என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உடல் எடை"

    • ‘தி டர்ட்டி பிக்சர்ஸ்' படம் இவரை பெரியளவில் பிரபலப்படுத்தியது.
    • எடையால் அதிக விமர்சனங்களை எதிர்கொண்ட வித்யா பாலன், திடீரென ஏதேதோ செய்து எடையை வெகுவாக குறைத்துள்ளார்.

    பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழும் வித்யா பாலன், தமிழில் அஜித்குமார் ஜோடியாக 'நேர்கொண்ட பார்வை' படத்தில் நடித்து கவனம் ஈர்த்தார். மறைந்த கவர்ச்சி கன்னி சில்க் ஸ்மிதா கதாபாத்திரத்தில் இவர் நடித்த 'தி டர்ட்டி பிக்சர்ஸ்' படம் இவரை பெரியளவில் பிரபலப்படுத்தியது. சமீபகாலமாகவே தனது எடையால் அதிக விமர்சனங்களை எதிர்கொண்ட வித்யா பாலன், திடீரென ஏதேதோ செய்து எடையை வெகுவாக குறைத்துள்ளார்.

    அது எப்படி என்று அவரிடம் கேட்டபோது, ''உடல் எடை அதிகரிப்பால் அவதிப்பட்டு வந்த நான் ஜிம் சென்று பயிற்சி மேற்கொண்டேன். ஆனால் எடை குறையாமல் கூடித்தான் போனது. இதனால் பிரச்சனையை கண்டறிய டாக்டர்களிடம் சென்றேன்.

    மருத்துவ பரிசோதனை இது கொழுப்பல்ல, வீக்கம் என்று சொன்னார்கள். அவர்கள் கொடுத்த வீக்கத்தைக் குறைக்கும் உணவுமுறையை பயன்படுத்தினேன். அந்தவகையில் நான் 'ஜிம்' செல்லாமலேயே எடையை குறைத்தேன்'', என்றார்.

    • உடல் எடை தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்வி என்னை உருவக் கேலியை செய்ததற்கு சமம் என நடிகை கூறினார்.
    • தனது கேள்வியால் வருத்தம் ஏற்பட்டிருந்தால் நடிகை கவுரி கிஷனிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்வதாக யூ டியூபர் கூறினார்.

    அபின் ஹரிஹரன் இயக்கத்தில் அறிமுக நடிகர் ஆதித்யா மாதவன் மற்றும் 96 பட நடிகை கௌரி கிஷன் நடிப்பில் அதர்ஸ் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம் திரையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    இப்படத்தின் முந்தைய செய்தியாளர் சந்திப்பு கடந்த 30-ம் தேதி நடைபெற்றது. படத்தின் பாடலில் நடிகையை தூக்கினீர்களே நடிகையின் எடை என்ன? என கதாநாயகனிடம் யூடியூபர்கள் கேள்வி எழுப்பினர்.

    இது தொடர்பாக மற்ற தனியார் தொலைக்காட்சி நேர்காணலில் பேசிய கௌரி கிஷன் இதுபோன்ற ஸ்டுப்பிட்டான கேள்விகள் எழுப்பப்படுகிறது. இதுபோன்ற கேள்விகள் சரியான கேள்விகள் அல்ல என அந்த விமர்சனம் தொடர்பாக பேசியிருந்தார்.

    இந்த நிலையில் அண்மையில் நடைபெற்ற அதர்ஸ் பட செய்தியாளர் சந்திப்பில், நடிகை கௌரி கிருஷ்ணனை டார்கெட் செய்யும் அளவிற்கு யூ டியூபர்கள் இருவர் மாறி மாறி கேள்விகளை எழுப்பினர்.

    இதற்கு பதில் அளித்த நடிகை கௌரி கிருஷ்ணன் உடல் எடை தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்வி என்னை உருவக் கேலியை செய்ததற்கு சமம். கதாநாயகனிடம் என்னைப் பற்றி கேட்டாலும் என்னுடைய எடை தொடர்பாகவே எழுப்பப்பட்ட கேள்வி எனவே அந்த கேள்வி தொடர்பாக நான் விமர்சனம் செய்திருந்தேன் என நிதானமாக பதில் அளித்தார்.

    கௌரி கிஷனின் இந்த துணிச்சல் இணையத்தில் பாராட்டுகளை பெற்றது. பல நடிகர்கள் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். நடிகர் சங்கமும் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தது.

    இதனையடுத்து நடிகை கவுரி கிஷனின் எடை குறித்து அநாகரிக கேள்வி எழுப்பியது தொடர்பாக வருத்தம் தெரிவித்து யூடியூபர் வீடியோ வெளியிட்டுள்ளார்.

    அந்த வீடியோவில், நடிகை கவுரி கிஷனின் எடை குறித்து தான் எழுப்பிய கேள்வி தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக யூடியூபர் R.S.கார்த்திக் விளக்கம் அளித்துள்ளார். மேலும், தனது கேள்வியால் வருத்தம் ஏற்பட்டிருந்தால் நடிகை கவுரி கிஷனிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்வதாக அவர் தெரிவித்தார்.

    இந்நிலையில் யூடியூபர் மன்னிப்பு கேட்கவில்லை என நடிகை கவுரி கூறியுள்ளார். மேலும், பொறுப்புணர்வு இல்லாமல் கேட்பது மன்னிப்பு அல்ல. வருத்தத்தையோ அல்லது வெற்று வார்த்தைகளையோ ஏற்றுக்கொள்ள மாட்டேன். கேள்வியை தவறாக புரிந்து கொண்டார், அது ஒரு வேடிக்கையான கேள்வி என மீண்டும் கூறுவதா? என நடிகை கவுரி கூறியுள்ளார்.

    • கௌரி கிஷனை டார்கெட் செய்யும் அளவிற்கு யூடியூபர் கேள்விகளை எழுப்பினர்.
    • கௌரி கிஷனின் துணிச்சல் இணையத்தில் பாராட்டுகளை பெற்றது

    அபின் ஹரிஹரன் இயக்கத்தில் அறிமுக நடிகர் ஆதித்யா மாதவன் மற்றும் 96 பட நடிகை கௌரி கிஷன் நடிப்பில் அதர்ஸ் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம் நாளை திரைக்கு வர உள்ளது.

    இப்படத்தின் முந்தைய செய்தியாளர் சந்திப்பு கடந்த 30 ஆம் தேதி நடைபெற்றது. படத்தின் பாடலில் நடிகையை தூக்கினீர்களே நடிகையின் எடை என்ன? என கதாநாயகனிடம் யூடியூபர்கள் கேள்வி எழுப்பினர்.

    இது தொடர்பாக மற்ற தனியார் தொலைக்காட்சி நேர்காணலில் பேசிய கௌரி கிஷன் இதுபோன்ற ஸ்டுப்பிட்டான கேள்விகள் எழுப்பப்படுகிறது. இதுபோன்ற கேள்விகள் சரியான கேள்விகள் அல்ல என அந்த விமர்சனம் தொடர்பாக பேசியிருந்தார்.

    இந்த நிலையில் அண்மையில் நடைபெற்ற அதர்ஸ் பட செய்தியாளர் சந்திப்பில், நடிகை கௌரி கிருஷ்ணனை டார்கெட் செய்யும் அளவிற்கு யூ டியூபர்கள் இருவர் மாறி மாறி கேள்விகளை எழுப்பினர்.

    இதற்கு பதில் அளித்த நடிகை கௌரி கிருஷ்ணன் உடல் எடை தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்வி என்னை உருவக் கேலியை செய்ததற்கு சமம். கதாநாயகனிடம் என்னைப் பற்றி கேட்டாலும் என்னுடைய எடை தொடர்பாகவே எழுப்பப்பட்ட கேள்வி எனவே அந்த கேள்வி தொடர்பாக நான் விமர்சனம் செய்திருந்தேன் என நிதானமாக பதில் அளித்தார்.

    கௌரி கிஷனின் இந்த துணிச்சல் இணையத்தில் பாராட்டுகளை பெற்றது. பல நடிகர்கள் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். நடிகர் சங்கமும் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தது.

    இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக கௌரி கிஷன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த அறிக்கையில், "ஒருவரின் உடல் அமைப்பு அல்லது தோற்றத்தை குறிவைக்கும் கேள்விகள் எந்த சூழலிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதே கேள்வியை ஒரு நடிகரிடம் கேட்பார்களா? என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. இருப்பினும் சம்பந்தப்பட்ட யூடியூபரை குறிவைத்து விமர்சிக்க வேண்டாம்.

    மேலும் எனக்குக் கிடைத்த அனைத்து ஆதரவிற்கும் நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இது நான் எதிர்பார்க்காதது" என்று தெரிவித்திருந்தார்

    இந்நிலையில், நடிகை கவுரி கிஷனின் எடை குறித்து அநாகரிக கேள்வி எழுப்பியது தொடர்பாக வருத்தம் தெரிவித்து யூடியூபர் வீடியோ வெளியிட்டுள்ளார்.

    அந்த வீடியோவில், நடிகை கவுரி கிஷனின் எடை குறித்து தான் எழுப்பிய கேள்வி தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக யூடியூபர் R.S.கார்த்திக் விளக்கம் அளித்துள்ளார். மேலும், தனது கேள்வியால் வருத்தம் ஏற்பட்டிருந்தால் நடிகை கவுரி கிஷனிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்வதாக அவர் தெரிவித்தார்.

    • கௌரி கிஷனின் துணிச்சல் இணையத்தில் பாராட்டுகளை பெற்றது.
    • நடிகர் சங்கமும் கௌரி கிஷனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தது.

    அபின் ஹரிஹரன் இயக்கத்தில் அறிமுக நடிகர் ஆதித்யா மாதவன் மற்றும் 96 பட நடிகை கௌரி கிஷன் நடிப்பில் அதர்ஸ் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம் நாளை திரைக்கு வர உள்ளது.

    இப்படத்தின் முந்தைய செய்தியாளர் சந்திப்பு கடந்த 30 ஆம் தேதி நடைபெற்றது. படத்தின் பாடலில் நடிகையை தூக்கினீர்களே நடிகையின் எடை என்ன? என கதாநாயகனிடம் யூடியூபர்கள் கேள்வி எழுப்பினர்.

    இது தொடர்பாக மற்ற தனியார் தொலைக்காட்சி நேர்காணலில் பேசிய கௌரி கிஷன் இதுபோன்ற ஸ்டுப்பிட்டான கேள்விகள் எழுப்பப்படுகிறது. இதுபோன்ற கேள்விகள் சரியான கேள்விகள் அல்ல என அந்த விமர்சனம் தொடர்பாக பேசியிருந்தார்.

    இந்த நிலையில் அண்மையில் நடைபெற்ற அதர்ஸ் பட செய்தியாளர் சந்திப்பில், நடிகை கௌரி கிஷனை டார்கெட் செய்யும் அளவிற்கு யூ டியூபர்கள் இருவர் மாறி மாறி கேள்விகளை எழுப்பினர்.

    இதற்கு பதில் அளித்த நடிகை கௌரி கிஷன் உடல் எடை தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்வி என்னை உருவக் கேலியை செய்ததற்கு சமம். கதாநாயகனிடம் என்னைப் பற்றி கேட்டாலும் என்னுடைய எடை தொடர்பாகவே எழுப்பப்பட்ட கேள்வி எனவே அந்த கேள்வி தொடர்பாக நான் விமர்சனம் செய்திருந்தேன் என நிதானமாக பதில் அளித்தார்.

    கௌரி கிஷனின் இந்த துணிச்சல் இணையத்தில் பாராட்டுகளை பெற்றது. பல நடிகர்கள் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். நடிகர் சங்கமும் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தது.

    இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக கௌரி கிஷன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த அறிக்கையில், "இந்த வார தொடக்கத்தில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பின் போது, எனக்கும் ஒரு யூடியூபருக்கும் இடையே ஒரு வாக்குவாதம் ஏற்பட்டு எதிர்பாராத விதமாக பதட்டமாக மாறியது.

    ஒரு நபரின் உடல் அல்லது தோற்றத்தை குறிவைக்கும் கருத்துகள் அல்லது கேட்கப்படும் கேள்விகள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்த சூழலிலும் சரியானது கிடையாது. அதே சமயம் சம்பந்தப்பட்ட யூடியூபரை குறிவைத்து விமர்சிக்க வேண்டாம்.

    விமர்சனங்கள் எனது தொழிலின் ஒரு பகுதியாக இருப்பதை புரிந்திருக்கிறேன். ஆனால் ஒருவரின் உடல் அமைப்பு அல்லது தோற்றத்தை குறிவைக்கும் கேள்விகள் எந்த சூழலிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

    இதே கேள்வியை ஒரு நடிகரிடம் கேட்பார்களா? என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. அந்த தருணத்தில் உறுதியுடன் நின்றது எனது கடமை என நினைக்கிறேன். இது எனக்காக மட்டுமல்ல. இதேபோன்ற அனுபவங்களை சந்தித்த அனைவருக்குமானது.

    படம் பற்றும் என்னுடைய நடிப்பை பற்றியும் கேட்கப்படும் கேள்விகளை தான் நான் விரும்புகிறேன். ஒரு கடினமான சூழ்நிலையில் என் நிலைப்பாட்டில் நான் உறுதியாக நிற்க முடிந்ததற்கு எனக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.

    எனக்கு நடந்தது ஒன்றும் புதிதல்ல. அது பல இடங்களில் நடந்து வருகிறது. பாடி ஷேமிங் செய்வதை இது இயல்பாக்குகிறது. நமது அசௌகரியத்தை வெளிப்படுத்தவும், தவறு செய்யும்போது கேள்வி கேட்கவும் நமக்கு உரிமை உண்டு.

    மேலும் எனக்குக் கிடைத்த அனைத்து ஆதரவிற்கும் நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இது நான் எதிர்பார்க்காதது. உங்கள் ஆதரவிற்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம், அம்மா சங்கம் (மலையாள திரைப்படத் துறை), தென்னிந்திய நடிகர் சங்கம் ஆகியவற்றிற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

    பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள் மற்றும் உங்கள் அசைக்க முடியாத ஆதரவிற்கு பொதுமக்களுக்கு நன்றி. எனது சக ஊழியர்கள் மற்றும் நண்பர்களுடன் இணைந்து எனக்கு ஆதரவு அளித்த தொழில்துறையில் உள்ள அனைவருக்கும் நன்றி" என்று தெரிவித்துள்ளார்.

    • உணவு, தங்கும் வசதிகளை ஜிம் நிர்வாகமே அளிக்கிறது.
    • இதுபோன்று எடைக்குறைப்பது உடல் நலத்திற்கு கேடு என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

    இன்றைய காலக்கட்டத்தில் மாறிவரும் உணவு பழக்கத்தால் பலர் உடல் பருமனால் அவதிக்குள்ளாகினர். அவ்வாறு அவதிக்குள்ளாகுபவர்கள் டயட் மற்றும் உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைக்க விரும்புகின்றனர். இதனால் பலரும் ஜிம்-மை நோக்கி படையெடுக்கின்றனர். இதன் காரணமாக தற்போது வீதிக்கு ஒரு உடற்பயிற்சி கூடம் திறக்கப்படுகிறது.

    அவ்வாறு உடற்பயிற்சி கூடத்தை நோக்கி வருபவர்களுக்காக பல்வேறு அறிவிப்புகளை ஜிம் நிர்வாகத்தினர் அறிவிக்கின்றனர். அந்த வகையில் சீனாவில் ஜிம் நிர்வாகம் அறிவித்த அறிவிப்பு பலரையும் அதிர்ச்சியிலும், ஆச்சரியத்திலும் உறைய வைத்துள்ளது.

    அதாவது, 3 மாதங்களில் 50 கிலோ எடையை குறைப்பவர்களுக்கு சுமார் ரூ.1 கோடியே 30 லட்சம் மதிப்புள்ள Porsche காரை பரிசாக அளிக்க உள்ளதாக ஜிம் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த சவாலில் பங்கேற்க அனுமதி கட்டணமாக ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் வசூலிக்கப்படுகிறது. மேலும் உணவு, தங்கும் வசதிகளை ஜிம் நிர்வாகமே அளிக்கிறது. இதனால் பலரும் அந்த உடற்பயிற்சி கூடத்தை நோக்கி படையெடுக்கின்றனர்.

    இதனிடையே, இதுபோன்று எடைக்குறைப்பது உடல் நலத்திற்கு கேடு என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

    உடற் பயிற்சி கூடத்திற்கு சென்றால் உடல் எடை குறைக்கலாம், உடல் நலம் காக்கலாம் என்று பலரும் நினைக்கையில் இது போன்ற அறிவிப்பு லாப நோக்கத்திற்காக அறிவிக்கப்பட்டது என்று இணையதள வாசிகளிடையே விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. 

    • வாழைப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம் இதயத்திற்கு நலம் சேர்க்கும்.
    • வாழைப்பழத்தில் இருக்கும் இயற்கையான சர்க்கரை உடலுக்கு தேவையான ஆற்றலை அளிக்கும்.

    வாழைப்பழம் ஊட்டச்சத்துமிக்கதாகவே இருந்தாலும் அதனை அளவோடுதான் உட்கொள்ள வேண்டும். ஆரோக்கியமான நபர் தினமும் ஒன்று அல்லது இரண்டு வாழைப்பழம் சாப்பிட்டாலே போதுமானது. ஏனெனில் வாழைப்பழத்தில் கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் சர்க்கரை அதிகமாகவே உள்ளன. உடல் எடை அதிகரிப்பு, ரத்தத்தில் சர்க்கரை அளவில் ஏற்ற இறக்கங்களை தவிர்க்க மிதமான அளவு சாப்பிடுவதே முக்கியமானது. அதனை அதிகமாக சாப்பிடும்போது அதில் இருக்கும் நார்ச்சத்து காரணமாக வயிறு உப்புசம் அல்லது வயிற்றுப்போக்கு போன்ற இரைப்பை குடல் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

    * வாழைப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம் இதயத்திற்கு நலம் சேர்க்கும். ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க உதவும். இதயம் அதிகம் வேலை செய்ய வேண்டியிருக்காது.

    * புகைப்பிடிக்கும் பழக்கத்தை நிறுத்த முயற்சிக்கிறீர்களா? வாழைப்பழங்கள் உதவும். அதிலிருக்கும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் கலவையானது நிக்கோடின் ஏற்படுத்தும் ஏக்கங்களை குறைக்க உதவும்.

    * வாழைப்பழத்தில் இருக்கும் இயற்கையான சர்க்கரை உடலுக்கு தேவையான ஆற்றலை அளிக்கும்.

    * மன அழுத்தமாகவோ, சோகமாகவோ உணர்கிறீர்களா? வாழைப்பழத்தில் இருக்கும் வைட்டமின் பி6, செரோடோனின் மற்றும் டோபமைன் என்ற நல்ல ரசாயனங்களை உற்பத்தி செய்ய மூளையை ஊக்கப்படுத்தும். எனவே பரபரப்பாக இருக்கும்போது வாழைப்பழம் சாப்பிடுவது மனதை அமைதிப்படுத்தவும், கடினமான தருணங்களை நிர்வகிக்கவும் உதவிடும்.

    * பகலில் சோர்வாக உணர்ந்தால், உடலில் இரும்புச்சத்து குறைவாக இருக்கலாம். வாழைப்பழத்தில் இருக்கும் இரும்புச்சத்து உடலில் அதிக ரத்த சிவப்பணுக்களை உருவாக்க உதவும். ரத்த சோகையை எதிர்த்து போராடவும் வித்திடும்.

    • சில சமயங்களில் வேலை முடிந்து வீட்டுக்கு வர தாமதமாகிவிடும்.
    • இரவில் இனிப்பு பதார்த்தங்களை சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும்.

    உடல் உடையை குறைக்க முயற்சிப்பவர்கள் உணவுக்கட்டுப்பாடு விஷயத்தில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். அதிலும் இரவு உணவை உண்ணும் விஷயத்தில் நேரக்கட்டுப்பாட்டையும் பின்பற்ற வேண்டும். ஏனெனில் இரவு தூக்கத்திற்கு எவ்வளவு நேரத்திற்கு முன்பு சாப்பிடுகிறீர்கள் என்பதும் முக்கியமானது. உடல் பருமனாக இருப்பவர்கள் இரவு 7 மணிக்கு சாப்பிடுவது நல்லதா? இரவு 9 மணிக்கு சாப்பிடுவது ஏற்புடையதா? இந்த இரண்டு மணி நேர வித்தியாசம் உடலில் என்னென்ன மாற்றங்கள், பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பது பற்றி பார்ப்போம்.

    இரவு உணவு ஏன் முக்கியமானது?

    நமது உடல் சர்க்காடியன் ரிதம் எனப்படும் உள் அட்டவணையை கொண்டு செயல்படுகிறது. அதுதான் தூக்கம், உடல் ஆற்றல், ஹார்மோன்கள், வளர்சிதை மாற்றம், செரிமானம் என ஒட்டுமொத்த உடலமைப்பையும் நிர்வகிக்கிறது.

    இரவில் தாமதமாகவோ அல்லது அதிகமாகவோ சாப்பிடும்போது அதனை ஜீரணமாக்குவதற்கு உடல் அதிக நேரம் போராட வேண்டியிருக்கும். குறிப்பாக இரவில் தூக்கத்தின்போது ஓய்வெடுக்க வேண்டிய நேரத்தில் உடல் இந்த வேலையை செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்படும்.

    அதேவேளையில் மற்ற நேரங்களை விட இரவு நேரத்தில் உடல் கொழுப்பை வேகமாக எரிக்காது. வளர்சிதை மாற்றத்தையும் குழப்பி இறுதியில் உடல் எடை அதிகரிப்புக்கு வழிவகுத்துவிடும்.

    எப்போதாவது தாமதமாக உண்ணலாமா?

    சில சமயங்களில் வேலை முடிந்து வீட்டுக்கு வர தாமதமாகிவிடும். போக்குவரத்து நெரிசலில் சிக்குவதும் தாமதத்தை ஏற்படுத்திவிடும். அந்த மாதிரியான சூழலில் இரவு உணவை தாமதமாகத்தான் சாப்பிட நேரிடும். அப்போது வழக்கமாக சாப்பிடும் உணவுப்பழக்கத்திற்கு மாறாக சாப்பிடுவது சிறந்தது.

    அதாவது வறுத்த புரதம் (கிரில் சிக்கன், பொரித்த மீன்), காய்கறி சாலட், காய்கறி சூப், பருப்பு கலந்த சாலட் உள்ளிட்ட உணவு பொருட்களை உட்கொள்வது சிறந்தது. கொழுப்பு நிறைந்த உணவு பொருட்கள், பீட்சா சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

    சாப்பிட்ட பிறகு சிறிது தூரம் நடைப்பயிற்சி மேற்கொள்வதும் செரிமானத்திற்கும், ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும் உதவிடும். இரவில் இனிப்பு பதார்த்தங்களை சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும்.



    இரவு 7 மணிக்கு சாப்பிட்டால்....

    தூங்குவதற்கு முன்பு சீக்கிரமாக அதாவது 7 மணி அளவில் சாப்பிடும்போது அந்த உணவு செரிமானம் செய்வதற்கு உடலுக்கு போதுமான நேரம் கிடைக்கும். கொழுப்பையும் சரி செய்து அதிக கொழுப்பை எரிக்க வாய்ப்பு கிடைக்கும்.

    தூங்க ஆரம்பிக்கும்போது செரிமான செயல்பாடு முடிவடைந்துவிடும் என்பதால் உடலுக்கு போதுமான ஓய்வு நேரம் கிடைக்கும். அதனால் இடையூறு இன்றி ஆழ்ந்த தூக்கத்தை பெறலாம்.

    தூங்குவதற்குள் செரிமான செயல்பாடு முடிவடைந்துவிடும் என்பதால் வயிறும் வீக்கமின்றி இயல்பாக இருக்கும். நள்ளிரவில் பசி எடுப்பதும் குறையும். இரவு 7 மணியில் இருந்து காலை 7 மணி வரை நீண்ட இடைவெளி கிடைப்பதால் கொழுப்பின் அளவையும் கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும்.

    இரவு தாமதமாக சாப்பிடும்போது என்ன நடக்கும்?

    இரவு 9 மணிக்கோ அதற்கு பிறகோ சாப்பிடும்போது வளர்சிதை மாற்றம் மெதுவாக நடப்பதற்கு வழிவகுப்பதோடு கூடுதல் பசி உணர்வையும் உருவாக்கி விடும். அதனால் அதிகம் சாப்பிட நேரிடும். சோர்வையும் உணரக்கூடும்.

    அதிலும் இரவில் எண்ணெய் சேர்க்கப்பட்ட உணவுகள், கிரீம் வகை உணவுகள், கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை உட்கொண்டுவிட்டு உடனே தூங்க சென்றால் உடலுக்கு அந்த உணவை ஜீரணிக்க போதிய வாய்ப்பு கிடைப்பதில்லை. செரிமான செயல்பாட்டுக்கு இடையூறை ஏற்படுத்தி தூக்கத்தையும் பாதிக்கும். உடல் எடை அதிகரிப்புக்கும் காரணமாகிவிடும்.

    • ஐடி ஊழியர்களில் பெரும் சதவீதம் பேர் உடல் பருமனாக இருப்பதாக ஆய்வுகள் காட்டுகின்றன.
    • சிறு வயதிலிருந்தே சர்க்கரை மற்றும் உப்பு அதிகம் உள்ள உணவுகளை உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்தாதீர்கள்.

    இந்தியாவில் அதிக எடை கொண்ட உடல் குண்டானவர்கள் எண்ணிக்கை 2050 -ம் ஆண்டுக்குள் 450 மில்லியனை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அப்போது 15 முதல் 24 வயதுக்குட்பட்ட இளைஞர்களில் பெரும்பாலோர் அதிக எடை கொண்டவர்களாகக் இருக்க வாய்ப்புள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.

    5 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் கூட பெரும்பான்மையானவர்கள் குண்டாக இருப்பவர்கள். சீனா மற்றும் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக உடல் பருமனில் இந்தியா தற்போது உலகில் 3-வது இடத்தில் உள்ளது.

    சில ஆண்டுகளில் இந்தியா அமெரிக்காவைக் கூட விஞ்சி, உலகின் 2-வது அதிக உடல் பருமன் கொண்ட நாடாக மாறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    ஐடி ஊழியர்களில் பெரும் சதவீதம் பேர் உடல் பருமனாக இருப்பதாக ஆய்வுகள் காட்டுகின்றன. இந்தப் பிரச்சனை நமக்கு எச்சரிக்கை மணி அடிக்கிறது என்பதை நாம் உணர வேண்டும்.

    அதிக எடை கொண்டவர்களுக்கு வேறு பல பிரச்சனைகள் ஏற்படும் அபாயம் உள்ளது. வகை 2 நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம். இதய நோய்கள், கொழுப்பு கல்லீரல், மன நோய்கள், பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் பிரச்சனைகள் ஏற்படும்.

    உணவு உட்கொள்ளும் போது பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

    உடல் பருமனுக்கு முக்கிய சிகிச்சை கவனத்துடன் சாப்பிடுவதுதான் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

    பசிக்கும் போது மட்டுமே சாப்பிட வேண்டும். உணவு நேரம் என்பதால் திடீரென சாப்பிடுவது எடை அதிகரிக்க வழிவகுக்கும். சீரான உணவு வழக்கமான உடற்பயிற்சி, உடல் செயல்பாடு ஆரோக்கியமான வாழ்க்கை முறை, போதுமான தூக்கம் மற்றும் மன அழுத்தத்தை நிர்வகிப்பது ஆகியவற்றுடன் உடல் பருமனிலிருந்து விடுபட உதவும்.

    பதப்படுத்தப்பட்ட பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுகள் இளைஞர்கள் மற்றும் குழந்தைகளில் உடல் பருமனுக்கு முக்கிய காரணம் என்று உலக உடல் பருமன் கூட்டமைப்பு கூறுகிறது.

    சிறு வயதிலிருந்தே சர்க்கரை மற்றும் உப்பு அதிகம் உள்ள உணவுகளை உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்தாதீர்கள்.

    காய்கறிகள், பழங்கள் மற்றும் வீட்டில் சமைத்த உணவுகளை உண்ணுங்கள். உடற்பயிற்சி மற்றும் உடல் செயல்பாடு ஒவ்வொரு நாளும் அவசியம்.

    குழந்தைகள் அதிகமாக மொபைல் போன்கள் மற்றும் டிவிகளைப் பயன்படுத்துவதும் மைதானத்தில் விளையாடுவது குறைவதும் உடல் பருமனுக்குக் காரணமாகின்றன என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • கவலையும் மன அழுத்தமும் தொப்பை வர முக்கிய காரணிகள்.
    • குறைவான நேரம் உறங்கும் பெண்களுக்கு எடை வேகமாக கூடுகிறது.

    ஆழ்ந்த உறக்கம் பசித்தன்மையை தூண்டும் ஹார்மோன் செயல்பாட்டை சீராக்கும். அதே நேரத்தில் தூக்கமின்மை அதிகம் சாப்பிட வைத்துவிடும் என்கிறார்கள், ஆராய்ச்சியாளர்கள்.

    சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று இப்படி ஒரு முடிவைத்தருகிறது. அதுவும் பெண்களுக்கு.

    சரியாக தூங்காத பெண்கள், முறையாக தூங்கும் பெண்களை விட 300 கலோரி அதிக உணவு உட்கொள்வதாக தெரியவந்துள்ளதாம்.

    கவலையும் மன அழுத்தமும் தொப்பை வர முக்கிய காரணிகள். சரியாகத் தூங்கும்போது இவை இரண்டையும் விரட்டலாம்.

    7 முதல் 9 மணி நேரம் வரை தூங்கும் பெண்களை விட குறைவான நேரம் உறங்கும் பெண்களுக்கு எடை வேகமாக கூடுகிறது. 7 மணி நேரத்திற்கு குறைவாகவோ, 9 மணி நேரத்திற்கு அதிகமாகவோ தூங்குபவர்கள், மற்றவர்களைவிட, பருமனாகவும், எடை போடவும் அதிக வாய்ப்புகள் உள்ளன என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    இரவு நன்றாக உறங்கும்போது, அடுத்த ஒரு நாள் முழுவதுக்கும் தேவையான ஆற்றல் கிடைக்கும். உடற்பயிற்சி தூக்கத்தை சீராக்க உதவும் என்பதால், நம் தூங்கும் முறையை சரி செய்வதன் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஆரம்பிக்கலாம்.

    • இவர்களால் வேகமாக நடக்க முடியாது.
    • மாடிப் படிகளில் ஏறி, இறங்க முடியாது.

    உணவு முறை, வாழ்க்கை முறை மாற்றங்கள் பெரியவர்கள் மட்டுமின்றி, குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது. அதேசமயம் கொரோனாவிற்கு முன்புவரை, இந்த பாதிப்புகள் குறைவாகத்தான் இருந்தன. ஆனால் கொரோனா பொதுமுடக்க காலங்களில், செல்போன் உலகிற்குள் சிக்கிக்கொண்டவர்களால் இன்றுவரை அதிலிருந்து வெளிவர இயலவில்லை. மக்களின் இயல்பான வெளியுலக செயல்பாடுகள் குறைந்துவிட்டன. அவர்கள், ஒரே இடத்தில் படிக்கவும், வேலை செய்யவும், வீட்டிற்குள்ளேயே விளையாடவும் கற்றுக்கொண்டதால், உடல் பருமன் பாதிப்பிற்கு ஆளாகிறார்கள்.

    இயல்பான குழந்தைகளை விட, இவர்கள் மிக எளிதாகவே சோர்ந்து விடுவார்கள். குறிப்பாக, அன்றாட வேலைகளை செய்வதே இவர்களுக்கு பெரிய சவாலாக இருக்கும். உடல் பருமன் காரணத்தால், நிறைய குழந்தைகள் கவன சிதைவிற்கு உள்ளாவதாக நிறைய ஆய்வுகள் விளக்குகின்றன. பலர் இளம் வயதிலேயே நீரிழிவு நோய் பாதிப்பிற்கும் உள்ளாகிறார்கள்.

    'ஒபிசிட்டி' எனப்படும் உடல் பருமன் பிரச்சினைகள், இப்போது சிறு குழந்தைகள் வரை வந்துவிட்டது. ஒரு வகுப்பில், 50 குழந்தைகள் படிக்கிறார்கள் என்றால், அதில் 5 குழந்தைகள் உடல் பருமனாக இருப்பது சகஜமாகிவிட்டது. இவர்களால் மற்ற குழந்தைகளைப் போல வேகமாக நடக்க முடியாது. மாடிப் படிகளில் ஏறி, இறங்க முடியாது. உடற்கல்வி வகுப்புகளில், இயல்பான குழந்தைகளைப் போல துள்ளிக் குதித்து விளையாட முடியாது.

    இத்தகைய காரணங்களால், அவர்கள் இயல்பான குழந்தைகளிடமிருந்து வேறுபடுகிறார்கள். கூடவே பருமனான குழந்தைகள் அணியக்கூடிய பெரிய சைஸ் உடை நாகரிகமும், அவர்களை மற்ற குழந்தைகளிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டும். இதனால் அவர்கள், தனிமை நிறைந்த தனி உலகிற்குள் சிக்கிக்கொள்கிறார்கள். இது அவர்களை உடலளவிலும், மனதளவிலும் பாதிக்கும்.

    • தற்போது அறிமுகமாகியுள்ளது பாடி வால்யூம் இன்டிகேட்டர் (BVI).
    • இச்சோதனை பி.வி.ஐ. ஆப் சோதனை மூலம் நடைபெறுகிறது

    தற்போது உடல் எடையை உயரத்துடன் தொடர்புபடுத்தி அளவிடும் பாடி மாஸ் இன்டெக்ஸ் (BMI) புழக்கத்தில் உள்ளது. 1830-க்குப் பிறகு அடால்ப் க்யூடெலட் என்ற பெல்ஜிய கணிதவியலாளரால் கண்டறியப்பட்ட இம்முறை தோராயமானது. தற்போது இதற்கு மாற்றாக அறிமுகமாகியுள்ளது, பாடி வால்யூம் இன்டிகேட்டர் (BVI).

    உடலின் மொத்த எடையோடு, வயிற்றிலுள்ள கொழுப்பையும் அளவிட்டு ஆரோக்கியமான எடை அளவு கணக்கிடப்படுகிறது. இச்சோதனை பி.வி.ஐ. ஆப் சோதனை மூலம் நடைபெறுகிறது. வயிற்றிலுள்ள கொழுப்புக்கும், இதய மற்றும் நீரிழிவு நோய்களுக்கும் உள்ள தொடர்பு உலகறிந்த ஒன்று.

    2012-ல் எடுக்கப்பட்ட ஆய்வுப்படி உடல்பருமனால் பாதிக்கப்பட்ட 3 லட்சம் ஐரோப்பியர்களில் பலருக்கும் இடுப்பின் அளவு 34-40 அங்குலம் இருந்ததை சுட்டிக்காட்டுகிறார் மேயோ கிளினிக் ஆராய்ச்சிக்குழுவைச் சேர்ந்த மருத்துவர் ஜோஸ் மெதினா இனோஜோஸா. பி.எம்.ஐ. பின்தங்கியது, இடுப்பில் சேரும் கொழுப்பை அளவிடுவதில்தான். பி.வி.ஐ. உடல் எடையையும், வயிற்றிலுள்ள கொழுப்பையும் துல்லியமாக பாடி இமேஜ் முறையில் அளவிடுகிறது.

    • உடல் பருமனால் பல்வேறு நோய்கள் ஏற்படும்.
    • சமச்சீர் உணவின் அவசியத்தை அறிந்து கொள்ள வேண்டும்.

    வேலூர் சத்துவாச்சாரியில் அமுதம் கூட்டுறவு ஆயுஷ் மருத்துவமனை உள்ளது. இங்கு யோகா மற்றும் இயற்கை மருத்துவராக டாக்டர் அகிலா எல்லாளன் பணியாற்றுகிறார். உடல் பருமன் மற்றும் அதனால் ஏற்படும் நோய்கள், அதற்கான சிகிச்சை முறைகள் குறித்து அவர் கூறியதாவது;

    உடல் பருமன் என்பது எடை அதிகரிப்பு மற்றும் கொழுப்பு திரட்சி என வரையறுக்கப்படுகிறது. உடலில் அதிகப்படியான கொழுப்பு சேரும்போது ஆரோக்கியத்திற்கு எதிர்மறையான விளைவுகளை கொண்டிருக்கும். சமூகம் மற்றும் பொருளாதார தாக்கத்தினால் ஏற்படும் உடல் மற்றும் மனநல பாதிப்புகளும் உடல் பருமனுக்கு ஒரு முக்கிய காரணமாகும்.

    உடல் பருமன் என்பது உலக அளவில் இருக்கும் ஒரு பெரிய பிரச்சினையாகும். 21-ம் நூற்றாண்டில் நவீன உலகில், உடல் பருமன் என்பது கவலையாக உள்ளது. மோசமான உணவு முறைகள், வாழ்வியல் மாற்றங்கள், போதிய தூக்கமின்மை, ஹார்மோன் குறைபாடுகள், புகைபிடித்தல் மற்றும் மது பழக்கங்கள், ஸ்டீராய்டு மருந்துகள், மரபியல் உடல் செயல்பாடு குறைதல் என இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.

    நமது உடல்நிலை குறியீடு எண் பி.எம்.ஐ. மூலம் கணக்கிடப்படுகிறது. இது ஒரு நபரின் எடையை உயரத்தினால் கணக்கிடும் முறையாகும். உலக சுகாதார நிறுவனத்தின் தகவல்படி உடல் பருமன் என்பது பி.எம்.ஐ 30- ஐவிட அதிகமாகவோ அல்லது சமமாகவோ இருப்பது சரியான அளவாகும்.

    உடல் பருமனால் பல்வேறு நோய்கள் ஏற்படும். இருதய நோய்கள், நீரழிவு, ஆஸ்துமா, சில வகை புற்று நோய்கள், உயர் ரத்த அழுத்தம், தோல் நோய்கள், சிறுநீரக நோய்கள், கருவுறாமை, மாதவிடாய் கோளாறுகள், உளவியல் சார்ந்த பிரச்சினைகள் என பல்வேறு நோய்கள் ஏற்படுகிறது.

    இதற்கு நோயின் அடிப்படை காரணத்தை அறிந்து நீர், நெருப்பு, ஆகாயம், நிலம், காற்று ஆகிய பஞ்சபூதங்களின் கோட்பாடுகளைக் கொண்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதன் வகைகள் வருமாறு:-

    யோகா, மனிதனின் உடல் மற்றும் மனநலத்தை ஒருங்கிணைக்கும் முறையாகும். உடல் சுத்திகரிப்பு மற்றும் ஆரோக்கியமான வாழ்வியல் முறைகளை பின்பற்றுவதற்கான செயல் முறையாகும்.

    நல்ல உடல் நலத்தை நாடும் ஒவ்வொருவரும் சமச்சீர் உணவின் அவசியத்தை அறிந்து கொள்ள வேண்டும். சிறு தானிய உணவுகள், பருவ கால காய்கறிகள் மற்றும் பழங்கள், பாலிஷ் செய்யப்படாத அரிசி ஆகியவை சிறந்தவை. உணவு முறைகள் உடல் நல ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் செரிமானத்தை சீர்படுத்தவும் உதவுகிறது.

    விரத முறைகள் மூலமும் இதனை தவிர்க்கலாம். விரதம் என்பது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு உணவை விருப்பத்துடன் தவிர்க்கும் முறையாகும். விரதத்தின் தொடக்கத்தில் 'எனிமா' மூலம் குடலை முழுமையாக சுத்தம் செய்யப்படும். இம்முறையில் உடலில் உள்ள கழிவுகள் சிறந்த முறையில் வெளியேற்றப்படும்.

    நீராவி குளியல்

    நீராவி குளியல் என்பது சரும துவாரங்கள் வழியாக நச்சு கழிவுகள் வெளியேற்றப்படும். இது தோஷ சமநிலை சரி செய்து, ரத்த ஓட்டத்தை சீர்படுத்துகிறது. உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை தூண்டவும் உதவுகிறது.

    வாழை இலை குளியல்

    வாழை இலை பல்வேறு மருத்துவ குணங்களை உள்ளடக்கியது. இது ஒரு ஹீலியோ தெரபி முறையாகும். வாழை இலையில் பொட்டாசியம், வைட்டமின், பாஸ்பரஸ், தாமிரம் போன்ற பல்வேறு சத்துக்கள் உள்ளது. உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைத்து உடல் நிலை சமப்படுத்த உதவுகிறது.

    மண் குளியல்

    மண் குளியல் என்பது தோளில் உள்ள அசுத்தங்களை வெளியேற்றி இறந்த சரும செல்களை அகற்ற உதவுகிறது. இதன் மூலம் உடல் புத்துணர்ச்சி பெறுகிறது. மண்ணில் உள்ள கந்தகம், சல்பர், துத்தநாகம், மெக்னீசியம் மற்றும் புரோமின் போன்ற தாதுக்கள் உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.

    உடல் பருமனால் ஏற்படும் நோய்கள் மற்றும் விளைவுகளுக்கு யோகா மற்றும் இயற்கை மருத்துவரின் ஆலோசனைப்படி சிகிச்சைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×