என் மலர்
நீங்கள் தேடியது "Indonesia Masters badminton"
- ஜகார்த்தாவில் இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி நடந்து வருகிறது.
- இதில் இந்தியாவின் சாத்விக் - சிராக் செட்டி ஜோடி வெற்றி பெற்றது.
ஜகார்த்தா:
இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் இன்று தொடங்கியது. இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்களான சிந்து, மாளவிகா, பிரணாய், லக்ஷயா சென் உட்பட பலர் இதில் பங்கேற்கின்றனர்.
இந்நிலையில், ஆண்கள் இரட்டையர் பிரிவில் இன்று நடந்த முதல் போட்டியில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி-சிராக் செட்டி ஜோடி, சீன தைபே அணியின் சென் ஸி ரே-லின் யூ சீஹ் ஜோடியை எதிர்கொண்டது.
இதில் ஆரம்பம் முதலே சிறப்பாக ஆடிய சாத்விக்-சிராக் ஜோடி 21-16, 21-15 என்ற செட் கணக்கில் வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது.
- ஜகார்த்தாவில் இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி நடந்துவருகிறது.
- இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்ஷயா சென் வெற்றி பெற்றார்.
ஜகார்த்தா:
இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் நடந்து வருகிறது. இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்களான சிந்து, மாளவிகா, பிரணாய், லக்ஷயா சென் உட்பட பலர் இதில் பங்கேற்கின்றனர்.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென், ஜப்பானின் டகுமா ஒபயாஷி உடன் மோதினார்.
இதில் ஆரம்பம் முதலே சிறப்பாக ஆடிய லக்ஷயா சென் 21-9, 21-14 என்ற செட் கணக்கில் வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பிவி சிந்து அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
- ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென், ஜப்பானின் கே. நிஷிமோட்டோ ஆகியோர் மோதினார்.
- முதல் செட்டை நிஷிமோட்டோவும் 2-வது செட்டை லக்ஷயா சென்னும் வென்றனர்.
ஜகார்த்தா:
இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் நடந்து வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென், ஜப்பானின் கே. நிஷிமோட்டோ ஆகியோர் மோதினார்.
இதில் முதல் செட்டை நிஷிமோட்டோவும் 2-வது செட்டை லக்ஷயா சென்னும் வென்றனர். தொடர்ந்து 3-வது செட் பரபரப்பாக சென்றது. இறுதியில் 3-வது செட்டில் லக்ஷயா சென் 21-23 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.
இதனால் 2-வது சுற்று ஆட்டத்தில் 16-21, 21-12, 21-23 என்ற கணக்கில் லக்ஷயா சென் தோல்வியடைந்து இந்த தொடரில் இருந்து வெளியேறினார்.
- ஜகார்த்தாவில் இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி நடந்து வருகிறது.
- கலப்பு இரட்டையர் இரண்டாவது சுற்றில் இந்திய தோல்வி அடைந்தது.
ஜகார்த்தா:
இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் நடந்து வருகிறது.
இந்நிலையில், கலப்பு இரட்டையர் பிரிவில் நேற்று நடந்த இரண்டாவது சுற்று போட்டியில் இந்தியாவின் தனிஷா க்ராஸ்டோ-துருவ் கபிலா ஜோடி, மலேசியா ஜோடியுடன் மோதியது.
இதில் இந்திய ஜோடி முதல் செட்டை 21-18 என வென்றது. இதனால் அதிரடியாக ஆடிய மலேசிய ஜோடி அடுத்த இரு செட்களை 21-15, 21-19 என வென்று காலிறுதிக்கு முன்னேறியது.
இதன்மூலம் கலப்பு இரட்டையரிலும் தோல்வி அடைந்த இந்திய ஜோடி தொடரில் இருந்து வெளியேறியது.