search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "chemicals"

    • ஒரு பழத்தை ரூ. 5க்கு வாங்கிவிட முடியும்.
    • வாழைப்பழங்கள் சாப்பிட்ட பிறகு தொண்டையில் எரிச்சல், வயிறு கோளாறு போன்றவை ஏற்படுவதாக கூறப்படுகிறது.

    திருப்பூர் :

    முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் பொதுமக்கள் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்றாகும். அனைத்து முக்கிய சுபநிக ழ்ச்சிகள், மருத்துவத்தில் வாழைப்பழத்துக்கு முக்கிய இடமுண்டு. பொதுவாக அனைத்து பழங்களுமே சத்து நிறைந்ததுதான். ஆனால் மற்றவற்றை விட இதன் விலையை ஒப்பிடும்போது மிக மிக குறைவு. ஒரு பழத்தை ரூ. 5க்கு வாங்கிவிட முடியும். மேலும் இதில் அதிக சத்துக்கள் அடங்கியுள்ளது. இது எல்லா காலங்களி லும், எல்லா இடங்களிலும் கிடைக்கக்கூ டியது. அதனாலேயே எல்லோரும் விரும்பி சாப்பிடுகிறார்கள். சில மாதங்களாக திருப்பூர் நகரில் விற்கப்படும் வாழைப்பழங்கள் அத்தனை ருசியாக இல்லை எனவும் வாழைப்பழங்கள் சாப்பிட்ட பிறகு தொண்டையில் எரிச்சல், வயிறு கோளாறு போன்றவை ஏற்படுவதாக கூறப்படுகிறது. இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில்:-

    விவசாயிகள் தங்களது தோட்டங்களில் விளைவிக்க ப்படும் வாழைத்தார்களை நகரத்தில் கொண்டு சென்று விற்க வேண்டும் என்பதற்காக பழுப்பதற்கு முன் 10நாளைக்கு முன்பே வெட்டி விடுகிறார்கள். அதனை விவசாயிகளி டமிருந்து வாங்கும் மொத்த வியாபாரிகள் தங்களது குடோனுக்கு கொண்டு சென்று இருப்பு வைக்கி ன்றனர். மேலும் விரைந்து பழுக்க வைக்க போபாலின் என்ற ரசாயனத்தை நீரில் கலந்து தெளித்து விடுகிறார்கள். தெளித்த சில மணி நேரங்களில் பழங்கள் பழுத்து விடுகின்றன. முதலில் இந்த முறையில் தான் மோரீஸ் பழங்களை பழுக்க வைத்துக் கொண்டிரு ந்தனர். தற்போது நாட்டு பழ வகைகளையும் பழுக்க வைக்கின்றனர். இப்படி பழுக்க வைப்பதால் மருத்துவ குணம் கெட்டுப்போ வதோடு அதன் தனித்தன்மை யையும் இழந்துவிடுகிறது. ரசாயனம் கலக்கப்படும் பழங்கள் 7 நாட்கள் வரை கெடாமல் இருக்கின்றன. பழமும் புதிது போலவே இருப்பதால் நாமும் எளிதில் ஏமாந்து விடுகிறோம்.

    இந்த பழங்கள் நம்முடைய சருமத்தில் தடிப்புகள் மற்றும் அரிப்புகளை ஏற்படுத்துமே தவிர நன்மையை தராது. மேலும் வயிற்றுக்குள் செல்லும் இந்த ரசாயனம் வயிற்றுப்புண், சைனஸ், ஆஸ்துமா, செரிமான கோளாறு, சிறுநீரக கோ ளாறு போன்றவைகளையும் ஏற்படுத்தும். மார்க்கெட்கள், மற்றும் பழ குடோன்களில் உணவுத்துறை அதிகாரிகள் உரிய ஆய்வு மேற்கொண்டு இது போன்ற செயலில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • ரசாயன உரங்கள் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு காரணமாக சில விவசாயிகள் இயற்கை உரத்திற்கு மாறி வருகின்றனர்.
    • ஆடுகளின் கழிவுகளை இயற்கை உரமாக பயன்படுத்தி வருகின்றனர்.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம் பாபநாசம், திருக்கருக்காவூர் அதன் சுற்று வட்டார பகுதிகளில் விவசாயத்திற்கு கால்நடைகளின் கழிவுகளை இயற்கை உரமாக பயன்படுத்த சமீபகாலமாக விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    முந்தைய காலங்களில் கால்நடை கழிவுகளை இயற்கை உரமாக வயல்களுக்கு இட்டு அதிகளவில் விவசாயம் செய்து வந்தனர். அதற்காகவே விவசாயிகள் அதிகளவில் வீடுகளில் கால்நடைகளை வளர்த்து வந்தனர். சமீபகாலமாக கிராமங்களில் கால்நடைகள் வளர்ப்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டதால் கால்நடை கழிவுகள் அதிகளவில் கிடைப்பதில்லை.

    அதனால் இயற்கை உரத்திற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டதால் ரசாயன உரங்களின் பயன்பாடு அதிகரித்து வந்தது.

    ரசாயன உரங்களால் மண்வளம் பாதிக்கப்படுவதோடு அதில் விளைவிக்ககூடிய தானியங்களை உண்ணும் மனித இனம் மட்டுமின்றி கால்நடைகள் உள்பட அனைத்து உயிரினங்களும் பல்வேறு நோய் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றன.

    சமீப காலமாக ரசாயன உரங்கள் தட்டுப்பாடு, மற்றும் விலை உயர்வு காரணமாக சில விவசாயிகள் மீண்டும் இயற்கை உரத்திற்கு மாறி வருகின்றனர்.

    வயல்களில் ஆடுகள், மாடுகள் உள்ள கால்நடைகளை அடைத்து வைப்பதன் மூலம் கால்நடைகளின் சாணம், புளுக்கை மற்றும் கழிவு விவசாய நிலங்களுக்கு மீண்டும் இயற்கை உரம் சிறந்த இயற்கை உரமாக கிடைக்கிறது.

    இதற்காக இராமநாதபுரம், அரியலூர், பெரம்பலூர் பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான செம்மறி ஆடுகள் தஞ்சை உள்பட டெல்டா மாவட்டங்களுக்கு மேய்ச்சலுக்காகவும் இயற்கை உரத்திற்காக கொண்டு வரப்பட்டு ஆடுகளின் கழிவுகளை இயற்கை உரமாக பயன்படுத்தி வருகின்றனர். மேலும், கிடை அமைக்கும் பணிகளில் தொழிலாளிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

    இது குறித்து ஏலாகுறிச்சி பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளர் கூறியதாவது:-

    டெல்டா மாவட்டங்களில் அறுவடை பணிகள் முடிந்தவுடன் சுற்றுப்பகுதி கிராமங்களில் இருந்து ஆடு, மாடுகளை சேகரித்து மேய்ச்சலுக்காக கொண்டு வந்து சுமார் 5 மாதம் வரை இங்கேயே கிடை அமைத்து தங்கி மேய்ச்சலில் ஈடுபடுத்துவோம்.

    ஒரு இரவுக்கு கிடை வைக்க 2 ஆயிரம் பணம் மற்றும் 3 படி அரிசியை கூலியாக பெறுவோம் என்றார்.

    • நெல் மூட்டைகளில் பூச்சிகள் தாக்காமல் இருக்க வைக்கப்பட்ட கெமிக்கல் தீ பற்றி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
    • தொடர் மழை பெய்து வருவதால் திறந்தவெளி சேமிப்பு கிடங்கில் நெல் மூட்டைகளை பாதுகாக்க புதிய தார்பாய்கள் வழங்கப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முயற்சியால் வீடு தூரம் விருட்சம் என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    இந்தத் திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 1 லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

    அந்த வகையில் இன்று தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சிட்கோ தொழிற்பேட்டையில் வீடு தோறும் விருட்சம் திட்டத்தின் கீழ் 1000 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

    தஞ்சை மாவட்ட நிர்வாகம் கவின்மிகு தஞ்சை இயக்கம், நாஞ்சிக்கோட்டை சிட்கோ சிறுகுறு தொழில் நல சங்கம் சார்பில் நடைபெற்ற விழாவுக்கு மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கி மரக்கன்றுகள் நட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    பின்னர் ஏராளமானோர் மரக்கன்று நட்டு வைத்தனர்.

    அப்போது கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பேசியதாவது:-

    தஞ்சை மாவட்டத்தில் வீட்டுக்கு ஒரு விருட்சம் என்ற திட்டம் மூலம் ஆண்டுக்கு 1 லட்சம் மரக்கன்றுகள் நட முடிவு செய்யப்பட்டது. அதன்படி தற்போது வரை 50 ஆயிரத்தை தாண்டி மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.

    நாம் மரக்கன்றுகள் நட்டால் மட்டும் போதாது .

    அதனை முறையாக தண்ணீர் ஊற்றி பராமரிக்க வேண்டும். மரக்கன்று மரமாக வளர வேண்டும்.

    தஞ்சை அடுத்த திருமலை சமுத்திரத்தில் 220 வகையான மரக்கன்றுகள் நடப்பட்டு பெரிய அளவிலான மரங்கள் சரணாலயமாக மாற்றியுள்ளோம்.

    தமிழகத்திலேயே இங்குதான் பெரிய அளவிலான மரங்கள் சரணாலயம் உள்ளது என்பது தஞ்சை மாவட்டத்திற்கு கிடைத்த பெருமை.

    இதேபோல் திருவையாறு அரசு இசைக் கல்லூரியில் இசைவனம் உருவாக்கினோம். இவ்வாறு அவர் கூறினார்.

    இதையடுத்து கலெக்டர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை மாவட்டத்தில் தற்பொழுது தொடர்ந்து மழை பெய்து வருவதால் திறந்தவெளி சேமிப்பு கிடங்கில் நெல் மூட்டைகளை பாதுகாக்க புதிய தார்பாய்கள் வழங்கப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு திறந்தவெளி கிடங்கிற்கும் பொறு ப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். நாஞ்சிக்கோட்டையில் உள்ள அரசு நெல் குடோனில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது.

    உடனடியாக நான் நேரில் சென்று பார்வையிட்டேன்.

    நெல்கள் எந்தவித சேததமும் அடையவில்லை. ஆனால் சாக்குகள், தார்பாய்கள் சேதம் ஆகின.

    நெல் மூட்டைகளில் பூச்சிகள் தாக்காமல் இருக்க வைக்கப்பட்ட கெமிக்கல் தீ பற்றி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் இது குறித்து நுகர் பொருள் வாணிப கழக அதிகாரிகளை ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மரக்கன்று நடும் நிகழ்ச்சியில் தாசில்தார் மணிகண்டன், கவின்மிகு தஞ்சை இயக்கம் தலைவர் டாக்டர் ராதிகா மைக்கேல், செயலாளர் ராம் மனோகர், இணைச் செயலாளர் முத்துக்குமார், சிட்கோ கிளை மேலாளர் ஆனந்த், கண்காணிப்பாளர் சவரிராஜன், சிட்கோ சிறு குறு தொழில் நல சங்க தலைவர் அண்ணாதுரை, செயலாளர் சம்பத்குமார், பொருளாளர் ரமேஷ் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    பிறக்கும் குழந்தைகளையும், ஏன் கருவில் வளரும் குழந்தையையும்கூட இந்த வேதி தாக்குதல் விட்டுவைக்கவில்லை.
    நம் ஒவ்வொருவர் ரத்தத்திலும் இன்றைக்கு சுமார் 300 தொழிலக வேதிப்பொருட்கள் கலந்துள்ளன என்கிறது ஓர் ஆய்வறிக்கை.

    நமது உடல்கள் வேதி தொழிற்சாலைகளின் குப்பைத் தொட்டிகளாக மாறிவிட்டன. காற்று, நீர், வீடு, அலுவலகம், நாம் பயன்படுத்தும் நுகர்வுப் பொருட்கள் என நாம் சார்ந்துள்ள அனைத்தும் நமக்குள் வேதிப்பொருட்களை மறைமுகமாகச் செலுத்தி வருகின்றன.

    சந்தை பொருளாதாரமும், நுகர்வு கலாசாரமும் இதைத் தீவிரப்படுத்தி, நம் ஒவ்வொருவரையும் மாசடைந்த மனிதர்களாக்கி வருகின்றன. பிறக்கும் குழந்தைகளையும், ஏன் கருவில் வளரும் குழந்தையையும்கூட இந்த வேதி தாக்குதல் விட்டுவைக்கவில்லை.

    பிறக்கும் குழந்தையின் உடலிலும் பல வேதிப்பொருட்கள் இருப்பது உறுதிபடுத்தப்பட்டு உள்ளது. அமெரிக்காவில் வாஷிங்டன் நகரில் செயல்படும் சுற்றுச்சூழல் பணிக்குழு என்ற அமைப்பின் 2005-ம் ஆண்டின் அறிக்கை, செயற்கை வேதி பொருட்களால் தாக்கப்படுவது கருவறையிலேயே தொடங்கிவிடுகிறது, என்கிறது.

    இக்குழுவானது, சில குழந்தைகளின் தொப்புள் கொடி துண்டிக்கப்பட்ட பிறகு அதிலிருந்த ரத்தத்தை எடுத்து ஆய்வு செய்தபோது அதில் அடங்கியிருந்த வேதிப்பொருட்களின் பட்டியல் நம்ப முடியாததாகவும் அச்சமூட்டுவதாகவும் இருந்ததாக தெரிவித்துள்ளது. அதாவது பல வகையான வேதிப்பொருட்கள் தொப்புள் கொடி ரத்தத்தில் இருந்ததாகவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த வேதிப்பொருட்களில் பெரும்பான்மையானவை புற்றுநோயையும், மூளை, நரம்பு மண்டலப் பிரச்சினைகளையும், வளர்ச்சிக் குறைபாடுகளையும் உருவாக்கக் கூடியவை என்பது குறிப்பிடத்தக்கது. குறைபாடுள்ள குழந்தைகள் பிறப்பதற்கான காரணங்கள் இவற்றுள் அடங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

    மாசுபட்ட சுற்றுச்சூழலில் இருந்து தாயின் உடலைச் சென்றடையும் வேதி நச்சுகள் தொப்புள் கொடி வழியாகத் தாயின் கருப்பையில் வளரும் குழந்தையையும் சென்றடையும் என்ற உண்மையை இந்த ஆய்வு உறுதிப்படுத்துகிறது.

    மனித குலம் இன்றைக்கு உருவாக்கி வைத்துள்ள மாசடைந்த சுற்றுச்சூழல், பச்சிளம் குழந்தைகளின் உடலையும் பாதிப்படையச் செய்யும் நிலையை ஏற்படுத்துவது வேதனையிலும் வேதனையே! 
    ×