search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hair Care"

    • ஆளிவிதை ஜெல்லை ஹேர் மாஸ்க் அல்லது கண்டிஷனராகப் பயன்படுத்தலாம்.
    • ஆளிவிதைகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்து காணப்படுகிறது.

    சருமம் மற்றும் முடி ஆரோக்கியத்தை மேம்படுத்த ஆளிவிதை ஜெல் பெரிதும் உதவுகிறது. இந்த ஜெல்லை பயன்படுத்து முறைகள் குறித்து பார்க்கலாம்.

    இன்றைய காலகட்டத்தில் மோசமான வாழ்க்கை முறை, ஆரோக்கியமற்ற உணவுமுறைகள் போன்றவற்றால் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறோம். இதில் சருமம் மற்றும் முடி சார்ந்த பிரச்சனைகளும் அடங்கும். முடி வறட்சி, முடி உதிர்தல், முடி உடைதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.


    இயற்கையான பொருட்களை தேர்வு செய்து பயன்படுத்துவதன் மூலம் முடி ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். இதற்கு ஆளிவிதை ஜெல் பெரிதும் உதவுகிறது

    ஆளி விதைகள் உடல் நலத்தைக் காப்பது மட்டுமல்லாமல், அழகு மற்றும் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும் வகையில் உதவுகிறது. இதில் வைட்டமின் பி மற்றும் ஈ, மக்னீசியம், இரும்பு மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் போன்றவை நிறைந்துள்ளது. இவை முடி மற்றும் சரும ஆரோக்கியத்தை கணிசமாக மேம்படுத்த உதவுகிறது.


    ஆளிவிதை ஜெல்லின் நன்மைகள்

    ஆளி விதை ஜெல் மயிர்க்கால்களுக்கு ஊட்டமளிப்பதன் மூலம் முடியை வேகமாகவும், நீளமாகவும் வளர உதவுகிறது. இதில் உள்ள வைட்டமின் ஈ ஊட்டச்சத்துக்கள் உச்சந்தலையில் ஊட்டச்சத்தை அளிக்கவும், ஃப்ரீ ரேடிக்கல் சேதத்தை குறைக்கவும் உதவுகிறது.

    இதற்கு ஆளிவிதை ஜெல்லை முடிக்கு பயன்படுத்தும் முன்னும், பின்னும் முடி வளர்ச்சியைக் கண்காணித்து வித்தியாசத்தைக் கவனிக்கலாம். ஆளிவிதை ஜெல்லை ஹேர் மாஸ்க் அல்லது கண்டிஷனராகப் பயன்படுத்தலாம்.

    உச்சந்தலை வீக்கத்தைக் குறைக்க

    ஆளிவிதைகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்து காணப்படுகிறது. மேலும், இதில் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் நிறைந்துள்ளது. இவை அழற்சி உறுப்பு மாற்றத்தைத் தடுக்க உதவுவதாக ஆராய்ச்சியில் கூறப்பட்டுள்ளது. எனவே, ஆளிவிதை ஜெல்லை உச்சந்தலையில் பயன்படுத்துவது உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது.


    சுருள் முடிக்கு ஆளிவிதை ஜெல்

    ஆளிவிதைகளில் உள்ள வைட்டமின் ஈ ஒரு பிரபலமான ஆக்ஸிஜனேற்ற மாய்ஸ்சரைசராக செயல்படுகிறது. இது முடிக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துச் செயல்பட்டு சுருள் முடியை நிர்வகிக்க உதவுகிறது. எனவே இது இயற்கையாகவே சுருள் முடிக்கு மிகுந்த நன்மை பயக்கும். சுருள் முடிகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஆளிவிதை ஜெல்லைப் பயன்படுத்தலாம்.

    நரைமுடியை தடுக்கிறது

    ஆளிவிதைகளில் வைட்டமின் ஈ, மெக்னீசியம், மாங்கனீசு போன்ற ஊட்டமளிக்கும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதால், இது ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்தை குறைக்க உதவுகிறது. இது முடி உதிர்தல், முடி முதுமை அடைவது, முடி நரைத்தல் போன்ற பிரச்சனைகளைத் தடுக்கிறது. 

    • வெங்காயத்தில் கந்தகம் நிறைந்துள்ளது.
    • இயற்கையான வைத்தியங்களைக் கையாள்வது நல்லது.

    இன்றைய காலகட்டத்தில் ஆரோக்கியமற்ற உணவுமுறை காரணமாக பலரும் பலதரப்பட்ட பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இதில் தலைமுடி சார்ந்த பிரச்சனைகளும் அடங்கும்.

    முடி உதிர்வு, வறட்சியான முடி, நுனி முடி பிளவு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் எழுகிறது. ஆனால் இது போன்ற பிரச்சனைகளுக்கு பலரும் கடைகளில் விற்பனை செய்யப்படும் முடி பராமரிப்பு பொருள்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். எனினும், இதில் சில சமயங்களில் ரசாயனங்கள் கலந்திருப்பதால் முடி ஆரோக்கியத்தைப் பாதிக்கலாம்.

    தலை முடி ஆரோக்கியத்திற்கு இயற்கையான வைத்தியங்களைக் கையாள்வது நல்லது. அந்த வகையில், முடி வளர்ச்சியை ஆதரிக்கவும், முடி ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் வெங்காயத்தை பயன்படுத்தலாம்.

    அன்றாடம் நாம் உணவில் சேர்க்கப்படும் உணவுப்பொருளான வெங்காயம் முடி பராமரிப்புக்கு அற்புதமான நன்மைகளையும் வழங்குகிறது. இதில் தலைமுடியை ஆரோக்கியமாக வைப்பதற்கு வெங்காய ஹேர் மாஸ்க் தயார் செய்யும் முறை மற்றும் அதன் நன்மைகளை பார்க்கலாம்.


    தலைமுடிக்கு வெங்காய ஹேர் மாஸ்க் உதவுமா?

    வெங்காயத்தில் கந்தகம் நிறைந்துள்ளது. இது உச்சந்தலையை சுத்தப்படுத்தவும், முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும் உதவுகிறது. இந்த இயற்கையான மூலப்பொருள் முடி இழைகளுக்கு ஊட்டமளித்து, பலப்படுத்துகிறது.

    மேலும் இது ஒட்டுமொத்த உச்சந்தலையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. தலைமுடிக்கு வெங்காயத்தைப் பயன்படுத்துவது முடி அமைப்பை மேம்படுத்தவும் மற்றும் முடி உதிர்தலை எதிர்த்துப் போராடுவதற்கும் உதவுகிறது.

    வெங்காயத்தில் வைட்டமின் சி, பி9, பி6 மற்றும் பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இது உச்சந்தலையில் ஏற்படும் எரிச்சல், பூஞ்சை வளர்ச்சி மற்றும் தொற்றுநோய்களுக்கு சிகிச்சையளிக்கிறது. இதற்கு வெங்காய சாறு அல்லது வெங்காய எண்ணெயை தலைமுடிக்கு பயன்படுத்தலாம்.

    இந்த வெங்காய ஹேர் மாஸ்க்கைத் தலைமுடிக்கு பயன்படுத்துவது முடி இழைகளுக்கு மென்மையான பிரகாசத்தைத் தருகிறது. இதில் வெங்காய ஹேர் மாஸ்க் தயார் செய்வதற்கான முறைகளைக் காணலாம்.


    வெங்காயச் சாறு, கற்றாழை ஹேர் மாஸ்க்:

    இந்த ஹேர் மாஸ்க்கிற்கு 2 தேக்கரண்டி அளவிலான கற்றாழை ஜெல்லை 2 தேக்கரண்டி வெங்காய சாறுடன் சேர்க்க வேண்டும்.

    பின்னர் இந்த கலவையை முடி மற்றும் உச்சந்தலையில் தடவ வேண்டும். இதை 30-40 நிமிடங்கள் வைத்து, பிறகு தலைமுடியைக் கழுவ வேண்டும்.

    இதற்கு வெங்காயம் சேர்க்கப்பட்ட ஷாம்பு மற்றும் கண்டிஷனரை தேர்வு செய்யலாம். இந்த ஹேர் மாஸ்க்கை வாரத்திற்கு இரு முறை பயன்படுத்தலாம்.


    வெங்காயச் சாறு, தேங்காய் எண்ணெய் ஹேர் மாஸ்க்:

    தேங்காய் எண்ணெயுடன் வெங்காயச் சாறு சேர்க்கப்பட்ட ஹேர் மாஸ்க் முடியின் இழைகளை நீரேற்றம் செய்ய வேண்டும்.

    இதற்கு தேங்காய் எண்ணெயை சிறிது சூடாக்கி, அதில் 2 தேக்கரண்டி அளவிலான வெங்காயச் சாறு சேர்க்கலாம்.

    இப்போது இந்த கலவையை முடியில் தடவி, குறைந்தது 30 நிமிடங்கள் வைத்துக் கொள்ளலாம்.

    பின்னர் ஷாம்பு மற்றும் கண்டிஷனரைக் கொண்டு தலைமுடியை அலசலாம். வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தலாம்.


    வெங்காய சாறு, தேன் ஹேர் மாஸ்க்:

    இந்த ஹேர் மாஸ்க் பயன்படுத்துவது முடியின் ஈரப்பதத்தைத் தக்கவைத்து, இயற்கையான கண்டிஷனராக செயல்பட்டு, முடியின் மயிர்க்கால்களை பலப்படுத்துகிறது. எனவே இது முடி சேதம் மற்றும் வறட்சியைத் தடுக்க உதவுகிறது.

    இதற்கு ஒரு தேக்கரண்டி அளவிலான தேனுடன் அரை கப் புதிய வெங்காய சாற்றை சேர்த்து ஹேர் மாஸ்க்கை உருவாக்கலாம்.

    இதை முடி மற்றும் உச்சந்தலையில் தடவி மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். முடியில் இந்த கலவையை 15 நிமிடங்கள் வைத்து, பிறகு லேசான ஷாம்பு மற்றும் கண்டிஷனர் கொண்டு கழுவ வேண்டும். இந்த கலவையை வாரம் ஒரு முறை பயன்படுத்தலாம்.

    இஞ்சி, வெங்காய சாறு ஹேர் மாஸ்க்:

    இந்த ஹேர் மாஸ்க்கானது அழற்சி எதிர்ப்பு மற்றும் ரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. இது முடி வளர்ச்சிக்கு ஏற்றதாகும்.

    இந்த கலவையைத் தயார் செய்ய இஞ்சி மற்றும் வெங்காயச் சாற்றை சம அளவு எடுத்து நன்கு கலக்கி தலைமுடிக்குத் தடவலாம்.

    பின்னர் இதை உச்சந்தலையில் தடவி நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். பிறகு இதை மிதமான ஷாம்பு மற்றும் கண்டிஷனர் கொண்டு கழுவும் முன், சுமார் ஒரு மணி நேரம் வைக்க வேண்டும்.

    நாள்தோறும் இந்த ஹேர் பேக்கைப் பயன்படுத்தலாம்.

    இவ்வாறு முடியை ஆரோக்கியமாக வைக்கவும், முடி வளர்ச்சியை ஆதரிக்கவும் இது போன்ற பல்வேறு வழிகளில் வெங்காய ஹேர் மாஸ்க்கை பயன்படுத்தலாம்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இரவில் தலைக்குக் குளிப்பது தற்காலிக புத்துணர்ச்சியை அளிக்கலாம்.
    • காலையில் தலைக்கு குளிக்கும் வழக்கத்தை பின்பற்றுவதே நல்லது.

    தற்போது பல பெண்கள், அலுவலகம் முடிந்து வீடு திரும்பிய பிறகு தலைக்கு குளிப்பது புத்துணர்ச்சி அளிப்பதாக நினைக்கிறார்கள். அதனால் பெரும்பாலானோர் தூங்குவதற்கு முன் தலைக்கு குளிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.


    இரவில் தலைக்கு குளிக்கும்போது, நிம்மதியான, ஆழ்ந்த உறக்கம் வரும் என்பது சில பெண்களின் எண்ணமாக இருக்கிறது. ஆனால், இரவில் தலைக்கு குளிக்கும் வழக்கம் சரிதானா? இந்த கேள்விக்கு பதில், 'இல்லை' என்பதே.

    இரவில் தலைக்கு குளிப்பது, தலைமுடியை சேதப்படுத்துகிறது, முடி உதிர்வுக்கு காரணமாகிறது என்கிறார்கள் நிபுணர்கள். இரவில் தலைமுடியை கழுவுவதை தவிர்க்க வேண்டும் என்று அவர்கள் பரிந்துரைக்கிறார்கள். அவர்கள் கூறும் பிற காரணங்கள்...


    கூந்தல் பலவீனம்

    பெண்கள் இரவில் தலைமுடியை அலசுவதால், அவர்கள் ஈரமான கூந்தலுடன் படுக்கைக்குச் செல்லும் நிலை ஏற்படுகிறது. இது முடியை எளிதில் உடையக்கூடியதாக மாற்றுகிறது. நீரின் செயல்பாட்டின் காரணமாக, தலைமுடியின் தண்டை பாது காக்கும் வேர்களின் கெரட்டின் செதில்கள் தளர்ந்து, பாதுகாப்பு தடை பலவீனம் அடை கிறது.

    தலைமுடியில் நுண்துளைகள் ஏற்படுகின்றன. முடிக்கு ஏற்படும் சேதங்களை அதிகரிக்கின்றன. பொடுகு பிரச்சனை கூடுகிறது. ஈரமான முடியுடன் படுக்கைக்குச் செல்வது, உச்சந்தலையில் ஈரப்பதத்தை அதிகரிக்கிறது. இது எரிச்சல், சிவத்தல் உள்ளிட்ட பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். மேலும் இரவில் வெள்ளை செதில்கள் மற்றும் பொடுகு வளர்ச்சியை ஊக்குவிக்கும்.


    முடி உதிர்வு

    பொதுவாகவே தலைக்கு ஷாம்பு போட்டு குளித்த பின் அதிக முடி உதிர்வை நாம் காண்கிறோம். இந்த நிலையில் இரவில் தலைக்குக் குளிக்கும்போது ஈரமான கூந்தலுடன் படுக்கைக்குச் செல்வதால், முடிகளில் நார்ச்சத்து இழப்பு ஏற்படுகிறது. தலையணையில் உராய்தல் பிரச்சனை. காலையில் முடி உதிர்வதை ஊக்குவிக்கும். மேலும் சிக்கு மற்றும் முடி உடைவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும்.

    முடியின் தரம் குறையும்

    தூங்குவதற்கு முன் குளித்தால், காலையில் சுத்தமான, பளபளப்பான கூந்தலை நாம் பெறுவோம் என்று நீங்கள் நினைத்தால் அது முற்றிலும் தவறாகும். அதிக ஈரப்பதம் மற்றும் ஈரமான இழைகள் காரணமாக உங்கள் தலைமுடி இரவிலேயே வழுவழுப்பானதாக மாறிவிடும். அடுத்த நாள் காலையில் தலைமுடி பிசுபிசுவென்று இருக்கும்.


    பிற பிரச்சனைகள்

    இரவில் தலைக்குக் குளிப்பது தற்காலிக புத்துணர்ச்சியை அளிக்கலாம். ஆனால் அதனால் ஏற்படும் பிரச்சனைகள் அதிகம். இது உங்கள் முடி இழைகள் மற்றும் உச்சந்தலையில் சேதத்தை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், ஈஸ்ட் மற்றும் பூஞ்சைத் தொற்று போன்றவற்றுக்கும் உடனடியாக வழிவகுக்கும். இந்த ஈரப்பதம் பூஞ்சைகள் மற்றும் சிறிய பூச்சிகள் இனப்பெருக்கம் செய்ய உகந்த சூழலை ஏற்படுத்தும். இந்த பாதிப்புகளை தவிர்க்க, காலையில் தலைக்கு குளிக்கும் வழக்கத்தை பின்பற்றுவதே நல்லது.

    தவிர்க்க முடியாமல் இரவு நேரத்தில் குளிக்க நேர்ந்தால் அல்லது இதுதான் எனக்கு வசதியாக இருக்கிறது என்று நீங்கள் கூறினால், தலைமுடியை நன்கு உலர்த்திய பின்பே படுக்கைக்குச் செல்லுங்கள்.

    • கூந்தலை நேராக்க உதவும் வீட்டு வைத்திய முறைகள்.
    • போதிய ஊட்டச்சத்து இல்லாததால் தலைமுடி பாதிப்படைகிறது.

    இன்றைய காலகட்டத்தில் ஆரோக்கியமற்ற உணவுமுறை மற்றும் மோசமான வாழ்க்கை முறை காரணமாக பலரும் பல பிரச்சனைகளை சந்திக்கின்றனர். போதிய ஊட்டச்சத்து இல்லாமை பராமரிப்பு இல்லாதது போன்றவை தலைமுடி ஆரோக்கியத்தை பாதிக்கிறது.

    இதுதவிர முடியை நேராக்குவதற்கு பலரும் ஸ்ட்ரெய்ட்னரை பயன்படுத்துகின்றனர். முடியை நேராக்குவதற்கு அதிக வெப்பம் பயன்படுத்தப்படுகிறது. ஆனாலும் இது நீண்ட நாட்களுக்கு பலன் அளிக்காது.


    இயற்கையாகவே வீட்டில் நாம் பயன்படுத்தும் பொருட்களை வைத்தே தலைமுடியை ஸ்ரெய்ட்னிங் செய்யலாம். இதில் முடியை நேராக்கவும், முடி சார்ந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடவும் வீட்டு வைத்திய முறைகள் உதவுகின்றன. அந்த வகையில் தலைமுடியை சேதப்படுத்தாமல் நீண்ட நேரான கூந்தலுக்கு உதவும் சில வீட்டு வைத்திய குறிப்புகளை பார்க்கலாம்.


    கற்றாழை ஹேர் மாஸ்க்

    தலைமுடிக்கு கற்றாழை பயன்படுத்தும் போது அது தலைமுடி வளர்ச்சிக்கு உதவுகிறது. தலை முடியை மிருதுவாக்குகிறது.

    முதலில் அரை கப் வெதுவெதுப்பான எண்ணெய் மற்றும் அரை கப் கற்றாழை எடுத்துக்கொள்ள வேண்டும். இவை இரண்டையும் கலந்து தலைமுடிக்கு தேய்த்து 30 முதல் 40 நிமிடங்கள் வரை வைத்து பின்னர் கழுவலாம்.


    வாழைப்பழ ஹேர் பேக்

    வாழைப்பழம், தயிர், ஆலிவ் எண்ணெய் போன்ற 3 பொருட்கள் அனைத்துமே இயற்கை கண்டிஷனர்களால் நிரம்பியதாகும். நன்றாக பழுத்த வாழைப்பழங்களுடன் ஆலிவ் எண்ணெய், தயிர் மற்றும் தேன் கலந்து பிசைந்து பேஸ்ட் பதத்திற்கு செய்ய வேண்டும். இந்த ஹேர் மாஸ்க்கை தலைமுடியில் பூசி சிறிது நேரம் கழித்து வாஷ் செய்ய வேண்டும்.


    பால் மற்றும் தேன் ஹேர் மாஸ்க்

    பால் புரதச்சத்து நிறைந்தது என்பதால் இது தலைமுடியை மென்மையாக்குகிறது. முடியின் தண்டையும் பலப்படுத்துகிறது. பாலுடன் தேன் கலந்து தலையில் தேய்த்து சுமார் 2 அல்லது 3 மணிநேரம் கழித்து கழுவலாம்.


    முட்டை, ஆலிவ் ஆயில்:

    முட்டையும், ஆலிவ் ஆயிலும் தலைமுடிக்கு ஊட்டமளித்து நன்மைகளை அளிக்கிறது. இது தலைமுடியை நேராக்குவதற்கு உதவுகிறது. 2 முட்டை மற்றும் ஆலிவ் எண்ணெய் ஊற்றி கலந்து உச்சந்தலையில் தடவ வேண்டும். இதனை ஒரு மணிநேரம் அப்படியே வைத்திருந்து பின்னர் வாஷ் செய்யலாம். இந்த ஹேர் மாஸ்க் தலைமுடியை நேராக்கவும், மென்மையாக்கவும் உதவுகிறது.


    விளக்கெண்ணெய் ஹேர் மாஸ்க்

    முதலில் விளக்கெண்ணெயை சூடாக்கி தலையில் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் இதை சுற்றி சூடான அல்லது ஈரமான துண்டை தலையில் போர்த்தி அரைமணிநேரம் கழித்து மென்மையான ஷாம்பு போட்டு வாஷ் செய்ய வேண்டும்.

    • அதிக ரசாயனங்கள் கலந்த ஷாம்புவை பயன்படுத்தினால் முடி உதிர்வு அதிகரிக்கக் கூடும்.
    • பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனைகள் இருந்தால் முடி உதிர்வு ஏற்படக் கூடும்.

    குளிக்கும் போது முடி உதிர்வது என்பது பலருக்கும் இருக்கும் பிரச்சனை. இதற்கு வீட்டில் இருக்கும் பொருட்கள் கொண்டே எளிதில் தீர்வு காண முடியும்.

    முடி உதிர்வு பிரச்சனையை சந்திக்காதவர்கள் கூட தலைமுடியையை தேய்த்து குளிக்கும் போது முடி உதிருவதை பார்த்திருப்பார்கள்.


    பலர் தலைமுடியை கட்டிக்கொண்டு குளிக்கச் செல்வார்கள். தண்ணீரில் முடியை நனைத்த பிறகு அவிழ்த்து விடுவார்கள். இதனால் கூந்தல் உதிரும் அபாயம் அதிகம் உண்டு. எனவே குளிப்பதற்கு முன் தலைமுடியை சீப்பு வைத்து சீவி சிக்குகளை அகற்றிவிட்டு தேய்த்து குளிக்கும் போது முடி உதிர்வை தவிர்க்க முடியும்.

    சிலர் அதிக விசையுள்ள ஷவர் அல்லது ஓடும் தண்ணீரான ஆறு குளங்களில் தலைக்கு குளிப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள். இதுபோன்ற நேரங்களில் முடியின் வேர்கள் வலுவிழக்க நேரிடும். குறிப்பாக முடியின் மயிர்க்கால்கள் பலவீனமாக இருப்பவர்களுக்கு முடி உதிர்வு பிரச்சனை இருமடங்காக அதிகரிக்க வாய்ப்புள்ளது.

    தலைமுடியை சுத்தம் செய்யும் போது ஷாம்பு போட்டு சுத்தம் செய்வதுண்டு. குறிப்பாக ரசாயனங்கள் அடங்கிய ஷாம்புகளை அதிக அளவில் பயன்படுத்தும் போது முடி வறட்சி அடைந்து முடி உதிர்வு பிரச்சனை ஏற்படுகிறது.

    மேலும் ஷாம்புவுடன் கண்டிஷனரை பயன்படுத்தாமல் இருந்தாலும் முடி உதிர்வு பிரச்சனை ஏற்படும். குறிப்பாக வறண்ட கூந்தலை உடையவர்கள் கண்டிஷனர் பயன்படுத்தாவிட்டால் முடி உடைதல், முடி உதிர்வு பிரச்சனைகள் ஏற்படும்.

    பலர் தலைக்கு குளிப்பதையே மிகவும் அலட்சியமாக இருப்பார்கள், தலைக்கு குளித்த பிறகு ஈரத்தை உறிஞ்சுவதற்கு டவலால் வேகமாக உதறுவது, தட்டுவது போன்றவற்றை செய்வார்கள். இப்படி கூந்தலை மிகவும் கடினமாக கையாளும் போது முடி பலவீனம் அடைந்து உதிர்கிறது.


    முடி உதிர்வுக்கான காரணங்கள்:

    * போதிய ஊட்டசத்து உங்கள் உணவில் இல்லையென்றால், முடி உதிர்வு ஏற்படக் கூடும். ஜின்க், செம்பு, புரதம் மற்றும் இரும்பு சத்து உங்கள் உணவில் நிச்சயம் இருக்க வேண்டும்.

    * வைட்டமின் டி குறைபாட்டால் முடி உதிர்வு ஏற்படும்.

    * உடலில் ஹார்மோன்கள் சரியாக சுரக்காமல் போனாலும் முடி உதிர்வு ஏற்படும்.

    * தைராய்டு பிரச்சனை இருப்பவர்களுக்கு முடி உதிர்வு ஏற்படக் கூடும்.


    * பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனைகள் இருந்தால் முடி உதிர்வு ஏற்படக் கூடும்.

    * கர்ப்பத்தடை மாத்திரைகளை அதிகம் பயன்படுத்தினால் முடி உதிர்வு ஏற்படும்.

    * இருதய நோய், ரத்த அழுத்தம், மன அழுத்தம் ஆகிய காரணங்களால் முடி உதிர்வு ஏற்படும்.

    * அதிக ரசாயனங்கள் கலந்த ஷாம்புவை பயன்படுத்தினால் முடி உதிர்வு அதிகரிக்கக் கூடும்.

    * புற்றுநோய், குடல் நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளுக்கு மருந்து எடுத்துக் கொண்டிருந்தால், தலைமுடி உதிர்வு ஏற்படக் கூடும்.

    * கதிர்வீச்சு சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தாலும், தலைமுடி உதிர்வு ஏற்படும்.

    * சரியான முறையில் தலைமுடியை பராமரிக்கவில்லை என்றாலும், முடி உதிர்வு ஏற்படும்.

    * வயதாவதால் முடி உதிர்வு ஏற்படும்.

    * உடல் எடை குறைவு காரணமாக முடி உதிர்வு ஏற்படும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால் முடி சார்ந்த பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர்.
    • உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது.

    இன்றைய மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவுமுறை காரணமாக பலரும் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கின்றனர். குறிப்பாக, போதிய ஊட்டச்சத்து இல்லாமை மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால் முடி சார்ந்த பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர்.

    இதில் முடி உதிர்வு, வறண்ட முடி, பொடுகு பிரச்சனை, நுனி முடி பிளவு உள்ளிட்ட பல்வேறு முடி பிரச்சனைகள் எழுகின்றன. அந்த வகையில் மீன் எண்ணெய் முடி ஆரோக்கியத்திற்கு பெரிதும் பங்களிக்கிறது.

    மீன் எண்ணெய் என்பது கானாங்கெளுத்தி, மத்தி, சால்மன் போன்ற கொழுப்பு நிறைந்த மீன்களின் திசுக்களில் இருந்து பெறப்படுகிறது. இதில் நல்ல அளவிலான ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளது.

    குறிப்பாக டோகோசாஹெக்ஸெனோயிக் (டிஹெச்ஏ), ஈகோசாபென்டேனோயிக் (இபிஏ) போன்றவை உள்ளது. இந்த ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் அவசியமானதாகக் கருதப்படுகிறது.


    மீன் எண்ணெயில் உள்ள நன்மைகள்:

    சருமம் மற்றும் முடி இரண்டின் ஆரோக்கியத்திற்கும் மீன் எண்ணெய் உதவுகிறது. சருமத்திற்கு மீன் எண்ணெயை பயன்படுத்துவது சருமத்தில் ஏற்படும் வறட்சி மற்றும் முகப்பருவைச் சமாளிக்க உதவுகிறது.

    ஆய்வு ஒன்றில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் போன்ற சப்ளிமென்ட்ஸைப் பயன்படுத்துவது முடி அடர்த்தியில் பங்களிக்கிறது.

    ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் உச்சந்தலையில் ஏற்படும் வீக்கத்தைக் குணமாக்கவும், குறைக்கவும் உதவுகிறது. மேலும் இவை முடி வளர்ச்சிக்கு ஆரோக்கியமான சூழலை உருவாக்குகிறது.

    இந்த அமிலங்கள் ஆரோக்கியமான உச்சந்தலையை பராமரிப்பதற்கு பங்களிக்கிறது. இவை முடிக்கு நன்கு ஊட்டமளிப்பதுடன் பொடுகு அல்லது அதிகப்படியான வறட்சி போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட வைக்கிறது.

    ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. இந்த அதிகரித்த ரத்த ஓட்டம் முடியின் மயிர்க்கால்களுக்கு அதிக ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்சிஜனை வழங்குகிறது. இவை ஆரோக்கியமான மற்றும் வலுவான முடியின் வளர்ச்சியை அதிகரிக்க உதவுகிறது.

    இது போன்று மீன் எண்ணெய்களை பயன்படுத்துவது முடியின் அமைப்பை மேம்படுத்தி, முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது.

    • முகத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்கும்.
    • அரிசி கழுவிய நீரினால் முடியின் நிறமும் பாதுகாக்கப்படும்.

    அரிசி கழுவிய நீரின் பயன்கள்:

    அரிசி கழுவு போது அந்த தண்ணீரை வீணாக்காமல் சருமத்தை அழகு படுத்துவதற்கு பயன்படுத்தலாம். அரிசி கழுவிய நீரால் முடி பாதிக்கப்படுவது தடுக்கப்படுவதாக ஆய்வுகளின் மூலம் தெரிய வந்துள்ளது.

    அரிசியை சுத்தமான நீரில் 1/2 மணி நேரம் ஊறவைத்து, பிறகு நன்றாக 2 முறை கழுவிக்கொள்ள வேண்டும். பின்னர் அந்த நீரை ஒரு துணியால் வடிகட்டவேண்டும். அந்த நீரால் முகத்தையும், கூந்தலையும் அலசினால் அரிசி கழுவிய நீரில் உள்ள சத்துக்கள் சருமத் துளைகளின் வழியே சரும செல்களுக்கு கிடைக்கும். இதனால் முகத்தில் உள்ள சுருக்கங்கள் அனைத்தும் நீங்குவதோடு, சருமமும் பொழிவுடன் காணப்படும்.

    அதற்கு தினமும் ஒவ்வொரு முறை முகத்தைக் கழுவும் போதும், அரிசி கழுவிய நீரினால் கழுவ வேண்டும். கூந்தல் அதிக வறட்சியுடன் மென்மையின்றி இருந்தால், அப்போது அரிசி கழுவிய நீரைக் கொண்டு கூந்தலை அலசி, சிறிது நேரம் ஊற வைத்த பிறகு சுத்தமான குளிர்ந்த நீரில் கூந்தலை அலச வேண்டும். இதனால் கூந்தலின் மென்மைத்தன்மை அதிகரிக்கும். மேலும் முடியின் நிறமும் பாதுகாக்கப்படும்.

    இந்நீரில் கார்போஹைட்ரேட்டுகளும், ஊட்டச்சத்துகளும் வளமாக நிறைந்துள்ளதால் இதனை குடிப்பதன் மூலம் உடலுக்கு ஆற்றல் கிடைக்கும்.

    • செம்பருத்தி எண்ணெயில் வைட்டமின் சி நிறைந்துள்ளது.
    • செம்பருத்தி எண்ணெயை தொடர்ந்து தேய்த்து வந்தால் இளநரை மாறி மீண்டும் கருமையாக மாறிவிடும்.

    செம்பருத்தி மருத்துவ குணம் நிறைந்தது. இதன் மலர் மற்றும் இலை இரண்டுமே தலைமுடிக்கு பல அற்புதங்களைச் செய்யும். தலைமுடியின் வளர்ச்சியில் இருந்து இளநரையைத் தடுப்பது வரை செம்பருத்தியை பயன்படுத்தலாம்.

     முடியை வலிமையாக்க:

    செம்பருத்தி எண்ணெயில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. மேலும் பாஸ்பரம் சத்தும் நிறைந்து இருப்பதால் இவை இரண்டும் சேர்ந்து முடியின் வேர்க்களை உறுதியாக்கும்.

    அதிகமாக வறட்சியடைந்து frizzy ஆக இருக்கும் முடியை மாற்றி வறட்சியைக் குறைக்கும்.

    முடி உதிர்வை தடுக்க:

    முடியின் வேர்க்களுக்குப் போதிய அளவு ஊட்டச்சத்துக்கள் கிடைக்கததால் முடியின் வேர்க்களில் பலத்தை இழக்கும்.

    இதன் விளைவாக தலைமுடி உதிர்தல் பிரச்சினை அதிகரிக்கும். அதற்கு செம்பருத்தி எண்ணெயை பயன்படுத்தினால் முடிக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும் முடி உதிர்வை தடுக்கும்.

    இளநரையை மாற்ற:

    இன்றைய உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களால் இளம் வயதிலேயே இளநரை பிரச்சினை வந்துவிடுகிறது.

    ஒருமுறை வெள்ளை முடி வந்துவிட்டால் அதை மாற்றவே முடியாது என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் செம்பருத்தி எண்ணெயை தொடர்ந்து தேய்த்து வந்தால் இளநரை மாறி மீண்டும் கருமையாக மாறிவிடும்.

    முடி பளபளக்க:

    தொடர்ச்சியாக செம்பருத்தி எண்ணையை தலைமுடிக்குப் பயன்படுத்தி வந்தால் அது மிகச்சிறந்த கண்டிஷனராக மாறி இயற்கையாகவே தலைமுடியை வறட்சி இல்லாமல் பளபளவென்று மாற்றும் ஆற்றல் கொண்டது.

    செம்பருத்தி எண்ணெயில் உள்ள வைட்டமின் ஈ முடிக்கு ஊட்டச்சத்தைக் கொடுத்து சில்க்கியாகவும் மாறும்.


    முடி வளர்ச்சியை அதிகரிக்க:

    தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க ஆயில் மசாஜ் மிகச்சிறந்த வழி.

    அதிலும் குறிப்பாக செம்பருத்தி ஆயிலை லேசாக சூடு படுத்தி வெதுவெதுப்பான நிலையில் தலையின் வேர்க்களில் அப்ளை செய்து நன்கு மசாஜ் செய்து வந்தால் முடியின் வளர்ச்சி அதிகரிக்கும்.

    இந்த செம்பருத்திலுள்ள ஆற்றல் வாய்ந்த அமினோ அமிலங்கள் வேர்க்களை வலுவாக்கி முடியின் வளர்ச்சியை வேகமாக அதிகரிக்கும்.

    எந்த நேரத்தில் பயன்படுத்துவது சிறந்தது:

    தலைக்கு எண்ணெய் தேய்த்தாலே முடி வளர்ந்து விடும் என்று அர்த்தமல்ல. முடிக்கு எண்ணெயை எப்படி பயன்படுத்துகிறோம்? எந்த நேரத்தில் பயன்படுத்துகிறோம் என்பது மிக முக்கியம் விஷயம்.

    இந்த செம்பருத்தி எண்ணையை இரவு நேரத்தில் முடியில் தேய்த்து, மசாஜ் செய்து கொண்டு படுப்பது நல்லது. காலையில் தலைக்கு வழக்கம் போல ஷாம்பு பயன்படுத்திக் குளித்து விடலாம்.

    இரவில் அப்ளை செய்ய முடியாதவர்கள் குளிப்பதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பு அப்ளை செய்து விட்டு பிறகு வழக்கம் போல ஷாம்பு பயன்படுத்திக் கொள்ளலாம்.

    தினமும் இரவு இந்த எண்ணெயை தேய்த்து, மசாஜ் செய்து வந்தால் மிக வேகமாக உங்களால் பலன்களை பார்க்க முடியும்.

    • ஒவ்வொரு எண்ணெய்யும் ஒவ்வொருவிதமான பண்புகளை கொண்டிருக்கின்றன.
    • உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது.

    பெண்கள் சரும பராமரிப்புக்கு அடுத்தபடியாக கூந்தல் நலனை பேணுவதற்குத்தான் முன்னுரிமை கொடுப்பார்கள். கூந்தல் முடி நீளமாக வளர வேண்டும் என்பதுதான் அவர்களின் விருப்பமாக இருக்கும். ஆனால் அதற்கு மாறாக முடி உதிர்வு பிரச்சினையை பலரும் எதிர்கொள்கிறார்கள்.

    இந்த பிரச்சனைகளுக்கு எண்ணெய்கள் தீர்வாக அமைகின்றன. ஒவ்வொரு எண்ணெய்யும் ஒவ்வொருவிதமான பண்புகளை கொண்டிருக்கின்றன. அவற்றின் பயன்பாடு பற்றி பார்ப்போம்.

    தேங்காய் எண்ணெய்

    தேங்காய் எண்ணெய்யில் கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. அவை உச்சந்தலைக்கு ஊட்டமளிக்கக்கூடியவை. மயிர்க்கால்களையும் பலப்படுத்தும். முடி வளர்ச்சியையும் ஊக்குவிக்கும். கூந்தலுக்கு மிருது தன்மையையும், பொலிவையும் ஏற்படுத்திக்கொடுக்கும். பொடுகு பிரச்சினையையும் போக்கும்.

    ஆமணக்கு எண்ணெய்

    ரிசினோலிக் அமிலம் ஆமணக்கு எண்ணெய்யில் அதிகம் உள்ளது. அது உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. முடி மீண்டும் வளர ஊக்குவிக்கிறது.

    ஆலிவ் எண்ணெய்

    ஆலிவ் எண்ணெய்யில் ஆன்டி ஆக்சிடென்டுகள் மற்றும் வைட்டமின் ஈ நிரம்பியுள்ளன. அவை உச்சந்தலையில் ஈரப்பதத்தை தக்கவைக்க துணை புரியும். முடி உதிர்வதையும் குறைக்கும்.

    மிளகுக்கீரை எண்ணெய்

    உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தைத் தூண்டுவதற்கு மிளகுக்கீரை எண்ணெய் உதவும். முடி வளர்ச்சியையும் ஊக்குவிக்கும். முடி உதிர்வதை தடுக்கும்.

    ஜொஜோபா எண்ணெய்

    உச்சந்தலையின் நலன் காக்க இந்த எண்ணெய் உதவும். ஈரப்பதத்தை தக்க வைப்பதில் இதன் பங்களிப்பு முக்கியமானது. முடி வளர்ச்சிக்கும் பயன்படும்.

    நெல்லிக்காய் எண்ணெய்

    வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்சிடென்டுகள் நிறைந்த நெல்லிக்காய் எண்ணெய் முடியின் வேர்களை பலப்படுத்தும். முடி வளர்ச்சிக்கும் உதவிடும்.

    டீ ட்ரீ எண்ணெய்

    இந்த எண்ணெய் பூஞ்சை மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை கொண்டது. உச்சந்தலை ஆரோக்கியத்தை காக்கும். முடி வளர்ச்சியையும் ஊக்குவிக்கும்.

    லாவெண்டர் எண்ணெய்

    இது அமைதியான பண்புகளுக்கு பெயர் பெற்றது. அதாவது மன அழுத்தத்தை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. முடி வளர்ச்சியை அதிகரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

    ரோஸ்மேரி எண்ணெய்

    இந்த எண்ணெய்யில் இருக்கும் கார்னோசிக் அமிலம் உச்சந்தலையை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். முன்கூட்டியே முடி நரைப்பதையும், முடிஉதிர்வதையும் தடுக்கும். முடி வளர்ச்சியையும் ஊக்குவிக்கும்.

    ஆர்கன் எண்ணெய்

    மொரோக்கோ நாட்டில் வளரும் ஆர்கன் மரத்தின் பழங்களில் இருந்து ஆர்கன் எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. இதனை திரவ தங்கம் என்றும் அழைக்கிறார்கள். இந்த எண்ணெய்யில் இருக்கும் அமிலங்கள் தலைமுடியை வறட்சியில் இருந்து காக்கும். முடிக்கு மென்மைத்தன்மையை அதிகரிக்கச் செய்யும். கூந்தலின் நுனிப்பகுதியில் பிளவு ஏற்படுவதையும் தடுக்கும். முடி வளர்ச்சியையும் ஊக்குவிக்கும்.

    • பருவ கால முடி உதிர்தல் டெலோஜென் எப்லூவியம் என்றும் அழைக்கப்படுகிறது.
    • பருவ கால மாறுபாட்டின்போது வெப்பம் அதிகமாக வெளிப்படும்.

    கோடை காலம் முடிவடைந்து நாட்டின் பல பகுதிகளில் பருவ மழை காலம் தொடங்கி இருக்கும் நிலையில் கால நிலையில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தால் பெண்கள் பலர் முடி உதிர்வு பிரச்சனையை எதிர்கொள்வார்கள்.

    இத்தகைய பருவ கால முடி உதிர்தல் டெலோஜென் எப்லூவியம் என்றும் அழைக்கப்படுகிறது. வானிலையில் ஏற்படும் மாற்றமும், மாறும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ப உடலில் ஏற்படும் மாற்றமும் முடி உதிர்தலுக்கு வித்திடும்.

    பொதுவாகவே குறிப்பிட்ட அளவு முடி உதிர்வது இயல்பானது. முடி வளர்ச்சி அடைவதற்காக இயற்கையாக நடைபெறும் சுழற்சியின் ஒரு அங்கமாக முடி உதிரும். ஆனால் அதிகம் முடி உதிர்வது பாதிப்பை அதிகப்படுத்திவிடும்.

    பருவ கால முடி உதிர்வுக்கான காரணங்கள்

    ஈரப்பதம்

    ஈரப்பதத்தில் ஏற்படும் மாற்றங்கள் உச்சந்தலையின் ஈரப்பத சமநிலையை பாதிக்கலாம். முடி வறட்சி அடையவோ அல்லது அதிகப்படியான எண்ணெய் உற்பத்திக்கோ வழிவகுக்கலாம். இவை இரண்டுமே முடி உதிர்தலுக்கு முக்கிய பங்கு வகிக்கும்.

    சூரிய ஒளி

    தலை முடியில் சூரிய கதிர்வீச்சு அதிகம் படும்போது முடியின் மயிர்கால்கள் சேதமடையக்கூடும். முடி உடைவதற்கும் காரணமாகிவிடும்.

    வெப்பநிலை மாற்றம்

    பருவ கால மாறுபாட்டின்போது சில சமயங்களில் வெப்பம் அதிகமாக வெளிப்படும். சில சமயங்களில் மேகக்கூட்டங்கள் ஒன்று திரண்டு மந்தமான காலநிலையை ஏற்படுத்தும். வெப்பநிலையில் ஏற்படும் இந்த திடீர் மாற்றங்கள் உச்சந்தலை முடிக்கு அழுத்தம் கொடுக்கலாம். இதுவும் முடி உதிர்தலுக்கு வழிவகுக்கும்.

    தடுக்கும் வழிகள்

    * தலைமுடி, கெரட்டின் என்னும் ஒரு வகை புரதத்தால் ஆனது. பால், பன்னீர், தயிர், முட்டை, கோழிக்கறி, மீன், சோயா மற்றும் பருப்பு வகைகள் போன்றவற்றில் போதுமான அளவு புரதங்கள் உள்ளன. அவற்றை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வது முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும்.

    * உண்ணும் உணவில் போதுமான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். அவையும் முடி வளர்ச்சிக்கும், முடி வலிமைக்கும் உதவிடும். கொழுப்பு நிறைந்த மீன், செறிவூட்டப்பட்ட பால் பொருட்கள் மற்றும் சூரிய ஒளி போன்றவற்றில் வைட்டமின் டி நிரம்பியுள்ளது.

    முட்டை, நட்ஸ் வகைகள், முழு தானியங்களில் வைட்டமின் பி காணப்படுகிறது. இறைச்சிகள், கீரைகள், பருப்பு வகைகளில் இரும்புச்சத்து உள்ளடங்கி இருக்கிறது. நட்ஸ் மற்றும் பருப்பு வகைகளில் துத்தநாகம் உள்ளடங்கி இருக்கிறது. இவைகளை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் கூந்தல் நலனை மேம்படுத்தலாம்.

    * தலைமுடி மற்றும் உச்சந்தலையை நீரேற்றமாக வைத்திருக்க தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும்.

    * ஷாம்பு பயன்படுத்துவது கூந்தலை பாதுகாக்கும் இயற்கை எண்ணெய்கள் உச்சந்தலையில் இருந்து நீங்க வழிவகுக்கும். அதற்கு இடம் கொடுக்காமல் முடி வகைக்கு ஏற்ற மென்மையான ஷாம்புவை பயன்படுத்த வேண்டும். நீண்ட நேரம் தலைமுடியை அலசுவதை தவிர்க்க வேண்டும். முடி வறட்சி அடைவதற்கும், முடி உடைவதற்கும் அது வழிவகுக்கும்.

    * ஒவ்வொரு முறை தலைக்கு குளித்த பிறகும் கண்டிஷனரை பயன்படுத்துங்கள். இதனால் தலைமுடியை ஈரப்பதத்துடன் வைத்திருக்கவும், முடி உடைவதை குறைக்கவும் முடியும்.

    * உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தைத் தூண்டுவதற்கும், மயிர்க்கால்களை மேம்படுத்துவதற்கும் தலையில் தவறாமல் மசாஜ் செய்ய வேண்டும்.

    * உச்சந்தலையில் படிந்திருக்கும் இறந்த சரும செல்களை நீக்குவதும் முடி வளர்ச்சிக்கு ஏற்ற சூழலை உண்டாக்கும்.

    * சூரிய வெப்பத்தில் இருந்து தலை முடியை பாதுகாக்க, தொப்பி அணியலாம்.

    * நீச்சல் குளம் மற்றும் கடலில் குளித்தால் உடனே நல்ல தண்ணீரில் தலைமுடியை அலசிவிட வேண்டும்.

    • மயிர்கால்களை ஆரோக்கியமாக பராமரிக்க வேண்டும்.
    • முடி உதிர்தல் பிரச்சனையை அலட்சியம் செய்யக்கூடாது.

    * கரிசாலை இலை, நெல்லி வற்றல், அதிமதுரம் சமமாக எடுத்து அரைத்துப் பூசி பின் குளித்து வரும் பழக்கத்தை மேற்கொண்டால் முடி கொட்டுதல் நிற்கும்.

    * நிலாவரை இலையை அரைத்து முடி உதிரும் இடத்தில் தேய்க்கலாம்.

    * துவரம் பருப்பை முதல் நாள் ஊற வைத்து மறுநாள் அதே நீரில் அரைத்து தலைக்கு பற்றுப்போட்டு சிறிது நேரம் கழித்து குளித்தால் முடி கொட்டுதல் நிற்கும்.

    * சிறிய வெங்காயத்தை நன்கு அரைத்து தலையில் தேய்த்து சிறிது நேரம் கழித்துக் குளித்தால் முடி உதிர்தல் நிற்கும்.

    * பேய்ப்புடல் சாறு எடுத்து தலையில் பூசி நன்கு ஊறிய பின் சீகைக்காய் போட்டுக் குளிக்க முடிஉதிர்தல் நிற்கும்.

    * செம்பருத்திப் பூவை நன்கு அரைத்து வாரம் ஒருமுறை தலைக்கு தேய்த்து, ஊற வைத்த பயித்தம் மாவு போட்டுக் குளிக்க முடி உதிர்தல் நிற்கும்.

    * தேங்காய்ப்பால், எலுமிச்சை சாறு கலந்து தலையில் தேய்த்து ஊற வைத்துக் குளிக்கவும்.

    * பொன்னாங்கண்ணிச் சாறு, கரிசலாங்கண்ணிச் சாறு, தேங்காய் எண்ணெய் சமமாக எடுத்து நீர் வற்றக் காய்ச்சி தலைக்குத் தேய்த்துவர முடி உதிர்தல் நிற்கும்.

    * உலர்ந்த மருதாணி இலைப்பொடி 2 ஸ்பூன், எள்ளு 2 ஸ்பூன் அதிமதுரப் பொடி 2 ஸ்பூன், நெல்லி வற்றல் 2 ஸ்பூன் இவைகளைப் பால் விட்டு அரைத்து தண்ணீர் கலந்து பின் சூடாக்கி, இளஞ்சூட்டில் இறக்கித் தலையில் தேய்த்து வேர்க் கால்களில் படும்படி மசாஜ் செய்து சிறிது நேரம் கழித்துக் குளிக்க முடி உதிர்தல் நிற்கும்

    * கோழி முட்டையின் வெண்கருவில் வெங்காயத்தை நசுக்கிப் போட்டு தலையில் தேய்த்து ஊற வைத்துக் குளித்தால் முடி உதிர்தல் நிற்கும்.

    * மேலும் உடல் உஷ்ணம் மிகுந்தவர்கள் இரவில் நல்லெண்ணையை உள்ளங்காலில் தேய்த்து மசாஜ் செய்யவும்.

    சத்துக் குறைவுள்ளவர்கள் பழங்கள், கீரைகள், தாவர எண்ணைய்கள், நெய், கொட்டைகள் போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால் முடி கொட்டுவது நிற்கும்.

    நாம் உண்ணும் உணவு நம்மை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஆரோக்கியமாக வைத்திருப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. நாம் அன்றாடம் உண்ணும் உணவு, நமது தோல் மற்றும் முடி பளபளப்பையும் பாதிக்கிறது.

    ஒருவருக்கு முடி உதிர்கிறது என்றால், அது சாதாரண விஷயமல்ல. நம்முடைய தலைமுடி அளவுக்கு அதிகமாக உதிர்கிறது என்றால், நம் உடலில் ஏதோ பிரச்சினை இருக்கிறது என்பதற்கான முதல்கட்ட அறிகுறியே முடி உதிர்தல். அதை நாம் எப்போதும் அலட்சியம் செய்யக்கூடாது.

    ஒரு கட்டிடத்திற்கு அஸ்திவாரம் எவ்வளவு முக்கியமானதோ அதேபோல தான் தலைமுடிக்கு மயிர்கால்கள். உங்களுக்கு நீண்ட வலிமையான மற்றும் ஆரோக்கியமான தலைமுடி வேண்டுமென்றால் நீங்கள் உங்கள் மயிர்கால்களை ஆரோக்கியமாக பராமரிக்க வேண்டும்.

    உங்களுடைய மயிர்கால்கள் வலுவிழந்து காணப்பட்டால் அது உங்களின் தலைமுடி வளர்ச்சியை பாதிக்கலாம். உங்கள் மயிர்க்கால்களை வலுப்படுத்துவதற்கு உங்களுடைய முடி பராமரிப்பு புராடக்டுகளில் அதிக கெமிக்கல்கள் இல்லாதவாறு பார்த்துக் கொள்வது அவசியம்.

    தலைமுடி ஆரோக்கியமாக வளர வேண்டுமானால், இரும்புச்சத்து, கால்சியம் போன்ற சத்துக்கள் உள்ள உணவுகள் எடுக்க வேண்டும். இந்த ஊட்டச்சத்துக்களுடன் சேர்த்து, வைட்டமின் சி, பி, இ போன்றவை இருக்கும்படியும் உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும்.

    பாதாம், முந்திரி, பிஸ்தா போன்ற கொட்டை வகைகளில் பல்வேறு விதமான அடிப்படையான ஊட்டச்சத்துகள் நிரம்பியுள்ளன. இவற்றை நாள்தோறும் கையளவு சாப்பிட்டு வந்தால் உடலுக்கு மட்டுமல்ல, தலை முடிக்கு பலம் சேர்க்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

    நீங்கள் தினமும் சாப்பிடும் ஆரோக்கியமற்ற நொறுக்குத் தீனிக்களை ஒதுக்கிவைத்துவிட்டு அதற்கு மாற்றாக மேற்கூறிய ஊட்டச்சத்து உணவுகளை சாப்பிட வேண்டும்.

    • தலைமுடி அழகை மட்டும் தருவதில்லை. உடலுக்கு பாதுகாப்பை அளிக்கிறது.
    • ஊட்டச்சத்து குறைவினாலும் முடி கொட்டுதல் ஏற்படுகிறது.

    உடலின் உச்சிப் பகுதியை ஆக்கிரமித்துள்ளவை ரோமங்களே. அதை தலைமுடி என்றும், கேசம் என்றும், கூந்தல் என்றும் அழைக்கின்றோம். ஒவ்வொரு ஆணும், பெண்ணும் தனது கூந்தல் நீளமாகவும், அடர்த்தியாகவும், பளபளப்புடனும் இருக்க வேண்டும் என்பதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

    ஆண்களை விட பெண்களே கூந்தல் அலங்காரம் செய்து கொள்ள அதிக நேரத்தை செலவிடுகின்றனர். மேலும் கேசத்தைப் பராமரிக்க ஒரு தொகையையே செலவு செய்கின்றனர்.

    தலைமுடி அழகை மட்டும் தருவதில்லை. தலைக்குப் பாதுகாப்பையும், சீதோஷ்ண நிலையை சமப்படுத்தி உடலுக்குப் பாதுகாப்பையும் அளிக்கிறது. சித்தர்கள். முனிவர்கள், ரிஷிகள், ஜடாமுடியுடன் காட்சி தருவதற்குக் காரணம் இதுவே ஆகும்.

    பிறவியிலேயே எல்லோருக்கும் ஆரோக்கியமான கூந்தல் இருக்கிறது. ஆனால் கவலைப்படுவதாலும், கூந்தலை பாதுகாக்காததாலும் ஊட்டச்சத்துக் குறைவினாலும் முடி கொட்டுதல் ஏற்படுகிறது.

    நாம் தலை வாரும்போது சீப்பில் சில முடிகள் சிக்கிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். அதை அருவருக்கத்தக்க அன்னிய பொருளாகத் தூக்கி எறிந்து விடுகிறோம். உதிர்ந்த முடிகளுக்கு புதிய முடிகள் அதே இடத்தில் முளைத்து விடுவது இயற்கை. சில சமயம் இயற்கை தன்மைக்கு மாறுபட்டு தலைமுடி வேரோடு கொட்டுவதையே முடி கொட்டுதல் என்கிறோம்.

    முடி கொட்டுதலுக்கான காரணங்கள்:

    மனச்சோர்வு, தூக்கமின்மை, மற்றும் நீண்ட நாள் நோய் காரணமாக முடி கொட்டுதல் ஏற்படும். மேலும் ஊட்டச் சத்தின்மையாலும், அதிக சூடான நீரில் குளிப்பதாலும், குளித்த பின் தலையை நன்கு உலர விடாத காரணத்தாலும் முடி கொட்டுதல் ஏற்படும்.

    பெண்களின் உடலில் சுரக்கும் பெண்மை ஹார்மோன் ஈஸ்ட்ரோஜன், ஆண்களுக்கு ஆண்மையை வெளிப்படுத்தும் ஆன்ட்ரோஜன் என்ற ஹார்மோன்களின் சுரப்பில் ஏற்படும் மாற்றங்களும் முடி கொட்டுதலை ஏற்படுத்தும்.

    தலையில் ஏற்படும் பொடுகு, தோல் நோய்கள், பெண்களின் மாதவிடாய்க் கோளாறுகள் மற்றும் பிரசவத்திற்குப் பின் ஏற்படும் ரத்த சோகை, ஒத்துவராத மருந்துகள், ரசாயனக் கலப்புள்ள ஹேர் ஆயில், ஷாம்பு ஆகியவற்றினாலும் முடி கொட்டுதல் ஏற்படும். மேலும் ஒரு சிலருக்கு உப்புத் தண்ணீரில் குளிப்பதாலும், மலச்சிக்கல் ஏற்படுவதாலும், உடல் உஷ்ணத்தாலும் முடி கொட்டுதல் ஏற்படும்.

    ×