search icon
என் மலர்tooltip icon

    இந்தோனேசியா

    • எக்ஸ் தளத்தில் வைரலான வீடியோ இரண்டு மில்லியன் பார்வைகளையும் 14,000 விருப்பங்களையும் குவித்துள்ளது.
    • பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

    சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோக்களில் சில, விலங்குகள் மீது மனிதர்கள் வைத்துள்ள பாசத்தை காட்டும். ஆனால் தற்போது வைரலாகும் வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    வைரலாகும் வீடியோவில், நீர்யானையின் வாயில் பிளாஸ்டிக் பையை ஒருவர் திணிப்பது பார்ப்பவர்களை கடும் கோபத்திற்கு ஆளாக்குகிறது. இச்சம்பவம் இந்தோனேசியாவின் மேற்கு ஜாவாவில் உள்ள வனவிலங்கு பூங்காவில் நடந்துள்ளது.

    வீடியோ காட்சிகளின் படி, பூங்காவை காரில் சென்று சுற்றி பார்க்கும் பயணிகளில் ஒருவர் நீர் யானைக்கு கேரட்டை கொடுக்க முன்வருகிறார். இதனால் நீர் யானையோ வாயை திறக்க மற்றொரு சுற்றுலா பயணி அதன் வாயில் பிளாஸ்டிக் பையை திணிக்கிறார். இதையடுத்து அந்த நீர்யானை பிளாஸ்டிக் பையை மெல்லுகிறது.

    எக்ஸ் தளத்தில் வைரலான வீடியோ இரண்டு மில்லியன் பார்வைகளை குவித்துள்ளது. வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அதில் ஒருவர், "மனிதர்கள் அருவருப்பானவர்கள் மற்றும் பூங்காவில் விலங்குகளுக்கு உணவளிக்க யார் அனுமதிக்கிறார்கள்" என்றார். மற்றொருவர், "இதனால் அனைத்து விலங்குகளும் அழிந்து வருகின்றன" என்றார்.

    இதற்கிடையே வீடியோ வைரலானதை அடுத்து, அந்த நபர் மீது அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

    பிளாஸ்டிக் பொருட்களால் உணவுகள் வீசப்படுகிறது. இந்த உணவை தேடி வரும் விலங்குகள் அதை உட்கொள்ளுவதால் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

    • இந்தோனேசியாவின் தென்மேற்கு பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • நிலநடுக்கத்தால் உயிரிழப்புகள் அல்லது பெரிய சேதம் குறித்த தகவல் இல்லை.

    இந்தோனேசியாவில் 6.0 என்கிற ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

    இந்தோனேசியாவின் தென்மேற்கு பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 6.0 என்ற அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

    இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்புகள் அல்லது பெரிய சேதம் குறித்த உடனடி தகவல்கள் வெளிவரவில்லை.

    நிலநடுக்கம் கணிசமான ஆழத்தில் தாக்கியதால், கடுமையான சேதத்திற்கான சாத்தியம் குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • பியர் க்ரில்ஸ் நிகழ்ச்சியில் பார்த்ததுபோல் மழை நீரை சேகரித்தும், கூடாரம் அமைத்தும் 30 மணி நேரமாக உயிர் வாழ்ந்துள்ளனர்.
    • மீட்பு குழுவினரின் உதவியுடன் அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

    இங்கிலாந்தின் தொலைக்காட்சி தொகுப்பாளராக கேத்தரின் ஃபார்ஸ்டர் தனது மகன்களுடன் இந்தோனேசியாவில் உள்ள பாலி தீவிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு மேத்யூ (22), ஆண்ட்ரூ (18) என்ற அவரின் 2 மகன்களும் வழிதவறி பாலியில் உள்ள எரிமலையின் மீது எறியுள்ளனர். அங்கிருந்து எப்படி இறங்குவது என தெரியாமல் எரிமலையில் அவர்கள் மாட்டிக் கொண்டனர்.

    அவர்களை மீட்க மீட்புக்குழுவினர் அந்த எரிமலைக்கு புறப்பட்டனர். எரிமலையில் 30 மணிநேரத்திற்கு மேலாக சிக்கி கொண்டதால், அவர்கள் பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர் பியர் க்ரில்ஸ் வீடியோவில் கூறிய அறிவுரைகளை வைத்து உயிர்பிழைத்துள்ளனர்.

    பியர் க்ரில்ஸ் நிகழ்ச்சியில் பார்த்ததுபோல் மழை நீரை சேகரித்தும், கூடாரம் அமைத்தும் 30 மணி நேரமாக உயிர் வாழ்ந்துள்ளனர்.

    கிட்டத்தட்ட 40 மணிநேர போராட்டத்திற்கு பின் மீட்பு குழுவினரின் உதவியுடன் அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தங்கச் சுரங்கத்தில் உள்ள குறுகிய குழியில் உள்ளூர் கிராமவாசிகள் 33 பேர் தங்கத்தை தோண்டியெடுக்கும் பணியில் ஈடுயப்பட்டிருந்தனர்.
    • 18 பேர் மாயமான நிலையில் அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    இந்தோனேசியாவில் உள்ள சுலவேசி தீவில் சட்டவிரோதமாக இயங்கி வந்த தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    நேற்று [ஜூலை 7] ஞாயிற்றுக்கிழமை  சுலவேசி தீவின் கோரோண்டாலோ பகுதியில் உள்ள போன் பொலாங்கோ என்ற இடத்தில சட்டவிரோதமாக இயங்கி வந்த தங்கச் சுரங்கத்தில் உள்ள குறுகிய குழியில் உள்ளூர் கிராமவாசிகள் 33 பேர் தங்கத்தை தோண்டியெடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது திடீரென மேரோபகுதியில் இருந்த மண் சரிந்து குழிக்குள் இருந்தவர்கள் மீது விழுந்து அடைத்தது. இந்த விபத்தில் 12 பேர் மண்ணில் புதைந்து உயிரிழந்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்டுப்படையினர் 12 பேரின் உடல்களை மண்ணுக்குள் இருந்து மீட்டனர். இந்த விபத்தில் சிக்கிய மேலும் 18 பேர் மாயமான நிலையில் அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

     

     

    • நேரடி விமானங்களை இயக்குவதற்கு ரஷியா சில நிபந்தனைகளை விதித்துள்ளது.
    • இரு நாடுகள் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

    ஜகார்த்தா, ஜூன் 28-

    இந்தோனேசியாவின் பொருளாதாரத்தில் சுற்றுலா துறை முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே சுற்றுலா துறையை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்தவகையில் இந்தோனேசியாவின் சுற்றுலாத்துறை வருமானத்தில் ரஷியா முக்கிய பங்கு வகிக்கிறது.

    ஆனால் கொரோனா தொற்று காரணமாக இரு நாடுகள் இடையே இயக்கப்பட்ட நேரடி விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. தற்போது இயல்புநிலை திரும்பி உள்ளதால் அதனை மீண்டும் இயக்க இந்தோனேசியா முயற்சித்து வருகிறது.

    ஆனால் நேரடி விமானங்களை இயக்குவதற்கு ரஷியா சில நிபந்தனைகளை விதித்துள்ளது. இதுகுறித்து இரு நாடுகள் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அந்த நிபந்தனைகள் பூர்த்தி செய்த பிறகு விரைவில் இரு நாடுகள் இடையேயான நேரடி விமானம் மீண்டும் இயக்கப்படும் என இந்தோனேசிய சுற்றுலாத்துறை மந்திரி சந்தியாகா யூனோ கூறினார்.

    • நிலை தடுமாறிய அப்பெண் ஜிம் கட்டிடத்தின் 3-வது மாடியில் இருந்து கீழே விழுந்தார்.
    • தலையில் பலத்த காயங்களுடன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இந்தோனேசியாவில் 22 வயது இளம்பெண் ஒருவர் டிரெட்மில்லில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது.

    இந்தோனேசியாவின் மேற்கு கலிமந்தனில் உள்ள போண்டியானக்கில் உள்ள ஜிம் ஒன்றில் 22 வயது இளம்பெண் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கிறார். அப்போது, டிரெட்மில்லில் ஓடிக்கொண்டு இருந்த சமயத்தில் அப்பெண் நிலை தடுமாறி பின்னாடி உள்ள ஜன்னலை நோக்கி மெதுவாக நகர்கிறார்.

    ஜன்னலை திறந்த நிலையில் இருந்ததால் கீழே விழுவதற்கு முன்பு ஜன்னலை பிடிக்க முயன்றபோதிலும், நிலை தடுமாறிய அப்பெண் ஜிம் கட்டிடத்தின் 3-வது மாடியில் இருந்து கீழே விழுந்தார். தலையில் பலத்த காயங்களுடன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    உயிரிழந்த அப்பெண் தனது சகோதரர் மற்றும் காதலனுடன் ஜிம்மிற்குச் சென்றிருந்தார் என்றும் காதலன் இரண்டாவது மாடியில் அவருடன் உடற்பயிற்சி செய்ய சொன்னதாகவும் ஆனால், அந்த பெண் மேல் மாடியில் உள்ள டிரெட்மில்லைப் பயன்படுத்த விரும்புவதாகக் கூறி சென்ற நிலையில், பரிதாபமாக கீழே விழுந்து உயிரிழந்தார் என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

    இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், இச்சம்பவம் கடந்த 18-ந்தேதி நடந்ததாக கூறப்படுகிறது.

    • நிலநடுக்கம் ரிக்டரில் 5.9 ஆக பதிவாகியுள்ளதாக அந்நாட்டு பேரிடர் மையம் தகவல் தெரிவித்துள்ளது.
    • நிலநடுக்கம் பெரிய அலைகளை உருவாக்கவில்லை என்பதால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

    இந்தோனேசியா:

    இந்தோனேசியாவில் வடக்கு சுலாவேசி என்ற பகுதியில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் ரிக்டரில் 5.9 ஆக பதிவாகியுள்ளதாக அந்நாட்டு பேரிடர் மையம் தகவல் தெரிவித்துள்ளது.

    இந்த நிலநடுக்கம் பெரிய அலைகளை உருவாக்கவில்லை என்பதால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

    உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 12:01 மணியளவில் தலாட் தீவுகளின் வடமேற்கே 41 கிமீ தொலைவில் கடலுக்கு அடியில் 32 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

    • கடந்த 3 நாட்களுக்கு முன் பரிதா திடீரென காணாமல் போன நிலையில் அவரை கணவரும் கிராமத்தினரும் தீவிரமாகத் தேடி வந்தனர்
    • சமீப காலங்களாக இந்தோனேசியாவில் இதுபோன்று மக்கள் மலைப்பாம்புகளால் முழுதாக விழுங்கப்படும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது

    இந்தோனேசியாவில் காணாமல் போன பெண் மலைப்பாம்பின் வயிற்றுக்குள் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென் சுலானீஸ் மாகாணத்தில் உள்ள காலேம்பாங் கிராமத்தில் வசித்து வருபவர் கணவர் மற்றும் 4 குழந்தைகளுடன் 45 வயதான பரிதா வசித்து வந்தார்.

    கடந்த 3 நாட்களுக்கு முன் பரிதா திடீரென காணாமல் போன நிலையில் அவரை கணவரும் கிராமத்தினரும் தீவிரமாகத் தேடி வந்தனர். நேற்று பரிதாவின் உடைகளைக் கிராமத்தின் அருகே அவரது கணவர் கண்டுபிடித்த நிலையில் தேடுதலைத் தீவிரப்படுத்திய கிராமத்தினர் 5 மீட்டர் நீளமுடைய 16 அடி பைத்தான் வகை மலைப்பாம்பை அப்பகுதியில் பார்த்துள்ளனர்.

    சந்தேகமடைந்த அவர்கள் மலைப்பாம்பின் வயிற்றைக் கிழித்து பார்த்தபொழுது உள்ளே பரிதாவின் ஆடைகளுடன் உடல் முழுதாக ஜீரணிக்கப்படாமல் இருந்துள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் மிகவும் அரிதானது என்றாலும் சமீப காலங்களாக இந்தோனேசியாவில் இதுபோன்று மக்கள் மலைப்பாம்புகளால் முழுதாக விழுங்கப்படும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது.

    கடந்த வருடம் தினாகியா மாவட்டத்தில் விவசாயி ஒருவர் 8அடி பைத்தானால் விழுங்கப்பட்டார். 2018 இல் சுலானீஸ் மாகாணத்தில் 54 வயது பெண் ஒருவர் 7 ஆடி பைத்தானின் வயிற்றில் இருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டார். 

    • இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் தொடர் ஜகார்த்தாவில் நடைபெற்று வருகிறது.
    • இதில் இந்தியாவின் லக்‌ஷயா சென் காலிறுதியில் தோல்வி அடைந்தார்.

    ஜகார்த்தா:

    இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் தொடர் ஜகார்த்தாவில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென், டென்மார்க் வீரர் ஆண்டர்ஸ் அண்டோன்சென்னுடன் மோதினார்.

    இதில் லக்ஷயா சென் 22-24, 18-21 என்ற செட் கணக்கில் தோற்று தொடரில் இருந்து வெளியேறினார்.

    • இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் தொடர் ஜகார்த்தாவில் நடைபெற்று வருகிறது.
    • இதில் இந்தியாவின் லக்‌ஷயா சென் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    ஜகார்த்தா:

    இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் தொடர் ஜகார்த்தாவில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென், ஜப்பானின் கெண்டா நிஷிமோடோவுடன் மோதினார்.

    இதில் லக்ஷயா சென் 21-9, 21-15 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    நாளை நடைபெறும் காலிறுதியில் லக்ஷயா சென், டென்மார்க் வீரர் ஆண்டர்ஸ் அண்டோன்சென்னுடன் மோதுகிறார்.

    • இந்தோனேசியாவில் டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவையைத் தொடங்க உள்ளார்.
    • இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோவுடன் இணைந்து மஸ்க் இந்த சேவையைத் தொடங்க உள்ளார்.

    உலக பணக்காரர்களில் ஒருவரும், டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைவரும், எக்ஸ் சமூக வலைதளத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க் இந்தோனேசியாவில் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணையச் சேவையைத் தொடங்க உள்ளார்.

    இதற்காக அவர் இன்று இந்தோனேசியாவின் பாலி தீவுக்கு சென்றார். பாலியின் மாகாணத் தலைநகரான டென்பசாரில் உள்ள பொது சுகாதார மருத்துவமனையில் நடைபெறும் விழாவில் இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோவுடன் இணைந்து மஸ்க் இந்த சேவையைத் தொடங்க உள்ளார்.

    மேலும் இந்தோனேசியாவின் சுகாதாரம், கல்வித் துறைகளில் இணைப்பை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தத்திலும் கையெழுத்திடுகிறார்.

    • இந்தோனேசியாவில் அரிதினும் அரிதாக 4 கைகள் 3 கால்கள் மற்றும் ஒரே ஆண்குறியுடன் இரட்டைக் குழந்தைகள் ஒட்டிப் பிறந்துள்ளனர்.
    • உடலின் மேல்புறத்தில் அல்லாமல் கீழ்ப்புறத்திலும் ஒட்டிப் பிறந்துள்ள இரட்டையர்களை அறுவை சிகிச்சை மூலம் பிரிப்பது மிகவும் சிக்கலானது.

    இந்தோனேசியாவில் அரிதினும் அரிதாக 4 கைகள் 3 கால்கள் மற்றும் ஒரே ஆண்குறியுடன் இரட்டைக் குழந்தைகள் ஒட்டிப் பிறந்துள்ளனர். 2 மில்லயனில் 1 முறையே இதுபோன்ற குழந்தைகள் பிறக்க வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த வகை இரட்டையர்களுக்கு இசோபேகஸ் த்ரிபஸ் (Ischiopagus Tripus) என்று மருத்துவப் பெயர் உள்ளது. இந்த வகை இரட்டையர்களை 'சிலந்தி இரட்டையர்கள்' என்றும் அழைக்கின்றனர்.

    இந்தோனேசியாவில் கடந்த 2018 ஆம் ஆண்டு இந்த இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளன. ஆனால் அமெரிக்க மருத்துவ இதழ் இவர்களைக் குறித்து தற்போது வெளியிட்டுள்ள அறிக்கைக்கு பிறகே இந்த அரிய வகை இரட்டையர்களின் பிறப்பு வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மேலும் அந்த இதழில் குறிப்பிட்டுள்ளபடி, உடலின் மேல்புறத்தில் அல்லாமல் கீழ்ப்புறத்திலும் ஒட்டிப் பிறந்துள்ள இரட்டையர்களை அறுவை சிகிச்சை மூலம் பிரிப்பது மிகவும் சிக்கலானது. இந்த வகை இரட்டையர்களில் ஏதேனும் ஒரு குழந்தை உயிரிழப்பதற்கே 60 சதவீதம் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    ஆனால் அதிசயிக்கத்தக்க வகையில் இந்த இரட்டையர்கள் இன்னும் நலமுடன் இருக்கின்றனர். இருப்பினும், அவர்களது உடல் அமைப்பின் காரணமாக முதல் 3 வருடங்களுக்கு அவர்களால் உட்கார முடியாத சூழல் இருந்ததால் அவர்கள் படுத்தே இருக்கும் நிலை ஏற்பட்டது. அதன்பின்னர் மருத்துவர்கள் செய்த சிறிய அறுவை சிகிச்சை காரணமாக தற்போது அவர்களால் அமர முடிகிறது என்று மருத்துவ இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

    ×