என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "PV Sindhu"
- ஒலிம்பிக் போட்டிகள் நாளை தொடங்கி ஆகஸ்டு 11-ம் தேதி வரை நடைபெறுகிறது.
- இம்முறை இந்தியா இரட்டை இலக்கத்தில் பதக்கம் வெல்லவேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
புதுடெல்லி:
33-வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நாளை தொடங்கி ஆகஸ்டு 11-ம்தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 16 விளையாட்டுகளில் சுமார் 112 இந்திய வீரர்கள், வீராங்கனைகள் களமிறங்குகிறார்கள்.
இந்நிலையில் பாரிசில் நடைபெற உள்ள ஒலிம்பிக் தொடரின் தொடக்க விழா அணிவகுப்பில் இந்தியா சார்பில் டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் மற்றும் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து ஆகியோர் தேசிய கொடியை ஏந்திச் செல்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒலிம்பிக் தொடரில் இந்திய அணியின் தலைவராக ககன் நரங் செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ககன் நரங் 5 முறை ஒலிம்பிக்கில் பங்கேற்றவர்.
கடந்த முறை டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக்கில் ஒரு தங்கம், 2 வெள்ளி மற்றும் 4 வெண்கலம் என மொத்தம் 7 பதக்கங்களை இந்தியா வென்றிருந்தது. இம்முறை இந்திய அணி இரட்டை இலக்கத்தில் பதக்கங்கள் வெல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
- இந்திய அணித்தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள ககன் நரங் 5 முறை ஒலிம்பிக்கில் பங்கேற்றவர்.
- ஒலிம்பிக் தொடரில் இந்திய அணியின் தலைவராக ககன் நரங் செயல்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
33-வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரீசில் வரும் 26-ம்தேதி முதல் ஆகஸ்டு 11-ம்தேதி வரை நடைபெற உள்ளது. இதில், 16 விளையாட்டுகளில் சுமார் 112 இந்திய வீரர்கள், வீராங்கனைகள் களமிறங்குகிறார்கள்.
கடந்த 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் ஒரு தங்கம், இரண்டு வெள்ளி மற்றும் நான்கு வெண்கலம் அடங்கிய ஏழு பதக்கங்களை இந்தியா வென்ற நிலையில், இம்முறை அதைவிட கூடுதல் பதக்கங்களை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்நிலையில் பாரீசில் நடைபெற உள்ள ஒலிம்பிக் தொடரின் தொடக்க விழா அணிவகுப்பில் இந்தியா பெண்கள் சார்பில் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து தேசிய கொடியை ஏந்திச்செல்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்கள் சார்பில் டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் தேசிய கொடியை ஏந்திச்செல்வார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், ஒலிம்பிக் தொடரில் இந்திய அணியின் தலைவராக ககன் நரங் செயல்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணித்தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள ககன் நரங் 5 முறை ஒலிம்பிக்கில் பங்கேற்றவர். ஒலிம்பிக் அணித்தலைவராக மேரி கோம் பெயர் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ககன் நரங் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- 15-21, 21-15, 14-21 என தோல்வியை சந்தித்தார்.
- வென்-சிக்கு எதிராக முதன்முறையாக தோல்வியை சந்தித்துள்ளார்.
இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் முதல் சுற்றில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை பிவி சிந்து சீன தைபே வீராங்கனை வென்-சியை எதிர்கொண்டார்.
இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற பிவி சிந்து சீன தைபே வீராங்கனை ஆட்டத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறினார். இதனால் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்தார்.
முதல் கேம்-ஐ 15-21 என இழந்தார். ஆனால் 2-வது கேம்-ஐ 21-15 என எளிதாக கைப்பற்றினார். வெற்றியை தீர்மானிக்கும் 3-வது மற்றும் கடைசி கேம்-ல் பிவி சிந்து 14-21 என தோல்வியடைந்தார். இதனால் 1-2 என்ற கேம் கணக்கில் தோல்வியடைந்து ஏமாற்றம் அடைந்தார்.
வென்-சிக்கு எதிராக முதன்முறையாக பிவி சிந்து தோல்வியை சந்தித்துள்ளார்.
பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடியான ரூட்டாபர்னா பண்டா- ஸ்வேதாபர்னா பண்டா கொரிய ஜோடியிடம் 12-21, 9-21 எனத்தோல்வியை சந்தித்தது.
- பிவி சிந்து முதல் சுற்றில் டென்மார்க் வீராங்கனையை 21-12, 22-20 என வீழ்த்தினார்.
- 2-வது சுற்றில் ஸ்பெயின் நாட்டின் கரோலினா மரினை எதிர்கொள்கிறார்.
சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடரின் முதல் சுற்றில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான பிவி சிந்து டென்மார்க் வீராங்கனையை எதிர்கொண்டார். இதில் பிவி சிந்து 21-12, 22-20 என நேர் கேமில் டென்மார்க் வீராங்கனை லின் ஜோஜ்மார்க்கை வீழ்த்தினார்.
2-வது சுற்றில் பிவி சிந்துவுக்கு கடும் சவால் நிறைந்துள்ளது. தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த கரோலினா மரினை எதிர்கொள்கிறார். ரியோ ஒலிம்பிக்கில் இவரிடம் தோல்வியடைந்துதான் தங்கம் பதக்கத்தை தவறிவிட்டார். கரோலினா மரினுக்கு எதிராக பிவி சிந்துவின் சாதனை 5-11 என்ற அளவில்தான் உள்ளது.
கடைசியாக இருவரும் டென்மார்க் ஓபனில் மோதிக் கொண்டனர். அப்போது கடும் வார்த்தைப் போரில் ஈடுபட்டதால் இருவருக்கும் மஞ்சள் அட்டை வழங்கப்பட்டது. பிவி சிந்து கடந்த வாரம் நடைபெற்ற தாய்லாந்து ஓபனில் 2-வது இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- சிந்து முதல் சுற்றில் லினே ஹோஜ்மார்க் கிஜார்ஸ்பெல்டை (டென்மார்க்) சந்திக்கிறார்.
- லக்ஷயா சென் உலகின் நம்பர் ஒன் வீரரான விக்டர் ஆக்சல்செனுடன் (டென்மார்க்) மல்லுக்கட்டுகிறார்.
சிங்கப்பூர்:
மொத்தம் ரூ.7 கோடி பரிசுத்தொகைக்கான சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூரில் இன்று தொடங்கி வருகிற 2-ந்தேதி வரை நடக்கிறது. ஒலிம்பிக் போட்டிக்கு தன்னை தயார்படுத்தி வரும் வீராங்கனை பி.வி.சிந்து, வீரர் எச்.எஸ்.பிரனாய் மற்றும் லக்ஷயா சென், ஸ்ரீகாந்த், பிரியன்ஷூ ரஜாவத், இரட்டையர் நம்பர் ஒன் ஜோடியான சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி- சிராக் ஷெட்டி உள்ளிட்ட இந்தியர்கள் இந்த போட்டியில் பங்கேற்கிறார்கள்.
கடந்த வாரம் மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டனில் இறுதி சுற்றில் தோல்வி அடைந்த சிந்து அதற்கு பரிகாரம் தேடும் வகையில் ஆடுவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. சிந்து முதல் சுற்றில் லினே ஹோஜ்மார்க் கிஜார்ஸ்பெல்டை (டென்மார்க்) சந்திக்கிறார். இதே போல் இந்திய இளம் புயல் லக்ஷயா சென் உலகின் நம்பர் ஒன் வீரரான விக்டர் ஆக்சல்செனுடன் (டென்மார்க்) மல்லுக்கட்டுகிறார்.
- மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது.
- இதில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தோல்வி அடைந்தார்.
கோலாலம்பூர்:
மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரின் பெண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, சீனாவின் வாங் யீயை எதிர்கொண்டார்.
இதில் உலகத் தரவரிசையில் 15-வது இடத்தில் இருக்கும் பி.வி.சிந்து 21-16 என முதல் செட்டை வென்றார். இதையடுத்து, சுதாரித்துக் கொண்ட வாங் யீ அடுத்த இரு சுற்றுகளை 21-5, 21-16 என கைப்பற்றிய சாம்பியன் பட்டம் வென்றார்.
- இந்திய வீராங்கனை பி.வி.சிந்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
- இந்த வெற்றியைப் பெற சிந்துவுக்கு 88 நிமிடங்கள் தேவைப்பட்டது.
கோலாலம்பூர்:
மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரின் அரையிறுதி சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, தாய்லாந்தின் பூசானனை எதிர்கொண்டார்.
இதில் உலகத் தரவரிசையில் 15-வது இடத்தில் இருக்கும் பி.வி.சிந்து 13-21 என முதல் செட்டை இழந்தார். இதையடுத்து, சுதாரித்துக் கொண்ட பி.வி.சிந்து அடுத்த இரு சுற்றுகளை 21-16, 21-12 என கைப்பற்றியதுடன், இறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தினார்.
- இந்திய வீராங்கனை பி.வி.சிந்து அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
- இந்த வெற்றியைப் பெற சிந்துவுக்கு 55 நிமிடங்கள் தேவைப்பட்டது.
கோலாலம்பூர்:
மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரின் 2-வது சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, சீனாவைச் சேர்ந்த ஹான் ஹூவை எதிர்கொண்டார்.
இதில் உலகத் தரவரிசையில் 15-வது இடத்தில் இருக்கும் பி.வி.சிந்து 21-13 என முதல் செட்டை கைப்பற்றினார். இதற்கு பதிலடியாக
ஹான் ஹூ 21-14 என 2-வது செட்டை வென்றார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3-வது செட்டை பி.வி.சிந்து 21-12 என கைப்பற்றியதுடன், அரையிறுதி சுற்றுக்கும் முன்னேறி அசத்தினார்.
மற்றொரு இந்திய வீராங்கனை அஷ்மிதா சலியா காலிறுதிச்சுற்றில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
- பிவி சிந்து 21-13, 12-21, 21-14 என்ற செட்களில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.
- இந்த வெற்றியைப் பெற சிந்துவுக்கு 59 நிமிடங்கள் தேவைப்பட்டது.
கோலாலம்பூர்:
மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரின் 2-வது சுற்றில் இந்திய வீராங்கனை பிவி சிந்து, தரவரிசையில் 34-வது இடத்தில் இருக்கும் தென்கொரியாவைச் சேர்ந்த சிம் யூ ஜின்னை எதிர்கொண்டார்.
இதில் உலகத் தரவரிசையில் 15-வது இடத்தில் இருக்கும் பிவி சிந்து 21-13 என முதல் செட்டை கைப்பற்றினார். இதற்கு பதிலடியாக
சிம் யூ ஜின் 21-12 என 2வது செட்டை வென்றார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை பிவி சிந்து 21-14 என கைப்பற்றியதுடன், காலிறுதி சுற்றுக்கும் முன்னேறி அசத்தினார்.
பிவி சிந்து கடைசியாக 2022-ம் ஆண்டு சிங்கப்பூர் ஓபன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். பிவி சிந்து உபேர் கோப்பை மற்றும் தாய்லாந்து ஓபன் தொடரில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மற்றொரு வீராங்கனை அஷ்மிதா சலியா 2வது சுற்றில் அமெரிக்காவின் பெய்வென் ஜாங்கை வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.
- பிவி சிந்து 21-17, 21-16 என நேர்செட் கேமில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
- இந்த வெற்றியை பெற சிந்துவுக்கு 46 நிமிடங்கள் தேவைப்பட்டது.
மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரின் தொடக்க சுற்றில் இந்திய வீராங்கனை பிவி சிந்து, தரவரிசையில் 22-வது இடத்தில் இருக்கும் ஸ்காட்லாந்தை சேர்ந்த கிர்ஸ்டி கில்மவுரை எதிர்கொண்டார்.
இதில் உலகக் தரவரிசையில் 15-வது இடத்தில் இருக்கும் பிவி சிந்து 21-17, 21-16 என நேர்செட் கேமில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இந்த வெற்றியை பெற பிவி சிந்துவுக்கு 46 நிமிடங்களே தேவைப்பட்டது. அடுத்த சுற்றில் கொரிய வீராங்கனை சிம் யு ஜின்-ஐ எதிர்கொள்கிறார்.
பிவி சிந்து கடைசியாக 2022-ம் ஆண்டு சிங்கப்பூர் ஓபன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். பிவி சிந்து உபேர் கோப்பை மற்றும் தாய்லாந்து ஓபன் தொடரில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மற்றொரு வீராங்கனை அஷ்மிதா சலியா முதல் சுற்றில் சீன தைபேயின் சிஹ் யுன் லின்-ஐ 21-17, 21-16 என வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இவர் அடுத்த சுற்றில் அமெரிக்காவின் பெய்வென் ஜாங்கை எதிர்கொள்கிறார்.
உன்னாதி ஹூடா, ஆகாஸ்ஸ்ரீ காஷ்யப் முதல் சுற்றில் ஏமாற்றம் அடைந்தனர்.
ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் கிரண் ஜார்ஜ் முதல் சுற்றில் தோல்வியடைந்து வெளியேறினார். கலப்பு இரட்டையர் பிரிவில் சுமீத் ரெட்டி- என். சிக்கி ரெட்டி ஜோடி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
- ஸ்பெயினில் சர்வதேச பாட்மின்டன் தொடர் நடைபெற்று வருகிறது.
- இதில் இந்தியாவின் பி.வி.சிந்து காலிறுதியில் தோல்வி அடைந்தார்.
மாட்ரிட்:
ஸ்பெயினில் சர்வதேச பாட்மின்டன் தொடர் நடைபெற்று வருகிறது.
இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து, தாய்லாந்தின் சுபனிட கதேதோங்கை சந்தித்தார்.
முதல் செட்டை 26-24 என போராடி கைப்பற்றிய பி.வி.சிந்து, அடுத்த இரு செட்களை 17-21, 20-22 என இழந்து, காலிறுதியில் தோல்வி அடைந்தார்.
- ஸ்பெயின் மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி மாட்ரிட்டில் நடந்து வருகிறது.
- பெண்கள் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் பி.வி. சிந்து சீனத் தைபேயின் ஹூவாங் யூ சன்னை எதிர் கொண்டார்.
மாட்ரிட்:
ஸ்பெயின் மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி மாட்ரிட்டில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் பி.வி. சிந்து 21-14, 21-12 என்ற நேர் செட்டில் சீனத் தைபேயின் ஹூவாங் யூ சன்னை தோற்கடித்து கால்இறுதிக்கு முன்னேறினார். இந்த ஆட்டம் 36 நிமிடம் நடந்தது. சிந்து அடுத்து தாய்லாந்தின் சுபனிதா கேத்தோங்குடன் மோத உள்ளார். இந்த ஆட்டம் இன்று மாலை 5.30 மணிக்கு தொடங்குகிறது.
ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் எம்.ஆர்.அர்ஜூன்- துருவ் கபிலா ஜோடி 21-17, 21-19 என்ற நேர் செட்டில் ஸ்காட்லாந்தின் கிறிஸ்டோபர் கிரிம்லி- மேத்யூ கிரிம்லி இணையை வீழ்த்தி கால்இறுதியை எட்டியது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்