என் மலர்

    நீங்கள் தேடியது "invention"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • புதுமை வவுச்சர் திட்டம் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை மேம்படுத்துவதற்கான மாநில அரசின் முயற்சியாகும்.
    • மாணவி தர்ஷினி வாய்மொழி உத்தரவு மூலம் சக்கர நாற்காலியை நகர்த்துவதற்கு புதிய அம்சங்களை கண்டுபிடித்துள்ளார்.

    நெல்லை:

    தமிழக அரசின் தொழில் முனைவோர் துறையின் புதுமை வவுச்சர் திட்டம் என்பது, விவசாயம், தோட்டக்கலை, கால்நடை, மீன்வளம், பொறியியல், கழிவு மேலாண்மை, சுகாதாரம், ஆட்டோமொபைல், நானோ தொழில்நுட்பம், எலக்ட்ரானிக்ஸ் போன்ற வற்றில் இருந்து சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில், ஸ்டார்ட் அப்களில் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை மேம்படுத்துவதற்கான ஒரு தனித்துவமான மாநில அரசின் முயற்சியாகும்.

    இது ஆராய்ச்சி, சரிபார்ப்பு, சந்தை ஆய்வு மற்றும் தயாரிப்பு மேம்பாடு போன்ற அடுத்த கட்டங்களுக்குச் செல்ல புதுமையான யோசனைகளைக் கொண்ட ஸ்டார்ட்அப்கள் மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோரை இது செயல்படுத்தும்.

    இது தொடர்பாக எப்.எக்ஸ். கல்லூரியின் தொழில் முனைவோர் துறை சார்பில் மாணவர்களுக்கு புதுமை வவுச்சர் திட்டம் குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கத்தை இயக்குநர் லூர்தஸ் பூபாலராயன் ஏற்பாட்டின் பேரில் தமிழக அரசின் தொழில் முனைவோர் துறையின் புதுமை வவுச்சர் திட்ட ஒருங்கிணைப்பாளர் சிவபாரதி கலந்துகொண்டு திட்டம் குறித்த முக்கியத்து வத்தை மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.

    அதன் தொடர்ச்சியாக எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரியின் கணினித் துறை 3-ம் ஆண்டு மாணவி தர்ஷினி வாய்மொழி உத்தரவு மூலம் சக்கர நாற்காலியை நகர்த்துவதற்கு புதிய அம்சங்களை கண்டுபிடித்துள்ளார்.

    இந்த திட்டத்திற்காக தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்திடமிருந்து புதுமை வவுச்சர் திட்டத்தின் கீழ் கணினித்துறை மாணவி தர்ஷினி ரூ.2 லட்சம் ஊக்கத்தொகை பரிசு பெற்றுள்ளார். இந்தத் திட்டத்திற்கு செயற்கை நுண்ணறிவுத்துறை தலைவர் அனிதா வழிகாட்டியாக செயல்பட்டார்.

    இதற்கு ஊக்கமும், உற்சாகமும் அளித்த பொது மேலாளர் ஜெயக்குமார், கிருஷ்ணகுமார், கணினி துறை தலைவர் அரவிந்த் சுவாமிநாதன், தொழில்முனைவோர் துறை இயக்குநர் லூர்தஸ் பூபாலராயன், செயற்கை நுண்ணறிவுத்துறை தலைவர் அனிதா மற்றும் பேராசிரியர்கள் உள்ளிட்டோரை ஸ்காட் கல்வி குழும நிறுவனர் எஸ். கிளிட்டஸ் பாபு, நிர்வாக இயக்குநர் அருண் பாபு, ஸ்காட் கல்வி குழும தாளாளர் பிரியதர்ஷினி அருண் பாபு ஆகியோர் பாராட்டினர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கார்பன்டை ஆக்சைடை உறிஞ்சும் தொழில்நுட்பம் கண்டுபிடித்துள்ளனர்.
    • கோவையை சேர்ந்த சுமிட்ஸ் ஹைக்ரானிக்ஸ் என்ற தனியார் நிறுவனத்திற்கு வழங்கும் நிகழ்ச்சி சிக்ரி வளாகத்தில் நடந்தது.

    காரைக்குடி

    காரைக்குடியில் செயல்படும் மத்திய மின்வேதியியல் ஆய்வகத்தின் (சிக்ரி) 75-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு 19 கண்டுபிடிப்புகளுக்கான ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது.

    முதற்கட்டமாக தொழிற்சாலைகளில் இருந்து வெளியாகும் கார்பன்டை ஆக்சைடை அதே வெப்பநிலையில் கடத்தி, அதை திரவ நிலைக்கு மாற்றுவதற்கான ஆராய்ச்சியில் சிக்ரி இயக்குனர் கலைச்செல்வி தலைமையில் விஞ்ஞானிகள் ரவிபாபு, ஷ்ரவந்தி, வாசுதேவன் ஆகியோர் அடங்கிய குழுவினர் ஈடுபட்டனர். தற்போது அதற்கான தொழில் நுட்பத்தை கண்டுபிடித்துள்ளனர்.

    இந்த தொழில் நுட்பம் கோவையை சேர்ந்த சுமிட்ஸ் ஹைக்ரானிக்ஸ் என்ற தனியார் நிறுவனத்திற்கு வழங்கும் நிகழ்ச்சி சிக்ரி வளாகத்தில் நடந்தது. சிக்ரி இயக்குனர் கலைச்செல்வி இந்த தொழில் நுட்பத்தை சுமிட்ஸ் நிறுவன இயக்குநர் ராஜ்மோகன் சத்தியதேவிடம் வழங்கினார். இதுகுறித்து சிக்ரி இயக்குநர் கலைச்செல்வி கூறிய தாவது:-தற்போது தொழி ற்சாலைகளில் வெளியாகும் கார்பன்டை ஆக்சைடானது குளிர்விக்கப்பட்டு, மீண்டும் அதிக அழுத்தம் மற்றும் வெப்பத்தில் திரவ நிலைக்கு மாற்றப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. இதற்கான செலவினங்கள் அதிகம் உள்ளது. அந்த செலவினத்தை 30 முதல் 40 சதவீதம் குறைக்கும் வகையில் எங்கள் விஞ்ஞானிகளின் தொழில் நுட்பம் அமைந்துள்ளது.

    இதன்படி தொழிற்சாலைகளில் 70 டிகிரி வெப்பத்தில் வெளிவரும் கார்பன்டை ஆக்சைடை அதே வெப்பநிலையில் பயனுள்ள திரவ கார்பன்டை ஆக்சைடாக மாற்றி உருளைகளில் சேமித்து ஆற்றலாக பயன்படுத்த முடியும். இதன் மூலம் உலக வெப்ப மயமாதல் குறைய வாய்ப்புகள் உள்ளது. தற்போது இந்தியாவில் அனல் மின் நிலையங்களில் இருந்து வெளியாகும் கார்பன்டை ஆக்சைடால் 40 சதவீதம் அளவிற்கு வெப்பம் ஏற்படுகிறது. அதனால், முதற்கட்டமாக இந்த தொழில் நுட்பத்தை கோவை சுமிட்ஸ் நிறுவனம் அனல் மின் நிலையங்களில் பயன்படுத்த உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்வின்போது மூத்த விஞ்ஞானி சத்யநாராயணன் உள்பட விஞ்ஞானிகள் உடனிருந்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கேரளாவில் மேலும் 13 கள்ள ஓட்டுகள் பதிவானது தெரிய வந்துள்ளதையடுத்து, இதற்கு உடந்தையாக இருந்த வாக்குச்சாவடி தேர்தல் அதிகாரிகள் மீது சட்டரீதியில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி கூறினார்.
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் உள்ள 20 பாராளுமன்ற தொகுதிகளுக்கு கடந்த மாதம் 23-ந் தேதி ஓட்டுப்பதிவு நடந்தது.

    இந்த தேர்தலில் கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் உள்ள ஓட்டுச்சாவடிகளில் கள்ள ஓட்டுகள் பதிவானதாக புகார்கள் எழுந்தன. மேலும் இங்கு உள்ள சில ஓட்டுச்சாவடிகளில் சிலர் ஓட்டுப்போடும்போது அடையாள மையை அழித்துவிட்டு மீண்டும் வந்து கள்ள ஓட்டு போட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. ஓட்டுப்பதிவின்போது வெப் கேமராவில் பதிவான காட்சிகள் வெளியானதன் மூலம் இது வெட்டவெளிச்சமானது.

    இதுதொடர்பாக மாநில தேர்தல் கமி‌ஷன் விசாரணை நடத்தியது. அதைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த பெண் கவுன்சிலர் உள்பட 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இந்த நிலையில் மேலும் 13 கள்ள ஓட்டுகள் பதிவானது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. கண்ணூர் மாவட்டம் பாம்புருட்டியில் உள்ள 166-வது வாக்குச்சாவடியில் 12 கள்ள ஓட்டுகளும், தர்ம மடம் பகுதியில் 52-வது பூத்தில் ஒரு கள்ள ஓட்டு பதிவானதும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

    இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் முஸ்லிம்லீக்கை சேர்ந்தவர்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்தவர்களும் கள்ள ஓட்டுப் போட்டது தெரியவந்துள்ளது. இதற்கு வாக்குச்சாவடி தேர்தல் அதிகாரிகள் 2 பேர் உடந்தையாக இருந்து உள்ளனர்.

    இதுபற்றி கேரள தலைமை தேர்தல் அதிகாரி டிக்காராம் மீனா கூறுகையில், கண்ணூர் மாவட்டம் பாம்புருட்டி, தர்மமடம் வாக்குச்சாவடிகளில் 13 கள்ள ஓட்டுகள் பதிவானதாக புகார்கள் வந்துள்ளது. கள்ள ஓட்டுப் போட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. கள்ள ஓட்டு புகார்களில் யாரையும் நாங்கள் விடமாட்டோம். பாரபட்சம் இல்லாமல் சட்ட ரீதியில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    இதற்கிடையில் கேரள முன்னாள் முதல்-மந்திரியும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான உம்மன்சாண்டி கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து 10 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் முறைகேடாக நீக்கப்பட்டு உள்ளதாக புதிய புகாரை கூறி உள்ளார்.

    இதற்கு பதிலளித்து தேர்தல் அதிகாரி டிக்காரம் மீனா கூறியதாவது:-

    கடந்த 2018-ம் ஆண்டில் இருந்து வாக்காளர் பட்டியலை திருத்தும் பணி நடைபெற்றது. அப்போது வாக்காளர்களிடம் இருந்து 6 லட்சம் மனுக்கள் புதிதாக பெயர் சேர்க்க கொடுக்கப்பட்டது. அந்த மனுக்களை பரிசீலனை செய்து தகுதியான 4 லட்சம் வாக்காளர்கள் பெயர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க பல முறை சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டது. அனைத்து கட்சியினரை கூட்டியும் ஆலோசனை நடத்தப்பட்டது.

    எனவே வாக்காளர் பட்டியலில் முறைகேடாக பெயர்கள் எதுவும் நீக்கப்படவில்லை. இதுதொடர்பாக உம்மன்சாண்டி பெரிதுபடுத்தி புகார் கூறி உள்ளார். அவர் தனது புகார் தொடர்பாக எழுத்துப்பூர்வமாக எங்களுக்கு எதுவும் கொடுக்கவில்லை. ஆனாலும் அதுபற்றி விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.


    ×