என் மலர்
நீங்கள் தேடியது "அரசுப் பள்ளி மாணவர்கள்"
- அரசுப் பள்ளிக்கு வருகை தந்துள்ள மாணவச் செல்வங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கிறோம்.
- கல்வி அலுவலர்களுக்கும், ஆசிரியப் பெருமக்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.
தமிழக அரசுப் பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டில் எட்டாம் வகுப்பு வரை மூன்று லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் சேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
அரசுப் பள்ளி என்பது வறுமையின் அடையாளம் அல்ல! அது பெருமையின் அடையாளம்!" எனும் பேருண்மை மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளிக்கு வருகை தந்துள்ள மாணவச் செல்வங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கிறோம். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கியுள்ள திட்டங்களின் துணை கொண்டு கல்வியில் வெற்றியடைய வாழ்த்துகள்.
மிகுந்த உற்சாகத்தோடு மாணவர் சேர்க்கையை மேற்கொண்டு வரும் கல்வி அலுவலர்களுக்கும், ஆசிரியப் பெருமக்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். வாழ்த்துகள்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- 200 ஆண்டு பழமையான நாணயங்களை திருப்புல்லாணி அரசுப் பள்ளி மாணவர்கள் கண்டெடுத்தனர்.
- 3 செப்புக் காசுகள், மற்றொன்று வெண்க லத்தால் ஆனது.

மாணவர்கள் அய்யப்பன், பிரவீன்ராஜ்.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்றம் மூலம் மாணவர்க ளுக்கு பழமையான காசுகள், பானை ஓடுகளை அடை யாளம் காணவும், கல்வெட்டுகளைப் படிக்கவும், படியெடுக்கவும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
மாணவர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள பழங்காலப் பொருள்கள், காசுகளை விடுமுறை நாட்களிலும், ஓய்வு நேரங்களிலும் ஆர்வத்தோடு தேடி கண்டுபிடித்து வருகின்றனர்.
இதுபற்றி பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்றச் செயலரும், தொல்லி யல் ஆய்வாளருமான ராஜ குரு கூறியதாவது:-
9-ம் வகுப்பு மாணவர் பிரவின்ராஜ், 6-ம் வகுப்பு மாணவர் அய்யப்பன் ஆகியோர் 4 ஆங்கிலேயர் கால வட்டவடிவ காசுகளை கீழவலசை, சேதுக்கரையில் கண்டெடுத்துள்ளனர். இதில் 3 செப்புக் காசுகள், மற்றொன்று வெண்க லத்தால் ஆனது.
இது கி.பி.1833-ல் வெளியிடப்பட்டது. இந்த நாணயத்தின் ஒருபுறம் கிழக்கிந்தியக் கம்பெனியின் முத்திரையும், மறுபுறம் தராசு படமும் உள்ளது. தராசின் மேலே ஆங்கிலத்தில் குவாட்டர் அணா எனவும், அதன் கீழே அரபி வாசகமும் உள்ளது.
மற்றொன்று கி.பி.1887-ம் ஆண்டு விக்டோரியா மகாராணி காலத்தில் வெளியிடப்பட்டது. ¼ அணா மதிப்புள்ளது. ஒரு கால் அணா இந்தியா 1887 என ஆங்கிலத்தில் 5 வரிகளில் எழுதப்பட்டு உள்ளது. நாணயத்தின் பின்புறம் விக்டோரியா எம்பரஸ் என எழுதப்பட்டு அவரின் மார்பளவு படமும் உள்ளது.
மாணவர் அய்யப்பன் சேதுக்கரை கடற்கரையில் கண்டெடுத்த 2 நாணயங்களில், ஒன்று கி.பி.1835-ல் வெளி யிடப்பட்டதாகும். இதில் ஒருபுறம் கிழக்கிந்தியக் கம்பெனி என ஆங்கிலத்தில் எழுதப்பட்டு அதன் நடுவில் ½ அணா என்றும், மறுபுறம் கம்பெனி முத்திரையும் உள்ளது.
மற்றொன்று 6-ம் ஜார்ஜ் மன்னர் காலத்தில் கி.பி.1941-ல் வெளியிடப் பட்டது. இது ¼ அணா மதிப்புள்ளது.
திருப்புல்லாணி வரும் பக்தர்கள் சேதுக்கரை கடலில் புனித நீராடும் வழக்கம் பழங்காலம் முதல் இருந்துள்ளது. நீராடிய பிறகு ஆடை, காசுகளை கடலில் விட்டுச் செல்கிறார்கள். இந்த நாணயங்கள் இவ்வாறு போடப்பட்டதாக இருக்கலாம். பிரவின்ராஜ் கண்டெடுத்தது மக்களின் சேமிப்பில் உள்ளது.
திருப்புல்லாணி மாணவர்கள் தங்கள் பகுதிகளில் பாண்டியர், சோழர், டச்சுக்காரர் நாணயங்களை ஏற்கனவே கண்டெடுத்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.






