என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேன்சர்"

    • மாநிலங்களவையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
    • மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் பிரதாப் எழுத்துப்பூர்வ பதில் அளித்தார்.

    பரபரப்பான அரசியல் சூழலில் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்ந்து நேற்று முன்தினம் (டிச.1ம் தேதி) தொடங்கி இன்று தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், மாநிலங்களவையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை குறித்து எம்.பி. நீரஜ் கேள்வி எழுப்பினார்.

    இந்த கேள்விக்கு மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் பிரதாப் எழுத்துப்பூர்வ பதில் அளித்தார்.

    அதில் அவர்," நாடு முழுவதும் 2022-ல் புற்றுநோயால் 14.61 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2023ம் ஆண்டில் 15.33 லட்சமாக உயர்ந்துள்ளது.

    தமிழ்நாட்டில் மட்டும் ஆண்டுக்கு 2500 பேர் வரை புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்" என்றார்.

    • மார்பில் வலி ஏற்பட்டாலே அது புற்றுநோயாக இருக்குமோ என பெண்கள் பலரும் பயப்படுவர்.
    • மார்பில் புற்றுநோய் என்பது முதலில் வலியை கொடுக்காமல்தான் உருவாகும்.

    புற்றுநோய் வருவதற்கான காரணிகள் என்ன? பெண்களுக்கு மார்பக புற்றுநோய் அதிகரிக்க காரணங்கள் என்ன? மார்பக புற்றுநோய்க்கான அறிகுறிகள் என்னென்ன? ரஷ்யா கண்டறிந்த புற்றுநோய் தடுப்பூசி உண்மையில் பயனளிக்குமா? புற்றுநோயை தவிர்ப்பதற்கான வழிமுறைகள் என்னென்ன? என்பது குறித்து விளக்கியுள்ளார் புற்றுநோய் சிறப்பு மருத்துவர் கென்னி ராபர்ட். 

    புற்றுநோய் வருவதற்கான காரணங்கள் என்ன?

    செல்களின் அபரித வளர்ச்சிதான் புற்றுநோய். ஒரு செல்லின் வளர்ச்சி குறிப்பிட்ட அளவுகோலில்தான் இருக்கவேண்டும். உடலில் ஒரு செல் அதிகமாக வளராமல் இருப்பதற்கும், நேர்க்கோட்டில் வளர்வதற்கும் ஒரு இயக்கமுறை உள்ளது. இந்த இயக்கமுறை கட்டுப்பாட்டை இழப்பதுதான் புற்றுநோய். புற்றுநோய் வர இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று மரபுரீதியானது. இரண்டாவது 'ஸ்போராடிக்'. திடீரென ஏற்படும் மரபணு மாற்றங்கள், உணவு பழக்கங்கள், வாழ்க்கை முறைகள் போன்றவற்றால் ஒரு தாக்கம் ஏற்பட்டு புற்றுநோய் வரும்.

    மார்பக புற்றுநோய் அதிகரிக்க காரணம் என்ன?

    இயல்பாகவே ஹார்மோன் மாற்றங்களால் மார்பு வீக்கமடையும். இந்த ஹார்மோன் மாற்றங்கள் பாதிப்பை ஏற்படுத்தும்போது, அதாவது சமநிலையை இழக்கும்போது மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் உருவாகின்றன.

    மார்பக புற்றுநோயின் அறிகுறிகள் என்னென்ன?

    புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வே அதற்கான பயத்தை உண்டாக்கும். அநேக நேரங்களில் மார்பில் வலி ஏற்பட்டாலே அது புற்றுநோயாக இருக்குமோ என பெண்கள் பலரும் பயப்படுவர். மார்பில் புற்றுநோய் என்பது முதலில் வலி இல்லாத கட்டியாகத்தான் துவங்கும். வேர்க்கடலை அல்லது நெல்லிக்காய் அளவில் வலியை கொடுக்காமல்தான் உருவாகும். வலி இல்லாமல் வரக்கூடிய கட்டிகளை கவனமாக பார்க்கவேண்டும். ஏனெனில் வலியுடன் வரக்கூடிய கட்டிகள் புற்றுநோய் கட்டியாக இல்லாமல் இருப்பதற்குத்தான் அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.

    நீர்க்கட்டி, புற்றுநோய் கட்டியை வேறுபடுத்துவது எப்படி?

    20 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் அனைவரும் தினமும் கைகளால் சுயமார்பு பரிசோதனை செய்யவேண்டும். ஏதேனும் மாற்றங்கள், அதாவது கட்டிகள், வீக்கம் ஏதேனும் இருந்தால் மருத்துவரை அணுகவேண்டும். அப்போது மருத்துவர் அது நீர்க்கட்டியா, புற்றுநோய் கட்டியாக என்பதை கூறிவிடுவார்கள். 40 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றால், அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் செய்து நீர்க்கட்டியா, புற்றுநோய் கட்டியா அல்லது வேறு காரணங்களால் ஏற்பட்ட கட்டியா என்பதை கண்டுபிடிக்க முடியும். 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மேமோகிராம் எனப்படும் எக்ஸ்-கதிர் சோதனையை செய்து என்ன கட்டி என்பதை கண்டறியலாம். இதுதான் முதல்படி.

    ரத்த பரிசோதனை மூலம் புற்றுநோயை அறிய முடியுமா?

    ரத்த பரிசோதனையை வைத்து புற்றுநோயை கண்டுபிடிப்பதற்கான நடைமுறை என்பது இல்லை. இரத்த பரிசோதனைகள் மூலம் குறிப்பிட்ட சில வகையான புற்றுநோய்களைக் கண்டறிய முடியும். ஆனால் மேமோகிராம் சோதனை மூலம் மார்பக புற்றுநோயை அடையாளம் காணலாம். மரபியல் ரீதியான அதாவது ஒருவருக்கு எந்த வயதில் புற்றுநோய் வந்ததோ, அவர்களின் சந்ததியினருக்கு அந்த வயதிலோ அல்லது அதற்கு 10 வருடங்களுக்கு முன்போ சில சோதனைகளை செய்து அவர்களுக்கு புற்றுநோய் வருமா என்பதை அறியமுடியும். ரத்தத்தில் தெரியக்கூடிய புற்றுநோய்கள் இருக்கின்றன.

    அவற்றை சிஏ (CA-Cancer Antigen), CA-125 சோதனைகள் மூலம் அறியலாம். புற்றுநோயை உறுதிப்படுத்தவும், அதனை கண்காணிக்கவும் இந்த சோதனை முறைகளை பயன்படுத்திக் கொள்ளலாம். புற்றுநோயின் ஆரம்பநிலையிலோ, அதற்காக சிகிச்சை எடுத்துக்கொண்டிருக்கும்போதோ அல்லது சிகிச்சை முடியும்போதோ, நம் ரத்தத்தில் புற்றுநோய் செல்கள் ரத்த சிவப்பணுக்களுடன் சுழற்சியில் இருப்பதைதான் Circulating DNA cells என சொல்வோம். இந்த சோதனையை நாம் அனைவருக்கும் செய்யமுடியாது.

    புற்றுநோய் இருந்து, பின்னர் முழுவதும் மறைந்து, பின்னர் மீண்டும் வந்து, சிகிச்சையை தொடரவேண்டும் என்பவர்களுக்கு மட்டும்தான் ரத்த பரிசோதனை எடுக்க அனுமதி உண்டு. மற்றபடி பொதுமக்களுக்கு ஒரு ரத்த பரிசோதனை மூலம் மட்டும் புற்றுநோய் உள்ளதா? இல்லையா என்பதை சொல்வதற்கு வாய்ப்புகள் இல்லை. 

    புற்றுநோயை தவிர்ப்பதற்கான வழிமுறைகள் என்ன?

    பெரும்பாலான புற்றுநோய்களுக்கு காரணிகள் உள்ளன. ஜீன்வழியாக தொடரும் புற்றுநோயை தவிர்க்க இயலாது. 8 மணிநேர தூக்கம், சரியான உடல்எடை, புகை மற்றும் ஆல்கஹாலை தவிர்ப்பது, உடல்பருமனை தவிர்ப்பது மூலம் மார்பக புற்றுநோயை தவிர்க்கலாம். கர்ப்பப்பைவாய்ப் புற்றுநோய்க்கு தடுப்பூசியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. 9-14 வயதிற்குள் உள்ளோருக்கு இந்த தடுப்பூசியை செலுத்தியதன் மூலம் கர்ப்பப்பைவாய்ப் புற்றுநோய் குறைந்துள்ளது. வாய் மற்றும் நுரையீரல் புற்றுநோய்க்கு முக்கிய காரணம் புகைபிடிப்பது. புகைபிடித்தல் மற்றும் புகையிலை பொருட்களை தவிர்த்தாலே வாய் மற்றும் நுரையீரல் புற்றுநோயை தவிர்த்துவிடலாம். இவைதான் பொதுவாக தவிர்க்கவேண்டியவை.

    'என்டரோமிக்ஸ்' போன்ற புற்றுநோய் தடுப்பூசிகள் இந்தியாவிற்கு வழங்கப்படாதது ஏன்?

    'என்டரோமிக்ஸ்' ஒரு mRNA தடுப்பூசி. விலங்குகளிடம் கோலோரெக்டர் கேன்சருக்கு இதை பயன்படுத்தி பயனுள்ளதாக இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இதற்கான முழுமையான தகவல்கள் இன்னும் இல்லை. அவர்கள் வெளியிட்ட தரவுகள்படி ஆரம்பநிலையில் இதனால் பயன் உள்ளது. ஆனால் இது புற்றுநோய் வருவதை தடுக்குமா என்றால் தடுக்காது. 

    • நோய்க்கான பல சிகிச்சை முறைகளிலும் நோயாளிகளுக்கு வலி குறைவதில்லை
    • வலியற்ற கேன்சர் சிகிச்சை முறைகள் குறித்து ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன

    உலகெங்கும் உள்ள மக்களை அச்சுறுத்தும் நோய்களில் ஒன்று, கேன்சர் (cancer) எனப்படும் புற்றுநோய்.

    உடலின் பல்வேறு பகுதிகளில் ஏற்படக் கூடிய கேன்சர் நோய்க்கு, நவீன மருத்துவத்தில் பல சிகிச்சை முறைகளும், மாத்திரைகளும், மருந்துகளும் உள்ளதால் நோயை கட்டுக்குள் வைக்க முடிகிறது.

    ஆனால், இத்தகைய சிகிச்சை முறைகளில் நோயாளிகளுக்கு வலி அதிகம் இருப்பது தவிர்க்க முடியாததாக இருந்து வருகிறது.

    கேன்சர் நோய் தீர்க்கும் வழிமுறைகள் மற்றும் வலியற்ற சிகிச்சை முறைகள் குறித்து உலகம் முழுவதும் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில், இங்கிலாந்தின் "கிழக்கு சஃபோல்க் மற்றும் வடக்கு எஸ்ஸெக்ஸ்" (East Suffolk and North Essex) பகுதியில் தேசிய சுகாதார சேவையின் ஃபவுண்டேஷன் டிரஸ்ட் (NHS Foundation Trust) எனும் லாப நோக்கமற்ற அமைப்பு கேன்சர் நோயாளிகளுக்கு பல்வேறு மருத்துவமனைகளில் கேன்சர் நோய்க்கான சிகிச்சை அளித்து வருகிறது.

    இந்த அமைப்பை சார்ந்த மருத்துவர்கள் தங்கள் ஆய்வில் "லைட் தெரபி" (light therapy) எனப்படும் "ஓளி சிகிச்சை" மூலம் கழுத்து மற்றும் தலை (head and neck) கேன்சர் நோயாளிகளுக்கு கீமோதெரபி (மருந்து சிகிச்சை) மற்றும் ரேடியோதெரபி (கதிரியக்க சிகிச்சை) ஆகியவற்றின் பக்கவிளைவாக ஏற்படும் வலி, பெருமளவு குறைவதை கண்டுபிடித்துள்ளனர்.

    பிற தெரபிகளின் பக்க விளைவாக வாய் பகுதியில் ஏற்படும் வலியை "லைட் தெரபி" குறைக்கிறது.

    "ஃபோட்டோ பயோ மாடுலேஷன்" (Photo Bio Modulation) சிகிச்சை எனப்படும் பிபிஎம் (PBM) பெற்று கொண்ட நோயாளிகளுக்கு வலி நிவாரண மருந்துகள் தேவைப்படுவதில்லை என தெரிய வந்துள்ளது.

    சீராக அகச்சிவப்பு ஓளியை (infrared light) வாய் பகுதியில் பாய்ச்சுவதன் மூலம் வாய் புண் மற்றும் வலி குறைந்துள்ளது.

    "பிற சிகிச்சைகளினால் ஏற்பட்ட வாய் புண் குறையாமல் இருந்தது. அதன் காரணமாக திரவ உணவு மட்டுமே உட்கொள்ளும் நிலை இருந்து வந்தது. மேலும், நாவினால் எந்த சுவையையும் அறிய முடியவில்லை. ஆனால், பிபிஎம் சிகிச்சை நிம்மதியான அனுபவத்தை கொடுத்தது" என ஒரு நோயாளி தெரிவித்தார்.

    வரும் மாதங்களில், பிபிஎம் சிகிச்சையின் பரவலான பயன்பாடு குறித்து மேலும் தகவல்கள் வெளிவரலாம்.

    • சாலையோரம் விற்கப்படும் பானிபூரிகள் தரமில்லாமல் இருப்பதாக பல்வேறு புகார்கள் வந்தன.
    • பானிபூரியில் செயற்கை நிறங்கள் மற்றும் புற்றுநோயை உருவாக்கும் கெமிக்கல்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    வட இந்தியாவில் அனைவரும் விரும்பி உண்ணும் உணவாக இருந்த பானிபூரி தற்போது இந்தியா முழுவதும் உள்ளவர்களும் விரும்பி உண்ணும் உணவாக மாறிவிட்டது.

    இந்நிலையில், கர்நாடகாவில் சாலையோரம் விற்கப்படும் பானிபூரிகள் தரமில்லாமல் இருப்பதாக உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு பல்வேறு புகார்கள் வந்தன.

    இதனையடுத்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பல்வேறு கடைகளில் இருந்து 260 பானிபூரி மாதிரிகளை சோதனை செய்த பின்னர் அதிர்ச்சிகரமான முடிவுகளை கண்டறிந்துள்ளனர்.

    சோதனை செய்யப்பட்ட பானிபூரியில் 22% உண்பதற்கான பாதுகாப்பு தரத்தை மீறியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

    சோதிக்கப்பட்ட 260 பானிபூரி மாதிரிகளில் 41 மாதிரிகளில் செயற்கை நிறங்கள் மற்றும் புற்றுநோயை உருவாக்கும் கெமிக்கல்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    18 பானிபூரி மாதிரிகள் மனிதர்கள் உண்பதற்கு தகுதியற்றவை என்றும், பானிபூரியில் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் பல்வேறு உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

    இதனையடுத்து உணவகங்களில் தரமற்ற உணவுகள் விற்கப்படுவது கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர் எச்சரித்துள்ளார்.

    ஏற்கனவே கர்நாடகாவில் கோபி மஞ்சூரியன், பஞ்சு மிட்டாய்களுக்கு கலக்கப்படும் ரோடமின் பி கெமிக்கலை அம்மாநில அரசு தடை செய்துள்ளது. மேலும் தமிழ்நாட்டிலும் பல்வேறு வண்ணங்களில் விற்கப்படும் பஞ்சு மிட்டாய்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • கர்நாடகாவில் சோதனை செய்யப்பட்ட பானிபூரியில் 22% உண்பதற்கான பாதுகாப்பு தரத்தை மீறியுள்ளது.
    • 41 மாதிரிகளில் செயற்கை நிறங்கள் மற்றும் புற்றுநோயை உருவாக்கும் கெமிக்கல்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவில் அனைவரும் விரும்பும் உணவாக பானி பூரி உள்ளது. முதலில் இந்த உணவு வட மாநிலங்களில் மக்களின் விரும்பப்படும் உணவாக பார்க்கப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த உணவு வட மாநில மக்கள் மூலம் தமிழகத்தில் வந்தது. இதன் மூலம் தமிழகத்திலும் பானி பூரியை மக்களின் விரும்பத்தக்க உணவாக மாறியது.

    பானி பூரி குறித்து தவறான கருத்துக்கள் வந்தாலும் அதனை கண்டுக்கொள்ளாமல் மக்கள் அதனை ருசித்து சாப்பிட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் பானி பூரி சாப்பிடும் மக்களுக்கு அதிர்ச்சிகரமான செய்தியை நேற்று கர்நாடக உணவு பாதுகாப்புதுறை தெரிவித்தது.

    அந்த வகையில் சாலையோரம் உள்ள பானி பூரிகள் தரமில்லாமல் இருப்பதாக பல புகார்கள் வந்ததை தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறை சோதனை நடத்தியது. சோதனையின் முடிவில் பானிபூரியில் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் பல்வேறு உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்ற தகவல் வெளியாகியது.

    சோதனை செய்யப்பட்ட பானிபூரியில் 22% உண்பதற்கான பாதுகாப்பு தரத்தை மீறியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. சோதிக்கப்பட்ட 260 பானிபூரி மாதிரிகளில் 41 மாதிரிகளில் செயற்கை நிறங்கள் மற்றும் புற்றுநோயை உருவாக்கும் கெமிக்கல்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பானி பூரி கடைகளில் சோதனை நடத்த உணவுத்துறை ஆணையர் சதீஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் பானி பூரி கடைகளில் பயன்படுத்தப்படும் பூரி மசால், மசாலா நீரின் மாதிரிகளை சோதனை செய்யவும் ஆணை பிறபிக்கப்பட்டது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆண்டுக்கு சுமார் 8 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்.
    • இந்த எண்ணிக்கை வரும் ஆண்டுகளில் கணிசமாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    இந்தியாவில் புற்றுநோய் மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது. 2010-ம் ஆண்டு 9 லட்சத்து 80 ஆயிரம் பேர் புற்றுநோய் பாதிப்புக்கு ஆளாகி இருந்தார்கள். இந்த எண்ணிக்கை 2023-ம் ஆண்டில் 16 லட்சத்தை எட்டிவிட்டதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    இதில் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால் ஆண்டுக்கு சுமார் 8 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். இந்த எண்ணிக்கை வரும் ஆண்டுகளில் கணிசமாக அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில், ஒவ்வொரு ஆண்டும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளும் புற்றுநோயால் அவதிக்குள்ளாகிறார்கள்.

    இதற்கிடையே, டி-சீரிஸ் இணை உரிமையாளரும், நடிகருமான கிருஷண்குமாரின் மகள் தீஷா குமார் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார்.

    20 வயதான தீஷா மும்பையில் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்றார். மேல் சிகிச்சைக்காக ஜெர்மனியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்நிலையில், சிகிச்சை பலனின்றி தீஷா நேற்று உயிரிழந்தார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. புற்றுநோய்க்கு இளம்பெண் பலியானது மும்பையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • பல்சர், கே.டி.எம். வகை பைக்குகளை திருடி விற்று வந்துள்ளார்.
    • அசோக் கூறிய தகவல்கள் போலிசாரை ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியது.

    பெங்களூரில் பழ வியாபாரம் செய்து வந்தவர் அசோக். நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் அவர் பல்சர், கே.டி.எம். வகை பைக்குகளை திருடி விற்று வந்துள்ளார்.

    இதனால் அடிக்கடி கைதாகி சிறைக்கு செல்வதை அசோக் வழக்கமாக வைத்திருந்தார். இதனால் அசோக்கின் மனைவி அவரை விட்டு புரிந்துள்ளார்.

    சமீபத்தில் பெங்களூரு கிரி நகரில் ஒரு ஐடி ஊழியரின் பைக் ஒன்றை அசோக்கும் அவரது கூட்டாளி சதீசும் சேர்ந்து திருடியுள்ளனர்.

    இந்த வழக்கின் அசோக் மற்றும் சதீஷை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அந்த வழக்கின் விசாரணையில் அசோக் கூறிய தகவல்கள் போலிசாரை ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியது.

    "என் நண்பரின் மனைவி மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். பைக்கை திருடி விற்ற பணத்தை முழுவதும் அவரின் சிகிச்சைக்காக கொடுத்துவிட்டேன். என் மனைவி என்னை விட்டு பிரிந்து சென்ற போது அந்த நண்பர் தான் எனக்கு ஆதரவு கொடுத்தார். அதற்கு நன்றிக்கடன் செலுத்தும் விதமாக இந்த உதவியை செய்ததாக" அசோக் தெரிவித்துள்ளார்.

    • இலவச புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
    • இல்லம் தேடி சென்றும் பரிசோதனை நடத்துகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் 73 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 18 நகர்புற நலவாழ்வு மையங்கள், 98 கிராமப்புற துணை சுகாதார நல வாழ்வு மையங்கள், 8 அரசு மருத்துவமனைகள், ஒரு அரசு மருத்துவக் கல்லூரி மையம் என 198 சமுதாய அளவிலான புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை மையங்களில் இலவச புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. முகாமில் மகளிர் சுகாதார தன்னார்வலர்கள் பரிசோதனை செய்வதுடன், இல்லம் தேடி சென்றும் பரிசோதனை நடத்துகின்றனர்.

    இத்திட்டத்தில் ஈரோடு மாவட்டத்தில் 4 லட்சத்து 23 ஆயிரத்து 478 பேருக்கு வாய் புற்றுநோய் பரிசோதனை, 2 லட்சத்து 21 ஆயிரத்து 765 பேருக்கு மார்பக புற்றுநோய் பரிசோதனை, 2 லட்சத்து 21 ஆயிரத்து 816 பேருக்கு கர்ப்பப்பை புற்றுநோய் பரிசோதனைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

    இதில் 2 லட்சத்து 8 ஆயிரத்து 699 பேர் வாய் புற்றுநோய் பரிசோதனை செய்ததில் 22 பேருக்கு புற்றுநோய் இருப்பது தெரிய வந்தது. 86 ஆயிரத்து 63 பேருக்கு மார்பக புற்றுநோய் பரிசோதனை செய்ததில் 22 பேருக்கும், 62 ஆயிரத்து 880 பேருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பரிசோதனை செய்ததில் 9 பேருக்கும் புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    மொத்தம் 3 லட்சத்து 57 ஆயிரத்து 642 பேருக்கு பரிசோதனை செய்ததில் 53 பேருக்கு புற்றுநோய் உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • mRNA- அடிப்படையிலான தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாக ரஷிய சுகாதாரத்துறை கூறியுள்ளது.
    • காதார அமைச்சகத்தின் கதிரியக்க மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் பொது இயக்குநர் ஆண்ட்ரே கப்ரின் பேசியுள்ளார்

    புற்றுநோய்க்கு தங்கள் நாடு தடுப்பூசி கண்டுபிடித்துவிட்டதாக ரஷியா அறிவித்துள்ளது. உலகளவில் பலரை ஆட்டிப்படைக்கும் கேன்சர் எனப்படும் புற்றுநோயை குணப்படுத்தப் பல நாடுகள் தடுப்பூசி கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் நிலையில் mRNA- அடிப்படையிலான தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாக ரஷிய சுகாதாரத்துறை கூறியுள்ளது.

     

    ரஷிய விஞ்ஞானிகள் புற்று நோய்க்கு எதிரான தடுப்பூசியை உருவாக்கும் முயற்சியில் இறுதிக் கட்டத்தில் இருப்பதாகவும், விரைவில் அது பயன்பாட்டுக்கு வரும் என்றும் அந்நாட்டின் அதிபர் விளாடிமிர் புதின் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

    அதன்படி இன்று புற்றுநோய் தடுப்பூசியை உருவாக்கிவிட்டோம் என்றும் இந்த தடுப்பூசி 2025 முதல் சந்தைகளில் கிடைக்கும் என்றும் தடுப்பூசிகளை நோயாளிகளுக்கு இலவசமாக வழங்க உள்ளதாகவும் ரஷிய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

     

    இது குறித்து ரஷ்ய சுகாதார அமைச்சகத்தின் கதிரியக்க மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் பொது இயக்குநர் ஆண்ட்ரே கப்ரின் பேசுகையில், புற்றுநோய்க்கு எதிராக சொந்தமாக mRNA- அடிப்படையிலான அடிப்படையிலான தடுப்பூசியை உருவாக்கி உள்ளோம் என்றும் இது மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என கூறியுள்ளார்.

    தடுப்பூசிகளின் ஒரு வகையான mRNA [messenger RNA] தடுப்பூசி, உடலில் உள்ள mRNA molecule ஐ பிரதி எடுத்து அதிலிருந்து நோயெதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையிலானது. இந்நிலையில் ரஷியாவின் இந்த தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்தால் உலகம் முழுதும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு அதிக பயனுடையதாக இருக்கும். 

    அடிக்கடி நகம் கடிக்கும் பழக்கத்தால் மிகவும் அரிதான கேன்சரால் பாதிக்கப்பட்டு 20 வயது கல்லூரி மாணவி ஒருவர் தனது வலதுகை கட்டை விரலை இழந்துள்ளார்.
    லண்டன்:

    பிரிட்டனின் கவுண்டி துர்ஹாம் பகுதியை சேர்ந்தவர் விதோர்ன். 20  வயதான கல்லூரி மாணவியான இவருக்கு அடிக்கடி நகம் கடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. சிறு வயது முதலே இந்த பழக்கம் இருக்கிறது என கூறியுள்ள விதோர்ன், இதனால் தனது விரலை இழந்ததோடு கேன்சர் நோயாலும் பாதிக்கப்பட்டுள்ளார்.

    ஓயாமல் நகம் கடித்ததன் காரணமாக வலது கையில் உள்ள கட்டை விரல் நான்காண்டுகளுக்கு முன் கறுப்பாக மாற தொடங்கியது. கையுறகள் கொண்டு மூடி மறைத்து வந்த அவர், வலி தாங்க முடியாமல் சமீபத்தில் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அவரது விரலை பரிசோதனை செய்த பின்னர் தான் acral lentiginous subungual melanoma என்ற அரிய வகை கேன்சரால் விதோர்ன் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

    இதன் பின்னர், நான்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அவரது கட்டை விரல் அகற்றப்பட்டது. எனினும், கேன்சரை முழுமையாக அகற்ற முடியவில்லை. தற்போது, மருத்துவமனையில் இருக்கும் விதோர்ன், விரலை இழந்தாலும் உடல்நலம் தேறி வருகிறார்.
    ×