என் மலர்
நீங்கள் தேடியது "bones"
- ஔவைக்கு நெல்லிக்கனியை கொடுத்தார் அதியமான்
- சாறு, பொடி, சட்னி என எந்த வடிவத்தில் எடுத்துக்கொண்டாலும் நெல்லிக்காய் நன்மை பயக்கும்.
'ஔவைக்கு நெல்லிக்கனியை கொடுத்தார் அதியமான்' என நாம் படித்திருப்போம். உலகில் எவ்வளவோ பொருட்கள் இருக்கும்போது நெல்லிக்கனியை ஏன் கொடுத்தார்? என பலரும் யோசித்திருப்போம். அதற்கு காரணம் நெல்லிக்கனியில் இருக்கும் மருத்துவக் குணங்கள். ஔவை நீண்டகாலம் ஆரோக்கியமாக வாழவேண்டும் என்பதற்காக கடையேழு வள்ளல்களில் ஒருவரான பாரி அவருக்கு நெல்லிக்கனியை கொடுத்தார். அவ்வளவு மருத்துவக்குணமிக்கதா நெல்லிக்காய் என நாம் வியப்போம். ஆம், நெல்லிக்காய் எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டது. அதை எடுத்துக்கொள்வதால் கிடைக்கும் பல்வேறு நன்மைகள் குறித்து காண்போம்.
நோய் எதிர்ப்பு சக்தி
கொய்யா, திராட்சை போன்ற சிட்ரஸ் பழங்களைவிட நெல்லிக்காயில் அதிகளவு வைட்டமின் சி உள்ளது. இது வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராட உடலுக்கு உதவுகிறது. அதே நேரத்தில் செல்களை ஃப்ரீ ரேடிக்கல் சேதத்திலிருந்து பாதுகாக்கிறது.
இயற்கை நச்சு நீக்கி
நெல்லிக்காய் உடலில் நச்சு நீக்க செயல்முறையை ஆதரிக்கிறது. இரத்தத்தை சுத்திகரிக்கிறது. உயிர்சக்தியை மேம்படுத்துகிறது.
முதிர்வை தடுக்கிறது
நெல்லிக்காயில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள், உடலில் ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்க உதவுகின்றன. இதனால் தோல் மற்றும் உறுப்புகளின் வயதாகும் தன்மையை தடுக்க முக்கிய பங்காற்றுகிறது.
இதய ஆரோக்கியம்
கெட்ட கொழுப்பைக் குறைக்கிறது, இரத்த அழுத்தத்தை சீராக்குகிறது, இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது, இதயத் தசைகளை வலுப்படுத்துகிறது மற்றும் மாரடைப்பு போன்ற பாதிப்புகளைத் தடுக்க உதவுகிறது.
இரத்த அழுத்தத்தை நிர்வகிக்கிறது
நெல்லிக்காய் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும். நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி, இரத்த நாளங்களை விரிவடையச் செய்து, இரத்தக் கொழுப்பின் அளவைக் குறைப்பதன் மூலம் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும், இது நரம்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தி, இரத்த ஓட்டத்தை எளிதாக்குகிறது.

ஜூஸ், பொடி, சட்னி என அனைத்து வடிவத்திலும் நெல்லிக்காயை எடுத்துக் கொள்ளலாம்
பசியை கட்டுப்படுத்தும்
கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் குறைவாக இருப்பதால், நெல்லிக்காய் பசியைக் கட்டுப்படுத்த உதவுகிறது. அதனால்தான் எடை குறைக்க விரும்புவர்கள் பலரும் நெல்லிக்காய் ஜூஸ் எடுத்துக்கொள்வார்கள்.
நினைவாற்றலை அதிகரிக்கிறது
நெல்லிக்காயில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மூளை செல்களை சேதப்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடுகின்றன. கூர்மையான நினைவாற்றலை வளர்க்க உதவுகின்றன.
எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
நெல்லிக்காயில் உள்ள ஊட்டச்சத்துக்கள், குறிப்பாக பாஸ்பரஸ் மற்றும் கால்சியம், எலும்புகளை வலுப்படுத்த உதவும். இது எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, கால்சியம் பற்றாக்குறையால் ஏற்படும் மூட்டுவலி போன்ற பிரச்சனைகளையும் தடுக்க உதவும்.
சரும ஆரோக்கியம்
நெல்லிக்காயின் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் கொலாஜன் உற்பத்தியை ஆதரிக்கின்றன, பிக்மெண்டேஷனை குறைக்கின்றன, மேலும் சருமத்திற்கு ஆரோக்கியமான பளபளப்பை அளிக்கின்றன.
முடி பராமரிப்பு
பல தலைமுறைகளாக, இந்திய முடி பராமரிப்பில் நெல்லிக்காய் ஒரு முக்கிய அங்கமாக இருந்து வருகிறது. வேர்களை வலுப்படுத்துதல், முன்கூட்டியே நரைப்பதைத் தடுத்தல், முடிக்கு பளபளப்பைச் சேர்த்தல் என முடி பராமரிப்பிற்கு முக்கிய பங்காற்றுகிறது நெல்லிக்காய். இதுபோல இன்னும் பல்வேறு நன்மைகளை உள்ளடக்கியுள்ளது. சாறு, பொடி, நெல்லிக்காய் சட்னி, இல்லை ஒரு நாளைக்கு ஒரு நெல்லிக்காய் அப்படியே சாப்பிடுகிறேன் என்றாலும், எந்த வடிவத்தில் எடுத்துகொண்டாலும் பலனளிக்கும்.
- இந்த பசை 'Bone-02' என அழைக்கப்படுகிறது.
- 150 பேருக்கு நடந்த சோதனை வெற்றி அடைந்ததாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
தற்போது ஒருவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டால், மீண்டும் எலும்புகள் சரி ஆவதற்கு சில மாதங்கள் வரை ஆகிறது. அதுவரை பாதிக்கப்பட்டவரின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படுகிறது.
இந்நிலையில், எலும்பு முறிவு ஏற்பட்டால், இனி அறுவை சிகிச்சைக்கு பதில், 3 நிமிடத்தில் அதனை ஒட்டி சரி செய்யும் பசையை சீனாவின் ஜெஜியாங் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
'Bone-02' என அழைக்கப்படும் இந்த பசை, இரத்தம் இருந்தால் கூட, 3 நிமிடங்களில் இரு எலும்புகளையும் துல்லியமாக ஒட்டிவிடும் என்றும், 150 பேருக்கு நடந்த சோதனை வெற்றி அடைந்ததாகவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
எலும்பு குணமடையும் போது இந்த பசை உடலால் இயற்கையாகவே உறிஞ்சப்படும் என்பதால் அறுவை சிகிச்சை தேவைப்படாது என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
- யானை இறந்து 90 முதல் 120 நாட்களுக்கு மேலாக இருக்கலாம்.
- வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை,
கோவை மாவட்டம் போளுவாம்பட்டி வனசரகத்திற்குட்பட்ட நரசீபுரம் பிரிவு, ரத்தப் பாறை வனப்பகுதியில் வனப்பணியாளர்கள் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு இறந்த ஆண் யானையின் மண்டையோடு, 2 தந்தங்கள் மற்றும் எலும்புகள் கிடந்தது. இதை பார்த்த வன ஊழியர்கள் சம்பவம் குறித்து வனத்துைற உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து இன்று காலை 10 மணியளவில் கோவை வனக்கோட்ட வன விரிவாக்க அலுவலர் தலைமையில் போளுவாம்பட்டி வனச்சரக அலுவலர் மற்றும் வனப்பணியாளர்கள் முன்னிலையில் ஆனைமலை புலிகள் காப்பக வனக்கால்நடை மருத்துவர் சுகுமார் இறந்த ஆண் யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்தார்.
பிரேத பரிசோதனையில் இறந்தது ஆண் காட்டு யானை என்பதும், 5 முதல் 6 வயது வரை இருக்கலாம். மேலும் இந்த யானை இறந்து 90 முதல் 120 நாட்களுக்கு மேலாக இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விசாரணை முடிந்த பிறகு பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- சோதனையில் ஆண்மைக்கான மூலிகை மாத்திரைகள், மூலிகைகளால் செய்யப்பட்ட பொடிகளையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
சுவாமிமலை:
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சோழபுரத்தை சேர்ந்தவர் கேசவமூர்த்தி (வயது 47).
இவர் 10-ம் வகுப்பு வரை மட்டுமே படித்து விட்டு சித்த மருத்துவம் பார்த்து வந்தார். போலி மருத்துவரான இவர் பலருக்கு போதை மருந்து கொடுத்து அவர்களிடம் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டார். சம்பவத்தன்று இவரிடம் வைத்தியம் பார்க்க வந்த அதே பகுதியை சேர்ந்த டிரைவர் அசோக்ராஜ் (27) என்பவருக்கு ஆண்மை வீரியத்திற்கான மருந்து கொடுத்து அவருடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டார்.
அப்போது மருந்தின் வீரியம் அதிகரித்து அசோக்ராஜ் மயங்கி விழுந்தார். ஆனால் அசோக்ராஜன் இறந்து விட்டதாக நினைத்து அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி வீட்டில் புதைத்துள்ளார்.
இதற்கிடையே அசோக்ராஜ் வீட்டுக்கு திரும்பாதது குறித்து அவரது பாட்டி பத்மினி சோழபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு அசோக்ராஜை தேடினர். அதில் அசோக்ராஜ் போலி சித்த வைத்தியர் கேசவமூர்த்தி வீட்டுக்கு சென்றதுதம் அதன் பின் திரும்பி வராததும் பதிவாகியிருந்தது.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் கேசவமூர்த்தியை பிடித்து கிடுக்கிப்பிடி விசாரித்ததில், அசோக்ராஜ்க்கு வீரியமிக்க மருந்து கொடுத்து ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு அவரை கொலை செய்ததை ஓப்புக்கொண்டார். மேலும் உடலை வெட்டி நுரையீரல், கல்லீரல் ஆகியவற்றை மசாலா சேர்த்து சமைத்து சாப்பிட்டதும் தெரியவந்தது.
இதனை தொடர்ந்து கேசவமூர்த்தியை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரது வீட்டையும் தோண்டி பார்த்தபோது அசோக்ராஜன் உடல் பாகங்களில் சில மட்டும் கிடைத்தது. அதனை மீட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
மேலும் மண்ணில் புதைக்கப்பட்ட நிலையில் மனித தாடை எலும்பு கண்டெடுக்கப்பட்டது. கடந்த 2021-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த அனஸ் என்பவர் மாயமாகி இதுவரை வீடு திரும்பவில்லை.
எனவே அவரது எலும்பு தாடையாக இருக்கலாமோ என போலீசார் சந்தேகித்தனர். அவரையும் இதுபோன்று போதை மருந்து கொடுத்து கொன்று புதைத்திருக்கலாம் என சந்தேகம் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து கைப்பற்றப்பட்ட மனித தாடை எலும்பு பரிசோதனைக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு டி.என்.ஏ. உள்ளிட்ட சோதனை நடந்து வருகிறது. அதன் அறிக்கை வந்த பிறகே உண்மை நிலவரம் தெரியவரும்.
இந்நிலையில் நேற்று போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜாபர்சித்திக் மற்றும் போலீசார், வருவாய்துறை, தயடவியல் நிபுணர்கள் முன்னிலையில் 30-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கேசவமூர்த்தியின் வீட்டின் பின்புறத்தில் நிலத்தை பொக்லைன் எந்திரம் மூலம் தோண்டப்பட்டது. அப்போது 3 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்ட தோண்ட சிறிய அளவிலும், நொறுங்கிய நிலையிலும் 25-க்கும் மேற்பட்ட எலும்பு துண்டுகள் தென்ப்பட்டன. அவைகளை பெட்டிகளில் சேகரித்து சோதனைக்காக தஞ்சாவூருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த எலும்பு துண்டுகள் மனித எலும்புகளா ? அப்படி இருந்தால் அவர் யாரையெல்லாம் கொலை செய்து புதைத்திருந்தார் ? அதில் மாயமான அனஸ் உடலின் எலும்புகள் இருந்தனவா ? அல்லது வேறு ஏதேனும் எலும்புகளா ? என்பது குறித்த முழு விவரமும் பரிசோதனை அறிக்கை வந்த பிறகே தெரியவரும்.
மேலும் வீட்டில் நடந்த சோதனையில் ஆண்மைக்கான மூலிகை மாத்திரைகள், மூலிகைகளால் செய்யப்பட்ட பொடிகளையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
இது தவிர கைப்பற்றபட்ட டைரியில் பெயர்களுடன் செல்போன் எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த எண்களையும் போலீசார் தொடர்பு கொண்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணை முடிந்த பிறகு பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒட்டு மொத்தத்தில் போலி சித்த மருத்துவர் கேசவமூர்த்தி, தன்னை நாடி வந்தவர்களில் எத்தனை பேரை மூலிகை மருந்து கொடுத்து ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு அவர்களை கொன்று புதைத்த விவரமும் விசாரணை, பரிசோதனை அறிக்கை வந்த பிறகு தெரியவரும்.
தொடர்ந்து கேசவமூர்த்தி வீட்டை சுற்றி இன்றும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்ந்து அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
- வைட்டமின் டி சரியான அளவில் இருந்தால் தான் கால்சியம் உடம்பில் சேரும்.
- கொள்ளில் சோயாவுக்கு இணையான கால்சியம் உள்ளது.
உறுதியான, வலுவான எலும்புகள் தான் ஆரோக்கியமான வாழ்வினை தரும். பால், தயிர், பால் பொருட்கள், பீட்ருட், எள், முட்டைக்கோஸ், புரோக்கோலி, திராட்சை, மாதுளை, முட்டை, மீன், கோழி, காடை, இறைச்சி வகைகள், வெந்தயக்கீரை, முருங்கைக் கீரை, பாலக்கீரை, கொத்தமல்லி தழை, சோயாபீன், பிரண்டை தண்டு, எலும்பொட்டி கீரை, அத்திப்பழம், பேரிட்சை, கேழ்வரகு, கம்பு, கருப்பு உளுந்து, முந்திரி, பாதாம், பிஸ்தா இவை அனைத்தும் கால்சியம் சத்துக்கள் நிறைந்த உணவுப்பொருட்கள் ஆகும். இவற்றை அதிகமாக உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
தினமும் அதிகாலை வெயில் அல்லது மாலை இளவெயிலில் சிறிது நேரம் நடக்கலாம். இது உடலுக்கு தேவையான வைட்டமின் டி கிடைக்க உதவும்.
வைட்டமின் டி சரியான அளவில் இருந்தால் தான் கால்சியம் உடம்பில் சேரும்.

பால் சார்ந்த பொருட்கள் மற்றும் பால் சாப்பிடுவதில் ஒவ்வாமை உள்ளவர்கள் சோயா பால், பீன்ஸ், பாதாம் பால், சாப்பிட்டு வந்தால் தினசரி தேவையான ஒரு கிராம் கால்சியம் நம் உடலுக்கு கிடைத்துவிடும்.
கொள்ளில் சோயாவுக்கு இணையான கால்சியம் உள்ளது. எலும்பு உறுதிக்கு கொள்ளு ரசம் மிகவும் நன்று. எலும்பை உறுதிப்படுத்தி தேவையற்ற கொழுப்பு சதையை குறைக்கும். கொள்ளு 10 கிராம், மிளகு, சீரகம் கொத்தமல்லி, பூண்டு, புளி அல்லது தக்காளி தேவையான அளவு எடுத்து ரசமாக வைத்து குடிக்கவும்.
ஒருகிராம் குங்குமப்பூவை 100 மிலி தேங்காய் எண்ணெயில் நன்கு கொதிக்கவைத்து வடிகட்டி அதை இரண்டு துளி உட்கொண்டு உடம்பில் தேய்த்தும் மாலை இளவெயிலை நடைபயிற்சி செய்து வந்தால் வைட்டமின் டி உடலில் எளிதில் உட்கிரகிக்கப்படும்.
எலும்பொட்டிக்கீரை என்பது ஒரு வகை கொடி வகை தாவரம். இந்த செடியின் இலையை பாலுடன் நன்கு அரைத்து காலை, மாலை இருவேளையும் ஒரு நெல்லிக்காய் அளவு எடுத்து உணவுக்கு முன்போ அல்லது பின்போ சாப்பிட வேண்டும்.
பிரண்டைத் தண்டில் ஏராளமான கால்சியம், பாஸ்பரஸ் படிம வடிவில் உள்ளதால் இதை புளி சேர்த்து உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இல்லை என்றால் தொண்டை காறல் ஏற்படும். ஆகவே பிரண்டையை நல்லெண்ணெய் விட்டு வதக்கி, புளி சேர்த்து துவையல் செய்து சாப்பிட்டு வர வேண்டும்.
சித்த மருத்துவம்
பவள பற்பம், முத்துப் பற்பம், முத்துச்சிப்பி, பற்பம், சங்கு பற்பம், பகரை பற்பம், நத்தை பற்பம் போன்றவை எலும்பு சார்ந்த பிணிகளுக்கு நல்ல பலனை தரும். இவற்றை சித்த மருத்துவரின் ஆலோசனை படி எடுத்துக்கொள்ளலாம்.






