என் மலர்
விளையாட்டு

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன்: அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய ஜோடி
- சிராக் ஷெட்டி-சாத்விக்ரங்கி ரெட்டி ஜோடி மலேசியாவின் கோ ஸ்ஸே ஃபீ- ரூர் இசுதீன் ஜோடியுடன் மோதினர்.
- இதில் இந்திய ஜோடி 21-17, 21-15, என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.
சிங்கப்பூர்:
சிங்கப்பூர் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூர் உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது.
இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சிராக் ஷெட்டி-சாத்விக்ரங்கி ரெட்டி ஜோடி, மலேசியாவின் கோ ஸ்ஸே ஃபீ- ரூர் இசுதீன் ஜோடியுடன் மோதினர்.
இந்தப் போட்டியில் சிறப்பாக ஆடிய இந்திய ஜோடி 21-17, 21-15, என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.
Next Story






