ளனர். இதற்காக ஆந்திர அரசு ரூ.8,745 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

    1-ம் வகுப்பு மற்றும் இன்டர்மீடியட் முதலாம் ஆண்டு சேரும் மாணவர்களுக்கு மட்டும், அவர்கள் பள்ளிகளில் சேர்ந்த பிறகு, அந்தந்த பள்ளிகளின் பதிவேட்டு பட்டியலின் அடிப்படையில் அவர்களின் தாயாருக்கு ரூ.15,000 பின்னர் வழங்கப்படும் எனவும் ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.

    ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசின் புதிய திட்டத்தின் கீழ், ஒன்றாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் அம்மாவின் வங்கிக் கணக்குகளில் ரூ.15,000 கல்வி உதவித்தொகை செலுத்தும் நடைமுறை இன்று அமலுக்கு வருகிறது. இதன் மூலம் 67 லட்சம் மாணவ, மாணவிகள் பயனடைய உள்ளனர்.

    • கடந்த ஏப்ரல் 25ம் தேதி (மறுநாள்) முதல் கோடை விடுமுறை தொடங்கியது.
    • ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தொடக்கக்கல்வி இயக்குனர் திட்டவட்டமாக தெரிவித்தார்.

    தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வி இயக்குனர் திட்டவட்டமா தெரிவித்தார்.

    தமிழகத்தில் 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதித்தேர்வு ஏப்ரல் 24ம் தேதி முடிவடைந்த நிலையில் 25ம் தேதி (மறுநாள்) முதல் கோடை விடுமுறை தொடங்கியது.

    இதனால், விடுமுறை நாட்களை இனிதே செலவிட பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை சுற்றுலா தலங்களுக்கு அழைத்துச் சென்றனர்.

    இதனால், தமிழகத்தில் உள்ள பல முக்கிய சுற்றுலா தலங்கள் பொது மக்களின் கூட்டத்தால் அலைமோதியது.

    இதற்கிடையே, கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வெயிலும் அதிகமாக இருந்தது.

    இதனால், பள்ளிகள் திறக்கும் தேதி தள்ளிப்போட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. ஆனால், அதற்கு," பள்ளி திறப்பில் எந்த மாற்றமும் இல்லை என்றும் வரும் ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்" என்றும் தொடக்கக்கல்வி இயக்குனர் திட்டவட்டமாக தெரிவித்தார்.

    மேலும் அவர் "அரசு- அரசு நிதி உதவி பெறும் ஆரம்பம் மற்றும் நடுநிலைப் பள்ளிகளை திறப்பதற்கு தயாராக வேண்டும்" என்றும் தெரிவித்தார்.

    இந்நிலையில், கோடை விடுமுறை முடிந்து நாளை அரசு, அரசு உதவிப்பெறும், தனியார் உள்ளிட்ட பள்ளிகள் திறக்கப்படுகிறது.

    இதை முன்னிட்டு, பல்வேறு மாவட்டங்களில் அரசு தொடக்கப் பள்ளியில் வாழை மரம், தோரணம் என மாணவர்களை கவரும் வகையிலும், அவர்களை வரவேற்கவும் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

    • பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டு அந்தந்த மாவட்ட கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
    • சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் புகழேந்தி ஆகியோா் நேற்று நேரில் ஆய்வு செய்தனா்.

    தமிழகத்தில் அனைத்து வகை அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியாா் பள்ளிகளில் மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் தமிழ் வழியில் இயங்கும் வகுப்புகள் ஆகியவற்றில் 1 முதல் பிளஸ்-2 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பாடநூல்கள், நோட்டுப் புத்தகங்கள், காலணிகள், காலேந்திகள் மற்றும் காலுறைகள், கம்பளிச்சட்டை, மழைக்கோட்டு, சீருடைகள், வண்ண பென்சில்கள், வண்ண கிரையான்கள், மிதிவண்டிகள், கணித உபகரணப் பெட்டிகள் மற்றும் புவியியல் வரைபடம் உள்ளிட்ட நலத்திட்டப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில், நடப்பு கல்வியாண்டில் கோடை விடுமுறை நிறைவடைந்து அனைத்துப் பள்ளிகளும் ஜூன் முதல் வாரத்தில் திறக்கப்படவுள்ளன.

    அவர்களுக்கு வழங்குவதற்காக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் சாா்பில் 4.19 கோடி பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டு அந்தந்த மாவட்ட கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

    சென்னை மாவட்ட பள்ளிகளுக்கு வழங்குவதற்காக சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள கல்யாணம் மேல்நிலைப் பள்ளியில் வைக்கப்பட்டுள்ள பாடப் புத்தகங்களை பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் எஸ்.கண்ணப்பன், சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் புகழேந்தி ஆகியோா் நேற்று நேரில் ஆய்வு செய்தனா்.

    இது குறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    இந்த ஆண்டு ஒன்று முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு வழங்குவதற்காக 495 தலைப்புகளில் மொத்தம் 4.19 கோடி பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன.

    அவற்றில் 2.72 கோடி பாடப்புத்தகங்கள் மாணவா்களுக்கு விலையில்லாமல் வழங்கப்படும்.

    எஞ்சியுள்ள 1.47 கோடி பாடநூல்கள் விற்பனைக்காக அச்சிடப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக 64 லட்சம் மாணவா்களுக்கு பாடப் புத்தகங்கள் விநியோகிக்கப்படும்.

    அனைத்து மாவட்ட கிடங்குகளிலும் உள்ள பாடப் புத்தகங்கள் ஒரு வாரத்துக்குள் அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் நேரடியாக அனுப்பி வைக்கப்படும்.

    இதையடுத்து கோடை விடுமுறைக்குப் பிறகு வரும் ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்படும் போது முதல் நாளே மாணவா்களுக்கு பாடப் புத்தகங்களை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

    • மாணவியை பிளஸ்-1 மாணவன் ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார்.
    • திருமணம் செய்து வைக்குமாறு மாணவியின் தாயையும் மிரட்டி இருக்கின்றனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் வெள்ளரடா பகுதியை சேர்ந்த ஒரு சிறுமி, அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்திருக்கிறார். அந்த மாணவியை பிளஸ்-1 படித்து வந்த மாணவன் ஒருவன் காதலித்துள்ளார்.

    ஆனால் அவரது காதலை 10-ம் வகுப்பு மாணவி ஏற்றுக் கொள்ளவில்லை என தெரிகிறது. இருந்த போதிலும் மாணவியை பிளஸ்-1 மாணவன் ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். மேலும் மாணவியை மிரட்டி தனக்கு அடிபணிய வைத்துவிடலாம் என்று நினைத்துள்ளார்.

    அவர் மன்னம்கோட்டை பகுதியை சேர்ந்த ஆனந்து (20), சஜின்(30) ஆகிய இருவரையும் தொடர்பு கொண்டு தனக்கு உதவுமாறு கேட்டுள்ளார். தனக்கு உதவினால் மதுபானம் மற்றும் விரும்பும் உணவு வாங்கித்தருவதாக பிளஸ்-1 மாணவன் கூறியிருக்கிறான்.

    இதையடுத்து ஆனந்து, சஜின் ஆகிய இருவரும் 10-ம் வகுப்பு மாணவியின் தாயின் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். பிளஸ்-1 மாணவனை காதலிக்குமாறு 10-ம் வகுப்பு மாணவியை மிரட்டியுள்ளனர்.

    அது மட்டுமின்றி பிளஸ்-1 மாணவனை மாணவிக்கு திருமணம் செய்து வைக்குமாறு மாணவியின் தாயையும் மிரட்டி இருக்கின்றனர்.

    இதுகுறித்து வெள்ளரடா போலீஸ் நிலையத்தில் மாணவியின் தாய் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி 10-ம் வகுப்பு மாணவி மற்றும் அவரது தாய்க்கு மிரட்டல் விடுத்த ஆனந்து, சஜின் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

    • சிவகங்கை மாவட்ட பள்ளி மாணவர்களின் வாசிப்பு திறன், பொது அறிவை மேம்படுத்த நடவடிக்கை
    • இந்த தகவலை சிவகங்ககை கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு பயனுள்ளவகையில், மாவட்ட நூலகத்தில் தொடங்கி வைக்கப்ப ட்டுள்ள, வாசிப்புத்திறன் மற்றும் பொதுஅறிவு மேம்பாடு ஆகியவை தொடர்பான நிகழ்வு நடந்தது.

    கலெக்டர் மதுசூதன் ரெட்டி இதை நேரடியாக பார்வையிட்டு, பள்ளி மாணவிகளிடம் கலந்துரையாடினார்.

    அப்போது கலெக்டர் பேசியதாவது:-

    சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கல்வி கற்பது மட்டுமன்றி, எதிர்காலத்திற்கு பயனுள்ள வகையில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் மற்றும் உண்டு உறைவிட மாதிரிப்பள்ளிகள் போன்றவைகள் ஏற்படுத்தப்பட்டு, அவர்களை ஊக்குவிக்குப்பதற்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.

    மேலும், பள்ளி மாணவர்கள் கலை, இலக்கியம், அரசியல் உள்ளிட்ட தாங்கள் விரும்பும் பல்வேறு வகையான அறிவு சார்ந்த புத்தகங்கள் மற்றும் தமிழ், ஆங்கில தினசரி நாளிதழ்கள் ஆகியவைகளை ஒரே இடத்தில் படிப்பதற்கு ஏதுவாக, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயின்று வரும் மாணவர்களை, ஒவ்வொரு பள்ளிக்கும் தலா 50 மாணவர்கள் வீதம், விடுமுறை நாட்களை தவிர்த்து, தினந்தோறும் சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்களின் துணை யோடு அழைத்து வந்து, காலை 10 மணி முதல் நண்பகல் 1 மணி வரை அரசு பள்ளி மாணவர்களுக்கும், பிற்பகல் 1.30 மணி முதல் 4.30 மணி வரை தனியார் பள்ளி மாணவர்களுக்கும் தேவையான புத்தகங்களை படிப்பதற்கான நடவடி க்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், முதற்கட்டமாக சிவகங்கை மற்றும் மானாமதுரை ஆகிய ஒன்றியங்களுக்குட்பட்ட 28 பள்ளிகளைச் சார்ந்த மாணவர்கள் பயன்பெறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

    மாணவர்கள் தாங்கள் விரும்பும் புத்தகங்களை வீட்டிற்கு எடுத்துச்சென்று, ஓய்வு நேரங்களில் படிப்பதற்கு ஏதுவாகவும், அவர்களை நூலக உறுப்பினர்களாக இணைப்பதற்கும், அதற்கான சந்தாத்தொகையினை மாவட்ட நிர்வாகம் மற்றும் வாசகர் வட்டத்தின் சார்பில் செலுத்துவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ள ப்பட்டுள்ளது.

    இங்கு வரும் மாணவர்கள் முதலில் நூலகத்தில் எந்தெந்த வகையான புத்தகங்கள் உள்ளது என்பது குறித்து அறிந்து கொள்ள வேண்டும். சிவகங்கை மாவட்ட நூலகத்தில் 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட பல்வேறு வகையான புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன.

    இதில் குடிமைப்பயிற்சி மையம் அமைக்கப்பட்டு, அதற்கான புத்தகங்களும், பயனுள்ள வகையில் இடம் பெற்றுள்ளது.

    மாணவர்களுக்கு பயனுள்ள வகையில். மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கைகளை, பள்ளி மாணவர்கள் நல்லமுறையில் பயன்படுத்திக் கொண்டு, பொதுஅறிவுத்திறன் மற்றும் புத்தக வாசிப்புத்திறன் ஆகியவற்றை வளர்த்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • குழு விளையாட்டு போட்டிகளை தொடர்ந்து மாவட்ட தடகள போட்டி நடத்த வேண்டும்.
    • பண்டிகை விடுமுறையில் மாணவர்களும் போட்டியில் பங்கேற்க ஆயத்தமாகினர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட விளையாட்டு போட்டி கடந்த 17ந் தேதி முதல் நடந்து வருகிறது. குழு விளையாட்டு போட்டிகளை தொடர்ந்து மாவட்ட தடகள போட்டி நடத்த வேண்டும்.

    குறுமைய அளவில் தடகள போட்டி நடத்திய போதும், பெற்றோர், பள்ளி நிர்வாகங்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்ததால் மாவட்ட தடகள போட்டிக்காக தேதி, நடத்துமிடம் முடிவு செய்வதில் இழுபறி நீடித்தது.பிற போட்டிகள் நடக்குமிடம், நாள் முடிவு செய்யப்பட்ட நிலையில், தடகள போட்டி குறித்து அறிவிப்பு பின்னர் வெளியாகுமென தெரிவிக்கப்பட்டது.தீபாவளிக்கு முன்பு 27, 28ந்தேதிகளில் அனைத்து பிரிவினருக்கான மாவட்ட தடகள போட்டிகள் அனுப்பர்பாளையத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. பண்டிகை விடுமுறையில் மாணவர்களும் போட்டியில் பங்கேற்க ஆயத்தமாகினர். ஆனால் அறிவித்தப்படி போட்டி நடக்கவில்லை.

    இது குறித்து மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் (பொறுப்பு) முருகேஸ்வரி கூறுகையில், தடகள போட்டி நடத்த தேவையான ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டிருந்தது. 2 நாள் மண்டல மேலாண்மை குழு அலுவலர்கள் பள்ளிகளில் ஆய்வு பணி மேற்கொள்ள உள்ளதாக கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.அதனால், தடகள போட்டி தேதி நவம்பர் முதல் வாரத்துக்கு மாற்றப்பட்டது. நவம்பர் 3, 4-ந் தேதி அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட தடகள போட்டி நடத்தப்படும் என்றார்.

    ×