என் மலர்tooltip icon

    அழகுக் குறிப்புகள்

    ஒருபொருள் போதும்... தலைமுடி பிரச்சனைகள் அனைத்திற்கும் தீர்வு!
    X

    ஒருபொருள் போதும்... தலைமுடி பிரச்சனைகள் அனைத்திற்கும் தீர்வு!

    • முடி இழைகளை ஊட்டமளிக்கவும், நீரேற்றம் செய்யவும் மற்றும் வலுப்படுத்தவும் உதவுகின்றன.
    • முடி மற்றும் சரும ஆரோக்கியத்தைப் பராமரிப்பதற்கு கற்றாழை ஒரு சிறந்த மூலப்பொருளாக உள்ளது.

    பெண்கள் மற்றும் ஆண்கள் என இருபாலருக்கும் இருக்கும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்று முடிகொட்டுவது. முடிகொட்டுதலை தடுக்க, முடிவளர நாம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருப்போம். பலரும் மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை எல்லாம் பெறுவார்கள். ஆனால் இந்த பிரச்சனைகளுக்கு எல்லாம் இயற்கையிலேயே மருந்து உள்ளது. அதுதான் கற்றாழை. வீட்டில் எளிதாக கிடைக்கும் கற்றாழையால் நமது முடி அடையும் ஆரோக்கிய நன்மைகள், எப்போதெல்லாம் இந்த கற்றாழையை முடிக்கு பயன்படுத்தலாம் என்பது குறித்து பார்ப்போம்.

    முடி உதிர்தல்

    முடி உதிர்தல் அதிகமாகிறது என்று நீங்கள் கவலைக்கொள்ளும்போது கற்றாழையை தலைக்கு பயன்படுத்தலாம். கற்றாழை கொலாஜன் உற்பத்திக்கு உதவுகிறது. இது முடியின் நுண்ணறைகளை வலுப்படுத்தவும், முடி உதிர்வதைத் தடுக்கவும் உதவும். கற்றாழையில் தாதுக்கள் மற்றும் நீர் இருப்பதால், முழு இழையையும் வலுப்படுத்துகிறது. மேலும் முடிக்கு வலிமையை கொடுக்கிறது. இதனால் முடி எளிதில் உடையக்கூடிய தன்மையை இழக்கும்.

    முடி வளர்ச்சி

    கற்றாழை முடி வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றுகிறது. கற்றாழையில் உள்ள நொதிகள் உச்சந்தலையில் இருந்து இறந்த செல்களை அகற்ற உதவுகிறது. கற்றாழையில் வைட்டமின்கள் (வைட்டமின் A, B1, B2, B6, C மற்றும் E போன்றவை), தாதுக்கள் (கால்சியம் போன்றவை) மற்றும் ஃபோலிக் அமிலம் ஆகியவை உள்ளன. அவை முடி இழைகளை ஊட்டமளிக்கவும், நீரேற்றம் செய்யவும் மற்றும் வலுப்படுத்தவும் உதவுகின்றன.

    எண்ணெய் பசை

    கற்றாழை உச்சந்தலை மற்றும் முடியில் அதிகளவில் உள்ள எண்ணெய் பசையைக் குறைக்கும். முடியின் இழைகளுக்கு சேதம் விளைவிக்காமல் எண்ணெய் பசையைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

    வறண்ட முடி

    கற்றாழை தலையில் செல்வளர்ச்சியை ஊக்குவிக்கும். மேலும் மயிறிழைகளுக்கு அதிக நெகிழ்ச்சித்தன்மையை அளிக்கும். இதன்மூலம் வறண்ட நிலையில் இருக்கும் முடி ஆரோக்கியம் பெறும்.


    அனைத்துவிதமான முடி பிரச்சனைகளுக்கும் தீர்வுகளை கொண்டது கற்றாழை

    அரிப்பு மற்றும் எரிச்சல்

    கற்றாழை அழற்சி எதிர்ப்பு, ஆக்ஸிஜனேற்றம் போன்றவற்றை தடுக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது. இது உச்சந்தலையில் ஏற்படும் அழற்சியைக் குணப்படுத்தவும், சருமத்தை ஆற்றவும், அரிப்பு மற்றும் எரிச்சல் போன்ற தோல் அழற்சி அல்லது பூஞ்சை தொற்றுகளிலிருந்து விடுபடவும் உதவுகிறது.

    பொடுகு

    கற்றாழை உச்சந்தலையில் உள்ள இறந்த சரும செல்களை அகற்ற உதவுகிறது. மேலும் உச்சந்தலையில் நீரேற்றத்தை ஊக்குவிக்கிறது. உச்சந்தலை வறளும்போதுதான் பொடுகு உண்டாகும். இதன்மூலம் பொடுகு உருவாவதையும் கட்டுப்படுத்துகிறது.

    புற ஊதா கதிர்கள்

    சூரிய ஒளியில் இருந்து வரும் புற ஊதா கதிர்வீச்சினால் ஏற்படும் சேதத்திலிருந்து முடி இழைகளைப் பாதுகாக்க உதவும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் கற்றாழையில் உள்ளன. மேலும், அதன் ஈரப்பதமூட்டும் திறன் மற்றும் அதன் கலவையில் உள்ள வைட்டமின்கள் காரணமாக, கற்றாழை முடியை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.

    முடி உதிர்தலைத் தடுப்பது, உச்சந்தலையில் இருந்து அதிகப்படியான எண்ணெயை நீக்குவது, முடியை ஈரப்பதமாக்குவது, முடி வளர்ச்சியை ஊக்குவித்தல், சூரிய ஒளியால் ஏற்படும் சேதத்திலிருந்து பாதுகாத்தல் மற்றும் பொடுகு அல்லது உச்சந்தலையில் தொற்றுகள் வராமல் தடுப்பது போன்ற பல ஆரோக்கிய நன்மைகளை தலைமுடிக்கு அளிக்கிறது கற்றாழை. முடி மற்றும் சரும ஆரோக்கியத்தைப் பராமரிப்பதற்கு கற்றாழை ஒரு சிறந்த மூலப்பொருளாக இருப்பதுடன் மலச்சிக்கல் மற்றும் செரிமான கோளாறுகள் போன்ற பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்கவும் கற்றாழையை பயன்படுத்தலாம்.

    Next Story
    ×