search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "school students"

    • குழந்தை என்றும் பாராமல் பல நாட்களாக மணிகண்டன் பாலியல் வன்முறையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
    • பள்ளிக்குள் புகுந்து கண்ணில்பட்ட பொருட்களை எல்லாம் ஆவேசமாக அடித்து நொறுக்கினர்.

    புதுச்சேரியில் தவளக்குப்பம் அருகே, தனியார் பள்ளியில் 1ம் வகுப்பு படித்து வந்த மாணவிக்கு, அதே பள்ளியில் 12ம் வகுப்புக்கு பாடம் நடத்தும் கெமிஸ்ட்ரி ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பள்ளி செல்ல மாட்டேன் என சிறுமி அழுது அடம் பிடித்த நிலையில் பெற்றோர் பொறுமையாக விசாரித்த போது உண்மை அம்பலமாகியுள்ளது.

    பிறகு, சிறுமியை பள்ளிக்கு அழைத்துச் சென்று அங்குள்ள ஆசிரியர்களை காண்பித்தபோது சரியாக அடையாளம் காட்டியுள்ளார்.

    இதைதொடர்ந்து, ஆசிரியர் மணிகண்டனுக்கு தர்ம அடி கொடுத்த சிறுமியின் பெற்றோர் போலீசில் ஒப்படைத்தனர். குழந்தை என்றும் பாராமல் பல நாட்களாக மணிகண்டன் பாலியல் வன்முறையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

    இந்நிலையில், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் மீது வழக்கு பதியவில்லை என்றும் அரசியல் தலையீட்டால் காவல்துறை மறுப்பதாகவும் பெற்றோர் குற்றம்சாட்டி உள்ளனர்.

    மேலும், சம்பந்தப்பட்ட ஆசிரியரை கண்டித்து மாணவியின் உறவினர்கள் பள்ளியை சூறையாடியதால் பரபரப்பான சூழல் நிலவி உள்ளது.

    பள்ளிக்குள் புகுந்து கண்ணில்பட்ட பொருட்களை எல்லாம் ஆவேசமாக அடித்து நொறுக்கினர். இதற்கிடையே, புதுச்சேரி- கடலூர் சாலையில் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளதால் 5 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

    • பொதுத் தேர்வை அச்சமின்றி எதிர்கொள்ள வேண்டும்.
    • மனதை ஒருமுகப்படுத்த வேண்டும்.

    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் உள்ள பள்ளி மாணவர்களுடன் இன்று கலந்துரையாடினார்.

    பொதுத் தேர்வை அச்சமின்றி எதிர்கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். திணை மற்றும் காய்கறிகளின் முக்கியத்துவம் குறித்தும் உரையாற்றினார். மாணவர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசியதாவது:-

    நோய் இல்லாததால் நாம் ஆரோக்கியமாக இருக்கிறோம் என்று அர்த்தமல்ல. தூக்கமும், ஊட்டச்சத்தையும் சார்ந்தது. மருத்துவ அறிவியலும் தூக்கத்தில் கவனம் செலுத்துகிறது. அனைவரும் காலை வெயிலில் தங்களது நேரத்தை செலவிட வேண்டும்.

    உங்களுக்கு அழுத்தம் இருக்கிறது. ஆனால் அதைப்பற்றி கவலைப்படாமல் படிப்பில் கவனம் செலுத்துங்கள். தேர்வு பயத்தை எதிர்கொள்ள வேண்டாம். மேலும் நீங்கள் உங்களை சவால் செய்து கொண்டே இருக்க வேண்டும்.

    உங்கள் நேரத்தை கட்டுப்படுத்துங்கள். உங்கள் வாழ்க்கையை கட்டுப்படுத்துங்கள். நிகழ்காலத்தில் வாழுங்கள், நேர்மறைகளை கண்டறியுங்கள். உங்களை நீங்களே சவால் செய்வது எப்படி என்பதை அறிய உங்கள் மனதை ஒருமுகப்படுத்த வேண்டும். எப்போதும் முந்தைய முடிவுகளை விட சிறப்பாக செய்ய முயற்சிக்க வேண்டும்.

    அதிக மதிப்பெண்கள் பெறாவிட்டால் வாழ்க்கை வீணாகி விடும் என்று மாணவர்கள் கருதக்கூடாது. பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை அடுத்தவர்களுடன் ஒப்பிடக்கூடாது. அதற்கு பதிலாக அவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். மாணவர்களை அடைத்து வைக்கக்கூடாது. அவர்களின் ஆர்வத்தை ஆராய சுதந்திரம் வழங்க வேண்டும்.

    தலைவர்களின் நடத்தையில் இருந்து மக்கள் குறிப்புகளை பெறுகிறார்கள். பேச்சுக்கள் மட்டுமே உதவாது.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    • 8-ம் வகுப்பு மாணவி கர்ப்பம் அடைந்த சம்பவத்தில் அப்பள்ளியில் பணிபுரிந்த 3 ஆசிரியர்கள் கைது.
    • 3 பேரையும் சஸ்பெண்ட் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு.

    கிருஷ்ணகிரி அருகே கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 8-ம் வகுப்பு மாணவி கர்ப்பம் அடைந்த சம்பவத்தில் அப்பள்ளியில் பணிபுரிந்த 3 ஆசிரியர்கள் பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், 3 பேரையும் சஸ்பெண்ட் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில், "பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளுக்கு பொறுப்பேற்று, பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்ய தனக்கு திராணியில்லை என்று பகிரங்கமாக அறிவித்து மு.க.ஸ்டாலின் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

    இதுகுறித்து இபிஎஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் 13 வயது சிறுமி, அரசுப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் மூவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

    "அரசுப்பள்ளி மற்றும் கல்லூரிகளிலேயே பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு இல்லை" என்று பெண் பாதுகாப்பு மீதான பொறுப்புடன் நான் சுட்டிக்காட்டிய போது, "எடப்பாடி பழனிசாமி பீதியைக் கிளப்புகிறார்" என்று சொன்ன ஸ்டாலின் மாடல் திமுக அரசின் அமைச்சர்கள், இப்போது என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?

    அரசுப்பள்ளி மாணவிக்கு, தான் படிக்கும் பள்ளிகளிலேயே பாதுகாப்பு இல்லை என்பது வேலியே பயிரை மேய்கின்ற செயல்,

    ஸ்டாலின் மாடல் திமுக அரசே இக்கொடுரமானச் செயலுக்கு முழு பொறுப்பேற்க வேண்டும்.

    பெண்களுக்கு எங்குமே பாதுகாப்பு இல்லை என்ற நிலைக்கு தமிழ்நாட்டைத் தள்ளியதற்கு ஸ்டாலின் மாடல் திமுக அரசு வெட்கித் தலைகுனிய வேண்டும்.

    கொஞ்சமேனும் மனசாட்சி இருப்பின், பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளுக்கு பொறுப்பேற்று, பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்ய தனக்கு திராணியில்லை என்று பகிரங்கமாக அறிவித்து மு.க.ஸ்டாலின் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்!

    போச்சம்பள்ளி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மூவர் மீதும் கடும் சட்ட நடவடிக்கை எடுத்து, உச்சபட்ச தண்டனை கிடைக்கப் பெறுவதை உறுதிசெய்ய வேண்டுமென ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    • அரசுப் பள்ளியில் குழந்தைகள் நல குழுமத்தினர் இலவச சேவை மைய விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்ததினர்.
    • கலந்துரையாடலில் சிறுமிகள் தாங்கள் சந்தித்த பாலியல் தொல்லைகள் குறித்து தெரிவித்தனர்.

    சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே இந்திரா நகர் கிராம நடுநிலைப்பள்ளியில், 8 மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக 7 பேர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    மானாமதுரை அருகே அரசுப் பள்ளியில் குழந்தைகள் நல குழுமத்தினர் இலவச சேவை மைய விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்ததினர்.

    அப்போது நடந்த கலந்துரையாடலில் சிறுமிகள் தாங்கள் சந்தித்த பாலியல் தொல்லைகள் குறித்து தெரிவித்தனர்.

    யாரேனும் தவறாக நடந்துள்ளார்களா? என்ற கேள்விக்கு கிடைத்த பதிலால் அதிர்சியடைந்த பெண் அதிகாரிகள், தனித்தனியாக விசாரித்துள்ளனர்.

    சிறுமிகள் தெரிவித்த பகீர் பாலியல் தொல்லை புகார்கள் மீது தீவிரமாக விசாரணை நடத்தியதில், பள்ளிக்கு போகும் போதும் வரும் போதும் பாலியல் தொல்லை அளித்த அதே ஊரைச் சேர்ந்த 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    அதன்படி, பள்ளிக்கு செல்லும் போது பாலியல் தொல்லை அளித்ததாக கூற, போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டு முனியன் (66), மூக்கன் (72), மு (46), பழனி (46), மணி (50), சசி வர்ணம் (38) லட்சுமணன் (46) ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    • கைதானவர்களில் 3 சிறுவர்கள் சீர்திருத்தபள்ளியிலும் மற்ற 3 பேரும் சிறையிலும் அடைக்கப்பட்டனர்.
    • கைதானவர்களில் 2பேர் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    பெரம்பூர்:

    காதல் வலையில் வீழ்த்திய பள்ளி மாணவிகளை தனிமையில் அழைத்து சென்று வன்கொடுமை செய்த மாணவர்கள் சிக்கி உள்ள சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது பற்றிய விபரம் வருமாறு:-

    பெரம்பூரை சேர்ந்த சிறுமி அப்பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியே சென்ற மாணவி பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த சிறுமியின் தாய் திரு.வி.க. நகர் போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் விசாரணை செய்தபோது மாணவியின் தோழிகளான அதே பகுதியை சேர்ந்த எண்ணூரில் லேப் டெக்னீசியன் படித்து வரும் 14 வயது மாணவி மற்றும் வில்லிவாக்கத்தை சேர்ந்த 12-ம் வகுப்பு படிக்கும் 16 வயது மாணவியும் மாயமாகி இருந்தது தெரிந்தது.

    மாணவிகள் 3 பேரையும் காதல் வலையில் வீழ்த்திய பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் 3 பேர் அழைத்து சென்று இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து மாணவிகளுடன் சென்ற அகரம், செங்கல்வராயனம் தெருவை சேர்ந்த ஐ.டி.ஐ. கல்லூரி மாணவர் அபிஷேக் மற்றும் 16 மற்றும் 17 வயதுடைய 3 பள்ளி மாணவர்கள் மற்றும் கொடுங்கையூரை சேர்ந்த கலிமுல்லா, பெரம்பூரை சேர்ந்த யுகேஷ் ஆகிய 6 பேரை பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.

    காதலில் வீழ்த்தப்பட்ட பள்ளி மாணவிகள் 3 பேரையும் காதலர்களான மாணவர்கள் வீனஸ் அருகே உள்ள அரசு நூலகத்தின் மாடியில் இரவில் தனிமையில் தங்கி இருந்தும் அங்கு மாணவிகள் பாலியல் வன்கொடுமை செய்து இருப்பதும் தெரியவந்தது. இதற்கு உடந்தையாக அவர்களது நண்பர்கள் ஆட்கள் வருவதை நோட்டம் பார்க்க இருந்ததாக தெரிவித்து உள்ளனர்.

    இதையடுத்து கல்லூரி, பள்ளி மாணவர்கள் மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருந்த நண்பர்கள் யுகேஷ், கலிமுல்லா ஆகிய 6 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

    இவர்களில் யுகேஷ், கலிமுல்லா ஆகியோர் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    கைதானவர்களில் 3 சிறுவர்கள் சீர்திருத்தபள்ளியிலும் மற்ற 3 பேரும் சிறையிலும் அடைக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட மாணவிகள் முத்தியால்பேட்டையில் உள்ள காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். மாணவிகள் மிரட்டப்பட்டனரா? என்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மாணவர்கள் 4 பேர், 'லக்கி பாஸ்கர்' படம் பார்த்த பிறகு விடுதியில் இருந்து தப்பியோடியனர்.
    • சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் மாணவர்களை போலீசார் தேடி வந்தனர்.

    வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான லக்கி பாஸ்கர் திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

    உலகம் முழுவதும் 111 கோடிக்கும் மேல் வசூலை குவித்த லக்கி பாஸ்கர் திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் விடுதியில் தங்கிப் படிக்கும் 9ம் வகுப்பு மாணவர்கள் 4 பேர், 'லக்கி பாஸ்கர்' படம் பார்த்த பிறகு அதேபோல வீடு, கார் வாங்கிவிட்டு வருவதாக நண்பர்களிடம் கூறி விடுதியில் இருந்து தப்பியோடியனர்.

    விடுதியில் இருந்து மாணவர்கள் தப்பித்து செல்லும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    தொடர்ந்து, மாணவர்களின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் மாணவர்களை போலீசார் தேடி வந்தனர்.

    இந்நிலையில், தனியார் பள்ளி விடுதியில் இருந்து தப்பிச் சென்ற 4 சிறுவர்கள், விஜயவாடாவில் பிடிபட்டனர்.

    4 சிறுவர்களையும் பத்திரமாக மீட்டு, விசாகப்பட்டினர் அழைத்துச் சென்று, பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

    • நடிகர் துல்கர் சல்மான் நடித்துள்ள லக்கி பாஸ்கர் படத்தை வெங்கி அட்லூரி இயக்கியுள்ளார்.
    • இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை மீனாட்சி சவுத்ரி நடித்துள்ளார்.

    வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான லக்கி பாஸ்கர் திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

    உலகம் முழுவதும் 111 கோடிக்கும் மேல் வசூலை குவித்த லக்கி பாஸ்கர் திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் விடுதியில் தங்கிப் படிக்கும் 9ம் வகுப்பு மாணவர்கள் 4 பேர், 'லக்கி பாஸ்கர்' படம் பார்த்த பிறகு அதேபோல வீடு, கார் வாங்கிவிட்டு வருவதாக நண்பர்களிடம் கூறி விடுதியில் இருந்து தப்பியோடியுள்ளனர்.

    விடுதியில் இருந்து மாணவர்கள் தப்பித்து செல்லும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மாணவர்களின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் மாணவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பள்ளி மாணவிகள், சமையல் பாத்திரங்களை அவர்களே கழுவியுள்ளனர்.
    • ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினர்.

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் மலைவாழ் உண்டு உறைவிட தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு, சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.

    இந்நிலையில், இந்த பள்ளியில் காலை உணவு அருந்திய பள்ளி மாணவிகள், சமையல் பாத்திரங்களை அவர்களே கழுவியுள்ளனர்.

    இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இது, பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    மேலும், பெற்றோர்கள் மாணவிகளை பாத்திரங்களை கழுவும் பணியில் ஈடுபட வைத்த ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினர்.

    இதேபோல், இதுபோன்ற பணிகளை மேற்கொள்ள அந்த உண்டு உறைவிட பள்ளியில் பணியாற்றும் சமையல் மற்றும் சமையல் உதவியாளர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் பெற்றோர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

    • பள்ளி மாணவர்களின் கல்வியை கடுமையாக பாதிக்கும்.
    • ஆசிரியர்கள் நியமனத்தை தாமதிக்கும் முயற்சியாகவே பார்க்கவேண்டி உள்ளது.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்காக நடத்தப்படும் போட்டித்தேர்வுகளுக்கான பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட இருப்பதாகவும் புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே போட்டித்தேர்வுகள் நடத்தப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருக்கிறது. முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தை திட்டமிட்டே தாமதப்படுத்தும் நோக்கத்துடன் எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவு கண்டிக்கத்தக்கது.

    தமிழ்நாட்டில் கடைசியாக கடந்த 2021-ம் ஆண்டுதான் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித்தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்டு சுமார் 2 ஆயிரம் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். கடந்த 3 ஆண்டுகளாக ஆள் தேர்வு அறிவிக்கைகள் வெளியிடப்படாத நிலையில் 2024-ம் ஆண்டு மே மாதத்தில் ஆள் தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்டு ஆகஸ்ட் மாதத்தில் போட்டித்தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் மே மாதம் முடிவடைந்து ஆறு மாதங்களாகியும் ஆள் தேர்வு அறிவிக்கை வெளியிடப்படவில்லை.

    முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித்தேர்வுகளுக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ள நிலையில் வரைவுப் பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு இறுதி செய்யப்படுவதற்கு குறைந்தது ஓராண்டு ஆகும். அதன் பின்னர் போட்டித்தேர்வு அறிவிக்கப்பட்டு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு மேலும் ஒன்றரை ஆண்டுகள் ஆகும். அதன்படி பார்த்தால் 2021 முதல் 2026 வரை காலியான இடங்களுக்கு புதிய முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படமாட்டார்கள். இது உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவர்களின் கல்வியை கடுமையாக பாதிக்கும்.

    முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித்தேர்வுகளின் பாடத்திட்டத்தை மாற்றியமைப்பதை பாட்டாளி மக்கள் கட்சி குறைகூறவில்லை. மாறாக பாடத்திட்டத்தில் திருத்தம் செய்யப்படும் காலத்தைத்தான் விமர்சிக்கிறது. கடைசியாக 2021-ம் ஆண்டு முதுநிலை பட்டதாரி ஆசிரியருக்கான போட்டித்தேர்வு அறிவிக்கப்பட்டு இன்றுவரை மூன்று ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. இந்த மூன்று ஆண்டுகளில் பாடத்திட்டத்தை மாற்றியிருக்கலாம். அதை விடுத்து அடுத்த போட்டித்தேர்வு அறிவிக்கப்படவிருக்கும் வேளையில் பாடத்திட்டத்தை மாற்ற இருப்பதாக கூறுவதை ஆசிரியர்கள் நியமனத்தை தாமதிக்கும் முயற்சியாகவே பார்க்கவேண்டி உள்ளது.

    ஏற்கனவே இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான உதவி பேராசிரியர் பணிக்கான போட்டித்தேர்வுகள் அறிவிக்கப்பட்டு பல்வேறு நிலைகளில் முடங்கி கிடக்கின்றன. இப்போது பாடத்திட்ட மாற்றத்தை காரணம் காட்டி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்தையும் தாமதப்படுத்துவதை ஏற்க முடியாது. எனவே முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான ஆள் தேர்வு அறிவிக்கையை உடனடியாக வெளியிட்டு அனைத்து காலியிடங்களையும் நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியமும் தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ள்து.

    • மாணவியின் தாய் அளித்த புகாரின் பேரில், உடற்கல்வி ஆசிரியர் கைது.
    • உடற்கல்வி ஆசிரியர் தியாகராஜனை ஏற்கெனவே சஸ்பெண்ட் செய்து பள்ளி நிர்வாகம் உத்தரவு.

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள புனித ஜான்போஸ்கோ பள்ளி மாணவியை நடுரோட்டில் உடற்கல்வி ஆசிரியர் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் உடற் கல்வி ஆசிரியர் ஒருவர் பள்ளி சீருடையில் இருக்கும் மாணவியை கன்னங்களில் ஆக்ரோஷமாக அரைகிறார். பின்னர், தலையிலும் தாறுமாறாக அடித்து துன்புறுத்துவது பதிவாகியுள்ளது.

    மாவட்ட அளவிளான கைப்பந்து போட்டியில் பங்கேற்றபோது கை கடிகாரத்தை மாணவி திருடியதாக கூறி ஆசிரியர் தாக்கியுள்ளார். ஆனால், கீழே கிடந்த கை கடிகாரத்தையே மாணவி எடுத்து கொடுத்ததாக சக மாணவிகள் தெரிவித்துள்ளனர். இதனால், உடற்கல்வி ஆசிரியர் மாணவியை அடித்து துன்புறுத்தியுள்ளார்.

    இந்நிலையில், பள்ளி மாணவியை அடித்து துன்புறுத்திய வீடியோ வெளியான நிலையில் உடற்கல்வி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    மாணவியின் தாய் அளித்த புகாரின் பேரில், உடற்கல்வி ஆசிரியர் தியாகராஜனை பாகலூர் போலீசார் கைது செய்தனர்.

    மேலும், உடற்கல்வி ஆசிரியர் தியாகராஜனை ஏற்கெனவே சஸ்பெண்ட் செய்து ஓசூர் புனித ஜான்போஸ்கோ பள்ளி தாளாளர் உத்தரவிட்டுள்ளார்.

    • எலக்ட்ரிக் ரிக்ஷா கூரையின் மீது அமர்ந்து பள்ளி மாணவர்கள் பயணம் செய்தனர்.
    • இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.

    உத்தரபிரதேசம் முசாபர் நகரில் பள்ளி மாணவர்கள் பாதுகாப்பற்ற முறையில் எலக்ட்ரிக் ரிக்ஷா கூரையின் மீது உட்கார்ந்த படி பயணம் செய்த வீடியோ இணையத்தில் வைரலானது.

    ஆபத்தான முறையில் இம்மாதிரி பயணம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோவை பகிர்ந்து கோரிக்கை வைத்தனர்.

    இந்த வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து இது தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உ.பி. போலீசார் தெரிவித்தனர்.

    • திரிச்சூரில் இருந்து பள்ளி மாணவர்களை மூணாறுக்கு பள்ளி நிர்வாகம் சுற்றுலா அழைத்து வந்துள்ளது.
    • மாணவர்களிடம் இருந்து 5 கிராம் கஞ்சா பறிமுதல்.

    கேரளாவில் கஞ்சா புகைக்க தீப்பெட்டி கேட்க போதைப்பொருள் தடுப்புப்பிரிவு காவல்நிலையத்திற்கு வந்த மாணவர்களை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    திரிச்சூரில் இருந்து பள்ளி மாணவர்களை மூணாறுக்கு பள்ளி நிர்வாகம் சுற்றுலா அழைத்து வந்துள்ளது. மூணாறுக்கு முன்பாக உணவு ப்ரேக்கிற்காக பள்ளி பேருந்து நிறுத்தப்பட்டுள்ளது. அப்போது 4 மாணவர்கள் தீப்பெட்டி தேடி அழைத்துள்ளனர்.

    அப்போது பக்கத்தில் போதைப் பொருள் தடுப்புப்பிரிவு காவல் நிலையத்திற்கு வெளியே பழைய கார், பைக் நிறுத்தப்பட்டிருந்ததை மாணவர்கள் பார்த்துள்ளனர். 'கலால்துறை அலுவலகம்' என்ற பெயர்ப் பலகையை பார்க்காமல் இந்த இடத்தை ஒர்க் ஷாப் என நினைத்து வந்த மாணவர்கள் உள்ளே சென்று மப்டியில் இருந்த ஒரு போலீசாரிடம் தீப்பெட்டி கேட்டுள்ளனர்.

    அப்போது உள்ளே சீருடையில் போலீஸ் இருப்பதை பார்த்து 2 மாணவர்கள் பயந்து ஓடியுள்ளனர். மற்ற 2 மாணவர்களை போலீசார் பிடித்து விசாரித்துள்ளனர். அப்போது ஒரு மாணவரிடம் இருந்து 5 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இதனையடுத்து பள்ளி ஆசியர்களை அழைத்து விசாரித்து, பள்ளி வாகனத்தை அதிகாரிகள் சோதனையிட்டுள்ளனர் . அப்போது 1 கிராம் அளவுள்ள 'ஹாசிஸ் ஆயில்' என்ற போதைப்பொருளை போலீசார் கைப்பற்றினர்.

    பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்றவரை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×