என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஓயாமல் நகம் கடிக்கும் பழக்கத்தால் கட்டை விரலை இழந்த மாணவி
Byமாலை மலர்6 Sep 2018 12:42 PM GMT (Updated: 6 Sep 2018 12:42 PM GMT)
அடிக்கடி நகம் கடிக்கும் பழக்கத்தால் மிகவும் அரிதான கேன்சரால் பாதிக்கப்பட்டு 20 வயது கல்லூரி மாணவி ஒருவர் தனது வலதுகை கட்டை விரலை இழந்துள்ளார்.
லண்டன்:
பிரிட்டனின் கவுண்டி துர்ஹாம் பகுதியை சேர்ந்தவர் விதோர்ன். 20 வயதான கல்லூரி மாணவியான இவருக்கு அடிக்கடி நகம் கடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. சிறு வயது முதலே இந்த பழக்கம் இருக்கிறது என கூறியுள்ள விதோர்ன், இதனால் தனது விரலை இழந்ததோடு கேன்சர் நோயாலும் பாதிக்கப்பட்டுள்ளார்.
ஓயாமல் நகம் கடித்ததன் காரணமாக வலது கையில் உள்ள கட்டை விரல் நான்காண்டுகளுக்கு முன் கறுப்பாக மாற தொடங்கியது. கையுறகள் கொண்டு மூடி மறைத்து வந்த அவர், வலி தாங்க முடியாமல் சமீபத்தில் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அவரது விரலை பரிசோதனை செய்த பின்னர் தான் acral lentiginous subungual melanoma என்ற அரிய வகை கேன்சரால் விதோர்ன் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
இதன் பின்னர், நான்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அவரது கட்டை விரல் அகற்றப்பட்டது. எனினும், கேன்சரை முழுமையாக அகற்ற முடியவில்லை. தற்போது, மருத்துவமனையில் இருக்கும் விதோர்ன், விரலை இழந்தாலும் உடல்நலம் தேறி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X