என் மலர்
நீங்கள் தேடியது "Malaysia Open Badminton"
- காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி.சிந்து, ஜப்பானின் யமாகுச்சி உடன் மோதினார்.
- முதல் செட்டை பிவி சிந்து 21-11 என கைப்பற்றினார்.
மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடர் கோலாலம்பூரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி.சிந்து நடப்பு உலக சாம்பியனான ஜப்பானின் யமாகுச்சி உடன் மோதினார்.
இந்த ஆட்டத்தில் முதல் செட்டை பிவி சிந்து 21-11 என கைப்பற்றினார். அடுத்த செட் விளையாடுவதற்கு முன்பு காயம் காரணமாக ஜப்பானின் யமாகுச்சி போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனையடுத்து பிவி சிந்து அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.
- மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடர் கோலாலம்பூரில் நடந்து வருகிறது.
- இதில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி 2வது சுற்றில் வெற்றி பெற்றது.
கோலாலம்பூர்:
மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடர் கோலாலம்பூரில் நடந்து வருகிறது.
ஆண்கள் இரட்டையர் பிரிவின் 2வது சுற்றில் இந்தியாவின் சாத்விக் - சிராக் ஜோடி, மலேசியாவின் யாப் ராய் கிங்-ஜுனைத் ஆரிப் ஜோடி உடன் மோதியது.
தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிய சாத்விக்- சிராக் ஜோடி 21-18, 21-11 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.
காலிறுதியில் சாத்விக்-சிராக் ஜோடி இந்தோனேசியாவின் முகம்மது ஷோஹிபுல் பிக்ரி-பஜர் அல்பியான் ஜோடி உடன் மோதுகிறது.
- மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடர் கோலாலம்பூரில் நடந்து வருகிறது.
- இதில் இந்தியாவின் பி.வி.சிந்து காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
கோலாலம்பூர்:
மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடர் கோலாலம்பூரில் நடந்து வருகிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து, ஜப்பானின் டொயோகோ மியாசகி உடன் மோதினார்.
ஆரம்பம் முதலே சிறப்பாக ஆடிய பி.வி.சிந்து 21-8, 21-13 என்ற செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
நாளை நடைபெற உள்ள காலிறுதியில் பி.வி.சிந்து ஜப்பானின் யமாகுச்சி உடன் மோத உள்ளார்.
- மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடர் கோலாலம்பூரில் நடந்து வருகிறது.
- இதில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி முதல் சுற்றில் வெற்றி பெற்றது.
கோலாலம்பூர்:
மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடர் கோலாலம்பூரில் நடந்து வருகிறது.
ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் - சிராக் ஜோடி, தைவானின் லீ ஜே ஹூய்-பி.ஹெச்.யாங் உடன் மோதியது.
ஆரம்பம் முதலே சிறப்பாக ஆடிய இந்திய ஜோடி 21-13, 21-15 என்ற செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது.
- மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடர் கோலாலம்பூரில் நடந்து வருகிறது.
- இதில் இந்தியாவின் பி.வி.சிந்து முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.
கோலாலம்பூர்:
மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடர் கோலாலம்பூரில் நடந்து வருகிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பிவி சிந்து, தைவானின் சங் ஷோ யுன் உடன் மோதினார்.
தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிய பி.வி.சிந்து 21-13, 22-20 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
- மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடர் கோலாலம்பூரில் நடந்து வருகிறது.
- இதில் இந்தியாவின் லக்ஷயா சென் முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.
கோலாலம்பூர்:
மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடர் கோலாலம்பூரில் நடந்து வருகிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்ஷ்யா சென், சிங்கப்பூரி ஜேசன் டே உடன் மோதினார்.
முதல் செட்டை லக்ஷயா சென் 21-16 என கைப்பற்றினார். இதற்கு பதிலடியாக 2வது செட்டை ஜேசன் டே 21-15 என வென்றார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை லக்ஷயா சென் 21-14 என்ற புள்ளிக்கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி 21-12, 21-17 என்ற செட் கணக்கில் மலேசியாவின் லீ ஜி ஜியாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
- மலேசியா ஒபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் இன்று தொடங்கியது.
- பெண்கள் ஒன்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் ஆகர்ஷி காஷ்யப்-சீனாவின் சாங்யிமன் மோதினர்.
கோலாலம்பூர்:
மலேசியா ஒபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் இன்று தொடங்கியது. 14-ந்தேதி வரை போட்டி நடக்கிறது.
பெண்கள் ஒன்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் ஆகர்ஷி காஷ்யப்-சீனாவின் சாங்யிமன் மோதினர். இதில் ஆகர்ஷி காஷ்யப் 15-21, 15-21 என்ற நேர் செட் கணக்கில் தோற்றார்.
ஆண்கள் ஒன்றையர் பிரிவில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், இன்று இந்தோனேசிய வீரர் ஜோனதன் கிறிஸ்டியுடன் மோதுகிறார்.
நாளைய ஆட்டங்களில் இந்தியாவின் எச்.எஸ். பிரணாய்,லக்ஷயா சென் காப் இறங்குகிறார்கள்.
- ஆண்கள் இரட்டையர் பிரிவில் நேற்று அரையிறுதி ஆட்டம் நடைபெற்றது.
- இதில் தென் கொரிய ஜோடியை இந்திய ஜோடி வீழ்த்தியது.
கோலாலம்பூர்:
மலேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் நேற்று நடந்த அரையிறுதி ஆட்டத்தில் உலக தரவரிசையில் 2-வது இடம் வகிக்கும் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி, உலக தரவரிசையில் 3-வது இடம் வகிக்கும் தென் கொரியாவின் காங் மின் ஹியுக்-சியோ சியுங் ஜே ஜோடியுடன் மோதியது.
இந்த ஆட்டத்தில் சாத்விக்-சிராக் ஷெட்டி ஜோடி 21-18, 22-20 என்ற செட் கணக்கில் தென் கொரிய ஜோடியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
மலேசிய ஓபன் பேட்மிண்டன் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய ஜோடி சாத்விக்-சிராக் ஷெட்டி ஜோடி என்பது குறிப்பிடத்தக்கது.
- மலேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் இன்று தொடங்கி 12-ந் தேதி வரை நடக்கிறது.
- பெண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் திரிஷா ஜாலி-காயத்ரி ஜோடி வெற்றி பெற்றனர்.
கோலாலம்பூர்:
மலேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் இன்று தொடங்கி 12-ந் தேதி வரை நடக்கிறது. மொத்தம் ரூ.12½ கோடி பரிசுத் தொகைக்கான இந்த போட்டியில் முன்னணி வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். ஆண்டின் முதல் போட்டியான இதனை வெற்றியுடன் தொடங்க வீரர், வீராங்கனைகள் வரிந்து கட்டுவார்கள் என்பதால் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.
இந்த தொடரின் பெண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் திரிஷா ஜாலி-காயத்ரி ஜோடியும் தாய்லாந்தின் ஓர்னிச்சா ஜோங்சதாபோர்ன்பார்ன்- சுகித்தா சுவாச்சாய் ஜோடியும் மோதின. இதில் 21-10, 21-10 என்ற புள்ளிக் கணக்கில் இந்திய ஜோடி வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது.
- இந்த ஆட்டத்தின் முதல் செட்டை பிரனோய் 21-12 என்ற கணக்கில் வென்றார்.
- 2-வது செட் நடைபெற்றுக் கொண்டிருந்த போது அரங்கத்தின் மேல்கூறையில் இருந்து தண்ணீர் கொட்டியது.
கோலாலம்பூர்:
மலேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் இன்று தொடங்கி 12-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் முன்னணி வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், இந்தியாவின் 'சிக்கன் குனியா' பாதிப்பில் இருந்து மீண்டு 5 மாத இடைவெளிக்கு பிறகு களம் திரும்பும் 32 வயது இந்திய வீரர் பிரனாய், முதல் ஆட்டத்தில் பிரையன் யங்கை (கனடா) சந்திக்கிறார்.
இந்த ஆட்டத்தின் முதல் செட்டை பிரனோய் 21-12 என்ற கணக்கில் வென்றார். அடுத்த செட் நடைபெற்றுக் கொண்டிருந்த போது உள்விளையாட்டு அரங்கத்தின் மேல்கூறையில் இருந்து தண்ணீர் கொட்டியது. இதனால் ஆட்டம் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டது.
- பிரணாய் 21-12, 17-21, 21-15 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.
- மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் பிரியன்ஷு ரஜாவத் தோல்வியடைந்தார்.
கோலாலம்பூர்:
மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் மலேசிய ஓபன் 2025 பேட்மிண்டன் போட்டி தொடர் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் ஆட்டத்தில் இந்தியாவின் பிரணாய் மற்றும் கனடா வீரர் யாங் மோதினர்.
இந்த ஆட்டம் பாதியில் தடைப்பட்டது. ஸ்டேடியத்தில் மேற்கூரையில் இருந்து நீர்கசிவு ஏற்பட்டதில் ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்ட நிலையில் மீண்டும் நடந்தது. இதில் பிரணாய் 21-12, 17-21, 21-15 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.
மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் பிரியன்ஷு ரஜாவத்துடன் சீன வீரரான லி ஷிஃபெங் உடன் மோதினார். இதில் 21-11, 21-16 என்ற செட் கணக்கில் சீன வீரர் வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற சீன வீரர் நாளை இந்தியாவின் மற்றொரு வீரரான எச்.எஸ்.பிரணாய் உடன் மோதவுள்ளார்.
பெண்கள் பிரிவில் இந்தியாவின் மாளவிகா பன்சோட்டும் மலேசிய வீராங்கனையான கோ ஜின் வெய்-ம் மோதினார். இந்த ஆட்டத்தில் 21-15, 21-16 என்ற செட் கணக்கில் மாளவிகா வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
- கோலாலம்பூரில் மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடர் நடந்து வருகிறது.
- இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி வென்றது.
கோலாலம்பூர்:
மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் மலேசிய ஓபன் 2025 பேட்மிண்டன் போட்டி தொடர் நடந்து வருகிறது.
இதில் ஆண்களுக்கான இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி, தைவானின் லு மிங் சே-டாங்க் கை வே ஜோடி உடன் மோதியது.
இதில் முதல் செட்டை 21-10 என இந்திய ஜோடி வென்றது. இரண்டாவது செட்டை தைவான் ஜோடி 21-16 என கைப்பற்றியது.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை இந்திய ஜோடி 21-5 என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.






