search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "invention"

    • லித்தியம்-அயன் பேட்டரியை உருவாக்கியதற்காக 2019-ம் ஆண்டு ஜான் குட்எனப் நோபல் பரிசு பெற்றார்.
    • இரண்டாம் உலகப் போரில் அமெரிக்காவின் வானிலை ஆய்வாளராக பணியாற்றினார்.

    வாஷிங்டன்:

    லித்தியம் பேட்டரியை கண்டுபிடித்த விஞ்ஞானி ஜான் குட்எனப் மரணம் அடைந்தார். வயது மூப்பு காரணமாக 100-வது வயதில் அவரது உயிர் பிரிந்தது.

    செல்போன், கணினி மற்றும் மின்சார கார்கள் வரையிலான சாதனங்களுக்கு ரீசார்ஜபிள் ஆற்றலுடனான லித்தியம்-அயன் பேட்டரியை உருவாக்கியதற்காக 2019-ம் ஆண்டு ஜான் குட்எனப் நோபல் பரிசு பெற்றார்.

    வேதியியலுக்கான இந்த நோபல் பரிசை, அமெரிக்காவின் எம்.ஸ்டான்லி விட்டிங்ஹாம், ஜப்பானின் அகிரா யோஷினோ ஆகியோருடன் பகிர்ந்து கொண்டார்.

    1980-ம் ஆண்டு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய போது ஜான் குட்எனப் லித்தியம் அயன் பேட்டரியை கண்டுபிடித்தார். 1922-ம் ஆண்டு ஜெர்மனியில் பிறந்த அவர், அமெரிக்காவில் வளர்ந்தார். யேல் பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் பட்டம் பெற்றார். சிகாகோ பல்கலைக்கழகத்தில் வேதியியலில் முனைவர் பட்டம் பெற்றார்.

    இரண்டாம் உலகப் போரில் அமெரிக்காவின் வானிலை ஆய்வாளராக பணியாற்றினார். 2011-ம் ஆண்டு ஜான் குட்எனப்புக்கு அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அறிவியலுக்கான குடியரசு தலைவர் பதக்கம் வழங்கி கவுரவித்தார். ஜான் குட்எனப் கண்டுபிடித்த லித்தியம்-அயன் பேட்டரி, தொழில்நுட்பத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

    • ரத்த அழுத்தத்தை கண்காணிக்கும் எளிய, குறைந்த விலை கிளிப்பை அமெரிக்காவின் கலிபோர்னியா சான்டியாகோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
    • கிளிப் 3டி அச்சிடப்பட்ட பிளாஸ்டிக் இணைப்பு ஆகும். இது ஸ்மார்ட் போனின் கேமரா மற்றும் பிளாஷ் மீது பொருத்தலாம்.

    ரத்த அழுத்தத்தை கண்காணிக்க குறைந்த விலையில் புதிய ஸ்மார்ட் போன்களை விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர். ஸ்மார்ட் போனின் கேமரா மற்றும் பிளாஷை பயன்படுத்தி பயனரின் விரல் நுனியில் ரத்த அழுத்தத்தை கண்காணிக்கும் எளிய, குறைந்த விலை கிளிப்பை அமெரிக்காவின் கலிபோர்னியா சான்டியாகோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

    இந்த கிளிப் 3டி அச்சிடப்பட்ட பிளாஸ்டிக் இணைப்பு ஆகும். இது ஸ்மார்ட் போனின் கேமரா மற்றும் பிளாஷ் மீது பொருத்தலாம். ரத்த அழுத்தத்தை அளவிட பயனர், கிளிப்பை அழுத்தும்போது ஸ்மார்ட் போனின் பிளாஷ் விரல் நுனியில் ஒளிரும். பின்னர் ரத்த அழுத்த அளவீட்டை காட்டும்.

    இது தொடர்பாக ஆராய்ச்சியாளர்கள் கூறும்போது, இந்த தொழில்நுட்பம் வயதானவர்கள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு மிகவும் பயனளிக்கும். ரத்த அழுத்த கண்காணிப்புக்கான தடையை குறைக்க மலிவான தீர்வை நாங்கள் உருவாக்கி உள்ளோம். இந்த சாதனம் மற்ற ரத்த அழுத்த கண்காணிப்பில் இருந்து வேறுபடுகிறது. ரத்த அழுத்தத்தை அளவிட பயனர் விரல் நுனியில் கிளிப்பை அழுத்தினால் போதும் என்றனர்.

    • புதிய கற்காலத்தில் தானியங்களை அரைப்பதற்கான அமைப்பு கண்டுபிடிக்கப்பட்டது.
    • மதுரை முத்துப்பட்டி பெருமாள்மலையில் செஞ்சாந்து ஓவியத்தின் எதிரிலுள்ள பாறையிலும் இதுபோன்ற அரைப்புப் பள்ளங்கள் உள்ளன.



    மலைப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட தொல் பொருட்கள் மற்றும் பல்லாங்குழி.

    மதுரை

    மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே கோபால்சாமி மலைப் பகுதியில் சுமார் 8000 ஆண்டுகள் பழமையான, புதிய கற்காலத்தின் அரவைத் தொழில்நுட்பத்தை வெளிப்படுத்தும், பாறையில் உருவாக்கப்பட்ட அமைப்பினை ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனம் கண்டு பிடித்துள்ளது.

    கோபால்சாமி மலை அருகில் பழமையான தொல்லியல் தடயங்கள் இருப்பதாக நூர்சாகிபுரம் சு.சிவகுமார் கொடுத்த தகவலின் பேரில், அவருடன் ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் ராஜகுரு, ராமநாதபுரம் சி.எஸ்.ஐ. கல்வியியல் கல்லூரி மாணவி சிவரஞ்சனி, திருப்பு ல்லாணி தொன்மைப் பாதுகாப்பு மன்ற மாணவர்கள் மனோஜ், பிரவீனா ஆகியோர் அப்பகுதி யில் கள ஆய்வு செய்தனர்.

    இதுகுறித்து ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் ராஜகுரு கூறியதாவது:-

    புதிய கற்காலமும் வாழ்வியல் மாற்றமும்

    புதிய அகழாய்வுகள் மூலம் தமிழ்நாட்டில் நிலவிய புதிய கற்காலம் கி.மு.6000 முதல் கி.மு.2200 வரையிலானது என தமிழ்நாடு தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. மனிதன் நாடோடி வாழ்க்கை யில் இருந்து நிலையான வாழ்க்கைக்கு மாறிய புதிய கற்காலத்தில் தான் வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, மட்பாண்டங்கள், நிரந்தரக் குடியிருப்புகள், தானியங்களை இடித்து அரைத்துப் பயன்படுத்துதல், தெய்வ வழிபாடு, வழுவழுப்பான கற்கருவிகள் ஆகியவை தோற்றம் பெற்றன.

    இந்நிலையில் கோபால்சாமி மலையின் வடக்குப் பகுதியில் கல்லாலான வட்டச்சில்லு, அரைப்புக்கற்கள், சிவப்பு நிற பானை ஓடுகள், புதிய கற்கால கற்கோடரி, இரும்புக் கசடுகள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.

    மேலும் இங்குள்ள பாறைகளில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் வழுவழுப்பாகத் தேய்த்த சிறிய மற்றும் பெரிய பள்ளங்கள், அம்மி போன்ற அமைப்பும் உள்ளன. இவை அரைப்புக் கற்களைக் கொண்டு தானியங்களை இடிக்கவும், அரைக்கவும், கொட்டைகளை உடைக்கவும் பயன்படுத்திய இடங்களாக இருக்கலாம். இவை கற்கருவிகளைத் தேய்த்த போது உண்டான பள்ளங்கள் இல்லை. அவை நீளமானதாக இருக்கும். இவை அவ்வாறு இல்லை. இதுவரை கண்டுபி டிக்கப்பட்ட கற்கருவிகள் தேய்க்குமிடங்கள் பெரும்பா லும் நீர்நிலைகள் அருகிலேயே உள்ளன. இங்கு ஆறு, சுனை எதுவுமில்லை.

    புதிய கற்காலத்தில் மனிதனிடம் ஏற்பட்ட முக்கியமான நாகரிக வளர்ச்சி தானியங்களை இடித்து, அரைத்துப் பயன்படுத்தியதும், சமைத்த உணவுகளை உண்ணத் தொடங்கியதும் தான். இது அவனது வாழ்க்கை முறையை மாற்றி, பல் உள்ளிட்ட உடல் பிரச்சினைகளுக்குக் காரண மானது. பையம்பள்ளி உள்ளி ட்ட இடங்களில் நடைபெற்ற அகழாய்வுகளில் புதிய கற்காலத்தில் பயன்பா ட்டில் இருந்த அரைப்புக்கல், திருகைக்கல், குழவி போன்றவை கண்டெடுக்கப் பட்டுள்ளன. மேலும் பாறையில் ஒரு வரிசைக்கு 6 என 3 வரிசைகளில் அமைந்த 18 குழிகள் கொண்ட பல்லாங்குழி அமைப்பும், அதன் அருகில் சதுர வடிவில் அமைந்த படம் போன்ற ஒரு பாறைச் செதுக்கலும் இங்கு உள்ளன.

    இரும்புக்காலம்

    தமிழ்நாட்டில் புதிய கற்காலப் பண்பாட்டின் தொடர்ச்சியாக இரும்புக் காலம் இருந்துள்ளதை உறுதிப்படுத்தும் விதமாக பாறையின் வடக்கில் 1 முதல் 3 அடி வரை உயரம் உள்ள சில பலகைக்கற்கள், தனித்தனி யாகக் காணப்படு கின்றன. இவை இரும்புக்கா லத்தைச் சேர்ந்த சேதமடைந்த கல்திட்டையின் எஞ்சிய கற்கள் ஆகும். இப்பகுதியில் சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் புதிய கற்கால, இரும்புக்காலத் தடயங்கள் உள்ளன.

    தென் தமிழ்நாட்டில் புதிய கற்காலத்தின் தடயங்கள் பெரிய அளவில் கிடைக்காத நிலையில் இங்கிருந்து 10 கி.மீ தொலைவில் தே.கல்லுப் பட்டியில் இத்தடயங்களை மத்திய தொல்லியல் துறை ஏற்கனவே கண்டுபிடித் துள்ளது. மதுரை முத்துப்பட்டி பெருமாள்மலையில் செஞ்சாந்து ஓவியத்தின் எதிரிலுள்ள பாறையிலும் இதுபோன்ற அரைப்புப் பள்ளங்கள் உள்ளன. இந்த இடங்களில் அகழாய்வு செய்து தென் தமிழ்நாட்டில் நிலவிய புதிய கற்காலப் பண்பா ட்டை அரசு வெளிக்கொணர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 200 ஆண்டு பழமையான நாணயங்களை திருப்புல்லாணி அரசுப் பள்ளி மாணவர்கள் கண்டெடுத்தனர்.
    • 3 செப்புக் காசுகள், மற்றொன்று வெண்க லத்தால் ஆனது.



    மாணவர்கள் அய்யப்பன், பிரவீன்ராஜ்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்றம் மூலம் மாணவர்க ளுக்கு பழமையான காசுகள், பானை ஓடுகளை அடை யாளம் காணவும், கல்வெட்டுகளைப் படிக்கவும், படியெடுக்கவும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

    மாணவர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள பழங்காலப் பொருள்கள், காசுகளை விடுமுறை நாட்களிலும், ஓய்வு நேரங்களிலும் ஆர்வத்தோடு தேடி கண்டுபிடித்து வருகின்றனர்.

    இதுபற்றி பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்றச் செயலரும், தொல்லி யல் ஆய்வாளருமான ராஜ குரு கூறியதாவது:-

    9-ம் வகுப்பு மாணவர் பிரவின்ராஜ், 6-ம் வகுப்பு மாணவர் அய்யப்பன் ஆகியோர் 4 ஆங்கிலேயர் கால வட்டவடிவ காசுகளை கீழவலசை, சேதுக்கரையில் கண்டெடுத்துள்ளனர். இதில் 3 செப்புக் காசுகள், மற்றொன்று வெண்க லத்தால் ஆனது.

    இது கி.பி.1833-ல் வெளியிடப்பட்டது. இந்த நாணயத்தின் ஒருபுறம் கிழக்கிந்தியக் கம்பெனியின் முத்திரையும், மறுபுறம் தராசு படமும் உள்ளது. தராசின் மேலே ஆங்கிலத்தில் குவாட்டர் அணா எனவும், அதன் கீழே அரபி வாசகமும் உள்ளது.

    மற்றொன்று கி.பி.1887-ம் ஆண்டு விக்டோரியா மகாராணி காலத்தில் வெளியிடப்பட்டது. ¼ அணா மதிப்புள்ளது. ஒரு கால் அணா இந்தியா 1887 என ஆங்கிலத்தில் 5 வரிகளில் எழுதப்பட்டு உள்ளது. நாணயத்தின் பின்புறம் விக்டோரியா எம்பரஸ் என எழுதப்பட்டு அவரின் மார்பளவு படமும் உள்ளது.

    மாணவர் அய்யப்பன் சேதுக்கரை கடற்கரையில் கண்டெடுத்த 2 நாணயங்களில், ஒன்று கி.பி.1835-ல் வெளி யிடப்பட்டதாகும். இதில் ஒருபுறம் கிழக்கிந்தியக் கம்பெனி என ஆங்கிலத்தில் எழுதப்பட்டு அதன் நடுவில் ½ அணா என்றும், மறுபுறம் கம்பெனி முத்திரையும் உள்ளது.

    மற்றொன்று 6-ம் ஜார்ஜ் மன்னர் காலத்தில் கி.பி.1941-ல் வெளியிடப் பட்டது. இது ¼ அணா மதிப்புள்ளது.

    திருப்புல்லாணி வரும் பக்தர்கள் சேதுக்கரை கடலில் புனித நீராடும் வழக்கம் பழங்காலம் முதல் இருந்துள்ளது. நீராடிய பிறகு ஆடை, காசுகளை கடலில் விட்டுச் செல்கிறார்கள். இந்த நாணயங்கள் இவ்வாறு போடப்பட்டதாக இருக்கலாம். பிரவின்ராஜ் கண்டெடுத்தது மக்களின் சேமிப்பில் உள்ளது.

    திருப்புல்லாணி மாணவர்கள் தங்கள் பகுதிகளில் பாண்டியர், சோழர், டச்சுக்காரர் நாணயங்களை ஏற்கனவே கண்டெடுத்துள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • புதுமை வவுச்சர் திட்டம் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை மேம்படுத்துவதற்கான மாநில அரசின் முயற்சியாகும்.
    • மாணவி தர்ஷினி வாய்மொழி உத்தரவு மூலம் சக்கர நாற்காலியை நகர்த்துவதற்கு புதிய அம்சங்களை கண்டுபிடித்துள்ளார்.

    நெல்லை:

    தமிழக அரசின் தொழில் முனைவோர் துறையின் புதுமை வவுச்சர் திட்டம் என்பது, விவசாயம், தோட்டக்கலை, கால்நடை, மீன்வளம், பொறியியல், கழிவு மேலாண்மை, சுகாதாரம், ஆட்டோமொபைல், நானோ தொழில்நுட்பம், எலக்ட்ரானிக்ஸ் போன்ற வற்றில் இருந்து சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில், ஸ்டார்ட் அப்களில் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை மேம்படுத்துவதற்கான ஒரு தனித்துவமான மாநில அரசின் முயற்சியாகும்.

    இது ஆராய்ச்சி, சரிபார்ப்பு, சந்தை ஆய்வு மற்றும் தயாரிப்பு மேம்பாடு போன்ற அடுத்த கட்டங்களுக்குச் செல்ல புதுமையான யோசனைகளைக் கொண்ட ஸ்டார்ட்அப்கள் மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோரை இது செயல்படுத்தும்.

    இது தொடர்பாக எப்.எக்ஸ். கல்லூரியின் தொழில் முனைவோர் துறை சார்பில் மாணவர்களுக்கு புதுமை வவுச்சர் திட்டம் குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கத்தை இயக்குநர் லூர்தஸ் பூபாலராயன் ஏற்பாட்டின் பேரில் தமிழக அரசின் தொழில் முனைவோர் துறையின் புதுமை வவுச்சர் திட்ட ஒருங்கிணைப்பாளர் சிவபாரதி கலந்துகொண்டு திட்டம் குறித்த முக்கியத்து வத்தை மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.

    அதன் தொடர்ச்சியாக எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரியின் கணினித் துறை 3-ம் ஆண்டு மாணவி தர்ஷினி வாய்மொழி உத்தரவு மூலம் சக்கர நாற்காலியை நகர்த்துவதற்கு புதிய அம்சங்களை கண்டுபிடித்துள்ளார்.

    இந்த திட்டத்திற்காக தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்திடமிருந்து புதுமை வவுச்சர் திட்டத்தின் கீழ் கணினித்துறை மாணவி தர்ஷினி ரூ.2 லட்சம் ஊக்கத்தொகை பரிசு பெற்றுள்ளார். இந்தத் திட்டத்திற்கு செயற்கை நுண்ணறிவுத்துறை தலைவர் அனிதா வழிகாட்டியாக செயல்பட்டார்.

    இதற்கு ஊக்கமும், உற்சாகமும் அளித்த பொது மேலாளர் ஜெயக்குமார், கிருஷ்ணகுமார், கணினி துறை தலைவர் அரவிந்த் சுவாமிநாதன், தொழில்முனைவோர் துறை இயக்குநர் லூர்தஸ் பூபாலராயன், செயற்கை நுண்ணறிவுத்துறை தலைவர் அனிதா மற்றும் பேராசிரியர்கள் உள்ளிட்டோரை ஸ்காட் கல்வி குழும நிறுவனர் எஸ். கிளிட்டஸ் பாபு, நிர்வாக இயக்குநர் அருண் பாபு, ஸ்காட் கல்வி குழும தாளாளர் பிரியதர்ஷினி அருண் பாபு ஆகியோர் பாராட்டினர்.

    • கார்பன்டை ஆக்சைடை உறிஞ்சும் தொழில்நுட்பம் கண்டுபிடித்துள்ளனர்.
    • கோவையை சேர்ந்த சுமிட்ஸ் ஹைக்ரானிக்ஸ் என்ற தனியார் நிறுவனத்திற்கு வழங்கும் நிகழ்ச்சி சிக்ரி வளாகத்தில் நடந்தது.

    காரைக்குடி

    காரைக்குடியில் செயல்படும் மத்திய மின்வேதியியல் ஆய்வகத்தின் (சிக்ரி) 75-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு 19 கண்டுபிடிப்புகளுக்கான ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது.

    முதற்கட்டமாக தொழிற்சாலைகளில் இருந்து வெளியாகும் கார்பன்டை ஆக்சைடை அதே வெப்பநிலையில் கடத்தி, அதை திரவ நிலைக்கு மாற்றுவதற்கான ஆராய்ச்சியில் சிக்ரி இயக்குனர் கலைச்செல்வி தலைமையில் விஞ்ஞானிகள் ரவிபாபு, ஷ்ரவந்தி, வாசுதேவன் ஆகியோர் அடங்கிய குழுவினர் ஈடுபட்டனர். தற்போது அதற்கான தொழில் நுட்பத்தை கண்டுபிடித்துள்ளனர்.

    இந்த தொழில் நுட்பம் கோவையை சேர்ந்த சுமிட்ஸ் ஹைக்ரானிக்ஸ் என்ற தனியார் நிறுவனத்திற்கு வழங்கும் நிகழ்ச்சி சிக்ரி வளாகத்தில் நடந்தது. சிக்ரி இயக்குனர் கலைச்செல்வி இந்த தொழில் நுட்பத்தை சுமிட்ஸ் நிறுவன இயக்குநர் ராஜ்மோகன் சத்தியதேவிடம் வழங்கினார். இதுகுறித்து சிக்ரி இயக்குநர் கலைச்செல்வி கூறிய தாவது:-தற்போது தொழி ற்சாலைகளில் வெளியாகும் கார்பன்டை ஆக்சைடானது குளிர்விக்கப்பட்டு, மீண்டும் அதிக அழுத்தம் மற்றும் வெப்பத்தில் திரவ நிலைக்கு மாற்றப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. இதற்கான செலவினங்கள் அதிகம் உள்ளது. அந்த செலவினத்தை 30 முதல் 40 சதவீதம் குறைக்கும் வகையில் எங்கள் விஞ்ஞானிகளின் தொழில் நுட்பம் அமைந்துள்ளது.

    இதன்படி தொழிற்சாலைகளில் 70 டிகிரி வெப்பத்தில் வெளிவரும் கார்பன்டை ஆக்சைடை அதே வெப்பநிலையில் பயனுள்ள திரவ கார்பன்டை ஆக்சைடாக மாற்றி உருளைகளில் சேமித்து ஆற்றலாக பயன்படுத்த முடியும். இதன் மூலம் உலக வெப்ப மயமாதல் குறைய வாய்ப்புகள் உள்ளது. தற்போது இந்தியாவில் அனல் மின் நிலையங்களில் இருந்து வெளியாகும் கார்பன்டை ஆக்சைடால் 40 சதவீதம் அளவிற்கு வெப்பம் ஏற்படுகிறது. அதனால், முதற்கட்டமாக இந்த தொழில் நுட்பத்தை கோவை சுமிட்ஸ் நிறுவனம் அனல் மின் நிலையங்களில் பயன்படுத்த உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்வின்போது மூத்த விஞ்ஞானி சத்யநாராயணன் உள்பட விஞ்ஞானிகள் உடனிருந்தனர்.

    கேரளாவில் மேலும் 13 கள்ள ஓட்டுகள் பதிவானது தெரிய வந்துள்ளதையடுத்து, இதற்கு உடந்தையாக இருந்த வாக்குச்சாவடி தேர்தல் அதிகாரிகள் மீது சட்டரீதியில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி கூறினார்.
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் உள்ள 20 பாராளுமன்ற தொகுதிகளுக்கு கடந்த மாதம் 23-ந் தேதி ஓட்டுப்பதிவு நடந்தது.

    இந்த தேர்தலில் கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் உள்ள ஓட்டுச்சாவடிகளில் கள்ள ஓட்டுகள் பதிவானதாக புகார்கள் எழுந்தன. மேலும் இங்கு உள்ள சில ஓட்டுச்சாவடிகளில் சிலர் ஓட்டுப்போடும்போது அடையாள மையை அழித்துவிட்டு மீண்டும் வந்து கள்ள ஓட்டு போட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. ஓட்டுப்பதிவின்போது வெப் கேமராவில் பதிவான காட்சிகள் வெளியானதன் மூலம் இது வெட்டவெளிச்சமானது.

    இதுதொடர்பாக மாநில தேர்தல் கமி‌ஷன் விசாரணை நடத்தியது. அதைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த பெண் கவுன்சிலர் உள்பட 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இந்த நிலையில் மேலும் 13 கள்ள ஓட்டுகள் பதிவானது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. கண்ணூர் மாவட்டம் பாம்புருட்டியில் உள்ள 166-வது வாக்குச்சாவடியில் 12 கள்ள ஓட்டுகளும், தர்ம மடம் பகுதியில் 52-வது பூத்தில் ஒரு கள்ள ஓட்டு பதிவானதும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

    இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் முஸ்லிம்லீக்கை சேர்ந்தவர்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்தவர்களும் கள்ள ஓட்டுப் போட்டது தெரியவந்துள்ளது. இதற்கு வாக்குச்சாவடி தேர்தல் அதிகாரிகள் 2 பேர் உடந்தையாக இருந்து உள்ளனர்.

    இதுபற்றி கேரள தலைமை தேர்தல் அதிகாரி டிக்காராம் மீனா கூறுகையில், கண்ணூர் மாவட்டம் பாம்புருட்டி, தர்மமடம் வாக்குச்சாவடிகளில் 13 கள்ள ஓட்டுகள் பதிவானதாக புகார்கள் வந்துள்ளது. கள்ள ஓட்டுப் போட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. கள்ள ஓட்டு புகார்களில் யாரையும் நாங்கள் விடமாட்டோம். பாரபட்சம் இல்லாமல் சட்ட ரீதியில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    இதற்கிடையில் கேரள முன்னாள் முதல்-மந்திரியும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான உம்மன்சாண்டி கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து 10 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் முறைகேடாக நீக்கப்பட்டு உள்ளதாக புதிய புகாரை கூறி உள்ளார்.

    இதற்கு பதிலளித்து தேர்தல் அதிகாரி டிக்காரம் மீனா கூறியதாவது:-

    கடந்த 2018-ம் ஆண்டில் இருந்து வாக்காளர் பட்டியலை திருத்தும் பணி நடைபெற்றது. அப்போது வாக்காளர்களிடம் இருந்து 6 லட்சம் மனுக்கள் புதிதாக பெயர் சேர்க்க கொடுக்கப்பட்டது. அந்த மனுக்களை பரிசீலனை செய்து தகுதியான 4 லட்சம் வாக்காளர்கள் பெயர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க பல முறை சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டது. அனைத்து கட்சியினரை கூட்டியும் ஆலோசனை நடத்தப்பட்டது.

    எனவே வாக்காளர் பட்டியலில் முறைகேடாக பெயர்கள் எதுவும் நீக்கப்படவில்லை. இதுதொடர்பாக உம்மன்சாண்டி பெரிதுபடுத்தி புகார் கூறி உள்ளார். அவர் தனது புகார் தொடர்பாக எழுத்துப்பூர்வமாக எங்களுக்கு எதுவும் கொடுக்கவில்லை. ஆனாலும் அதுபற்றி விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.


    ×