என் மலர்
நீங்கள் தேடியது "எச்எஸ் பிரணாய்"
- இந்தியாவின் பிரனாய், பின்லாந்தின் ஜோகிம் ஓல்டோர்ப்பை எதிர்கொண்டார்.
29-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு ஆட்டட்தில் இந்தியாவின் பிரணாய், பின்லாந்தின் ஜோகிம் ஓல்டோர்ப்பை எதிர்கொண்டார்.
இந்த ஆட்டத்தில் பிரனாய் 21-18, 21-15 என்ற கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
- ஆண்களுக்கான முதல் சுற்றில் ஸ்ரீகாந்த், பிரனோய், ஷெட்டி, கருணாகரன் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
- ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் பிரியான்ஷு ராஜாவத் தோல்வியடைந்தார்.
மலேசியா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் பிரியான்ஷு ராஜாவத் சிங்கபூர் வீரரான ஜேசன் டெஹ் ஜியா ஹெங் உடன் மோதினர். இந்த ஆட்டத்தில் ராஜாவத் 15-21, 17-21 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார்.
மற்றொரு ஆட்டத்தில் ஸ்ரீகாந்த் கிடாம்பி, பிரனோய், ஷெட்டி, கருணாகரன் ஆகியோர் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.
இதேபோல் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் பிவி சிந்து, வியட்நாமின் நுயான் துய் லின் உடன் மோதினார். முதல் செட்டை வியட்நாம் வீராங்கனையும் 2-வது செட்டை சிந்துவும் வெற்றி பெற்றனர். வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி செட்டை வியட்நாம் வீராங்கனை வென்றார். இதன்மூலம் 21-11, 14-21, 21-15 என்ற செட் கணக்கில் பிவி சிந்துவை வீழ்த்தி வியட்நாம் வீராங்கனை அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார்.
- பிரணாய் 21-12, 17-21, 21-15 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.
- மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் பிரியன்ஷு ரஜாவத் தோல்வியடைந்தார்.
கோலாலம்பூர்:
மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் மலேசிய ஓபன் 2025 பேட்மிண்டன் போட்டி தொடர் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் ஆட்டத்தில் இந்தியாவின் பிரணாய் மற்றும் கனடா வீரர் யாங் மோதினர்.
இந்த ஆட்டம் பாதியில் தடைப்பட்டது. ஸ்டேடியத்தில் மேற்கூரையில் இருந்து நீர்கசிவு ஏற்பட்டதில் ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்ட நிலையில் மீண்டும் நடந்தது. இதில் பிரணாய் 21-12, 17-21, 21-15 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.
மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் பிரியன்ஷு ரஜாவத்துடன் சீன வீரரான லி ஷிஃபெங் உடன் மோதினார். இதில் 21-11, 21-16 என்ற செட் கணக்கில் சீன வீரர் வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற சீன வீரர் நாளை இந்தியாவின் மற்றொரு வீரரான எச்.எஸ்.பிரணாய் உடன் மோதவுள்ளார்.
பெண்கள் பிரிவில் இந்தியாவின் மாளவிகா பன்சோட்டும் மலேசிய வீராங்கனையான கோ ஜின் வெய்-ம் மோதினார். இந்த ஆட்டத்தில் 21-15, 21-16 என்ற செட் கணக்கில் மாளவிகா வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
- 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரணாய், சீன வீரரான லி ஷிஃபெங் உடன் மோதினார்.
- முதல் செட்டை லி ஷிஃபெங் எளிதாக வென்றார். 2-வது செட்டை பிரணாய் 21-15 என்ற கணக்கில் வீழ்த்தினார்.
கோலாலம்பூர்:
மலேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், இன்று நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரணாய், சீன வீரரான லி ஷிஃபெங் உடன் மோதினார்.
முதல் செட்டை லி ஷிஃபெங் எளிதாக வென்றார். 2-வது செட்டை பிரணாய் 21-15 என்ற கணக்கில் வீழ்த்தினார். வெற்றியாளரை தீர்மானிக்கும் 3-வது செட் பரபரப்பாக சென்றது. இந்த செட்டில் 23-21 என்ற கணக்கில் லி ஷிஃபெங் வெற்றி பெற்றார்.
இதனால் லி ஷிஃபெங் 21-6, 15-21, 23-21 என்ற செட் கணக்கில் பிரணாய்யை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார். சீன வீரர் முதல் சுற்றில் இந்திய வீரரான பிரியன்ஷு ரஜாவதை தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.






