என் மலர்
நீங்கள் தேடியது "சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன்"
- சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடர் சிங்கப்பூரில் நடந்து வருகிறது.
- இதில் இந்திய ஜோடி அரையிறுதியில் தோல்வி அடைந்தது.
சிங்கப்பூர்:
சிங்கப்பூர் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூர் உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது.
இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சிராக் ஷெட்டி-சாத்விக்ரங்கி ரெட்டி ஜோடி, மலேசியாவின் சோ வூய் யிக் - ஆரோன் சியா ஜோடியுடன் மோதியது.
இந்தப் போட்டியில் சிறப்பாக ஆடிய மலேசிய ஜோடி 19-21, 21-10, 21-18 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. இந்தத் தோல்வியின் மூலம் இந்திய ஜோடி தொடரில் இருந்து வெளியேறியது.
- சிராக் ஷெட்டி-சாத்விக்ரங்கி ரெட்டி ஜோடி மலேசியாவின் கோ ஸ்ஸே ஃபீ- ரூர் இசுதீன் ஜோடியுடன் மோதினர்.
- இதில் இந்திய ஜோடி 21-17, 21-15, என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.
சிங்கப்பூர்:
சிங்கப்பூர் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூர் உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது.
இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சிராக் ஷெட்டி-சாத்விக்ரங்கி ரெட்டி ஜோடி, மலேசியாவின் கோ ஸ்ஸே ஃபீ- ரூர் இசுதீன் ஜோடியுடன் மோதினர்.
இந்தப் போட்டியில் சிறப்பாக ஆடிய இந்திய ஜோடி 21-17, 21-15, என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.
- சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடர் சிங்கப்பூரில் நடந்து வருகிறது.
- இதில் இந்தியாவின் பி.வி.சிந்து 2வது சுற்றில் தோல்வி அடைந்தார்.
சிங்கப்பூர்:
சிங்கப்பூர் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூர் உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது.
இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் 16-21, 14-21 என்ற நேர் செட்டில் பிரான்சின் கிறிஸ்டோ போபோவிடம் தோற்று வெளியேறினார்.
இதேபோல், பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டத்தில் ஒலிம்பிக்கில் 2 பதக்கம் வென்றவரும், 17-ம் நிலை வீராங்கனையுமான இந்தியாவின் பி.வி.சிந்து 9-21, 21-18, 16-21 என்ற செட் கணக்கில் தரவரிசையில் 5-ம் இடத்தில் இருக்கும் சீனாவின் சென் யுபியிடம் போராடி வீழ்ந்தார்.
- சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடர் சிங்கப்பூரில் நடந்து வருகிறது.
- இதில் இந்திய ஜோடி காலிறுதிக்கு முன்னேறியது.
சிங்கப்பூர்:
சிங்கப்பூர் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூர் உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது.
இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் 2வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சிராக் ஷெட்டி-சாத்விக்ரங்கி ரெட்டி ஜோடி, இந்தோனேசியாவின் சபர் காரியமன் மற்றும் முஹம்மது ரெசா ஜோடியுடன் மோதியது.
இந்தப் போட்டியில் சிறப்பாக ஆடிய இந்திய ஜோடி 19-21, 21-16, 21-18 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது. இந்தப் போட்டி சுமார் ஒரு மணி நேரம் 14 நிமிடங்கள் வரை நீடித்தது.
- சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடர் சிங்கப்பூரில் நடந்து வருகிறது.
- இதில் இந்திய ஜோடி முதல் சுற்றில் வெற்றி பெற்றது.
சிங்கப்பூர்:
சிங்கப்பூர் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூர் உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது.
இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சிராக் ஷெட்டி-சாத்விக்ரங்கி ரெட்டி ஜோடி, மலேசியாவின் முகமது ஹைகல்-சூங் ஹான் ஜியான் ஜோடியுடன் மோதியது.
இந்தப் போட்டியில் சிறப்பாக ஆடிய இந்திய ஜோடி 21-16, 21-13 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
- ஆண்களுக்கான முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் லக்ஷயா சென் மற்றும் தைவானை சேர்ந்த லின்னும் மோதினர்.
- இந்த ஆட்டத்தில் முதல் செட்டை லக்ஷ்யா கைப்பற்றினார்.
சிங்கப்பூர் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூர் உள்விளையாட்டு அரங்கில் நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் லக்ஷயா சென் மற்றும் தைவானை சேர்ந்த லின்னும் மோதினர்.
இந்த ஆட்டத்தில் முதல் செட்டை லக்ஷ்யா கைப்பற்றினார். 2-வது செட்டை லின் கைப்பற்றினார். வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி செட் விளையாடி கொண்டிருக்கும் போது லக்ஷயா காயம் காரணமாக பாதிலேயே வெளியேறினார்.
- ஆண்களுக்கான முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் பிரனோய், ராஸ்மஸ் கெம்கேவுடன் மோதினார்.
- இந்த ஆட்டத்தில் பிரனோய் முதல் செட்டில் தோல்வியடைந்தார்.
சிங்கப்பூர் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூர் உள்விளையாட்டு அரங்கில் இன்று முதல் ஜூன் 1-ந் தேதி வரை நடக்கிறது. இதில் ஆண்களுக்கான முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் பிரனோய், டென்மார்க் வீரரான ராஸ்மஸ் கெம்கேவுடன் மோதினார்.
இந்த ஆட்டத்தில் பிரனோய் முதல் செட்டில் தோல்வியடைந்தார். இதனையடுத்து சுதாரித்து கொண்ட பிரனோய் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அடுத்த 2 செட்களையும் கைப்பற்றினார். இதனால் 19-21, 21-16, 21-14 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
- சிங்கப்பூர் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி இன்று முதல் ஜூன் 1-ந் தேதி வரை நடக்கிறது.
- பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் பி.வி.சிந்து, வென் யு ஜாங்குடன் மோதினார்.
மொத்தம் ரூ.8½ கோடி பரிசுத் தொகைக்கான சிங்கப்பூர் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூர் உள்விளையாட்டு அரங்கில் இன்று முதல் ஜூன் 1-ந் தேதி வரை நடக்கிறது.
உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் இந்த போட்டியில் இந்தியா சார்பில் பிரனாய், லக்ஷயா சென், பி.வி.சிந்து, சாத்விக்- சிராக் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
இந்நிலையில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, கனடாவின் வென் யு ஜாங்குடன் மோதினார்.
இந்த ஆட்டத்தில் 21-14, 21-9 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று அடுத்து சுற்றுக்கு பிவி சிந்து முன்னேறினார்.
- ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்திய வீரர் பிரியான்ஷு ராஜாவத் தோல்வியடைந்தார்.
- பெண்கள் ஒற்றையர் பிரிவில் அன்மோல் கார்ப், மாள்விகா பான்சோத், ரக்ஷிதா ராம்ராஜ் ஆகியோர் தோல்வியடைந்தனர்.
சிங்கப்பூர்:
மொத்தம் ரூ.8½ கோடி பரிசுத் தொகைக்கான சிங்கப்பூர் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூர் உள்விளையாட்டு அரங்கில் இன்று முதல் ஜூன் 1-ந் தேதி வரை நடக்கிறது. உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் இந்த போட்டியில் இந்தியா சார்பில் பிரனாய், லக்ஷயா சென், பி.வி.சிந்து, சாத்விக்- சிராக் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
இந்நிலையில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்திய வீரர் பிரியான்ஷு ராஜாவத்- ஜப்பான் வீரர் நரோகாவுடன் மோதினார்.
முதல் செட்ட இந்திய வீரரும் அடுத்த 2 செட்டை ஜப்பான் வீரரும் வென்றனர். இதன்மூலம் ராஜாவத் 21-14, 10-21, 14-21 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்திய வீராங்கனைகள் தோல்வியடைந்தனர். அதன்படி இந்தியாவின் அன்மோல் கார்ப், முன்னாள் ஒலிம்பிக் சாம்பியன் சென் யு பெய்யுடன் மோதினார். இதில் 11-21, 24-22 என்ற செட் கணக்கில் வெளியேறினார்.
ரக்ஷிதா ராம்ராஜ் 14-8, 8-21 என்ற செட் கணக்கில் படுமோசமாக தோல்வியடைந்தார்.
மற்றொரு இந்திய வீராங்கனையான மாள்விகா பான்சோத், தாய்லாந்து வீராங்கனை சுபனிதாவுடன் மோதினார். முதல் செட்டை கைப்பற்றிய மாள்விகா அடுத்த 2 செட்டுகளையும் இழந்தார். இதனால் 21-14, 18-21, 11-21 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார்.
- ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் இந்திய அணியின் ஸ்ரீகாந்த் 21-15 21-19 என்ற கணக்கில் தாய்லாந்தின் காண்டபோன் வாங்சரோயனை வீழ்த்தினார்.
- பெண்கள் பிரிவில் தரவரிசையில் 13-வது இடத்தில் உள்ள சிந்து, 'நம்பர் ஒன்' வீராங்கனையும், உலக சாம்பியனுமான அகானே யமாகுச்சியும் மோதினர்.
சிங்கப்பூர்:
முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் சிங்கப்பூர் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூரில் இன்று தொடங்கியது. வருகிற 11-ந்தேதி வரை நடக்கும் இந்த போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.7 கோடியாகும். இதில் சாம்பியன் பட்டம் வெல்வோருக்கு ரூ.49 லட்சம் பரிசாக கிடைக்கும்.
இந்நிலையில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் இந்திய அணியின் ஸ்ரீகாந்த் 21-15 21-19 என்ற கணக்கில் தாய்லாந்தின் காண்டபோன் வாங்சரோயனை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார். மற்றொரு ஆட்டத்தில் பிரனோய் 15-21 19-21 என்ற கணக்கில் ஜப்பான் வீரரான நரோகாவிடம் தோல்வியடைந்தார்.
பெண்கள் பிரிவில் தரவரிசையில் 13-வது இடத்தில் உள்ள சிந்து, 'நம்பர் ஒன்' வீராங்கனையும், உலக சாம்பியனுமான அகானே யமாகுச்சியும் மோதினர். இதில் 21-18 19-21 17-21 என்ற கணக்கில் அவர் தோல்வியடைந்தார். மற்றொரு ஆட்டத்தில் சாய்னா நேவால் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை ராட்சனோக் இன்டோனனை எதிர்கொண்டார். இதில் 21-15 21-19 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.
- சிந்து முதல் சுற்றில் லினே ஹோஜ்மார்க் கிஜார்ஸ்பெல்டை (டென்மார்க்) சந்திக்கிறார்.
- லக்ஷயா சென் உலகின் நம்பர் ஒன் வீரரான விக்டர் ஆக்சல்செனுடன் (டென்மார்க்) மல்லுக்கட்டுகிறார்.
சிங்கப்பூர்:
மொத்தம் ரூ.7 கோடி பரிசுத்தொகைக்கான சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூரில் இன்று தொடங்கி வருகிற 2-ந்தேதி வரை நடக்கிறது. ஒலிம்பிக் போட்டிக்கு தன்னை தயார்படுத்தி வரும் வீராங்கனை பி.வி.சிந்து, வீரர் எச்.எஸ்.பிரனாய் மற்றும் லக்ஷயா சென், ஸ்ரீகாந்த், பிரியன்ஷூ ரஜாவத், இரட்டையர் நம்பர் ஒன் ஜோடியான சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி- சிராக் ஷெட்டி உள்ளிட்ட இந்தியர்கள் இந்த போட்டியில் பங்கேற்கிறார்கள்.
கடந்த வாரம் மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டனில் இறுதி சுற்றில் தோல்வி அடைந்த சிந்து அதற்கு பரிகாரம் தேடும் வகையில் ஆடுவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. சிந்து முதல் சுற்றில் லினே ஹோஜ்மார்க் கிஜார்ஸ்பெல்டை (டென்மார்க்) சந்திக்கிறார். இதே போல் இந்திய இளம் புயல் லக்ஷயா சென் உலகின் நம்பர் ஒன் வீரரான விக்டர் ஆக்சல்செனுடன் (டென்மார்க்) மல்லுக்கட்டுகிறார்.
- சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூரில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
- இந்தியாவின் ஆகர்ஷி காஷ்யப், தாய்லாந்தை சேர்ந்த போர்ன்பிச்சா சோகீவாங்கை எதிர் கொண்டார்.
சிங்கப்பூர்:
மொத்தம் ரூ.7 கோடி பரிசுத்தொகைக்கான சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூரில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஆகர்ஷி காஷ்யப், தாய்லாந்தை சேர்ந்த போர்ன்பிச்சா சோகீவாங்கை எதிர் கொண்டார்.
முதல் செட்டை 19-21 என்ற செட் கணக்கில் ஆகர்ஷி இழந்தார். இதனால் 2-வது செட்டை வெல்ல கடுமையாக போராடிய அவர் 20-22 என்ற கணக்கில் தோல்வியடைந்தார். இதனால் 19-21, 20-22 என்ற கணக்கில் முதல் சுற்றில் ஆகர்ஷி தோல்வியடைந்தார்.






