search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "friend"

    • மோட்டார் சைக்கிள் திடீரென அங்கு உள்ள ஒரு வாய்க்கால் மதகில் மோதியது.
    • இதில் ஆகாஷ் (வயது 23) என்பவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    மயிலாடுதுறை:

    திருக்கடையூர் அருகே ஆக்கூர் பஞ்சாகை கிராமத்தை சேர்ந்த பக்கிரிசாமி மகன் ஆகாஷ் (வயது 23).

    டிரைவர்இவர் மோட்டார் சைக்கிளில் ஆக்கூர், மடப்புரம், வவ்வால் தோப்பை சேர்ந்த தனது நண்பர் விஷ்வாவுடன் காரைக்காலில் இருந்து தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

    மோட்டார் சைக்கிளை ஆகாஷ் ஓட்டினார்.

    இந்நிலையில் திருக்கடையூர் அருகே அன்னப்பன்பேட்டை வளைவு பகுதியில் திரும்பும் பொழுது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் திடீரென அங்கு உள்ள ஒரு வாய்க்கால் மதகில் மோதியது.

    இதில் மோட்டார் சைக்கிள் ஓட்டி சென்ற ஆகாஷ் கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    மேலும் இந்த விபத்தில் படுகாயம் அடைந்த விஷ்வாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

    விபத்தில் இறந்தஆகாஷ் உடல் மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

    இந்த சம்பவம் குறித்து பொறையாறு இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பள்ளியில் இருந்து வந்த மாணவி ஒருவரை தாமஸ்குட்டி சரமாரி தாக்கினார்.
    • போலீசார் விசாரணை நடத்தி தப்பி ஓடிய தாமஸ் குட்டியை வலைவீசி தேடி வருகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் கரட்டாங்காடு பகுதியை சேர்ந்தவர் மாதேஷ்(வயது 22). இவரது தங்கை திருப்பூர் பழனியம்மாள் மாநகராட்சி பெண்கள் பள்ளியில் படித்து வருகிறார். நேற்று மாலை தனது தங்கையை அழைத்து வருவதற்காக மாதேஷ் தனது நண்பர்களான வினோத்குமார்(23), தாமஸ்குட்டி(22) ஆகியோருடன் பள்ளிக்கு சென்றார். முன்னதாக, வினோத்குமார் பிறந்தநாளை முன்னிட்டு 3 பேரும் மது அருந்தி விட்டு சென்றுள்ளனர்.

    இதனால் மதுபோதையில் 3 பேரும் பள்ளி முன்பு காத்திருந்தனர். அப்போது பள்ளியில் இருந்து வந்த மாணவி ஒருவரை தாமஸ்குட்டி சரமாரி தாக்கினார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியடைந்ததுடன் தாமஸ் குட்டியை பிடிக்க முயன்றனர். அதற்குள் அவர் தப்பி சென்றுவிட்டார்.

    இதையடுத்து அவருடன் வந்த மாதேஷ், வினோத்குமார் ஆகிய இருவரையும் பிடித்து சரமாரி தாக்கினர். இதில் இருவருக்கும் ரத்த காயம் ஏற்பட்டது.

    இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருப்பூர் தெற்கு போலீசார் 2பேரையும் மீட்டு, திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், தாமஸ்குட்டி, பழனியம்மாள் பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவரை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். ஆனால் அந்த மாணவி காதலிக்க மறுத்துள்ளார். இது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையில் தாமஸ்குட்டி, மாணவியை மதுபோதையில் சரமாரி தாக்கிவிட்டு தப்பி சென்றது தெரியவந்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி தப்பி ஓடிய தாமஸ் குட்டியை வலைவீசி தேடி வருகின்றனர். காதலிக்க மறுத்த மாணவியை பள்ளி முன்பு வாலிபர் சரமாரி தாக்கிய சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    • இன்றைய காலகட்டத்தில் செல்போன் தவிர்க்க முடியாத ஒன்று என்பதால் மனைவி மீது அவருக்கு சந்தேகம் வரவில்லை.
    • எதிர் முனையில் பேசிய நித்யா, புது வாழ்க்கை ஒன்றை அமைத்துவிட்டேன். ஆகவே என்னை தேட வேண்டாம் என கூறிவிட்டு அதிரடியாக இணைப்பை துண்டித்தார்.

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் துறையூர் அருகேயுள்ள கோம்பை புதூர் பகுதியைச் சேர்ந்தவர் புஷ்பராஜ் (வயது 33 ), மினி பஸ் டிரைவர். இவருக்கும் நர்சிங் படித்து வந்த அதே பகுதியைச் சேர்ந்த நித்யா (23) என்ற மாணவிக்கும் காதல் மலர்ந்தது. இதையடுத்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புஷ்பராஜ் காதலியை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை.

    இந்நிலையில் நித்யா அந்தப் பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் உதவியாளராக பணிக்கு சேர்ந்தார். அதன் பின்னர் அவரது நடத்தையில் மாற்றங்கள் ஏற்பட்டது. 24 மணி நேரமும் செல்போனும் கையுமாக மூழ்கி இருந்துள்ளார். இன்றைய காலகட்டத்தில் செல்போன் தவிர்க்க முடியாத ஒன்று என்பதால் மனைவி மீது அவருக்கு சந்தேகம் வரவில்லை. இதற்கிடையே இன்ஸ்டாகிராம் மூலம் நவீன் என்பவர் நித்யாவுக்கு அறிமுகம் ஆகியுள்ளார்.

    பின்னர் கணவருக்கு தெரியாமல் நீண்ட நேரம் அவருடன் அரட்டை அடித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் ஆசிரியை ஒருவரை பார்க்கச் செல்வதாக கூறிச்சென்ற நித்யா அதன் பிறகு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து புஷ்பராஜ் காதல் மனைவியை அவர் வேலை பார்க்கும் பள்ளி, தோழிகள், உறவினர்கள் வீடு உன தேடி வந்தார். ஆனால் நித்யா குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    இந்நிலையில் மனைவியின் செல்போனிலிருந்து புஷ்பராஜூக்கு நள்ளிரவில் அழைப்பு வந்தது. உடனே புஷ்பராஜ் செல்போனை எடுத்துப் பேசினார். எதிர் முனையில் பேசிய நித்யா, புது வாழ்க்கை ஒன்றை அமைத்துவிட்டேன். ஆகவே என்னை தேட வேண்டாம் என கூறிவிட்டு அதிரடியாக இணைப்பை துண்டித்தார். இதைக் கேட்டு புஷ்பராஜ் கடும் அதிர்ச்சிக்கு ஆளானார்.

    பின்னர் துறையூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் மாயமான தனது மனைவியை தேடி கண்டுபிடித்து தருமாறு கூறியுள்ளார். போலீசாரின் விசாரணையில்,

    மாயமான நித்யா கணவரை தவிக்க விட்டு இன்ஸ்டாகிராம் நண்பருடன் ஓட்டம் பிடித்தது தெரியவந்தது. அந்த இன்ஸ்டாகிராம் நண்பர் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது உறுதியாக தெரியவில்லை. மதுரையைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி அவரை தேடி வருகிறார்கள்.

    • சண்முகராஜ் மதுபாட்டிலை உடைத்து மாரிச்சாமியை குத்தினார்.
    • படுகாயமடைந்த மாரிச்சாமியை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் கட்டபொம்மன் தெருவை சேர்ந்தவர் மாரிச்சாமி (வயது 42). இவரும், கோட்டையூர் பசும்பொன் 2-வது தெருவை சேர்ந்த சண்முக ராஜ் (36) என்ப வரும் நண்பர்கள். இருவருக்கும் குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்றுமுன்தினம் இருவரும் வாசுதேவநல்லூர் காமராஜ் சிலை பின்புறம் மது குடித்துள்ளனர்.

    அப்போது இருவருக்கும் பணம் கொடுக்கல்-வாங்கலில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த சண்முகராஜ் மதுபாட்டிலை உடைத்து மாரிச்சாமியை குத்தினார். இதில் மாரிச்சாமிக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

    படுகாயமடைந்த மாரிச்சாமியை அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் மீட்டு தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து வாசுதேவநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் வழக்குப்பதிவு செய்து சண்முகராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • “ஆயுத பூஜைக்கு ஆயிரம் லட்டுக்கள்” என்ற நூதன நிகழ்ச்சி நடைபெற்றது.
    • போலீசாரை பொதுமக்கள் எதிரியாக பார்க்க கூடாது, நண்பராகவே பார்க்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தமிழகம் முழுவதும் பணிபுரியும் போலீசார் தினந்தோறும் பாதுகாப்பு பணி, போக்குவரத்து ஒழுங்குபடுத்துதல் என பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பண்டிகை நாளிலும் குடும்பத்துடன் செலவிட முடியாமல் பணிபுரிந்து வரும் போலீசாரை உற்சாகப்படுத்தும் விதமாக பல்வேறு விதமான பயிற்சிகள் ஜோதி அறக்கட்டளை சார்பில் போலீசாருக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக தஞ்சை போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா கந்தபுனேணி, தஞ்சை நகர துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா ஆகியோரின் ஆலோசனைபடி ஜோதி அறக்கட்டளை சார்பில் காவலர்களுக்கும், பொது மக்களுக்கும் இனிப்பு வழங்கி வாழ்த்துக்களை பகிர்ந்துகொள்ளும் விதமாக "ஆயுத பூஜைக்கு ஆயிரம் லட்டுக்கள்" என்ற நூதன நிகழ்ச்சி தஞ்சை பழைய பஸ் நிலையம் அண்ணா சிலை சிக்னல் அருகே தஞ்சை நகர போக்குவரத்து ஒழுங்குபிரிவு இன்ஸ்பெ க்டர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் போலீசார் அவ்வழியாக சென்ற பொதுமக்கள், பஸ், ஆட்டோ பயணிகளுக்கு லட்டுகள் வழங்கி வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

    பின்னர், போக்குவரத்து ஒழுங்குபிரிவு இன்ஸ்பெ க்டர் ரவிச்சந்திரன் பேசுகையில்:-

    காவல்துறையினரை பொதுமக்கள் எதிரியாக பார்க்க கூடாது, நண்பரா கவே பார்க்க வேண்டும், காவல்துறை மற்றும் பொதுமக்கள் நல்லுறவு பேணும் விதத்தில்நடத்த ப்படும் இது போன்ற நிகழ்ச்சிகளால் பொதும க்களுக்கும், காவல்துறையி னருக்குமி டையே உள்ள இடைவெளி குறையும் என்று தெரிவித்தார் .

    இனிப்புகளை பெற்றுக்கொண்ட பொது மக்கள் காவல்துறையினரின் நூதன முயற்சியை பாராட்டி னர்.

    நிகழ்ச்சியில்போக்கு வரத்து உதவி இன்ஸ்பெ க்டர் பாஸ்கரன், போக்கு வரத்து சிறப்பு உதவி இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ்கு மார், ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை செயலாளர் டாக்டர் பிரபு ராஜ்குமார் மேற்பார்வையில் அறக்க ட்டளை மேலாளர் ஞானசு ந்தரி உள்ளிட்டோர் செய்தி ருந்தனர்.

    • நண்பரை பார்க்க சென்றவர் மாயமானார்.
    • இவர்களுக்கு 23 வயதில் மகளும், 20 வயதில் மகனும் உள்ளனர்.

    மதுரை

    மதுரை பி.பி.சாவடி பல்லவன் நகர் 6-வது தெருவை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (வயது 48). இவரது மனைவி மீனாட்சி (42). இவர்களுக்கு 23 வயதில் மகளும், 20 வயதில் மகனும் உள்ளனர். கடந்த மாதம் 5-ந் தேதி முத்துகிருஷ்ணன், தஞ்சாவூர் பூண்டி சர்ச் பகுதியில் உள்ள தனது நண்பர் ஜோசப் சகாயராஜை பார்க்கப்போகிறேன் என்று கூறிவிட்டு சென்றார். 2 நாள் கழித்து அவர், மனைவியிடம் பேசினார்.

    அதன்பிறகு முத்துகிருஷ்ணனின் செல்போன் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டுவிட்டது. அவரது நண்பரின் செல்போனும் அனைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

    இதுகுறித்து மனைவி மீனாட்சி கொடுத்த புகாரின் பேரில் கரிமேடு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் தண்டீஸ்வரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    காவேரிபட்டணம் அருகே தகராறில் நண்பரை கத்தியால் குத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிபட்டணம், அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சிவாஜி மகன் முகேஷ்(20). கூலித்தொழிலாளியான இவருக்கும், இவரது நண்பர்கள் ஜமேதார்மேடு கதிரேசன் மகன் பாரத்(19), சின்னத்தம்பி மகன் அருண்குமார்(23), கருக்கன்சாவடி பர்கத் மகன் அஸ்கர்(20) இவரர்களுக்குள் திடீரென வாய்த்தகராறு ஏற்பட்டுளளது. 

    இதில் தகராறு முற்றி கைகலப்பாக மாறியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த 3பேரும் முகேஷ்யை பலமாக தாக்கி, கத்தியால் குத்தியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த முகேஷ் காவேரிபட்டணம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து தகவலறிந்து வந்த காவேரிபட்டணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாரத், அருண்குமார், அஸ்கர் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
    பங்குதரகர் ஒருவர், பணப்பிரச்சினையில் நண்பரை கொலை செய்து உடலை ஆட்டுக்கறி போல நறுக்கிய கொடூர சம்பவம் விராரில் நடந்துள்ளது.
    வசாய் :

    நெஞ்சை பதறச்செய்யும் இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

    பால்கர் மாவட்டம் விரார் மேற்கு எவர்சைன் அவென்யூ பகுதியில் பச்ராஜ் பாரடைஸ் என்ற அடுக்குமாடி கட்டிடம் உள்ளது. கடந்த சில நாட்களாக இந்த பகுதியில் சகிக்க முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசியது. குடியிருப்புவாசிகள் விலங்குகள் ஏதாவது அருகில் செத்து கிடக்கும் என கருதினர்.

    இந்தநிலையில், கட்டிடத்தில் உள்ள கழிவுநீர் குழாயில் அடைப்பு ஏற்பட்டது. மேலும் துர்நாற்றம் அதிகமானது. இதுபற்றி குடியிருப்புவாசிகள் மாநகராட்சிக்கு தகவல் கொடுத்தனர். அடைப்பை சரி செய்வதற்காக தொழிலாளர்கள் வந்து அங்குள்ள கழிவுநீர் தொட்டியின் மூடியை திறந்தனர்.

    அப்போது, கழிவுநீரில் 3 மனித விரல் துண்டுகள் மிதந்து கொண்டு இருந்தன. இதைப்பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அர்னாலா போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அந்த விரல்களை கைப்பற்றினர்.

    இதற்கிடையே கழிவு நீர் குழாய்க்குள் அதிகளவில் மனித உடல் பாகங்கள் துண்டு, துண்டாக சிக்கியிருந்தது. மேலும் அங்குள்ள சாக்கடையிலும் மனித உடல் பாகங்கள் மிதந்து கொண்டிருந்தன. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த உடல் பாகங்களையும் போலீசார் கைப் பற்றினர்.

    150-க்கும் மேற்பட்ட துண்டுகளாக வெட்டப்பட்ட உடல் பாகங்கள் 40 கிலோவுக்கும் மேல் எடை கொண்டதாக இருந்தன.

    கைப்பற்றப்பட்ட உடல் பாகங்கள் கலினாவில் உள்ள தடயவியல் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் குடியிருப்புவாசிகளிடம் தீவிர விசாரணை நடத்தினார்கள்.

    இந்தநிலையில், மனித உடல் பாகங்கள் பச்ராஜ் பாரடைஸ் கட்டிடத்தின் 6-வது மாடியில் உள்ள 602-ம் எண் வீட்டில் உள்ள கழிவுநீர் குழாய் வழியாக போடப்பட்டு இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.

    அந்த வீட்டை மும்பை சாந்தாகுருஸ் வகோலாவை சேர்ந்த பிண்டு சர்மா(வயது42) என்பவர் வாடகைக்கு எடுத்து இருந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினார்கள். அப்போது, திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன. அதன் விவரம் வருமாறு:-

    பிண்டு சர்மா பங்கு தரகராக உள்ளார். இவரது நண்பர் கணேஷ் கோலட்கர்(58). இவர் தானே மாவட்டம் மிராரோட்டில் வசித்து வந்தார். அச்சகம் நடத்தி வந்த அவர், கடந்த 6 மாதங்களுக்கு முன் பிண்டு சர்மாவிடம் கடனாக ரூ.1 லட்சம் வாங்கியிருந்தார். அதில், ரூ.40 ஆயிரத்தை மட்டும் திருப்பி கொடுத்தார். மீதி 60 ஆயிரத்தை கொடுக்கவில்லை. அந்த பணத்தை கேட்டு அவர், கணேஷ் கோலட்கரை தொந்தரவு செய்து வந்தார்.

    இருப்பினும் அவர் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. இந்த நிலையில், கடந்த 16-ந்தேதி விராரில் தான் வாடகைக்கு எடுத்து இருக்கும் வீட்டை பார்த்து வருவோம் என கூறி பிண்டு சர்மா, கணேஷ் கோலட்கரை வீட்டுக்கு அழைத்து சென்றார்.

    அங்கு வைத்து இருவருக்கும் இடையே கடன் தொடர்பாக தகராறு உண்டானது. அப்போது, கணேஷ் கோலட்கரை பிடித்து பிண்டு சர்மா தள்ளிவிட்டுள்ளார். இதில், தரையில் மோதியதில் தலையில் படுகாயம் அடைந்த கணேஷ் கோலட்கர் சம்பவ இடத்திலேயே இறந்து போனார். இதைப்பார்த்து பிண்டு சர்மா அதிர்ச்சி அடைந்தார். என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தார்.

    பின்னர் நடந்ததை வெளியில் காட்டிக்கொள்ளாமல் உடலை வீட்டுக்குள்ளேயே வைத்து பூட்டிவிட்டு சாந்தாகுருஸ் திரும்பினார். மறுநாள் புதிய ஆக்சாபிளேடு ஒன்றை வாங்கிக்கொண்டு விராருக்கு சென்ற அவர், வீட்டுக்குள் இருந்தபடி கணேஷ் கோலட்கரின் உடலை துண்டு, துண்டாக வெட்டி கூறுபோட்டார்.

    அதை வெளியில் எடுத்து சென்றால் யாரும் பார்த்து விடுவார்களோ என பயந்துபோன அவர், ஆட்டுக்கறியை நறுக்குவது போல் சிறு, சிறு துண்டுகளாக நறுக்கினார்.

    பின்னர் அந்த துண்டுகளை கழிவறை கோப்பைக்குள் கொட்டினார். எஞ்சியிருந்த துண்டுகளை கழிவுநீர் குழாய்க்குள் போட்டு தண்ணீரை ஊற்றினார். இதில், அந்த உடல் துண்டுகள் அடைத்துக்கொண்டன.

    இனி மற்ற உடல் பாகங்களை அங்கு போட முடியாது என தெரிந்ததும் அவர் ஒரு பையில் மூட்டைக்கட்டி கட்டிடம் அருகே உள்ள சாக்கடையில் வீசிவிட்டு ஒன்றும் தெரியாதது போல் சென்று விட்டார்.

    மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தன.

    இதையடுத்து போலீசார் பிண்டு சர்மாவை அதிரடியாக கைது செய்தனர்.

    கணேஷ் கோலட்கரின் தலையை இன்னும் போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. தலையையும் சாக்கடையில் தான் வீசியதாக பிண்டு சர்மா போலீசாரிடம் தெரிவித்து இருக்கிறார்.

    அவர் ஒருவராக உடலை துண்டு, துண்டாக்கி நறுக்கி வீசியிருக்க முடியாமா? என போலீசாருக்கு சந்தேகம் எழுந்து உள்ளது. எனவே இதில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். எனவே இது தொடர்பாக அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பணப்பிரச்சினையில் நண்பரை கொன்று உடலை கூறுப்போட்டு வீசிய சம்பவம் அந்த பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    ரவுடி கொலை வழக்கில் அவரது நண்பரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

    ராஜபாளையம்:

    ராஜபாளையம் அருகே உள்ள முகவூரைச் சேர்ந்தவர் மகேஷ் (வயது30), பிரபல ரவுடி. பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடையவர்.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் தொடர்புடைய மாடசாமி என்பவரை கொன்ற வழக்கிலும் இவர் சேர்க்கப்பட்டுள்ளார். வழக்கு விசாரணைக்காக கோர்ட்டில் ஆஜராகி வந்த மகேஷ் மலைப்பகுதியில் தங்கி வாழ்ந்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று கழுத்தில் கத்திக்குத்து காயங்களுடன் மலையில் அவர் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன், துணை சூப்பிரண்டு ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் நேற்று முன்தினம் மாலை வரை மகேசுடன் அவரது நண்பர் முகவூர் பூபேஸ் குப்தா நகரைச் சேர்ந்த வீரமணிகண்டன் (32) என்பவர் சுற்றி திரிந்ததை சிலர் பார்த்துள்ளனர்.

    ஆனால் தற்போது வீரமணிகண்டன் தலைமறைவாகி விட்டார். எனவே அவர்தான் மகேசை கொலை செய்து இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். அதன் அடிப்படையில் அவரை போலீசார் தேடி வருகின்றனர். அவர் பிடிபட்டால்தான் கொலைக்கான காரணம் என்ன? என்பது தெரியவரும்.

    புதுவையில் பீர் குடிக்கும் தகராறில் டெம்போ டிரைவரை குத்தி கொலை செய்த நண்பரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை முத்திரையர் பாளையம் சேரன் நகர் சோழன் வீதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகன் சந்துரு (வயது 26). இவர் சொந்தமாக டெம்போ வைத்து ஓட்டி வருகிறார். காலையில் இருந்து மதியம் வரை சந்துரு டெம்போ ஓட்டுவார்.

    அதன் பிறகு மற்ற நேரங்களில் அவரது நண்பர் தியாகு டெம்போவை ஓட்டுவார்.

    நேற்று மதியம் சந்துரு டெம்போவை தியாகுவிடம் ஒப்படைத்து விட்டு சென்றார். நேற்று இரவு வரை அவர் வீட்டுக்கு வர வில்லை.

    எனவே, வீட்டில் உள்ளவர்கள் அவரை தேடினார்கள். இன்று காலை கதிர்காமம் தட்சிணாமூர்த்தி நகரில் தனியார் பள்ளி அருகே உள்ள மைதானத்தில் வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    இதுபற்றி தகவல் அறிந்த சந்துருவின் தாயார் தனது மகனாக இருக்கலாம் என்று கருதி அங்கு சென்று பார்த்தார். அதில் சந்துருதான் கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்தது.

    கோரிமேடு இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் கலையரசன், வடிவழகன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வா குப்தா, சூப்பிரண்டு ரச்சனாசிங் ஆகியோரும் நேரில் பார்வையிட்டனர்.

    சந்துருவுடன் கழுத்து மற்றும் முகம் பகுதியில் பீர் பாட்டிலால் சரமாரியாக குத்தப்பட்டு இருந்தது. அந்த பாட்டில் அருகே உடைந்து கிடந்தது.

    சந்துரு ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் அருகிலேயே ஸ்டாண்டு போட்டு நிறுத்தப்பட்டு இருந்தது. அதில், மாட்டு சாணத்தை கரைத்து ஆங்காங்கே தடவப்பட்டு இருந்தது.

    கைரேகை தெரிய கூடாது என்பதற்காக அவ்வாறு செய்யப்பட்டு இருந்தது தெரிந்தது. போலீசார் கொலையாளிகள் யார்? என கண்டுபிடிக்க விசாரணை நடத்தினார்கள்.

    அப்போது நேற்று மாலை சந்துருவுடன் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த அவரது நண்பர் சங்கர் மோட்டார் சைக்கிளில் சுற்றி திரிந்ததாக நேரில் பார்த்தவர்கள் கூறினார்கள்.

    சங்கரும் டெம்போ டிரைவராக இருந்து வந்தார். இருவரும் அடிக்கடி ஒன்றாக சென்று மது குடிப்பது வழக்கம்.

    எனவே, கொலைக்கும், சங்கருக்கும் தொடர்பு இருக்கலாம் என கருதி போலீசார் அவரை அழைத்து வந்து விசாரித்தனர். அப்போது நான்தான் சந்துருவை கொலை செய்தேன் என்று கூறினார்.

    நேற்று மதியத்தில் இருந்தே சந்துருவும், சங்கரும் மது குடித்துள்ளனர். முதலில் வேறு ஒரு இடத்தில் 2 பாட்டில் பீர் குடித்தனர். அதன் பிறகு இரவு 5 பீர் பாட்டில்களை இருவரும் வாங்கி வந்தனர்.

    கொலை நடந்த இடத்தில் வைத்து பீரை குடித்தார்கள். இந்த பீர் முழுவதையும் சந்துருதான் காசு போட்டு வாங்கி இருந்தார். இருவருக்கும் போதை தலைக் கேறிய நிலையில் சங்கரிடம் சந்துரு நான் தான் உனக்கு அடிக்கடி மது வாங்கி தருவேன். நீ எப்போதும் ஓசியிலேயே குடிக்கிறாய் என்று கூறி உள்ளார்.

    இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த சங்கர் பீர் பாட்டிலை எடுத்து சந்துருவின் முகத்திலும், கழுத்து பகுதியிலும் சரமாரியாக குத்தினார்.

    இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சந்துரு அந்த இடத்திலேயே உயிர் இழந்தார். அவர் இறந்து விட்டதை அறிந்ததும் தடயத்தை மறைப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சாணத்தை கரைத்து தடவினார்.

    சங்கரை கைது செய்த போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரித்து வருகிறார்கள்.

    சந்துருவின் பூர்வீக ஊர் மரக்காணம் ஆகும். 12 வருடங்களுக்கு முன்பு அவர்கள் குடும்பத்துடன் புதுவைக்கு வந்தனர். வருகிற தை மாதம் அவரது உறவினர் பெண்ணோடு திருமணம் செய்ய ஏற்பாடு நடந்து வந்தது.

    திருமண ஏற்பாடு நடந்ததால் சமீப காலமாக குடிப்பதை குறைத்து வந்துள்ளார். ஆனாலும், நேற்று நண்பருடன் குடிக்க சென்று கடைசியில் உயிரை பறி கொடுத்துள்ளார்.

    திருப்பூர் மாவட்டம் கள்ளப்பாளையம் காட்டு பகுதியில் ஒர்க்ஷாப் தொழிலாளி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இந்த சம்பவம் குறித்து நண்பர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் கள்ளப்பாளையம் காட்டு பகுதியில் 30 வயது மதிக்கதக்க வாலிபர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.

    இது குறித்து மங்கலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். கொலை செய்யப்பட்ட வாலிபர் உடலை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீசார் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் கோவை சோமனூர் அருகே உள்ள ஊஞ்சப்பாளையம் எல்லைக்காடு பகுதியை சேர்ந்த மகேந்திரன் (30) என்பது தெரியவந்தது.

    இவர் கருமத்தம் பட்டியில் உள்ள கிரீல் ஒர்க்ஷாப்பில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு அஞ்சலி என்ற மனைவியும், மோகன பிரியா என்ற மகளும், விஷால் என்ற மகனும் உள்ளனர்.

    கொலையாளிகளை பிடிக்க திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கயல்விழி உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர்கள் முத்துசாமி, சரோஜா ஆகியோர் தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த தனிப்படையினர் மகேந்திரன் மனைவி அஞ்சலியிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் தனது கணவர் நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு வந்தார்.

    சிறிது நேரத்தில் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்று விட்டார். அதன் பின்னர் வீட்டிற்கு வரவில்லை. வழக்கமாக இரவு சென்றால் காலையில் தான் வருவார் என்பதால் அவரை தேடவில்லை. இந்த நிலையில் தான் அவர் கொலை செய்யப்பட்டு காட்டுக்குள் பிணமாக கிடப்பதாக தகவல் வந்தது என கூறி உள்ளார்.

    மகேந்திரன் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் அவர் கொலை செய்யப்பட்டு கிடந்த இடத்தில் இருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ராமாச்சி பாளையம் என்ற இடத்தில் கிடந்தது.

    அதனை போலீசார் கைப்பற்றினார்கள். மகேந்திரனை அவரது நண்பர்கள் யாராவது ராமாச்சி பாளையம் பகுதிக்கு அழைத்து வந்து இருக்கலாம்.

    பின்னர் ஏற்பட்ட தகராறில் அவரை கொலை செய்ய விரட்டி இருக்கலாம். மகேந்திரன் உயிர் தப்பிக்க ஓடும் போது அவரை விரட்டி சென்று கள்ளப்பாளையம் பகுதியில் கொலை செய்து இருக்கலாம் என தனிப்படையினர் சந்தேகம் அடைந்துள்ளனர். இது தொடர்பாக மகேந்திரன் நண்பர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    1990-களில் இந்திய அணியினரின் சிறந்த ஆட்டம் வெளிவர அஜித் வடேகர் முக்கிய பங்காற்றினார் என்று முன்னாள் வீரர் சச்சின் தெண்டுல்கர் புகழாரம் சூட்டியுள்ளார். #AjitWadekar #SachinTendulkar
    மும்பை:

    1990-களில் இந்திய அணியினரின் சிறந்த ஆட்டம் வெளிவர அஜித் வடேகர் முக்கிய பங்காற்றினார் என்று முன்னாள் வீரர் சச்சின் தெண்டுல்கர் புகழாரம் சூட்டியுள்ளார்.

    உடல்நலக்குறைவால் மும்பையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அஜித் வடேகர் நேற்று முன்தினம் இரவு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 77. இடக்கை பேட்ஸ்மேனான வடேகர் இந்திய அணிக்காக 37 டெஸ்டுகளில் விளையாடி ஒரு சதம், 14 அரைசதம் உள்பட 2,113 ரன்கள் எடுத்துள்ளார். அவரது கேப்டன்ஷிப்பில் இந்திய அணி 16 டெஸ்டுகளில் பங்கேற்று 4-ல் வெற்றியும், 8-ல் டிராவும், 4-ல் தோல்வியும் கண்டது. அவரது தலைமையிலான இந்திய அணி 1971-ம் ஆண்டு இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் முதல்முறையாக டெஸ்ட் தொடரை (இரண்டு தொடரிலும் 1-0 என்ற கணக்கில்) வென்று புதிய வரலாறு படைத்தது. இந்திய ஒரு நாள் போட்டி அணியின் முதல் கேப்டன் என்ற சிறப்புக்குரியவரும் இவர் தான். ஆனால் வெறும் 2 ஒரு நாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி இருந்தார்.


    இந்திய கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி ஆகியோர் நேற்று பயிற்சியின் போது மறைந்த முன்னாள் கேப்டன் அஜித் வடேகருக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.



    1974-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு சென்ற இந்திய அணி தொடரை 0-3 என்ற கணக்கில் பறிகொடுத்தது. அதில் லண்டன் லார்ட்சில் நடந்த டெஸ்டில் இந்திய அணி வெறும் 42 ரன்னில் சுருண்டது. இந்த நாள் வரைக்கும் இந்திய அணியின் மோசமான ஸ்கோராக அது தான் இருந்து வருகிறது. இதனால் கேப்டன் பதவியை இழந்தார். அத்துடன் கிரிக்கெட்டில் இருந்தும் விடைபெற்றார்.

    ஓய்வுக்கு பிறகு வங்கியில் பணியாற்றிய அஜித் வடேகர், அதன் பிறகு அசாருதீன் தலைமையிலான இந்திய அணிக்கு 1992-ம் ஆண்டு மேலாளர்-பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். 1996-ம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் அரைஇறுதியில் ஏற்பட்ட தோல்விக்கு பிறகு பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகினார். தேர்வு குழு தலைவராகவும் இருந்திருக்கிறார். மத்திய அரசிடம் இருந்து பத்மஸ்ரீ மற்றும் அர்ஜூனா விருதுகளை பெற்றுள்ள அவருக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் சி.கே.நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கி கவுரவித்தது.

    1994-ம் ஆண்டு நியூசிலாந்து ஒரு நாள் தொடரின் போது சச்சின் தெண்டுல்கர் முதல் முறையாக தொடக்க ஆட்டக்காராக களம் இறங்கினார். அதற்கு அப்போதைய பயிற்சியாளர் அஜித் வடேகரே முக்கிய காரணமாகும். தெண்டுல்கர் தொடக்க ஆட்டக்காரராக விளையாடிய பிறகே கிரிக்கெட்டில் பல மகத்தான சாதனைகளை படைத்தார்.

    இதே போல் 1990-ம் ஆண்டு இங்கிலாந்து பயணத்துக்கு பிறகு அணியில் இருந்து நீக்கப்பட்ட சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்பிளே 1992-93-ம் ஆண்டில் மீண்டும் அணிக்கு திரும்பிய போது அப்போது பயிற்சியாளராக இருந்தவர் வடேகர். அதன் பிறகு கும்பிளே தொடர்ந்து 16 ஆண்டுகள் விளையாடினார்.

    வடேகரின் மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளனர். இதே போல் இந்திய முன்னாள் வீரர்கள் பலரும் அவரது மறைவுக்கு சமூக வலைதளம் மூலம் அனுதாபம் தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

    சச்சின் தெண்டுல்கர்: வடேகரின் மறைவு செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். 1990-களில் எங்களது மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிக்கொண்டு வந்ததில் முக்கிய பங்காற்றினார். அவரது ஆலோசனைகளுக்கும், வழிகாட்டுதல்களுக்கும் நாங்கள் எப்போதும் நன்றிக்குரியவர்களாக இருப்போம். இந்த கடினமான நேரத்தில் அவரது குடும்பத்தினர் துயரத்தை தாங்கும் மனவலிமையுடன் இருப்பதற்கு கடவுளை பிரார்த்திக்கிறேன்.

    சுனில் கவாஸ்கர்: ரஞ்சி கிரிக்கெட்டில் மும்பை அணிக்காக நான் அறிமுகம் ஆன போது எனது முதல் கேப்டனாக வடேகர் இருந்தார். இதே போல் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்குள் அடியெடுத்த போது கேப்டனாக அவர் தான் இருந்தார். என்னை பொறுத்தவரை அவர் தான் எனக்கு எப்போதும் கேப்டன். உலகை விட்டு மறைந்து விட்டாலும் எனக்குள் அவர் எப்போதும் இருப்பார்.

    அசாருதீன்: வடேகர் ஒரு அடையாள சின்னம். அவர் எனக்கு தந்தை ஸ்தானத்தில் இருந்தார். தனிப்பட்ட முறையில் அவரது மறைவு எனக்கு மிகப்பெரிய இழப்பாகும்.

    சவுரவ் கங்குலி: அவரை நான் மிகவும் தவற விடுகிறேன். என்னிடம் மிகவும் அன்பாக இருப்பார். இது எனக்கு சோகமான நாள்.

    கும்பிளே: இந்திய அணிக்கு பயிற்சியாளர் என்பதையும் தாண்டி ஒரு அப்பா போன்று எங்களை வழிநடத்தினார். வியூகங்களை தீட்டுவதில் சாதுர்யமானவர். என் திறமை மீது அவர் வைத்திருந்த நம்பிக்கைக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.

    பிஷன்சிங் பெடி: இரண்டு வெளிநாட்டு டெஸ்ட் தொடர், ஒரு உள்நாட்டு தொடர் என்று தொடர்ந்து மூன்று தொடர்களை வென்றுத்தந்த முதல் இந்திய கேப்டன். எங்களுக்குள் கருத்து வேறுபாடு இருந்தாலும், அவர் மீது அளப்பரிய மதிப்பு உண்டு.

    ஷேவாக்: கேப்டன், பயிற்சியாளர், தேர்வு குழு தலைவர் என்று மூன்று பணிகளையும் கவனித்த அபூர்வமான ஒரு கிரிக்கெட் வீரர். இந்திய கிரிக்கெட்டின் மிகப்பெரிய சேவகர். அவரது மறைவுக்கு எனது இதய அஞ்சலியை செலுத்துகிறேன்.

    ரவிசாஸ்திரி (இந்திய பயிற்சியாளர்): இந்திய கிரிக்கெட்டின் வெற்றிகரமான கேப்டனை இழந்து விட்டோம். இந்திய கிரிக்கெட்டுக்கு இது துயரமான தருணமாகும்.

    இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.   #AjitWadekar #SachinTendulkar
    ×