என் மலர்
நீங்கள் தேடியது "Bananas"
- உடலுக்கு உடனடி ஆற்றல் தரக்கூடியது வாழைப்பழம்.
- நீரிழிவு இல்லாதவர்களுக்கு வாழைப்பழங்கள் இரத்த சர்க்கரை அளவில் பெரிய ஏற்றத்தை ஏற்படுத்தாது.
உடல் மிகவும் பலவீனமாக இருக்கிறது. உணவில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் சில பழங்களை சேர்க்கவேண்டும் என நினைத்தால் கண்டிப்பாக வாழைப்பழத்தை சேர்த்துக்கொள்ளலாம். சாப்பிட்ட உடனேயே ஆற்றல் தரக்கூடிய பழம் என்றால் அது வாழைப்பழம்தான். வாழைப்பழத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள் குறித்தும், அவற்றால் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்தும் இங்கு காணலாம்.
இரத்த சர்க்கரை அளவை சீராக்கும்
வாழைப்பழத்தில் கரையக்கூடிய மற்றும் கரையாத என இரண்டு வகையான நார்ச்சத்துகள் உள்ளன. கரையக்கூடிய நார்ச்சத்து செரிமானத்தை மெதுவாக்குகிறது. இதனால் நீண்டநேரம் பசி எடுக்காது. கரையாத நார்ச்சத்து குடல் இயக்கத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது. பழுக்காத (பச்சை) வாழைப்பழங்களில் எதிர்ப்புத் திறன் கொண்ட ஸ்டார்ச் (resistant starch) அதிகம் உள்ளது. இது செரிமானத்திற்கு கடினமாக இருந்தாலும், நன்மை பயக்கும் குடல் பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது மற்றும் இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க உதவுகிறது. நீரிழிவு இல்லாதவர்களுக்கு வாழைப்பழங்கள் இரத்த சர்க்கரை அளவில் பெரிய ஏற்றத்தை ஏற்படுத்தாது. ஏனெனில் அதில் உள்ள நார்ச்சத்து மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் சர்க்கரை உறிஞ்சுதலை சீராக்க உதவுகின்றன. இருப்பினும் பழுத்த வாழைப்பழங்களில் அதிகளவு சர்க்கரை உள்ளதால், நீரிழிவு நோய் உள்ளவர்கள் அதிக வாழைப்பழங்கள் எடுத்துக்கொள்வதை தவிர்ப்பது நல்லது. ஒரு நாளைக்கு ஒரேயொரு சிறிய அல்லது நடுத்தர வாழைப்பழத்தை மட்டும் சாப்பிடுவது நல்லது.
மலச்சிக்கலை நீக்கும்
பழுக்காத வாழைப்பழங்களில் காணப்படும் எதிர்ப்புத் திறன் கொண்ட ஸ்டார்ச் ஒரு ப்ரீபயாடிக் ஆகும். இது குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களுக்கு உணவளித்து அதன் வளர்ச்சி மற்றும் செயல்பாட்டைத் தூண்டுகிறது. இது புரோபயாடிக்குகள் (நேர்மறையான பாக்டீரியாக்கள்) செழித்து வளர உதவுகிறது, குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் மலச்சிக்கலை நீக்க உதவுகிறது. வாழைப்பழங்களில் காணப்படும் பெக்டின் என்ற நார்ச்சத்து பெருங்குடல் புற்றுநோயிலிருந்து நம்மை பாதுகாக்க உதவும் எனக் கூறப்படுகிறது.
எடை இழப்புக்கு உதவும்
வாழைப்பழங்கள் ஒப்பீட்டளவில் குறைந்தளவு கலோரிகளை கொண்டவை. ஒரு நடுத்தர வாழைப்பழத்தில் சுமார் 105 கலோரிகளே உள்ளன. ஆனால் அவை சத்தானவை மற்றும் நிறைவானவை.

வாழைப்பழம் கொழுப்புச்சத்தை அதிகரிக்காது
இதய ஆரோக்கியத்திற்கு உதவும்
பொட்டாசியம் என்பது இதய ஆரோக்கியத்திற்கும், குறிப்பாக இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதற்கும் அவசியமானது. வாழைப்பழங்கள் பொட்டாசியத்தின் சிறந்த மூலமாகும். ஒரு நடுத்தர வாழைப்பழம் தினசரி மதிப்பில் 10% பொட்டாசியத்தை வழங்குகிறது. பொட்டாசியம் நிறைந்த உணவு இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும். உயர் இரத்த அழுத்த அபாயத்தைக் குறைக்கும். வாழைப்பழங்களில் மெக்னீசியத்திற்கான DV-யில் 8% உள்ளது, இது இதய ஆரோக்கியத்திற்கான மற்றொரு முக்கியமான கனிமமாகும். மெக்னீசியம் குறைபாடு (ஹைப்போமக்னீமியா) இதய நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்தத்தில் அதிக அளவு கொழுப்புகள் ஏற்படும் அபாயத்துடன் தொடர்புடையது. எனவே, உங்கள் உணவு அல்லது சப்ளிமெண்ட்ஸ் மூலம் இந்த மெக்னீசியத்தை பெறுவது அவசியம்.
ஆக்ஸிஜனேற்றிகள்
காய்கறிகள், பழங்கள் அனைத்துமே அதிகளவு ஆக்ஸிஜனேற்றிகளை கொண்டிருக்கும். அந்த வகையில் வாழைப்பழங்களில் அமின்கள் உட்பட பல வகையான சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளன. இந்த ஆக்ஸிஜனேற்றிகள் இதய நோய் மற்றும் மாகுலர் சிதைவு அபாயத்தைக் குறைத்தல் போன்ற பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளன. ஆக்ஸிஜனேற்றிகள் ஃப்ரீ ரேடிக்கல்களால் செல்களுக்கு ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற சேதத்தைத் தடுக்க உதவுகின்றன.
வாழைப்பழத்தில் உள்ள ஊட்டத்துக்கள்
வாழைப்பழத்தில் போதுமான அளவு கார்போஹைட்ரேட்டுகள், நீர், நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளன. இதில் புரதம் குறைவு என்றாலும், அதைவிட மிக மிக குறைவு கொழுப்புச்சத்து. இதனால் கொலஸ்ட்ரால் அதிகரிக்காது.
ஒரு வாழைப்பழத்தில் உள்ளவை :
கலோரிகள்: 112
கொழுப்பு: 0.4 கிராம் (கிராம்)
புரதம்: 1 கிராம்
கார்போஹைட்ரேட்: 29 கிராம்
நார்ச்சத்து: 3 கிராம்
வைட்டமின் சி: தினசரி மதிப்பில் (DV) 12%
ரைபோஃப்ளேவின்: DVயில் 7%
ஃபோலேட்: DV யில் 6%
நியாசின்: DV யில் 5%
தாமிரம்: DV யில் 11%
பொட்டாசியம்: DV யில் 10%
மெக்னீசியம்: DV யில் 8%
- வாழைப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம் இதயத்திற்கு நலம் சேர்க்கும்.
- வாழைப்பழத்தில் இருக்கும் இயற்கையான சர்க்கரை உடலுக்கு தேவையான ஆற்றலை அளிக்கும்.
வாழைப்பழம் ஊட்டச்சத்துமிக்கதாகவே இருந்தாலும் அதனை அளவோடுதான் உட்கொள்ள வேண்டும். ஆரோக்கியமான நபர் தினமும் ஒன்று அல்லது இரண்டு வாழைப்பழம் சாப்பிட்டாலே போதுமானது. ஏனெனில் வாழைப்பழத்தில் கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் சர்க்கரை அதிகமாகவே உள்ளன. உடல் எடை அதிகரிப்பு, ரத்தத்தில் சர்க்கரை அளவில் ஏற்ற இறக்கங்களை தவிர்க்க மிதமான அளவு சாப்பிடுவதே முக்கியமானது. அதனை அதிகமாக சாப்பிடும்போது அதில் இருக்கும் நார்ச்சத்து காரணமாக வயிறு உப்புசம் அல்லது வயிற்றுப்போக்கு போன்ற இரைப்பை குடல் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
* வாழைப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம் இதயத்திற்கு நலம் சேர்க்கும். ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க உதவும். இதயம் அதிகம் வேலை செய்ய வேண்டியிருக்காது.
* புகைப்பிடிக்கும் பழக்கத்தை நிறுத்த முயற்சிக்கிறீர்களா? வாழைப்பழங்கள் உதவும். அதிலிருக்கும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் கலவையானது நிக்கோடின் ஏற்படுத்தும் ஏக்கங்களை குறைக்க உதவும்.
* வாழைப்பழத்தில் இருக்கும் இயற்கையான சர்க்கரை உடலுக்கு தேவையான ஆற்றலை அளிக்கும்.
* மன அழுத்தமாகவோ, சோகமாகவோ உணர்கிறீர்களா? வாழைப்பழத்தில் இருக்கும் வைட்டமின் பி6, செரோடோனின் மற்றும் டோபமைன் என்ற நல்ல ரசாயனங்களை உற்பத்தி செய்ய மூளையை ஊக்கப்படுத்தும். எனவே பரபரப்பாக இருக்கும்போது வாழைப்பழம் சாப்பிடுவது மனதை அமைதிப்படுத்தவும், கடினமான தருணங்களை நிர்வகிக்கவும் உதவிடும்.
* பகலில் சோர்வாக உணர்ந்தால், உடலில் இரும்புச்சத்து குறைவாக இருக்கலாம். வாழைப்பழத்தில் இருக்கும் இரும்புச்சத்து உடலில் அதிக ரத்த சிவப்பணுக்களை உருவாக்க உதவும். ரத்த சோகையை எதிர்த்து போராடவும் வித்திடும்.
- வாழைத்தார்கள் வரத்து அதிகரித்துள்ளதோடு, விலையும் 2 மடங்கு உயர்ந்தது.
- செவ்வாழை ஒரு தார் ரூ. 900 வரை விற்பனையானது.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் தொடர் மழையால் வாழைத்தார்கள் வரத்து அதிகரித்துள்ளதோடு, விலையும் 2 மடங்கு உயர்ந்ததன் காரணமாக வாழை விவசாயிகள் மகிழ்ச்சிஅடைந்துள்ளனர்.
தென்காசி குத்துக்கல்வலசை வாழைத்தார், இலை மார்க்கெட்டில் வழக்கத்தை காட்டிலும் விவசாயிகள் அதிகளவில் வாழைத்தார்கள் கொண்டு வந்திருந்தனர். செவ்வாழை ஒரு தார் ரூ. 900 வரை விற்பனையானதால் விவசாயிகள் நிம்மதி அடைந்தனர். வாழைத்தார்களை வாங்குவதற்கு உள்ளூர் வியாபாரிகள் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் அதிக அளவில் வியாபாரிகள் முகாமிட்டு வாங்கிச் சென்றனர்.
- வெளி மாவட்டங்களில் இருந்தும் வாழைத்தார்கள் விற்பனைக்காக அதிகளவு கொண்டு வரப்படுகிறது.
- கடந்த 2 வாரத்துக்கு மேலாக பனிப்பொழிவு அதிகரிப்பு மற்றும் மழையால் வாழைத்தார்களின் அறுவடை பாதிக்கப்பட்டது.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி பகுதியில் பனிப் பொழிவு அதிகரிப்பால் வாழைத்தார் அறுவடை பாதிக்கப்பட்டு மார்க்கெட்டுக்கு வரத்து குறைவால் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்த னர்.
பொள்ளாச்சி காந்தி தினசரி மார்க்கெட்டுக்கு, சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து மட்டுமின்றி, வெளி மாவட்டங்களில் இருந்தும் வாழைத்தார்கள் விற்பனைக்காக அதிகளவு கொண்டு வரப்படுகிறது. கடந்த மாதம் முகூர்த்த நாட்கள் அதிகம் இருந்ததால் வாழைத்தார் வரத்து அதிகமாக இருந்ததுடன் கூடுதல் விலைக்கு விற்பனையானது.
இந்நிலையில் கடந்த 2 வாரத்துக்கு மேலாக பனிப்பொழிவு அதிகரிப்பு மற்றும் மழையால் வாழைத்தார்களின் அறுவடை பாதிக்கப்பட்டு. மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்படும் வாழைத்தார்களின்வரத்து குறைந்தது. இதில் நேற்று சுற்றுவட்டார பகுதியிலிருந்து மட்டுமின்றி, தூத்துக்குடி மற்றும் திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் வாழைத்தார் வரத்து குறைவானது. வரத்து குறைவாக இருந்தாலும், தற்போது கார்த்திகை மாதம் என்பதால் கேரள வியாபாரிகள் அதிகம் வந்திருந்தனர்.
இதனால், கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டது. இதில் செவ்வாழை ஒரு கிலோ ரூ.50 வரையிலும், சாம்ராணி ரூ.38-க்கும். பூவந்தார் 35-க்கும், மோரீஸ் 35-க்கும், ரஸ்தாளி 40-க்கும், நேந்திரன் 35-க்கும், என கடந்த மாதத்தைவிட ஒவ்வொரு வாழைத்தாருக்கும் ரூ.5 முதல் ரூ.8 வரை என கூடுதல் விலைக்கு போனது என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.
- களக்காடு அருகே உள்ள கீழவடகரை பூலாங்குளம் பத்து விளைநிலங்களில் நேற்று இரவில் 20-க்கும் மேற்பட்ட காட்டு பன்றிகள் கூட்டம் புகுந்து அட்டகாசம் செய்தது.
- வாழைகள் நாசமானதால் விவசாயிகளுக்கு பல லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள கீழவடகரை பூலாங்குளம் பத்து விளைநிலங்களில் நேற்று இரவில் 20-க்கும் மேற்பட்ட காட்டு பன்றிகள் கூட்டம் புகுந்து அட்டகாசம் செய்தது.
அவைகள் வாழைகளை சாய்த்து அதன் குருத்துகளை தின்றன. இதனால் 300-க்கும் மேற்பட்ட வாழைகள் நாசமானதாக விவசாயிகள் தெரிவித்தனர். இவைகள் ஏத்தன் ரகத்தை சேர்ந்த 6 மாத வாழைகள் ஆகும்.
பன்றிகளால் சேதப்படுத்தப்பட்ட வாழை கள் கீழவடகரையை சேர்ந்த விவசாயிகள் பாலன், பூபேஸ் குப்தா, மகேந்திரன் ஆகியோர்களுக்கு சொந்த மனாது ஆகும்.
வாழைகள் நாசமானதால் விவசாயிகளுக்கு பல லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எனவே, களக்காடு பகுதியில் அதிகரித்து வரும் காட்டு பன்றிகள் அட்டகாசத்தை தடுக்கவும், பயிர்கள் நாசமாகி பாதிக்கப்பட்ட விவசாயி களுக்கு இழப்பீடு வழங்கவும் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் காவிரி கரையோர பகுதியில் பாலப் பட்டி மற்றும் மோகனூர் உள்ளிட்ட பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் வாழை பயிர் செய்யப்பட்டுள்ளது.
- பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாழைத்தார்களின் விலை உயர்வடைந்துள்ளதால் வாழை பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் காவிரி கரையோர பகுதிகளான வெங்கரை, குச்சிபாளையம், பொத்தனூர், வேலூர், அனிச்சம்பாளையம், நன்செய்இடையாறு, பாலப் பட்டி மற்றும் மோகனூர் உள்ளிட்ட பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் வாழை பயிர் செய்யப்பட்டுள்ளது.
இங்கு விளையும் வாழைத்தார்கள் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், சேலம், கோவை, ஈரோடு, கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்க ளுக்கும் தினந்தோறும் லாரிகள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. சிறு விவசாயிகள் பரமத்திவேலூர் வாழைத்தார் விற்பனை சந்தைக்கு வாழைத்தார்களை நேரடியாக கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.
கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு 2 ஆயிரம் வாழைத்தார்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.250-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.200-க்கும், பச்சை நாடன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.200-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.200-க்கும், மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ.3-க்கும் ஏலம் போனது.
இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு 5 ஆயிரம் வாழைத்தார்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.600-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.250-க்கும், பச்சை நாடன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.250-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.300-க்கும், மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ.5-க்கு ஏலம் போனது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாழைத்தார்களின் விலை உயர்வடைந்துள்ளதால் வாழை பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- தைப்பூசத்தை முன்னிட்டு வாழைத்தார்களின் விலை உயர்வடைந்துள்ளது.
- இதனால் வாழை பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் வேலுார் தாலுகா பாண்டமங்கலம், பொத்தனுார், நன்செய்
இடையாறு, குப்பிச்சிபாளை யம், மோகனுார், பரமத்தி வேலுார், அண்ணாநகர், பிலிக்கல்பாளையம், ஆனங்கூர், ஜேடர்பாளை யம், கொத்தமங்கலம், சிறு
நல்லி கோவில், அய்யம்பா
ளையம், ஆனங்கூர், வடகரை யாத்தூர், இருக்கூர், ஜமீன் இளம்பள்ளி, சோழசி ராமணி உள்ளிட்ட பல்வேறு
பகுதிகளில் பூவன், கற்பூர வள்ளி, பச்சநாடன், ரஸ்தாலி, மொந்தன் உள்ளிட்ட பல்வேறு வகை
யான வாழை, ஆயிரக்க ணக்கான ஏக்கரில் பயிர் செய்யப்பட்டுள்ளது.
இங்கு விளையும் வாழைத்தார்களை உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியா பாரிகளுக்கும், பரமத்தி வேலூரில் செயல்படும் தினசரி வாழைத்தார் ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். இங்கு வாங்கப்படும் வாழைத்தார்கள் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், சேலம்,
கோவை, ஈரோடு, கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்க ளுக்கும் தினந்தோறும் லாரிகள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த வாரம் பூவன் வாழைத்தார் ஒன்று அதிகபட்சமாக ரூ.250-க்கும், ரஸ்தாலி அதிகபட்சமாக ரூ.250-க்கும், பச்சைநாடன் அதிக பட்சமாக ரூ.200-க்கும், கற்பூரவள்ளி ரூ.250-க்கும், மொந்தன் ரூ.300-க்கும் விற்பனையானது. நேற்று பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.500-க்கும், ரஸ்தாலி அதிகபட்சமாக ரூ.400-க்கும், பச்சைநாடன் அதிகபட்சமாக ரூ.350-க்கும், கற்பூரவள்ளி ரூ.400-க்கும் , மொந்தன் ஒன்று ரூ.500-க்கும் விற்பனையானது. தைப்பூசத்தை முன்னிட்டு வாழைத்தார்களின் விலை உயர்வடைந்துள்ளதால் வாழை பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- வாழைத்தார்களின் விலை உயர்வடைந்துள்ள தால் வாழை பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் பூவன்வாழைத்தார் ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.350-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் ரூ.250-க்கும், பச்சைநாடன் ரூ.200-க்கும், கற்பூரவள்ளி ரூ.350-க்கும் ,மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ.6-க்கும் ஏலம் போனது.
பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் காவிரி கரையோர பகுதிகளான வெங்கரை, குச்சிபாளையம், பொத்தனூர், பரமத்தி வேலூர், அண்ணாநகர்,
பிலிகல்பாளையம், கு.அய்யம்பாளையம், ஆனங்கூர், வடகரை யாத்தூர் கொத்தமங்கலம், அனிச்சம்பாளையம், நன்செய்இடையாறு, பாலப்பட்டி மற்றும் மோக னூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பூவன், பச்ச நாடன், கற்பூரவல்லி, ரஸ்தாலி, மொந்தன் உள்ளிட்ட பல்வேறு வகை யான வாழைகளை விவசா யிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிர்செய்துள்ள னர்.
வாழைத்தார் முதிர்ச்சி அடைந்தவுடன் கூலி ஆட்கள் மூலம் வாழைத்தார் களை வெட்டி உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், பரமத்தி வேலூரில் செயல்பட்டு வரும் தினசரி ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்ற னர். மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து தங்களுக்கு கட்டுபடியாகும் விலைக்கு வாழைத்தார் களை வாங்கி கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், சேலம், கோவை, ஈரோடு ,கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்க ளுக்கும் தினந்தோறும் லாரிகள் மூலம் அனுப்பி வருகின்றனர்.
கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் பூவன்வாழைத்தார் ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.350-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் ரூ.250-க்கும், பச்சைநாடன் ரூ.200-க்கும், கற்பூரவள்ளி ரூ.350-க்கும் ,மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ.6-க்கும் ஏலம் போனது. நேற்று நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.400-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் ரூ.300-க்கும், பச்சைநாடன் அதிகபட்சமாக ரூ.250-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.300-க்கும் , மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ.4-க்கு ஏலம் போனது. வாழைத்தார்களின் விலை உயர்வடைந்துள்ள தால் வாழை பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- கரூரில் வாழைத்தார் விலை உயர்ந்துள்ளது
- வரத்து குறைவு காரணமாக விற்பனை
கரூர்,
நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் பூவன் உள்ளிட்ட பல்வேறு வகையான வாழைகளை விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிர் செய்துள்ளனர். பின்னர் விளைந்தவுடன் பறித்து, உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், தினசரி ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். கடந்த வாரம் பூவன் வாழைத்தார் ஒன்று ரூ.350-க்கு விற்றது தற்போது ரூ.400-க்கும், ரஸ்தாளி ரூ.250-க்கு விற்றது ரூ. 300-க்கும், பச்சைநாடன் ரூ.200-க்கு விற்றது ரூ.250-க்கும், மொந்தன் வாழைத்தார் ரூ.400-க்கு விற்றது ரூ.500-க்கும் ஏலம் போனது. வரத்து குறைவால் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- பல ஆயிரம் ஏக்கர்களில் வாழை விவசாயம் பிரதான தொழிலாக செய்யப்பட்டு வருகிறது.
- கடந்த 2 தினங்களாக பலத்த சூறைக்காற்று வீசியது.
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள இரும்பறை, இலுப்பநத்தம் ஊராட்சி களுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கர்களில் வாழை விவசாயம் பிரதான தொழிலாக செய்யப்பட்டு வருகிறது.
குறிப்பாக நேந்திரன், கதளி, பூவன், ரஸ்தாலி, ரோபஸ்டா உள்ளிட்ட பல்வேறு வகை வாழை இனங்களை பயிரிட்டு விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் சிறுமுகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான சிட்டே பாளையம், இரும்பறை, அம்மன் புதூர், பால்காரன் சாலை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 தினங்களாக பலத்த சூறைக்காற்று வீசியது.
இதன் காரணமாக இரும்பறை, இலுப்பநத்தம் ஊராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பயிரிடப் பட்டிருந்த சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து விழுந்து நாசமடைந்துள்ளன.
சூறாவளிக்காற்றால் சேதமடைந்த வாழைகள் அறுவடைக்கு தயாராக இருந்தவையாகும். இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து மோதூர் பகுதியை சேர்ந்த விவசாயி கந்தசாமி கூறியதாவது:-
விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து 2 லட்ச ரூபாய் செலவு செய்து 2000 வாழைகளை பயிரிட்டு விவசாயம் செய்து வந்தேன். கடந்த 2தினங்களாக வீசிய சூறாவளி காற்றால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழைகள் சேதம் அடைந்து விட்டது. இதனால் தாங்கள் பெருத்த நஷ்டத்தை சந்தித்துள்ளோம் எனவே அரசு உரிய நடவடிக்கை எடுத்து தங்களது வாழ்வாதாரத்தை காக்க உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- ஒரு பழத்தை ரூ. 5க்கு வாங்கிவிட முடியும்.
- வாழைப்பழங்கள் சாப்பிட்ட பிறகு தொண்டையில் எரிச்சல், வயிறு கோளாறு போன்றவை ஏற்படுவதாக கூறப்படுகிறது.
திருப்பூர் :
முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் பொதுமக்கள் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்றாகும். அனைத்து முக்கிய சுபநிக ழ்ச்சிகள், மருத்துவத்தில் வாழைப்பழத்துக்கு முக்கிய இடமுண்டு. பொதுவாக அனைத்து பழங்களுமே சத்து நிறைந்ததுதான். ஆனால் மற்றவற்றை விட இதன் விலையை ஒப்பிடும்போது மிக மிக குறைவு. ஒரு பழத்தை ரூ. 5க்கு வாங்கிவிட முடியும். மேலும் இதில் அதிக சத்துக்கள் அடங்கியுள்ளது. இது எல்லா காலங்களி லும், எல்லா இடங்களிலும் கிடைக்கக்கூ டியது. அதனாலேயே எல்லோரும் விரும்பி சாப்பிடுகிறார்கள். சில மாதங்களாக திருப்பூர் நகரில் விற்கப்படும் வாழைப்பழங்கள் அத்தனை ருசியாக இல்லை எனவும் வாழைப்பழங்கள் சாப்பிட்ட பிறகு தொண்டையில் எரிச்சல், வயிறு கோளாறு போன்றவை ஏற்படுவதாக கூறப்படுகிறது. இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில்:-
விவசாயிகள் தங்களது தோட்டங்களில் விளைவிக்க ப்படும் வாழைத்தார்களை நகரத்தில் கொண்டு சென்று விற்க வேண்டும் என்பதற்காக பழுப்பதற்கு முன் 10நாளைக்கு முன்பே வெட்டி விடுகிறார்கள். அதனை விவசாயிகளி டமிருந்து வாங்கும் மொத்த வியாபாரிகள் தங்களது குடோனுக்கு கொண்டு சென்று இருப்பு வைக்கி ன்றனர். மேலும் விரைந்து பழுக்க வைக்க போபாலின் என்ற ரசாயனத்தை நீரில் கலந்து தெளித்து விடுகிறார்கள். தெளித்த சில மணி நேரங்களில் பழங்கள் பழுத்து விடுகின்றன. முதலில் இந்த முறையில் தான் மோரீஸ் பழங்களை பழுக்க வைத்துக் கொண்டிரு ந்தனர். தற்போது நாட்டு பழ வகைகளையும் பழுக்க வைக்கின்றனர். இப்படி பழுக்க வைப்பதால் மருத்துவ குணம் கெட்டுப்போ வதோடு அதன் தனித்தன்மை யையும் இழந்துவிடுகிறது. ரசாயனம் கலக்கப்படும் பழங்கள் 7 நாட்கள் வரை கெடாமல் இருக்கின்றன. பழமும் புதிது போலவே இருப்பதால் நாமும் எளிதில் ஏமாந்து விடுகிறோம்.
இந்த பழங்கள் நம்முடைய சருமத்தில் தடிப்புகள் மற்றும் அரிப்புகளை ஏற்படுத்துமே தவிர நன்மையை தராது. மேலும் வயிற்றுக்குள் செல்லும் இந்த ரசாயனம் வயிற்றுப்புண், சைனஸ், ஆஸ்துமா, செரிமான கோளாறு, சிறுநீரக கோ ளாறு போன்றவைகளையும் ஏற்படுத்தும். மார்க்கெட்கள், மற்றும் பழ குடோன்களில் உணவுத்துறை அதிகாரிகள் உரிய ஆய்வு மேற்கொண்டு இது போன்ற செயலில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- இந்நிலையில் கடந்த வாரத்தை விட, இந்த வாரம் வாழைத்தார்களின் விலை அதிகரித்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தள்ளனர்.
- நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு 1500 வாழைத்தார்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலுார் தாலுகா பாண்டமங்கலம், பொத்த னுார், நன்செய்இடையாறு, குப்பிச்சிபாளையம், மோ கனுார், பரமத்திவேலுார், அண்ணாநகர், பிலிக்கல்பா ளையம், ஆனங்கூர், ஜேடர்பாளையம், கொத்த மங்கலம், சிறுநல்லி கோவில், அய்யம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் விவசாயிகள் பூவன், பச்சநாடன், கற்பூரவல்லி, ரஸ்தாளி, மொந்தன் உள்ளிட்ட பல்வேறு வகையான வாழைகளை பயிரிட்டுள்ளனர்.
வாழைத்தார்களை உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், பரமத்திவேலுாரில் செயல்பட்டு வரும் தினசரி ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.
இங்கு ஏலம் எடுக்கப்ப டும் வாழைத்தார்களை, தமிழ்நாட்டில் உள்ள நாமக்கல், சேலம், ஈரோடு, கோவை, நீலகிரி, கரூர், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்நிலையில் கடந்த வாரத்தை விட, இந்த வாரம் வாழைத்தார்களின் விலை அதிகரித்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தள்ளனர். நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு 1500 வாழைத்தார்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.500-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் ரூ.350-க்கும், பச்சைநாடன் வாழைத்தார் ரூ.300-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.400-க்கும், மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ.5 க்கும் விற்பனையானது.
வரத்து குறைவு மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வீடுகளில் கனி வைத்து வழிபடுவர், கோவில் விசேஷங்கள் தொடர்ந்து வருவதால் வாழைத்தார் விலை உயர்ந்துள்ளதாக வியா பாரிகள் தெரிவித்தனர்.






