என் மலர்
நீங்கள் தேடியது "Blood Pressure"
- சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம், உடல் நிறை குறியீட்டெண் ஆகியவை பரிசீலிக்கப்பட்டு அனைவருக்கும் மருந்து மாத்திரைகள் மற்றும் டானிக் இலவசமாக வழங்கப்பட்டது.
- இதில் 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு இலவச உடல் பரிசோதனை செய்து கொண்டனர்.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி அருகே நெடும்பலம் கார்குழலி அறக்கட்டளை, ஜிடி பவுண்டேசன், ராய் டிரஸ்ட் இன்டர்நேஷனல், ஆலத்தம்பாடி மேம்படு த்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம் நெடும்பலம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கார்குழலி நிறுவனத் தலைவர் சுடர்விழி வரவேற்புரையாற்றினார். குழந்தைகள் நல மருத்து வர் ராஜா தலைமை தாங்கினார். ராய் டிரஸ்ட் இன்டர்நேஷனல் நிறுவனத்தலைவர் முனைவர் துரை ராயப்பன் மற்றும் நல்நூலகர் ஆசைத்தம்பி, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கௌரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்ச்சியை காவ ல்துறை கண்காணிப்பாளர் சோமசுந்தரம்தொடக்கி வைத்து சிறப்புரையா ற்றினார். காவல்துறை துணை கண்காணிப்பாளர் .அ.பார்த்திபன், வட்டார வளர்ச்சி அலுவலர், சிவகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயகுமார், பள்ளி தலைமை யாசிரியர் தங்கராசு, ஆசிரியர் யோகராஜன், ஆசிரியர் கலைச்செல்வன், ஆதிரங்கம் ஊராட்சிமன்ற தலைவர் வீரசேகரன்.
நெடும்பலம் ஊராட்சிமன்ற துணை தலைவர் சதீஷ், பிவிசி.கீர்த்தி, கமல் கணேசன், ராய் டிரஸ்ட் கோவி.வேதகிருஷ்ணன் மற்றும் கார்குழலி அறக்கட்டளை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.இதில் டாக்டர். ராஜா, டாக்டர் சதாசிவம், டாக்டர் சவுந்தர்ய லெட்சுமி, டாக்டர் வர்ஷிகா ராஜா, டாக்டர் அபூர்வநிலா, டாக்டர் அரவிந்த் ஆகியோர்கலந்து கொண்டு மருத்துவ ஆலோசனை வழங்கினர்.
அனைவருக்கும் ரத்த வகை, ஹீமோ குளோபின்,சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம், உடல் நிறை குறியீட்டெண் ஆகியவை பரிசீலிக்க ப்பட்டு,அனைவருக்கும் மருந்து மாத்திரைகள் மற்றும் டானிக் இலவசமாக வழங்கப்பட்டது .இதில் 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற் றும் பொது மக்கள் கலந்துகொண்டு இலவச உடல் பரிசோதனை செய்து கொண்டனர்.கார்குழலி அறக்கட்டளை ராகேஷ் சர்மா நன்றி கூறினார்.
இந்தியர்களுக்கு உணவில் அதிக அளவில் உப்பு சேர்க்கும் பழக்கம் உள்ளது. இதன் காரணமாக பல்வேறு நோய்கள் தாக்குதலுக்கு ஆளாகிறார்கள்.
இது தொடர்பாக இந்திய சுகாதார அமைப்பு என்ற நிறுவனம் ஆய்வு ஒன்றை நடத்தியது. டெல்லி, அரியானா, ஆந்திரா ஆகிய 3 மாநிலங்களில் விரிவாக ஆய்வு நடத்தப்பட்டது.
அதில், இந்தியர்கள் அதிக அளவில் உப்பு சேர்ப்பதால் உயர் ரத்த அழுத்த நோயில் சிக்கி தவிப்பதும், மேலும் இருதய ரத்த குழாய்களில் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதும் தெரிய வந்தது.
மற்ற நாடுகளை ஒப்பிடும் போது இந்தியர்கள்தான் அதிக அளவில் உப்பு சேர்க்கிறார்கள். உலக சுகாதார நிறுவனம் உணவில் எவ்வளவு உப்பு சேர்த்து கொள்ளலாம் என்று வரம்பு நிர்ணயித்துள்ளதோ அதை விட இந்தியர்கள் அதிகமாக உப்பு சேர்த்து கொள்கிறார்கள்.
இந்தியர்கள் வீட்டில் தயாரித்து உண்ணும் உணவை விட அவர்கள் வாங்கி சாப்பிடும் உணவுகள் மற்றும் தின்பண்டங்களில் அதிக உப்பு கலந்திருப்பதும் இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இதுபற்றி அந்த நிறுவனங்களிடம் கேட்ட போது, எங்கள் உணவு பொருட்களில் உப்பு குறைவாக இருந்தால் வாடிக்கையாளர்கள் அவற்றை வாங்குவது குறைகிறது. எனவே, அதிக உப்பு சேர்க்கிறோம் என்று கூறுகின்றனர்.
குறைந்த வருவாய் மற்றும் நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளில் தான் உயர் ரத்த அழுத்த நோய் மற்றும் இதய ரத்தக்குழாய் நோய் அதிகமாக உள்ளது. இந்தியா நடுத்தர வருவாய் கொண்ட நாடாக உள்ளது. எனவே, இந்தியர்களையும் இந்த நோய்கள் அதிகமாக தாக்குகின்றன.
இந்தியாவை பொறுத்த வரையில் 61 சதவீத உயிரிழப்புகள் தொற்று நோய் அல்லாத இதய நோய், இதய ரத்தக்குழாய் நோய், நீரிழிவு, புற்று நோய் போன்றவற்றால் ஏற்படுகிறது.
உப்பு சேர்ப்பதால் ஏற்படும் ரத்த அழுத்தத்தால் இதய நோய்கள் ஏற்படுகின்றன. எனவே உப்பு, இந்தியர்களின் உயிரிழப்புக்கு முக்கிய காரணமாக இருக்கிறது என்று அந்த ஆய்வு சொல்கிறது.
அது மட்டும் அல்லாமல், கருவில் இருக்கும் குழந்தைகளையும் இந்த நோய்கள் பாதிக்கின்றன. இதனால் பிறக்கும் முன்பே உயிர் இழக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையும் இந்தியாவில் அதிகமாக உள்ளது. #Salt #BloodPressure
* இதிலுள்ள லிமோனென் குடல், வயிறு, மார்பகம், நுரையீரல், வாய், சருமம் இவைகளில் ஏற்படும் புற்று நோய்களை எதிர்க்கும் சக்தி கொண்டது.
* இதிலுள்ள சிட்ரிக் ஆசிட் மற்றும் பைட்டோக்யூட்ரியன்ட் முகப்பரு ஏற்படுத்தும் கிருமியினை கொன்று சரும வீக்கத்தினை நீக்கும்.
ஹெஸ்பெரிடின் எனும் ப்ளேவருய்ட் ரத்தத்தில் சர்க்கரை அளவினையும், கொழுப்பு அளவினையும் கட்டுப்படுத்துகின்றது. எலும்பின் தேய்மானத்தினைக் குறைக்கின்றது. அன்றாடம் எலுமிச்சை சாறு எடுத்துக் கொள்வது ரத்த கொதிப்பினை குறைக்கும்.
வைட்டமின் ‘சி’ சத்து சளி, ப்ளூ இவற்றினைத் துரத்தும். வளர்சிதை செயல்பாட்டினைத் துரிதப்படுத்துவதால் நீண்ட சோர்வு, உடல் வலி இவை நீங்கும். பித்தப்பையை காக்கும். ஜீரண உறுப்புகள் அனைத்திற்கும் மிகச் சிறந்தது.
* உள் வீக்கங்களைக் குறைக்கும்.
* நோய் எதிர்ப்புச் சக்தியினை வெகுவாய் கூட்டும்.
* சிறுநீரக கற்கள் உருவாகுவதைத் தவிர்க்கும்.
இவ்வளவும் அறிந்த பின் தினமும் ஒரு எலுமிச்சை சாறு எடுத்துக் கொள்வதை பழக்கப்படுத்திக் கொள்வோம்.