என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gayatri Gopichand"

    • இந்த ஆட்டம் 1 மணி 16 நிமிடங்கள் நீடித்தது.
    • இதில் ஒரு கேமில் இருவரும் இடைவிடாது 49 ஷாட்டுகள் அடித்தது ரசிகர்களை பரவசப்படுத்தியது.

    லக்னோ:

    சையத் மோடி நினைவு சர்வதேச பேட்மிண்டன் போட்டி லக்னோவில் நடந்தது. இதில் நேற்று நடந்த திரில்லிங்கான ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் 16-21, 21-8, 20-22 என்ற செட் கணக்கில் ஜாசன் குனவானிடம் (ஹாங்காங்) போராடி தோற்றார். இதில் கடைசி செட்டில் 20-20 என்று வரை சமனிலை நீடித்தது. இறுதியில் கடைசி இரு புள்ளிகளை தனதாக்கி குனவான் வெற்றிக்கனியை பறித்தார். இந்த ஆட்டம் 1 மணி 7 நிமிடங்கள் நடந்தது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஹினா அகேச்சி (ஜப்பான்) 21-16, 21-14 என்ற நேர் செட்டில் நேஸ்லிஹான் அரினை (துருக்கி) வீழ்த்தி மகுடம் சூடினார்.

    பெண்கள் இரட்டையர் பிரிவின் இறுதிசுற்றில் நடப்பு சாம்பியனான இந்தியாவின் திரிசா ஜாலி- காயத்ரி கோபிசந்த் ஜோடி சரிவில் இருந்து மீண்டு வந்து 17-21, 21-13, 21-15 என்ற செட் கணக்கில் ஜப்பானின் காகோ ஒசாவா- மை தனாபே ஜோடியை வீழ்த்தி பட்டத்தை தக்க வைத்துக் கொண்டது.

    இந்த ஆட்டம் 1 மணி 16 நிமிடங்கள் நீடித்தது. இதில் ஒரு கேமில் இருவரும் இடைவிடாது 49 ஷாட்டுகள் அடித்தது ரசிகர்களை பரவசப்படுத்தியது. திரிசா- காயத்ரி ஜோடிக்கு ரூ.17 லட்சம் பரிசுத்தொகையாக கிடைத்தது.

    • சையத் மோடி நினைவு சர்வதேச பேட்மிண்டன் போட்டி உ.பி.யின் லக்னோவில் நடந்து வருகிறது.
    • பெண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதி சுற்றில் இந்திய ஜோடி வெற்றி பெற்றது.

    லக்னோ:

    சையத் மோடி நினைவு சர்வதேச பேட்மிண்டன் போட்டி உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில் நடந்து வருகிறது.

    இதில் நேற்று நடைபெற்ற பெண்கள் இரட்டையர் பிரிவின் காலிறுதி சுற்றில் நடப்பு சாம்பியன்களான இந்தியாவின் திரிஷா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடி, துருக்கியின் நல்ஜியான் இன்சி-பென்கிசு எர்டின் ஜோடி உடன் மோதியது.

    இதில் சிறப்பாக ஆடிய திரிஷா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடி 21-15, 21-16 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி அசத்தியது.

    • சையத் மோடி நினைவு சர்வதேச பேட்மிண்டன் போட்டி உ.பி.யின் லக்னோவில் நடந்து வருகிறது.
    • பெண்கள் இரட்டையர் பிரிவு 2வது சுற்றில் இந்திய ஜோடி வெற்றி பெற்றது.

    லக்னோ:

    சையத் மோடி நினைவு சர்வதேச பேட்மிண்டன் போட்டி உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில் நடந்து வருகிறது.

    இதில் நேற்று நடைபெற்ற பெண்கள் இரட்டையர் பிரிவின் 2வது சுற்றில் நடப்பு சாம்பியன்களான இந்தியாவின் திரிஷா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடி, சக நாட்டின் ஜெனித் அபிகைல்-லிதிகா ஸ்ரீவஸ்தவா ஜோடி உடன் மோதியது.

    இதில் சிறப்பாக ஆடிய திரிஷா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடி 21-17, 21-12 என வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

    • சையத் மோடி நினைவு சர்வதேச பேட்மிண்டன் போட்டி உ.பி.யின் லக்னோவில் நடந்து வருகிறது.
    • பெண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்திய ஜோடி வெற்றி பெற்றது.

    லக்னோ:

    சையத் மோடி நினைவு சர்வதேச பேட்மிண்டன் போட்டி உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில் நடந்து வருகிறது.

    இதில் இன்று நடைபெற்ற பெண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் நடப்பு சாம்பியன்களான இந்தியாவின் திரிஷா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடி- மலேசியாவின் செங் சூ ஹை- தன் ஜிங் யீ ஜோடி உடன் மோதியது.

    இதில் இந்திய ஜோடி முதல் செட்டை 19-21 என இழந்தது. இதில் சுதாரித்துக் கொண்ட இந்திய ஜோடி அடுத்த இரு செட்களை 22-20, 21-9 என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

    • ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் தொடர் சிட்னியில் நடந்து வருகிறது.
    • இதில் இந்தியாவின் ஜாலி- காயத்ரி ஜோடி முதல் சுற்றில் தோல்வி அடைந்தது.

    சிட்னி:

    ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் தொடர் சிட்னியில் நடந்து வருகிறது.

    பெண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் திரிஷா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடி, இந்தோனேசியாவின் குசுமா- பிஸ்பிதா சாரி ஜோடி உடன் மோதியது.

    இதில் சிறப்பாக ஆடிய இந்தோனேசிய ஜோடி 21-10, 21-14 என்ற செட் கணக்கில் வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது.

    இதன்மூலம் ஜாலி-கோபிசந்த் ஜோடி தொடரில் இருந்து வெளியேறியது.

    • திரிஷா- காயத்ரி ஜோடி 21-12, 21-8 என எளிதாக வெற்றி பெற்றது.
    • கிடாம்பி ஸ்ரீகாந்த் 2-வது சுற்றில் சீன வீரரிடம் 15-21, 11-21 எனத் தோல்வியடைந்தார்.

    சுவிட்சர்லாந்து ஓபன் 2025 பேட்மிண்டன் தொடர் பாசெலில் நடைபெற்று வருகிறது. பெண்களுக்கான இரட்டையர் பிரவு போட்டியில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய ஜோடியான திரிஷா ஜோலி- காயத்ரி கோபி சந்த், ஜெர்மனியின் அமெரிலி லீமேன்- செலின் ஹப்ஸ்ச் ஜோடியை எதிர்கொண்டது.

    இதில் இந்திய ஜோடியான திரிஷா- காயத்ரி 21-12, 21-8 என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினர்.

    ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் பியான்ஷு ராஜாவத் 15-21, 17-21 என டோமா போபோவிடம் தோல்வியடைந்து ஏமாற்றம் அடைந்தார்.

    கிடாம்பி ஸ்ரீகாந்த் முதல் சுற்றில் ஹெச்.எஸ். பிரனோயை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறியிருந்தார். ஆனால் 2-வது சுற்றில் சீனாவின் லி ஷி பெங்கிடம் 15-21, 11-21 தோல்வியடைந்தார். கிடாம்பி ஸ்ரீகாந்தால் 40 நிமிடம் கூட தாக்குப்பிடிப்ப முடியவில்லை.

    • சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பாசெல் நகரில் நடந்து வருகிறது.
    • பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி முதல் சுற்றில் வெற்றி பெற்றது.

    பாசெல்:

    சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பாசெல் நகரில் நேற்று தொடங்கியது. வரும் 23-ம் தேதி வரை இத்தொடர் நடக்கிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.

    இந்நிலையில், பெண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் திரிசா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடி, சுவிட்சர்லாந்தின் அலைன் முல்லர்-நெதர்லாந்தின் கெல்லி வான் புய்டன் ஜோடி உடன் மோதியது.

    இதில் இந்திய ஜோடி 21-16, 21-17 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

    • சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டனில் பெண்கள் இரட்டையர் பிரிவு ஆட்டம் நேற்று நடந்தது.
    • இதில் இந்திய ஜோடி தென்கொரிய ஜோடியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.

    சிங்கப்பூர்:

    சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் இரட்டையர் பிரிவில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில், இந்தியாவின் திரிஷா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடி, உலக தரவரிசையில் 2-வது இடம் வகிக்கும் ஆல் இங்கிலாந்து சாம்பியனான தென் கொரியாவின் பாக் ஹா நா-லீ சோ ஹி ஜோடியுடன் மோதியது.

    இதில், இந்திய ஜோடி 21-9, 14-21, 21-15 என்ற செட் கணக்கில் தென் கொரிய ஜோடிக்கு அதிர்ச்சி அளித்து காலிறுதிக்கு முன்னேறியது. இந்த ஆட்டம் 59 நிமிடங்கள் நடந்தது.

    தரவரிசையில் 30-வது இடத்தில் இருக்கும் திரிஷா ஜாலி-காயத்ரி கூட்டணி, தென்கொரிய ஜோடிக்கு எதிராக பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.

    • சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டனில் பெண்கள் இரட்டையர் பிரிவு ஆட்டம் இன்று நடந்தது.
    • இதில் இந்திய ஜோடி தென்கொரிய ஜோடியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.

    சிங்கப்பூர்:

    சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் இரட்டையர் பிரிவில் இன்று நடந்த காலிறுதி ஆட்டம் ஒன்றில், இந்தியாவின் திரிஷா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடி, உலக தரவரிசையில் 6-வது இடம் வகிக்கும் தென் கொரியாவின் கிம் சோ யோங்-காங் யீ யாங் ஜோடியுடன் மோதியது.

    இதில் முதல் செட்டை 18-21 என இழந்த இந்திய ஜோடி அடுத்த இரு செட்களை 21-19, 24-22 என போராடி வென்று தென் கொரிய ஜோடிக்கு அதிர்ச்சி அளித்தது. இந்த வெற்றியின் மூலம் அரையிறுதிக்கும் முன்னேறியது.

    • சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டனில் பெண்கள் இரட்டையர் பிரிவு ஆட்டம் இன்று நடந்தது.
    • அரையிறுதியில் இந்திய ஜோடி தோல்வி அடைந்தது.

    சிங்கப்பூர்:

    சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் இரட்டையர் பிரிவில் இன்று நடந்த அரையிறுதி ஆட்டம் ஒன்றில், இந்தியாவின் திரிஷா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடி, ஜப்பானின் சிஹாரு ஷிடா-மத்சுயுமா ஜோடியுடன் மோதியது.

    இதில் ஜப்பான் ஜோடியிடம் 21-23, 11-21 என்ற செட் கணக்கில் இந்திய ஜோடி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.

    • சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது. இந்திய பாட்மிண்டன் வீராங்கனையான காயத்ரி கோபிசந்த் தனது அபாரமான திறமையை வெளிப்படுத்தினார்
    • ஆட்டம் தொடக்கத்தில் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி முதல் ஆரம்ப செட்டில் தென் கொரியா ஜோடியிடம் ஆட்டத்தை இழந்தனர்.

    சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது. இந்திய பாட்மிண்டன் வீராங்கனையான காயத்ரி கோபிசந்த் தனது அபாரமான திறமையை சிங்கப்பூர் ஓபன் 2024 மகளிர் இரட்டையர் பிரிவு கால் இறுதி சுற்றில் வெளிப்படுத்தினார். காய்த்ரியும் அவரது ஜோடியான திரிஷா ஜாலியும் இணைந்து தென் கொரியா ஜோடியான கிம் செய்- யங் மற்றும் கொங் ஹீ - யங் உடன் நேற்று போட்டியிட்டனர்.

    ஆட்டம் தொடக்கத்தில் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி முதல் ஆரம்ப செட்டில் தென் கொரியா ஜோடியிடம் ஆட்டத்தை இழந்தனர். ஆனால் ஆட்டத்தின் மூன்றாவது செட்டில் காயத்ரி செய்த செயல் இணையத்தில் தற்பொழுது வைரலாகி வருகிறது.

    மூன்றாவது செட்டில் இந்திய அணி 3- 2 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. ஆட்டம் தீவிரம் அடைந்துக் கொண்டு இருக்கும் பொழுது ஆட்டத்தின் நடுவே காயத்ரி கோபிசந்த் அவரது ரேக்கட்டை மாற்றி 4-2 என்று ஸ்கோர் எடுத்து கால் இறுதி சுற்றில் வென்றனர். அந்த பரபரப்பான ஆட்டத்திலும் காய்த்ரி இந்த செயலை செய்தது விளையாட்டு ஆர்வலர்களிடம் மிகப்பெரிய கவனத்தை பெற்றுள்ளது. பலரும் இவரை சமூக வலைத்தளங்களில் பாராட்டி வருகின்றனர்.

    அதைத்தொடர்ந்து பெண்கள் இரட்டையர் பிரிவில் இன்று நடந்த அரையிறுதி ஆட்டம் ஒன்றில், இந்தியாவின் திரிஷா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடி, ஜப்பானின் சிஹாரு ஷிடா-மத்சுயுமா ஜோடியுடன் மோதியது.

    அரை இறுதி ஆட்டத்தில் இதில் ஜப்பான் ஜோடியிடம் 21-23, 11-21 என்ற செட் கணக்கில் இந்திய ஜோடி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.

    • குமாமோட்டோ மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஜப்பானில் நேற்று தொடங்கியது.
    • பெண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் திரிஷா ஜாலி- காயத்ரி கோபிசந்த் ஜோடி விளையாடினர்.

    குமாமோட்டோ:

    குமாமோட்டோ மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஜப்பானில் நேற்று தொடங்கியது. இதில் பெண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் திரிஷா ஜாலி- காயத்ரி கோபிசந்த் ஜோடி 16-21, 16-21 என்ற நேர்செட்டில் சீன தைபேயியின் ஹூயின் ஹூய்-லின் ஜிக் யுன் இணையிடம் தோற்று நடையை கட்டியது.

    இன்று நடைபெறும் பெண்கள் ஒற்றையர் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, தாய்லாந்தின் பூசனன் ஒங்பாம்ருங்பானை சந்திக்கிறார். ஆண்கள் பிரிவில் இந்திய வீரர் லக்ஷயா சென், மலேசியாவின் லியோங் ஜன் ஹாவுடன் மோதுகிறார்.

    ×