search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உணவுமுறை"

    ஒருசில பழக்கங்கள் புற்றுநோய் ஏற்படுவதற்கு காரணமாக இருந்தாலும் ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறைதான் நோய் பாதிப்பை அதிகரிக்கச் செய்கிறது.
    உடலின் எந்தப் பகுதியிலாவது செல்களின் வளர்ச்சி கட்டுப்பாடு இல்லாமல் அதிகரிப்பது புற்றுநோய் உருவாகுவதற்கு காரணமாக அமைகிறது. 10 இந்தியர்களில் ஒருவர் வாழ்நாளில் புற்றுநோய் பாதிப்பை எதிர்கொள்வதாகவும், 15 பேரில் ஒருவர் புற்றுநோயால் இறப்பதாகவும் உலக சுகாதார அமைப்பின் ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது.

    மற்ற நாடுகளை விட நம் நாட்டில் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே வருகிறது. ஒருசில பழக்கங்கள் புற்றுநோய் ஏற்படுவதற்கு காரணமாக இருந்தாலும் ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறைதான் நோய் பாதிப்பை அதிகரிக்கச் செய்கிறது. புற்றுநோயை வரவழைக்கும் அன்றாட பழக்கவழக்கங்கள் குறித்து பார்ப்போம்.

    புகையிலை: புகையிலை பொருட்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பதில் சந்தேகமில்லை. சிகரெட் பிடிப்பது மட்டுமின்றி வெற்றிலை பாக்கு உட்கொள்வது, சுருட்டு, பீடி பிடிப்பது நுரையீரலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அது தொண்டை வழி யாக வயிற்று பகுதிக்கு சென்றடைந்து ஓசோபேஜியல் எனும் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கச்செய்யும். புகையிலை பயன்படுத்துவது குரல்வளை, நுரையீரல், உணவுக்குழாய், சிறுநீர்ப்பை, தொண்டை, சிறுநீரகம், வயிறு, கல்லீரல், பெருங்குடல், கணையம், மலக்குடல், கருப்பைவாய் உள்ளிட்ட பகுதிகளில் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடும்.

    காரமான, சூடான உணவு: உணவை அதிக சூடாகவோ, காரமாகவோ சாப்பிடக்கூடாது. காரமான, சூடான உணவுகளை அதிகமாக உட்கொள்வது நுரையீரல், வாய், வயிற்றுப்பகுதியில் புற்றுநோய் உருவாக வழிவகுக்கும். உணவில் காரத்தன்மை கொண்ட மசாலாக்களை அதிகம் சேர்ப்பது புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகப்படுத்தும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. புற்றுநோய்க்கும், காரத்திற்கும் இடையேயான தொடர்பை ஆராய கூடுதல் ஆராய்ச்சிகளும் மேற்கொள்ள வேண்டியிருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

    தாய்ப்பால்: தாய்ப்பால் கொடுப்பது மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயத்தை 30 சதவீதம் குறைக்கும் என்று ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. தாய்ப்பால் கொடுக்காமல் இருப்பதோ அல்லது மிகவும் குறைவாக கொடுப்பதோ புற்றுநோய்க்கு திறவுகோலாக மாறிவிடும். எனவே மார்பக புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை குறைப்பதற்கு பெண்கள் கட்டாயம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்கள்.

    அதிக சூரிய வெளிச்சம்: உடலில் சூரிய வெப்பம் அதிகமாக படர்வது செல்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அது சரும புற்றுநோய் ஏற்படுவதற்கும் வித்திடும். 18 வயதுக்குட்பட்டவர்கள் வெயிலின் தாக்கத்திற்கு உள்ளாகுவது பாதிப்பை அதிகப்படுத்திவிடும். தீக்காயங்கள், எக்ஸ்ரே கதிர்களின் வெளிப்பாடு, சில வேதிப்பொருட்களின் தாக்கத்தால் சருமத்தில் வடுக்கள் ஏற்படுவதும் தவிர்க்கப்பட வேண்டும். சூரியனில் இருந்து வெளிப்படும் புற ஊதாக்கதிர்வீச்சுக்கும், சரும புற்றுநோய்க்கும் தொடர்பு இருக்கிறது. அதனால் மதிய வேளையில் சூரிய ஒளி அதிகம் உடலில் படர்வதை தவிர்ப்பது நல்லது.

    செயலற்ற தன்மை: உடல் இயக்கம் இல்லாமல் செயலற்ற தன்மையில் இருப்பது, உடலில் கொழுப்பு அதிகரிப்பது, மது அருந்துவது மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக 18 சதவீதம் புற்றுநோய் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாக உலக புற்றுநோய் ஆராய்ச்சி நிதியகம் மதிப்பீடு செய்துள்ளது. உடற்பயிற்சி செய்யாதது, அதிகப்படியான கொழுப்பு நிறைந்த உணவுகளை உட்கொள்வது, நோய் எதிர்ப்பு சக்தி குறைவது போன்ற காரணங்களால் நிறைய பேர் புற்றுநோய் பாதிப்புக்கு ஆளாகிறார்கள்.

    நார்ச்சத்து: நார்ச்சத்துள்ள உணவுகளை தவிர்ப்பது, அதனை குறைவாக உட்கொள்வது பெருங்குடல் புற்றுநோய் தோன்றுவதற்கு வழிவகுக்கும். சிவப்பு இறைச்சியை அதிகமாக உட்கொள்வதைத் தவிர்த்து, நார்ச்சத்து அதிகம் கொண்ட பழங்கள், காய்கறிகள், சாலட்டுகள், முழு தானியங்கள், பருப்பு வகைகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது ஆரோக்கியமானது.
    சாப்பிடும் உணவின் சுவை மற்றும் வாசனையை நுகராமல் திரையை பார்த்துக்கொண்டே இயந்திரத்தனமாக சாப்பிடும்போது, சாப்பிடும் அளவு தெரியாது.
    அலுவலக பணி முடிந்து வீடு திரும்பும் பலர் டி.வி.யோ, ஸ்மார்ட்போனோ பார்த்துக்கொண்டு இரவு உணவை சாப்பிடும் பழக்கத்தை கடைப்பிடிக்கிறார்கள். லேப்டாப்பை இயக்கியபடி சாப்பிடுபவர்களும் இருக்கிறார்கள். அப்படி சாப்பிடும்போது கண்களின் பார்வை முழுவதும் திரையின் மீது பதிந்திருக்கும்.

    சாப்பிடும் உணவின் சுவை மற்றும் வாசனையை நுகராமல் திரையை பார்த்துக்கொண்டே இயந்திரத்தனமாக சாப்பிடும்போது, சாப்பிடும் அளவு தெரியாது. வழக்கத்தை விட கூடுதலாக சாப்பிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதிகமாக சாப்பிட்டுக்கொண்டிருப்பதாக மூளை சமிக்ஞை செய்யும். கவனம் முழுவதும் திரையில் தென்படும் காட்சிகளின் மீது பதிந்திருப்பதால் மூளையின் சமிக்ஞையை உணராமல் சாப்பிட்டு முடிப்பதற்கு முனைவார்கள். நன்றாக மென்று சாப்பிடாமல் விரைவாக சாப்பிட்டு விடுவார்கள். அப்படி சாப்பிடுவது வயிற்று உப்புசம், அஜீரணம் போன்ற செரிமான பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

    திரைக்கு முன்னால் சாப்பிடும்போது உடலில் என்ன நடக்கும்?

    டி.வி. பார்த்துக்கொண்டே அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்கக் கூடும். நீங்கள் எவ்வளவு சாப்பிட்டிருக்கிறீர்கள் என்பதை மூளை பதிவு செய்யாது. சாப்பிட்ட திருப்தியும் இருக்காது. அதனால் ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே பசி எடுக்கத் தொடங்கிவிடும். சிப்ஸ், சாக்லேட், ஐஸ்கிரீம் போன்றவற்றை நாடுவீர்கள். டி.வி. பார்த்துக்கொண்டே அவற்றை சாப்பிடுவது ருசியாக இருப்பது போல் தோன்றும். அதனால் இனிப்பு பொருட்கள் மீது நாட்டம் அதிகரித்துவிடும். அவை எந்தவிதமான உடல்நலப் பலன்களையும் வழங்காமல் எளிதாக உடல் எடையை அதிகரிக்க செய்துவிடக் கூடும்.

    எப்படி சாப்பிடுவது சரியானது?

    எத்தகைய உணவுகளை உட்கொண்டாலும் நன்றாக மென்று சாப்பிடும் வழக்கத்தை பின்பற்ற வேண்டும். அந்த உணவு எத்தகைய பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்டது என்பதை அறிந்து கொள்ள வேண்டும். அதன் சுவை மற்றும் நறுமணத்தை நுகர வேண்டும். நீங்கள் வயிற்றுக்கு போதுமான அளவு சாப்பிட்டு விட்டீர்கள் என்ற சமிக்ஞை மூளைக்கு செல்ல சுமார் 20 நிமிடங்கள் ஆகும் என்பது உணவியல் நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது. அதற்கேற்ப உணவை நன்றாக மென்று மெதுவாக சாப்பிடும்போது சமிக்ஞை மூளைக்கு செல்வதற்கு போதுமான அவகாசம் கிடைக்கும். அதிகமாக சாப் பிடுவதையும் தடுத்துவிடும். என்ன சாப்பிடு கிறீர்கள் என்பதை விட அதை எப்படி சாப்பிடு கிறீர்கள் என்பது முக்கியமானது.
    குளு குளு லிச்சி பழத்தை கோடை காலங்களில் நாம் சாப்பிடுவதால் எந்த மாதிரியான நன்மைகள் கிடைக்கும் என அறிந்து கொள்வோம்.
    லிச்சி பழம் கோடைகால சரும பிரச்சினைகள் முதல் எடை இழப்பு வரை பெரிய பங்கு அளிக்கிறது. இந்த லிச்சி பழத்தை கோடை காலங்களில் நாம் சாப்பிடுவதால் எந்த மாதிரியான நன்மைகள் கிடைக்கும் என அறிந்து கொள்வோம்.

    லிச்சி பழத்தில் நிறைய அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. வைட்டமின் சி, கே, பி 1, பி 2, பி 3, பி 6 மற்றும் ஈ ஆகிய ஊட்டச்சத்துக்கள் இதில் காணப்படுகிறது.

    கால்சியம், சோடியம், பொட்டாசியம், இரும்பு, பாஸ்பரஸ், செலினியம் மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்கள், பாலிபினால்கள் மற்றும் கரோட்டினாய்டுகளும் இதில் காணப்படுகிறது. இதில் உள்ள வைட்டமின் சி, உடலின் இரும்புச் சத்தை உறிஞ்சும் திறனை மேம்படுத்தி ரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது.

    எனவே ரத்த சோகையை போக்க உதவி செய்யும். சருமத்தை அழகாக்கும் சக்தி லிச்சிக்கு உண்டு. மேலும் கோடை காலத்தில் சூரிய ஒளியால் ஏற்படும் சரும எரிச்சலுக்கும் லிச்சி சிறந்த மருந்தாகிறது. உடலை நீரேற்றமாக வைத்திருக்கும் பழங்களின் பட்டியலில் லிச்சி மிக முக்கிய இடம் வகிக்கிறது.

    உடல்​ எடையை குறைக்கவும் இது உதவுகிறது. சோர்வில் இருந்து உடலையும், மனதையும் உற்சாகப்படுத்தும் இயற்கை மருந்தாகவும் பயன்படுகிறது. ஈ.கோலி நோய்த்தொற்றுகள் போன்ற பல கோடை நோய்களுக்கு சிகிச்சையளிக்க லிச்சி பழச்சாறு உதவுகிறது.

    இது நமது சரும பராமரிப்பிலும் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. அதே மாதிரி பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்று நோயை தடுக்க லிச்சி பழம் உதவுகிறது.
    வாழைப்பழத்தை உண்பதால் நிறைய நன்மைகள் கிடைக்கப்பெற்றாலும், அவற்றை தொடர்ந்து உண்ணும் போது சில பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும்.
    வாழைப்பழத்தில் உள்ள அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உடலியல் மற்றும் உளவியல் பிரச்சனைகளை போக்க உதவுகிறது. வாழைப்பழத்தை உண்பதால் நிறைய நன்மைகள் கிடைக்கப்பெற்றாலும், அவற்றை தொடர்ந்து உண்ணும் போது சில பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும்.

    வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிடுவதால் உங்கள் எடை அதிகரிக்கும். நல்ல திடமான வாழைப்பழத்தில் 105 கலோரிகள் உள்ளது, அதை குறைக்க மாற்ற பழங்களோடு கலந்து சாப்பிடலாம். உதாரணமாக ஆரஞ்சு, துண்டுகளாக்கப்பட்ட தர்பூசணி, ஒரு கப் திராட்சை போன்ற பழங்களோடு சேர்த்து வாழைப்பழத்தை சாப்பிடலாம்.

    வாழைப்பழம் அதிகமாக சாப்பிட்டு வந்தால் ஒற்றைத்தலைவலி, சுவாசப் பிரச்சனைகள், சிறுநீரகப் பிரச்சனைகள், நரம்புப் பிரச்சனைகள், ரத்தத்தில் அதிக அளவு பொட்டாசியம் இருந்தால் வரும் ஹைபர்கலீமியா, பற்சிதைவு, சோம்பல், மலச்சிக்கல், வாயுத்தொல்லை ஆகியவை உண்டாகும்.

    ஆஸ்துமா மற்றும் நோய் எதிர்ப்பு குறைபாடு உள்ளவர்களுக்கும், வாழைப்பழம் அதிகம் உட்கொள்பவர்களுக்கும் ஒரே மாதிரியான ஒவ்வாமை அறிகுறிகள் உள்ளது.

    அவை மூக்கு ஒழுகுதல், மூச்சிரைப்பு, இருமல், தொண்டை எரிச்சல், கலங்கிய கண்கள் போன்ற பொதுவான ஒவ்வாமைகள் உண்டாக முதன்மையான காரணமான இந்த வாழைப்பழம் சாப்பிடுவது இருக்கிறது.

    சிறுநீரக பிரச்சனை இருந்தால் வாழைப்பழம் உண்பதை குறைக்கவும். ஏனெனில் வாழைப்பழத்தில் பொட்டாசியம் உள்ளது, இதனால் உங்கள் சிறுநீரகம் இரத்தத்தில் உள்ள கழிவுகளை வெளியேற்ற சிரமப்படும். இது ஆபத்தை விளைவிக்கும்.

    நீங்கள் ஒவ்வொரு முறையும் வாழைப்பழம் அல்லது அதற்கு இணையான சத்துக்கள் கொண்ட வேறொரு பழத்தை சாப்பிடும்போது மூச்சுத் திணறுதல் மற்றும் தொண்டை எரிச்சல் ஏற்பட்டால் உங்களுக்கு ஒவ்வாமை உள்ளது என்று அர்த்தம்.
    புகைப்பழக்கம் அல்லது பிற புகையிலைப்பொருட்களை பயன்படுத்தும்போது வாய் வழியாக வைரஸ் பாதிப்புக்கு ஆளாகுவதற்கான வாய்ப்புகளும் அதிகம் இருக்கிறது.
    புகைப்பழக்கம் உடலுக்கு கேடு விளைவிக்கும் என்பதை உணர்ந்திருந்தாலும் அதனை கைவிட்டுவிட முடியாமல் தவிப்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். இந்த கொரோனா காலகட்டம் புகைப்பழக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு வழிவகுத்திருக்கிறது.

    புகைப்பிடிப்பவர்கள் எளிதில் கொரோனா நோய்த்தொற்று பாதிப்புக்கு ஆளாக வாய்ப்பிருப்பதாக ஆய்வுகளும் கூறுகின்றன. ஏனெனில் புகைப்பழக்கம் நுரையீரல் செயல்பாட்டை குறைத்துவிடும்.

    புகைப்பழக்கம் அல்லது பிற புகையிலைப்பொருட்களை பயன்படுத்தும்போது வாய் வழியாக வைரஸ் பாதிப்புக்கு ஆளாகுவதற்கான வாய்ப்புகளும் அதிகம் இருக்கிறது.

    நுரையீரலின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்கு புகைப்பழக்கத்தை தவிர்க்க வேண்டியது அவசியமானது. புகைப்பழக்கத்தை கைவிட முயற்சிப்பவர்கள் ஒருசில பழக்கவழக்கங்களை கடைப்பிடிப்பதன் மூலம் நல்ல மாற்றத்தை உணரலாம்.

    புதினா: இது பல மருத்துவ குணங்களை கொண்டது. புகைப்பழக்கத்தால் உண்டாகும் மோசமான விளைவுகளை குறைக்கவும், நுரையீரலில் உள்ள நிக்கோட்டினை அழிக்கவும் இது உதவும். புற்றுநோய் செல்கள் உருவாகுவதை தடுக்கவும் உதவும். புதினாவில் தயாரான மிட்டாய்களை கைவசம் வைத் திருப்பது நல்லது. புகைப்பிடிக்கும் எண்ணம் தோன்றும்போதெல்லாம் அதனை வாயில் போட்டு மெல்லலாம். இது புகைப்பழக்கத்தை திசை திருப்ப உதவும்.

    ஜின்செங்: இது மருத்துவ குணம் கொண்ட ஒருவகையான வேர் தாவரமாகும். இதன் வேர் பகுதியை பொடித்து டீ தயாரித்து பருகலாம். இது புகைப்பொருட்கள் மீதான ஈர்ப்பை குறைக்கவும் உதவும். புகைப் பழக்கத்தை விட்டொழிப்பதிலும் சிறப்பான பங்களிப்பை வழங்கு வதாக பல ஆராய்ச்சிகளும் குறிப்பிடுகின்றன.

    வைட்டமின் சி: புகைப்பிடிக்கும் நபர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு பிரச்சினை தலைதூக்கும். ஏனெனில் புகைப்பழக்கம், வைட்டமின் சி உள்பட அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உடலில் உறிஞ்சப்படுவதை தடுத்துவிடும். ஆரஞ்சு, கிவி, திராட்சை மற்றும் குடைமிளகாய், ப்ரோக்கோலி போன்ற வைட்டமின் சி சத்து நிரம்பிய உணவுகளை சாப்பிட்டு வரலாம். இந்த உணவுகள் வைட்டமின் சி அளவை மீட்டெடுக்க உதவும்.

    தவிர்க்க வேண்டிய உணவுகள்: காபி, தேநீர், ஆல்கஹால் போன்ற காபினேட் பானங்களை உட்கொள்வதை குறைக்க வேண்டும். புகைப்பிடிக்கும்போது காபி பருகுவது மோசமான விளைவுகளை ஏற் படுத்திவிடும். புகைப்பழக்கத்தை கைவிட முயற்சிப்பவர்கள் இறைச்சி, மீன் போன்ற அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும். அவை புகைப்பிடிக்க வேண்டும் என்ற ஏக்கத்தை உண்டாக்கிவிடக்கூடியவை. அதுபோல் இனிப்பு, காரமான உணவுகளையும் தவிர்த்துவிட வேண்டும். இனிப்பை அதிகம் சேர்ப்பது வேறு பல நோய் பாதிப்புகளுக்கும் வழி வகுத்துவிடும்.

    பால் பொருட்கள்: புகைப்பிடிக்கும் உணர்வை கட்டுப்படுத்தும் தன்மை பாலுக்கு உண்டு. குறைந்த கொழுப்பு கொண்ட பால் பருகி வரலாம். நிகோட்டின் மற்றும் புகையிலை சார்ந்த ஆராய்ச்சி கட்டுரை ஒன்றில், ‘புகைப்பிடிப்பவர்களில் பெரும்பாலானோர் பால் பருகும்போது வாயில் ஒருவித கசப்பான சுவையை உணர்வதாக கூறி உள்ளனர்’ என்று குறிப் பிடப்பட்டுள்ளது. நீங்கள் புகைப்பழக்கம் கொண்டவர் என்றால் உங்கள் உடலில் பல்வேறு குறைபாடுகள் உருவாகுவது தவிர்க்கமுடியாதது என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின்ஏ, டி, பி 12, ரைபோபிளேவின், புரதம், பொட்டாசியம், துத்தநாகம், கோலைன், மெக்னீசியம் மற்றும் செலினியம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் பாலில் நிறைந்திருக்கிறது. புகைப்பழக்கத்தை விட்டுவிட முயற்சிப்பவர்களுக்கு பால் சிறந்த உணவாகவும் கருதப்படுகிறது.

    சிற்றுண்டி: புகைப்பிடிப்பதை விட்டுவிட முயற்சிக்கும்போது, ​​சிற்றுண்டிகள் மீது ஆர்வம் அதிகரிக்கும். சர்க்கரை கலந்த சிற்றுண்டிகளை தவிர்த்துவிட வேண்டும். அதற்கு பதிலாக நட்ஸ் வகைகள், பீன்ஸ், பழங்கள், வேகவைத்த கொண்டைக்கடலை, மக்காச்சோளம் போன்றவற்றை தேர்ந்தெடுக்கலாம். புகைபிடிப்பது உடலில் ஒமேகா -3 அளவை குறைத்துவிடும். ஆளிவிதை மற்றும் அக்ரூட் பருப்புகளை உட்கொள்வதன் மூலம் அதை மீட்டெடுக்கலாம்.

    பழங்கள்:பசி உணர்வை கட்டுப்படுத்துவதோடு ஊட்டச்சத்து குறைபாட்டையும் போக்கும் தன்மை பழங் களுக்கு உண்டு. பழங்களில் நார்ச்சத்துகள், அத்தியாவசிய வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் எண்ணற்ற ஆன்டி-ஆக்ஸிடென்டுகள் இருக்கின்றன. புகைப்பழக்கத்தை கைவிடும்போது இனிமையாக பசி உணர்வை அனுபவிப்பார்கள். இனிப்பு பொருட்களின் மீது நாட்டம் கூடும். அந்த சமயத்தில் நிறைவுற்ற கொழுப்புகள் மற்றும் கலோரிகள் நிறைந்த இனிப்புகளை ருசிப்பதற்கு பதிலாக திராட்சை, மாம்பழம், வாழைப்பழம், பப்பாளி போன்றவற்றை சாப்பிடலாம்.

    கலோரிகள்: புகைப்பழக்கத்திற்கும், உடல் எடை அதிகரிப்புக்கும் தொடர்பு உண்டு. அதனால் கலோரிகள் அதிகம் கொண்ட உணவுகளை உட்கொள்ளக் கூடாது. அவை பிற நோய்களுக்கான அபாயத்தையும் அதிகரிக்கச்செய்துவிடும். மருத்துவ நிபுணரை கலந்தாலோசித்து புகைப்பழக்கத்தை விட்டொழிக்கும் வழி முறைகளை பின்பற்றுவது நல்ல பலனை கொடுக்கும்.

    நீர்ச்சத்து: உடலில் இருந்து நிகோட்டின் உள்ளிட்ட நச்சுக்களை வெளியேற்றுவதற்கு நீர் உதவும். புகைப்பழக்கத்தை கைவிட முயற்சிக்கும்போது உடலில் நீர்ச்சத்தை தக்க வைக்க வேண்டியது முக்கியமானது. அது ஒட்டுமொத்த உடல் நலத்திற்கும் நன்மை சேர்க்கும். தினமும் 7 முதல் 8 டம்ளர் நீர் பருகலாம். இது தவிர சர்க்கரை சேர்க்காமல் பழ ஜூஸ் மற்றும் காய்கறி ஜூஸ், இளநீர் போன்றவற்றையும் பருகலாம்.
    கேரட் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துதல், கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்துதல், நீரிழிவு மற்றும் புற்றுநோயைத் தடுத்தல் என பல்வேறு நன்மைகளை வழங்குகிறது.
    கேரட் சாப்பிடுவது கண்களுக்கு நல்லது என்று பலரும் சொல்ல கேள்விப்பட்டிருப்போம். கண் பார்வையை மட்டும் கேரட் மேம்படுத்துவதில்லை. நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துதல், கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்துதல், நீரிழிவு மற்றும் புற்றுநோயைத் தடுத்தல் என பல்வேறு நன்மைகளை வழங்குகிறது.

    கேரட்டில் உள்ள பீட்டா கரோட்டின், வைட்டமின் ஏ-வை ரோடாப்சின் நிறமியாக மாற்ற உதவுகிறது. இது மாலை நேரம் அல்லது குறைந்த வெளிச்சம் உள்ள சூழலில் கண் பார்வையை மேம்படுத்தும் தன்மை கொண்டது.

    குறைந்த அடர்த்தி கொண்ட லிப்போ புரோட்டீன் கொழுப்பில் 25 சதவீதம் வரை குறைப்பதற்கு வைட்டமின் ஏ உதவும் என்று ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. இதனால் இதய ஆரோக்கியம் மேம்படும். மேலும் இது தீங்கு விளைவிக்கும் சூரிய ஒளியில் இருந்து சருமத்தை காக்கும். மேலும் முன்கூட்டியே சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படுவதையும் கட்டுப்படுத்தும்.

    கரோட்டினாய்டுகள் புற்றுநோய் உயிரணுக்களின் வளர்ச்சியை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆன்டி ஆக்சிடென்டுகள், நீரிழிவு எதிர்ப்பு பண்புகள், கொழுப்பைக் குறைக்கும் திறன் மற்றும் நோய் எதிர்ப்பு மண்டல செயல்பாட்டை மேம்படுத்தும் தன்மைகளை கொண்டிருப்பதன் மூலம் இதய நோய்களை தடுப்பதற்கும் உதவுகின்றன.

    நுரையீரல் மற்றும் சரும புற்றுநோய்க்கான வாய்ப்புகளை குறைக்கவும் கரோட்டினாய்டுகள் உதவுகின்றன. கண் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த துணை புரிகின்றன. கரோட்டினாய்டு நிறமிதான், கேரட்டுக்கு தனித்துவமான நிறத்தை அளிக்கிறது.

    இந்தியாவில் சுமார் 30 சதவீதம் பேர் கல்லீரல் நோய் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். மரபணு காரணிகள் மற்றும் மாறுபட்ட வாழ்க்கை முறை காரணமாக இந்த நோய் உண்டாகிறது.

    போதுமான அளவு கேரட்டை உட்கொள்வது, பிரக்டோஸ் உணவுகளை எடுத்துக்கொள்வது ஆரோக்கியமான கல்லீரலுக்கு வழிவகுக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    கேரட்டில் வைட்டமின் பி-6, நார்ச்சத்து இவை இரண்டும் அதிகம் உள்ளன. டைப்-2 சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு வைட்டமின் பி-1 மற்றும் பி-6 குறைபாடு ஏற்படக்கூடும்.

    நீரிழிவு நோயாளிகள் ரத்தத்தில் சர்க்கரை அளவை நிர்வகிக்க நார்ச்சத்து கொண்ட பொருட்களை உட்கொள்வது முக்கியமானது. உணவு மூலம் நார்ச்சத்தை பெறுவது டைப்-2 நீரிழிவு நோய் அபாயத்தைக் குறைக்கவும் உதவும். மேலும் நார்ச்சத்து உட்கொள்வது ரத்தத்தில் குளுக்கோஸ் அளவை குறைக்கவும் உதவும்.

    கேரட் ஆரோக்கியமானதாக இருந்தாலும், அதிகம் உட்கொள்வது ஆபத்தானது. குறிப்பாக கேரட்டை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது உடலில் நச்சுத்தன்மையை அதிகரிக்க வழிவகுக்கும். மேலும் பீட்டா கரோட்டின் அளவு அதிகரித்து சருமத்தில் நிறமாற்றத்தையும் ஏற்படுத்தும்.
    ×