search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "PV Sindhu"

    • ஸ்பெயினில் சர்வதேச பாட்மின்டன் தொடர் நடைபெற்று வருகிறது.
    • இதில் இந்தியாவின் பி.வி.சிந்து காலிறுதியில் தோல்வி அடைந்தார்.

    மாட்ரிட்:

    ஸ்பெயினில் சர்வதேச பாட்மின்டன் தொடர் நடைபெற்று வருகிறது.

    இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து, தாய்லாந்தின் சுபனிட கதேதோங்கை சந்தித்தார்.

    முதல் செட்டை 26-24 என போராடி கைப்பற்றிய பி.வி.சிந்து, அடுத்த இரு செட்களை 17-21, 20-22 என இழந்து, காலிறுதியில் தோல்வி அடைந்தார்.

    • ஸ்பெயின் மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி மாட்ரிட்டில் நடந்து வருகிறது.
    • பெண்கள் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் பி.வி. சிந்து சீனத் தைபேயின் ஹூவாங் யூ சன்னை எதிர் கொண்டார்.

    மாட்ரிட்:

    ஸ்பெயின் மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி மாட்ரிட்டில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் பி.வி. சிந்து 21-14, 21-12 என்ற நேர் செட்டில் சீனத் தைபேயின் ஹூவாங் யூ சன்னை தோற்கடித்து கால்இறுதிக்கு முன்னேறினார். இந்த ஆட்டம் 36 நிமிடம் நடந்தது. சிந்து அடுத்து தாய்லாந்தின் சுபனிதா கேத்தோங்குடன் மோத உள்ளார். இந்த ஆட்டம் இன்று மாலை 5.30 மணிக்கு தொடங்குகிறது.

    ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் எம்.ஆர்.அர்ஜூன்- துருவ் கபிலா ஜோடி 21-17, 21-19 என்ற நேர் செட்டில் ஸ்காட்லாந்தின் கிறிஸ்டோபர் கிரிம்லி- மேத்யூ கிரிம்லி இணையை வீழ்த்தி கால்இறுதியை எட்டியது.

    • ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பர்மிங்காமில் நடந்து வருகிறது.
    • பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    பர்மிங்காம்:

    ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பர்மிங்காமில் இன்று தொடங்கியது. மார்ச் 17-ம் தேதி வரை நடைபெறும் 1,000 தரவரிசை புள்ளி கொண்ட இந்தப் போட்டியில் உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.

    இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து, தென் கொரியாவின் செ யங்குடன் மோதினார்.

    இதில் பிவி சிந்து 19-21, 11-21 என நேர் செட்களில் தோல்வி அடைந்தார். இதன்மூலம் சிந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

    • ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பர்மிங்காமில் இன்று தொடங்கியது.
    • பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    பர்மிங்காம்:

    ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பர்மிங்காமில் இன்று தொடங்கியது. மார்ச் 17-ம் தேதி வரை நடைபெறும் 1,000 தரவரிசை புள்ளி கொண்ட இந்தப் போட்டியில் உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.

    இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து, ஜெர்மனியின் யுவான் லீயுடன் மோதினார்.

    முதல் செட்டில் பிவி சிந்து 21-10 என முன்னிலை பெற்றிருந்தார். அப்போது காயம் காரணமாக யுவான் லீ போட்டியில் இருந்து விலகினார். இதனால் பிவி சிந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதுடன், 2வது சுற்றுக்கும் முன்னேறினார்.

    • ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
    • பிரனாய் (இந்தியா) 17-21, 17-21 என்ற நேர் செடடில் லு குவாங்சுவிடம் (சீனா) தோல்வியடைந்தார்.

    பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து 20-22, 22-20, 21-19 என்ற செட் கணக்கில் கனடாவின் மிட்செல்லியை வீழ்த்தி 2-வது சுற்றை எட்டினார். இந்த ஆட்டம் 1 மணி 20 நிமிடங்கள் நடைபெற்றது. இரண்டாவது சுற்றில் பிவி சிந்து

    ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் 21-15, 20-22, 21-8 என்ற செட்டில் சோவ் டைன் சென்னை (சீன தைபே) தோற்கடித்தார்.

    மற்றொரு ஆட்டத்தில் பிரனாய் (இந்தியா) 17-21, 17-21 என்ற நேர் செடடில் லு குவாங்சுவிடம் (சீனா) தோல்வியடைந்தார்.

    • இன்று (பிப் 16) நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் ஹாங்காங்கை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய இந்திய மகளிர் அணி அரையிறுதிக்கு முன்னேறியது.
    • இதன் வாயிலாக வரலாற்றில் முதல் முறையாக ஆசிய அணி பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் தனது முதல் பதக்கத்தை இந்திய அணி உறுதி செய்தது.

    ஆசிய அணிகள் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் மலேசியாவில் உள்ள சிலாங்கூரில் நடைபெற்று வருகிறது. அதில், இன்று (பிப் 16) நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் ஹாங்காங்கை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய இந்திய மகளிர் அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

    இதன் வாயிலாக வரலாற்றில் முதல் முறையாக ஆசிய அணி பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் தனது முதல் பதக்கத்தை இந்திய அணி உறுதி செய்தது.

    கடந்த செவ்வாயன்று (பிப் 13) நடைபெற்ற போட்டியில் இந்திய அணி 3-2 என்ற கணக்கில் சீன அணியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியிருந்தது.

    இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் ஒற்றையர் பிரிவில் விளையாடிய பிவி சிந்து 21-7, 16-21, 21-12 என்ற கணக்கில் லோ சின் யான் ஹேப்பியை தோற்கடித்தார்.

    இரட்டையர் பிரிவில் விளையாடிய தனிஷா க்ராஸ்டோ மற்றும் அஷ்வினி பொன்னப்பா ஆகியோர் 21-10, 21-1 என்ற செட் கணக்கில் யுங் நகா டிங் & யுங் புய் லாம் ஆகியோரை தோற்கடித்தனர். அஷ்மிதா சாலிஹா 21-12, 21-13 என்ற செட் கணக்கில் யுங் சும் யீயை வென்றார்

    இந்திய மகளிர் அணிக்கு பதக்கம் உறுதியாகிவிட்ட நிலையில், முதலிடத்தில் உள்ள ஜப்பான் மற்றும் சீனா இடையிலான மற்றொரு காலிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணியை இந்தியா இறுதிப்போட்டியில் எதிர்கொள்ளும். மேலும் இந்திய ஆடவர் அணி தனது காலிறுதி ஆட்டத்தில் ஜப்பானை எதிர்கொள்கிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முதல் செட்டை பிவி சிந்து இழந்த நிலையில், 2-வது செட்டை கைப்பற்றினார்
    • பிவி சிந்து செட்டை இழந்ததும் கரோலினா நீண்ட நேரம் சந்தோசத்தை கொண்டாடினார்

    டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் நேற்று நடைபெற்ற அரையிறுதியில் இந்தியாவின் பிவி சிந்துவும், ஸ்பெயினின் கரோலினா மரினும் மோதினர்.

    முதல் செட்டை கரோலினா வென்றார். 2-வது செட்டை பிவி சிந்து கைப்பற்றினார். வெற்றியை தீர்மானிக்கும் 3-வது செட்டில் பிவி சிந்து தோல்வியடைந்தார்.

    இந்த போட்டியின்போது பிவி சிந்துவும், கரோலினாவும் வார்த்தைப்போரில் ஈடுபட்டனர். இருவரும் இதற்கு முன் பல போட்டிகளில் மோதியுள்ளனர். அப்போது தோழமையாகவே இருந்துள்ளனர். இந்த போட்டியில் மோதிக்கண்டது அரியதாக பார்க்கப்படுகிறது.

    இருவருக்கும் நடுவர் மஞ்சள் அட்டை கொடுத்து எச்சரித்தார்.

    கரோலினா ஒரு சர்வீஸை வென்றதும் நீண்ட நேரம் சந்தோசத்தை வெளிப்படுத்தியதாக பிவி சிந்து கோபம் கொண்டார். சர்வீஸ் செய்ய பிவி சிந்து நீண்ட நேரம் எடுத்துக் கொண்டதாக கரோலினா குற்றம்சாட்டியதால் வார்த்தைப்போர் ஏற்பட்டது.

    • மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தெலுங்கானாவில் பயணம் மேற்கொண்டுள்ளார்.
    • பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து ஐதராபாத்தில் உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்தார்.

    ஐதராபாத்:

    மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தெலுங்கானா மாநிலத்தில் இன்று பயணம் மேற்கொண்டுள்ளார்.

    இந்நிலையில், ஐதராபாத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

    இதுதொடர்பாக, அமித்ஷா வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், பிரபல பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவை ஐதராபாத்தில் இன்று சந்தித்தேன். விளையாட்டுத் திறமைக்காக அவர் பெற்றுள்ள சர்வதேச அங்கீகாரத்தில் தேசம் பெருமிதம் கொள்கிறது. அவரது அர்ப்பணிப்பு, கடின உழைப்பு ஆகியவை இளைய தலைமுறையினருக்கு உத்வேகம் அளிக்கிறது என பதிவிட்டுள்ளார்.

    • ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் 6-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
    • இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 14-வது இடம் பிடித்துள்ளார்.

    புதுடெல்லி:

    உலக பேட்மிண்டன் வீரர், வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் 6-வது இடத்தைப் பிடித்துள்ளார். இது அவருடைய சிறந்த தரநிலையாகும். உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்றதன் மூலம் அவர் தரவரிசையில் முன்னேறியுள்ளார்.

    மற்ற இந்திய வீரர்கள் லக்ஷயா சென் 12-வது இடத்திலும், ஸ்ரீகாந்த் 20-வது இடத்திலும் உள்ளனர்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 14-வது இடம் பிடித்துள்ளார்.

    • சிந்து நேரடியாக 2-வது சுற்றில் களம் காணுகிறார்.
    • சாத்விக்- சிராக் ஷெட்டி, திரிஷா ஜாலி- காயத்ரி கோபிசந்த ஜோடிகள் நேரடியாக 2-வது சுற்றில் ஆடுகின்றன. சாத்விக்- சிராக் ஷெட்டி, திரிஷா ஜாலி- காயத்ரி கோபிசந்த ஜோடிகள் நேரடியாக 2-வது சுற்றில் ஆடுகின்றன.

    ஹோபன்ஹேகன்:

    28-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி டென்மார்க் தலைநகர் ஹோபன்ஹேகன் நகரில் இன்று (திங்கட்கிழமை) தொடங்கி 27-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதில் ஆண்கள் பிரிவில் எச்.எஸ்.பிரனாய், காமன்வெல்த் விளையாட்டு சாம்பியன் லக்ஷயா சென், இரட்டையர் உலக தரவரிசையில் 2-வது இடம் வகிக்கும் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிராக் ஷெட்டி ஜோடியினர், பெண்கள் பிரிவில் பி.வி.சிந்து ஆகிய இந்தியர்கள் பதக்கம் வெல்வதற்கான வாய்ப்பில் உள்ளனர்.

    2019-ம் ஆண்டு சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கத்துக்கு முத்தமிட்டு வரலாறு படைத்த பி.வி.சிந்துவின் ஆட்டத்திறனில் சமீபகாலமாக தொய்வு ஏற்பட்டுள்ளது. ஓராண்டு காலமாக எந்த பட்டத்தையும் வெல்லாத அவர் உலக தரவரிசையில் 15-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். ஆனாலும் அந்த மோசமான நிலைமையை மாற்றுவதற்கு இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ள தன்னை தயார்படுத்தி வருகிறார்.

    நேரடியாக 2-வது சுற்றில் களம் காணும் சிந்து, அடுத்தடுத்து ரவுண்டுகளில் முன்னாள் சாம்பியன் நஜோமி ஒகுஹரா (ஜப்பான்), ராட்சனோக் இன்டானோன் (தாய்லாந்து), நம்பர் ஒன் புயல் அன் சே யங் (தென்கொரியா) ஆகிய பலம்வாய்ந்த எதிராளிகளை சந்திக்க வேண்டி வரும்.

    இந்த தடைகளை வெற்றிகரமாக அவர் கடந்தால் பதக்கம் வெல்வதற்கான வாய்ப்பு உருவாகும். நடப்பு சாம்பியன் அகானே யமாகுச்சி (ஜப்பான்), ஒலிம்பிக் சாம்பியன் சென் யுபே (சீனா) முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனைகள் தாய் ஜூ யிங் (சீனதைபே), கரோலினா மரின் (ஸ்பெயின்) ஆகிய முன்னணி வீராங்கனைகளும் வரிந்து கட்டுவதால் களத்தில் அனல் பறக்கும் என்று நம்பலாம்.

    ஆண்கள் பிரிவில் அண்மை காலமாக சிறப்பாக விளையாடி வரும் 9-ம் நிலை வீரர் எச்.எஸ்.பிரனாய் முதல் சுற்றில் காலே கோல்ஜோனையும் (பின்லாந்து), லக்ஷயா சென், மொரீசியசின் ஜார்ஜெஸ் ஜூலியன் காலையும், இந்திய முன்னாள் நம்பர் ஒன் வீரர் ஸ்ரீகாந்த் ஜப்பானின் கென்டோ நிஷிமோட்டோவையும் சந்திக்கிறார்கள்.

    சாத்விக்- சிராக் ஷெட்டி, திரிஷா ஜாலி- காயத்ரி கோபிசந்த ஜோடிகள் நேரடியாக 2-வது சுற்றில் ஆடுகின்றன.

    1977-ம் ஆண்டு முதல் நடக்கும் கவுரவமிக்க இந்த போட்டியில் இந்தியா இதுவரை ஒரு தங்கம், 4 வெள்ளி, 8 வெண்கலம் என்று மொத்தம் 13 பதக்கங்களை கைப்பற்றி இருக்கிறது. அந்த எண்ணிக்கை மேலும் உயருமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

    • பி.வி.சிந்துவுக்கு நேரடியாக 2-வது சுற்றில் களம்இறங்கும் வகையில் முதல் சுற்றில் ‘பை சலுகை’ வழங்கப்பட்டுள்ளது.
    • ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய தரப்பில் எச்.எஸ்.பிரனாய், லக்‌ஷயா சென், ஸ்ரீகாந்த் ஆகியோர் விளையாடுகிறார்கள்.

    28-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி வருகிற 21-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை டென்மார்க் தலைநகர் ஹோபன்ஹேகனில் நடைபெறுகிறது. இதில் யார்-யாருடன் மோதுவது என்பது குலுக்கல் மூலம் (டிரா) நேற்று முடிவு செய்யப்பட்டது.

    இதன்படி பெண்கள் ஒற்றையர் பிரிவில் பங்கேற்கும் ஒரே இந்தியரான பி.வி.சிந்துவுக்கு நேரடியாக 2-வது சுற்றில் களம்இறங்கும் வகையில் முதல் சுற்றில் 'பை சலுகை' வழங்கப்பட்டுள்ளது. என்றாலும் அடுத்தடுத்து சுற்றுகள் சிந்துவுக்கு கடினமாக அமைந்துள்ளது. அவர் 2-வது சுற்றில் முன்னாள் சாம்பியன் நஜோமி ஒகுஹராவை (ஜப்பான்) சந்திக்க வாய்ப்புள்ளது. அந்த தடையை வெற்றிகரமாக கடந்தால் பலம் வாய்ந்த தாய்லாந்தின் ராட்சனோக் இன்டானோன், 'நம்பர் ஒன்' புயல் அன்சே யங்கை (தென்கொரியா) ஆகியோரை எதிர்கொள்ள நேரிடலாம்.

    கடந்த ஓராண்டாக எந்த பட்டமும் வெல்ல முடியாமல் திண்டாடும் சிந்து தொடர்ச்சியான தோல்விகளால் உலக தரவரிசையில் 15-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை 2019-ம் ஆண்டில் வென்று வரலாறு படைத்த சிந்து மீண்டும் அதே போல் அசத்துவாரா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும். நடப்பு சாம்பியன் அகானே யமாகுச்சி (ஜப்பான்), ஒலிம்பிக் சாம்பியன் சென் யுபே (சீனா), முன்னாள் நம்பர் ஒன் நட்சத்திரங்கள் தாய் ஜூ யிங் (சீனதைபே), கரோலினா மரின் (ஸ்பெயின்) உள்ளிட்டோரும் வரிந்து கட்டுவதால் சிந்துவுக்கு கடும் சவால் காத்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய தரப்பில் எச்.எஸ்.பிரனாய், லக்ஷயா சென், ஸ்ரீகாந்த் ஆகியோர் விளையாடுகிறார்கள். சமீபகாலமாக தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் 9-ம் நிலை வீரரான பிரனாய் முதல் சுற்றில் காலே கோல்ஜோனெனை (பின்லாந்து) சந்திக்கிறார். முன்னாள் நம்பர் ஒன் வீரர் ஸ்ரீகாந்த், ஜப்பானின் கென்டோ நிஷிமோட்டோவுடன் சவாலை தொடங்குகிறார். காமன்வெல்த் விளையாட்டு சாம்பியனான லக்ஷயா சென் முதல் ரவுண்டில் ஜார்ஜெஸ் ஜூலியன் பாலுடன் (மொரீசியஸ்) களம் காணுகிறார். ஒலிம்பிக் சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான விக்டர் ஆக்சல்சென் (டென்மார்க்) முதல் சுற்றில் 36-ம் நிலை வீரர் நேட் நுயேனுடன் (அயர்லாந்து) மோதுகிறார்.

    இரட்டையரில் 5 இந்திய ஜோடிகள் ஆடுகிறது. இதில் உலகத் தரவரிசையில் 2-வது இடத்தை பெற்று கவனத்தை ஈர்த்துள்ள சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிராக் ஷெட்டி, பெண்கள் இரட்டையரில் திரிஷா ஜாலி, காயத்ரி கோபிசந்த் ஆகிய ஜோடிகள் நேரடியாக 2-வது ரவுண்டில் கால்பதிக்கின்றன. அஸ்வினி பாத்- ஷிகா கவுதம், ரோகன் கபூர்- சிக்கிரெட்டி, வெங்கட் பிரசாத்- ஜூஹி தேவாங்கன் ஆகியோரும் களம் இறங்குகிறார்கள்.

    • பிவி சிந்து அமெரிக்க வீராங்கனையான பெய்வென் ஜாங்கிடம் மோதினார்.
    • பிவி சிந்து 12-21 17-21 என்ற செட் கணக்கில் பெய்வென் ஜாங்கிடம் தோல்வியடைந்து வெளியேறினார்.

    சிட்னி:

    ஆஸ்திரேலிய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனையான பிவி சிந்து அமெரிக்காவின் உலகின் 12-ம் நிலை வீராங்கனையான பெய்வென் ஜாங்கிடம் மோதினார்.

    39 நிமிடங்கள் நடந்த இந்த ஆட்டத்தில் பிவி சிந்து 12-21 17-21 என்ற செட் கணக்கில் பெய்வென் ஜாங்கிடம் தோல்வியடைந்து வெளியேறினார்.

    ×