என் மலர்
நீங்கள் தேடியது "aloe vera benefits"
- முடி இழைகளை ஊட்டமளிக்கவும், நீரேற்றம் செய்யவும் மற்றும் வலுப்படுத்தவும் உதவுகின்றன.
- முடி மற்றும் சரும ஆரோக்கியத்தைப் பராமரிப்பதற்கு கற்றாழை ஒரு சிறந்த மூலப்பொருளாக உள்ளது.
பெண்கள் மற்றும் ஆண்கள் என இருபாலருக்கும் இருக்கும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்று முடிகொட்டுவது. முடிகொட்டுதலை தடுக்க, முடிவளர நாம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருப்போம். பலரும் மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை எல்லாம் பெறுவார்கள். ஆனால் இந்த பிரச்சனைகளுக்கு எல்லாம் இயற்கையிலேயே மருந்து உள்ளது. அதுதான் கற்றாழை. வீட்டில் எளிதாக கிடைக்கும் கற்றாழையால் நமது முடி அடையும் ஆரோக்கிய நன்மைகள், எப்போதெல்லாம் இந்த கற்றாழையை முடிக்கு பயன்படுத்தலாம் என்பது குறித்து பார்ப்போம்.
முடி உதிர்தல்
முடி உதிர்தல் அதிகமாகிறது என்று நீங்கள் கவலைக்கொள்ளும்போது கற்றாழையை தலைக்கு பயன்படுத்தலாம். கற்றாழை கொலாஜன் உற்பத்திக்கு உதவுகிறது. இது முடியின் நுண்ணறைகளை வலுப்படுத்தவும், முடி உதிர்வதைத் தடுக்கவும் உதவும். கற்றாழையில் தாதுக்கள் மற்றும் நீர் இருப்பதால், முழு இழையையும் வலுப்படுத்துகிறது. மேலும் முடிக்கு வலிமையை கொடுக்கிறது. இதனால் முடி எளிதில் உடையக்கூடிய தன்மையை இழக்கும்.
முடி வளர்ச்சி
கற்றாழை முடி வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றுகிறது. கற்றாழையில் உள்ள நொதிகள் உச்சந்தலையில் இருந்து இறந்த செல்களை அகற்ற உதவுகிறது. கற்றாழையில் வைட்டமின்கள் (வைட்டமின் A, B1, B2, B6, C மற்றும் E போன்றவை), தாதுக்கள் (கால்சியம் போன்றவை) மற்றும் ஃபோலிக் அமிலம் ஆகியவை உள்ளன. அவை முடி இழைகளை ஊட்டமளிக்கவும், நீரேற்றம் செய்யவும் மற்றும் வலுப்படுத்தவும் உதவுகின்றன.
எண்ணெய் பசை
கற்றாழை உச்சந்தலை மற்றும் முடியில் அதிகளவில் உள்ள எண்ணெய் பசையைக் குறைக்கும். முடியின் இழைகளுக்கு சேதம் விளைவிக்காமல் எண்ணெய் பசையைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
வறண்ட முடி
கற்றாழை தலையில் செல்வளர்ச்சியை ஊக்குவிக்கும். மேலும் மயிறிழைகளுக்கு அதிக நெகிழ்ச்சித்தன்மையை அளிக்கும். இதன்மூலம் வறண்ட நிலையில் இருக்கும் முடி ஆரோக்கியம் பெறும்.

அனைத்துவிதமான முடி பிரச்சனைகளுக்கும் தீர்வுகளை கொண்டது கற்றாழை
அரிப்பு மற்றும் எரிச்சல்
கற்றாழை அழற்சி எதிர்ப்பு, ஆக்ஸிஜனேற்றம் போன்றவற்றை தடுக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது. இது உச்சந்தலையில் ஏற்படும் அழற்சியைக் குணப்படுத்தவும், சருமத்தை ஆற்றவும், அரிப்பு மற்றும் எரிச்சல் போன்ற தோல் அழற்சி அல்லது பூஞ்சை தொற்றுகளிலிருந்து விடுபடவும் உதவுகிறது.
பொடுகு
கற்றாழை உச்சந்தலையில் உள்ள இறந்த சரும செல்களை அகற்ற உதவுகிறது. மேலும் உச்சந்தலையில் நீரேற்றத்தை ஊக்குவிக்கிறது. உச்சந்தலை வறளும்போதுதான் பொடுகு உண்டாகும். இதன்மூலம் பொடுகு உருவாவதையும் கட்டுப்படுத்துகிறது.
புற ஊதா கதிர்கள்
சூரிய ஒளியில் இருந்து வரும் புற ஊதா கதிர்வீச்சினால் ஏற்படும் சேதத்திலிருந்து முடி இழைகளைப் பாதுகாக்க உதவும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் கற்றாழையில் உள்ளன. மேலும், அதன் ஈரப்பதமூட்டும் திறன் மற்றும் அதன் கலவையில் உள்ள வைட்டமின்கள் காரணமாக, கற்றாழை முடியை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.
முடி உதிர்தலைத் தடுப்பது, உச்சந்தலையில் இருந்து அதிகப்படியான எண்ணெயை நீக்குவது, முடியை ஈரப்பதமாக்குவது, முடி வளர்ச்சியை ஊக்குவித்தல், சூரிய ஒளியால் ஏற்படும் சேதத்திலிருந்து பாதுகாத்தல் மற்றும் பொடுகு அல்லது உச்சந்தலையில் தொற்றுகள் வராமல் தடுப்பது போன்ற பல ஆரோக்கிய நன்மைகளை தலைமுடிக்கு அளிக்கிறது கற்றாழை. முடி மற்றும் சரும ஆரோக்கியத்தைப் பராமரிப்பதற்கு கற்றாழை ஒரு சிறந்த மூலப்பொருளாக இருப்பதுடன் மலச்சிக்கல் மற்றும் செரிமான கோளாறுகள் போன்ற பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்கவும் கற்றாழையை பயன்படுத்தலாம்.
* கற்றாழையின் இரண்டு பாகங்களான சதை (ஜெல்) மற்றும் பாலில் இருந்து பல்வேறு பொருட்கள் தயாராகிறது. கற்றாழைப் பால் மஞ்சள் நிறத்தில் இருக்கும். கற்றாழையின் அடிப்புறத்தை உற்றுக் கவனித்தால் இதை அறியலாம். கற்றாழை தோலை நீக்கிவிட்டுப் பார்த்தால் கெட்டியான கூழ்போன்ற சதைப்பகுதி தெளிவாகத் தெரியும்.
* கற்றாழையில் 240 வகைகள் உள்ளன. 4 கண்டங்களில் இவை காணப்படுகின்றன. ஆனால் இப்போது மக்கள் 4 வகை கற்றாழைகளையே அதிகமாக பயிரிடுகிறார்கள். ஆரோக்கியம் வழங்கும் மருந்து மற்றும் உணவுப்பொருளாக இவை பயன்படுகின்றன. ‘அலோ வேரா பார்படென்சிஸ்’ இனம்தான் அதிகமாக பயிரிடப்படும் கற்றாழை இனமாகும். இது வட ஆப்பிரிக்காவை பூர்வீகமாக கொண்டது.
* கற்றாழையின் ஜெல்லில் 96 சதவீதம் நீர் நிரம்பி இருக்கிறது. இதுவே வறண்ட சூழலில் அவை தாக்குப்பிடித்து வாழ காரணமாகவும் அமைகிறது.
* கற்றாழை சதைப்பகுதியில் பல்வேறு வகை வைட்டமின்கள், அமினோ அமிலங்கள், தாதுப்பொருட்கள் உள்ளிட்ட 75 வகை பொருட்கள் அடங்கி உள்ளன. இவ்வளவு சத்துப்பொருட்கள் நிரம்பியிருப்பதுதான் அவற்றை மருத்துவ முக்கியத்துவம் வாய்ந்த பொருளாக மாற்றியிருக்கிறது.
* கற்றாழையின் சதைப்பகுதி நீரிழிவு, ஆஸ்துமா, வலிப்பு, வாதம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிறந்த நிவாரணம் தரும். பல்வேறு சரும பிரச்சினைகளுக்கும் இது தீர்வு தருகிறது.
* கற்றாழைப் பொருட்கள் உடல்சூடு தணிக்கும். மலச்சிக்கலை தீர்க்கும். உடலின் நச்சுக் கழிவுகளை அகற்றும்.
* கற்றாழையை ஜூஸ் செய்தும், மற்ற உணவுப்பொருட்கள் மற்றும் சுவையூட்டும் பொருட்களுடன் சேர்த்தும் சாப்பிடப்படுகிறது. அப்படியே தனித்துச் சாப்பிடுவதும் உண்டு. கசக்கும், பிடிக்காது என்று காரணம் காட்டி கற்றாழையை தவிர்ப்பது ஆரோக்கியமற்ற பழக்க வழக்கமாகும்.
* மருத்துவ உலகில் பல்வேறு மருந்துகளிலும், சத்து பானங்களிலும் கற்றாழை சேர்க்கப்படுகிறது. பற்பசை, சருமப் பொருட்கள், வாசனைப் பொருட்கள் தயாரிப்பிலும் சேர்க்கப்படுகிறது.
* எகிப்தியர்கள் கற்றாழையை புனிதமான தாவரமாக கருதினர். அவர்கள் மனிதர்களின் இறுதிச்சடங்கிலும் இதை பயன்படுத்தி உள்ளனர். வரலாற்றில் பேரழகியாக வர்ணிக்கப்படும் கிளியோபாட்ரா தனது சரும அழகுப் பொருளாக கற்றாழையை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.
* கற்றாழை, கடுமையான வறண்ட சூழலிலும் 100 ஆண்டுகளைத் தாண்டி வாழக்கூடியது. எனவே இதை பயன்படுத்துபவர்களும் ஆரோக்கியமாக நீண்ட ஆயுள் பெறுவார்கள் என்ற நம்பிக்கை நிலவுகிறது. அமெரிக்கர்கள், கற்றாழையை ‘சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும் மந்திரத் தாவரம்’ என்று போற்றுகிறார்கள். பலவிதங்களில் அவர்கள் கற்றாழையை பயன்படுத்து கிறார்கள். தொட்டிச்செடியாக இந்த மருத்துவ தாவரத்தை வீடுகளிலேயே வளர்க்கலாம்.






