search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "PV Sindhu"

    • இந்திய ஓபன் பேட்மிண்டன் தொடர் தலைநகர் டெல்லியில் நடந்து வருகிறது.
    • இதில் இந்தியாவின் பி.வி.சிந்து காலிறுதியில் தோல்வி அடைந்தார்.

    புதுடெல்லி:

    உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் இந்திய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி டெல்லியில் உள்ள கே.டி.ஜாதவ் உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது.

    இதில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் பி.வி.சிந்து, இந்தோனேசிய வீராங்கனை துன்ஜங்கை எதிர்கொண்டார்.

    இந்த ஆட்டத்தில் சிறப்பாக ஆடிய துன்ஜங் 21-9, 19-21, 21-17 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். இதன்மூலம் பி.வி.சிந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

    • இந்திய ஓபன் பேட்மிண்டன் தொடர் தலைநகர் டெல்லியில் நடந்து வருகிறது.
    • இதில் இந்தியாவின் பிவி சிந்து காலிறுதிக்கு முன்னேறினார்.

    புதுடெல்லி:

    உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் இந்திய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி டெல்லியில் உள்ள கே.டி.ஜாதவ் உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது.

    இதில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து, ஜப்பான் வீராங்கனை மனாமி சுய்சுவை எதிர்கொண்டார்.

    இந்த ஆட்டத்தில் சிறப்பாக ஆடிய பி.வி.சிந்து 21-15, 21-13 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    • சிந்து கடந்த மாதம் தொழிலதிபர் வெங்கட தத்தா சாயை திருமணம் செய்து கொண்டார்.
    • திருமணத்திற்கு பிறகு அவர் கால்பதிக்கும் முதல் போட்டி இதுவாகும்.

    புதுடெல்லி:

    உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் இந்திய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி டெல்லியில் உள்ள கே.டி.ஜாதவ் உள்விளையாட்டு அரங்கில் இன்று (செவ்வாய்கிழமை) தொடங்கி 19-ந் தேதி வரை நடக்கிறது. மொத்தம் ரூ.8¼ கோடி பரிசுத் தொகைக்கான இந்த போட்டியில் இந்தியா சார்பில் இதுவரை இல்லாத எண்ணிக்கையாக 44 வீரர், வீராங்கனைகள் களம் இறக்கப்படுகிறார்கள்.

    இதில் ஒலிம்பிக்கில் 2 பதக்கம் வென்றவரான இந்திய வீராங்கனை பி.வி.சிந்து முதல் சுற்றில் ஷூவ் யன் ஜங்கை (சீனதைபே) சந்திக்கிறார். முன்னதாக சிந்து சக நாட்டவரான அனுபமா உபத்யாயாவுடன் மோதும் வகையில் அட்டவணை அமைந்திருந்தது. ஆனால் கடைசிகட்ட மாற்றங்களால் சிந்துவின் எதிராளியும் மாறி விட்டார்.

    சிந்து கடந்த மாதம் தொழிலதிபர் வெங்கட தத்தா சாயை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு அவர் கால்பதிக்கும் முதல் போட்டி இதுவாகும். கடந்த ஆண்டில் பெரும்பாலான போட்டிகளில் தோல்வியை தழுவிய சிந்து உள்ளூர் சூழலில் சாதிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஆனால் ஒலிம்பிக் சாம்பியன் அன்சே யங் (தென்கொரியா), 2-ம் நிலை வீராங்கனை வாங் ஷியி (சீனா), முன்னாள் உலக சாம்பியன் நஜோமி ஒகுஹரா (ஜப்பான்) உள்ளிட்ட நட்சத்திர வீராங்கனைகளும் வரிந்து கட்டுவதால் சிந்துவுக்கு கடும் சவால் காத்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. மற்ற இந்திய வீராங்கனைகள் ஆகர்ஷி காஷ்யப், மாள்விகா பன்சோத், அனுபமா உபத்யாயா ஆகியோரை பொறுத்தவரை ஓரிரு சுற்றை தாண்டினாலே பெரிய விஷயமாக இருக்கும்.

    29 வயதான சிந்து நேற்று நிருபர்களிடம் கூறுகையில், 'திருமணத்திற்கு பிறகு எனது முதல் போட்டி இதுவாகும். அத்துடன் புத்தாண்டிலும் முதல் தொடராகும். எனவே எல்லாமே புதுசு. உள்ளூர் ரசிகர்கள் முன் எனது மிகச்சிறந்த திறனை வெளிப்படுத்த விரும்புகிறேன்.

    பாரீஸ் ஒலிம்பிக்குக்கு பிறகு உடல் அளவிலும், மனதளவிலும் வலுவாக மீண்டு வருவதற்கு எனக்கு ஓய்வு தேவைப்பட்டது. கடந்த ஆண்டின் கடைசி பகுதியில் கிடைத்த இடைவெளி புத்துணர்ச்சியுடன் மீண்டு வருவதற்கு உதவியது. என்னால் இன்னும் நிறைய சாதிக்க முடியும் என்று நினைக்கிறேன். அந்த வெறி எனக்குள் இருக்கிறது' என்று குறிப்பிட்டார்.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஒலிம்பிக் சாம்பியன் விக்டர் ஆக்சல்சென் (டென்மார்க்), 3-ம் நிலை வீரர் ஜோனதன் கிறிஸ்டி (இந்தோனேசியா), உலக சாம்பியன் குன்லாவுத் விதித்சரண் (தாய்லாந்து), இந்தியாவின் லக்ஷயா சென், பிரனாய் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள். கடைசி நேரத்தில் 'நம்பர் ஒன்' வீரர் ஷி யுகி (சீனா), ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றவரான அந்தோணி கின்டிங் (இந்தோனேசியா) ஆகியோர் விலகியதால் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், கிரண்ஜார்ஜ் ஆகியோருக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது.

    2022-ம் ஆண்டு சாம்பியனான லக்ஷயா சென் முதல் சுற்றில் சீனதைபேயின் லின் சுன் யியை எதிர்கொள்கிறார். பிரனாய் முதல் ரவுண்டில் சு லீ யாங்குடன் (சீனதைபே) மல்லுக்கட்டுகிறார். மற்றொரு இந்திய வீரர் பிரியன்ஷூ ரஜாவத், ஜப்பானின் கோடாய் நராவ்காவுடன் மோதுகிறார்.

    இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிராக் ஷெட்டி ஜோடி முதல் சுற்றில் மலேசியாவின் மான்வெய் சோங்- டீ காய் வுன் இணையை சந்திக்கிறது. பெண்கள் இரட்டையரில் திரிஷா ஜாலி- காயத்ரி கோபிசந்த் இணை தங்களது சவாலை ஜப்பானின் அலிசா இகராஷி- அயகோ சுகுரமோட்டோ ஆகியோருடன் தொடங்குகிறார்கள்.

    சாத்விக்- சிராக் ஷெட்டி கூறுகையில, 'கடந்த ஆண்டு மலேசிய ஓபனில் இறுதி சுற்றில் விளையாடி விட்டு இங்கு (இந்திய ஓபன்) வந்தோம். இங்கும் இறுதிசுற்றை எட்டினோம். இந்த சீசனில் மலேசிய ஓபனில் அரைஇறுதி வரை முன்னேறி விட்டு வந்துள்ளோம். ஆனால் கடந்த ஆண்டின் முடிவை விட மேலும் முன்னேற்றம் காண விரும்புகிறோம்' என்றனர்.

    ஒற்றையரில் கோப்பையை வெல்லும் வீரர், வீராங்கனைக்கு ரூ.58 லட்சமும், இரட்டையர் பிரிவில் வாகை சூடும் ஜோடிக்கு ரூ.61 லட்சம் பரிசுத்தொகையாக வழங்கப்படும். இன்று காலை 9 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்போர்ட்ஸ்18 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. ஜியோ சினிமா செயலியிலும் பார்க்கலாம்.

    • பி.வி. சிந்துவிற்கும் வெங்கட தத்தா சாய் என்பவருக்கும் குடும்பத்தினர் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.
    • ஐதராபாத்தில் இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்தியா சார்பில் ஒலிம்பிக்கில் பங்கேற்று 2 முறை பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து.

    முன்னாள் உலக சாம்பியனான பி.வி. சிந்துவிற்கும் வெங்கட தத்தா சாய் என்பவருக்கும் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து ஐதராபாத்தில் இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 

    இந்நிலையில் புதுமண தம்பதிகளான பிவி சிந்து மற்றும் வெங்கட தத்தா சாய் இருவரும் திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர். இருவரும் திருப்பதி கோவிலை சுற்றி வந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.
    • அஜித் குமார் தனது குடும்பத்துடன் கலந்து கொண்டுள்ளார்.

    இந்தியா சார்பில் ஒலிம்பிக்கில் பங்கேற்று 2 முறை பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து. முன்னாள் உலக சாம்பியனான பி.வி. சிந்துவிற்கும் வெங்கட தத்தா சாய் என்பவருக்கும் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.

    இதைத் தொடர்ந்து ஐதராபாத்தில் இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் அஜித் குமார் தனது குடும்பத்துடன் கலந்து கொண்டுள்ளார்.

    பி.வி. சிந்து திருமண வரவேற்பில் அஜித் குமார் கலந்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படுகின்றன.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பி.வி. சிந்துவிற்கும் வெங்கட தத்தா சாய் என்பவருக்கும் நேற்று முன்தினம் திருமணம் நடைபெற்றது.
    • இன்று ஐதராபாத்தில் இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

    இந்தியா சார்பில் ஒலிம்பிக்கில் பங்கேற்று 2 முறை பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து.

    முன்னாள் உலக சாம்பியனான பி.வி. சிந்துவிற்கும் வெங்கட தத்தா சாய் என்பவருக்கும் நேற்று முன்தினம் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. இன்று ஐதராபாத்தில் இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

    இந்நிலையில், திருமண புகைப்படங்களை பி.வி. சிந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அப்புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

    சிந்துவின் கணவர், போசிடெக்ஸ் டெக்னாலஜீஸ் என்ற நிறுவனத்தின் செயல் இயக்குநராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தங்களது திருமண புகைப்படங்களை பி.வி. சிந்து வெளியிடவில்லை.
    • நாளை ஐதராபாத்தில் பி.வி.சிந்துவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

    இந்தியா சார்பில் ஒலிம்பிக்கில் பங்கேற்று 2 முறை பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து.

    முன்னாள் உலக சாம்பியனான பி.வி. சிந்துவிற்கும் வெங்கட தத்தா சாய் என்பவருக்கும் நேற்று ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. நாளை ஐதராபாத்தில் இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

    ஆனால் இன்னமும் தங்களது திருமண புகைப்படங்களை பி.வி. சிந்து வெளியிடவில்லை. இந்நிலையில், பி.வி. சிந்துவின் திருமண புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் வாழ்த்தியுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.

    சிந்துவின் கணவர், போசிடெக்ஸ் டெக்னாலஜீஸ் என்ற நிறுவனத்தின் செயல் இயக்குநராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • சையது மோடி பேட்மிண்டன் தொடரில் பி.வி.சிந்து கோப்பை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
    • ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்ஷயா சென் 12வது இடத்தில் தொடர்கிறார்.

    புதுடெல்லி:

    சர்வதேச பாட்மிண்டன் கூட்டமைப்பு சார்பில் புதிய தரவரிசை பட்டியல் சமீபத்தில் வெளியானது.

    இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பிவி சிந்து ஒரு இடம் முன்னேறி 15-வது இடத்திற்கு முன்னேறினார். சையது மோடி பேட்மிண்டன் தொடரில் பிவி சிந்து கோப்பை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்ஷயா சென் 12வது இடத்தில் தொடர்கிறார். பிரனாய் (26), பிரியான்ஷு (34), கிரண் ஜார்ஜ் (38) பின்தங்கினர்.

    பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் திரீஷா-காயத்ரி ஜோடி, 2 இடம் முன்னேறி முதல் முறையாக 11-வது இடம் பிடித்து அசத்தியது.

    பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்குப் பின் அதிக தொடரில் பங்கேற்காத இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி 9-வது இடத்துக்கு தள்ளப்பட்டது.

    • பி.வி. சிந்து திருமணம் வரும் 22-ந்தேதி உதய்பூரில் நடைபெற உள்ளது.
    • 24-ந்தேதி ஐதராபாத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறும்.

    இந்தியா சார்பில் ஒலிம்பிக்கில் பங்கேற்று 2 முறை பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து.

    முன்னாள் உலக சாம்பியனான சிந்து, தெலுங்கானாவின் ஐதராபாத் நகரை சேர்ந்த வெங்கட தத்தா சாய் என்பவரை திருமணம் செய்ய இருக்கிறார். சிந்துவின் வருங்கால கணவர், போசிடெக்ஸ் டெக்னாலஜீஸ் என்ற நிறுவனத்தின் செயல் இயக்குநராக பணிபுரிந்து வருகிறார்.

    இந்நிலையில், இன்று சிந்துவுக்கும் வெங்கட தத்தா சாய்க்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்களை சிந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், கலீல் ஜிப்ரான் அவர்களின் கவிதையான "அன்பு உங்களை அழைக்கும் போது, அதை பின்தொடருங்கள், ஏனென்றால் அன்பு தன்னைத் தவிர வேறு எதையும் கொடுக்காது" என்று பதிவிட்டுள்ளார்.

    இவர்களின் திருமணம் வரும் 22-ந்தேதி உதய்பூரில் நடைபெற உள்ளது. திருமணம் தொடர்பான நிகழ்ச்சிகள் 20-ந்தேதியே தொடங்கி விடும் என்றும் 24-ந்தேதி ஐதராபாத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறும் என்று சிந்துவின் அப்பா தெரிவித்தார்.

    கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுக்கு சிந்து திருமண அழைப்பிதழ் வழங்கியுள்ளார்.

    • திருமணம் தொடர்பான நிகழ்ச்சிகள் 20-ந்தேதியே தொடங்கி விடும்.
    • 24-ந்தேதி ஐதராபாத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறும் என்று சிந்துவின் தந்தை கூறினார்.

    புதுடெல்லி:

    இந்தியா சார்பில் ஒலிம்பிக்கில் பங்கேற்று 2 முறை பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து. இவருக்கு திருமணம் முடிவாகி உள்ளது. முன்னாள் உலக சாம்பியனான சிந்து, தெலுங்கானாவின் ஐதராபாத் நகரை சேர்ந்த வெங்கட தத்தா சாய் என்பவரை திருமணம் செய்ய இருக்கிறார். சிந்துவின் வருங்கால கணவர், போசிடெக்ஸ் டெக்னாலஜீஸ் என்ற நிறுவனத்தின் செயல் இயக்குநராக பணிபுரிந்து வருகிறார்.

    இதுபற்றி சிந்துவின் தந்தை பி.வி. ரமணா செய்தியாளர்களிடம் கூறும்போது, இரு குடும்பத்தினரும் முன்பே நன்கு அறிமுகம் ஆனவர்கள்தான். ஆனால், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே, அனைத்து விசயங்களும் முடிவாகின என்றார். இதன்படி, வருகிற 22-ந்தேதி உதய்ப்பூரில் சிந்துவின் திருமணம் நடைபெற உள்ளது.

    ஜனவரியில் இருந்து சிந்துவுக்கு, விரைந்து செய்வதற்கென்று நிறைய பணிகள் காத்திருக்கின்றன. அதனால், இதுவே சாத்தியப்பட்ட ஒரே வழி என ரமணா கூறியுள்ளார். இரு குடும்பங்களும் சேர்ந்து இந்த முடிவை எடுத்தோம். திருமணம் தொடர்பான நிகழ்ச்சிகள் 20-ந்தேதியே தொடங்கி விடும். 24-ந்தேதி ஐதராபாத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறும் என்றார்.

    சிந்து விரைவில் பயிற்சியை தொடங்க உள்ளார். ஏனெனில் அடுத்து வர கூடிய போட்டிகள் அவருக்கு முக்கியம் வாய்ந்தவை என்றும் அவர் கூறியுள்ளார். இதுவரை 5 உலக சாம்பியன்ஷிப் பதக்கங்களை சிந்து வென்றுள்ளார். அவற்றில் 2019-ம் ஆண்டில் அவர் பெற்ற தங்க பதக்கமும் அடங்கும். இவை தவிர, ஒலிம்பிக் போட்டிகளில் வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களையும் வென்றுள்ளார்.

    • சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் தொடர் லக்னோவில் நடந்து வருகிறது.
    • இதில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேறினார்.

    லக்னோ:

    சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் தொடர் உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் நடந்து வருகிறது. இதில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள், இங்கிலாந்து, சீனா, இலங்கை, தாய்லாந்தைச் சேர்ந்த இளம், வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

    இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து, சீனாவின் டாய் விங்கை 21-15, 21-17 என்ற கணக்கில் வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    பி.வி.சிந்து அரையிறுதியில் சக நாட்டு வீராங்கனையான உன்னாட்டி ஹூடாவை எதிர்கொள்கிறார்.

    • சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் தொடர் லக்னோவில் நடந்து வருகிறது.
    • இதில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து காலிறுதிக்கு முன்னேறினார்.

    லக்னோ:

    சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் தொடர் உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் நடந்து வருகிறது. இதில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள், இங்கிலாந்து, சீனா, இலங்கை, தாய்லாந்தைச் சேர்ந்த இளம், வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

    இந்நிலையில், நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து, ஈஷா சர்மாவை 21-10, 12-21, 21-15 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். இந்தப் போட்டி சுமார் 49 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.

    பி.வி.சிந்து காலிறுதியில் சீனாவின் டாய் விங்கை எதிர்கொள்கிறார்.

    ×