என் மலர்
விளையாட்டு

இந்தோனேசியா மாஸ்டர்ஸ்: காலிறுதிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து, லக்ஷயா சென்
- இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் இந்தோனேசியாவில் நடந்து வருகிறது.
- இதில் இந்தியாவின் பி.வி.சிந்து 2வது சுற்றில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.
ஜகார்த்தா:
இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் இந்தோனேசியாவில் நடந்து வருகிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் இந்தியாவின் பிவி சிந்து, டென்மார்க்கின் லைன் ஜேயர்ஸ்பெல்ட் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய பி.வி.சிந்து 21-19, 21-18 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.
நாளை நடைபெற உள்ள காலிறுதியில் பிவி சிந்து சீனாவின் சென் யூபி உடன் மோதுகிறார்.
இதேபோல், ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென் 21-10, 21-11 என்ற செட் கணக்கில் ஹாங்காங் வீரரை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
Next Story






